ப்ராஞ்சியெட்டன்&த செயிண்ட்[ Pranchiyettan & the Saint] [ இந்தியா] [ மலையாளம்][2010]

நான் வியந்திருக்கிறேன்,மலையாளத்தில் மட்டும் எப்படி? , உச்ச நடிகர்களான மம்மூட்டியும், மோகன்லாலும், ஏனைய பல நடிகர்களும் ஓய்வே இல்லாமல் வேலை செய்கிறார்கள் என்று !!! உதாரணத்துக்கு 2010ல் மம்மூட்டி நடித்து வெளியான படங்கள்= 6, மோகன் லால் நடித்து வெளியான படங்கள்=3  . நம்மூரில் உச்ச நடிகர்கள், இளம் நடிகர்கள் பேதமில்லாமல் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள்  தான் செய்கின்றனர், இயக்குனர்கள் சொல்லவே வேண்டாம்.  அதுவும் பலசமயம் விளக்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது போன்ற படைப்புகளை தந்து விட்டு, என்னவோ கார்கில் போருக்கே சென்று வந்தது போல சினிமா ஷூட்டிங் முடிந்தபின்னர் அடிக்கும் ஓய்வுக்கொட்டம் இருக்கிறதே?!!!  மலையாள நடிகர்களைப் பார்த்து தேனியின் சுறுசுறுப்பு என்றால் என்ன என்பதை இவ்விஷயத்தில் ஒருவர் கற்றுக் கொள்ளலாம்.அதனால் தான் அங்கே வெறும் இரண்டே கோடி ரூபாயில் படைப்புகள் சாத்தியாமாகிறது.

சென்ற வாரம் மம்மூட்டியின் ப்ராஞ்சியெட்டன்&த செயிண்ட் பார்த்தேன்.  இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படி ஒரு தரமான திரைப்படத்தை  ரஞ்சித் எப்படி இயக்க முடிந்தது? என்று மிகவும் ஆச்சர்யமும் பொறாமையும் எழுந்தது.திரைவிழாக்களுக்கு கூட விண்ணப்பிக்க தகுதியுள்ள படம்.  நம்மூரில் எப்போது இதுபோல நல்ல திரைப்படங்கள் குறைந்த பொருட்செலவில் வரும் ?!!! என்று ஏங்க வைக்கிறது. அருமையான, புதுமையான கதை இது,  ஒரு திரைப்படங்களின் கதையை இயக்குனர் யோசிக்க ஹவாய் தீவுக்குப் போய் அறை எடுக்க வேண்டிய அவசியமேயில்லை. நாம் வாழும் சூழலிலேயே ஆயிரமாயிரம் கதைகள் உண்டு என நிரூபித்த படம். அதை நகைச்சுவையாகவும் சமூக சிந்தனையுடனும் சொன்ன ரஞ்சித் மிகவும் பாராட்டுக்குரியவர்.

படத்தின்  கதை:-
அரிப்ராஞ்சி  என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அரிசிக்கடை ஃப்ரான்ஸிஸ் தனக்கு வாழ்வில் பெரிய அளவில் பொருட்செல்வங்கள் கிடைத்தும் ஏனைய முக்கிய செல்வங்களான கல்வி, நல்ல மனைவி, மக்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்றிருக்கும் மனிதர். இவர் வாழ்வில் எடுத்த ஒரு அற்புதமான , இன்றியமையாத முடிவு, இறந்து போன அவரின் சொந்த பந்தங்களை, இயேசுவின் சீடரில் ஒருவரான ஃப்ரான்ஸிஸையே இவர் கண்முன்னே தோன்ற வைக்கிறது. உலகில் யாருக்குமே கிடைக்காத பெரிய செல்வம் இறை  தரிசனம். அது கிடைக்க அவர் அப்படி என்ன தான் சாதித்தார்?!!!

ப்ராஞ்சியெட்டனை சுற்றி அவர் தரும் காசுக்காகவும், அவர் தரும் உணவு, குடிக்காக எப்போதும் ஒரு காக்காய் பிடிக்கும் கூட்டத்தை நாம் பார்க்கிறோம். சமூக அந்தஸ்து வேண்டி அவர் தன் நண்பன் ஜோசுக்கு எதிராக கிளப் ப்ரெசிடெண்ட் பதவிக்கு போட்டியிட்டு மண்ணைக் கவ்வுகிறார். இளம் வயதில் தன் சக மாணவி ஓமனாவை அவன் இவரைப்பற்றி நிறைய போட்டுக்கொடுத்து  வெறுப்பை உண்டு பண்ணி தட்டிச் சென்ற அவமானமே இன்னும் இவரால் தாங்க முடியவில்லை. இனி எந்த பதவியும் வேண்டாமென்றாலும் அல்லக்கைகள் விடுவார்களா?

ப்ராஞ்சியெட்டன் இதுவரை நான்கு இதய அறுவை சிகிச்சைக்கு பண உதவியளித்திருக்கிறார்.அதை இவரே வாய்விட்டு வெளியே சொன்னாலும் கூட அது வெளியே யாருக்கும் தெரியாமல் போகிறது,அது தான் நேரம்.ஆனால் அது இறைவன் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இது புரியாமல் ப்ராஞ்சியேட்டன் சமூகத்தில் விரைந்து புகழ்பெற, கலை நிகழ்ச்சிகளுக்கு, அரசியல் கூட்டங்களுக்கு நிறைய பணம் நன்கொடையாக தந்தால் விழா தலைமை கிட்டும் என்று அல்லக்கைகள் சொல்ல , அதே போல பணம் தருகிறார் ப்ராஞ்சி. இருந்தும் விழா மேடையில் இவர் அமர்ந்திருந்த நாற்காலி படிப்படியாக பறிக்கப்பட்டு இவர் கடைசியாய் சென்று அமர , அதுவும்  ஒரு பத்மஸ்ரீ பட்டம் வாங்கிய எழுத்தாளருக்கு பறித்து தரப்படுகிறது, மிகவும் நொந்து போனவர் இவரின் அல்லக்கைகளால் மீண்டும் உசுப்பேற்றப்பட்டு இப்போது பத்மஸ்ரீ பட்டத்துக்கு ஆசை காட்டப்படுகிறார். அவர் கலைமாமணி விருது வாங்க ஆசைப்படிருந்தாலும் தமிழ் நாட்டின்  நகைப்புக்குரிய அவ்விருதை பத்தோடு பதினொன்றாக  கருணாநிதியின் கையாலேயே வாங்கியிருக்க முடியும்.ஆனால் பத்மஸ்ரீ என்றால் சும்மாவா?!!!

த்மஸ்ரீ பட்டத்துக்கு,முதல் கட்டமாக ஒரு கதாசிரியனிடம்  சென்று ஒருலட்சம் ரூபாய் தந்து இவரைப்பற்றிய போலி ப்ரொஃபைல் ஒன்றை தயாரிக்கின்றனர், டெல்லியில் நல்ல அந்தஸ்துள்ள ஒரு அரசியல் தரகனைப் பிடித்து, ஒன்றரை கோடிரூபாய் கொடுத்து அவன் பத்மஸ்ரீ வாங்கித்தருவான் என்று நம்பியவர் கடைசியில் எமாந்தும் போகிறார். பதமஸ்ரீ பட்டம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் இவர் செய்யும் அட்டகாசங்கள் ஏராளம். பார்வையாளருக்கு நிச்சயம் சந்தனம் மிஞ்சினால் ***யில் என்னும் பழமொழி நினைவுக்கு வருமளவுக்கு அட்டகாசம் செய்கிறார். அவ்விருது கிடைக்காமல் போக மிகவும் நொந்து போகிறார் ப்ராஞ்சியேட்டன்.அவரின் அல்லக்கை மேனன் மனம் தளாறாமல் இவரை செவாலியே விருதுக்கு விண்ணப்பிக்க ஆலோசனை சொல்லி உசுப்பேத்தி அடிவாங்கும் இடமெல்லாம், மிகவும் கலக்கல்.

வருடனே தங்கியிருக்கும் ஒரு சமையல்காரர்[என்னபெயர்] செம வேடம். சதா ப்ராஞ்சியேட்டனைச் சுற்றி ஆட்கள் ஈமொய்பது போல இருக்க.அங்கே எதிர்ப்பட்டு, யாரெல்லாம் சாப்பிடப்போறா?இன்று யாருக்கெல்லாம் இங்க சாப்பாடு? இன்று யாருக்கெல்லாம் அரிசி உலையில் போடனும் என்று மாற்றி மாற்றிக் கேட்டு சிரிக்க வைக்கிறார். என்கடன் வடித்துக்கொட்டுவதே என்றிருக்கும் நிறைய உஸ்தாத்களை நான் பார்த்திருக்கிறேன், எனக்கு குபுக்கென்று சிரிப்பு வந்து விட்டது. இயக்குனர் ஓமனா [குஷ்பு] & ஜோஸ் [சித்திக்] கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தில் பெரிய மனிதர்கள் போர்வையில் ஆதர்ச தம்பதிகளாக தோற்றமளிக்கும் பொய்யான மனிதர்களின்,அவர்களின் கள்ளக் காதல்களையும் நன்றாகக் கிழித்திருக்கிறார்.

ந்தேகச்சாவுகள் எப்படி சமூகத்தில் நிகழ்கின்றன?!!! நல்ல மனைவியர் கூட   சந்தேக புத்தி கொண்ட குடிகாரக் கணவனால்    கொலையுறுகின்றனரே?அது ஏன்?. ஆத்திரப்பட்டு கொலைகாரனான கணவன் அதன் பின்னர் படும் பாடு, அதன் பின்னர் அக்குடும்பத்தில் உள்ள குழந்தைகள் படும் பாடு. அதை மிகத் தெளிவாக அலசியிருக்கிறார் இயக்குனர் .படத்தில் பாலி [paulie] என்னும் 15 வயது சிறுவன் பாத்திரம், அவனது பெற்றோர் பாத்திரம் யாராலும் மறக்கவே முடியாது. பாலிக்கு ட்யூஷன் வாத்தியாராக வரும் ஜெகதி ஸ்ரீகுமார் செம ரகளை. அதே போல இண்டீரியர் டிசைனராக வந்த பிரியாமணியின் வேடம் மிகவும் அழகு.யதார்த்தம். ஒன்று ஒருவனுக்கு மறுக்கப்படுகின்றதென்றால் அவனுக்கு அதைவிட உயர்ந்த மற்றொன்று கிடைக்கப்போகிறது என்னும் விதி உண்டு, அதை உணர்த்தும் கதாபாத்திரம். சினிமாவிலேயே முதல் முறையாக ஒரு நடிகை முதுகில் எத்தப்பட்டு விழுந்திருப்பார் என்றால் அது ப்ரியாமணியாக தான் இருக்கும். செம காமெடி அந்த இடம்.

பெற்றால் தான் பிள்ளையா?!!! என்னும் சமூக சீர்திருத்தம் கூட நன்கு அலசப்பட்டிருக்கின்றது, 118கோடி பேர் வசிக்கும் நம் சமூகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் எத்தனையோ பேர் அடிப்படை வசதியற்று வாழ்கின்றனர், அவர்களின் நல்ல படிப்புக்கும் எதிர்காலத்துக்கும் வசதி செய்து தர சமூகத்தில் உள்ள பணக்காரர்கள் மனது வைத்தால் நிச்சயம் முடியும் என்பதை  போகிற போக்கில் பதிந்திருக்கிறார். சினிமா என்பது மிகவும் சக்தி வாய்ந்த மீடியம். இதை வைத்து ஒருவனை முட்டாள் ஆக்கவும் முடியும். அதே முட்டாளை குணப்படுத்தவும் முடியும் என்பதை சொன்ன படம். வெகு நாட்களுக்கு பின்னர் நகைச்சுவையுடன் கூடிய சமூக சிந்தனைப்படம் பார்த்த திருப்தி கிட்டியது .


டத்தில் ப்ராஞ்சியேட்டன் மேடையேறுகையில், அவரின் மன உறுதியை குலைக்க அவரின் டாக்டர்-விரோதக்கார நண்பன் ஜோஸ், ஆமாம் நீ அந்த மாட்டுக்கொட்டகையில் வேலை செய்தவளின்  மார்பை  பிடித்து அழுத்தினாய் தானே?!!! அது இடதா அல்லது வலதா? என்கிறார். ப்ராஞ்சியேட்டன் திருதிருவென விழிக்க, அட இருப்பதே இரண்டு தானே? அதிலென்ன குழப்பம் என்று கேலிசெய்து விட்டு இறங்கிச்செல்கிறார். இது தான் சேட்டன்  குசும்பு போலும். இலை மறைவு காய்மறைவாக இருக்கவேண்டியவற்றை இப்படி சமூக சிந்தனையுடன் கூடிய நகைச்சுவைப்படத்தில் ஒரு ஆபாச வசனமாக வைக்கும் சின்ன புத்தி தேவையா ?!! எனப்பட்டது. என்ன தான் கேரளம் , இலக்கியங்களை வாசித்து தேர்ந்த ஒரு சமூகம்  என்றாலும் இப்படியா?!!!

டத்தின் இசையும் பாடலும்,ஒளிப்பதிவும் சராசரிதான் என்றாலும்.நடிப்பும் நகைச்சுவையும் சரிகட்டுகிறது.  படம் சொன்ன செய்திக்காகவே பார்க்கலாம். தாராளமாக இதை முறையாக உரிமை வாங்கி தமிழில் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கலாம். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். அப்படிப்பட்ட கதை.  ஆனால் தமிழில் எடுக்கையில் இக்கதையை உயிரோட்டத்தை குலைத்து ஹீரோவுக்காக மாற்றி அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்துவிடும். அதையும் யோசிக்கவேண்டும். சரிதானே நண்பர்களே!!!?
 ====0000====
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
====0000====
திரைப்படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கீபீடியாவிலிருந்து:-
Directed by Ranjith
Produced by Ranjith
Written by Ranjith
Starring Mammootty
Priyamani
Jesse Fox Allen
Innocent
Master Ganapathy
Siddique
Khushboo
Jagathy Sreekumar
Sasi Kalinga
Music by Ouseppachan
Cinematography Venu
Editing by Vijay Shankar
Studio Play House
Distributed by Play House Release
Release date(s) September 10, 2010 (2010-09-10)[1]
Country India
Language Malayalam
Budget Indian Rupee ₹1.9 crore (US$421,800)[2]
Gross revenue Indian Rupee ₹5.5 crore (US$1.22 million) in 80 days [3]