பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தை!!!

நண்பர்களே!!!

நீங்கள் பல்லாவரம்,பம்மல் பொழிச்சலூர் அனகாபுத்தூர் வாசியாக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் பல்லாவரம் சந்தை பற்றி தெரிந்திருக்கும்.இங்கே பிரதி வாரம் வெள்ளிக்கிழமைகளில் சந்தை கூடிவிடும், வியாழன் இரவே ஜே ஜே என்று கூட்டம் பல்லாவரம் சந்தை ரோட்டை ஆக்கிரமித்து வாகனப்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்துவிடும்,  வெள்ளிக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். பல்லாவரம் பஸ் ஸ்டாண்டிற்கு அருகே ஜனதா தியேட்டர்  பின்புறம் உள்ள, கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு சொந்தமான சாலையில் தான் இந்த சந்தை  200 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடந்து வருகிறது. 

இங்கே பல்லாவரம் சந்தையில் கிடைக்காத பொருளே இல்லை, ஆமாம்ங்க நிஜமாத்தான் சொல்றேன். என்ன கருக்கலிலேயே போய்விடவேண்டும், உங்களுக்கு ஆண்டிக் [antique] பழமையான பொருட்களின் மீதான் சேமிப்பு வெறி இருந்தால் அங்கே நேராய் காலையிலேயே போய்விடுங்கள், பழங்காலத்தில் போரில் பயன்படுத்தப்படும் கேடயத்துடன் கூடிய வாட்கள், பெண்டுலத்துடன் அமைந்த கடிகாரம், மயில் வடிவிலான கத்தி ஸ்டாண்ட், மரத்தினால் செய்யப்பட்ட  உரல் போன்ற பாரம்பரிய மிக்க பொருட்கள்,பழைய கிராமபோன்,ஐந்து ரூபாய்க்கு  கூட விற்கப்படும் கொலம்பியா எல்,பி ரிக்கார்டுகள் , பழைய ஆயில் பெயிண்டிங் முதல் வாட்டர் கலர் வரை எல்லாம் சல்லிசாக கிடைக்கும். பழைய கலைப்பொருட்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்யும் சினிமாக்காரர்கள் ஏகம் பேர் வந்து வாங்கிப்போவதைப் பார்த்திருக்கிறேன். வியாபாரிகள்  ஏலம் மூலமாக  பொருட்களை இங்கே விற்பதில்லை.  பெரும்பாலும் பழுதடைந்த நிலையில்தான் அவை இருக்கும். பேரம் பேசி அடிமாட்டு விலைக்கு கேட்டு அசந்த நேரத்தில் கொத்திக்கொண்டு போய்விடுவர். ரேப்பர் பிரிக்காத வழக்கொழிந்து போன டிடிகே 60,90 ஆடியோ கேசட்டுகள். மூடுவிழா கண்டு குப்பைக்கு வந்த விஎஹ்செஸ் 180 கேசட்டுகள். என மலையாய் குவிந்திருக்கும்.

ழைய சாமான் சந்தைக்கு ரெகுலர் கஸ்டமர்கள் வருவதால். அவர்களுக்கு போன் செய்து கேட்டு வாங்காவிட்டால் மட்டுமே அடுத்தவருக்கு அந்த பொருளை கொடுப்பதும் கூட நடக்கும். ஒரு முறை என் நண்பன் ஒரு ரே பான் கிளாஸ் கொஞ்சம் பெண்டாகியிருந்த நிலையில் வாங்கி அதை சரிசெய்து போட்டு திரிந்தான். டூப்ளிக்கேட்டாயிருக்கும் என பார்த்தால் அது மேட் இன் இடாலி, லைட் அடிடிவ் ரக கிளாஸாம், 100 ரூபாய்க்கு கிடைத்தது என்றான். 
சீ சீ என்ன தான் கடல்கடந்து வந்தாலும் நன்றாக சம்பாத்தித்தாலும் இது போல சங்கதிகளை காது கொடுத்துக் கேட்கும் ஆவல் போகவே மாட்டேங்கிறது!!!.... என் நண்பன் இந்த விடுமுறைக்கு போன போது தன் கடையிலேயே பிரவுஸிங் செய்து கொண்டிருந்தான், என்னடா மச்சான் இவ்வளவு பழைய கம்ப்ய்யூட்டரை வாங்கி வச்சி மேட்டர் படம் பாக்கற?!!... என்றது தான் தாமதம், அதில் அவன் ஒரிஜினல் ஓஎஸ் சந்தையிலேயே 50 ரூபாய் கொடுத்து வாங்கிப் போட்டிருக்கிறானாம். மொத்த செலவே 1800 ரூபாய் தான் ஆனது என்று அதிரவைத்தான், என் ஏனைய நண்பர்கள் மோட்டார் பைக் மட்கார்ட், க்ராபிக்ஸ், ஹெட் லைட் கன்சோல்,சைலென்சர்,ரியர் வியூ மிரர்.பெட்ரோல் டாங்க் மூடி.இண்டிகேட்டர் என எந்த பைக்குக்கும் எது மாற்ற வேண்டுமானாலும் பல்லாவரம் சந்தைக்கு போய் பிரவுஸ் செய்து விட்டுதான் புதுப்பேட்டைக்கே செல்வார்கள் என்றால் பாருங்கள்.
ன் நண்பன் இம்முறை நான் ஊருக்கு போகையில் ஐம்பது ரூபாய் கொடுத்து நரிக்குறவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கியை வாங்கி தன் கடையில் மாட்டி ஃப்லிம் காட்டிக்கொண்டிருந்தான். எல்லோரையும் பார்த்து சுட்டுடுவேன் என்று விளையாட்டுக் காட்டினான்.கூடவே கவ்பாய் தொப்பி வேறு 10 ரூபாய்க்கு,முடியல!!!....இது போல நிறைய கலைப்பொருட்கள் சில சமயம் சிக்கும். நம் அதிர்ஷ்டத்தை பொருத்ததும் கூட. என் நண்பனின் புத்தா ஹட் என்னும் கடையையே இது போல ஆண்டிக் கலெக்டர் ஷோகேஸாக ஆக்கிவிட்டிருக்கிறான்.நீங்கள் மட்டும்  பல்லாவரத்தில் அல்லது அதன் சுற்றுப்புறங்களில் இருந்தால் என் நண்பன் ராஜகோபாலையும் அவனின் புத்தாஹட் கடையையும் நிச்சயம் தெரிந்திருக்கும். அங்கே சுமார் 15 வகையான சாண்ட்விச்சை சுடசுட மிகவும் சுகாதாரமாக தயாரித்துத்தருகிறான் என் நண்பன். ஹிஹி சின்ன இடையே சின்ன விளம்பரம்னு வச்சிக்குங்க. 

ப்புறம் குடும்பஸ்தர்கள் நிறைய பேரை வெள்ளிக்கிழமை சந்தையில் பார்க்கலாம். பெண்கள் அங்கே நேரடியாக விவசாயிகளிடமிருந்து பூண்டு, ஏலக்காய், கிராம்பு, லவங்கம் பட்டை போன்ற எல்லாம் மசாலா சாமான்களையும் சல்லிசாய் பேரம் பேசி வாங்குவார்கள்.சுற்று வட்டார கடை விலையை விட நல்ல லாபமிருக்கும், அப்பளம் வடகம். கலர் வடாம், மோதிர அப்பளம். சுண்டைக்காய் வத்தல், வெண்டைக்காய் வத்தல் , பஞ்சு மிட்டாய். குற்றாலத்துண்டு, கைத்தறி வேட்டிகள், ஜமுக்காளம் ,தென்னந் துடைப்பம், பனை ஓலை விசிறி என எல்லாம் கிடைக்கும் சந்தை இது. சமீபத்தில் பள்ளி மாணவர்கள் 10 ரூபாய்க்கு விற்கப்படும் செயற்கை வண்ணம் பூசப்பட்ட கோழி குஞ்சுகளை ஆசையாக வாங்கிச்செல்வதைப் பார்த்தேன். என் பால்ய பள்ளி வாழ்க்கை நினைவுக்கு வந்தது.


ரு சினிமா டீம் உள்ளே போய் ஹீரோவை வில்லன்கள் துரத்திபோய் சண்டைக்காட்சி எடுக்க மிகப்பாந்தமான இடம், இயக்குனர்கள் கவனிக்க!!!. சேர்க்காமலேயே மக்கள் கூட்டம் சாயும். முன்னொரு சமயம் பல்லாவரம் சந்தையில் விபச்சாரம் கொடி கட்டிப்பறந்தது, அந்த வேலிக்காத்தான் ஓங்கி வளர்ந்த நிலங்களை எல்லாம் இப்போது மத்திய அரசு கையகப்படுத்தி அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் கட்டி வருகிறது. அது திறந்தவுடன்    எப்படித்தான் ? போக்குவரத்தை அவர்கள் எதிர்கொள்வார்களோ தெரியவில்லை. நல்ல வேளையாக புறம்போக்கு நிலங்கள் அரசால்  கையகப்படுத்தப்பட்டதால்  இப்போது விபச்சாரம், வழிப்பறி நடப்பது இல்லையாம். சந்தையை ஒரு வருடமாக அன்னை தெரசா பள்ளி காம்பவுண்டு சுவர் வெளியே உள்ள இடத்திற்கு மாற்றியும் கூட கூட்டம் சமாளிக்க முடியாத அளவுக்கு பல்கி பெருத்துள்ளது, 

ம்பமாட்டீர்கள், அந்த பெருங்கூட்டத்திலும் ஒரு நாள் ஒன்றுக்கு சுமார் 2லட்சம் பேர் உள்ளுக்குள் நுழைந்து போய்கொண்டும் வெளியேறிக்கொண்டும் வருவர்.பல்லாவரம் டு பம்மல் போக 50 ரூபாய் வாங்கும் ஆட்டோக்காரர்கள் அந்த கூடத்திலும் லாவகமாக ஊர்ந்து போய் விடுவார்கள். சுட்டெரிக்கும் வெயில், புழுதி மண்,என எதைப்பற்றியும் கவலைப்படாமல் காலை தொடங்கி இரவு 8-00 வரை ஜே ஜே என வியாபாரம் நடந்து கொண்டிருக்கும். இங்கே இன்னும் மாடுகளுக்கு லாடம் அடிக்கப்படுகிறது,  மூக்கனாங்கயிறும் தார்க்குச்சியும் ஏன் கழுதைப்பால் கூட கிடைக்கிறது [குடித்தால் குழந்தைக்கு பேச்சு சீக்கிரம் வருமாம்?!!], பழைய டயர்கள். மரச் சக்கரமும் அச்சாணியும் கூட இங்கே வாங்க முடியும். தெருவில் நாம் எதையாவது வாங்கியபடி நடக்கும் நவநாகரீக மனிதர்களும்,கிராமவாசிகளும் , மிகப்புதிதாக சந்தைக்கு வந்த வாகனங்களில் கடக்கும் இளம்பெண்களும், ஆண்களும் என சந்தை எப்போதுமே எதிரும் புதிருமான அம்சங்களை தன்னுள்ளே கொண்டிருக்கிறது. 

ன் நண்பன் ஒருவன் மாதம் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவன், தன் அபாச்சி பைக்கில் இருந்து இறங்கினான். டேய் மச்சான் இதோ பார்டா என்று ஒரு நீண்ட கண்ணாடி குடுவை போன்றதை உருவினான், எல்லோர் மேலும் தெளித்தான். செண்டாம், இருபது ரூபாயாம், சும்மா சொல்லக்கூடாது, நன்றாகவே மணத்தது. இன்னொரு நண்பன் தன் ஆக்டிவாவில் இரண்டு பெரிய க்ரோட்டன்ஸ் ரக செடிகளை வைத்து ஓட்டிவந்தான், தலா 100 ரூபாய் என்று பெருமையாக சொன்னான். மச்சான் இங்க பேரம் பேசி பேரம் பேசி பிஸ்ஸாஹட்டில் கூட போய் பேரம் பேசுறாண்டா என்றான் மற்றொருவன், ஆக வெள்ளிக்கிழமையானாலே நண்பப்பயல்களுக்கு கொண்டாட்டம் தான் இதனால்.இந்த எந்திர யுகத்திலே நண்பர்கள் பேசிக்கொள்ள வாய்ப்பையேனும் இந்த வார சந்தை உருவாக்குகிறதே?அதற்கே நன்றி சொல்லவேண்டும் அல்லவா?!!!.

ப்புறம்,பிரியாணிக்கும் பெயர் போனது பல்லாவரம் ,சந்தை ரோட்டை சுற்றி சுமார் 10 சிக்கன் மட்டன் பிரியாணிக் கடைகள உள்ளன, காலை 11மணிமுதல் இரவு 11மணி வரை சுட சுட பிரியாணி கிடைக்கும்,கிர்கிர் என கரண்டியை தேய்த்து சோற்றை அள்ளி தட்டில் செட்டிங் செய்து கரண்டியை மீண்டும் தட்டு தட்டி, நம்மை நோக்கி நகர்த்துவார்கள். பல சமயம் கொசுறு கூட வாங்கி சாப்பிடலாம். சுவை நிச்சயம் நன்றாக இருக்கும்,பல்லாவரம் புழுதிக்காத்து கூட அந்த பிரியணியின் சுவைக்கு கூடுதல் சுவை சேர்க்கிறது என்பார்கள் எம் மக்கள். தைரியமாக மட்டன் என்று நம்பி சாப்பிட முடியும், நல்ல கொழுத்த ஆடுகள் வெள்ளிக்கிழமை சந்தையில் நயமான விலையில் கிடைக்கின்றன. இப்போதெல்லாம் பிரியாணிக்கடைக்குள் போய் குடிகாரர் அல்லாதவர்களால் நிம்மதியாக பிரியாணி திங்கவே முடிவதில்லை,எங்கு பார்த்தாலும் மூக்குசளி சிந்திக்கொண்டும் செம ராவடியாக லுக் விட்டுகொண்டும் திரியும் குடிக்காரர்கள், முன்னவாவது பீரைத்தான் கூல்ட்ரிங்க் என்றனர். இப்போது ஹாட்டையே கூல்ட்ரிங்கில் நைசாக சேர்த்து விடுவார்கள் போல.

ல்ல பெரிய வாழைக்கருவாடு,நெத்திலி கருவாடு, சென்னாங்குன்னி, போன்ற எல்லாமே  ஒரு பக்கம் தார்ப்பாய் கூடாரம் அடித்து அதனடியில் அலுமினியம் போனி வைத்து குவிக்கப்பட்டு விற்கப்படும், யாரும் கூவவே வேண்டாம். லட்டுபோல விற்றுத் தீரும்.புதிதான காய்கறிகள், மூலிகைகள், கீரைகள். மரக்கன்றுகள், பூச்செடிகள். சோப்பு சீப்பு கண்ணாடி முதல் திருட்டு சைக்கிள், அரசு தரும் இலவச கேஸ் அடுப்பு, இலவச சைக்கிள், கேஸ் சிலிண்டர், ஏன்? 1000 ரூபாய்க்கு வாரண்டியுடன் தமிழக அரசு வண்ண தொலைக்காட்சிப்பெட்டி கூட  கிடைக்கிறது, அந்த 1000 ரூபாய் என்பது நேரமாக ஆக குறையுமே தவிர கூடாது. 

ல்லாவரம் சந்தையில் அநேகம் குடும்பத்தலைவிகள் வயர்க்கூடை சகிதமாக திரிந்து வாங்குவதில் முக்கியமானது, காகம் விரட்ட பயன்படும் கவட்டை, இது எதற்கென்றால் அவர்கள் காயவைக்கும் பொருள் பக்கத்தில் இதை வைத்து விட்டால் காகம் வராதாம்.  2 ரூபாய்க்கு கூட கிடைக்கும் ரமணிசந்திரன் ,சுபா, ப கோ பி , ராஜேஷ்குமார் மற்றும் காமிக்ஸ் கதைப்புத்தகங்கள், வற்றல்குழம்புக்கு போடும் வடகம்,நாட்டுக்கோழி, காடை,புறா நாட்டுக்கோழி முட்டை போன்றவை  மிகப் பிரசித்தம். 

வை ரொம்ப கஷ்டப்பட்டு கவனித்தாக்கும், என் மனைவியுடன் நான் மிகவும் பொறுப்பானவன் என்று காட்டிக்கொள்ள வாரமானால் சும்மா வேடிக்கை பார்க்க வேணும் அப்போதெல்லாம் கிளம்பிவிடுவேன். என் மகளை ஸ்கூட்டர் முன்னால் ஏற்றிக்கொண்டு மெதுவாய் கூட்டத்துக்குள்ளே வண்டியை உருட்டிப்போவதே த்ரில் தான், கூட்டம் என்பது சிலருக்கு அலர்ஜியாவது சிலருக்கு ஆனந்தமாக தோன்றுவது கூட்டத்தை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. எத்தனையோ பேர் முன்னால் போகும் வண்டியில் பின்னால் நூல்பிடித்தபடி செல்லவே பார்ப்பார்கள், அக்கம் பக்கம்  பார்க்கவோ, இறங்கி வேடிக்கைப் பார்க்கவோ துணியாத ஒரு எந்திர மனநிலை மக்களையே இப்போது நான் புற நகர் பகுதியில் பார்க்கிறேன்.  நகருக்குள் பசு மாடுகள், எருமை மாடுகள்,காளை மாடுகள், கிடாக்கள், நாட்டுக்கோழிகள், கிளிகள் ,லவ் பேர்ட்ஸ் என இன்னும் பார்க்க முடிவது அபூர்வம் தான். அந்த வகையில் பல்லாவரம் சந்தையை கண்ணுற்று ரசிப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளே!!!

பல்லாவரம் சந்தையை யூட்யூபில் தரவேற்றிய நண்பருக்கு நன்றி.