த பியானிஸ்ட்[The Pianist][2002][இங்கிலாந்து]


போலந்து நாட்டைச் சேர்ந்த வ்லாடிஸ்லாவ்  ஷ்பில்மான் என்னும்   யூத - பியானோ இசைக்கலைஞனின் நாஜி ஆக்கிரமிப்பின் போதான துயர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம்  சிறந்த நடிகருக்கும் , சிறந்த திரைக்கதைக்கும்,சிறந்த இயக்குனரும் என மொத்தம் மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.   இதைத் தவிர ஏனைய திரைப்பட விழாக்களிலும் பல விருதுகளை  குவித்துள்ளது. 

இயக்குனர் 
ரோமன் பொலன்ஸ்கி
ப்படத்தின் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி. உலகின் மிகச்சிறந்த   திரைப்பட இயக்குனர்களில் ஒருவர். இவர்  போற்றுதலுக்குறிய ஆளுமைகளைப் பற்றிப் படமெடுப்பது இல்லை. சர்ச்சைக்குரிய விஷயங்களும் பலவீனங்கள் நிறைந்த கதாபாத்திரங்களுமே இவர் அதிகம் இயங்கும் தளங்கள். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு  நாஜிப்படையினரின் கொடுமைகளையும் , கெட்டொ எனப்படும் யூதர்களின் காலனிகளில் நடந்த அடக்கு முறையினையும்  இப்படத்தில் நம் கண் முன்னே நிறுத்துகிறார். 
வரும்  போலந்தைச் சேர்ந்த யூத இனத்தவரே !!!. இவரும்  ஜெர்மனியின் நாஜிப் படைகளால் துன்புறுத்தப்பட்டு  அதே போலந்து நாட்டில் நாஜிப்படை நடத்திய கோரதாண்டவத்தில் இனவதை முகாமுக்கு அனுப்பப்பட்டு தன் குடும்பத்தையே பறிகொடுத்தார். இனவதை முகாமிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்களில் இவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு அன்று ஏற்பட்ட   இழப்பும் அவமானமும்  அவருள் மிகுந்த தன்னம்பிக்கையை  ஏற்படுத்தியிருக்கிறது.  அதைப் பழிதீர்த்து வெற்றிகொள்ளவும், என்னாலும் திருப்பியடிக்க முடியும் என்று காட்டவும், தன் யூத இனப்படுகொலைக்கு தன் பங்குக்கான ஆசுவாசத்திற்காக இப்படத்தை இயக்கியதாக குறிப்பிடுகிறார்.

படத்தின் கதை:-
செப்டெம்பர் 1, 1939. போலந்து வார்சா வானொலி நிலையம், வ்லாடிஸ்லாவ் ஷ்பில்மான் [ஏட்ரியன் ப்ரூடி] பிரபலமான பியானோ இசைக்கலைஞன், அவனது கைதேர்ந்த பியானோ இசையுடன்  தொடங்குகிறது படம்.  அங்கே வெகு அருகில் பீரங்கி குண்டுகள் விழும் சத்தம் கேட்கின்றன. இசைப்பதை நிறுத்திவிட்டு, நிலையத்தை மூடும்படி அவன் பணிக்கப்பட்டும், அவனால் கட்டுண்ட இசையினிலிருந்து   வெளியேறமுடியாத   அவனது விரல்கள் தொடர்ந்து இசைக்கின்றன. அவனது வானொலி நிலையக்கூரையே தகர்ந்து விழ நேர்கையில் வாசிப்பதை நிறுத்துகிறான்.  

வன் இசைத்ததை வெளியே வானொலியில் கேட்டுக்கொண்டிருந்த ஒரு ரசிகை அவனை வெகுவாய் பாராட்டுகிறாள். அவள் செல்லோ இசை வாத்தியக்கலைஞர் என்று அறிகிறான் ஷ்பில்மான். அருகே உணவகம் சென்று காஃபி குடிக்க தீர்மானித்தவர்கள், வாசல் கதவில் ஒரு பலகை அதில்  யூதர்களுக்கு அனுமதியில்லை என எழுதப்பட்டிருக்க.  இது என்ன அநீதி?!!!  என்று கொதிக்கிறாள் , அவள் ஒரு ஜெர்மானிய  பிரஜை என்று அறிகிறான். அவள் அவனிடம் மேலும் சிறிது நேரம்  பேசிக்கொண்டிருக்க ஆசைப்பட்டவள் பூங்காவுக்குச் செல்லலாம் என்ற அவளது யோசனைக்கு, ஒரே இரவில் பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் உள்ள இருக்கைகள் கூட யூதர்களுக்கு மறுக்கப்பட்டு நாங்கள் மீண்டும் தீண்டத்தகாதவராகி விட்டோம், 600 வருடங்களுக்கு முன் நேரந்த அதே நிலை மீண்டும் திரும்பி விட்டது. என்று ஆற்றாமையில் பெருமூச்சு விடுகிறான். வீட்டுக்கும் திரும்புகிறான்.

ப்போது வீட்டுக்கு சென்ற ஷ்பில்மான் வானொலியில் ப்ரிட்டனும் , ஃப்ரான்சும் நாஜி ஜெர்மனிக்கு எதிராக போரில் இறங்கியதை கேட்க்கிறான். அவன் குடும்பத்தினர் செய்வதிறியாமல் திகைக்கின்றனர். ஸ்பில்மானுக்கு இதை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை மிச்சமிருக்கிறது. வார்சாவுக்குள் நாஜிப்படை நுழைந்த உடனேயே யூதர்களின் வாழ்வுரிமைகள் பாதிக்கப்படுகின்றன, போலீஷ் கத்தோலிக்கர்களிடமிருந்து யூதர்கள் களையெடுக்கப்படுகின்றனர். 

யூதர்கள் அசுத்தமானவர்கள். கொடிய நோய் தொற்றுகளான டைபஸ் [typhus] பேன்  தொற்று, சொறிகள் அவர்களிடமிருந்து தான் பரவுகின்றன.ஆகவே போலந்து மற்றும் நாஜிக்களுக்கு அவை தொற்றாமல் இருக்க அவர்களை தனியாக தங்க வைக்கிறோம் என்று விஷம பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.  யூதர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன, அவர்களது வணிக உரிமங்கள் ரத்தாகின்றன, அவர்களின் வீடுகள் அதிரடி  சோதனை செய்யப்பட்டு யூத மக்கள் அவர்கள் வாழ்ந்த வீடுகளில் இருந்து ஜெர்மானிய நாஜிப்படையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் படுகின்றனர்.

வர்கள் படிக்கவும் , அரசுத் துறைகளில் வேலை பார்க்கவும் தடை விதிக்கப்படுகின்றன. நன்கு படித்தவர்களும் கூட உணவகங்களில் துடைக்கும் கழுவும் வேலைகளை வயிற்றுப்பிழைப்புக்காக செய்யத்துவங்குகின்றனர்  . பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போர் தொடுக்கப் போவதாக வரும் செய்தி யூதர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. யூதர்கள் என்று இனம்பிரித்துக் காட்டுவதற்கு 20செ.மீ x 20செ.மீ  நீல நிற டேவிட்-என்னும் நட்சத்திரக் குறியிட்ட துணிப்பட்டையை அவர்களின் மேல் கோட்டின் கைப்பகுதியில் தைத்துக்கொள்ள ஆணையிடப்படுகின்றனர். இதற்குப் பணியாதவர்களை உடனடியாக சுட்டு கொல்கின்றது நாஜிப்படை.  யூத அடையாள அட்டை இல்லாமல் இனி யாருமே வெளியே வந்துவிடமுடியாது.

ஷ்பில்மான் குடும்பத்தில் எல்லோரும் வீட்டை காலி செய்ய தயாராகையில். வார்சாவில்  மொத்தமாக 4 இலட்சம் யூதர்கள் இருக்கின்றனர். இவ்வளவு  மக்களுக்கு இடையில் நம்குடும்பத்தை நாஜிக்கள்அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள்.இன்னும்  நாம் இங்கேயே தங்கிவிடலாம்  என்று அடம் பிடிக்கிறான் ஷ்பில்மான். அவனுக்குத் தான் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த மண்ணை விட்டு வேறெங்கும் பெயர்ந்து செல்ல மனம் இடங்கொடுக்கவேயில்லை.

னால் நாஜிப்படையினர் என்ன முட்டாள்களா?!!! ஆப்பரேஷன் ரீன்ஹார்ட் என்று பெயரிடப்பட்ட அடக்குமுறை மூலம் எப்படியெல்லாம் யூதர்களை கண்டறிய முடியுமோ அப்படியெல்லாம் சுற்றி வளைக்கின்றனர். பொதுவாகவே  யூதர்கள் ஆண் குழந்தை பிறந்த உடனே ஸர்கம்ஃபிகேஷன் என்னும் ஆண் பிறப்புறுப்பில் முன் தோல் நீக்க சிகிச்சையை மதகுருமாரைக் கொண்டு செய்து விடுவர்.எனவே நாஜிக்கள் தெருவில் போகும் எந்த சந்தேகத்துக்கு இடமான ஆணையும் அவர்களின் கால் சட்டையை இறக்கி பார்த்து சோதிக்கின்றனர்.அதை வைத்தே யூத ஆண் அடையாளம் காணப்படுகிறான்.யூதர்கள் என சந்தேகப்படுபவரை பன்றிக்கறி தின்னச்சொல்லி பார்த்து தெரிந்து கொள்கின்றனர்,இம்முறை மூலம் யூத பெண்களையும் கண்டறிகின்றனர்.

வெளியே நடமாடும் எவரும் தங்களின் அடையாள புத்தகங்களை வைத்திருக்க வேண்டியிருப்பதால். ஒரு யூதன் தன்னை ஜெர்மானியன் என பொய் சொன்னால் அவனிடம் அவன் சிறுவயதில் ஞானஸ்தானம் பெற்ற திருச்சபையின் ஆவணங்களும் ,அவனின்/அவளின் தந்தை,தாயார்,தாயின் பெற்றொர், தந்தையின் பெற்றொர் ஞானஸ்தானம் பெற்ற நாளும் திருச்சபையின் ஆவணங்களும் கேட்கின்றனர்.பெற்றோரில் யாராவது ஒருவர் கலப்பு திருமணம் செய்திருந்தாலும் யூதர் தான் என்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக ஜெர்மானியர் அனைவரும் தம் வீட்டருகே உள்ள யூதரை காட்டிக்கொடுக்க வேண்டும் என கட்டளை இடப்பட்டிருந்தனர். அவ்வாறு காட்டிக்கொடுக்கவோ அவரை விசாரிக்கையில்  துப்பு கொடுக்க தவறினாலோ சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

யூத ஆண்கள் முறையே தம் 13 வயதிலும், 83 வயதிலும் பார்மிட்ஸ்வா என்னும் ஞானஸ்தானம் பெறுவர். அது கோவில்களில் ராப்பிகள் மூலம் தான் நடக்கும். எனவே யூதர்களின் கோவில்களில் இருக்கும் ராப்பிக்களை சிறை பிடித்து துன்புறுத்திய நாஜிக்கள் அவர்கள் மூலம் யார் யார் எல்லாம் பார்மிட்ஸ்வா வாங்கிய யூதர்கள் என எளிதாக கண்டனர். அந்த பேரேட்டை வைத்தே பட்டியல் தயார் செய்யப்பட்டு நிறைய யூதர்கள் கெட்டோவுக்கு அனுப்பப்பட்டனர்.  யூதர்களுக்கு யார் அடைக்கலம் தந்தாலும் தயவுதாட்சன்யம் இல்லாமல் தெருவில் தூக்கிலிட்டோ, சுட்டோ  கொல்லப்பட்டனர். யூதவீடுகள் முன் பெயிண்டால் நட்சத்திரக்குறி இடப்பட்டு, அவர்கள் வீடுகள் முரட்டு ஜெர்மானிய மக்களால் சரமாறியாக தாக்கப்பட்டன. எல்லை தாண்டி எங்கே வெளியே தப்பிப் போனாலும் மூன்று தலைமுறைகளின் ஆவணங்களை இனமறிய அமெரிக்கா, ப்ரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, நாடுகள் கேட்டன.அதனால் எவரும் தன் அடையாளத்தை தொலைக்கவோ  மறைக்கவோ முடியவில்லை. என்னதான் சிகையலங்காரம், பாரம்பரிய உடைகள், தொழுகை முறைகளை யூதர்கள் மாற்றிக் கொண்டாலும் அவர்களை நாஜிக்கள் தேடிக் கொன்று குவித்தனர்.

நாஜிக்களுக்கு நடுங்கிய யூதர்கள் நட்சத்திரக் குறியிட்ட பட்டைகளை கைகளில் பவ்யமாக அணிந்து கொள்கிறார்கள். யூதர்கள் எனப் பிரித்துக் காட்டப்பட்டவர்களுக்கு, நடைபாதைகளில் நடக்கவும், ஜெர்மானியர்கள் பிரயாணிக்கும் பேருந்துகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  1940ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதிக்குள்ளாக ஒரு கெட்டோவுக்குள் யூதர்கள் அனைவரும் குடி பெயர்ந்து விட வேண்டும் என்று மேலும் ஒரு சுற்றறிக்கை  வருகிறது.

தனிடையில் ஷ்பில்மானின்  பியானோவைக்கூட விற்றுச் சாப்பிடவேண்டிய நிலைக்கு அவன் குடும்பத்தினர் ஆளாகின்றனர்.  கைக்கூலிகளும் காட்டிக்கொடுப்பவர்களும் யூதர்களிடையே  கூட நாம் பார்க்கிறோம்.  ஸ்பில்மானின் குடும்பத்திற்குப் பழக்கமான ஒரு யூதன் நாஜிக்களுக்கு கூட்டியும் யூதர்களை காட்டியும் கொடுக்கிறான்.  இவர்களிடமும் வந்தவன் நீங்களும் என்னைப்போல ஜெர்மானியர்களிடம் பணியில் அமருங்கள் என்கிறான். ஸ்பில்மானிடம் நீ போலிஸ்காரன்  கூட ஆகலாம். நீ அவர்களுடைய கேளிக்கை விடுதியில் பியானோவும் வாசிக்கலாம் என்று  ஆசை  காட்டுகிறான். ஸ்பில்மானும் அவன் சகோதரன் ஹென்ரிக்கும் அதை மறுத்து அவனை அவமானப்படுத்தி விரட்டி  விடுகின்றனர். அவன் வன்மத்தோடு  வெளியேறிச் செல்கிறான்.
ஆகஸ்டு 1940வருடம்:-
ப்போது வார்சாவின் மொத்த யூதர்களையும் ஓரிடத்தில் கூடச்செய்த பிறகு அந்த இடத்தை சுற்றி வளைத்து  சுற்றுச்சுவர் எழுப்பி அதன் மேலே இரும்பு முள்வேலி வேய்கிறது நாஜிப்படை.அந்த கட்டுமானத்துக்கும் யூத தொழிலாலர்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். இப்போது போலந்துதேசமே இரண்டானது. யூதர்கள், ரோமாக்கள், ஜிப்சிக்கள் ஒருபுறம் - போலீஷ் கத்தோலிக்கர்கள் மறுபுறம். இப்போது யூதர்கள் பிழைப்பதற்கு வழியேயில்லை. ரேஷனில் ஒரு யூத குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் உணவுப்பொருளின் அளவு - 186 கலோரிகள், அதே ரேஷனில் ஒரு ஜெர்மானிய குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் உணவுப்பொருளின் அளவு -2614 கலோரிகள், ஒரு போலீஷ் ரோமன் கத்தோலிக்கர் குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் உணவுப்பொருளின் அளவு -1669 கலோரிகள் என்று இருக்கிறது.நிறைய யூதர்கள் பசிக்கொடுமையாலேயே மடிந்தனர்.

அக்டோபர் 16, 1940 வருடம்;-
ப்போது வார்சாவில் கெட்டோ முழுவீச்சில் இயங்கத் துவங்குகிறது. சொற்ப உடமைகளுடனும் கவலை தோய்ந்த முகத்துடன் ஏனைய யூதர்களுடன் மந்தை மந்தையாக கெட்டோவுக்குள் இடம் பெயர்ந்து செல்கிறார்கள். சிறு குழந்தைகள் கள்ளம் கபடமின்றி தங்கள் பொம்மைகளை கையிலே எடுத்துக்கொண்டு போவதையும் , வயது முதிர்ந்தவர்களை சக்கர நாற்காலிகளில் வைத்துத் தள்ளிக்கொண்டு போவதையும் நாம் பார்க்கிறோம். . தங்கள் சொந்த மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்ட சோகம் அந்த வார்ஸா முழுக்கவே நிரம்பியிருக்கிறது.  ஷ்பில்மானும் அவன் குடும்பமும் அதே கூட்டத்தில் நடந்துபோவதையும் நாம் பார்க்கிறோம். அவர்கள் செல்லும் வழியில் அந்த செல்லோ வாசிக்கும் பெண்ணை நாம் கண்ணுறுகிறோம். இது  என்ன கொடுமை?!!!கடவுள் இருக்கிறாரா?!!!என்று கொதிக்கிறாள் அந்த ஜெர்மானியப் பிரஜை.

ங்கே வயதான பெண்ணொருத்தி தன் கணவனின் பெயரைச் சொல்லி அவரை பார்த்தீர்களா?!!! என்று வீதிகளில் எதிர்ப்படுகிறவர்களை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் மனம் பிழற்ந்தும் போயிருக்கிறாள்.  மிகவும் உணர்ச்சிகரமான காட்சியது!!!. பசியினால் இறந்தவர்களின் பிணங்கள் எங்கு நோக்கிலும் கிடக்கின்றன. குழந்தைகள் பசியில் கதறுகின்றன. வசதியாகவும் கௌரவமாகவும் வாழ்ந்த அந்த மக்கள் கூட்டம் இப்போது பிச்சைக்காரர்களாகி தெருக்களில் கையேந்தி நிற்கிறார்கள்.  வறுமைப்பிடிக்குள் சிக்கி உழலும் அப்பாவி யூதர்களை நடனமாடும்படி ஆணையிடுகின்றனர்  நாஜிக்கள். கண்களில் அடக்கப்பட்ட ,ஒடுக்கப்பட்ட கோபத்தை அடக்கிக்கொண்டு அவர்கள் ஆடுகிறார்கள்.

ப்போது நாஜி ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக புரட்சியில் ஈடுபட  யூத இளைஞர்கள் ரகசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றனர். தன்னையும் அவர்களோடு இணைத்துக் கொள்ளும்படி ஸ்பில்மான் இறைஞ்சிக் கேட்கிறான்.  நீ பிரபல இசைக்கலைஞன். போலந்துக்கே உன்னைத் தெரியும் அதனால் எங்களுக்குத் தான் ஆபத்து,  உன் மிருதுவான விரல்களுக்கு புரட்சி என்றுமே ஒத்து வராது என  மறுத்தும்விடுகின்றனர்.அங்கே கெட்டோவில் ஒரு தள்ளாத முதியவரை சக்கர நாற்காலியோடு தூக்கி மாடியிலிருந்து நாஜிக்கள் எறிந்துகொல்வதையும்  நாம் பார்க்கிறோம் . ஒருகாட்சியில் நாஜிக்களின் பிடில்யில் இருந்து தப்பி விலகியோடியவனின் தலையில் நாஜிக்கள் துப்பாக்கியால் சுடுகின்றனர். ஷ்பில்மானின் சகோதரன் ஹென்ரிக்கை புரட்சிக்காரன் என்று சந்தேகித்து கைது செய்து கொண்டு இழுத்துப் போகிறது நாஜிப்படை. 

னது சகோதரனை விட்டுவிடும்படி நன்கு பரிச்சயமான அந்த காட்டிகொடுக்கும் யூத போலிஸ்காரனிடம் சென்று மன்றாடுகிறான் ஷ்பில்மான். அவன் எல்லோருக்கும் சொல்லும் வழக்கமான பதிலையே அவனுக்கும் சொல்கிறான். நான் அவனைப் பார்க்கவேயில்லையே என்று!!! நாஜிப்படையில் காட்டிக்கொடுத்து பிழைக்கும் அந்த யூதப்-போலிஸ்காரன் ஷ்பில்மானின் கெஞ்சுதலுக்கு ,ஒருகட்டத்தில் மனம் இறங்கிவந்து ஹென்ரிக்கை விடுதலையும் செய்கிறான். அந்தப் போலிஸ்காரனுக்கு ஷ்பில்மான் மீது அவனின் அபரிதமான இசைத்திறமையினால் மிகவும் அபிமானம் இருக்கிறது என்பதை நாம் அறிகிறோம். 

ங்கே, ஒரு முதிய பெண் ஒருத்தி தட்டில் கொஞ்ச உணவை எடுத்துக்கொண்டு வீடு நோக்கிச் செல்வதை நாம் பார்க்கிறோம். அதைத் சக யூதன் ஒருவன் பசியில் தட்டிப்பறிக்கப் பார்க்கிறான். அந்த யூதப் பெண்ணுக்கும் அவனுக்குமான இழுபறியில் உணவு நிலத்தில் சிந்தியும் விடுகிறது. நிலத்தில் சிந்திய உணவினை அந்த யூதன் நாயைப்போல படுத்து நக்கித் தின்னுகிறான்.  அந்தப் யூதப்பெண் திகைத்தவள் ஆற்றாமை  பொங்க அவனை அடிக்கிறாள்.பசியில் அழுகிறாள். அவனோ அடியை  கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் ஒரு துளி  விடாமல் உண்டுவிடுகிறான்.  யார் கண்டார் ?!!! அவன் முன்பு ஒரு செல்வந்தனாகக்கூட இருந்திருக்கக்கூடும்.

மார்ச் 15 1942ஆம் ஆண்டு
யூதர்களில் பெரும்பாலானோரை மந்தை மந்தையாக புகைவண்டிகளில் ஏற்றி வேறோர் முகாமுக்கு அனுப்ப ஆயத்தப்படுத்துகின்றனர் நாஜிப்படையினர்.  எங்களை எங்கே அழைத்துப் போகிறீர்கள்?!!! என்று ஓர் யூதப் பெண் துணிவுடன், ஆவேசமாகக் கேட்கிறாள். அவளது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து குண்டை வெளியேற்றுகின்றனர். அதுதான் எல்லோருக்குமான பதில்  என கூடியிருப்பவருக்கு புரிகிறது. புகைவண்டி நிலையத்தில் யூதர்கள் மிகச் சொற்ப உடமைகளுடன் கூடியிருக்கிறார்கள். கையில் வெறுமையான பறவைக் கூண்டோடு ஒரு சிறுமி கூட்டத்தினரிடையில் தன் பெற்றோரைத் தேடுகிறாள். அங்கே  நான் ஏன் அப்படிச் செய்தேன்? ஒரு பெண் புலம்பிக் கொண்டிருக்கிறாள். எனது குழந்தை செத்துக்கொண்டிருக்கிறது.ஒரு சொட்டுத் தண்ணீர் தாருங்கள்”தாயொருத்தி கையில் துவண்டு தொங்கும் குழந்தையைக் கொண்டு அலைந்து திரிகிறாள்.

வீதிகளில் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. இத்தனை ஆரவாரங்களுக்கும் இடையில் ஒரு சிறுவன் இனிப்பு விற்றுக்கொண்டிருக்கிறான்.“நான் ஏன் அப்படிச் செய்தேன்?”அந்தப் பெண்ணின் விசும்பல் நீள்கிறது.இதற்குள் சிதறிப்போயிருந்த ஷ்பில்மானின் குடும்பதவர்கள் ஒருவரையொருவர் கண்டுகொண்டு ஆரத்தழுவுகிறார்கள். குறைந்தபட்சம் தாங்கள் ஒன்றாக இருக்கமுடிவதில் ஆறுதல்கொள்கிறார்கள்.

ங்களை எங்கே கொண்டு போகிறார்கள்? !!! என்று கவலை தோய்ந்த முகத்துடன் முதியவர்கள்  அப்பாவியாக கேட்க.  கட்டாய வேலைபிடுங்கி முகாமுக்கு நாம் கொண்டுசெல்லப்படுகிறோம் என்று மறுசாரார் பதிலுறைக்கின்றனர். மாற்று திறனாளிகள், முதியோர்கள், குழந்தைகள், பெண்கள்… இவர்களால் எப்படி வேலை செய்யமுடியும்?   அங்கே நிலவிய மௌனம் மரணம் தான் அதன் பதில் என்பதைக் குறிக்கிறது..நான் ஏன் அப்படிச் செய்தேன்?”அந்தப் பெண் கத்தியழுகிறாள். அவள் அப்படி என்னதான் செய்துவிட்டாள்?என்று ஷ்பில்மானின் தங்கை பொறுமையிழந்து கேட்கிறாள். 

கெட்டோவை வெளியேறும்படி நாஜிப்படையினர் உத்தரவிட்டபோது எங்காவது ஒளிந்திருந்து இங்கேயே தங்கிவிடலாமென அவள் நினைத்தாள்.  ஒளிந்திருக்கும்போது குழந்தை அழுதது. குழந்தையின் அழுகை ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிடும் என்ற அச்சத்தினால் குழந்தையின் வாயைக் கைகளால் மூடி அதை அடக்க முயன்றாள். ஆனால், அவர்கள் பிடிபட்டார்கள். குழந்தையும் மூச்சு திணறி இறந்து போனது என்று அங்கே இருந்தவர்கள் இக்கொடிய சம்பவத்தை  விளக்குகிறார்கள். நான் ஏன் அப்படிச் செய்தேன்?, நான் ஏன் அப்படிச் செய்தேன்?. என்று அவளின் விசும்பல் தொடர்கிறது. அங்கே ரயில் நிலையத்தில் புகைவண்டி   வந்து நிற்கிறது. யூதர்கள் அதனுள் ஆடுமாடுகளைப் போல ஏற்றப்படுகிறார்கள். தனது குடும்பத்தோடு  புகைவண்டிக்குள் ஏறப்போன ஷ்பில்மானை ஒரு கை கூட்டத்திலிருந்து விலக்கித் தள்ளுகிறது.  அந்த துரோகி யூதப் போலிஸ்காரனுடைய கையே தான் அது. ஷ்பில்மான் தன் பெற்றோரை  சகோதரர்களை பார்த்து  கதறியழுகிறான். 

வர்களை நோக்கி ஓட முயல்கிறான். போலிஸ்காரன் அவனைத் தடுத்து நிறுத்திச்சொல்கிறான்.  நான் உன் உயிரைக் காப்பாற்றியிருக்கிறேன்.  ஓடிவிடு என்கிறான். புகைவண்டி வேகமெடுத்து மரணத்தை நோக்கி ஓடத்தொடங்குகிறது. பிணங்களும் பயணப்பெட்டிகளும் இறைந்துகிடக்கும் சூனியத்தெருக்களில், பாழடைந்த வீடுகளினூடே தன்னந்தனியனாக அழுதபடி நடந்து செல்கிறான் ஷ்பில்மான். அனுதினமும் அவனது உயிரைக் காத்துக்கொள்ள ஓடுவதில் அவனுக்கு நாள்,கிழமை,வருடம் என்பதே மறந்து போகிறது.

 1ஆகஸ்டு 1944 -வார்சா புரட்சி:- வார்சா கெட்டோவில் அடைபட்டு இருக்கும் போலிஷ் இனத்தவர்கள் ஆண் பெண் இன பேதமில்லாமல்  மும்முறமாக ஆயுதங்களை கைப்பற்றியும் ,கடத்திக்கொண்டு வந்து தங்கள் நாட்டை மீட்க நாஜிக்களுக்கு எதிராய் போரிடுகின்றனர். மிகவும் உக்கிரமான போர் அது. நாஜிக்கள் சற்றும் சளைக்கவில்லை. வானில் வேறு ப்ரிட்டன்,அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிகின்றன. அங்கங்கே பீரங்கி குண்டுகள் பறந்து வந்து விழுவதையும் நாம் பார்க்கிறோம்.  

 ஷ்பில்மானின் வீடு சூறையாடப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். எங்கு நோக்கிலும் இடிபாடுகள். சிதிலங்கள். ஓய்வேயின்றி நாஜிக்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே துப்பாக்கிச் சண்டை நடக்கிறது. அவன் ஒளிந்திருக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருந்து அவ்வப்போது யாரோ பியானோ வாசிக்கும் ஒலி கேட்கிறது. அவனை அது நிலைகொள்ளாமல் தவிக்க வைக்கிறது. எப்போதாவது கிடைக்கும் உணவினால் அவன் உயிரை இழுத்துப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறான். 

வனிருக்கும் பூட்டப்பட்ட வீட்டுகுள்ளே  பீங்கான் தட்டுகள், கண்ணாடிச் சாமான்கள் இவன் கைபட்டு விழுந்து நொறுங்கி விட அந்த ஓசை இவன் ஒளிந்திருப்பதை பக்கத்துவீட்டு போலிஷ் இனப்பெண்ணுக்கு காட்டிக்கொடுத்து விடுகிறது. பக்கத்து வீட்டுப் பெண் அருவருப்பும் ஆத்திரமும் பொங்க இதோ யூதன் இதோ யூதன் இங்கே ஒளிந்திருக்கிறான்  பிடியுங்கள் !!!! என்று கூப்பாடு போடுகிறாள். அங்கிருந்து தப்பித்து ஓடுகிறான் ஷ்பில்மான். ஆபத்தான காலங்களில் தொடர்பு கொள்ளும் படியாக அவனிடம் கொடுக்கப்பட்ட முகவரி அந்தப் செல்லோ வாசிக்கும் பெண்ணினுடையதாக  இருக்க  அதிர்கிறான். அவனது செல்லாக்காதல்  தவிடு பொடியாகிறது .அவள் இப்போது வேறொருவனின் மனைவி என்பதை நினைக்கவே வலிக்கிறது.

வளும் அவளது நல்ல கணவனும் ஷ்பில்மானை வேறொரு வீட்டில் மறைத்து ஒளித்து வைக்கிறார்கள். எப்போதாவது அவனுக்கு உணவும் கிடைக்கிறது. அந்த வீட்டில் இருக்கும் பியானோ அவனது விரல்களை ஏங்க வைக்கிறது. ஆனால், அதை வாசிக்கும் நேரத்தில் இவன் பிடிபட்டால் என்ன ஆகும் என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். அந்தரத்தில் அவனது விரல்கள் தொடர்ந்து இசைக்கின்றன. பசியும் தனிமையும் நீண்டநாள் தலைமறைவு வாழ்வும் அவனைத் உள்ளம் தளர்ந்துபோகச் செய்கின்றன. அவன் இப்போது கொடிய மஞ்சள்காமாலையில் வேறு விழுகிறான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்த  செல்லோ இசைப்பெண் உயிரைக்காத்துகொள்ள    வேறு ஊருக்குப் போகிறாள். இவனுக்கு மிகுந்த கெடுபிடிக்கிடையில் உணவு கொண்டுவரும் மனிதனும் சுடப்பட்டு இறந்துவிடுகிறான். நோயோடும், பசியோடும், அயராத நம்பிக்கையோடும்.ஷ்பில்மான் மீட்கப்படுவோம் எனக் காத்திருக்கிறான்

போலிஷ் புரட்சியாளர்களுக்கும் நாஜிப்படைகளுக்குமிடையிலான சண்டையில் பீரங்கிகளால் அவன் இருந்த கட்டிடம் தாக்கப்படுகிறது. இடி பாடுகளுக்கிடையில், புகைமண்டலத்திற்கிடையில், பிணங்களின் மீது விழுந்தெழுந்து  ஓடுகின்றான். இசைக்கலைஞன் என்று கொண்டாடப்பட்டவன் இப்போது ஒரு பைத்தியக்காரனைப் போல உருமாறிவிட்டான்.  மறுபடியும் புரட்சியாளர்கள் தோற்கிறார்கள். எல்லாப் பிணங்களையும் ஒன்றாகத் தெருவில் போட்டுக்கொழுத்துகிறார்கள்

வ்வளவு பெரிய நகரத்தில் சிதைந்த கட்டிடங்கள் நடுவே ஒரு பைத்தியக்காரனின் தோற்றத்தில் காலை இழுத்தபடி ஷில்பிமான் நடந்துபோவதை நாம் பார்க்கிறோம்   .  அங்கே அவன்  சிதிலமடைந்த மருத்துவமனையைப் பார்க்கிறான்  அங்கே புகுந்து ஒளிந்துகொள்ள ஏதுவாய் இடம் தேடுகிறான். பசியும் தாகமும் அவனை  உரு குலைக்கின்றன. அந்நேரம் பியானோவின் ஒலி அந்தக் கட்டிடத்தினுள் மிதந்து வருகிறது. அது பயங்கரமாக அதிர்ச்சியடைந்த தன்னுடைய மனப்பிராந்தி என்றே நினைக்கிறான். 

கைக்கு அகப்பட்ட ஒரேயொரு போலிஷ் ஊறுகாய்  டின்னையும் , ஒரு பரணுக்குள் எடுத்துச் சென்று ஒளிந்து கொண்டு அதை திறக்கமுயல்கையில் அது கையிலிருந்து வழுகிச் சென்று உருண்டோடிச் சென்று ஒரு நாஜியுடைய  காலடியில்  போய் முட்டி நிற்கின்றது.அந்த அதிகாரியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அவன் பெயர் வில்ம் ஹோசன்ஃபீல்ட்[ Wilm Hosenfeld]. இவன் விக்கித்துபோகிறான். முடிந்தது இத்தனை காலமும் அரும்பாடுபட்டுக் காப்பாற்றிக் கொண்டிருந்த உயிர் இதோ போகப் போகிறது என்றெண்ணுகிறான். இனி தப்பிஓட தெம்பில்லாத கால்களோடும் பஞ்சடைந்த கண்களோடும் அதிகாரியை வெற்றுப்பார்வை பார்க்கிறான். நீ யார்?  இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?என்று அவன் ஆச்சர்யமாய் கேட்க,இவன் தான் ஒரு யூதன் என்பதையும் பியானிஸ்ட் என்பதையும் தைரியமாக உரைக்கிறான்.

ந்த ஜெர்மானிய அதிகாரி வில்ம் ஹோசன்ஃபீல்ட் அவனை அதே கட்டிடத்தின் ஒரு அறைக்குள் அழைத்துச்செல்கிறான். அங்கே  ஒரு பியானோ இருக்கிறது. அதை வாசித்துக் காட்டும்படி உத்தரவிடுகிறான். நெடுநாளாய் பசித்திருந்த,  விரல்களுக்கு   உணவு கிடைத்தது போல அந்த பியானோவைக் கண்டான். அவனுள் வேலியிட்டு அடைக்கப்பட்டிருந்த சங்கீதம் மெதுமெதுவாகக் பிரவாகமெடுக்க ஆரம்பிக்கிறது.   சோபின்ஸ் பல்லாடே ஜி மைனர் [ Chopin's Ballade in G minor.] என்னும் இசைக்கோர்வை  சிறிது சிறிதாக வேகமெடுத்து  ஒருகட்டத்தில் தனி ஆவர்த்தனமே செய்கின்றன அவன் விரல்கள். வாசித்து முடிக்கையில் அவன் உள் மன பாரத்தை இறக்கியும் வைத்து விட்டிருக்கிறான்.தெளிந்த நீரோடை போல அவனது முகம்.

ந்த ஜெர்மன் அதிகாரி வில்ம் ஹோசன்ஃபீல்ட் , ஸ்பில்மானிடம் ரஷ்யர்கள் ஆற்றை நெருங்கி வந்துவிட்டார்கள். நீ  ஓரிரு வாரங்கள் காத்திருக்கவேண்டும். அவ்வலவு தான் என்கிறான் அந்த மனிதநேயமுள்ள அதிகாரி ஷ்பில்மானுக்கு உணவு கொண்டு வந்து கொடுக்கிறான். கிளம்புகையில் கடும் குளிர் வாட்ட,தன் நிலையை பொருட்படுத்தாது ஷ்பில்மானுக்கு  தனது நாஜி மேல் கோட்டைக் கழற்றிக் கொடுக்கிறான். அதற்கு ஷ்பில்மான் நன்றியுடன் பார்க்கிறான். அந்த நாஜி அதிகாரி போர்முடிந்ததும் நீ என்ன செய்வாய்?!!! எனக் கேட்கிறான்.  நான் போலிஷ் வானொலியில் பியானோ வாசிப்பேன் என்கிறான் ஷ்பில்மான்    உனது பெயர் என்ன?!!! வில்ம் ஹோசன்ஃபீல்ட்,நான் உனக்காக அந்த வானொலியை  நிச்சயம் கேட்பேன் என்று கூறி விடைபெறுகிறான் அந்த அதிகாரி. நான் உனக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை? கலங்குகிறான் ஷ்பில்மான். கடவுளுக்கு நன்றி சொல். நாம் பிழைத்திருக்கவேண்டுமென்று அவன் விரும்பினான். இப்போது செம்படையினரின் பீரங்கிகள்  வார்சாவின் தெருக்களில் வலம் வருகின்றன.ஒரு செம்படை அதிகாரியின் பீரங்கியை நோக்கி ஓடிய இவனை சுற்றி வளைக்கின்றனர்.காரணம் அவன் குளிருக்கு அணிந்திருந்த அந்த நாஜி மேல் கோட் தான்.அதை பெரும்பாடு பட்டு யூதர்கள் பேசும் யீட்டீஷ் மொழியில் சொல்லி விளக்கிய ஷ்பில்மான் உயிர்பிச்சையும் பெறுகிறான்.
 
பின்னர் ரஷ்யர்களால் மீட்கப்பட்ட தெருக்களில் அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடந்துபோகிறான்.  அங்கே பிண்ணணியில் பியானோ  இசை ஒலிக்கிறது.    விடிகிறது. கெட்டோவில் சிறைப்பிடிக்கப்பட்ட ஜெர்மானியர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள். இனி அவர்கள் போர்கைதிகள்.  விடுதலையான போலந்து நாட்டவர்கள் அவர்களைப் பார்த்துக் கத்துகிறார்கள் !!! கொலைகாரர்களே!!! கொலைகாரர்களே!!!! 
திலொருவன் கோபத்தோடு விம்முகிறான்.  நான் ஒரு இசைக்கலைஞன்.  எங்களுடைய எல்லாவற்றையும் அபகரித்தீர்கள். என் பெற்றோரை, குழந்தையை, கடைசியில் என் வயலினையும் கூட  பறித்துக் கொண்டீர்களே.பாவிகளா!!! என்று சினம் கொண்டு கத்துகிறான்.  சிறைப்பிடிக்கப்பட்ட ஜெர்மானியர்களிலிருந்து  அந்த  நாஜி அதிகாரி வில்ம் ஹோசன்ஃபீல்ட் எழுந்து அவனிடம் வருகிறான். நீ ஒரு இசைக்கலைஞனா? வயலின் வாசிக்கிறாயா?!!! உனக்கு ஷ்பில்மானைத் தெரியுமா? பியானோ வாத்தியக்காரன். அவன் ஒளிந்திருந்த போது அவனுக்கு உணவு கொடுத்தேன். உதவி செய்தேன். நான் இங்கிருப்பதை அவனுக்குச் சொல்வாயா ?!!! அவன் இப்போது என்னை காக்கமுடியும்.அதை செய்வாயா?என்று கண்ணீருடன் கேட்கிறான். அந்த வயலினிஸ்ட் தலையசைக்கிறான்.  அந்த நல்ல ஜெர்மானியனை இழுத்து கும்பலுக்குள் அமர்த்துகிறார்கள் செம்படையினர்.  

காட்சி மாறி;- அதே வார்சா வானொலி நிலையம் புதுப்பிக்கப்பட்டிருக்க அங்கே உள்ள பியானோ முன் ஷ்பில்மான் அமர்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம் . சோபின்[chopin] எழுதிய இசைக்கோர்வையான க்ராண்ட் போலனைஸ் ப்ரில்லாண்டே[Grand Polonaise brillante in E flat major] என்னும் E-ஃப்ளாட் மேஜரை வாசிக்கிறான்.அவனின்  விரல்கள் வழியாக இசை கசிந்துகொண்டிருக்க தன் தாயை, தந்தையை, சகோதரர்களை, உயிரைக்காத்துக்கொள்ள ஓடிய ஓட்டத்தை கொல்லப்பட்ட தனது யூத இன மக்களை நினைத்து உருகுகிறான். கண்ணீர் பிரவாகமெடுக்கிறது, பெருமூச்சு விடுகிறான் ஷ்பில்மான். அங்கே மௌனமாக அமர்ந்திருந்த மக்கள், அவன் வாசித்து முடித்ததும் ஆரவாரம் செய்கின்றனர்.அதில் அந்த வயலின் இசைக்கலைஞனையும் நாம் பார்க்கிறோம்.

ப்போது திரையில் ஷ்பில்மான் அதன் பின் தொடர்ச்சியாக போலந்து நாட்டின் வார்சாவில் வாழ்ந்து 2000 வருடம்  உயிர் நீத்தார் என்னும் வாசகத்தை நாம் பார்க்கிறோம். சொல்லாத செய்தி ஒன்று, வில்ம் ஹோசன்ஃபீல்ட் என்னும் கருணையுள்ளம் கொண்ட நாஜி ராணுவ அதிகாரி ஷ்பில்மானுடன் சேர்த்து நிறைய போலிஷ்களுக்கும்,யூதர்களுக்கும்  அடைக்கலம் கொடுத்தார். அவர் செம்படையினரிடம் போர்க்கைதியாக பிடிபட்டவர் 1952ஆம் வருடம் சிறைக்காவலிலேயே இறந்தும் போயிருக்கிறார். அவரை நல்லவர் என்று அடையாளம் கண்டு 2009ஆம் ஆண்டு  Posthumous recognition என்னும் உயரிய விருதையும் அளித்து கௌரவிக்கப்பட்டாராம்.

ப்படத்தின் சிறப்பம்சங்களைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் ஷிண்ட்லர் லிஸ்ட் படத்தை விடவும் பலமடங்கு மேம்பட்ட தொழில் நுட்பமும் யதார்த்தமும் மிளிரும் வண்ணப்படம் இது, ஏட்ரியன் ப்ரூடி, தாமஸ் கெரெட்ஸ்ஹ்மேன்,ஃப்ரான்க் ஃபிலேய் ,எமிலியா ஃபாக்ஸ் என அனைவருமே மிகச்சிறந்த  நடிகர்கள், அவர்கள் நடிப்புக்கு நிகராக யாருடன் ஒப்பிடுவது?!!! 

தை எழுதுவதற்கு ஒரு பதிவு போதாது. ரோமன் பொலன்ஸ்கியின் அற்பணிக்கப்பட்ட இயக்கமும், ரோனால்ட் ஹார்ட்வுட்டின் நேர்த்தியான திரைக்கதையும், வோஜ்சியேச் கிளாரின் ஒப்பற்ற இசையும்,ஃப்ரெட்ரிக் சோப்பின் என்னும் இசை மேதையின் இசைக்கோர்வையும், பாவெல் இடெல்மானின் அபாரமான யதார்த்தமான ஒளிப்பதிவும், ஹெர்வி டெ லூஸின் தொய்வில்லாத எடிட்டிங்கும். உங்களை காலாகாலத்துக்கும் வசப்படுத்தி கட்டிப் போட்டே விடும். எத்தனையோ யூத இனப்படுகொலை, இனவதை முகாம் பற்றிய திரைப்படங்களைப் நாம் பார்த்தாலும் இப்படத்துக்கு எதனுடனும் ஒப்பிடமுடியாத ஒரு தனித்துவம் உண்டு.இவ்வளவு சிதிலங்களை தத்ரூபமாக காட்டப்பட்டதேயில்லை என்பேன். நீங்கள் திரைப்படம் பார்க்க உட்கார்ந்திருக்கிறீர்கள் என்பதையே,  இப்படம் மறக்கடித்து விடும். ஷ்பில்மானின் இடத்தில் நம்மை வைத்துப் பார்க்க செய்யும் நேர்த்தியான இயக்கம். இவ்வளவு தாக்கத்துடன் கூடிய ஒரு படத்தை படைத்த பின்னரும் இதுவரை என்னை முழுமையாகத் திருப்திப்படுத்திய ஒரு படத்தை நான்  எடுக்கவேயில்லை என்று தன்னடக்கத்துடன் பேசுகிறார் ரோமன் பொலன்ஸ்கி.
====0000=====
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:- 
Directed by Roman Polanski
Produced by Roman Polanski
Robert Benmussa
Alain Sarde
Gene Gutowski
(Co-Producer)
Written by Ronald Harwood
Władysław Szpilman
(Book)
Starring Adrien Brody
Thomas Kretschmann
Frank Finlay
Maureen Lipman
Emilia Fox
Michał Żebrowski
Music by Wojciech Kilar
Frederic Chopin
Cinematography Paweł Edelman
Editing by Hervé de Luze
Distributed by Focus Features
Release date(s) 24 May 2002 (2002-05-24) (Cannes)
6 September 2002 (2002-09-06) (Poland)
6 March 2003 (2003-03-06) (United Kingdom)
Running time 150 minutes
Language English, German
Budget US$35 million
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)