ஷூன்யோ ஆவ்ன்கோ:ஆக்ட் ஸீரோ [Shunyo Awnko: Act Zero][2013 ][பெங்காலி]


இயக்குனர் ன் ஷூன்யோ ஆவ்ன்கோ :ஆக்ட் ஸீரோ என்னும் பெங்காலி மொழிப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது, ஒரிஸ்ஸாவின் நியாம்கிரி மலையை இந்திய அரசும் [49% பங்கு] லண்டனைச் சேர்ந்த கனிமவள நிறுவனமான வேதாந்தாவும் [51%] ஏலம் போட்டு அதன் கனிம வளங்களை அசுர கதியில் சுரண்டிக் கொண்டிருப்பது நாமறிந்ததே,

அங்கே மலையை தெய்வமாக எண்ணி அதன் காடுகளையும் அருவிகளையும்,ஆறுகளையும் வாழ்வாதாரமாகக் கொண்டு  வாழும் Dongria பழங்குடி மக்கள் அனுதினம் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றியும், அவர்களின் அரிய வாழ்வாதாரங்கள், பண்பாடு, கலாச்சாரங்கள் அழிக்கப்படுவதைப் பற்றியும் இந்திய அரசு கவலைப் படுவதில்லை, வெறும் 3000 பழங்குடியினருக்காக அந்த மலையை கைகழுவி விட்டு போட்டது போட்டபடி வெளியேற அவர்களின் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள  பாக்ஸைட் வளக் கனவு விடுவதாயில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக வேதாந்தா நிறுவனமே இந்த மலையும் தொழிற்சாலையும் வேண்டாமென்று திரும்பிப் போனாலும் இந்திய அரசு அவர்களை விடுவதாக இல்லை, தவிர வேதாந்தா நிறுவனம் இதே போலவே ஆஃப்ரிக்காவின் ஏழை நாடான ஸாம்பியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் சுரங்கம் நிறுவி சுரண்டிக் கொண்டிருக்கும் பெரிய பன்னாட்டு நிறுவன முதலைகள் என்றால் மிகையில்லை.

இங்கே நியாம்கிரியில் நன்கு  காலூன்றிவிட்ட அவர்களை   இனி தூக்கி எறிவது என்பது முடியாத செயல்.தம் நியாம்கிரி மலையைக் காக்க அப்பாவி பழங்குடியினரும் தம் சொந்த அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை. அனுதினமும் இந்திய ராணுவத்தினருடன் துப்பாக்கிச் சண்டை, மாவோயிஸ்டுகளின் துணையுடன் அவர்களை எதிர்த்து கொரில்லா தாக்குதல், மாவோயிஸ்டுகள், பழங்குடியினர், இந்திய ராணுவத்தினர் என ஆயிரக்கணக்கில் உயிர்பலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மொத்தத்தில் தேன்கூட்டில் கல் எறிந்தது போலானதொரு நிலை.
 மாவோயிஸ்டு தீவீரவாதிகள் ஒருபுறம் ,பழங்குடி மக்களுக்கு யானையைச் செய்கிறேன் பூனையைச் செய்கிறேன் என ஆசை வார்த்தை மட்டும் காட்டும் வேதாந்தா கம்பெனி நிர்வாகம் மறுபுறம், இன்று நியாம்கிரியில் நடந்து கொண்டிருக்கும் வாழ்வியல் யதார்த்தங்களை  தெளிவாகப் பேசுகிறது இப்படம், இதே கதையை பிண்ணணியாகக் கொண்டு பாலிவுட்டில் Chakravyuh உள்ளிட்ட எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தாலும் அவற்றில் நிரம்பியிருக்கும் போலியான ஹீரோயிசமும், சினிமாத்தனமும், சென்டிமெண்டுகளும்  க்ளிஷேத்தனமும் இப்படத்தில் அறவே இல்லை, 
 
அது தான் இப்படத்தை உலக சினிமாவாக மாற்றும் காரணி, படத்தில் கார்பொரேட்டுகளின் ஆடம்பரமும், உல்லாசமான சொகுசு வாழ்க்கையும், அப்பாவி ஏழைப் பழங்குடியினரின் அன்றாட அல்லல்களுக்கிடையேயான இயல்பு வாழ்க்கையும் சரிபாதியாக பிரிக்கப்பட்டு நான் லீனியர் பாணியில் வெவ்வேறு ஆக்ட்களாக தொகுக்கப்பட்டுள்ளது, படத்தின் திரைக்கதையும், Goutam Ghose ன் ஒளிப்பதிவும் , Anupam Roy ன் இசையும் ஒருங்கிணைந்து மாயாஜாலத்தை நிகழ்த்துகின்றன என்றால் மிகையில்லை.
 
மிகவும் சிக்கலான ஒரு அரசு மற்றும் மக்கள் சார்ந்த முக்கிய பிரச்சனையை மிகவும் யதார்த்தமாக பிரதிபலிக்கும் ஒரு படைப்பு இப்படம். படத்தின் திரைக்கதை 6 ஆக்ட்களாக சொல்லப்படுகிறது 7ஆவதாக 0 ஆக்ட் படத்தின் முடிவாகச் சொல்லப்படுகிறது. படத்தின் வசனங்கள் அரசுக்கு எதிராக பழங்குடிகளும் சமூக ஆர்வலர்கள் எழுப்பும் யதார்த்தமான கேள்விகளால் நிரம்பியுள்ளது.அவற்றில் முக்கியமான இரண்டை இங்கே பகிர்கிறேன்,

1.இந்தியாவிலேயே இந்திய கனிம வள நிறுவனம் என்னும் பொதுத்துறை நிறுவனம் இருக்க 51 சதவிகித பங்குகளை வெளிநாட்டு நிறுவனமான வேதாந்தாவுக்கு தாரை வார்க்க என்ன காரணம்? இதற்கு நாங்கள் முறையாக டெண்டர் விட்டு தான் வேதாந்தா நிறுவனத்தை தேர்ந்தெடுத்தோம் என்று  கலெக்டர் சொல்லும் சப்பைக்கட்டை கேட்கும் போதே ஒருவருக்கு பற்றிக் கொண்டு வரும்.

2.சரி!!! நியாம் கிரி மலையில் மட்டும் தானா கனிம வளங்கள் உள்ளது?. ஏன் மும்பையின் உயர்குடி மக்கள் வசிக்கும் மலபார் ஹில்ஸ் பகுதியில் இல்லாத கனிம வளங்களா?!!!

தில்லியின்  உயர்குடி மக்கள் வசிக்கும் சாணக்யபுரியில் இல்லாத கனிம வளங்களா? கொல்கத்தாவின் உயர்குடி மக்கள் வசிக்கும் பகுதியான அலிப்பூரில் இல்லாத கனிம வளங்களா?!!! ஏன் அங்கே எல்லாம் மேட்டுக்குடி மக்கள் கனிம வளங்களுக்காக அரசால் வெளியேற்றப் படுவதில்லை?

ஏன் இந்தியாவில் அணை கட்டுவதாக இருந்தாலும்? தொழிற்ச்சாலைகள் அமைப்பதாக இருந்தாலும்? சுரங்கங்கள் தோண்டுவதாக இருந்தாலும், நெடுஞ்சாலைகள் அமைப்பதாக இருந்தாலும் களபலியாக பழங்குடிகளே குறி வைக்கப்படுகின்றனர்? இந்தியாவின் முன்னேற்றம், அந்நிய முதலீடு ஊக்குவிப்பு என்னும் போர்வையில் 100 வருடங்களுக்குப் பின்வரும் சந்ததிகளுக்கு எதுவுமே இல்லாத படிக்கு  நம் நாட்டின் கனிம வளங்கள் அசுர கதியில் சுரண்டப்படுவது ஏன்?!!!

இந்தியா சுதந்திரம் அடைந்த 67 வருடங்களில் இப்படி தங்கள் வாழ்வாதாரங்களை , உறைவிடங்களை விட்டு துரத்தியடிக்கப்பட்ட பழங்குடி மக்களின் எண்ணிக்கை 6 கோடி என்பது தெரியுமா?!!! அவர்கள் என்ன ஆனார்கள்? என்று எந்த அரசுக்காவது அக்கறை இருக்கிறதா? போன்ற கேள்விக் கணைகள்,புத்திசாலித்தனமான பெண் பத்திரிக்கையாளர் ஒருவரால் முன்வைக்கப்படுகிறது, அதற்கு அந்த கனிம நிறுவன உயர் அதிகாரியால் எந்த பதிலுமே சொல்ல முடிவதில்லை,

அந்த ராக்கா என்னும் பெண் பத்திரிக்கை செய்தியாளராக நம் கொங்கனா சென்  நடித்திருக்கிறார் ,அந்த வேதாந்தா கனிம வள நிறுவன உயர் அதிகாரி அக்னி போஸாக நடித்திருக்கிறார். அவரின் தனிமையில் உழலும் குடிக்கு அடிமையான மனைவி ஜில்லிக் என்னும் கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரின் கணவர் ஓயாமல் பயணங்கள் மேற்கொள்ள, இவர் தனிமைக்கு இரையாகிறார், இவர் திரைமேதை ஃபெலினி, மற்றும் ரபீந்த்ரநாத் தாகூரின் கவிதைகளுக்கு தீவிர ரசிகையாகவும் இருக்கிறார், தன் கணவனைப் போலவே தானும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்னும் லட்சியம் கொண்டிருக்கிறார்.விரைவில் ஒரு ஏர்ஹோஸ்டஸ் பயிற்சிப் பள்ளியை தன் முன் அனுபவத்திலிருந்து துவங்க ஆசை கொண்டிருப்பவர்.

இவர்களின் மணவாழ்க்கையில் எழும் ஊடல்களைக் களைவதற்கு மனாலி  சென்று ஒரு உயர்தர கெஸ்ட் ஹோமில் தங்கி, 2வார விடுமுறையை 2ஆம் தேன்னிலவு போல உல்லாசமாகக் கழிக்கின்றனர். அங்கே அந்த கெஸ்ட் ஹோமை நிர்வகிக்கும் இஸ்லாமிய தம்பதிகளாக முதிய விஞ்ஞானி  கபீர் சவுத்ரி  வேடத்தில் , நடித்திருக்கிறார்,இவர் தன் முதுமையால் சக்கர நாற்காலியில் விழுந்து விட்டிருந்தாலும், கம்ப்யூட்டரில் அப்டேட்டாக இருக்கிறார், ஹேக்கிங் மென்பொருள் ஒன்றை கண்டு பிடித்து அதை மேம்படுத்தியும் வருகிறார்.

அவரது மிகுந்த ஆச்சாரமான மனைவி லைலா கதாபாத்திரத்தில் Lolita Chatterji  நடித்துள்ளார். இவர்கள் நடத்தும் கெஸ்ட் ஹோம் மிகவும் புதுமையானது, இவர்களின் மகன் டாரா பிபிசி பத்திரிக்கை செய்தியாளன், காஷ்மீரில் நிலவி வரும் ராணுவ நடவடிக்கையால் 5 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனவன்.தன் மகன் முஸ்லிம் என்பதால் போலியாக இந்திய ராணுவத்தால் என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கலாம் என லைலா உறுதியாக நம்புகிறார்,பல சமயம் அவருக்கு இதனாலேயே ஹிஸ்டீரியா போன்று வருகிறது, அவ்வேளைகளில் மாற்று மதத்தாரை, அவரது நம்பிக்கைகளை துவேஷிக்கிறார் .  அதோ தரையெல்லாம் என் மகனின் ரத்தம் என பதறுகிறார்,

 வேலைக்காரியிடம் சொல்லி தரையில் நீர் ஊற்றச் செய்து தரையை  தானே தேய்த்துத் துடைக்கிறார். ஆனால் மறுநாள் அவர் நேற்று நடந்த அமர்க்களங்களை சுத்தமாக மறந்து இயல்பான நிலைக்கு திரும்பி விடுகிறார், வந்திருக்கும் விருந்தினருக்கு ராயல் குசின் உணவு வகைகளை சமைத்துப் பறிமாறுகிறாள்.

இவர்களைத் தவிர முக்கிய கதாபாத்திரமாக பெரும்பாலான பழங்குடிகள் பற்றிய சித்தரிப்புகள் வரும் திரைப்படங்களில் டாக்டராக தோன்றும் இதிலும் நியாம்கிரி பழங்குடி மக்களுக்கு சிகிச்சையளிக்கும்   ப்ரபோல் ராய் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இப்போது வெளியான நீலாகாஷம் பச்சக்கடல் சுவர்ண பூமி என்னும் படத்திலும் பழங்குடிகளுக்கு உதவும் நல்ல மனம் கொண்ட டாக்டர் வேடம் பூண்டிருந்தார். படம் பார்க்கும் பார்வையாளர் மனதில் பதிந்து விடுவார்.

அவசியம் படத்தைப் பாருங்கள்,  நம் இந்தியாவில் இருக்கும்  இயற்கையின் சொர்க்கபுரியான மனாலியின் எழில் கொஞ்சும் அழகையும் மக்களின் வாழ்வியலையும்,ஒரிஸ்ஸாவின் நியாம்கிரி மலையயும்,அதன் இயற்கை அழகினையும்,மாந்தர்களையும்,கொல்கத்தா நகர சூழலையும் வாழ்வியலையும், இயக்குனர் மிக அருமையாக படமாக்கியிருக்கிறார். படத்தை மேலே சொன்ன முக்கியமான 6 கதாபாத்திரங்களால் செதுக்கியிருக்கிறார் .

உலக சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத ஒரு படம், பொதுவாக பெங்காலி திரைப்படங்கள் போஸ்டரில் ஆங்கிலப் பெயரைக் கொண்டிருக்காது, அதே போல  பல நல்ல திரைப்படங்கள் கூட ஆங்கில சப்டைட்டில்களை கொண்டிருக்காது, அவ்வளவும் மொழிப்பற்றினால் தான்,அந்நிய விருதுகளை ஒரு பொருட்டாக கருதாத இன மானத்தினால் தான்  . இந்தப் படம் ஒரு காம்போஸிட் லிங்குஸ்டிக் படம், ஒரு சேர பெங்காலி, ஹிந்தி, உருது, ஆங்கிலம் என கதாபாத்திரங்களால் பேசப்படுகிறது, அதிர்ஷ்டவசமாக இதற்கு ஆங்கில சப்டைட்டில் கிடைத்தது.படம் அவசியம் பாருங்கள்.

இதன் ஆங்கில சப் டைட்டில் தரவிறக்க:-
http://www.subtitleseeker.com/2961236/Shunyo+Awnko%3A+Act+Zero/Subtitles/English/
படம் தரவிறக்க:-
https://torrentz.eu/8e73cc466f0489cd1d177b19ad4ff5b920a3d7f5

படத்தின் ட்ரெய்லர் யூட்யூபிலிருந்து