நாஜிக்கள் யூதரை எப்படி இனம் கண்டு அழித்தனர்?யூரோப்பா யூரோப்பா[18+][1990][ஜெர்மன்]

யூரோப்பா யூரோப்பா:-(Hitlerjunge Salomon (எ)ஜூனியர் ஹிட்லர்)
========================
இது ஓர் உண்மைக்கதை,சாலமோன் பெரேல் என்பவரின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான Hitlerjunge Salomon ஐ தழுவி , இயக்குனர் Agnieszka Holland ன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு ஜெர்மன், ரஷ்யன், போலிஷ்,& ஹீப்ரூ மொழிகளில் வெளியான இரண்டாம் உலகப்போர் படம். ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்,டவுன்ஃபால், த பாய் இன் த ஸ்ட்ரைப்ட் பைஜாமாஸ், லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் , ரீடர், போன்ற அருமையான படங்களின் வரிசையில் இதுவும் நெஞ்சை நகர்த்தும்  காவியம்.ப்படம் உலகசினிமா விரும்பிகள் அனைவரும் வாழ்நாளில் பார்க்கவேண்டிய ஒன்று.
=============0000==============
 நீ உயிரை காத்துக்கொள்ள எவ்வளவு தூரம் இறங்குவாய்?

து தான் இப்படத்தின் திரி. இதில் வரும் 13 வயது சிறுவன்  சாலமோன்   (  மார்க்கோ ஹாஃப்ஷ்னீடர்)  ஓர் யூதன்,  ஹிட்லரின் பிறந்த தேதியான ஏப்ரல் 20 பிறந்தவன். ஜெர்மானியில் வசிக்கிறான். திடீரென ஃப்யூரர் ஹிட்லரின் ஆட்சியில்  வெடித்த  ஜெர்மானிய அடக்குமுறையால் யூதர்கள் கொல்லப்பட்டு வீடுகள் சூறையாடப்பட, அதில் இவனது தங்கையும் கொல்லப்படுகிறாள், இவன் பெற்றோருடன்  கடும் அல்லல்பட்டு ஜெர்மனியில் இருந்து போலந்துக்கு குடும்பத்தாருடன் தப்புகிறான். அங்கேயும் விடாமல்  உள்ளே நுழைந்த ஜெர்மனி, போலந்தை வெற்றி கொள்ள , தந்தையின்  கட்டளைக்கிணங்க போலந்திலிருந்து ஆற்றில் படகு மூலம்  அண்ணன் ஐசக்குடன் தப்புகிறான்.

தற்குள்ளாக  ஹிட்லருடன்  ஸ்டாலின் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தால்  படகு திருப்பப்பட, இவன் ஆற்றில் குதித்து போல்ஷ்விக்கிற்குள் தஞ்சம் புகுகிறான் ,அங்கே ரஷ்யப்படையின் அகதி முகாமில் 3 வருடங்கள் சோறு, உறக்கம், அப்பாவிடமிருந்து அடிக்கடி கடிதம் என நிம்மதியாய் இருந்தவன், ரஷ்ய மொழியும் கம்யூனிசமும் பயில்கிறான், ஹிட்லர் தான் பிடிக்கும் யூத கைதிகளை மடகாஸ்கருக்கோ சைபீரியாவுக்கோ அனுப்பி விடுவார் என மடத்தனமாக நம்புகிறான்.விரைவில் ஜெர்மனி அங்கேயும் போர்தொடுத்து கைப்பற்ற கையும் களவுமாய் பிடிபட்டவன் தான் ஜெர்மானியன் என பொய் சொல்கிறான்.

ஜெர்மானிய ராணுவத்திடம் தன் பெற்றொர் போல்ஷ்விக்கினரால்  சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்கிறான். இவன் பெயரை பீட்டர் ஜோசெப் என்கிறான். இவனின் ஜெர்மனி + ரஷ்ய மொழிப்புலமை அவனுக்கு ஜெர்மானியரிடம் விரைவில் புகழ் பெற்றுத் தருகிறது, வெகு விரைவில் நாஜிப்படையில் மொழி பெயர்ப்பாளன் ஆகிறான். புல்லுருவியாகி தம் இன யூதர்களையே களை எடுக்கிறான். இவனை மிகவும் மெச்சிய அட்மைரல் அவனை முறைப்படி தத்து எடுத்துக்கொள்ள ஆவலாகி தன் மனைவியுடன் பெர்லினுக்கு அனுப்புகிறார், அவளோ இவனும் ஃப்யூரர் -ஹிட்லரின் பிறந்தநாளில் பிறந்ததால் மோகம் கொண்டு ரயிலிலேயே விளக்கை அணைத்துவிட்டு இந்த 17 வயது சிறுவனுடன் உடலுறவு கொள்கிறாள்.

விரைவில் ட்ரெஸ்டன்  என்னும் நகருக்கு நாஜி மாணவர் ராணுவ படைக்கு பீட்டர் அனுப்பப்படுகிறான்.அவனை எல்லோரும் ஜுப் என்கின்றனர். அங்கே இவன் ஜெர்மானிய பெண்  லெனியுடன் (ஜூலி டெல்பி-பிஃபோர் சன்செட்) காதல் கொள்கிறான், அவளோ ஹிட்லரின் கட்டளைப்படி நாஜிப்படைக்கு மாவீரனாய் தன் குழந்தையை பெற்று அற்பணிக்க எண்ணியவள். நல்ல ஜெர்மானியனாக தேடுகிறாள்,இவனை கண்டதும் விரும்புகிறாள் ,இவனை உடலுறவு கொள்ளச் சொல்லி கேட்டு அடிக்கடி நச்சரிக்க, இவன் மீனாக நழுவுகிறான். உள்ளே புழுங்குகிறான். லட்டு போல அழகிய பெண். இவனுக்குள்ளே துடிக்கும் காமம். ஆனால் இவன் பிறப்புறுப்பை அவள் பார்க்க நேர்ந்தால் அவளே இவனை ஜெர்மானியரிடம் காட்டி கொடுத்து விடுவாளே!! எனவே லெனியை லாவகமாக தவிர்க்கிறான். கோபம் கொண்ட லெனி  இவனை கையாலாகாதவன் என ஏசுகிறாள்,இவன் அவளை கோபத்தில்அறைகிறான் .அவள் ஜெர்மானியப் பெண்ணை யாரும் அடிக்க மாட்டார்கள்,நீ அதற்கு அனுபவிப்பாய் என ஆவேசமாக சொல்லிவிட்டு போகிறாள்.


வ்வப்பொழுது அருகே இருக்கும் கெட்டோவுக்கு ட்ராமில் பயணித்து, சன்னல் வழியே தன் அப்பாவோ அம்மாவோ தென்படுகின்றனரா? என பார்க்கிறான். ஏமாந்தும் போகிறான். அதில் ஒரு கூத்தாக கெட்டோவுக்குள் ட்ராம் பயணிக்கையில் சன்னல்கள் கூட அருவருப்பினால் மூடப்பட்டிருக்கின்றன, எங்கே யூத காற்று உள்ளே வருமோ என்று!!! இன அழிப்பு  வேலைகள் மும்முறமாய் நடப்பதை ட்ராம் சன்னல் உள்ளேயிருந்து பார்த்து அறிகிறான். தூக்கம் தொலைத்து அழுகிறான். யாரிடமும் சொல்லி ஆறுதலும் தேடமுடியாத நிலை.


ப்போது லெனி வஞ்சம் தீர்க்க  பீட்டரின் நண்பனைக் கூடி கருவுறுகிறாள். அவளின் அம்மா இவனிடம் இந்த செய்தியை சொன்னதும் ,இவன் துடிக்கிறான். அவளே, நீ ஏன் அவளை முயங்கவில்லை? நீங்கள் ஒருவரை ஒருவர் விரும்பினீர்கள் தானே? எனக்கேட்க, இவன் ஒரு பாட்டம் அழுது முடிவில் தான் ஒரு யூதன் என்னும் உண்மையை ஒப்புக்கொள்கிறான்.அவளின் அம்மா இவனை கண்ட முதல் நாளே நான் அதை அறிந்தேன். பயப்படாதே உன்னை காட்டிக் கொடுக்கமாட்டேன் என்கிறாள்.தேற்றுகிறாள்.

வன் இப்போது தன் முன் தோல் நீக்கப்பட்ட பிறப்புறுப்பின் எஞ்சிய தோலை வெளியே இழுத்து நூல் கொண்டு இறுக்க சுற்றுகிறான். எந்நேரமும் சிறுநீர் கூட  போகாமல்  அடக்குகிறான். அப்படியாவது முன் தோல் வெளியே வளர்ந்து வருமா? என பார்த்தவன், பிறப்புறுப்பு புண்ணாகி சீழ்பிடிக்க வலியால் மிகவும் துடிக்கிறான்.  இவன் தலையில் இப்போது இடியாக ராணுவ தலைமை அதிகாரி அடுத்த வாரத்திற்குள் இவன் ,இவனின் அப்பா, அம்மா,அவர்களின் பெற்றோர் சம்பந்தப்பட அடையாள ஆவணங்களை கேட்கிறார்.

வன் அவர்கள் போரில் போல்ஷ்விக்கினரால் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஆவணங்கள் போரில் அழிந்துவிட்டது என கூற, அவர்  கவலையே வேண்டாம், ஜெர்மானியர்கள் ஆவண ஆக்கத்தில் தலை சிறந்தவர்கள், அது சம்மந்தமான பேரேடு நிச்சயம் இருக்கும், அது சம்பந்தப்பட்ட திருச்சபைக்கு கடிதம் எழுதுகிறேன் என்கிறார். இவனுக்கு எதாவது  அற்புதம் நடந்தால் தான் தான் பிழைக்க முடியும் என்னும் நிலை.

லுவலகத்திலிருந்து வெளியேறியவன் மேலே பார்க்க, அமெரிக்க, ப்ரிட்டன் போர்ப்படை விமானங்கள் ட்ரெஸ்டனில் வானில் பறந்து தொடர்ந்து 2 தினங்கள் குண்டுமழை பொழிகிறது. இவன் கண் முன்னே அவன் காதலி கட்டிட  இடிபாடுகளில் சிக்கி சாகிறாள். இவன் இறுதிகட்ட ஜெர்மானிய போரில் செம்படையுடன் சண்டையிட, அவர்களின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் புறமுதுகிட்டு ரஷ்யபடையிடம் கைகளை தூக்கி சரணடைகிறான்.இப்போது அவர்கள் இவனை யூதன் என நம்பவில்லை,என்ன கொடுமை பாருங்கள்.யூதனாயிருந்தால் நீ பிணமாக அல்லவா இருக்க வேண்டும் என காமெடி செய்கின்றனர்.பிணக்குவியல்களின் போட்டோக்களை காட்டுகின்றனர்.

வன் பேசிய ரஷ்ய மொழியை வைத்து, இவனை உளவாளி, துரோகி என குற்றம் சுமத்தி, அங்கே ஹாலோகாஸ்ட் முகாம்களில் இருந்து விடுதலையான ஒரு யூதனிடம் கைத்துப்பாக்கியை கொடுத்து இவனை உன் இஷ்டம் போல கொல், என ஒப்படைக்கின்றனர், அங்கே நிலைகுத்தி இவனை வேடிக்கை பார்த்த சித்திரவதை முகாம் கைதியான இவன் அண்ணன் ஐசக் இவனை கூவி அழைத்து.கண்ணீருடன் இறுக்க கட்டிக்கொள்கிறான்.


ஐசக் தேம்பி தேம்பி அழுகிறான். தம்பிக்கு விடுதலை வாங்கி தருகிறான். சித்திரவதை முகாமிலேயே இவனின் அப்பா,அம்மா, இன்னொரு அண்ணன் கேஸ் சேம்பருக்கு அனுப்பப்பட்டு இறந்து விட்டனர் என்கிறான். பின்னர் இவர்கள் அமெரிக்கப்படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு அப்போதைய பாலஸ்தீனம் (தற்போதைய இஸ்ரேல்) செல்கின்றனர். இந்த படம் ஏற்படுத்தும் தாக்கம் நெடுநாட்களுக்கு ஆறாது. என்ன படம்?என்ன இசை?என்ன ஒளிப்பதிவு?என்ன ஒரு கலை இயக்கம்,என்ன ஒரு நடிப்பு? என வியந்து கொண்டே இருக்க வைக்கும்


ஆகவே  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
=============0000============== 

எனக்கு நீண்ட நாளாய் சந்தேகம் இருந்தது:-
கொடூர நாஜிகள் எப்படி? யூதர்களை தாங்கள் வென்ற நாடுகளிலிருந்தெல்லாம் சரியாக இனம் கண்டு பிடித்து கெட்டோவுக்கும் பின்னர் கான்செண்ட்ரேஷன் கேம்பிற்கும் அதன் பின்னர்  கேஸ்சேம்பருக்கும்  அனுப்பினர்  என்று?

இணையத்தில் தேடியதில் கிடைத்த விடைகள்:-

1.யூதர்கள் ஆண் குழந்தை பிறந்த உடனே ஸர்கம்ஃபிகேஷன் என்னும் ஆண் பிறப்புறுப்பில் முன் தோல் நீக்க சிகிச்சையை மதகுருமாரைக் கொண்டு செய்து விடுவர்.எனவே நாஜிக்கள் தெருவில் போகும் எந்த சந்தேகத்துக்கு இடமான ஆணையும் அவர்களின் கால் சட்டையை இறக்கி பார்த்து சோதிப்பார்களாம்.

2.யூதர்கள் என சந்தேகப்படுபவரை பன்றிக்கறி தின்னச்சொல்லி பார்த்து தெரிந்து கொள்வர்,இம்முறை மூலம் யூத பெண்களையும் கண்டறிந்தனர்.

3.போர்க்காலங்களில் வெளியே நடமாடும் எவரும் தங்களின் அடையாள புத்தகங்களை வைத்திருக்க வேண்டுமாம்.ஒரு யூதன் தன்னை ஜெர்மானியன் என பொய் சொன்னால் அவனிடம் அவன் சிறுவயதில் ஞானஸ்தானம் பெற்ற திருச்சபையின் ஆவணங்களும் ,அவனின்/அவளின் தந்தை,தாயார்,தாயின் பெற்றொர், தந்தையின் பெற்றொர் ஞானஸ்தானம் பெற்ற நாளும் திருச்சபையின் ஆவணங்களும் கொடுக்கவேண்டியிருக்குமாம். யாராவது ஒருவர் கலப்பு திருமணம் செய்திருந்தாலும் செல்லாதாம்.

4.எல்லாவற்றிற்கும் மேலாக ஜெர்மானியர் அனைவரும் தம் வீட்டருகே உள்ள யூதரை காட்டிக்கொடுக்க வேண்டும் என கட்டளை இடப்பட்டிருந்தனராம். அவ்வாறு காட்டிக்கொடுக்கவோ அவரை விசாரிக்கையில்  துப்பு கொடுக்க தவறினாலோ சுட்டுக்கொல்லப்பட்டனராம்.
 
5.யூத ஆண்கள் முறையே தம் 13 வயதிலும்,83 வயதிலும் பார்மிட்ஸ்வா என்னும் ஞானஸ்தானம் பெற வேண்டும். அது கோவில்களில் ராப்பிகள் மூலம் தான் நடக்கும். எனவே யூதர்களின் கோவில்களில் இருக்கும் ராப்பிக்களை சிறை பிடித்து துன்புறுத்திய நாஜிக்கள் அவர்கள் மூலம் யார் யார் எல்லாம் பார்மிட்ஸ்வா வாங்கிய யூதர்கள் என எளிதாக கண்டனராம். அந்த பேரேட்டை வைத்தே பட்டியல் தயார் செய்யப்பட்டு நிறைய யூதர்கள் கெட்டோவுக்கு அனுப்பப்பட்டனராம்.

6.யூதர்களுக்கு யார் அடைக்கலம் தந்தாலும் தயவுதாட்சன்யம் இல்லாமல் தெருவில் தூக்கிலிட்டோ,சுட்டோ  கொல்லப்பட்டனர்.யூதவீடுகள் முன் பெயிண்டால் நட்சத்திரக்குறி இடப்பட்டு,அவர்கள் வீடுகள் முரட்டு ஜெர்மானிய மக்களால் சரமாறியாக தாக்கப்பட்டன.

7.எல்லை தாண்டி எங்கே வெளியே தப்பிப்போனாலும் மூன்று தலைமுறைகளின் ஆவணங்களை இனமறிய அமெரிக்கா, ப்ரிட்டன்,ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி,நாடுகள் கேட்டன.அதனால் எவரும் தன் அடையாளத்தை தொலைக்கவோ மறைக்கவோ முடியவில்லை. என்னதான் சிகையலங்காரம், பாரம்பரிய உடைகள், தொழுகை முறைகளை யூதர்கள் மாற்றிக் கொண்டாலும் அவர்களை நாஜிக்கள் தேடிக் கொன்று குவித்தனராம்.

8.யூதர்கள் படிக்கக் கூடாது,வேலை செய்யக்கூடாது,சொந்த தொழில் செய்யகூடாது, வங்கி கணக்கு வைத்திருக்க கூடாது. எங்கே போவர்?. கெட்டோவே தேவலை என்று பல யூதர்கள் அப்பாவியாகப் போய் மாய வலையில் விழுந்தனராம்.
=============0000==============
இந்த யூரோப்பா யூரோப்பாவில் வரும் யூதர்களை அடையாளம் காண நாஜிக்கள் மாணவ படைக்கு விரிவுரையாளர் விளக்கும் காட்சியின் காணொளியை,பாருங்கள், நாஜிக்களின் கொடூரமானசிந்தனை விளங்கும்,
1.நீல நிறக் கண்களின் 50 மாதிரிகள் ஒரு பலகையில் வார்க்கப்பட்டிருக்க, அதை வைத்து விரிவுறையாளர் சந்தேகத்திற்கிடமானவனை ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

2.ஒரு ஸ்டெத்தாஸ்கோப் போன்ற ஸ்டீல் உபகரணம் அதை சந்தேகத்திற்கிடமானவன்  உச்சந்தலையில் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கிறார்.
3.காலிப்பர் போன்ற ஒரு அளவுகோல அதை வைத்து முகத்தை, நெற்றியை,கன்னத்தை, மூக்கை,பின்னர் காதையும் அளக்கின்றனர். பார்க்கையிலேயே கதிகலக்குகிறது.

4.மேலும் யூதர்கள் எப்போதும் கண்ணைப்பார்த்து பேசமாட்டார்கள்,கூன் போட்டு தான் நடப்பர். ஆஜானுபாகுவான தோற்றம் இருக்காது,குல்லா போட்டு , குல்லா போட்டு அவர்களின் உச்சந்தலை வழுக்கை விழுந்திருக்கும் என அடுக்குகிறார். அவர்களின் மூக்கு அசிங்கமாய் நீண்டிருக்கும், காதுகள் மிகப்பெரியதாக இருக்கும்.என்கிறார். அந்த கொலைகாரப்பயல்கள் 6 மில்லியன் யூதர்களை ஒன்று திரட்டி கொன்று குவித்தது எப்படி? என்று இப்போது புரிகிறதா?
=============0000==============
=============0000==============