அருமை நண்பர்களே!!!
நலம் தானே?!!!சென்னை வந்த நாள் முதலாகவே என் மொபைலில் எஸ் எம் எஸ் தொல்லை தாங்க முடியவில்லை,இடமோ ,ஃப்ளாட்டோ?இன்வெர்டரோ இன்சூரன்ஸ் பாலிசியோ எடுக்காவிட்டால் உயிருடன் விடமாட்டார்கள் போல?அவ்வளவு தொல்லை,சரி வெளியாட்கள் தொல்லை ஒரு புறமிருந்தால் ஏர்டெல் கொள்ளைக்காரர்களின் தொல்லை இருக்கே?!!!, அதுவும் ஐபில் கிரிக்கட் ஸ்கோர்,10 நொடிக்கு ஒரு ஸ்கோர் மெஸேஜ் வந்து விடும்,அதை அழித்து அழித்து மொபைலில் பேட்டரியே தீர்ந்து விடும்,அழிக்காமல் விட்டால் 360 பந்துகளுக்கும் 360 மெசேஸ் வந்திருக்கும்,எனக்கு எத்தனை முறை கஸ்டமர் கேருக்கு பேச முயன்றாலும், அங்கே உயிருள்ள யாருடனுமே பேச முடியாது, எந்திரம் தான் இளித்துக்கொண்டே பேசும்,இதற்கு ஆன்லைனில் தான் தீர்வு இருக்கிறது என நினைத்தேன்,ஆனால் உட்கார நேரம் கிடைக்கவில்லை ,அடிக்கடி வேலை மேலே குண்டு ஆர்த்தி வேறு வந்து பேசுகிறார்.டென்ஷன் உச்சத்துக்கு போகிறது.நண்பர்கள் யாரிடம் கேட்டுமே பிரயோசனமில்லை.
இன்று கூகிளில் கிரிக்கட் ஸ்கோர் என்னும் ஆணியை எப்படி பிடுங்குவது என்று தேடிப் பார்த்ததில் சிறப்பான பதில் கிடைத்தது,யாராவது இதே போல தவித்தால் இங்கே சென்று ஆணியை பிடுங்கி எறியவும்,அப்பாடா!!! இப்போது தான் ஒற்றைத் தலைவலி விட்டாற் போல இருக்கிறது.இதை யாரும் ஆக்டிவேட் செய்யாமலே எப்படி தானாய் ஆக்டிவேட் ஆகிறது என்றே எனக்கு புரியவில்லை, படித்த இண்டர்னெட் சவ்விகளுக்கே இப்படி தாவு தீருகிறதே?!!! பாமரர்கள் இந்த கொள்ளையரிடம் என்ன பாடு படுவார்கள்?,தாங்கள் அறியாமலே ,விரும்பாமலே அவர்களிடம் அவர்களுக்கு தேவையில்லாத இது போன்ற சர்வீஸுகளுக்கு எப்படி பணம் பிடுங்கப்பட்டுக்கொண்டிருக்கும்?!!! திருட்டு பயல்கள்.
இப்போதைக்கு இந்த யமகாதகர்களிடமிருந்து எந்த ஸ்கோர் கருமமும் வரவில்லை, ஆனாலும் நம்பிக்கை இல்லை,நாளைக்கே மீண்டும் அனுப்பினாலும் அனுப்பக்கூடும், அந்த அளவுக்கு கஸ்டமர் சாட்டீஸ்ஃபக்ஷனுக்கு முக்கியத்துவம் தரும் கும்பல் இது!!!,பொறுத்திருந்து பார்ப்பேன்,இல்லாவிட்டால் நம்பரே போனாலும் போகிறது என்று டொக்கோமாவுக்கு நம்பர் போர்டபிளிட்டி செய்யப்போகிறேன்.யாராவது இதே போல துயரம் அனுபவித்துக்கொண்டிருந்தால் பின்னூட்டவும்.
====0000====




38 கருத்துரைகள்:
ண்ணா...
இது நாந்தான்....ஒரிஜினல் கொழந்த...என் பேருல வேற கமென்ட் வர வாய்ப்பிருக்கு.....சாக்கிரதை..
உங்க பதிவுல மொதல் கமென்ட் போட்டு பல மாமாங்கங்கள் ஆகுது...
நாள நைட் ப்ரீதான........அல்லாரும் ப்ரீ தான்....
படம் எதுனா போனீங்களா.....
ஹலோ கொழந்த நலமா?
உங்க பேர்ல டூப்ளிகேட் கமெண்டா?போடட்டும் போடட்டும்,நமக்கு எது ஒரிஜினல் எது டூப்ளிகேட்னு தெரியும்,என்ன வீடுக்கு வரேன்னு சொன்னீங்க?இன்றூ தான் மயில் ராவணர் குடும்பமாக வந்தார்.
வந்த உடன் சத்யத்தில் ஆரண்யகாண்டம் போனேன்,அது தான் சென்னை வந்து பார்த்த ஒரே சினிமா,நல்ல வேளை தெய்வத்தெரு மகள் இன்று போக வேண்டியது,போகவில்லை
தயவு செய்து ஏர்டெல் இல் இருந்து போர்டபளிட்டி போய் விடாதீர்கள் .உங்களை அலைய விட்டு விடுவார்கள் .பேசாமல் சிம் மாற்றி விடுங்கள்
அன்னைக்கே உங்களுக்கு போன் பண்ணியிருந்தேனே...எடுக்கல...பிசியாஇருப்பீங்கன்னு...விட்டுடேன்..
தி.நகர்தான ஆபிஸ்....என் ஸ்டடி ஏரியா தி.நகர் தான்...அடுத்த வாட்டி வரும்போது ஆபிச்கே...வரேன்....
மயில்.....ராகவன்....கோடு போட்டிருந்த டி ஷர்ட் போட்டிருப்பாரே...
அஜித்துக்கு அப்பறம், எப்பவுமே cooolersஓட சுத்துறது....தமிழ்நாட்டிலேயே அவர் ஒருத்தர்தான்.........
@கோவை நேரம்
நண்பரே,நல்லவேளை சொன்னீர்கள்,
சிம் மாற்றினால் நண்பர்களுக்கு மீண்டும் நம்பர் மாற்றத்தை சொல்லவேண்டும் என்று தான் யோசித்தேன்.நன்றி நண்பரே
// வந்த உடன் சத்யத்தில் ஆரண்யகாண்டம் போனேன் //
அத்த கொஞ்சம் எழுதுறது..........அம்புட்டு பிசியா....எப்ப நாங்க பழைய கார்த்திகேயன பாக்க...
பாலாவேற எழுத வந்துருவாரு போல....பயமா இருக்கு........கோவிலுக்கெல்லாம் நேர்ந்திருக்கேன்......
நானெல்லாம் எப்பவுமே BSNL தான்......அடிச்சாலும் புடிச்சாலும்....
கொழந்த,
ஆரன்யகாண்டம் நல்லா இருந்தது,வேலைக்கு சேர்ந்து விட்டு எழுதலாம் என்றூ அப்படியே விட்டு விட்டேன்,நிச்சயம் எழுதுவேன்,1-2 லன்ச் நேரம்,மாலை 6க்கு மேலே நிச்சயம் பர்க்கமுடியும்,ஆஃபீஸில் யாருக்குமே வலை உலகம் பற்றி அதுவும் தமிழ் வலைப்பதிவர்கள்,அனானிகள் பற்றிய அறிவு சுத்தமாக இல்லை,
கொழந்த தூங்க போறேன்,நாளை பேசுகிறேன்.
அந்த மெசேஜ் அனுப்பினால், அதன்பிறகு தொல்லை இருக்காது என்பதே என் அனுபவம்..ம்ம், தாய்நாட்டை எஞ்சாய் பண்றீங்க போல!
//பாலாவேற எழுத வந்துருவாரு போல.//
உண்மையாகவா? கேட்கவே சந்தோசமா இருக்கு பாஸ்.
செங்கோவி... நீங்க கொழந்த சொல்லுறதை நம்பற அளவுக்கு அப்பாவியா
கீதப்ப்ரியன், நாந்தான் உண்மையான கொழந்த. நீங்க போலியோடு பேசிகிட்டு இருக்கீங்க.
தெரியும் கொழந்த. தெரிஞ்சேதான் பேசிகிட்டு இருந்தேன். இவங்களை கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபம்.
ஆனா எப்படின்னு உங்களுக்கு சொல்லித்தர மாட்டேன்.
குழந்தாய் கீதப்ப்ரியா,
நலமா? ஊரே என்னை காறி உமிழ்ந்த பொழுதும் என்னைத் தாங்கிப் பிடித்த தோள்ல்லவா உமது? மறக்க முடியுமா?
நீங்கள் என் அடிவருடியாக (ஃபாலோயர்) சேர்ந்த நேரம்..., இப்பொழுது என் இண்டர்னெட் பிஸினஸ் அமோஹமாக போய்க்கொண்டிருக்கிறது.
நேரம் கிடைக்கும் பொழுது, என் ஆசிரமத்திற்கு வந்து, மிடில் ஈஸ்டில் வியர்வை சிந்த சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் குரு தட்சணையாக கொட்டி விட்டுப் போகவும்.
மாதக் கடைசியல்லவா...?!
பி.கு 1 : குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி.
பி.கு 2 : இந்த கமெண்ட்டை அழித்தால், கடும் விளைவுகள் ஏற்படும். சாக்கிரதை.
கடும் விளைவுகளின் சாம்பிளை இங்கே காணவும்.
http://saravanaganesh18.blogspot.com/2011/07/kekexili-mountain-patrol-chinese.html#comments
திரு. கார்த்திக்கேயன் அவர்களுக்கு,
1. எங்கள் சேவையில் தங்களுக்கு திருப்தி இல்லை என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை.
2. அது பற்றி எங்களுக்கு கவலையுமில்லை.
3. நாங்கள் ஏன் எங்கள் சேவையை குறை உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை உடனடியாக 1000 வார்த்தைகளு மிகாமல் ஒரு பதிவாக எழுதவும். (1000 முற்றுப்புள்ளிகள் அல்ல)
இங்கனம்
ஏர்டெல் கஸ்டமர் சர்வீஸில் காது குடைந்து கொண்டிருப்பவன்
திரு. கார்த்திக்கேயன்,
க்ரிக்கட் ஸ்கோர் என்பது, இந்திய தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வருவதால், அதை தெரிவிக்க வேண்டியது ஏர்டெல்லின் தலயாய கடமையாகிறது.
இதை நிறுத்தியதிலிருந்து தாங்கள் ஒரு நல்ல இந்தியக் குடிமகனில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.
மீண்டும் இந்தத் தவறை செய்யாதீர்கள்.
நன்றி,
இவன்
ஐ.பி.எல் சேர்மன்
கீதப்பிரியன்...இந்தியாவில் கடுப்புகளை காமெடியாக மாற்றினால்தான் உயிர் வாழ முடியும்.
ஆரண்யகாண்டம் சென்னையில் மட்டும் எப்படி ஒடுகிறது?
அண்ணா,
அப்டியே இந்த “வோடஃபோன்” -ல நிறுத்தறதுக்கும் எதுனா வழி சொன்னீங்கன்னா புண்ணியமாப் போகும்.
http://specialdoseofsadness.blogspot.com/
add tis movie blog to ur google reader...essays r written in simple english and very shortly...
add tis movie blog too in ur google reader
http://cliched-monologues.blogspot.com/
me too boss, thinking to change my number also network provider to docomo
நண்பா... இவனுங்கெல்லாம் இப்புடித்தான். வாங்க பேசாம ஒரு பேஜர் வாங்கி செட்டிலாயிருவோம். என்ன சொல்றீங்க? அப்புறம், தமிழ்ப் பதிவர் பத்தி சொன்னவுடனே அனானின்னு சொல்லிட்டீங்க? ரெண்டு பெரும் சேர்ந்தே இருப்பாங்கன்னு தெளிவா புரிஞ்சி வெச்சிருக்கீங்க.
முதல் முறை வருகிறேன்.
தகவல் நிறைந்த பகிர்வு.
எனக்கும் இந்தத் தொல்லை இருந்தது.
பின் ஏர்டெல் கஸ்டமர் கேரில் புகார் செய்தபின் 1909“ஐ தொடர்பு கொள்ள சொன்னார்கள். பின் கொஞ்ச நாள் இந்த தொல்லையில்லை.
ஆனால் சமீபகாலமாக மீண்டும் ஆரம்பித்துவிட்டது.
பகிர்விற்கு நன்றி நண்பரே.
நன்னா சொன்னேள் போங்கோ!!கருந்தேலா?என்னய்யா பேரு இது அபசாரம்!!
@செங்கோவி,
நண்பா நலமா?
ஏர்டெல் கடுப்பு தாங்கமுடியவில்லை,கால் வெயிட்டிங்கில் இன்னொரு கால் வருகிறதே என எடுத்தால்,பாட்டு பாடுகிறதே பார்க்க வேண்டும்?!!!
@உலக சினிமா ரசிகன்
தலைவரே,நலமா?
காட்ஃபாதர் 3ம் திறப்ட,வெற்றிகரமாக திரையிட்டமைக்கு வாழ்த்துக்கள்.நீங்கள் சொன்ன படியே கடுப்புகளை காமெடியாக்க பார்க்கிறேன்.நன்றி
@சத்ரியன்
நண்பா,நலமா?
ஓடோஃபோனும் இப்படித்தானா?சுத்தம்
@தன்ஸ்
நண்பரே,சேம் பிளட்டா?
இதை முயன்று பாருங்களேன்,நன்றி,நம்பர் போர்டபிளிட்டி வேலைக்காகவில்லை என்று நிறைய பேர் சொல்கின்றனர்.பார்த்து
@கருந்தேள்,
நண்பா,நலமா?
எத்தனை நாள் ஆச்சு பேசி?இப்போ கால் செய்யுறேன்.அனானிங்களையும் பதிவர்களையும் பிரிக்கமுடியாது என்பது உண்மை தானே?
@இந்திரா
நண்பரே,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
@எலிக்குஞ்சு,&கொழந்த
தல,சாரி நேற்று மழையில் மாட்டிக்கொண்டேன்,தவிர மறுநாள் வேலைக்கு போக எழுந்திருக்க சோம்பல் பட்டதனால் தான் கொழந்தை கூப்பிட்டதும் சேட்டில் வர இயலவில்லை.உங்க கருத்துக்கள் செம காமெடி,நான் உஜிலாவை மறந்தாலும் நீங்க மாட்டீங்க போல!!!
@ஜெமினி ரசிகன்,நண்பரே,இந்த பேரை சொன்னாலே அதிருதா?!!!
முகப்பு பக்கத்தில் கருத்துரை என்பதை தேடவேண்டியிருக்கு.கொஞ்சம் பெரிய அளவில் அல்லது வேறு வண்ணத்தில் இருந்தால் நல்லது.
ஓ ஊருக்கு வந்தாச்சா? வருக வருக.
இது என் முதல் வருகை...
அடிக்கடி வரலாம் தானே..?
கருத்துரையிடுக