காட்டின் [katyn ][2007][போலந்து][15+]


னப்படுகொலை என்றாலே நம் நினைவுக்கு வருவது யூதர்கள் இனப்படுகொலை தான், ஆனால் அதற்கு ஈடாக போலந்து நாட்டினரும் தம் இன்னுயிரை தம் நாட்டுக்காக ஈந்துள்ளனர், போலந்து நாட்டின் 70 ஆண்டுகால வரலாற்றை நாம் படித்துப் பார்த்தால் அது இரண்டாம் உலகப் போரில் சிக்கிச் சீரழிந்து சின்னாபின்னமானது புரியும், நாஜிப்படையினரும்,ரஷ்யரும் போலந்து நாட்டை பயங்கர சுடுகாடாக்கினர் என்றால் மிகையில்லை,

 போலந்து நாட்டின் புகழ்பெற்ற சினிமா இயக்குனரான Andrzej Wajda இயக்கி 2007 ஆம் ஆண்டு வெளியான படம் காட்டின், இவரின் தந்தையும் போலந்து ராணுவ வீரர்,  இந்த காட்டின் படுகொலைகளின் போது சுட்டுக் கொல்லப்பட்டவர் , அப்போது இயக்குனர் Andrzej Wajda க்கு 13 வயது, பிஞ்சு மனதில் நீங்கா வடுவாகப் பதிந்து விட்ட காட்டின் படுகொலை நினைவுகள், இத்திரைப்படத்தில் உக்கிரமாய் வெளிப்பட்டுள்ளது.சோவியத் ரஷ்யா உடைந்து 20 வருடங்கள் கழித்தே இந்த உன்னத படைப்பு போலந்து நாட்டின் தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது,எத்தனை காலம் இது நீரு பூத்த நெருப்பாக போலந்து மக்களின் மனதில் கனன்று கொண்டிருந்திருக்கும்?!!!

வண்டியில்வரும் போலந்து ராணுவஅதிகாரிகளின்  பிணங்கள்
போலந்து நாட்டின்  குடியுரிமை சட்டத்தின் படி ஒவ்வொரு பல்கலைக்கழக பட்டதாரியும் கட்டாய ராணுவ சேவை செய்திருக்க வேண்டியது அவசியம், அப்போது தான் ஒருவருக்கு குடிமகன் அந்தஸ்தும் பட்டமும் ,தொழில் செய்ய உரிமமும் கிடைக்கும்,இரண்டாம் உலகபோரில் ஜெர்மனி முதலில் போலந்தை பிடித்துக்கொள்ள,பின்னர் 2 வார காலத்தில் ரஷ்யாவும் போலந்தைப் பிடித்துக்கொண்டது, சுமார் 11லட்சம் பேர் வரை போர்கைதிகளாக ஜெர்மனியாலும் ரஷ்யாவாலும் பிடித்துச் செல்லப்பட்டனர். 1939ன் இறுதியில் போலந்து ராணுவ வீரர்கள் சுமார் 22000 பேர்களை ரஷ்யாவுக்கு கைதிகளாக  பிடித்துக் கொண்டு சென்ற செம்படை,ஒரு வருடகாலம் நன்கு பராமரித்து, வெளியுலகத்துக்கு அவர்கள் சிறையில் கிருத்துமஸ் கூட கொண்டாடுவதாக ஆவணப்படம் எடுத்து காட்டுகிறது,
பாயிண்ட் ப்ளான்கில் சுடும் காட்சி
பகைவரைக் கூட மனிதாபிமானத்துடன் நடத்தும் ரஷ்யா என பொய்ப் பிரச்சாரம் செய்கிறது, ஆனால் அவர்கள் 22000 பேரை அடுத்தடுத்து காட்டின் என்னும் காட்டுக்குள் கூட்டிப்போய் சுட்டுக்கொன்று புதைத்திருக்கிறது செம்படை,அந்த மரணப் பட்டியலில் இருந்த 22000 பேரும் நன்கு படித்த மேதைகள் அவர்களில் டாக்டர்கள், எஞ்ஜினியர்கள், பைலட்டுகள், என ஒளிமயமான போலந்தை உருவாக்கத் தக்க சான்றோர்கள் இருப்பது போல  பார்த்துக்கொண்டனர்.அதை கவனமாக  நிறைவேற்றவும் செய்தனர்.

 இரண்டாம் உலகப்போர் உச்சத்திலிருக்கும் 1943களில் ஜெர்மனி ரஷ்யா செய்த காட்டின்  படுகொலைகளை [katyn massacre] கண்டறிந்து எதிர் பிரச்சாரம் செய்கிறது, ஆனால் சர்வாதிகாரி ஸ்டாலினின் அரசு அந்த படுகொலைகளை செய்தது நாஜிப்படைதான் என்று உலக நாடுகள் சபை முன்னர் முழங்குகிறது, ரஷ்யா உக்கிரமான போரின் முடிவில்  மீண்டும் நாஜிப்படையின் வசம் இருந்த போலந்தை முழுதாய் ஆக்கிரமிக்கிறது, போலந்தில் நிலவிய தனக்கு உகந்த சூழலைப் பயன்படுத்தி பொது மக்களிடம் காட்டின் படுகொலைகள் நாஜிப்படையினரால் நிகழ்த்தப்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்கிறது, ஆனால் இதற்குப் பின்னர் இருக்கும் சூத்திரதாரி சர்வாதிகாரி ஸ்டாலின் தான் என்பதை போலந்து மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்,
இது உண்மையான காட்டின் படுகொலையும்-கண்டுபிடிப்பும்

1940ஆம் ஆண்டு காட்டின் காட்டுக்குள் வைத்து தலையில் பாய்ண்ட் ப்ளான்கில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு  கும்பலாக புதைக்கப்பட்ட  போலந்து ராணுவ வீரர்களின் சடலங்கள் முறையாக ரஷ்யர்களால் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு மிகவும் நல்லவர் போல நீத்தார்களின் பதக்கங்களையும், உடமைகளும் பல்கலைக்கழகங்களின் வழியே வீட்டாரிடம் ஒப்படைக்கத் தரப்படுகின்றன, ஆனால் அவற்றை அந்த பல்கலைக் கழகங்கள் வீட்டாரிடம் ஒப்படைப்பதில்லை, இப்போது பல்கலைக்கழகங்கள் தடையின்றி இயங்குவதற்கு ரஷ்யாவின் கனிவும் தயவும் தேவையாக இருப்பதால், அவை ஸ்டாலின் செய்த கடந்தகால படுகொலைகளை கண்டுகொள்வதில்லை, நிகழ்காலத்திலேயே கவலை கொள்கின்றனர்,  இருந்தும் அனு தினமும் ரஷ்யர்களின் செம்படை புரிந்த போர் குற்றங்களுக்கு எதிராக ஏதாவது சாட்சியம், தடயம் தோன்றிய வண்ணம் இருக்கின்றன,

ஜெர்மானிய வகை துப்பாக்கியில் இருந்து கிளம்பும்  குண்டு ஒருவரின் தலைக்குள் பாய்ண்ட் ப்ளான்கில் வெளியேறுவதால் மூளைக்குள் அது தங்குவதேயில்லை,அதனால் ஜெர்மானிய நாஜிப்படை  சுட்டு தான் அவர்கள் இறந்தனர் என்று ரஷ்ய செம்படையினர் சாதித்தனர், அந்த   பாணி ஜெர்மனியின் நாஜிப்படைக்கு உரிய கொலை புரியும் பாணியாகும், அதை ரஷ்யர்கள் பின்பற்றி சுமார் 22000 வீரர்களை அடுத்தடுத்து சுட்டுக் கொன்று மூன்று பெரிய சவக்குவியலாக அடக்கம் செய்திருப்பதும் மெல்ல வெளியுலகிற்குத்  தெரிய வருகிறது, ரஷ்யாவும் ஜெர்மனியும் 1990ஆம் ஆண்டு வரை பொருப்பேற்க மறுத்து வந்த நாம் அதிகம் கேள்வியுறாத, காட்டின் படுகொலைகளை உலகுக்குச் சொன்ன மிக முக்கியமான படம் இது,
சுட்ட வேகத்தில் குழியில் தள்ளும் காட்சி
யூத இனப்படுகொலைகள் எல்லோரையும் எளிதாக சென்றடைந்தது போல போலந்து கத்தோலிக்க மக்களின் படுகொலைகள், சீனமக்களின் இனப்படுகொலை, மற்றும் ஆஃப்ரிக்க,கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த  மக்களின் இனப்படுகொலைகள் அதிகம்  மக்களை சென்று சேரவில்லை, அதற்கு யாரும் மெனக்கெட்டு ஆவணக்காப்பும், விளம்பரங்களும் ,பிரச்சாரங்களும் செய்து சர்வதேச அரங்கில் தீவிரமாக வாதாடவுமில்லை, அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனையும் வாங்கித் தந்த பாடில்லை. இந்த காட்டின் படுகொலைகளுக்கு  இன்னமும் ரஷ்யா மனம் வருந்தவில்லை, என்பது தான் மாபெரும் துயரம்.
1943 ல் சவக்குழிகளை தோண்டிய போது
என்ன தான் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் நூரம்பர்க் விசாரணை மன்றம் அமைக்கப்பட்டாலும் நாஜிக்கள் சில நூறு பேர்கள் தண்டனை அடைந்தது போல ரஷ்யர்கள் செய்த போர் குற்றங்களுக்கு தண்டனை அடையவில்லை என்பது   வேதனையான விஷயம்,  அது இன்றும் போலந்து மக்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக இருக்கிறது, இந்தப்படம் பார்ப்பதற்கு முன்னர் இந்த சுட்டிகளில் சென்று புகைப்படங்களைப் பாருங்கள், பின்னர் இதைப் பற்றி படித்து விட்டு ,சிறிது வரலாற்றுப் புரிதலுடன் ,காட்டின் திரைப்படத்தைப் பாருங்கள் , இரண்டாம் உலகப்போரின் உலகறியாத கொடூரங்களை உரக்கச் சொன்ன போலந்து நாட்டின் படைப்பு இது,70 வருடங்கள் கடந்த நிலையில் மிகவும் பலமாக ஒலித்திருக்கிறது,

உலக வரலாற்றில் முதலும் கடைசியுமான சாதனையாக ஸ்டாலினின் அல்லக்கையான Vasili_Blokhin என்னும் ஒருவன் ,தன் கையால் சுமார் 7000 பேரை காட்டின் படுகொலைகளின் போது ரிவால்வரால் சுட்டுக்கொன்று சாதனை படைத்திருக்கிறான். செம்படையின் கொடூரமான சாதனைகளுக்கு இவன் செயல்ஒரு சோற்றுப் பதம்
http://en.wikipedia.org/wiki/Katyn_massacre
http://en.wikipedia.org/wiki/Vasili_Blokhin
http://www.allworldwars.com/Katyn-Files.html#6
http://www.pbs.org/behindcloseddoors/in-depth/katyn-massacre.html
http://www.katyn.org.au/
காட்டின் படத்தின் ட்ரெய்லர்-யூட்யூபிலிருந்து