நீங்கள் ஏசி அறையில் படுப்பவரா?!!!

ண்பர்களே!!!
ன்று நம் வீடுகளில் காற்றோட்டம், வெளிச்சம்,சுத்தமான தண்ணீர் இருக்கிறதோ? இல்லையோ? ஏர்கண்டிஷனர் இருக்கும், இன்றைய குழந்தைகள் ஏசி அறைகளிலேயே பிறக்கின்றன, ஏசிக்காற்றுக்கு பழகியும் விடுகின்றன, பெரியவர்களும் தான்,அரைமணிநேரம் மின்வெட்டுக்கே தாக்கு பிடிக்கமுடியவில்லை,இன்வெர்டரும் வைத்திருக்கிறோம்.  அதை தவறு என்றே சொல்லவில்லை.அதற்கு உண்டான பாதுகாப்பு, பராமரிப்புகளை பேணிவருகிறோமா?என்பதே கேள்வி.
சென்ற வருடம் ஒரு அறையை ஏர்கண்டிஷன் செய்தவர்கள், பக்கத்து படுக்கை அறைக்கும் ஏசி போடுவோம், ஹாலுக்கும் ஏசி போடுவோம் என்று, 3பேஸ் கனக்‌ஷன் நிறைய செலவு செய்து வாங்கியாவது இரண்டாவது ஏசியையும் பொருத்திவிடுகின்றோம்,
டுத்தமுறை உங்கள் ஏசியை ஆன் செய்யும் முன்னர், உங்கள் ஏர்கண்டிஷனர் கீழ்கண்ட ஐந்து பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதா? என்று சோதித்துப்பார்க்கவும், அப்படி இல்லை என்றால் தயவுசெய்து சிறிதும் தயங்காமல், கீழ்கண்ட  பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  உங்கள் ஏசியில் துரிதகதியில் செய்து விடவும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இப்படி ஒரு அபாயம் அடங்கியிருப்பதை நினைக்கையிலேயே  நெஞ்சு படபடக்கிறது.
=====0000======
நண்பர்களே எதோ? ஆர்டிஎக்ஸ் குண்டு வெடித்தது போல் இருக்கும் அறையை பாருங்கள்
ஏ.ஸி. வெடிக்கும்? [ஜூவி செய்தி]

'வரதாபாய்...' என ஒரு காலத்தில் மும்பையை அதிரவைத்த வரதராஜ முதலியாரின் மகள் மகாலட்சுமி, தன் கணவர் ஹேமந்த் சந்தருடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தார். அவர் களது வீட்டில் இருந்த ஏ.ஸி. வெடித்து எரிய... இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதனால், ஏர்கண்டிஷன் உபயோகப்படுத்தும் மக்கள் மத்தியில் பீதி!

விண்டோ ஏ.ஸி-யில் பிரச்னை ஏற்பட்டுத்தான் இந்த சம்பவம் நடந்தது என்கிறார்கள். இது குறித்து, மயிலாப்பூர் உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜிடம் கேட்டபோது, 'மின்கசிவு காரணமாகத்தான் விபத்து என்று சோதனையில் தெரிந்தது. ஃபியூஸ் போகக் கூடாது என்பதற்காக ஃபியூஸ் கேரியரில் 'திக்' கம்பி போட்டதால், ஒயர் ஹீட் ஆகி எரிந்து, ஏ.ஸி-யில் விபத்து நடந்து இருக்கிறது. அடுத்து, பிரேத பரிசோதனை முடிவுக்காகக் காத்து இருக்கி றோம்!'' என்றார்.

ஏ.ஸி. வெடிக்குமா?! கலீல் என்ற அனுபவம் வாய்ந்த ஏ.ஸி. மெக்கானிக்கிடம் விசாரித்தபோது, நமக்குத் தெரியாத பல சங்கதிகளை அடுக்கினார். 
1.'வீடு கட்டி ஒயரிங் செய்யும்போது ஏ.ஸி-க்கு எனத் தனியாக ஒயர் கனெக்ஷன் போடவேண்டும். இதற்கு, 720 ஸ்கொயர் எம்.எம். ஒயர் தனியாக உள்ளது. ஆனால், பெரும்பாலானோர் எல்லாவற்றுக்கும் போடுவதுபோல, 320 ஸ்கொயர் எம்.எம்-மையே போடுவார்கள். இது லோடு தாங்காது.

2.ஏ.ஸி-க்கு என்று தனி ஸ்விட்ச் பாக்ஸும் உண்டு. டிப்பர் ஸ்விட்ச் என்போம். அளவுக்கு அதிகமான மின்சாரம் செல்லும்போது தானாக அது ஆஃப் ஆகிவிடும். இப்போது உள்ள மாடல்களில், 20 ஆம்பியருக்கு மேல் சென்றாலே ஆஃப் ஆகிவிடும். ஆனால், பழைய மாடலில் 30 ஆம்பியருக்கு மேல் சென்றாலும், ஆஃப் ஆகாது. இப்படி அளவு அதிகமாகும்போது கேபிள் சூடாகி எரிய ஆரம்பித்துவிடும்.

3.ஏ.ஸி-யை சர்வீஸ் செய்வது தான் மிக முக்கியம். சிலர் சர்வீஸ் செய்வதே கிடையாது. சிலர் ஆண்டுக்கு ஒரு முறை செய்வார்கள். ஆனால், மூன்று மாதத்துக்கு ஒரு முறை சர்வீஸ் தேவை. அப்படி செய்தால், இப்படி தீப்பிடிப்பது, வெடிப்பதுபோன்ற பிரச்னைகள் வராது. 

4.ஏ.ஸி-யை சர்வீஸ் செய்யும்போது, தீ விபத்தை ஏற்படுத்தக்கூடிய இடங்களான, ஏ.ஸி-யில் உள்ள ஃபேன் மோட்டார், கம்ப்ரஸர் மோட்டர்களை சரிபார்ப்போம். ஒயர் கனெக்ஷன் லூஸாக இருந்தாலும், சூடாகி எரியலாம். ஹீட் ஆகி எரியும் வாய்ப்பு உள்ள இடங்களை சர்வீஸின்போது செக் செய்வோம்!'' என்றவர், தொடர்ந்து...

4.''ஏ.ஸி-யோடு இலவச ஸ்டெபிலைசர் தருகிறார்கள் என்று அதை வாங்கி அப்படியே பொருத்திவிடக் கூடாது. அது சீன தயாரிப்பாக இருக்கக்கூடும். அதில் உள்ளே அலுமினியத்தால் செய்யப்பட்டு இருக்கும். ஆனால், தாமிரத்தில் இருக்க வேண்டும். எனவே, நல்ல தரமான ஸ்டெபிலைசர் பயன்படுத்துவதும் முக்கியம். 

5.அடுத்தது, டிரான்ஸ்ஃபார்மர். நகரம் வளர்ச்சி அடைவதற்கு முன்பு வைக்கப்பட்ட பழங்கால டிரான்ஸ்ஃபார்மர்தான் ,அதன் ஆயுள் குறைந்தது 50வருடமாவது இருக்கும், அதை மின்வாரியங்கள் மாற்றுவதோ ,புணரமைப்பதோ இல்லை. முன்பு ஒரு ஊரில் 1000 குடும்பங்கள் இருந்த  குடியிருப்பு பகுதியில் ,இன்று 10,000 குடும்பங்கள். வீடுகள், ஃபிளாட்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் பழைய டிரான்ஸ்ஃபார்மர்களால் வோல்டேஜ் பிரச்னை ஏற்படுகிறது. அந்தந்தப் பகுதி மக்கள், மின் வாரியத்துக்குக் கடிதம் எழுதி,  டிரான்ஸ்ஃபார்மரை எப்பாடுபட்டாவது மாற்ற வேண்டும்...'' என்று முடித்தார்.

இனி ஒரு ஏ.ஸி. வெடிக்க வேண்டாமே!
- பா.பிரவீன்குமார் படம்: நன்றி ஜூனியர் விகடன்.