தோபி காட்[Dhobi Ghat][2011][இந்தியா][ஹிந்தி]

தோபிகாட் சமகாலத்தில் வந்த மிக நல்ல உள்ளடக்கம் கொண்ட இந்திய சினிமா!!!. பெண் இயக்குனர் கிரண் ராவுக்கு இது முதல் படம் என்றே என்னால் நம்ப முடியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் அபாரமான ரசிப்புத் தன்மையும், பார்வையாளனின் ரசனைக்கு மதிப்பளிக்கும் பாங்குமே மிளிர்கிறது, நான்லீனியர் கதையமைப்புக்கள் அற்புதமான காட்சிகளாய் விரிகின்றது. இது போல யதார்த்த சினிமாக்கள் நம் நாட்டில் வரத்துவங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இப்படத்துக்கு ஆரம்பத்தில் கிடைத்த முதிர்ச்சியில்லாத பல திரைவிமர்சனங்களால்  இவ்வளவு நல்ல படத்தை கையில் வைத்திருந்தும் பார்க்காமல் தவறவிட்டிருந்தேன். நேற்று சாருவின் நிகரற்ற விமர்சனத்தை படித்த பின்னர் உடனே பார்க்கத்துவங்கினேன், தோபி காட் இந்திய இயக்குனரின் மிக மிகத்தரமான , நிகரில்லாத, ஒரிஜினலான படைப்பு என்பேன். படத்தில் ஒரு வீடியோவுக்குள் வரும் கடந்தகால பாத்திரமான யாஸ்மினை ஒருவர் ஆயுளுக்கும் மறக்கமுடியாது, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலியின்-துர்கா, சாருலதாவின் - சாருலதா, ஜாப்பனீஸ் வைஃப் படத்தின் ஸ்நேஹமோய் போன்ற ஒப்பற்ற திரைக் கதாபாத்திரங்களைப் போல யாஸ்மினும் காண்போர் நெஞ்சில் கரைந்தேவிடுவார்.

இந்திய சினிமா ரசிகனின் ரசனையை, உள்வாங்கும் திறனை நன்கு மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கிலேயே எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. இப்படத்தை ஒருவர் ரசித்து ஒன்றி விட்டாரேயானால் எக்காலத்திலும் அவர்களின் கவனத்தை ரசனையை கமல்ஹாசன் ,மணிரத்னம் போன்ற சிரிப்பு திருடர்களின் படைப்புகள் சிதைக்கவே சிதைக்காது என்பேன்.  உலகநாடுகள் அனைத்திலும் திரைப்பட திருவிழாக்களுக்கென்றும், பேரலல் சினிமா ரசிகர்களுக்குமென்றே தனித்துவம் பொருந்திய படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை படைப்பவர்கள் ஆட்டியர்கள் என்றழைக்கப்படுவார்கள், அந்த கோஷ்டிக்குள் மணிரத்னம் போன்ற போலிகள் ராவணன் போன்ற நச்சுக்குப்பைகளை அங்கே தூக்கிப் போட்டு உட்கார இடம்பெற பார்ப்பர். அதற்கென்றே இயங்கும் சில ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவன முதலைகள் இந்த போலிகளுக்கு துணை நிற்கும்.

ந்த அதிமேதாவி போலிகளால் சமகாலத்தின் உண்மையான ஆட்டியர்களான பான் நலின், தேவ் பெனகல், நாகேஷ் குக்குனூர், தீபா மேத்தா, மீரா நாயர், அபர்னா சென், சுதிர் மிஷ்ரா போன்றோர் படங்களுக்கு கிடைக்கவேண்டிய ராஜ மரியாதை கிடைக்காமலேயே போகிறது, ஒரு ஆட்டியர் என்பவர் தன்னை எதன் பொருட்டும் சமாதானம் செய்துகொள்ளாதவர். அவர் முழு ஈடுபாட்டுடன் படைக்கும்   ஒரு திரைப்படம் ஏகபோக வசூலை மட்டும் எதிர்பார்த்து செய்யப்படுவதேயில்லை, நல்ல கலையை, ரசனையை ,சமூக மாற்றத்தை வளர்க்க, நிகழ்த்த வேண்டுமென்ற உயரியநோக்கிலேயே இதுபோல திரைப்படங்களைத் அவர்கள் தயாரிப்பார்கள்,உலக நாடுகளில் இதற்கென்றே  பல மாற்று சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் உண்டு. உலகெங்கிலும் மாற்று சினிமாவுக்கு என்று தேர்ந்த ரசிகர்கூட்டமும் உண்டு.

ந்தியாவில் அது போல நிறுவனங்கள் அதிகம் இல்லாத நிலையில். தன் சொந்த பணத்தில் ஆமிர்கானின் திரைப்பட நிறுவனம் இது போல மாற்று சினிமா முயற்சிகள் செய்வது மிகவும் பாராட்டத்தக்கது. படத்தில் கிரண் ராவின் இயக்கம் , உலகப்புகழ் பெற்ற இயக்குனர் அலஜென்ரோ கொன்சலேசின் ஆகச்சிறந்த படைப்புகளுக்கு நிகரான தரத்தை கொண்டிருக்கிறது. நடிப்பு என்றால் நடித்துக்கொட்டுவது என்றிருப்பவர்கள் இதைப் பார்த்து நடிப்பு பழகவேண்டும். மொத்தத்தில் இது இந்திய சினிமா சூழலில் முதலில் வெளிவந்த முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் என்பேன்.

லகப்புகழ் பெற்ற இயக்குனர் அலஜென்ரோ கொன்சலேசின் ஆஸ்தான இசையமைப்பாளரான குஸ்டவோ  சண்டவோலல்லா இருமுறை ஒரிஜினல் ஸ்கோருக்காக ஆஸ்கர் விருது வாங்கியவர், அமெர்ரோஸ் பெர்ரோஸ், பாபெல், 21 க்ராம்ஸுக்கு இசையமைத்து உலகப்புகழ் பெற்றவர் அவர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.  நம் இந்திய திரைவல்லுனர்கள்  உலகப்புகழ்பெற்ற பன்னாட்டு கலைவல்லுனர்களை, இந்தியப் படைபுகளில் பணியாற்ற அழைப்பது மிகவும் பெருமை என்பேன். இந்த 59வயது தென் அமெரிக்க இசையமைப்பாளர் இப்படத்தில் ஓர் இந்தியராக மும்பைவாசியாகவே சிந்தித்து இருக்கிறார், ஒரு இந்திய சூழலுக்கான இசையை உலகத்தரத்தில் வழங்கியிருக்கிறார். படத்தில் பாடல்கள் அறவே இல்லை. அவர் அமைத்த இசையை அது தரும் சுகானுபவத்தை ஒருவர் ஆயுளுக்கும் மறக்க முடியாது.  இசையமைப்பாளரைத் தேர்வு செய்ததிலேயே இயக்குனர் கிரண் ராவ் ஜெயித்திருக்கிறார்.ஒவ்வொரு துறையிலும் புதுமையை புகுத்தியிருக்கிறார்,இருந்தும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கவில்லை என நினைக்கையில் இனி இப்படிப்பட்ட முயற்சிகள் பொய்த்துவிடுமோ?என்று கலக்கம் ஏற்படுகிறது. இனி ஐந்து கோடி கொடுத்தால் தான் உலகத்தரமான இசை கிடைக்கும் என்று யாரும் காத்திருக்கவேண்டியதில்லை .இந்திய படைப்புகளுக்கு வேலை செய்ய பன்னாட்டு கலைஞர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

இந்தப் படத்தை சாருவின் விமர்சனத்தை படித்துவிட்டு ஒருவர் பார்க்கத் துவங்கவேண்டும். படத்தின் சுவாரஸ்யம் கூடுமே தவிர குறையாது. உங்களுக்காக அந்த வரிகள்அப்படியே:-

இது போன்ற துயரமான அனுபவங்கள் எதுவும் இந்தி சினிமாவில் பொதுவாக நேர்வதில்லை.  அதனால் தைரியமாக டோபி காட் என்ற படத்துக்குச் சென்றேன்.  கிரண் ராவ் என்பவரின் முதல் படம்; ஆமிர் கான் நடித்தது என்ற இரண்டு காரணங்களைத் தவிர இந்தப் படத்தின் பெயரும் என்னைக் கவர்ந்தது.  மும்பை தாராவியில் இந்த டோபி காட்டை நேரில் பார்த்திருக்கிறேன். மறக்கவே முடியாத ஒரு அனுபவம் அது.  நம் கூவத்தை ஒத்த ஒரு தண்ணீர்த் துறையில் நூற்றுக் கணக்கான துணி வெளுக்கும் தொழிலாளர்கள் கல்லில் துணிகளை அடித்துக் கொண்டிருந்தார்கள்.  பயந்து போய் ஓடி வந்தேன்.
டோபி காட்டின் ஒருசில நிமிடங்களிலேயே ஒரு சர்வதேசத் தரம் வாய்ந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது.  படத்தைப் பார்த்த பின்னர் அது பற்றிய விமர்சனங்களைப் படித்த போதுதான் கிரண் ராவ் ஆமிர் கானின் மனைவி என்ற விபரமும், டோபி காட் கிரணின் முதல் படம் என்பதும் தெரிந்தது.  படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது அதன் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என்ற கேள்வி என்னை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.  காரணம்,  இப்படி ஒரு பின்னணி இசையை இந்திய சினிமாவில் வெகு அரிதாகவே கேட்டிருக்கிறேன்.  ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வந்த ஸ்லம்டாக் மில்லியனர், 127 hours ஆகிய படங்களில் கூட பாடல்கள் உண்டு.  ஆனால் டோபி காட்டில் பாடல்கள் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்பு இருந்தும் சேர்க்கப்படவில்லை என்பதோடு பின்னணி இசை ஒரு தேர்ந்த ஐரோப்பியப் படத்தைப் பார்ப்பது போல் இருந்ததால் அதன் இசையமைப்பாளர் யார் என்று ஆர்வம் கொண்டேன்.  கடைசியில் என் யூகம் சரிதான்.  அமோரெஸ் பெர்ரோஸ், பாபெல் போன்ற அற்புதமான படங்களுக்கு இசையமைத்த – இரண்டு முறை ஆஸ்கர் பரிசு பெற்ற, அர்ஜெண்டினாவைச் சேர்ந்த Gustavo Santaolallaதான் டோபி காட்டின் இசையமைப்பாளர்.  ஒரு படத்தின் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு டோபி காட் ஒரு உதாரணம்.

இப்படி ஒரு படம் தமிழில் இன்னும் கால் நூற்றாண்டு ஆனாலும் சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறது.  ஏனென்றால், ஒரு சூப்பர் ஸ்டார் அளவில் உள்ள ஆமிர் கான் தன் ஹீரோ அந்தஸ்தை விட்டு விட்டு படத்தில் வரும் நான்கே பாத்திரங்களில் ஒருவராக வருகிறார்.  அதிலும் அந்த நான்கு பாத்திரங்களிலேயே ஆமிரின் ரோல்தான் ஆகக் கடைசியான – சாதாரண பாத்திரமாக அமைக்கப்பட்டிருக்கிறது.  இங்கே சினிமாதான் என் உயிர் மூச்சு என்று சொல்லிக் கொள்ளும் ஹீரோ நடிகர்கள் தங்கள் ஈகோவை விட்டு விட்டு ஒரு நல்ல சினிமாவில் இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க சம்மதிப்பார்களா?  ஆனால் அப்படி அவர்கள் சம்மதித்தால் அந்தக் கணத்திலேயே உலகப் புகழ் பெற்று விடலாம் என்பது மட்டும் நிச்சயம்.  ஏனென்றால், ஆமிர் நடித்த படங்களிலேயே டோபி காட்தான் அவருக்கு சர்வதேசப் புகழை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

தமிழில் கதை இல்லை என்று சொல்லி நூற்றுக் கணக்கான ஹாலிவுட், ஜப்பான், கொரியப் படங்களிலிருந்து இங்கே கள்ளக் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் டோபி காட்டின் கதை நாலே வாக்கியங்களில் அடங்கி விடக் கூடியது.  முன்னா என்ற இளைஞன் சினிமாவில் சேருவதற்காக கிராமத்திலிருந்து மும்பை வந்து டோபியாக வேலை செய்கிறான்.  தற்செயலாக அவன் ஷாய் என்ற பெண்ணை சந்திக்கிறான்.  ஷாய் அமெரிக்காவிலிருந்து மும்பை வந்து அந்த நகரத்தைப் புகைப்படங்களாக எடுக்கும் ஒரு அமெச்சூர் புகைப்படக்காரி.  அருண் (ஆமிர்) ஒரு ஓவியன்.  விவாகரத்து ஆகித் தனியாக வாழும் அவன் ஒரு புதிய வீட்டுக்குக் குடி போகும் போது அங்கே ஒரு விடியோ கேஸட்டைப் பார்க்கிறான்.  அது அந்த வீட்டில் முன்பு குடியிருந்த யாஸ்மின் என்ற பெண் தன் குடும்ப வாழ்க்கையைப் பற்றித் தன் சகோதரனுக்குச் சொல்லும் விடியோ டேப்.  யாஸ்மினாக நடிக்கும் க்ரித்தி மல்ஹோத்ரா கடைசி வரை படத்தில் நேரடியாக வருவதே இல்லை.  அவளே தன்னுடைய கைக்கேமராவில், பிம்பம் நகராமல் ஒரே கோணத்தில் எடுக்கப்பட்ட விடியோ டேப்பின் மூலம் அருணின் தொலைக்காட்சிப் பெட்டியில் மட்டுமே வருகிறாள்.  (நினைவு கூரவும்: LSD என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட லவ், செக்ஸ் அவ்ர் தோக்கா: அந்தப் படம் முழுவதுமே Static shots மூலம் எடுக்கப்பட்டது).  ஷாய், முன்னா, அருண், படத்தில் நேரடியாக வராத யாஸ்மின் இந்த நால்வரின் வாழ்வில் நடக்கும் சுவாரசியமற்ற சம்பவங்களே டோபி காட்.

சுவாரசியமற்ற சம்பவங்கள் என்று கூறியதன் காரணம், நம்முடைய அன்றாட வாழ்வு ஒன்றும் சினிமாவில் வருவதைப் போன்ற திடீர் திருப்பங்களைக் கொண்டிருக்கவில்லை.  ஒரு டோபியின் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?  ஆனாலும் டோபி காட் எப்படி ஒரு அற்புதமான கலாசிருஷ்டியாக உருவாகியிருக்கிறது என்பதுதான் கலையின் மேஜிக்.  அது சினிமாவில் பல்வேறு காரணிகளால் சாத்தியமாகிறது. முதலில், தேர்ந்த நடிப்பு. நடிகர்கள் பாத்திரமாக மாறாமல் தங்களுடைய சொந்த அடையாளத்தை முன்னிறுத்துவது தேர்ந்த நடிப்பு அல்ல.  கமல் ஒரு நாஸ்திகர்.  அதனால் கமல் நடிக்கும் படத்தின் ஹீரோ கமல் நாஸ்திகராக இருப்பார்.  கமல் நல்ல டான்ஸர்.  அதனால் அவருடைய படத்தில் சம்பந்தமே இல்லாமல் சில காட்சிகளில் டான்ஸ் ஆடுவார்.  (மன்மதன் அம்புவில் ஒரு ஐரோப்பிய நகரின் தெரு ஒன்றில் டான்ஸ் ஆடிக் கொண்டே போவார்.  நாம் இப்படிச் செய்தால் அதைக் காண்பவர்கள் நம்மை என்னவென்று சொல்வார்கள்?  டோபி காட்டில் இந்த அசட்டுத்தனம் எதுவும் கிடையாது. அருணாக வரும் ஆமிர் அமெரிக்காவிலிருந்து வந்த ஷாய் என்ற அழகான பெண்ணைக் காதலிப்பதில்லை.  ஏன்?  நம்முடைய நேர் வாழ்வில் நாம் காணும் அழகான பெண்களையெல்லாம் காதலிக்கிறோமா?

ஒரு சினிமா கலாசிருஷ்டியாக மாறுவதற்கான இன்னொரு காரணம், அந்தப் படைப்பின் எந்த அம்சத்திலும் மிகைத்தன்மை இல்லாதிருப்பது.  டோபி காட்டின் நான்கு கதாபாத்திரங்களும் அவரவர் போக்கில் ஒருவரை ஒருவர் வெவ்வேறு தளங்களில் சந்திக்கிறார்கள்.  அதிலும் யாஸ்மின் என்ற பாத்திரம் வெறும் ஒளிப்பதிவு நாடாவில் தெரியும் ஒரு பிம்பம் மட்டுமே.  அவள் கதையை அருண் கேட்பதும் பார்ப்பதும் கூட அவளுக்குத் தெரியாது.  டோபி காட் சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு படைப்பாக மாறியதற்கு மற்றொரு காரணம், இதில் வரும் இன்னொரு பாத்திரம்.  அது, மும்பை என்ற நகரம்.  இதுவரை இந்திய சினிமாவில் ஒரு ஊர் இவ்வளவு உயிர்ப்புடன் காண்பிக்கப்பட்டதில்லை.  மீரா நாயரின் மான்சூன் வெட்டிங்கையும் மனதில் வைத்துக் கொண்டே இதை எழுதுகிறேன்.  தில்லியை வெகு கவித்துவமாகக் காண்பித்த படம் அது.  டோபி காட்டில் வரும் நான்கு பாத்திரங்களை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து மும்பை நகரை அதன் அத்தனை அழகோடும் அசிங்கத்தோடும் காண்பித்திருக்கிறார் கிரண் ராவ்.  அவர் இந்தப் படத்திற்கு இரண்டு தலைப்புகளைக் கொடுத்திருக்கிறார்.  ஒன்று, டோபி காட்; இன்னொன்று, Mumbai Diaries.  இந்தப் படத்தைப் பார்த்த போது என்றாவது ஒருநாள் சென்னை நகரமும் இவ்வளவு உயிரோட்டத்துடன் தமிழ் சினிமாவில் இடம் பிடிக்குமா என்ற ஏக்கம் ஏற்பட்டது.

டோபி காட்டின் மற்றொரு சிறப்பு, இது மிகக் குறைந்த செலவில், கெரில்லா படப்பிடிப்பு என்ற உத்தியின் மூலம் எடுக்கப்பட்டது.  அதாவது, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், ஒரு குட்டி ராணுவ அணிவகுப்பு அளவுக்கு ஆள் படை அம்புகளும் விளக்குகளும் ஜெனரேட்டர்களும் இல்லாமல், இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே, நிஜமான சூழலில், படம் எடுக்கப்படுகிறது என்ற விஷயமே யாருக்கும் தெரியாமல் எடுப்பதுதான் கெரில்லா ஷூட்டிங்.  ஸ்டார்ட், ரோலிங், கட், இடையில் இயக்குனர் போடும் சுத்தத் தமிழ் வார்த்தைகள் என்ற எந்த சத்தமும் இருக்காது.  ட்ராலிகள் இயங்காது.  பூதாகாரமான விளக்குகள் இல்லை.  சினிமா படப்பிடிப்பு என்று நாம் அறிந்திருக்கும் எந்த அடையாளமும், paraphernaliaவும் இல்லாமல் ரகசியமாக எடுக்கப்படுவதே கெரில்லா ஷூட்டிங்.  இப்படி எடுப்பதால் மட்டுமே ஒரு நகரத்தை அதன் உயிர்த்தன்மை கெடாமல் காண்பிக்க முடியும்.   அந்த வகையில் டோபி காட்டை எல்.எஸ்.டி.க்கு அடுத்தபடியாக இந்திய சினிமாவில் நடந்திருக்கும் புரட்சி என்று சொல்லலாம்.  உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளரான குஸ்தாவோ சந்த்தாவோலால்யாவை வைத்து எடுக்கப்பட்டும் டோபி காட்டின் பட்ஜெட் 11 கோடிதான்.  வசூல், படம் வெளிவந்த இரண்டே தினங்களில் 11 கோடியைத் தாண்டி விட்டது. ஆனால் இங்கே 150 கோடியில் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக குப்பைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இடைவேளை இல்லாமல் 95 நிமிடம் ஓடும் டோபி காட் நல்ல சினிமாவை நேசிப்பவர்களுக்கு ஒரு அற்புத அனுபவம்.
மிக்க நன்றி :- உயிர்மை
மிக்க நன்றி :- சாரு ஆன்லைன்
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Kiran Rao
Produced by Aamir Khan
Kiran Rao
Story by Kiran Rao
Starring Aamir Khan
Prateik Babbar
Monica Dogra
Kriti Malhotra
Music by Gustavo Santaolalla
Cinematography Tushar Kanti Ray
Editing by Nishant Radhakrishnan
Distributed by Aamir Khan Productions
Release date(s) September 2010 (2010-09) (TIFF)
21 January 2011 (2011-01-21) (India)[1]
Running time 95 minutes[2]
Country India
Language Hindi
English
Budget Indian Rupee ₹ 11 crore[3]
Gross revenue Indian Rupee ₹ 14 crore[4]

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)