கழுதைக்கு கற்பூர வாசனை தெரியவே வேண்டாம்!!!!:(


ழுதைக்கு கற்பூர வாசனை தெரியாமல் இருக்கலாம், ஆனால் அது மாற்று இனத்தின் மீது இப்படி ஒர் வன்முறையை பிரயோகிக்காது. மனிதர்கள் என்று கூறிக்கொண்டு சில கொடியவர்கள் தெற்கு  ரஷ்யாவின் அசோவ் கடற்கரையில் ஒரு அப்பாவி கழுதையை பாராசூட்டில் கட்டி ஏற்றி,மோட்டார் படகில் இணைத்து , அரை மணி நேரம்  பாராக்ளைடிங் செயததையும், அதை அங்கே குழுமியிருந்த பல கொடியவர்கள் காப்பாற்றாமல் போட்டோ,வீடியோ எடுத்ததையும் நீங்களே பாருங்கள்!!!. 

யாரும் போலீசுக்கு கூட தெரிவிக்காமல் மும்முரமாக வீடியோ எடுத்துள்ளனர், கழுதை மரண பயத்தில் அலறியது ஊருக்கே கேட்டதாம்,கழுதையை இவர்களின் மோட்டார் படகு கீழே இறக்கி விடுகையில் அது  கடல் நீரில் ஏறத்தாழ  மூழ்கியே போனதாம்,பின்னர் மூச்சு திணறியபடியே அதன் கால்கள் தரதரவென உரசிய படி தரையைத் தொட்டதாம், மக்களில் சிலர் அதை கண்டு கைகொட்டி சிரிக்க, அங்கே இருந்த குழந்தைகள் மட்டும் இது தவறு என்று பெற்றோரிடம் அதை காப்பாற்ற சொல்லி அழுதது ,எனப்  படித்தேன். மனிதம் உயிரோடு இருக்கிறது என இன்னும் நம்புகிறீர்களா?!!!

கழுதையைக் கட்டி பறக்கவிடும் கொடியவர்கள்,காணொளி யூட்யூபிலிருந்து:-