[Gabhricha Paus] காப்ரிஸ்சா பாவூஸ் [மோசக்கார மழை][இந்தியா][2008]

=====0000===== 
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.


(குறள் எண் : 1033)

விளக்கம் : உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
 

=====0000===== 
ருமை நண்பர்களே,

மீபத்தில் தான் மராத்தி மொழியில் வந்த பேரலல் சினிமாக்கள் பார்க்கத்துவங்கினேன், அந்த அயராத்தேடலில் எனக்கு கிடைத்த முத்து தான் இந்த காப்ரிச்சா பாஸ். பாலிவுட் என்னும் பகல்கொள்ளைக்காரர்களால் உலக அரங்கில் எப்பேற்ப்பட்ட இந்திய கலைப்படைப்புகளை காணாமல் போகின்றன என்பதற்கு இப்படமும் ஒரு உதாரணம்.  

ராத்திய சினிமாவின் நம்பிக்கை ஒளிப்பட்டியலிலும் சிறந்த இந்திய  இயக்குனர் பட்டியலிலும் இந்த இளம் இயக்குனர் சதிஷ் மன்வாருக்கும் ஒரு தனி இடம் காத்திருக்கிறது.  எல்லா நல்ல படங்களுக்கும் ஏற்படுமே மோசமான  தலைவிதி!!!அது  இந்தப்படத்துக்கும் வாய்த்திருக்கிறது,அது  என்னவா? படம் முடிந்தபின்னர் அதை விளம்பரம் செய்ய காசில்லாமல்,எத்தனையோ பேருக்கு படம் பிடித்தும் வாங்க முன்வராததால் நஷ்டத்துக்கு விற்க வேண்டியதாகிவிட்டது. 

இயக்குனர் சதிஷ் மன்வார்
னம் தளராத இந்த குழு இதை எல்லா  இந்திய சினிமா விழாக்களிலும் தொடர்ந்து திரையிட எல்லோரின் ஏகோபித்த பாராட்டுக்களையும் விருதுகளையும் அள்ளிவந்திருக்கிறது. பீப்லி லைவ் படம் பார்த்திருப்பீர்கள், அதில் எவ்வளவு பெரிய ஒரு சீரியஸான விவகாரத்தை நையாண்டி மேளமாக வாசித்துள்ளனர் என புரிந்தது,  ஆமாம்!!!! அப்போது தானே மக்களுக்கு விஷயம் சென்று சேர்கிறது, அப்போது தானே?!!! மன்மோகன் சிங் கூட நேரம் ஒதுக்கி அந்த படத்தை பார்த்த்து ரசித்து சிரித்தார். என்று என்னால் நெஞ்சு ஆற இயலவில்லை,

து மிகவும் சீரியஸான் விஷயம். நான் படம் பார்த்து அடைந்த, உணர்ந்த அந்த பாதிப்பை என்னால் எழுத்தில் கொண்டுவரமுடியாது. நான் கூட விவசாயக் கடன்கள் என்பதே வீண். அவை பணக்கார நிலச்சுவாந்தாரர்களால் நிரந்தர மோசடியும், விவசாய மானியங்கள் சலுகைகள்  என்பதே அவர்கள் கபளிகரம் செய்வதற்கே என்று எண்ணி கொதித்தும் வந்திருக்கிறேன்.அப்படி கொதித்து இது எல்லாம் யார் வீட்டுக்காசு?எவன் கட்டும் வரிப்பணத்தில் இந்த சலுகைகள் என்று என் முந்தைய பதிவில்  சாடியுமிருந்தேன்,அதையும் தாண்டி சிறு விவசாயிகள் மண்ணுக்கும் தங்களுக்குமான பாசபிணைப்பாக விவசாயத்தை கருதுவதை இந்தப்படத்தில் கண்ணாறக் கண்டேன்.உள்ளம் தெளிந்தேன்.

ன் நீண்டநாள் கேள்விகளுக்கான பதில்கள் இந்த படத்திலேயே இருக்கிறது, அரசாங்கம் விவசாயிக்கு வழங்கும் சலுகைகள் விவசாயிடமிருந்தே மறைமுகமாக பிடுங்கி எடுக்கப்படுகிறது என்னும் சுடும் உண்மையையும் உணரவைக்கிறது படம்.  இவ்வளவு சீரான,நேர்த்தியான, ஒழுங்கான , கலைக்கு மரியாதை செய்து சொல்ல வந்த விஷயத்தை சீர்தூக்கிப்பார்த்து, ஆழமாக கையாளப்பட்ட படங்கள் வருவது மிக அபூர்வம். அந்த வகையில் இந்த படம் சாதித்துவிட்டது  உலகசினிமா தேடல் கொண்ட நண்பர்கள் அவசியம் இந்த படம் பார்த்து  பதிவாக எழுதி நிறைய பேர் தேடிக் காண வழிவகை செய்யவேண்டும்.

ந்த 1.5 மணி நேரப் படத்தின் பிரதான பலமே கதையும் திரைக்கதையும் என்பேன். படத்தின் கதையோடு ஒத்துழைக்கும், அபாரமான இயல்பான நடிப்பும்.  சமாதானமே செய்துகொள்ளாத ஒளிப்பதிவும், பிண்ணணி இசையும், திணித்தலில்லாத 2பாடல்களும் அபார அற்பணிப்பை பறைசாற்றும். இந்த படம் பார்த்துவிட்டு புதிய இளம் இயக்குனர்கள் மீது அபார நம்பிக்கை வந்துவிட்டது. தேசிய விருது தேர்வுக்குழுவில் இருக்கும் கிழடான, தட்டையான சிந்தனை கொண்ட  மேதாவிகள், தயவுசெய்து விருப்ப ஓய்வு பெற்றுவிடுங்கள்.அல்லது தகுதியானவர்களுக்கு பதவியை விட்டுக்கொடுங்கள்.


ந்த படங்கள் பார்த்து விட்டு அதிமேதாவி இயக்குனரின் பெயரை எழுத,ஏன் நினைக்கவே கூசுகிறது என்றால் பாருங்கள். படத்தில் பங்காற்றிய நடிகர்களான கிரிஷ் குல்கர்னி,சோனாலி குல்கர்னி, போன்றோர்களின் கால்தூசி பெறமாட்டார்கள் ஒலகநாயகர்களும் , தளபேதிகளும்!!! ,நடிப்பு என்றால் நடித்துக்கொட்டுவது என்றிருக்கும் ஆட்கள் முதலில் இப்படம் பார்க்க வேண்டும். நான் இங்கே இவ்வளவு ஆதங்கப்படுவதன் காரணம் புரியும். நல்ல படைப்பு காண்போரற்று போவது என்பது தான் உலகில் மிகப்பெரிய சோகம் என்பேன்.நான் கண்ட சில நல்ல மராத்திய சினிமாக்களின் பெயர்களைப் பகிர்கிறேன். உங்களுக்கும் நல்ல  மாற்று சினிமாக்களில் ஆர்வமிருப்பின் இவற்றை தயங்காமல் தரவிறக்கிப் பார்க்கலாம். அத்தனையும் மிகத்தரமான படங்கள்.
 ஹரிஸ்சந்த்ராஸ்சி ஃபேக்டரி [Harish Chandra Chi Factory] , போக்யா சத்பந்தே [Bokya Satbande], ஸெண்டா [Zenda], நிஷானி டவ அங்கதா [Nishani Dava Angatha], கோஷ்தா சோட்டி டொங்ரேவதி [Goshta Choti Dongraevadhi], கல்லித் கொந்தல் தில்லித் முஜ்ரா [Gallit Gondhal Dillit Mujra], மீ ஷிவாஜி ராஜே போஷ்லே போல்டாய்  [Mee Shivaji Raje Bhosle Boltoy], உலதால்[Uladhaal],  ஏக் தவ் தோபி பச்சாத்[Ek Dav Dhobi Pachad], மும்பைச்சா டப்பாவாலா [Mumbaicha Dabbewala] ஆபா ஸிந்தாபாத் [Aaba Zindabad], தத்கஸ் [Dhudgus], ஜிங் சிக் ஜிங் [Jhing chik jhing], வலு[Valu], விஹிர்[Vihir] , கந்த் [Gandh] ,கோ மலா அஸ்லா ஹவா[Gho mala asla hava] ,நட்ரங் [Natrang], தோஸ்ஸார்[Dhossar], ஆரம்ப்[Aarambh], ஜோக்வா [Jogwa], ஹுப்பா ஹுய்யா [Hupa Huiyya]


ஒரு ஏழை விவசாயி விவசாயத்தை துறக்க காரணிகள் யாவை?

த்திய மாநில அரசுகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் 100 நாட்கள் கட்டாய  வேலை விவசாயம் செய்வதற்கு ஆட்களே இல்லாத ஒரு நிலையை உண்டாக்கிவிட்டது என்றால் மிகையில்லை. தொடர்ந்து வேலை செய்பவர்கள் நிரந்தர வேலை பெறுவார்கள் என்ற காட்டுத்தீ போன்ற வதந்திகள் சிறு விவசாயிகளை கூட 100 நாள் வேலைக்கு செல்ல தூண்டிவிட்டதும் ஓர் மறுக்கமுடியா உண்மை.

துவும் ,அங்கே நாள் ஒன்றுக்கு மிகக்குறைந்த வேலை செய்தலும் போதுமானது, அதனாலேயே யாரும் கடினமான உடல் உழைப்பு கொண்ட விவசாய வேலை செய்ய வருவதேயில்லை. ஈசிமனி செய்ய ஆளாய் பறக்கும் ,

பகாசுரத்தனமான பேராசைகொண்ட இடைத்தரகர்கள், செய்யும் ஸ்பெகு‌லேட்டிவ் மார்க்கெட்டிங்கும் ஒருபுறம் விலையை கடுமையாக ஏற்றுகிறது. கிடைக்க வேண்டிய நேரத்தில் விவசாயக்கடன்கள் உண்மையான விவசாயிக்கு கிடைப்பதில்லை, மிக அபாயகரமான  கந்து வட்டியும் ஒரு பிரதானமான காரணம்.

த்திய மாநில அரசுகளின் கடன் தள்ளுபடிகள் கடுமையாக வேலை செய்யும் அநேகம் விவசாயிகளையும்  கடும் சோம்பேரிகள் ஆக்கிவிட்டது. அதற்கும் மேலாக இலவச திட்டங்களோ? விவசாய வேலை செய்யும் தேவையையே போக்கிவிட்டது , சிறு விவசாயிகளுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதும் ஒரு முக்கிய காரணம். ஒரு இளநீர் 5 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து  வாங்குகிறார்கள். அதில் அதில் விவசாயிக்கு கூலியாய் கிடைப்பது ஒரு ரூபாய் தான்.

னால் நமக்கு 20 முதல் 25  ரூபாய்க்கு விற்கிறார்கள். எங்கே போகிறது? 20 ரூபாய்? இது ஆரம்பம் மட்டுமே. மாநில, மத்திய அரசுகள் ஒரு மிகப்பெரும் அழிவை நாம் வாழும் சமுதாயத்தில் ஏற்படுத்திவருவது கவலைக்குரியது. இரவு பகலாக வேலை செய்யும் விவசாயிக்கு கட்டிய கோவணம் கூட மிஞ்சுவதில்லை என்பதே உண்மை, ஏழை விவசாயி கடனை மட்டுமே சேர்த்து வைக்கிறான். சேர்த்து வைத்த கடனுக்கான கந்து வட்டிக்காக நிலத்தையே இழந்து நிர்கதியாக நிற்கின்றான்.

லர் வாழ்வில் நம்பிக்கையின்றி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.இதில் வரும் நாயகன் க்ரிஸ்ணா போல மண்ணுக்கும் மனிதனுக்கும் உண்டான பாசப்பிணைப்பாக விவசாயத்தை எண்ணும் ஒரு சிலரால் தான் நாம்  இன்று வயிறாற உண்ண முடிகிறது. மொத்தத்தில் விவசாயம் இல்லாத எதிர்காலம் சூனியம் என்னும் பயம் வயிற்றை கலக்கச்செய்கிறது. யார் கண்டார்?அப்போது நாம் பணத்தாள்களை தின்னப்பழகியிருப்போமோ என்னவோ?!!.


நான் மேலே ஆதங்கப்பட்ட விடயங்கள் படத்தில் தீர்க்கமாக அலசப்பட்டிருக்கின்றன.  நண்பர்கள் முழுக்க படத்தை அனுபவிக்க வேண்டும் என்பதால்  படத்தின் கதையை சொல்லாமல் விடுகிறேன். கீழ்கண்டவை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்களா?!!! அது குறித்து யோசித்தாவது இருக்கிறீர்களா? எப்படியோ? படம் பார்த்த பின்னர் நீங்கள் விவசாயியை பார்க்கும் பார்வையே மிக உயர்வாயிருக்கும்.

1. ஏழை விவசாயி ஏன் தற்கொலை செய்து கொள்கிறான்? அவன் இறந்தால் அவன் குடும்பம் படும் இன்னல்கள் என்ன?
2.ஒரு ஏழை விவசாயிக்கு அரசு எத்தனை சதவிகித வட்டிக்கு விவசாயக்கடன் தருகிறது?
3.ஏழை விவசாயி தற்கொலை செய்து இறந்தால் அரசு எவ்வளவு இழப்பீடு தொகை தருகிறது?
3.ஏழை விவசாயி தன் வறண்ட கிணற்றுக்குள் போர்வெல் அமைக்க ஆகும் செலவு எவ்வளவு?
4.ஒரு ஏழை விவசாயி 7ஏக்கர் நிலம் வைத்திருப்பின்,தன் சக்திக்கு ஏற்ப,4 ஏக்கரில் பருத்தி பயிரிட நினைக்கிறான் என்று வையுங்கள்.
வன் விதை வாங்க ஆகும் செலவு என்ன?
வன் 4 ஏக்கர்  நிலத்தை உழ மாடுகள் வாடகைக்கு வாங்கினால் ஆகும் செலவு என்ன?
ப்படி மாடு கிடைக்காவிடில் 4 ஏக்கர் நிலத்தை உழ ட்ராக்டர் வாடகைக்கு எடுத்தால் ஆகும் செலவு என்ன?
5.ரு ஏக்கருக்கு பூச்சிமருந்து அடிக்க ஆகும் செலவு என்ன? 
6. ரு ஏக்கருக்கு நாற்றுநட,களை எடுக்க ஆகும் செலவு என்ன?
7.விளைச்சலை அறுவடை செய்து ஏற்றிச்செல்ல வண்டிக்கூலி என்ன?
8.ஒரு ஏக்கருக்கு எத்தனை குவிண்டால் பருத்தி கிடைக்கும்?
9.ஒரு குவிண்டால் பஞ்சின் சந்தை விலை என்ன?
10.இப்படி பார்த்துப்பார்த்து விதை விதைத்தும்,மழை பொய்த்தால் அல்லது பேய் மழை பெய்தால் விவசாயி என்ன செய்வான்?அவன் ஏன் தொடர்ந்து விவசாயம் பார்க்கிறான்?[இது தாய்க்கும் சேய்க்கும் உண்டான ஒரு பாசப்பிணைப்பு என இப்படம் உணர்த்துகிறது,அது யாருமே தவறவிடக்கூடாத ஒன்று]
11.மழை ஏன் பொய்க்கக்கூடாது? சரி மழை பொய்த்தால் தான் என்ன? போர்வெல் இருக்கிறதே,அதில் நீரிரைத்து பாசனம் செய்யலாமே?அதில் என்ன சிக்கல்?ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அரசு விவசாயியிடம் எத்தனை ரூபாய் வாங்குகிறது?
12.இலவச மின்சாரம் என்கிறார்களே!!!அது உண்மையிலேயே ஏழை விவசாயிக்கு  தரப்படுகிறதா?
13.ஆபத்தான சூதாட்டம் போன்றதா விவசாயம்?
14.மின்சாரம் ஒரு விவசாயியால் எந்த சூழ்நிலையில் திருடப்படுகிறது? 
போன்ற கேள்விகளுக்குண்டான பதிலகளை அறியுங்கள், நம் நாட்டில் விவசாயி ஒருவன் படும் அவலம் இந்த அளவுக்கு பட்டவர்த்தனமாய் சொல்லப்படேதேயில்லை எனலாம். இனி என்னளவில் உண்மையான ஏழை விவசாயிக்கு மானியம், கடன் தள்ளுபடி ,சலுகைகள் நிச்சயம் தேவை என அழுந்த உரைப்பேன்.
=====0000=====
காப்ரிஸ்சா பாவூஸ்=பொய்த்த மழை, ஆனால் பொய்காத படம்
 =====0000=====
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Satish Manwar
Produced by Prashant Pethe
Written by Satish Manwar
Starring Sonali Kulkarni, Girish Kulkarni, Jyoti Subash, Veena Jamkar, Aman Attar
Cinematography Sudheer Palsane
Editing by Suchitra Sathe
Release date(s) 2009
Country India
Language Marathi
 =====0000=====
காப்ரிஸ்சா பாவூஸ் திரைப்படம் யூட்யூபிலிருந்து:-

 =====0000=====
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)