களவாணி-மீண்டும் ஒரு யதார்த்த சினிமா!!!

ண்பர்களே,போன வாரம் தான் களவாணி படம் பார்க்க முடிந்தது, இந்த படத்தின் 20க்கும் மேற்பட்ட விமர்சனங்களை வலையில் படித்திருந்தமையால் இது ஒரு ஓவர்ரேட்டட் படமாக இருக்குமோ?!!! என்னும் தயக்கம் இருந்தமையால் பார்க்கணுமா? என யோசித்து , அட பார்ப்போமே!!!.  என பார்த்தேன், சும்மா சொல்லக்கூடாது , அற்பணிப்பு, என்ற ஒற்றை சொல்லுக்குள் ஆழ்ந்திருக்கிறார்கள் படத்தின் கலைஞர்கள்.

தை தியேட்டரில் பார்க்கவில்லையே!!!என மிகவும் வருத்தப்பட்டேன், பல பெரிய பட்ஜெட் குப்பைகளை தியேட்டரில் பார்த்து நொந்து போனதால் எது அசல?எது போலி? என்பதில் நிலவும் குழப்பத்துக்குள்ளேயே இதுபோல படங்களும் சிக்கிக்கொள்கின்றன. நான் கடைசியாக   4 முறை பார்த்த படம் என்றால் அஞ்சாதே, மற்றும் பொல்லாதவன், அதன் மேக்கிங்கில் மிரட்டியிருப்பார்கள், இயக்குனர்கள் மிஷ்கினும்,வெற்றிமாறனும். அதற்கு பின்னர், இந்த படம் தான் நான் அலுக்காமல் வெகுவாக  ரசித்து திரும்ப திரும்ப  பார்த்தது என்று சொல்லுவேன்.

ப்படி ஒரு வசீகரம் படத்தில். சற்குணம் இயக்குனராக கிடைத்ததற்கு தயாரிப்பாளர் மிகவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும், இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் தரமான படம் கொடுப்பது எப்படி?!!! என அவர் ஒரு புத்தகமே போடலாம். இதை நண்பர் கருந்தேள் எழுதியிருந்தால் அக்குவேறு ஆணிவேறாய் பிரித்து மேய்ந்திருப்பார். பாராட்டுவதிலும், குறைகண்டால் குட்டி தீர்ப்பதிலும் மனிதர் தாராளம். இப்படம் சாரு எழுதி உயிர்மையில் வருகிறது, படிப்போம் என்றார். அட சூப்பர் மேட்டராச்சே !!! என்றேன். நான்.

ந்த படத்தை பற்றி அண்ணன் ஜாக்கி, நண்பர் செ.சரவணகுமார்,ண்பர் பின்னோக்கி, நண்பர் செந்தில்வேலன் மற்றும் நிறைய பேர் அருமையாக வித்தியாசமாக எழுதியிருந்தனர். ஆகவே நான் எழுதாமல் விடுவதில் எந்த குறுகுறுப்புமில்லை. அவர்களின் விமர்சனங்களை வரிக்கு வரி அப்படியே வழிமொழிகிறேன்.

விமல் போன்ற நடிகனை பசங்க,தூங்காநகரம் போன்ற படங்கள் பார்த்துவிட்டு குறைத்து மதிப்பிட்டு விட்டுவிட்டேனே!!!அடடா?!!! எனத் தோன்றியது.இவர் கூத்துப்பட்டறை நடிகர் என்று இப்போது தான் தெரியும்,18வருடங்கள் ஹீரோவாக தோன்றியும் இன்னும் முகபாவனை உடல்மொழி என்பதே தெரியாத ஒரு ஓவர்ரேட்டட் நடிகன்,அல்லக்கைகளின் எடுப்பார் கைப்பிள்ளை இ.தளபேதி விஜயை ஒப்பிடுகையில் விமல் யதார்த்த நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.  விமலும் அந்த நாயகியும் அமர்க்களமான பெர்ஃபார்மன்ஸ்.  விமல் இனி மிக கவனமாக இருக்க வேண்டும். இதே போல கதையமைப்புடன் கூடிய படங்களாய் நடிக்கசொல்லி வாய்ப்புகள் குவியும், அதிலிருந்து கவனமாக தெரிவு செய்து நடிக்க வேண்டும்,

ந்த நாயகி ஓவியா, மிக அழகு, அருமையான நடிப்பு, முதல படமா?!!! சான்சே இல்லை, த கேர்ள் நெக்ஸ்ட் டோர்!!! என்ற சொல் சிறப்பாயிருக்கும் , சற்குணம் படத்தின் கலைஞர்களிடம் வேலை வாங்கியதிலேயே மிளிர்கின்றார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, படம் பார்த்த அனுபவம். எல்லா படத்துக்கும் இது கிடைத்து விடாது. படம் முடிந்த  உடனே நான் செய்த முதல் வேலை என் ப்ளாக்கரின் ப்ரொஃபைலில் பிடித்த படங்கள் பகுதியில் இந்த படத்தையும் கையோடு இணைத்தது தான்.

பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட, பாத்திரங்கள் ரெண்டு பென்சிலாவது வாங்கி குடுண்ணே!!! என்று சொல்லும் தங்கச்சி, சரியான பொருத்தமான பாத்திர தேர்வு, பூரா பணத்தையும் கேக்காம மூணு பங்கோட விட்டானே!!! என்னும் அம்மா, 2500 திர்காம்ஸ் குடுத்து லாப்டாப் வாங்குனேன்,கட்டிட வேலை முடிக்காம கெடக்கு பாத்து போட்டுகுடுங்க பாய், என்னும் இளவரசு என வாழ்ந்திருக்கின்றனர்.

ஞ்சா கருப்பு, பாலைவனத்து மழையை போல என்பேன், ஸ்டீரியோ டைப் காமெடியைப் பார்த்து பார்த்து நொந்த நமக்கு ஆகச்சிறந்த மாற்றாக விளங்குகிறார், இவரை இன்னும் நாம் நன்கு பயன்படுத்தலாம்!!!, செம ரிசல்ட் தருவார். என்பது என் எண்ணம். வில்லனாக வந்தவர் , என் பள்ளியில் கூடப் படித்த எதிரி மாணவன் போலவே இருக்கிறார். பார்க்கும் போதே எரிச்சல் வரும் ஒரு  விரோதக்கார முகம். மனிதர் என்னமா பெர்ஃபார்ம் செய்திருக்கிறார் ?!!! .  எங்க பல்லாவரம்,  பம்மல் ஏரியாவில் சபரிமலை சீசனில் மாலை போட்டுக்கொண்டு தவ்ளத்தனம் செய்யும் பயபுள்ளைகளை நினைவு படுத்துகிறார்.

ற்றபடி குறை என்று சொல்லவே முடியவில்லை, இருந்தால் தானே? சுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு குறை கண்டுபிடிக்க முயன்று தோற்ற இன்னொரு படம். வெல்டன் டீம். இயக்குனர் சற்குணத்தின்  படங்களை இனி தேடிப்பார்க்கும் ஆவலை உண்டு பண்ணிவிட்டார்.!!! இப்படம் , இவ்வளவு தாமதமாக எழுதுவதற்கு காரணமே, இவ்வளவு நல்ல படத்தை ஊடகத்தில் சிலாகிக்காமல் இருப்பது குற்றம் என்பதால் தான்.

விர, படம் பற்றி எழுதிய நண்பர்களின் பதிவுகளில், படம் பார்த்திராததால் முன்பே பின்னூட்டியிருந்தாலும், ரசித்தவற்றை பகிர முடியவில்லை. இது போல நல்ல படங்களையும் அவ்வபொழுது தயாரிக்கும் தயாரிப்பாளருக்கும் ,  இயக்கும் இயக்குனருக்கும், வெற்றிபெறச்செய்யும் ரசிகர்களுக்கும்  மிக்க நன்றி.

விமல்பற்றிய ஒரு செய்தி:- சமீபத்தில் மீண்டும் காஞ்சிவரம் படம் பார்தேன் அதில் நடிகர் விமல் மினி ரமேஷ் என்னும் பெயரில் பிரகாஷ்ராஜின் மருமகன் ரங்கனாக அவர் வருவதை உறுதி செய்துகொண்டேன்,விமலின் ஃபில்மோக்ராஃபியில் இந்த மிக முக்கியமான படம் இல்லாதது கண்டு ஆச்சர்யமடைந்தேன். நண்பர்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்,குரலும் விமலது குரல் தான் அவர் ஏன் மினிரமேஷ் என அறிமுகமானார் என குழப்பமாக இருக்கிறது.
களவாணி=நியாயமான கூலி
=========0000==========
சாதித்த களவாணி குழுவினரின் பேட்டி:-