எல்லோர்க்கும் சமகல்வி என்னும் எட்டாக்கனி!!!

ருமை நண்பர்களே!!!
மச்சீர் கல்வி முறையில் அச்சடிக்கப்பட்ட பாடபுத்தகங்களில் தகுந்த வல்லுனர் குழுவைக் கொண்டு வேண்டிய மாற்றங்கள் செய்த பின் , அடுத்த கல்விஆண்டு முதல் புதுப்பொலிவுடன் புழக்கத்தில் விடப்போவதாகவும்,இந்த ஆண்டு பழைய பாடதிட்டமே தொடரும், என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இந்த முடிவு சரியா?!!!

ப்பாட புத்தகங்கள் புறக்கணிக்கப்படுவதற்கு சொல்லப்படும் காரணம் என்னவென்று பார்ப்போம்!!!அவை கருணாநிதியின் துதி பாடுகின்றனவாம், பாடட்டுமே!!!அதை மட்டும் கிழித்து எறிந்தாலோ கேன்சல்டு என்று சிகப்பு ரப்பர் ஸ்டாம்ப் கொண்டு ஸ்கோர் செய்தாலோ அல்லது பக்கங்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டிவிட்டாலோ போதாதா?!!! அதில் அசிங்கமாக துருத்திக்கொண்டிருக்கும் கருணாநிதியின் சகிக்கமுடியாத கவிதைகளுக்கும்,வெட்டிச்செலவு செம்மொழி மாநாட்டு கட்டுரைகளுக்கும் பதிலாக, ஜால்ரா போடாத நல்ல கல்வித்துறை வல்லுனர் குழு   பரிந்துரைக்கும், பாடங்களின் பகுதிகளை இணைத்தோ?அல்லது தனி இணைப்பாகவோ தந்து விடலாமே?!!!

ப்படி 1ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஏழு கோடி புத்தகங்கள் அச்சடிக்க     80 கோடி ரூபாய் செலவிட்டு. அச்சு காகிதத்திற்கு மட்டும் 100 கோடி ரூபாய் செலவிட்டு. மேலும், பாடப் புத்தக வல்லுனர் குழுவினருக்கு சம்பளம், புத்தக வினியோகச் செலவு என பல வகைகளில் சுமார் 500 கோடி ரூபாய் செலவழித்த பின்னர்  .இன்றைய தேதியில் சுமார்  85 சதம் பாடபுத்தகங்கள் அச்சடித்த நிலையில் அவற்றை செல்லவே செல்லாது!!! ,என்று கூறி மீண்டும் பாட புத்தகம் அவசரகதியில் அச்சடிக்க டெண்டர் விட்டிருப்பது ,எதைக்காட்டுகிறது?!!!

முதல்வரின் இந்த  அறிவிப்பைக் கேட்ட மறுகனமே ஏழை மக்கள், அடடா!!! விக்கலை நிறுத்த விஷத்தைப் போய் அருந்தி விட்டோமே?!!! என்று நினைத்து வேதனைப்படத் துவங்கியிருப்பர் என்றால் மிகையில்லை, மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை நடந்து முடிந்த தேர்தலில் வாக்குகளாகப் பெற்ற ஒரு முதல்வருக்கு இது அழகா?!!!, பகாசுர பணவெறி கொண்ட தனியார்  பள்ளிகளின் நிர்வாகங்களை திருப்திபடுத்த மட்டுமே மேற்கொண்ட நடவடிக்கையாக இதைப்பார்க்க துவங்கிவிட்டனர். முதல்வருக்கு எதையாவது மாற்ற வேண்டுமானால் புத்தாண்டை மீண்டும் சித்திரை 1க்கே மாற்றுங்கள், அதை யாருமே குறை சொல்லப்போவதில்லை, திமுகவின் முன்னாள் கொலைகார அமைச்சர்களின் மீதான, எல்லா வழக்குகளையும் தூசுதட்டி கடும் நடவடிக்கை எடுங்கள், அவர்களின் சொத்துக்களை சட்டத்துக்குட்பட்ட அல்லது உட்படாத வழிகளில் பறிமுதல் செய்யுங்கள், மக்கள் யாருமே அதை  குறை சொல்லப்போவதில்லை, இன்னும் போதவில்லையா?!!! கேபிள்  டிவியை நாட்டுடைமையாக்குங்கள். சில மாதங்களில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் முதல்வர் எடுக்கும் இப்படிப்பட்ட அவசர முடிவுகள், அவருக்கே பாதகமாக அமையும் என்பது திண்ணம்.

முதல்வரின் இந்த முடிவு, யாரை பாதித்ததோ இல்லையோ?!!!! ஒரு பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில்  ஐந்தாம் வகுப்பு படிக்கும் கூலித்தொழிலாளியின்  மகனின், மகளின் கனவை, நிர்மூலமாக தகர்த்திருக்கிறது, அந்த ஏழை மாணவர்களின் ”எல்லா குழந்தைகளுக்கும் சமமான, ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி” என்னும் ஆர்வத்தில், நம்பிக்கை ஒளியில், மண்ணை அள்ளிப்போட்டிருக்கிறது.

சென்ற மாதம் ஐந்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வை பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப் பள்ளியில் எழுதிய மாணவன், இவ்வருடம் ஆறாம் வகுப்பை, மாநில அரசு பள்ளியில் , ஆங்கில வழிக் கல்வியில் சேர்ந்து படித்திருந்தாலே [நானும் அப்படி படித்தவன் தான்], மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கும் அதே பாடத்தை குறைந்த கட்டணத்தில் அவன் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் படித்திருப்பான், ஏழைப்பெற்றோருக்கு அதைவிட பெருமையே இருக்க முடியாது, இதன் மூலம் பிள்ளைகளை பள்ளியில் படிக்கவைக்க முன்வராத கூலித்தொழிலாளிகளுக்கும் அந்த ஆர்வம் வந்திருக்கும். 

எல்லோர்க்கும் சமகல்வி!!! என்ன ஒரு மாற்றத்தை உண்டாக்கக்கூடிய  மந்திரச்சொல் இது?!!! அதை மனதாற அனுபவித்தவர்களுக்கு தான் அந்த மகிழ்ச்சியும், சமமான கல்வி  உனக்கு  இல்லை என்கையில் ஏற்படும் வலியையும் ஒருங்கே உணரமுடியும், என்னால் அதை உணர முடிகிறது.  இது முதல்வர் ஜெயலலிதாவின்   அவசர முடிவே அன்றி வேறொன்றுமில்லை, பணம் இல்லாதவனுக்கு சாதாரண பண்டம் பணம் இருப்பவனுக்கு  வேறொரு தரமான பண்டம் என்றால், இது என்ன ஜனநாயக நாடு?!!!வெளியே சொன்னால் வெட்க கேடு!!!சமச்சீர் கல்வி மூலம் எல்லா மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்திருக்கவேண்டிய மாநிலம் தமிழகம்.அதை கருணாநிதிக்கு உதித்த யோசனையாயிற்றே!!! என்று புறந்தள்ளுவதா?!!!

ந்த முடிவை ஒரே வாரத்தில் இரண்டாம் தவணையாக  தரப்பட்ட கசப்பு மருந்தாகவே மக்கள் நினைக்கத் துவங்கிவிட்டனர். முதல்வரின் மேலான மறுபரிசீலனைக்கு தமிழக ஏழை மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமமான ஏற்றத்தாழ்வில்லாத கல்வியை வெறுப்பவர்கள் பற்றி என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை,என்ன மனிதர்கள் அவர்கள்?, மொத்தத்தில் அவர்களை மனதால் ஊனமடைந்தவர்கள் என்பேன். [இவ்வார்த்தைக்கு என்னை மன்னிக்கவும்]. சமமான ஏற்றத்தாழ்வுகளில்லாத கல்வியே வலுவான வருங்கால தூண்களை உருவாக்கும்  என்பதை இங்கே ஆணித்தரமாக நான் பதிவு செய்கிறேன்.

மச்சீர் பாடத்திட்டத்தில் தப்பி பிழைத்த சிபிஎஸ்சி வழி பாடத்திட்டத்தையும் போராடி ஒருங்கிணைத்து சேர்க்க வேண்டும், மேலும் தமிழ்நாட்டில் எல்லா பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கவேண்டும். அப்படி ஆக்காவிட்டால்,தமிழை எழுதவும் படிக்கவும் தெரியாத தற்குறி மாணவர்கள் உருவாக அது காரணமாகிவிடும் என்பதே   நல்ல குடிமகன்களின் கவலையாக உள்ளது.

ப்போதும் இப்போதும் பல பொறுப்பில்லாத பெற்றோர், சிபிஎஸ்சி  மற்றும் தனியார்பள்ளி பாடத்திட்டத்தில் தாய்மொழியான தமிழை மூன்றாம் மொழியாக கூட வைக்க முன் வருவதில்லை, அப்படி என்ன ஒரு தடித்தனம்?!!! இரண்டாம் மொழியாக இந்தியை தேர்வு செய்பவர்கள், மூன்றாம் மொழியாக ஃப்ரெஞ்சையோ அல்லது சமஸ்கிருதத்தியோ தேர்வு செய்கின்றனர், அப்படி அந்த இழவு இந்தியை கற்றே தீரவேண்டுமென்றால் தனியார் பள்ளிகளில் மூன்றாம் மொழி என்று ஒன்று இருக்கிறதே?!!! அதில் இந்தியை தேர்வு செய்ய என்ன கொள்ளை?!!! தாய்மொழியை எழுதவும் , படிக்கவும் தெரியாதவன் படித்தால் என்ன?!!! படிக்காவிட்டால்  தான் என்ன?!!!நான் இங்கே பிள்ளைகளை தமிழ் வழிக்கல்வியில் [தமிழ் மீடியம்] சேர்ந்து படிக்கவைக்கச் சொல்லவில்லை,என் பிள்ளையையும் நான் அப்படி செய்யவில்லை,என் குழந்தை ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் படிக்கிறாள். இதன் மூலம் ஒரு குழந்தைக்கு தாய்மொழியையும் அலுவல்மொழியையும் ஒருங்கே பயின்ற பலன் கிடைக்கும்.என் மகளின் பள்ளியில் அதே வகுப்பில் முப்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர் ஹிந்தியையே தேர்வு செய்துள்ளனர்.அவர்களைத் தான் இங்கே வன்மையாக சாடுகிறேன்.இப்போது தெரியாது,நாளைய சமுதாயம் தாய்மொழொயில் ஒரு முக்கிய ஆவணத்தை படிக்கவோ எழுதவோ கூட துபாஷ் என்னும் மொழிபெயர்ப்பாளனை நாடவேண்டிய நிலை வரக்கூடாது என்னும் கவலைதான் அது.இப்படி ஹிந்தியை தேடிப்படிக்கிறார்களே? அதுவாவது  ஒழுங்கா என்றால் மனனம் செய்து படிக்கும் ஹிந்தி அது. அனாதை மொழியை படிக்கத்தான் இங்கே ஆவல் எழுகிறது. ஹிந்தியைப்பற்றி எழுதிவிட்டாலே பொங்கிவிடுவார்கள் பொசைகெட்டவர்கள்.

துபோன்ற பொறுப்பில்லாத பெற்றோரை தண்டிக்க ஆவண செய்யவேண்டும். அவர்கள் தான் ”நாம் தமிழர்கள் ” என்னும் இனமானமில்லாத இளைய சமுதாயம் வளர முக்கிய காரணியாக, அவமான உதாரணமாகத் திகழ்பவர்கள்.இன்றைய பல மாணவர்கள் தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியாது என்பதை நாகரீகமாக நினைக்க தொடங்கிவிட்டனர். என்ன ஒரு திமிர்?!!! அவர்களுக்கு எக்காலத்திலும் எந்த கல்விச்சலுகையும் வழங்கப்படக்கூடாது, அவர்கள் பொறியியல், மருத்துவம், சட்டம், கணக்கியல் என எந்த துறைசார் வல்லுனர் படிப்புக்கும் தகுதிபெற்றுவிட முடியாது என்னும் நிலையும் சட்டமும் வரவேண்டும், அந்த மாற்றத்தை படித்தவர்களாகிய புதிய தலைமுறையினர் முன்னின்று நடத்த வேண்டும்.அப்போது தான் அந்த கயவர்கள் திருந்துவார்கள்.இது நடக்குமா?!!  பார்ப்போம்!!!

ன்னதான் அடுத்த வருடம் முதல்  சமச்சீர் கல்வி தொடரும் என்றாலும்  ஏழைகளுக்கு சமச்சீர் கல்வி என்பது எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டது போன்றதோ? !!! என்னும் ஐயம் மனதினுள் ஆழமாக எழுகிறது.
=======0000=======