பாலிவுட் என்னும் பகல்கொள்ளைக்காரர்கள்!!!

அருமை நண்பர்களே!!!
விழித்திருக்கும் போதே கண்ணில் மண்ணை தூவிவிட்டு அலேக்காக அபேஸ் செய்து விட்டு பறக்கும் பகல் கொள்ளையர்களைப் பற்றியும் அவர்கள் திருடிய விதத்தையும் தினத்தந்தி  போன்ற நாளிதழ்களில் விறுவிறுப்பான நடையில் படித்திருப்போம். ஆனால் அவர்களை நேரில் பார்த்திருப்போமா? !!! அதற்கு அவசியமேயில்லை , பாலிவுட்டின் முண்ணணி  நடிகர்கள் , இந்திய ஐகான் அமிதாப் பச்சனையும் சேர்த்து அநேகம் பேர்   பகல் கொள்ளையர்கள் தான், 

சரி, ஏன்? அடுத்தவர் படைப்பை திருடி அதிலிருந்து மறுபடைப்பை உருவாக்கக்கூடாது?!!! 

1.ஆக்கம் மற்றும் அறிவுத்திருட்டு பெருகினால் படைப்பாளிகளுக்கு கற்பனை வறட்சி உருவாகும்,மக்கள் சலிப்படைவர். பல நல்ல படைப்புகள் தோற்றுபோகும், அசலான கற்பனை வளம் கொண்ட படைப்பாளிகள் கூட , சற்றும் யோசிக்காமல் படைப்பு திருடர்களாவர்.

2.போலியையே உண்மை என்று நினைக்கும் மாயையை மக்களிடம் அது தோற்றுவிக்கும், உண்மையான படைப்பாளிக்கு செல்லவேண்டிய நியாயமான கூலி[ராயல்டி],கௌரவம், சென்று சேராது, நிறைய படைப்பாளிகள்  மனமுடைந்து தற்கொலையும் செய்துகொள்வர்.

3.உலக அரங்கில் சீனர்கள் என்றாலே இண்டஸ்ட்ரியல் டிசைன்  & டெக்னாலஜி காபி கேட்ஸ். [தொழிற்நுட்பம் மற்றும் அறிவு சார்பு திருடர்கள்]. இந்தியர்கள் என்றாலே ப்ளேகாரிஸ்ட்ஸ் [ஆக்கம் மற்றும் அறிவு சார்பு திருடர்கள்] என்று பெயர் வாங்கியிருக்கிறோம். அந்த அவப்பெயர் நிரந்தரமாகிவிடும்.

4,எத்தனையோ நல்ல இயக்குனர், நடிகர்களின் பேரலல் சினிமா, ஆல்டர்நேட் சினிமாக்கள் என்று அழைக்கப்படும் மாற்று சினிமாக்கள் இந்த நீங்காத அவப்பெயரினால் வெளியே தெரியாமலோ , யாரும் பாராமலோ போக நேரிடும்.  மொத்தத்தில் புதுமை செத்துவிடும்.

5.தவிர படைப்பாளிகளுக்கு நிரந்தரமாக 9-00 டு 6 -00 பார்க்கும் வேலை இருப்பது இல்லை, இவ்வாறு ஒருவனின் படைப்பை அவனுக்கு தெரியாமல் மறுஆக்கம் செய்வதால். அவனது தொடர் வருமானம் நின்று போகிறது, மூன்றாவது திருடனும் உருவாவான்,எப்படி? இதோ இப்படித்தான்:-

டீரெய்ல்ட் என்று ஒரு ஹாலிவுட் படம், அதை இம்ரான் ஹஸ்மி என்னும் பலே திருடன் , திருடி த ட்ரெய்ன் என்னும் பெயரில் நடிப்பதை கேள்விப்பட்ட கௌதம் வாசுதேவ மேனன், விட்டேனா பார்?!!! என்று பச்சைகிளி முத்துச்சரம் படத்தை போட்டிபோட்டுக்கொண்டு  மூன்றே மாதத்தில் திருடி எடுத்து அவர்களுக்கு மூன்று மாதம் முன்பே ரிலீஸ் செய்தார். இப்படித்தான் நமக்கு அவப்பெயர் உருவாகும்.

ரு அந்நிய படைப்பிற்கான கூலியை கொடுத்து உரிமை வாங்கி இந்திய மொழியில் எடுத்தாலும் மூலத்தின் படைப்பாளியின் பெயரை போடவேண்டியது அவசியமாகிறது.   இல்லை என்றால், அதை மொழிபெயர்த்து, மறுஆக்கம் செய்தவரே அந்த படைப்பை உருவாக்கியதாக பிம்பம் உருவாகிவிடும். அதுவும் ஒருவகையில்  திருட்டுதான்!!!.

விர அகில உலக அரங்கில் ஹிந்திப்படங்கள் தான் இந்திய சினிமாக்கள் என நம்ப வைக்கப்பட்டுள்ளன.  ஹாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகுந்த பொருட்செலவிலும் தயாரிக்கப்படுகின்றன.   இந்தியாவில் ஹிந்தி அலுவல் மொழியாக உள்ள 11 மாநில மக்களாலும்,  இந்தியாவில் ஹிந்தி மொழி தெரியாத மாநில மக்களாலும் ,  அகில உலக அளவில் பாகிஸ்தான்,  பங்களாதேஷ், நேபால், ஃபிஜி போன்ற நாட்டு மக்களாலும் பிரதானமாக விரும்பி பார்க்கப்படுகின்றன.

விர அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மத்தியகிழக்கு, ஆஃப்ரிக்கா, கிழக்கு, தெற்கு ஆசியாவில் குடியேறிய மக்களாலும் ஆரவார வரவேற்புடன் விரும்பி பார்க்கப்படுவதால்,  ஹிந்தி சினிமாவில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை,  ஆகவே பாலிவுட்டில் படமெடுப்பது என்பது கொலைக்குத்து குடும்ப வியாபாரம். 

ருந்தும் இந்த பாலிவுட் பகல் கொள்ளையர்கள், காப்பிரைட் வாங்கியோ படைப்பாளிக்கு க்ரெடிட் கொடுத்தோ படம் எடுப்பதேயில்லை. உண்மையான படைப்பாளிக்கு மனச்சிதைவு, தாழ்வு மனப்பான்மை, சுயபச்சாதாபம் தருவதில் பாலிவுட்டை,நம் கோலிவுட் தோற்கடிக்க, ஏன் கிட்டத்தில் கூட நெருங்கவே முடியாது.  அங்கு எடுக்கப்படும் அநேகம் படத்தின் கதை,  இசை, பாடல் வரிகள், நாவல்கள், கேமரா கோணங்கள், எடிட்டிங்குகள். உடை, செட்கள் அப்படியே  அகில உலக சினிமாக்களில் இருந்து திருடி மறுஆக்கம் செய்தவையே.
====0000====
ப்படி , பாலிவுட்டில் வெளிவந்த இப்போதைய சமீபத்திய பகல் கொள்ளை தான் நாக் அவுட்.  இது போன் பூத் என்னும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற படத்தின் அப்பட்டமான தழுவல் .  போன் பூத் படத்தை  HBO , ACTION  மற்றும் ஏனைய தொலைக்காட்சிகளில் எத்தனை முறை ஒளிபரப்பியிருப்பார்கள்? என்ற கணக்கே இருக்காது.  சிறு இந்திய  நகரங்களில் வசிக்கும் மக்களுக்கும் அந்த படமும் அதில் கொலின் ஃபேரல், கீஃபர் சதர்லேண்ட் & ஃபாரஸ்ட் விடேகரின் அபாரமான நடிப்பும் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அதையே இந்த பலே திருடர்கள் 4 பாடல்கள் சேர்த்து துகிலுரிந்து விட்டனர்.இதில் திருட்டுக்கு உடந்தையாக பேரலல் சினிமாவின் தலைக்கல் என்று புகழப்படும் இர்ஃபான் கான் வேறு,வேதனை வெட்கம் அவமானம்.பற்றாததற்கு அருமையான நம்மூர் கேமராமேன் நட்ராஜ் சுப்ரமண்யம் வேறு உண்டு.
நாக் அவுட் படத்தின் முன்னோட்ட காணொளி.
====0000==== 






====0000====
படைப்பு கொள்ளையர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
irected by Mani Shankar
Produced by Sohail Maklai
Written by Mani Shankar
Starring Sanjay Dutt
Irfan Khan
Kangana Ranaut
Gulshan Grover
Sushant Singh
Music by Gourov Dasgupta
Vishal Dadlani (lyrics)
Panchhi Jalonvi (lyrics)
Shellee (lyrics)
Cinematography N Natarajan Subramaniam
Distributed by Sohail Maklai Entertainment Pvt Ltd
Aap Entertainment Limited
Release date(s) 15 October 2010 (2010-10-15)
Country India
Language Hindi
Budget 30 crore (approx)
தே பாலிவுட் திருட்டு பயங்கரவாதி சஞ்சய்தத்தின் அதிமுக்கிய திருட்டான ஜிந்தா பற்றி அறிவீர்கள், அல்லது மாட்டீர்கள். அது ஓல்டு பாய் என்ற  கொரிய நாட்டின் உலகசினிமா காவியத்தின் அப்பட்டமான திருட்டு மறு ஆக்கமாகும். மோனாலிசா ஓவியத்துக்கு மீசை வரைந்தது போல, லொல்லுசபாவில் வெற்றிப்படங்களை இமிடேட் செய்வது போல அந்த படத்தை வன்புணர்ந்திருந்தான் இந்த பாலிவுட் பயங்கரவாதி. நீங்கள் ஓல்டுபாய் என்னும் ஒரிஜினலையும் இந்த பாலிவுட் அசிங்கத்தையும் ஒரு சேரப் பார்த்திருந்தால் என் அடங்கா கோபத்துக்கான ஊற்றுக்கண் புரியும், மிக அருமையான யாராலும் யோசிக்க முடியாத ஒரு கதையை உருகுலைத்து, சிதைத்து, அதில்  தேசி செண்டிமெண்ட்டையும்  சேர்த்து, 4 பாடல்களை இடையில் புகுத்தி,  மகா அற்பத்தனமாக நடித்தும் அப்படத்தை வீணடித்திருந்தனர்.



ஓல்டுபாய் ஒரிஜினல் இசை வடிவத்தின் அப்பட்டமான தழுவலை பின்னாளில்       2 ஆஸ்கர் விருதுகள் பெற்ற ரசுல் பூக்குட்டியே முன்னிருந்து திருடியுள்ளார். இசைப்புயலின் சைனாடவுனில் இருந்து ஒரு ட்ராக்கையும் உருவி    ஸிந்தா குழுவினர் க்ளைமாக்ஸில் போட்டுவிட்டனர்.  எல்லாவற்றிற்கும் மேல் ஸிந்தா குழுவினர், ஒரு காமெடி செய்தனர்.   ALL COPYRIGHT’S RESERVED TO WHITE FEATHER FILMS, MUMBAI, INDIA. என்று டிஸ்க்லெய்மர் போட்டனரே பார்க்கனும்!!!!. இதைப்பார்த்த பின்னும் உயிரோடு இருக்கும் ஓல்ட் பாய் பட இயக்குனர்    Chan-wook Park   ஒரு இரும்பு மனிதர் தானே.!!!

தில் என்ன ஒரு கொடுமை என்றால்?!!! இவர்கள் மீது அறிவுத் திருட்டு வழக்கு போட்டு, உலக அரங்கில் பாலிவுட்டினரை தலைகுனிய வைத்த Show East என்னும் கொரியப்பட கம்பெனி இதுபோல அறிவுத்திருடர்களின்  சிபாரிசினாலும் எதிர்ப்புகளாலும் இழுத்தே மூடப்பட்டுவிட்டது!!!, ஆகவே அந்த ஆக்கம் மற்றும் அறிவுத்திருட்டு வழக்கிலிருந்து, ஸிந்தா கும்பல் வெண்ணையில் கத்தி வழுக்கிச் செல்வதைப்போல தப்பி விட்டனர்.


துவரையில்  பாலிவுட் குற்றவாளிகள், எந்தவிதமான சட்டரீதியான நடவடிக்கைகளையும் சந்திக்கவேயில்லையே !!!! என்பது தான் என் ஆதங்கமாக இருக்கிறது, இப்போது தான் ஒன்று புரிகிறது இசைப்புயல் ஏன் தன்னுடைய ஒவ்வொரு படைப்புக்கான உரிமையையும் பேடண்ட் செய்கிறார்?!!!.காப்பிரைட் வாங்குகிறார் என்று.?!!! அவர் மட்டும் அப்படி செய்யா விட்டால் கூச்சமே இல்லாமல் இசைப்புயலின் பல இசைக்கோர்வைகளை இவர்கள்  சூறையாடியிருப்பார்கள் என்பது திண்ணம்!!!.

பாங்காக் போய் எடுக்கப்படும் ஏனைய ஹிந்தி சினிமாக்கள் துகிலுரியப்பட்ட திருட்டுக்கதையை கொண்டிருக்கிறது.த ட்ரெய்ன் என்னும் படம்,அது டீரெய்ல்டின் திருட்டு மறுஆக்கம். மர்டர் என்னும் படம் அன்ஃபெய்த்ஃபுல் என்னும் ஹாலிவுட் படத்தின் திருட்டு மறு ஆக்கம். இதில் டயான் லேன் என்னும் நடிகையின் உடல்மொழி,அவரது உணர்ச்சிகள்,அவரது நடிப்பை அப்படியே ஈயடித்தான் காப்பி அடித்திருப்பார் உத்தமி மல்லிகா ஷெராவத்.மூன்று வருடம் முன்பு பெல்லி பட்டன் என்று யூட்யூபில் அடித்து தேடினால் மேற்கண்ட இரண்டு வீடியோக்கள் முண்டியடித்து வந்தன. அப்படி தேடிப்பிடித்து கண்டு நொந்தது இந்த படம்.

====0000====
ப்படியே ஒருவர். காண்டே என்னும் இந்தியன் ஐகான் அமிதாப் பச்சன் இதே பாலிவுட் திருட்டு பயங்கரவாதி சஞ்சய்தத்துடன் கூடி நடித்த படமும் பார்த்திருக்க வேண்டும், நான் மட்டும் குவெண்டின் டாரண்டினோவாக இருந்தால் இந்த திருடர்களை கழுவில் ஏற்றியிருப்பேன், அந்தப் படம் முதல் 20 நிமிடம் யூசுவல் ச்ஸ்பெக்ஸ்  படத்தின் அப்பட்டமான தழுவலையும், அடுத்த 20 நிமிடம் ஹீட் என்னும் படத்தின் அப்பட்டமான தழுவலையும், அடுத்த முழுப்பாதியும் ரிசர்வாயர் டாக்ஸ் என்னும் உலகப்புகழ்பெற்ற படத்தின் தழுவலாகும். இறைவன் என ஒருவன் இருந்தால் இவர்களின் கொட்டத்தை அடக்கட்டும் என்று தான் படம் பார்த்த பின்னர் நினைக்கத்தோன்றியது, அப்படி ஒரு கிராதகர்கள். ஆனால் பேச்சு மட்டும் அகில உலகுக்கே சக்கரவர்த்தி போல பேசுவார்கள்.இதில் அந்த ஹெல்வீடிக்கா என்னும் எழுத்து வடிவத்தைக்கூட காப்பி அடித்துள்ளதை பாருங்கள்.என்னால் முடியவில்லை என்றாலும் கட்டுரை இன்னும் முடியவில்லை.
====0000==== 
 ம்மில் ஏகம் பேர் 21 என்னும் கெவின்ஸ்பேசி நடித்த படத்தை பார்த்திருப்போம், இந்த நாரப்பாடைகள்  அதை திருடி டீன் பட்டி  [மூன்று திருட்டு நாய்கள்] என்னும் பெயரில் படம் எடுத்ததுமில்லாமல் , அதில் ரிச்சர்ட் அட்டன்பரோவின்  படத்தில் காந்தியாகவே வாழ்ந்த  பென் கிங்ஸ்லியையும், நம்மூர் நடிகர் மாதவனையும் கூட அந்த திருட்டுக்கு உடந்தையாக்கிவிட்டனர்.  ஆனால் படம் படு தோல்வி. இந்த  படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். இதில் என்ன கொடுமை என்றால் அமெரிக்க படத்தையே திருடி எடுத்துவிட்டு,அதே அமெரிக்க இயக்குனருக்கு , அமெரிக்காவிலேயே சிறப்பு காட்சி போட்டுக்காட்டி கூடவே அம்ர்ந்து படம் பார்க்கும் சாமர்த்தியம் நம் இயக்குனருக்கு சுட்டுப் போட்டாலும் வரவே வராது!!! என்ன நண்பர்களே சரிதானே?!!!
====0000====
முடியாது-தொடரும்