நீலத்தாமராவும் யேசுதாஸின் |சித் நா கரோ|என்னும் பொக்கிஷமும்!!!


 அருமை நண்பர்களே!!
நீலத்தாமரா என்னும் மலையாள திரையுலகின் முதல் ரீமேக் படம் பார்த்தேன், என்னத்தச் சொல்ல?!!! அபாரம், ரம்மியம், வித்யாசாகரின் அற்புதமான இசையும், வயலார் சரத் சந்த்ர வர்மாவின் பாடல்களும் செவிக்கினிமை, இசைக்கு மொழி கிடையாது , என்பது மீண்டும் நிரூபனமானது, [படம் பற்றியான என் பார்வையை விரைவில் எழுதுவேன்]

டத்தின் ஐந்து பாடல்களுமே அருமை, அவசியம் கேளுங்கள், உங்களுக்கு கர்நாடக சங்கீதம் கேட்க பிடிக்கும், என்றால் இன்னும் அருமையான சுகானுபவத்தை தரும்,நீலத்தாமரா படத்தின் பாடல்களை தரவிறக்க

னக்கு  படத்தில் வந்த பிரதான  பாடல்கள் எல்லாவற்றையும் விடவும் இப்பாடலே உள்ளம் கொள்ளை கொண்டது,  அழகிய பணிப்பெண்  அர்ச்சனா கவியை ப்ராக்கெட் போட, படித்த பணக்கார மைனர்  கைலாஷ் , யேசுதாசின் மனம் மயக்கும் குரலில் வெளிவந்த சித் நா கரோ அப் தோ ருகோ என்னும் 1979ஆம் ஆண்டு வெளியான Lahu Ke Do Rang  படத்தின் பாடலை, தன் நேஷனல் பானசோனிக் டேப்ரிகார்டரில்  ஒலிக்கச்செய்ய,  பழம் நழுவி பாலில் வலிய வந்து விழுந்தது போல சிட்டு மைனருக்கு மடிகிறது, 

டடா!!! , வியந்து கொண்டே இருக்க வைக்கும் யேசுதாசின் வசீகரக்குரல், எப்படி ?!!! சுப்ரமணியபுரம் படத்தில் இசைஞானியின் சிறுபொன்மணி அசையும் என்னும் கல்லுக்குள் ஈரம் பாடலை வைத்தே 80களின் நோஸ்டால்ஜியா கிரியேட் செய்தனரோ?!!  மலையாளத்துக்கு அப்படி ஒரு அபாரமான முயற்சி !!!,


வசியம் கேளுங்கள்.  இனியாவது புதிய படங்களில் 70,80 களின் பாடல்களை ரீமிக்ஸ் செய்து கெடுத்து பாழடிக்காமல், உள்ளது உள்ளபடி  அப்படியே பிண்ணணியில் வழியவிட்டால் கோடி புண்ணியமாகப்போகும், புதிய சந்ததியினருக்காவது ஒரிஜினல் அப்படியே போய்ச்சேரும், 

ப்போது திரைபடங்களில் வரும், அநேகமான உப்பு சப்பில்லாத இசையையும் பாடல்களை கேட்டு போரடித்துப்போன செவிகளுக்கு ஆகசிறந்த மாற்றாக இருக்கும் என்பது திண்ணம். 70களும் 80 களிலும் இவற்றை அனுபவித்து திளைத்திருந்த பெரிசுகள் தான் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் என்றும் தோன்றியது!!!
====0000====
நம்பாவிட்டால் நீங்களே பாருங்கள்:-

இது அனுராகவிலோச்சனனாயி என்னும் தேவாம்ருதம்:-