சம்சாரா[Samsara ] [ 2001] [18+]

எது மிக  முக்கியம்?!!! ஆயிரம்   ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதா?     அல்லது ஒரே ஒரு ஆசையையேனும் வெல்வதா?!!!
What is more Important?:Satisfying One Thousand Desires or Conquering Just One!!!
 
இயக்குனர் பான் நலின்
ந்திய  பேரலல் சினிமாவின் நம்பிக்கை ஒளி இயக்குநர் பான் நளின்.இவர் ஒரு கலைசினிமா ஆட்டியரும் ஆவார். குஜாராத்தைச் பூர்வீகமாகக் கொண்டவர். M.S யுனிவர்சிட்டி ஆஃப் பரோடாவில் ஃபைன் ஆர்ட்ஸ் மாணவராவார். இவரது தந்தை சாதாரண டீக்கடை முதலாளி. பான் நளின் பாரதத்தின் பண்பட்ட கலாச்சாரத்தில் தான் தன்னுடைய படத்துக்கான கதையை தேடுகிறார். அவ்வாறு உந்தப்பட்ட அயராத திரைப்படக்  காதலால் பல விதமான மனிதர்களை, சமூகங்களை அவர்களின் வாழ்க்கை நெறிகளை நேரில் காண  இந்தியா முழுவதும் தொடர்ச்சியான சுற்று பயணம் செய்து கரை கண்டவர் . இவரது எல்லா படைப்புகளுக்கான கதைக்கருவும் இவரது சுற்றுப் பயணத்திலிருந்தே  பிறந்ததாகக் குறிப்பிடுகிறார்.  இருபதுக்கும் மேற்பட்ட பேரலல் குறும்படங்களை இயக்கியுள்ள பான் நளினின் முதல் திரைப்படம் சம்சாரா. இது  இந்திய, இத்தாலிய,ஃப்ரெஞ்சு,ஜெர்மானிய கூட்டு தயாரிப்பில் உருவான படமாகும். தன் முதற்படியையே வெற்றிப்படியாக எடுத்துவைத்த பான் நளின். இவரது வேல்லி ஆஃப் ஃப்ளவர்ஸ், ஆயுர்வேதா:ஆர்ட் ஆஃப் லிவிங் போன்றவை குறிப்பிடவேண்டிய படைப்புகளாகும்.இவரின் அடுத்த படம் Buddha: The Inner Warrior  உலகெங்கிலும் உள்ள பேரலல் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. பான் நளின் 2006ஆம் வருடம் உலக சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வுக்கு தரப்படும் ஸ்பெயின் நாட்டின் Vida Sana  என்னும்    உயரிய விருதைப்பெற்றுள்ளார்.இப்படம் 100கோடிரூபாய் வரை வசூலிலும் சாதனை செய்துள்ளது.இப்படத்தில் தாஷியாக நடித்த ஷாவ்ன் கு [Shawn Ku ]ஒரு அமெரிக்காவாழ் சீனர். பேமாவாக வந்த க்ரிஸ்டி சங்[Christy Chung] ஒரு சீனர்.சுஜாதாவாக வந்த நீலேஷா பவொரா [Neelesha BaVora]ஒரு ஜெர்மானியர் ஆவார்.மொத்தத்தில் இது ஒரு இந்திய இயக்குனரால் உருவாக்கப்பட்ட தேசாபிமானமில்லாத ஒப்பற்ற படைப்பாகும்.

படத்தின் கதை:-

மயமலை அடிவாரத்தில் ஓங்குதாங்கான லடாக் என்னும் பனிபோர்த்திய மலைப்பிரதேசத்தில் துவங்குகிறது படம், இப்படி ஒரு பிரம்மாண்டத்தை வெகுஜன சினிமாவில் நாம் பார்ப்பது துர்லபம். அங்கே ஓர் ஏரிக்கு அருகே ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க, ஒற்றையடிப்பாதையில் புத்த பிக்குகள் அணிவகுத்து ஒரு குகையை நோக்கி நடக்கின்றனர். மேலே ஒரு மலைப்பருந்து தன் இரைக்கு வேண்டி ஒரு பெரிய காறாங்கல்லை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து அங்கே மேய்ந்து கொண்டிருக்கும் செம்மரி ஆட்டின் மண்டையின் மீது போடுகிறது. அதற்கு புத்தபிக்குகள் சிகிச்சையளித்தும் பலனின்றி இறந்துவிட அதற்கு முக்தியளிக்கின்றனர் ,அவர்கள் மீண்டும் குகையை நோக்கி செல்கின்றனர். குகையை திறக்க வேதங்கள் ஓதுகின்றனர். அக்குகைக்குள் மூன்று வருடம் மூன்று மாதம் மூன்று நாட்களாக  நீர்,உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் கடும் தவம் புரியும் தாஷியை[ Shawn Ku] நாம் கண்ணுறுகிறோம். இப்படிக்கூட ஒருவர் தவமிருக்க முடியுமா? என ஐயுற வைக்கும் தவம் அது.

வனின் தவத்தை சிறப்பு பூஜைகள் செய்தும் வெங்கல பாத்திரத்தை உரசி சப்தம் செய்தும்  கலையச் செய்கின்றனர். அவனுடைய ஆழந்த மயக்கத்திலேயே   கண்கள் கருப்புத்துணியால் கட்டப்பட்டும் ,வெளியே கொணரப்பட்டு குதிரையில் ஏற்றியபின், ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்ட தாஷிக்கு, அங்கே வைத்து அரை மயக்கத்திலேயே சிகை மழிக்கப்படுவதையும் ஒரு  அங்குலத்துக்கும் பெரியதாய் வளர்ந்திருந்த  நகங்கள் வெட்டப்படுவதையும் பார்க்கிறோம், பின்னர் அவன் குளிப்பாட்டப்பட்டு, புதிய காவி உடை அணிவிக்கப்படுகிறான். இன்னும் அவனுக்கு மயக்கம் தெளியவில்லை. அவனுக்கு மருந்தளித்து குதிரை மீது ஏற்றி தங்கள் மடாலயத்துக்கு கொண்டு செல்லப்படுகிறான் தாஷி. மடாலயத்தை நெருங்குகையில் அங்கே அடுக்கியிருந்த கற்களில் ஒன்றின் மேலே திபெத்திய மொழியில் "how can you stop a drop of water from disappearing?"ஒரு நீர்துளி ஆவியாகாமல் எப்படி காப்பாய்? என்று எழுதியிருப்பதை அரைமயக்கத்தில் கண்ணுறுகிறான் தாஷி. மடாலயம் சென்றவனுக்கு மிகுந்த உற்சாகத்துடன் அங்கே உள்ள பெரிய புத்த பிக்குகளும்,சக, மற்றும் குழந்தை புத்தபிக்குகளும் மரியாதையும் அன்பும் செய்கின்றனர்.அவன் 20வருட சன்யாசமும் மூன்று வருட கடும்தவமும் இயற்றியதால் தலைமை லாமா மூலம் நிர்வாண நிலையை கடந்தான் என்று பாராட்டி கென்போ[khenpo] பட்டமும் வழங்கப்படுகிறது.

தாஷி தனது ஐந்தாவது வயதிலிருந்து துறவற வாழ்வில் ஈடுபட்டு வருகின்றான். மூன்று வருட கடும் தவத்தை முடித்துக் கொண்டு மீண்டும் மடாலயத்திற்குத் திரும்பிய அவன் வாழ்வில்,எதிர்கால வாழ்வைப் பற்றிய பல கேள்விகள் எழத் தொடங்குகின்றன. தன்பால் உண்டாகும் பாலியல் வேட்கைகள் உயரக்கிளம்பி அவனைக் குழப்பத்திற்குள்ளாக்குகிறது. இரவு படுக்கையிலேயே இந்திரியம் வெளியேறியும் விடுகிறது. இதை யாரும் பார்த்துவிடக்கூடாதே!!! என அஞ்சுகிறான் தாஷி. வெளியே  யாருக்கும் தன் மாற்றத்தை சொல்லாமல் மருகுகிறான்  , கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதைப் போல துறவறமா?!!!  சம்சாரமா?!!! எனப்புழுங்கித் தவிக்கிறான்  தாஷி  .  இதைக் கண்டு வேதனையுற்ற தலைமை புத்த பிக்கு தாஷியை தன்னுடன் உழவுத் திருவிழாவுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே பிடிக்கிறது அவனுக்கு  காதல் பித்து!!!!

ங்கே அந்த வசதியான குடியானவன் வீட்டில் வைத்து அழகிய பெண்ணான பேமாவை [Christy Chung]கண்ணுறுகிறான் தாஷி. அதன் பின்னர் அவளின் நினைவலைகளால் வாட்டி எடுக்கப்படுகிறான். விரக தாபத்தை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கிறான். வெளியுலகை நோக்கி அவன் தேடல் அதிகரிக்கின்ற போது, தினமும் இரவில் இந்திரியம் வெளியேறுகின்றது. மனதை அடக்க ஒருவழியும்  தோன்றவில்லை. இப்போது நண்பன் கண்ணீருடன் குருவிடம் அதைப்பகிர, அவனை அழைக்கும் தலைமை புத்த பிக்கு அவனிடம் ஒரு வரைபடத்தை தந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு மலைக்குகையில் வசிக்கும் ஒரு வயது முதிர்ந்த புத்த பிக்குவைப்பார்த்து வர அனுப்பி வைக்கிறார். அங்கே சென்று நீ காணும் சம்சாரக்கனவு நிஜமா? என தெளிவுபடுத்திக்கொண்டு வா என்கிறார். அங்கு  குதிரையில் தன் செல்ல நாய் காலாவுடன் சென்றவனை உபசரித்த அந்த முதிய புத்த பிக்கு இதற்கென்றே நிபுனத்துவம் பெற்றவர் போலும்.தாஷிக்கு பலவிதமான நிலைகளின் ஆண் பெண் கூடல்  காட்சிகள் வரையப்பட்ட தொனமையான காகித முப்பரிமான ஓவியங்களை விளக்கு வெளிச்சத்தில் காட்டுகிறார். அதை உற்று நோக்க , அவர் ஓவியத்தை சாய்க்கிறார்.  இப்போது ஆணின் இடத்தில் எலும்புக்கூடு தோன்றுகிறது, பின்னர் ஒரு திபெத்திய மொழியில் எழுதப்பட்ட அரிச்சுவடியை படிக்க கொடுக்கிறார். ஆனால் அவர் எதுவுமே பேசவில்லை. "everything you contact is a place to practice  the way" என்னும் கடைசி குறிப்பை பிரித்து காட்டுகிறார். அவனாக என்ன புரிந்து கொள்கிறானோ புரிந்து கொள்ளட்டும் என்று அவன் போக்கிலேயே விட்டுவிடுகிறார்.


ங்கிருந்து வெளியேறிய தாஷி மடத்துக்கு திரும்புகிறான்.குருவிடம் தன்னால் இனிமேலும் துறவறத்தை தாங்க இயலாது,தான் கண்ட சம்சாரக் கனவு நிஜம் என்கிறான். அவரிடம் மன்றாடிவிட்டு,  மடத்தை விட்டு தன் குதிரையில் வெளியேறுகிறான். கூடவே நாயும் வருகிறது. ஆற்றில் குளித்துவிட்டு தன் காவி உடைகளை களைகிறான். அவன் எப்போது காவியை களைந்துவிட்டு ஒரு சம்சாரியைப்போல உடையணிந்தானோ? அப்போதே அவனது செல்ல நாய் காலா அவனை விரோதமாகப் பார்க்கிறது, தாஷி எவ்வளவோ அழைத்தும் அது கேளாமல் மடத்துக்கே ஓடிவிடுகிறது. தான் பூஜைக்கு சென்ற மலைகிராமத்திற்கே மீண்டும் சென்றவன். பேமாவின் தந்தையிடமே வயல் வேலைக்குச் சேருகிறான். பேமா தன் அபாரமான அழகால் தாஷியை கனவுகளில் வந்து தொடர்ந்து துன்புறுத்துகிறாள். அவளை விரைந்து அடையத்துடிக்கிறான் தாஷி. வயல் வேலைகளில் கிடைக்கும் ஓய்வை பயன்படுத்தி அவளிடம் தன் காதலைச் சொல்லுகிறான் தாஷி. ஆனால் பேமாவுக்கோ தன் முறை மாப்பிள்ளையான கல்தச்சன் ஜமா யங்குடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருந்தும் ஒரு மதியவேளையில் தாஷியும் பேமாவும் தங்கள் உடல்களின் இச்சைக்கேற்ப ஓருடலாகிவிடுகின்றனர். கூடாக்காமம் கூடிச் சுவைக்கின்றனர். மிக அற்புதமான காட்சியாக்கம் அது. தலைவன் தலைவி காமத்தை சங்க இலக்கியங்கள் கூட இதுபோலசித்தரித்திருக்குமா?!!! என எண்ணும்படியான முயங்குதல் காட்சியது.

ந்த காட்சியில் பார்வையாளருக்கு பான் நலினின் மீதும் ஒளிப்பதிவாளர் க்ரிஸ்டோ பகலொவ் மீதும் [Christo Bakalov] எடிட்டர் இசபெல் மெய்யர் [Isabel Meier] மீதும்,இசையமைப்பாளர் சிரில் மோர்னின் மீதும் [Cyril Mornin]  மிகுந்த மரியாதை வந்திருக்கும். அப்படியோர் அதிஅற்புதமான காட்சியாக்கம்.  படத்தின் வசனங்களை எண்ணிவிடலாம். படத்தில் நமக்கு நீங்காத பரவசநிலையை அளிப்பது சிரில் மோர்னினின் இசை. இது பல்கேரிய சிம்பொனி இசைக்கலைஞர்களைக்கொண்டு எழுதியது எனப்படித்தேன். இவர்கள் முயங்கிக்கூடுகையில் வானம் பூமியே  இடம்மாறுகிறது போன்ற தோரணையை அவர்களுக்கு கொடுப்பதான காட்சியது.

ரவே பேமா  தாயிடம் கையும் களவுமாக பிடிபட்டு,முகத்தில் கருப்பு மசி பூசப்படுகிறாள். தாஷி பேமாவின் அப்பாவின் துணைகொண்டு முறை மாப்பிள்ளை ஜமா யங்கால் பலமாக தலையில் தாக்கப்படுகிறான். இப்போது தான் அடிபட்டது அறுவடை திருவிழா பூஜைக்கு வந்த  புத்தபிக்கு என உணர்கிறார் பேமாவின் தந்தை, தாஷியிடம் மன்னிப்பும் கேட்டு வீட்டுக்குள் அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறார். ஜோதிடர் வரவழைக்கப்பட்டு தாஷி,  ஜமா யங்  மற்றும் பேமாவின்  ஜாதகம் ஆராய்ந்து யாருடன் அதிக மணப்பொருத்தம் யோககாலம் உள்ளது? என  பணிக்கப்படுகின்றது. ஜோதிடரோ ஜமா யங் தன்னிடம் தாஷிக்கும் பேமாவுக்குமான திருமணத்தேதியல்லவா? கேட்டான்? என்று கேட்டு குடும்பத்தார் எல்லோருக்கும் பெருமகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறார். அன்று அவர் உண்மையாக ஆராயாமல் சொன்ன திருமணத்தேதி இப்படி ஒரு சிக்கலை உண்டு பண்ணும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் தான். 

பின் வரும் காலங்களில் பேமாவும் தாஷியும் சதா இல்லற இன்பத்தில் கூடிக்களித்திருக்கின்றனர். அதன் பயனாக  அழகிய ஆண் மகவொன்றிற்குத் தந்தையாகிறான் தாஷி, கடும் தவமியற்றிய தாஷி தன் மாமனார் பரம்பரை பரம்பரையாக விவசாய விளைபொருட்களை விற்றுவரும் தாவா எடைபோடும் தராசில் செய்த தில்லுமுல்லுகளை கண்டுபிடித்து ஊராரிடமே காட்டிக் கொடுக்கிறான். இனி தாவாவுக்கு பார்லி தானியம் தரவேமாட்டேன் என்கிறான். இப்போது விவசாயத்திலும்,அறுவடை செய்த பொருட்களை ஜம்முவின் அயலூர் சந்தைக்கு லாரி பிடித்துச் சென்று நல்ல விலைக்கு விற்கும் தந்திரத்தையும் பழகுகிறான்.

விரைவில்  நிலச்சுவான்தாரனுமாகிறான். வீட்டுக்கு, மனைவி, மகனுக்கு என்று விலையுயர்ந்த பொருகளை பார்த்துப் பார்த்து சேமிக்கிறான் தாஷி.  மாமிசமும்  தினம் உட்கொள்ள தொடங்கி விட்டான். ஒரு சமயம் இது போல வெளிச்சந்தையில் சென்று விளை பொருட்களை விற்றுவிட்டு வருகையில் தாவாவினால் மிரட்டப்பட்டு சபிக்கப்படுகிறான் தாஷி.  நாட்கள் செல்கிறது இப்போது தாஷியின் கவனம் தன் நிலத்தில் விவசாயக்கூலி வேலை செய்யும் கவர்ச்சிகரமாக பெண்ணான சுஜாதாவின்[Neelesha BaVora] மீது  திரும்ப, அவளின் கடைக்கண் பார்வைக்காக ஏங்குகிறான், அவளோ இவன் எள் என்றால் எண்ணெயாய் நிற்கிறாள்,  அவளைக் கலக்க தக்க தருணம் பார்க்கிறான் தாஷி..

ரு நாள் இரவு தாஷி மனைவியுடன் முயங்கி கூட எத்தனித்து தயாராகையில், வெளியே அவனது விளைந்த நிலம் தீக்கிரையாக்கப்படுகிறது, முக்கால் வாசி பயிர்கள் எரிந்துவிட்ட நிலையில். தாஷிக்கு முதன் முறையாக ஆத்திரம் தலைக்கேறி, அவன் புத்தியையும் மழுங்கடிக்கிறது.கோபமாக வியாபாரி தாவாவின் கடைக்கு சென்றவன். அங்கே தாவாவின் ஆட்களோடு கைகலப்பில் இறங்குகிறான். தாவாவின் மகனைக் கூட ஈவு இறக்கமின்றி ஒரு கொக்கியில் தூக்கி மாட்டுமளவுக்கு   பணத்தாசை அவனை பிடித்துஆட்டிக்கொண்டிருக்க, தாவா சுதாரித்துக் கொள்கிறான், தாவா மற்றும் அவன் அல்லக்கைகளால் நன்றாக அடித்து விரட்டப்படுகிறான் தாஷி. அவனை அங்கே தக்க நேரத்துக்கு பேமாவும்,அவள் தந்தையும் சென்று காப்பாற்றி கூட்டி வருகின்றனர்.

தன் பின்னர் அவ்வருடம் , தீக்கிரையாகாமல் காப்பாற்றப்பட்ட அறுவடையை பேமாவும் , மகனும் தனியே குதிரைகளின் மீது ஏற்றிக் கொண்டு விற்க கிளம்ப, அவளுக்கு கட்டுச் சோறும் ஜெபமாலையும் தந்து அனுப்புகிறான் தாஷி.  சிறிது நேரத்தில் சுஜாதா[Neelesha BaVora] அங்கே வருகிறாள்.தன் திருமணத்துக்கு பேமாவிடம் கூலிக்காசு சேர்த்து வைத்துள்ளதையும், பேமா அதை வீட்டில் சென்று வாங்கிக் கொள்ளச் சொன்னதையும் சொல்கிறாள். தாஷி நீண்ட நாளாக சிக்காமல் இருந்த இரையை லாவகமாக வலைவீசிப் பிடிக்கிறான். விதவிதமாக முயங்கியவர்கள். சற்றும் அலுக்காமல் சுழல் புணர்ச்சி வகை கலவியில் ஈடுபட,அப்போது சுஜாதா ஒரு உறுதியில்லாத தறிபோடும்  கொம்பை தன் புடவை முந்தானையை முடிச்சிட்டு. அதைத் மேலே தூக்கி உத்திரத்தில் மாட்டியவள் அந்த   கொம்பை  இருகைகளால் சுற்றுகிறாள். முழுமையாக முறுக்கேற்றுகிறாள். பின்னர் அந்த ஏற்றப்பட்ட முறுக்கை விடுவிக்க, தட்டாமாலை சுற்றுகிறாள் சுஜாதா. கீழே தாஷி. நினைத்துப்பாருங்கள் என்ன ஒரு நிகழ்வு அது?!!!.

தற்கு மேல் இவன் உலகில் காமம் சுகிக்கமுடியுமா? என்னுமளவுக்கு சுவைத்துவிட்டான். திடீரென பேமா சென்ற குதிரை வரும் மணியோசை கேட்க. இவள் தொப்பென கீழே விழுகிறாள்.தாஷி அவசர அவசரமாக சேலையை உத்திரத்திலிருந்து உருவ இவள் சேலையும் கிழிகிறது. சுஜாதா விரைந்து சேலை ரவிக்கை,உடுத்திக்கொண்டு வெளியேறுகிறாள்.மேலே உத்திரத்தில் சுஜாதாவின் சேலையின் கிழிந்த துண்டு மாட்டியிருக்கிறது. அன்று பேமா தாஷிக்கு வாங்கி வந்த உடைகளோ, ஆசைப்பேச்சோ தாஷிக்கு சோபிக்கவில்லை. அவனின் இல்வாழ்வு அவனுக்கு சோபை இழந்தது போல தோன்றுகிறது.

மாலை ஒரு குன்றின் மீது சென்று அமர்ந்த தாஷி தன்னைதானே சோதித்து அறிகிறான். இதற்குத் தானா இப்படி கூடாக்காமம் பயிலத்தானா? 3வருடம், 3மாதம், 3வாரம், 3 நாட்கள் கடுந்தவம் இருந்தேன் என தன்னைத்தானே சோதித்து அறிகிறான். அவனைப் பார்க்க அவனது மடாலய நண்பன் சோனம் வீட்டுக்கே தேடிவர, அவனை குன்றின் மீது அனுப்புகிறாள் பேமா. அங்கே வந்த நண்பன் தலைமை புத்த பிக்கு நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், தன் கடைசி காலத்தை உணர்ந்த அவர் குகைக்குள் சென்று தவத்தில் அமர்ந்ததாகவும்,இவனுக்கு ஒரு கடிதம் கொடுத்ததாக கொடுக்கிறான்.  அக்கடிதத்தில்   எது மிக  முக்கியம்?!!! ஆயிரம்   ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதா?     அல்லது ஒரே ஒரு ஆசையையேனும் வெல்வதா?!!! என்று எழுதியிருக்கிறது. வெளியே சுஜாதா பேமாவைப் பார்த்து இறுதிவிடை பெற்றுச் செல்ல வருகிறாள். பேமா சுஜாதாவிடம் தான் பண்ணையை பார்த்துக்கொள்ளவேண்டியிருப்பதால் அவளின் திருமணத்துக்க வர இயலாது என வருத்தம் தெரிவிக்கிறாள்.அங்கே சுஜாதா எதேனும் பேமாவிடம் நடந்த உறவைப்பற்றி சொல்லிவிடுவாளோ ? என்று அச்சப்படுகிறான் தாஷி, அப்போது காற்றில் பறந்து வந்த சுஜாதாவின் கிழிந்த சேலைத்துணி தரையில் விழுகிறது.அந்த புள்ளியில் தன் சன்னியாசத்தை மீண்டும் துவக்குகிறான் தாஷி.

ன்று இரவே ஒரு பேடியைப்போல, கோழையைபோல இல்லறத்தை ஒரு மோகினிப்பேயை கண்டு பயந்தவன் போல  வெறுத்துப் பிரிகிறான். வழிக்கு கட்டுச்சோறும் செபமாலையும் எடுத்துக் கொள்கிறான் தாஷி. பின்னர் நடந்து அதே ஆற்றங்கரைக்கு சென்றவன், தலையை நன்கு  சவரம் செய்கிறான், குடியானவனின் ஆடையை களைகிறான். காவியாடை உடுத்துகிறான். திரும்ப புத்தபிக்குவாகியேவிட்டான் . இதோ சில காத தூரம் தான், தொலைவில் அவனது மடம் தெரிகிறது  என்னும் நிலை.

ங்கே பேமா கையில் கட்டுசோற்றுடன் கூடிய ஜெபமாலையுடன் எதிர்ப்படுகிறாள். குதிரையில் தனக்கு முன்பே அவள் வந்துவிட்டிருப்பது புரிகிறது.  தன்னை நிர்க்கதியாக விட்டுப்போன கணவனுக்கு கடைசியாக சோறு கொண்டு தர வந்தேன் என்கிறாள் முன்னால் அதை எறிகிறாள். குற்ற உணர்வு மிகுதியால் பேச வாயெடுத்தும் தாஷியால் பேச இயலவில்லை தன்னை மீட்க வந்திருக்கும் பேமாவை , அவனால் கண்கொண்டு பார்க்ககூட முடியவில்லை. அங்கே பேமா சொல்கின்றாள்!!!. கௌதம சித்தார்த்தன்    அன்று வீட்டைவிட்டுச் சென்ற பின்னர் மனைவி யசோதரா நாளைமுதல் படப்போகும் அவமானம்,அவளின் எஞ்சிய நாட்களின் போராட்டம், அயராத விரக தாபம், மனவேதனை பற்றி சிறிதும் யோசிக்கவே யில்லை, ஆண்களுக்கு மட்டும் இந்நிலை மிக இயல்பாய் கைவருகிறதே!!!?, ஆனால் தூங்கும் தனது குழந்தையை இரவோடு இரவாக விட்டுச் செல்ல யசோதராவால் முடியவே முடியவில்லையே?!!!  இதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என முகத்தில் அறைந்தது போல உரைக்கிறாள், அங்கே அவமானப்பட்டான்  இந்த புத்தபிக்கு தாஷி,  ஆடியே போய்விட்டான்.  தன்னை மன்னித்துவிடும் படி பேமாவின் கால்களில் விழுந்து கதறுகின்றான். பேமா அவனைத் துறந்தவள் தனது குழந்தையிடமே திரும்பச் செல்கின்றாள்.

தோ அங்கே அந்த திபெத்திய வாக்கியம் எழுதிய  கல்லை இப்போது மீண்டும் பார்க்கிறான் தாஷி."how can you stop a drop of water from disappearing?" ஒரு நீர்துளி ஆவியாகாமல் எப்படி காப்பாய்? அதை  இப்போது திருப்பிப் பார்க்கிறான் தாஷி.அதில் விடையாக  அதைத் தூக்கி கடலில் வீசு. என்கிறது வாசகம், அதன் அர்த்தம் இப்போது தாஷிக்கு புரிகிறது .அன்று சித்தார்த்தன் எதிர்காலம் பற்றியோ மனைவி யசோதராவின் மனவேதனை, மகன் ராகுலின் ஏக்கம் பற்றியோ ஒரு கணம் எண்ணிப்பார்த்திருந்தால் இவ் உலகிற்கு  புத்தன் என்பவன் கிடைத்திருக்க மாட்டான். என்று தன்னை தேற்றிக்கொண்ட தாஷி.   சம்சாரம் என்னும் வெப்பத்தில் ஆவியாகாமல் துறவறம் என்னும் நீர்நிலையில் கலந்து போக முடிவெடுக்கிறான். அங்கே மேலே உயரத்தில் மீண்டும் ஒரு பருந்து சுற்றுப்போடுகிறது , பின்னர் மறைகிறது அதை அண்ணாந்து கண்கள் சுருக்கிப் பார்க்கிறான் தாஷி.
=====0000=====
படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-

படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Pan Nalin
Produced by Fandango / Ocean Films Distribution / Pandora Film / Paradis Films
Written by Pan Nalin & Tim Baker
Starring Shawn Ku & Christy Chung & Neelesha BaVora
Music by Cyril Morin
Release date(s) 2002
Running time 138 minutes
Language Tibetan / Ladakhi
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)