குட்டி ஸ்ராங்க்[Kutty Srank][2010][இந்தியா]കുട്ടിസ്രാങ്ക്


ண்பர்களே!!!,
குட்டி ஸ்ரான்க் படம் பார்த்தேன்.மலையாள சினிமாவில் இதுவரை நிறைய கலைப்படங்கள் வந்திருந்தாலும் இப்படம் ஒரு தனித்துவமான முத்திரை பதித்த படம் என்பேன். மிக அழகான நீர்நிலைகளின் மீது அமைந்த எழில் கொஞ்சும் பசுமையுடன் ஒட்டி உரையாடும் கதைக்களம்.ஒவ்வொரு ஊரும் தன்னகத்தே கொண்ட வித்தியாசமான மனிதர்கள், கலாச்சாரம் என வியப்பூட்டும் கதைக்களம்.

1940களில் தொடங்கும் கதையில் , நமக்கு படத்தின் ஆமைவேகம் முதலில் அயற்சியூட்டினாலும், அஞ்சலி ஷுக்லாவின் கைதேர்ந்த ஒளிப்பதிவும். ஜோசப் தாமஸின் இசையும்  மம்மூட்டி,பதமப்ரியா,கமாலினி முகர்ஜி,மீனாகுமாரியின் அபாரமான பங்களிப்பும் அப்படியே படத்துக்குள் நம்மை மெல்ல கூட்டிச்செல்கிறது. மம்மூட்டி குட்டி ஸ்ராங்காக [மோட்டார் படகு ஓட்டுனர் ] வருகிறார். 

வருக்கு தான் என்ன? சாதி,மதம், தன் பெற்றோர் யார் ? என்றே தெரியாது. அவர் இளமையில் பிறந்த ஊரான திருவாங்கூரை விட்டு வெளியேறியவர், சென்று வசித்த வெவேறு ஊர்கள் , சந்தித்த மனிதர்கள் , சந்தித்த பெண்கள் என விவரிக்கும் அருமையான காட்சிப்பெட்டகம் இப்படம் .படத்தில் நடப்புக்கால காட்சிகளில் மின்னல் தாக்கி கருகி கரை ஒதுங்கிய பிணமாகவே நடித்திருக்கிறார் குட்டிஸ்ராங்க்  மம்மூட்டி.

மூன்று மதங்களைச் சேர்ந்த பெண்கள் ஒருவர் பின் ஒருவராக பிணத்தை அடையாளம் காட்ட கடற்கறையில் அமைந்த போலீஸ் ஸ்டேஷன் வருகின்றனர். அப்படியே மெல்ல கதை விரிகிறது, விவரிக்க இயலாத வார்த்தை பஞ்சம் ஏற்பட்டுவிட்டதோ?!!! என்னுமளவுக்கு அப்படி ஒரு அழகு படம் முழுக்க வியாபித்திருக்கிறது.  .

இந்த குட்டி ஸ்ராங்க் திரைப்படம் மூன்று என்னும் மந்திரச்சொல்லால் வரையறுக்கப்பட்டுள்ளது.
அவை:-
மூன்று அழகிய பெண்கள்.
மூன்று மதங்கள்,
மூன்று ஊர்கள்,
மூன்று பருவநிலைகள்.

முதலில் ரேவம்மா:-
மூன்று பெண்களில் ஒருவரான ரேவம்மா [பத்மப்ரியா] இந்துமதத்தில் பிறந்து இலங்கையில் மருத்துவப்படிப்பு முடித்து தந்தையின் தொடர்ந்த கொலைபாதகங்களால் மனம் வெறுத்து , புத்த மத துறவியாக கோலம் பூண்டிருக்கிறார், பெற்றதாயையும், தன் உற்ற தோழனான சக புத்த பிட்சுவான பிரசன்னாவையும் கொன்ற கொடுங்கோல் ஜமீன் தகப்பனிடமிருந்து, அவரின் ஆஸ்தான அடியாள் மற்றும் படகோட்டி குட்டி ஸ்ராங்கின் உதவியால் ஊரைவிட்டு ஓடிவந்து மறைந்து வாழும் பெண் இவள். கரை ஒதுங்கிய பிணம் குட்டி ஸ்ராங்க் தான் என்று விம்மியபடி அடையாளம் காட்டுகிறாள்.அவன் மீது தான் வைத்திருக்கும் மதிப்பை நமக்கு விளக்கவும் ஆரம்பிக்கிறாள்.

முதல் கதை, ஒரு கோடைக்காலத்தில் ,இந்துக்கள் வசிக்கும் மலபார் எனும் ஊரில் காட்சி விரிந்து துவங்குகிறது. ஒவ்வொரு கால, இடத்துக்கும் மாறுபடும் வித்தியாசமான வெளிச்சமும். ஒளிப்பதிவும், பிண்ணணி இசை சேர்ப்பும் நமக்கு ஒருங்கே கிடைக்கிறது. அப்படி ஒரு நேர்த்தி. 

தில் சுத்தமாக முகச்சவரம் செய்யப்பட்ட ,எண்ணெய் தேய்த்து சீவப்பட்ட பாகவதர் கிராப்பில், பாகிஸ்தானி போன்ற குர்தா அணிந்து வந்த மம்மூட்டி முகத்தில் முதுமை தெரிந்தாலும், தன் 40களில் இருக்கும் கதாபாத்திரம் என்பதால் நம்ப முடிகிறது.  படத்தில் எவ்வளவுக்கு? அழகு நிறைந்துள்ளதோ அவ்வளவுக்கு வன்முறையும் உண்டு.   இந்த முதற்பகுதியில் வரும் ஒரு காட்சி:-  தன்னை எதிர்த்துப்பேசிய ஒரு தொழிலாளியை ரேவம்மாவின் அப்பா அடியாட்களைக்கொண்டு மரம் உரிக்கும் எந்திரத்திற்குள் அனுப்பி தோலை உரிக்கும் காட்சி மிகவும் கொடூரம் என்பேன். மற்றொரு காட்சியில் ,புத்த பிக்கு பிரசன்னாவை  குட்டி ஸ்ராங்க் தன் கைகளால் ரத்த்ம் வர அடித்து சாய்க்கும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட காட்சியையும் சொல்வேன்.

இரண்டாம் பெண் பெம்மெனா:-

டத்தின் அடுத்த பெண்மணியான பெம்மெனா [கமாலினி முகர்ஜி] இப்போது போலீஸ் ஸ்டேஷன் வந்து கரை ஒதுங்கிய பிணத்தை அடையாளம் காட்ட வருகிறாள், இவள் குட்டி ஸ்ராங்கின் மேல் ஒரு தலைக்காதல் கொண்டவள். படத்தின் இந்த நடுப்பாதி கிருஸ்துவ மதம் பரவியுள்ள கொச்சியின் சிற்றூரில் ஒரு மழைக்காலத்தில் பிரம்மாண்டமான நீர்நிலையில் விரிகிறது.

காலம் சென்ற, தேர்ந்த கொலைகாரன் என்று எல்லோரும் நம்பக்கூடிய குட்டி ஸ்ராங்க் கைதேர்ந்த ஒரு நாடக கலைஞன் என்றும் போலீசாருக்கு தெரியவருகிறது. இதில் மம்மூட்டி ராஜபாட்டை வேடமான பாரீஸ் நகர படைத்தளபதி ரோல்டனாக நடித்து எல்லோரின் மனம்கவர்ந்தவர். அவர் மீது பெம்மெனா கொண்ட காதல் மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பெம்மானாவை எவ்வளவு அழகாக காட்டமுடியுமோ அவ்வளவு  அழகாக காட்டியுள்ளார் அஞ்சலி சுக்லா. ஒரு காட்சியில் புட்டத்தை கூட காட்டி நடித்துள்ளார் கமாலினி.

ம்மூட்டி ஏற்ற ஒவ்வொரு பாத்திரத்துக்கும் வெளியிட்டிருக்கும் வித்தியாசமான நடிப்பு மெச்சத்தக்கது. இந்த பாதியில் முன்நெற்றியில் சுருளும் முடியுடன், மீனவன் தாடியுடன்,  லுங்கி அணிந்த மம்மூட்டி கலக்குகிறார். தன் நாடக ஆசான் லோனி [சுரேஷ் கிருஷ்ணா] மீது மரியாதையையும் தங்கையான பெம்மனாவின் மீதான ஈர்ப்பையும், தன் நாடகக்கலையின் மீதான மையலையும் அழகாக பிரதிபலித்துள்ளார்.  மம்மூட்டி இதில் கைதேர்ந்த  கூத்து  கலைஞனாக மாறி நடனம்  ஆடுகிறார்.அட்டைக்கத்திச்சண்டையும் போடுகிறார்.

தில் ஒரு  பயங்கரமான காட்சியாக:- 2 டன் எடையும், 10 அடி உயரமும் கொண்ட காங்க்ரீட் சிலுவையை , குட்டி ஸ்ராங்க் மற்றும் ஊரார் உதவியுடன் ராட்டினத்தில் சுற்றப்பட்ட  தடித்த நார்கயிற்றின்  துணையால் சர்ச்சின் கோபுரத்தில் ஏற்றுகின்றனர், அப்போது அங்கே ஏற்படும் சிறிய கவனச் சிதறலால் ராட்டினம் குலுங்கி நகர்ந்தும் விட, கயிறு விடுபட்டு, சிலுவை அப்படியே ஒரு மூதாட்டியின் மேல் விழுந்து அம்மூதாட்டி நசுங்கி செத்தும் போகிறாள். இந்த அளவுக்கு விவரணையை  இந்தியப்படங்களில் நான் கண்டதில்லை. 

ஷாஜி என்.கருண்
58 வயதான இயக்குனர் ஷாஜி என்.கருண் எதற்குமே தன்னை சமாதானம் செய்து கொள்ளவில்லை என்பேன். இவரின் இந்திய எமர்ஜென்சி  பற்றிய படமான பிறவி எல்லா கலைசினிமா விரும்பிகளும் வாழ்வில் பார்க்க வேண்டிய ஒன்று. அப்படத்தில் நீண்ட நாளாய் அன்னிய தேசத்தில் இருந்த மகன் , தாயகம் வந்த அன்றே சந்தேகத்தின் பெயரில் போலீசாரால் பிடித்துக்கொண்டு போய் விசாரணையின் போது லாக்கப் டெத் செய்யப்பட்டுவிட , அது தெரியாமல் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனாக தேடி அலையும் ஒரு  தந்தையின் உணர்ச்சிகளை பிற்பாதி 70களின் கொடிய நாட்டு நடப்போடு சேர்த்து தந்து காண்போரை கதிகலங்க செய்திருப்பார்.

மூன்றாம் பெண் காளி:-

டத்தில் இப்போது பிணத்தை அடையாளம் காட்ட வருகிறாள்  மூன்றாம் பெண் கதாபாத்திரமான இந்துப்பெண் காளி [மீனாகுமாரி], இவள் ஒரு செவித்திறன், பேசும் திறனற்ற மாற்றுத் திறனாளி,  கூடவே வரும் அவளின் அம்மா அவளிடம் கேள்விகள் கேட்டு போலீசாருக்கு சைகையாலேயே பதில் வாங்கி தருகிறாள். காளியைப்பார்த்த பெம்மனா அவள் குட்டி ஸ்ராங்கின் மனைவி என்று தான் அறிவேன் என்று ரேவம்மாவிடம் கூறுகிறாள்.  காளி  நான்கு  மாதம்  கர்ப்பிணியாக இருக்கிறாள்.

வளின் விவரிப்பில் படம் ஒரு பனிக்காலத்தில் துவங்குகிறது. குட்டி ஸ்ராங்க்  சிலுவை  விழுந்து  மூதாட்டி மரணமடைந்த துயரத்தால். தன் ஊரான திருவாங்கூருக்கு வர, அங்கே சிறுவயது முதலே ஊராரின் மூட நம்பிக்கையால் இன்னமும் வெறுத்து ஒதுக்கப்படும் காளியை காண்கிறான்.  உள்ளூர் பணக்காரர் நீரில் விழுந்துவிட அவரை காப்பாற்றி அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவரின் படகையும்  இப்போது ஓட்டுகிறான்.

வருக்கும் நம்பிக்கையான அடியாளாகிறான். அப்படி அந்த பணக்கார எஜமானால் வெறுத்து ஒதுக்கப்படம் காளியை கொல்ல விழைந்தவன் காளியின் மருண்ட பார்வையாலும் , வெகுளித்தனத்தாலும், அவளின் மீதான பச்சாதாபத்தாலும் கொல்லாமல் விடுகிறான். ஒரு நாள் குட்டி ஸ்ராங்கினை விஷப்பாம்பு தீண்டிவிட அப்போது  அரும்பாடுபட்டு தென்னை ஓலையில் வைத்து இழுத்து வந்து  மருந்திட்டு காப்பாற்றி  உயிரளித்த காளியையே திருமணம் செய்து வாழ்ந்தவன்,  தன் நாடக ஆசானை சென்று பார்த்து வருவதற்காக திரும்ப கொச்சிக்கு போகிறான். அங்கே முன்பு தான் மிகவும் மையலுற்றிருந்த பெம்மனாவிடமிருந்து விலகியே இருக்கிறான். தன்னால் அப்பாவிப்பெண் காளிக்கு துரோகம் இழைக்க முடியாது என மிக உறுதியாக இருக்கிறான்.இந்த கடைசிப்பாதியில் தன் ட்ரேட்மார்க் க்ராப் முடியுடன், லேசான தாடியுடன்,  வேட்டி அணிந்த மம்மூட்டி கலக்குகிறார்.


தில் ஒரு காட்சியில்:-  சோன்பப்படி விற்பாற்களே!!!?, அது போல ஒரு பெரிய கண்ணாடி குடுவை ஜாடி, அதில் நிறைய சாராயம்..சுமார் 40 லிட்டர் கனமாவது இருக்கும். அதை தன் இரண்டு கைகளால் சாதாரணமாக தூக்கி அலைந்தபடி குட்டி ஸ்ராங்க் மது அருந்துபவர்களுக்கு ஊற்றிக் கொடுப்பான், கலை இயக்குனரின் திறனுக்கு அந்த ஒரு கண்ணாடி ஊரல் ஜாடியே சான்று என்பேன்!!!. தவிர பார்த்துப் பார்த்து போடப்பட்ட ஜமீன் அரண்மனை, 1940களின் மோட்டார் படகுகள், அதுவும் ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடும் தீம்களோடு. முற்பாதியில் வரும் பாழடைந்த ஓட்டு வீடு. அந்த கடற்கரை ஒட்டிய போலீஸ் ஸ்டேஷன். பெம்மனாவின் அழகிய காயல் புறத்தில் மீது அமைந்த ஓட்டு வீடு என கலை இயக்கத்துக்கு சான்றாக சொல்லிக்கொண்டே போகலாம்.

டத்தின் இந்த இறுதிப்பகுதியில் வைக்கப்பட்ட ஒரு பயங்கர காட்சியாக, குட்டி ஸ்ராங்க் காளியை கொல்ல அவளின் குடிசைக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வர, அவனைக்கண்டு மருண்ட அப்பாவி காளி பயத்தில் நின்றமேனிக்கு சிறுநீர் கழிக்கிறாள்.  காண்கையிலேயே நமக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.  இது போல காட்சிகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால்,  படம் சிறந்த ஒரு முயற்சி!!! எனலாம்.  உலக சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டியபடம்.  தமிழில் இதுபோல மாற்று சினிமா முயற்சிகளை  மக்கள் ரசித்து வரவேற்க வேண்டும், அப்போது தான் இது போல படங்கள் தமிழிலும் எடுக்க முடியும்.

டத்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும்,நேர்த்தியான உழைப்புக்கு முன்னர் நீர்த்துப்போகிறது.  நல்ல கதை. நல்ல திரைக்கதை,  நல்ல இயக்கம், நல்ல ஆக்கம், நல்ல உடையளங்காரம்,  நல்ல அரங்க அமைப்பு, நல்ல ஒளிப்பதிவு. நல்ல ஒலிக்கோர்ப்பு, நல்ல இசையமைப்பு என எதிலுமே சோடைபோகவில்லை. பெண்களின் கண்ணோட்டத்தில் விரியும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்திருப்பது அஞ்சலி சுக்லா என்னும் பெண் ஒளிப்பதிவாளர்.

அஞ்சலி ஷுக்லா
வர்  சிறந்த இந்திய இயக்குனர் & ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுடன் இணைந்து 15 படம் உதவி ஒளிப்பதிவாளராய் இருந்துள்ளார்.  எந்த விதத்திலும்  குறை என்பதே இல்லை. ஆகச்சிறந்த தரம் ஒவ்வொரு ஃப்ரேமிலும்.  முக்கியமாக மூட் லைட்டிங்குகளை சொல்லியே ஆக வேண்டும். எல்லோரையும் போல பீரியட் படத்துக்கு உபயோகிக்கும் ஃபில்டர்களை இவர் உபயோகித்திருந்தால் நமக்கும்  இது 40களின் கதைக்களம் என்று உணர்ந்து கொண்டே இருக்க வைக்கும்.

னால், நம்மால் இந்த அளவுக்கு ஒன்றியிருக்கவே முடியாது. நம்மை படத்தின் ஒரு அங்கத்தினராகவே மாற்ற தான் இவர் அப்படி செய்யவில்லை என நினைக்கிறேன். இவரின் முந்தைய உதவி ஒளிப்பதிவு படமான் பிஃபோர் த ரெயின்ஸ் என்னும் சந்தொஷ் சிவன் இயக்கத்தில் வந்த பீரியட் படத்தில், ராஜா ரவிவர்மாவின் தைல ஓவிய வண்ணங்களின் மெருகையும் பொலிவையும் தரும் ஃபில்டர்களை, நந்திதா தாஸ் தோன்றும் காட்சிகளில் அவர் மீது பிரயோகித்திருப்பார். அது மிகவும் அற்புதமான விளைவாக இருக்கும். ஒரு ரசிகன் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு விளைவு அது என்பேன். ஆக மொத்தத்தில் 4 தேசிய விருதுகள் வாங்குவதற்கு தகுதியான படம் தான் இது!!!. படம் தரவிறக்க
======00000======
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-

படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Shaji N.Karun
Produced by Reliance BIG Entertainment
Screenplay by
  • Harikrishnan
  • P. F. Mathews
Story by Shaji N.Karun
Starring
Music by Isaac Thomas Kottukapally
Cinematography Anjuli Shukla
Editing by A. Sreekar Prasad
Distributed by Reliance BIG Entertainment
Release date(s) 23 July 2010 (2010-07-23)
Country India
Language Malayalam
Budget Rs. 60 million
 ======00000======