மூடநம்பிக்கை என்னும் மனநோய்!!!!குழந்தையை கழுத்தறுத்து கொன்ற தம்பதிகள்


நண்பர்களே,சான்றோர்களே !!!! அப்பாவி குழந்தைகளின் மீதான வன்முறை பெடோபைல் கொலைகாரர்களாலும், சைக்கோக்களாலும், மந்திரவாதிகளாலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது, மூட நம்பிக்கைக்கு மதம் கிடையாது, என்பதற்கு சான்றாய் மேலும் ஒரு நரபலி சம்பவம்.
மூட நம்பிக்கையின் உச்சமாக ,தங்களின் உடல்நிலை சரியாக வேண்டி ஒரு அப்பாவி ஒன்றரை வயது தலைச்சன் பிள்ளையை சைக்கோ-கணவன் மனைவி இருவர் சேர்ந்து கடத்திக்கொண்டு போய்  ,கழுத்தை அறுத்து, நரபலி கொடுத்து,ரத்தத்தை சேகரித்து அதை வறுத்தும், தலையை சிறிய எவர் சில்வர் தூக்கில், அடைத்தும், உடலை பெரிய எவர் சில்வர் தூக்கில் திணித்து அடைத்தும், தலையை கடற்கரையில் சென்று புதைத்தும், பிஞ்சு உடலை வீட்டுக்குளேயே புதைத்தும் உள்ளனர்,

பின்னர் ஒரு வாரத்துக்கு தினமும் அந்த இடத்திற்கு சென்று பூஜையும் செய்துள்ளனர்.இது நடந்தது எங்கோ ஒரு தேசத்தில் இல்லை,நம் தமிழகத்தில் தூத்துக்குடியில்.இதனால் சொல்லவருவது என்ன என்றால் ?!!! 

ந்த விஞ்ஞான உலகிலும் நிலவும் நரபலி கொடுக்கும் மூடநம்பிக்கையால் இன்று ஒரு குடும்பம் குழந்தையை இழந்து புத்திர சோகத்தில் தவிக்கிறது, ஒரு கணவன் மனைவி  மூடநம்பிக்கை எனும் சைக்கோத்தனத்தால் கொடிய கொலைகாரர்கள் ஆகிவிட்டனர். இவர்களின் குற்றத்தை எடுத்து விசாரிக்கும் நீதிபதிகள் தங்கள் வீட்டில் இதுபோல நேர்ந்தால் என்ன தண்டனை கொடுப்பார்களோ?!! அதை கொடுக்கவேண்டும். குழந்தையை கொல்லும் கொலைகாரர்களை மின்சாரம் பாய்ச்சி கொல்வதையும் நடைமுறைப்படுத்தலாம், அப்போதாவது இதுபோல  குற்றங்கள் நடப்பதை தடுக்கலாம்.

ஆகவே நாம் பெற்ற பிள்ளைகளை அதுவும் தலைச்சன் பிள்ளைகளை கண்கொத்திப்பாம்பாக  பத்திரமாக கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில்  உள்ளோம். இது போல எங்கும் நடக்கலாம். முக்கியமாக மனிதனுக்குள்ளே இருக்கும் மிருகம் எப்போது வேண்டுமானாலும் இதுபோல விழிக்கும்.!!!

இந்த விஞ்ஞான யுகத்தில் இனியேனும்:-

1.வெள்ளிக்கிழமை பையன் பிறந்தால் ரவுடியாவான்
2.சனிக்கிழமை பெண்குழந்தை பிறந்தால் பரத்தையாவாள்.
3.செவ்வாய்க்கிழமை பெண் சமைஞ்சா புருஷனுக்கு ஆகாது.
4.புனர்பூசத்தில் குழந்தை பிறந்தால் ஹார்ட் பேஷண்ட் ஆகும்.
5.செவ்வாய், வெள்ளிக்கிழமை கூலி கொடுக்ககூடாது,ஆனால் வாங்குவேன்.
6.இருட்டினபிறகு பணம் கொடுக்ககூடாது,ஆனால் வாங்குவேன்.
7.ஆறு மணிக்குமேல ஊசி .விராட்டி,வைக்கோல் விக்ககூடாது
8.மூல  நட்சத்திரத்தில பொண்ணு பிறந்தா வாழ்க்க நல்லாஇருக்காது.
9.அமாவாசைல குழந்தைபிறந்தால் திருடனாவான்.
10.பையன் குழந்தைக்கு ரெட்டைசுழி இருந்தா இரண்டு தாரம்.
11.நாய் குட்டி வாய் கருத்திருந்தா அது திருட்டு நாய்.
12.காதுல முடி இருந்தால் கஞ்சன்.
13.கால் இரண்டாம் விரல் கட்டை விரலை விட பெரிசா இருந்தால் மனைவிக்கு அடங்கியவன்.
14.ஆடி மாசம்,வீடு மாறக்கூடாது,ஆடிமாசம் பீடை மாசம்.ஆடி மாசம் புருஷன் பொண்டாட்டி சேரவேக்கூடாது, 
15.சனிப்பிணம் தனியாகப்போகாது,நான்கு பேரைக்கூட்டிக்கிட்டு தான் போகும்.
16.திங்கட் கிழமை போய் சாவு துக்கம் கேட்டால் நமக்குதிருப்பி அடிக்கும்.
17.பூனை குறுக்கால போககூடாது.
18.சாவு,யானை குறுக்கால் போகலாம்.ஆனால் கைம்பெண் போகக்கூடாது.
19.குழந்தைக்கு கழுதைபால் கொடுத்தால் பேச்சு சீக்கிரம் வரும்.
20.நரி முகத்தில் விழிச்சால் செல்வம்.
21.தலையில பல்லி விழுந்தால் மரணம்.
22.வெளியே போறப்ப எங்க போறேன்னு கேட்கக்கூடாது. 
23.இரவில் பாம்பு என்று உச்சரிக்கக்கூடாது.
24.மூல நட்சத்திர பெண்னை கல்யாணம் செய்தால் மாமனார் இறந்து விடுவார்
25.திங்கட் கிழமை பயணம் திரும்பா பயணம்
26.கூட்டுத்தொகை எட்டு என வரும் வண்டியையோ, மனையையோ வாங்க கூடாது
27.தெருக்குத்து உள்ள வீட்டுக்கு குடிபோகக்கூடாது
28.கிணறுக்கு எதிராக வீட்டின் வாசல் இருக்க கூடாது
29.ஒரு மலையாளி ஆயிரம் கொலையாளிக்கு சமம்.
30.கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே!!!
31.ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி.
32.ரோஹிணி நட்சத்திரத்தில் ஆண்மகவு பிறந்தால் தாய் மாமாவுக்கு ஆகாது.
33.ஆயில்யம் நட்சத்திர மாப்பிள்ளை மாமியாருக்கு ஆகாது


[நண்பர்களே உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் அனுப்புங்க-சேர்த்துவிடுகிறேன்]

இன்னும்!!!!...இது போல காலத்துக்கு ஒவ்வாத பல பிக்காலித்தனமான சிந்தனைகளை அறவே விட்டுவிடுங்கள். மக்களே!!!..
=========0000=========
துரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்த செரின்பாத்திமாவின் ஆண் குழந்தை காதர்யூசப்பை (1) கடத்தி கொலை செய்து, நரபலி கொடுத்த கொடூரன் அப்துல்கபூர் (30) போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் மகதூம் தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் மீராசாகிப். இவரது நான்காவது மகனான நான் (அப்துல்கபூர்), அங்குள்ள சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். தந்தை வெளிநாட்டில் வேலைக்கு சென்றார். படிப்பு வராததால் ஊர் சுற்றி வந்தேன். மது, கஞ்சா பழக்கம் இருந்தது. பத்தாண்டுக்கு முன், முத்தையாபுரத்தை சேர்ந்த அசன்மரக்காயர் மகள் சையது அலி பாத்திமாவிற்கும், எனக்கும் திருமணம் நடந்தது. பாத்திமா நஸ்ரின் என்ற மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடால், ஐந்தாண்டுகளுக்கு முன், மனைவியை விட்டு பிரிந்தேன். தாயின் பாதுகாப்பில் மகள் உள்ளார். மனைவியை பிரிந்ததால், மனம் வருத்தப்பட்டேன். 

தனால், சமையல் வேலைக்கு செல்லவில்லை. என் மீது குடும்பத்தினர் வெறுப்படைந்தனர். எப்போதாவது வேலைக்கு சென்று, மது குடித்து வந்தேன். காசு இல்லாத நேரம் மனம் வருத்தப்படும். பட்டினியோடு திரிவேன். உடல் நிலை மோசமடைந்தது. எங்கள் ஊரை சேர்ந்தவர்கள், ஏர்வாடி தர்கா சென்றால், உடல் குணமாகும்; கெட்ட பழக்கம் மாறிவிடும் என்றனர்.

ரண்டாவது திருமணம்:ஐந்தாண்டுகளுக்கு முன், ஏர்வாடி சென்று தர்காவில் தங்கினேன். அங்கு தரும் உணவை சாப்பிட்டேன். ஒரு மாதத்திற்கு முன், என்னைப்போல் உடல் நிலை பாதிக்கப்பட்ட முத்தையாபுரத்தை சேர்ந்த, விவாகரத்து பெற்ற ரமீலாபீவி, ஏர்வாடி தர்காவிற்கு வந்தார். அவருக்கு பல உதவிகளை செய்தேன். எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. தர்காவிலேயே, நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஏர்வாடியில், 200 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம்.தர்காவிற்கு வருவோர் கொடுக்கும் காசுகளை சேகரித்து வந்தேன். அந்த வருமானத்தில் “சோமாஸ்’ செய்து, ரமீலாவிடம் கொடுத்து விற்று வரச்சொல்வேன். அதில் கிடைத்த வருமானத்தில் சாப்பிட்டோம். தலை பிள்ளையை கொன்று ரத்தத்தை எடுத்து ஒரு குழாயில் அடைத்தும், அந்த குழந்தையின் தலையை தனியாக எடுத்து, கடற்கரையில் புதைத்து வைத்து, ரத்தத்தை பூஜை செய்து கடலில் எறிந்தால் உடல் நிலை சரியாகும் என சிலர் சொல்ல கேட்டேன்.இது குறித்து ரமீலாவிடம் கூறினேன். அவரும், இதுபோல் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். சமயம் வரும்போது செய்வோம் என முடிவு செய்தோம். ஏர்வாடியில் சோமாஸ் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை வைத்து, பல தர்காக்களுக்கு சென்று பாத்தியா ஓதி வந்தோம்.

ர்காவில் குழந்தை கடத்தல்:கடந்த ஜூன் 30ம் தேதி கோரிப்பாளையம் தர்காவிற்கு வந்தோம். அங்கு தங்குவதற்கு பதிவு செய்ய வேண்டும். அதற்காக, பணம் கட்ட வேண்டும் என்றனர். எனக்கும், ரமீலாவிற்கும் சேர்த்து தலா 150 ரூபாயை தர்காவில் செலுத்தினேன். தர்காவில் 41 நாட்கள் தங்கலாம் என்றனர். கடந்த ஜூலை 1ம் தேதி தங்கினோம். கைக்குழந்தையுடன், பெண்ணும், பாட்டி ஒருவரும் தர்காவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்தக் குழந்தையை கடத்த திட்டமிட்டோம். இதற்காக, குழந்தைக்கு அருகிலேயே நாங்களும் படுத்துக் கொண்டோம்.இரவு 10 மணிக்கு தர்காவின் கதவுகளை பூட்டினர். அதிகாலை நான்கு மணிக்கு குழந்தை அழுதது. குழந்தைக்கு தாயார் பாலூட்டினார். பின், குழந்தையை படுக்க வைத்து, அருகிலேயே அவரும், பாட்டியும் படுத்துக் கொண்டனர். அதிகாலை 4.30 மணிக்கு பாங்கு சொல்லும் போது, கதவை திறந்தனர். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தோம்.

குழந்தையை கொன்று நரபலி:மதுரையில் இருந்து பஸ்சில் திருநெல்வேலி சென்றோம். குழந்தையை வெளியில் வைத்து கொலை செய்தால் தெரிந்து விடும் என ரமீலா சொன்னார். லாட்ஜில் அறை எடுத்து, அங்கு குழந்தையை கொல்ல முடிவு செய்தோம். இதன்படி, தூத்துக்குடி அருகே ஏரல் என்ற ஊருக்கு வந்தோம். பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள லாட்ஜில் அறை எடுத்தோம். குழந்தையின் வெள்ளி கொலுசு, வெள்ளி அறைஞாண்கயிரை கழற்றினேன். அதை விற்று வரும்படி ரமீலாவிடம் கொடுத்து அனுப்பினேன். அதை, 2,000 ரூபாய்க்கு ரமீலா விற்றார்.அறையில் இருந்த பாத்ரூமில் குழந்தையை ரமீலா பிடித்துக் கொண்டார். நான், கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை ஒரு சில்வர் டப்பாவில் பிடித்தேன். உடலை ஒரு பெரிய தூக்குவாளியிலும், தலையை ஒரு சின்ன தூக்குவாளியிலும் போட்டு மூடினோம். அறையை காலி செய்து விட்டு, ஏர்வாடியில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு வந்தோம். ரத்தத்தை மண் சட்டியில் போட்டு வறுத்தோம். ரத்தம் லேகியம் போல் ஆனதும், அதை ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தோம். சில நாட்கள் கழித்து, குழந்தையின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்தோம்.

னது தாயார், சிறு வயதில் என்னை தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி தர்காவிற்கு அழைத்து செல்வார். எனவே, குழந்தையின் தலையை, தர்கா அருகிலேயே புதைக்க திட்டமிட்டோம். இதன்படி, குழந்தையின் தலையை வைத்திருந்த தூக்குவாளி, ரத்தம் அடைத்து வைத்திருந்த சில்வர் குழாய், குழந்தையின் கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை எடுத்து கொண்டு கல்லாமொழிக்கு சென்றோம். கடற்கரையில், ரத்தம் அடைத்த குழாயை, ரமீலாவின் தலையை சுற்றி கடலில் எறிந்தேன். தலை வைக்கப்பட்டிருந்த தூக்குவாளியை, ரமீலா தலையை சுற்றி கடற்கரையில் தலையை புதைத்தேன். கத்தி, வாளியை கடலில் வீசினேன்.பின், தினமும் அங்கு சென்று பூஜை செய்து தொழுது வந்தேன்.கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு, தர்காவில் தூங்கி கொண்டிருந்த என்னையும், ரமீலாவையும் போலீசார் பிடித்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வருக்கு உறுதுணையாக இருந்து குழந்தையை நரபலி கொடுத்தது குறித்து ரமீலாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்துதல்), 302 (கொலை), 201 (தடயங்கள், சாட்சியங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ், மதுரை தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் வழக்குப்பதிவு செய்தார்.இருவரையும், மதுரை இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி முன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, அப்துல்கபூர் மதுரை சிறையிலும், ரமீலா திருச்சி சிறையிலும் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.
=========0000=========
நன்றி தினமலர்,தினமணி