என் உயிர் தோழன் திரைப்படமும் நடிகர் கை தென்னவனும்



என் உயிர் தோழன்[1990] படம் பல வருடங்கள் கழித்து மீண்டும் பார்த்தேன் , படம் வெளியாகி 24 வருடங்கள் ஆனாலும் மிகவும் ஃப்ரெஸ்ஸு,

நேற்று,இன்று,நாளையின் அரசியல் சூழலை பட்டவர்த்தனமாக சொல்லும் படம்,

அதில் டைட்டில் கார்டில் வரும் அரசியல் நையாண்டி பாடலனான தம்பி நீ நிமிர்ந்து பாரடா தலையை நிமிர்ந்து பாரடா என்னும் பாடலை எழுதிப் பாடியது இசைஞானி இளையராஜா.

அப்பாடலின் துவக்கத்தில்  நண்பர் இளையராஜாவுக்கு ஒன்றை குறிப்பால் உணர்த்துகிறார் பாரதிராஜா,என் உயிர் தோழன் இளையராஜா என்பது தான் அது,அது ஆங்கிலத்திலும் தமிழிலும் அடுத்தடுத்து வருகிறது.நண்பர்கள் இந்த லின்கில் சென்று அதைப் பார்த்து ரசிக்கலாம்.
http://www.youtube.com/watch?v=6HWfoo4T0ZE

படத்தில் நீக்கப்பட்ட மச்சி மன்னாரு என் மனசுக்குள்ள பேஜாரு,என்னும் மெட்ராஸ் பாஷையில் உருவான பாடலையும் எழுதி பாடியது இசைஞானி இளையராஜா.மிகவும் டக்கரான பாடல் அது.
http://tamiltunes.com/en-uyir-thozhan.html

அடுத்த படியாக பலமான அறிமுகங்களான பாபு [முதுகுத் தண்டில் அடிபட்டு ஃபீல்ட் அவுட் ஆனவர்] மற்றும் ரமேஷ் என்னும் பெயர்கள் வருகிறது,பின்னர் ரமா.

பாரதிராஜாவின் அறிமுகங்களிலேயே நல்ல திறமை இருந்தும் சினிமாவில் அதிர்ஷ்டம் இல்லாமல் ஜொலிக்க முடியாமல் போன அறிமுகமாக அமைந்துவிட்டது,இம்மூவரின் அறிமுகம்.

பாபு ஏற்றது குயில் குப்பத்து தர்மன் கதாபாத்திரம் , ரமேஷ் என்கிற கை தென்னவன் ஏற்றது விளாத்திகுளம் கிராமத்தில் வரும் கூத்து நடிகர் தென்னவன் கதாபாத்திரம்,இவர் பாத்திரத்துக்கு பாரதிராஜாவே குரல் கொடுத்து இருந்தார்.

ரஞ்சன் என்னும் லிவிங்ஸ்டன்,சார்லி என அட்டகாசமான காஸ்டிங்கைக் கொண்ட படம்,எத்தனை புதுப்பேட்டை வந்தாலும் எத்தனை மெட்ராஸ் போல படங்கள் வந்தாலும் ,என் உயிர் தோழன் தான் அகராதி,படத்தின் பலம் வாய்ந்த வசனங்களை எழுதியது பாபு.கே.எஸ்,  [மெட்ராஸ் பாஷையில் வரும் ஓத்தா, ஒம்மாள, தாரவாந்துடுச்சு, கெலுப்பு, ரீஜெண்ட், கியக்கு, நாஸ்தா, ஷிட்டி, பேஜாரு, டாவு, என ரம்மியம்] படத்தில் மெரினாவில் இடிக்கப் பட்ட சீரணி அரங்கமும் ஒரு அங்கமாக வருகிறது

நல்ல பவர்ஃபுல்லான கதாபாத்திரங்கள்.ஆனால் இவர்களுக்கு எதிர்பார்த்த ப்ரேக்த்ரு கிடைக்கவில்லை.

ரமேஷ் aka தென்னவனுக்கு சொல்லும்படியாக நல்ல படங்கள் கிடைக்காமல் 12 வருடங்கள் கழித்து ஜெமினி படத்தின் கை கதா பாத்திரம் தான் இவரைக் கைதூக்கிவிட்டது,
ரமேஷ் துரைராஜ் என்கிற கை தென்னவன்
அதில் இவர் நடிப்பை பாராட்டி இந்து தினசரி விமர்சனம் எழுதியதைப் படித்த கமல்ஹாசன் விருமாண்டியில் நெப்போலியனுக்கு குடை பிடிக்கும் விசுவாசியான தெலுங்கு பேசும் கொண்ட்ராசு  கவுண்டர் கதாபாத்திரம் கொடுத்து நம் மனதில் தங்க வைத்தார்.

அந்த கொத்தாளன் கேங் இவர் தோப்பில் புகுந்து 20க்கும் மேற்பட்டோரை கொன்று போடுகையில் நம் மொத்த இரக்கத்தையும் சம்பாதித்துவிடுவார் தென்னவன்.

அதன் பின்னரும் நல்ல ப்ரேக் த்ரூ இல்லாமல் தவித்தவருக்கு சின்னச் சின்ன குணசித்திர வேடங்களே கிடைத்தன,அதிலும் அவர் தன் தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்து வந்தார், பதித்து வருகிறார்,

இப்போது ஜிகிர்தண்டாவில் ஹாலிவுட் ஹீரோ+ஹீரோயின் மாஸ்க் போட்டுக்கொண்டு தன் லவ் இண்ட்ரஸ்டுடன் ஜல்சா செய்கையில் அந்த காமெடி வில்லன், இவரை வீடு புகுந்து சுட்டுக் கொல்வான். எப்பேர்பட்ட வேடத்தையும் கௌரவம் பார்க்காமல் திறம்பட  செய்யும் நடிகர் என அதில் உணர்த்தினார் .

இவரை பலர் மலையாள நடிகர் லாலுடன் இணைத்து குழப்பிக் கொள்கின்றனர்,பலருக்கு இவரின் பெயர் என்ன என்று தெரியாது, ஆனால் திரையில் இவரை நிச்சயம் ரசித்திருப்பார்கள்,

சினிமா இதுவரை எத்தனையோ பேரை கொண்டாடியிருக்கிறது எத்தனையோ பேரை ஓவர் நைட்டில் மறந்து விட்டிருக்கிறது, எத்தனையோ பேர் முகவரி இழந்து போயினர்,
ஏ ராசாத்தி பாடலில் தென்னவன் ரமா
அதில் எதிர்நீச்சல் போட்டு வருபவர்களில் இவரும் ஒருவர்,தென்னவன் தமிழ் சினிமாவின் நல்ல நடிகர்.இன்று படம் பார்க்கையில் அவரைப் பற்றி எழுத வேண்டும் எனத் தோன்ற வைத்தது.

ஒருவனுக்கு சோதனை வந்தால் சுற்றிச் சுற்றி அடிக்கும் என்பது போல இவரின் படத்தை கூகிளில் தேடினால் கேப்டன் விஜயகாந்த் நடித்த தென்னவன் படமா வர வேண்டும்?!!!

நடிகர் தென்னவன் ஃபேஸ்புக்கில் இருக்கிறார் இது அவரது பக்கம் https://www.facebook.com/ramesh.duraisamy.549?fref=ts

தென்னவன் அறிமுகமாகிய ஏ ராசாத்தி பாடல்
http://www.youtube.com/watch?v=KEOMbkmQuxk

படத்தில் கடைசியாக வரும் போஸ்டர் காட்சியையும்  படம் வெளியாகி அடுத்த வருடமே கொலையான ராஜிவ் காந்தியின்  ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பு ஸ்பாட்டின் புகைப்படம் தாங்கிய பிரச்சார போஸ்டர்களையும் இணைத்துப் பார்த்து பொருள் அறியலாம்,

நம் படைப்பாளிகள் எத்தனை ? முதுகெலும்புடன் இயங்கியிருக்கின்றனர் எனப் புரியும்.