சென்னை பறக்கும் ரயிலில் பயணிப்போர் கவனத்திற்கு!

சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் படுகொலை-காதலியை கற்பழிக்க முயற்சித்த பயங்கரம்.

என்னும் மேல்/கீழ்கண்ட தட்ஸ் தமிழ் செய்தியை படித்த உடன் எனக்கு மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிட்டது,பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் உயிரையும் ,உயிரினும் மேலான கற்பையும் காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஓய்வு நேரத்தில் கராத்தே,குங்ஃபு போன்ற ஏதேனும் தற்காப்பு கலையை கட்டாயம் கற்றுக்கொள்ளுங்கள்.

ஹார்ட் கேண்டி படம் பார்த்திருக்கிறீர்களா? அப்படி பார்த்திருந்தால் , 32 வயதுள்ள ஒரு பெடோபைல் தன்மையுள்ள கொலைகாரனிடம் மாட்டிக்கொண்ட  14வயதுப்பெண் எல்லன் பேஜ் எப்படி சம்யோஜிதமாய் சமாளித்து அவனை சுளுக்கெடுப்பாள் என புரியும்.

ஹேண்ட் பேக்குக்குள் வைக்கக்கூடிய கைக்கடக்கமான  டேசர்[TASER] என்னும் ஸ்டன் கன் களை உபயோகிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள், இவை எல்லா பெரு நகரங்களில் உள்ள ஹண்டிங் கிட் ஷாப்களில் கிடைக்கக்கூடும்,  ஒரு  ஹை ஃபை மொபைல் போனை 20,000 ரூபாய் தந்து வாங்கினால் அது ஆபத்துக்காலத்தில் திருட்டு தான் போகும்,ஆனால் டேசர் இருந்தால்?, கூகிளில் தேடி பிடித்து வாங்குங்கள், விஷமகுடிகாரக் கபோதிகள் உங்களை நெருங்குகையில் இதைக்கொண்டு ஷாக் கொடுத்தால் அவர்கள் நிலைகுலைந்து விடுவர், அப்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பி ஓடிவிடமுடியும்,இதில் உள்ள ஒரு ட்ரா பேக்,என்ன என்றால்? இது ஒரு முறை உபயோகித்த பின்னர்,கார்ட்ரிட்ஜ் மாற்ற வேண்டுமாம்.

ரி,இதுபோல சாதனங்கள் வாங்க வழி இல்லாதவர்களுக்கு!!,இருக்கவே இருக்கிறது பெப்பர் ஸ்ப்ரே, இதை உங்களிடம் வம்பு செய்யும் கயவர்களின் கண்ணில் அடித்தால் நிச்சயம் நிலைகுலைந்து போவர்..சரி இதெல்லாம் எங்கே கிடைக்கும்? தேடுங்கள், கண்டிப்பாக நம் பெருநகரங்களில் 500 ரூபாய்க்குள் கிடைக்கும். மேலும் கயவாளிப்பயல்களின் விதைக் கொட்டையை நோக்கி பலமாய் எத்தவும் பழகிக்கொள்ளுங்கள், சத்தியமாக இது பலனளிக்கும், இன்னும் சேஃப்டி பின்களையும் மிளகாய் தூளையும் நம்பாதீர்கள், இது ஹைடெக் யுகம். இது தமிழக காவல்துறையின் பெப்பர் ஸ்ப்ரேயை பற்றிய டெமோ, 
பெப்பர் ஸ்ப்ரேயை சென்னையில் வசிப்போர்,காவல்துறையிடம் விண்ணப்பம் பூர்த்தி செய்து,ஒப்புதல் வாங்கிய பின்னர் பயன்படுத்தலாம். இதை குழுவாய்  சூழும் விஷமிகளின் கண்ணில் அடித்தவுடனே மூன்று மணிநேரத்திற்கு பயங்கர எரிச்சல் உண்டாகி,அவர்களுக்கு கண்ணே தெரியாதாம்.பார்க்க படம்.

மேலும் உங்கள் குழந்தைகளுக்கு இப்போதிருந்தே தற்காப்புகலையை நன்கு பயிற்று வையுங்கள்.  நம் திருநாட்டின் அவமானமாய் பேருந்துகளிலும், ரயில்களிலும் பெண்கள் ,ஏன் பலசமயம் ஆண்களே ஹோமோக்களாலும், செக்ஸ் வெறியர்கள், பெடோபைல்களாலும் பாதிக்கப்படுகின்றனர், நாம் பழகி வளர்ந்த கலாச்சாரம் காரணமாக உடலால் பட்ட தீங்கை வெளியே சொல்ல பயப்படுகிறோம். அவமானமாய் கருதி விட்டுவிடுகிறோம், சிறு குழந்தைகளுக்கு நன்கு விபரம் தெரியும் வரை பெடோபைல் தன்மையுள்ள ஆசாமிகளிடமிருந்து அவர்களை காப்பது பெற்றோரான உங்கள் கையில் தான் உள்ளது.

எனக்கு இதையும் இங்கே பகிர தோன்றியது , படுக்கை அறையில் தேவையா? கேமரா போன்கள்&கேமராக்கள்:-
க்கால இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்குமே எந்த அறிவுறைகளும் பிடிப்பதில்லை, காதலர்கள், கணவன்,மனைவி இருவருமே , அந்தரங்கத்தில் இருக்கும் போது, கேமராவில் படம், காணொளி எடுப்பதை,அது பெர்சனல் உபயோகத்துக்கு என்றாலும் தவிருங்கள், அது எதோ ஒரு ரூபத்தில் எடுப்பவரின் களவாணித்தனத்தாலோ,கவனக்குறைவாலோ, இணையத்தில் வெளி வந்துவிடும் அபாயம் நிறைய உண்டு, அப்புறம் ஆதம்பாக்கத்தில் படுக்கையறையில் வைத்துக்கொண்ட புனிதமான அந்தரங்கத்தை அமெரிக்காவில் ஒருவர் இணையத்தில் ஆவலாய் பிட்ஸா சாப்பிட்டுக்கொண்டே  பார்க்கும் அவலமும் நேரிடும்.மேலும் நிறைய காதலர்கள் காதலிக்கும் பெண்ணை ருசித்துவிட்டு,இந்த வீடியோவை சோவினிர் போல வைத்துக்கொள்கின்றனர்,எதிர்காலத்தில் அதை வைத்து மிரட்டி உறவை தொடரவோ,அவளின் மணவாழ்க்கைய குலைக்கவோ கூடும்.

மீபத்தில் ஒரு வலைத்தளத்தின் சுட்டி எங்கோ தென்பட,தேடிப்பிடித்து உள்ளே போனால், கல்லூரிப் பெண்களையும், குடும்பத்தலைவிகளையும், அன்னியோன்யமாய்  இருந்த தமபதியரையும்,  பீச்,பார்க்,ஹோட்டல்,நெட் கபே, ஏடிஎம் என லேபிள் வாரியாக பிரித்து வீடியோக்கள் எடுத்து ஆபாச தளத்தில் அடுக்கியிருக்கின்றனர் விஷமிகள்.அதில் ஆன்லைனில் சுமார் 55 பேர். ஃபாலோவர் 200 பேர்.  அதில் குறிப்பிட வேண்டிய விடயம், பெண்ணின் சம்மதத்துடனே எல்லா வீடியோவும் படமாக்கப்பட்டிருக்கிறது, ஒரு பெண்ணும் கேமரா முன்னர் ஆட்சேபனயே தெரிவிக்கவில்லை. ஆகவே மக்களே இனியேனும் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்,

ன்னியரோ, கணவரோ, யார் அந்தரங்கத்தை வீடியோ எடுத்தாலும் உடனே மொபைல் போனையோ, கேமராவையோ பிடுங்கி அழியுங்கள்,கணவன், அல்லது காதலன் அதையும் மீறி மிகவும் கெஞ்சினால் செவிட்டில் அறையுங்கள். மெமெரி கார்டு உங்கள் க்ரெடிட் கார்டை விட பத்திரமாய் வைக்க வேண்டிய வஸ்து.

காபாவிகள், தான் எளிதாய் அனுபவித்ததை சைக்கோத்தனமாக , உலகுக்கே பங்கு போடும் செயலாக, கயவர்கள் நிறைய பேர், மாணவர் போலவும், எக்ஸிக்யூட்டிவ் போலவும், அப்பாவி காதலன், கணவன்  தோரணையிலும் உலவுகின்றனர்.

பெற்றோர் கூட பார்க்காத பெண்ணின் பூரணத்தை கண்ட கயவர்களையும் பார்க்க விட வேண்டாம். நான் அந்த தளத்தை புக்மார்க் செய்யவில்லை. [தயவுசெய்து உடனே இதுபோன்ற வீடியோக்களை நெட்டில் தேடி பார்க்க வேண்டாம்] எப்போதாவது அபூர்வமாக சட்டம்  கண்விழித்து பஜாருக்குள் ரெய்டு போய், 40 ரூபாய்க்கு விற்கப்படும் டிவிடிக்களை  கைப்பற்றும்,அப்போது உங்கள் போட்டோக்கள், வீடியோக்கள் பத்திரிக்கையில் வந்து மானம் போவதை விட முன்பே ஜாக்கிரதையாக இருக்கலாம்.அந்தரங்கம் மிக புனிதமானது.
 ==============000=============

சென்னை ரயில் நிலையத்தில் இளைஞர் படுகொலை-காதலியை கற்பழிக்க முயற்சித்த பயங்கரம். [ தட்ஸ் தமிழ் செய்தி:-]

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை பறக்கும் ரயில் நிலையத்தில் தனிமையில் இருந்த காதலர்களைச் சூழ்ந்த ஒரு கும்பல் காதலியை கற்பழிக்க முயற்சித்தது. அந்த முயற்சியில்,காதலர் படுகொலை செய்யப்பட்டார். காதலியிடமிருந்த பொருட்களைப் பறித்துக்கொண்டு அக்கும்பல் தப்பி ஓடி விட்டது.

சென்னை மக்களை அச்சத்தில் உறைய வைக்கும் வகையில் நடந்துள்ள இந்த கொடூரச் சம்பவம் குறித்த விவரம் ..

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளார். அங்கு சலூன் கடை வைத்திருந்தார். இவருடைய அத்தை தனலட்சுமி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.

அத்தை வீட்டுக்கு அடிக்கடி வருவார் சரவணன். அப்போது அதேபகுதியில் வசிக்கும் நான்சி என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது. நான்சி பி.சி.ஏ முடித்து விட்டு சர்ச் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

காதலியைப் பார்ப்பதற்காக அடிக்கடி சென்னை வருவார் சரவணன். அப்போது அவரும், நான்சியும், ஆளரவமில்லாத கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையத்திற்குப் போய் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.

அதேபோல நேற்றும் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. காதலர்கள் தனிமையில் இருப்பதைப் பார்த்த அவர்களிடம் நெருங்கி கலாட்டா செய்ய ஆரம்பித்தனர்.
அவர்களை சரவணன் தட்டிக் கேட்டுள்ளார்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாத அந்த கும்பல், நான்சியை கற்பழிக்க முயன்றனர். இதைத் தடுக்க முயன்றார் சரவணன். இதையடுத்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தியது அக்கும்பல். இதில் சரவணன் அங்கேயே உயிரிழந்தார்.

இதைப் பார்த்து நான்சி கதறினார். அதை கண்டுகொள்ளாத அக்கும்பல் நான்சி அணிந்திருந்த தங்க் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டது.

தகவல் போலீஸாருக்குக்கிடைத்ததும் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஷகீல் அகமது உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

கொலையாளிகள் ரவுடிக்கும்பலாக இருக்கக் கூடும். அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸார்ச ந்தேகிக்கின்றனர்.

சென்னையில் உள்ள பல்வேறு பறக்கும் ரயில் நிலையங்கள் ஏதோ பாழடைந்த மாளிகை போலத்தான் காணப்படுகிறது. பல ரயில் நிலையங்களில் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு சுத்தமாக இருப்பதில்லை.

அரசு அலுவலகங்கள், புதிய தலைமைச்செயலகம் உள்ளிட்டவை நிறைந்திருக்கும் பகுதியான சேப்பாக்கம் ரயில் நிலையத்திலேயே பல நேரங்களில் தனியாக போக முடியாது. அந்த அளவுக்கு ஆளரவமற்று இருக்கும்.

இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகள் தனியாகவரும் பெண்கள் மற்றும் காதல் ஜோடிகளிடம் இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபடும்நிலை ஏற்படுகிறது.

இதைத் தடுக்க ரயில்கள் வரும், போகும் நேரம் வரையிலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் போதிய அளவில் போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம் என பொதுமக்கள் கருதுகிறார்கள்.

=============0000=============
சிறு குறிப்பு:- மேற்கண்ட கொலை பாதக செயலை செய்த கொடியவர்கள், ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கி பெயிலில்  தான் வெளியே வந்திருக்க வேண்டும், அவர்களுக்கு தான் அந்த தவ்ளத்தனம் இருக்கும். அவர்களை காவலர்கள் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் வழக்கு போட்டு,சொந்த காசில் டீசல் போட்டு, கோர்ட்டுக்கு மாஜிஸ்த்ரேட் முன்னர் கொண்டு போய் நிப்பாட்டுவதை விட, அவர்களின் விதைக்கொட்டையையாவது உங்கள் ஸ்ட்ராங்கான பூட்சுகாலால்  நசுக்கி கூழாக்கி விடுமாறு ,மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,மனித எருமை,சாரி மனித உரிமை பேசுவோருக்கு பயப்பட வேண்டாம்.அவன் அவன் வீட்டுக்கு இது போல நேர்ந்தால் தெரியும் சேதி!
=============0000=============