கே.பாலசந்தரின் மீள் அறிமுகமான குணச்சித்திர நடிகர் மன்மதலீலை புகழ் ஹரிஹரசுப்ரமணியம்



மன்மதலீலை[1976] திரைப்படத்தில் கே.பாலசந்தரின் மற்றுமோர் மீள் அறிமுகமான ஹரஹரசுப்ரமணியம் என்னும் குணச்சித்திர நடிகரின் பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியாது,

ஆனால் அவர் மன்மதலீலை படத்தில் செய்த குமாஸ்தா விசுவையர் கதாபாத்திரம் எல்லோர் மனதிலும் இன்றும் பசுமையாக நின்றிருக்கும்.

இதில் பெண்பித்தரான கமல்ஹாசன் மனைவி ஆலத்துக்கு தெரியாமல் பல லீலைகளை நிகழ்த்துவார்,ஒவ்வொரு பெண்களாக வலைவிரித்து வீழ்த்தி சாபம் பெறுவதையே வழக்கமாக வைத்திருப்பார்.படத்தில் கமலைப் பற்றி கவிஞர் எழுதிய  இப்பாடலின் வரிகளைப் பாருங்கள்.

”மன்மத லீலை,மயக்குது ஆளை
மந்திரம் போல சுழலுது காளை
மயக்கம் பிறக்க வைக்க உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
எனக்கு எனக்கு என்று தனக்குள் நினைத்து கொண்டு தொடர்பவர் உண்டு”

அந்த பாவங்களுக்கான வடிகாலாக அலுவலகத்தில் பாலக்காடு பிராமண பாஷை பேசிக்கொண்டு, மிகுந்த பக்திமானாக வலம் வரும் இவரைச் சிக்கெனப் பற்றிக்கொண்டு விடுவார் கமல்.



ஒருகாட்சியில் இவர் கமலின் அறைக்கு வெளியே நின்று ஒருவாரம் லீவு கேட்பார்,கமல் என்ன காரணம் என்று கேட்க,அதுதான் விளக்கமாக எழுதியிருக்கேனே?என்பார். கமல் இவரை உள்ளே வரச் சொல்லியும்,வந்தால் ஒட்டுவாரொட்டி நோயாயிருந்தால் உங்களையும் ஒட்டிக்கொள்ளுமே என மறுப்பார். வெளியே சிரித்து உள்ளே ராட்சஸா,க்ராதகா என கமலை திட்டிப் புழுங்கும் அவஸ்தையை மிக அழகாக கொண்டு வந்திருப்பார்.

அலுவலகத்தில் பாவமன்னிப்பு கேட்டது போதாமல்,இவரின் வீட்டுக்கும் போன் செய்து பாவ மன்னிப்பு கேட்பார் கமல். ஒரு முறை கமலுக்கு காம இச்சைகள் தலைதூக்குவதை தவிர்க்க உணவில் உப்பை குறைத்துப் போட்டு உண்டு பழகு என்பார், மறுமுனையில் கமல் அப்பதிலில் திருப்தியடையாமல் அப்படியும் காமம் அடங்காவிட்டால்?!!! என்று கேட்க, இவர் அவள் உடம்பை கண்டதுண்டமாக வெட்டி உப்பை அதில் போடு என்று அழுது கொண்டே சொல்வார்.

அன்னமிட்ட வீட்டிலேயே கன்னம் வைப்பது போல கமல் விஸ்வய்யரின் மகளுக்கே கன்னம் வைக்கப் பார்ப்பார்.விசுவய்யர் வீட்டுக்கும் திடீரென வருவதை வழக்கமாக்கிக் கொண்ட கமல் அன்று அவரின் வீட்டுக்குச் சென்றவர் அவருடைய வயது வந்த மகள் அங்கே தென்படாமல் போக எம்ஜிஆர் என் காரில்தான் உள்ளார் என்று சொன்னவுடன் அப்பாவின் கண்டிப்பால் அறையில் மறைந்திருந்த அப் பெண் என்ன  எம்ஜிஆரா ?!!!   எங்கே எங்கே? என்று கேட்டபடி வெளிப்படுவார். இப்படி ஒவ்வொருவரின் பலவீனத்தையும் அறிந்து குறி பார்த்து அடித்து வீழ்த்துவார் கமல்.

ஒரு சமயம் வீட்டு டெலிபோன் பில் எக்கச்சக்கமாக எகிறிவிட,கமலின் மைத்துனரான ஒய்.ஜி,மகேந்திரன் அதன் காரணத்தை துப்பறிந்தவர் கமலின் மனைவி ஆலத்திடம் ராங்நம்பர் ஒய்.விஜயாவின் நம்பருக்கு பதிலாக இவருடைய நம்பரைத் தவறுதலாக தந்துவிட,ஆலம் இவரின் ஆச்சாரமான மனைவிக்கு போன் செய்து அனாச்சாரமாக பேச,அங்கே பெரிய ரகளையான சிரிப்பு வெடிக் காட்சியாக  அது மாறும்.

ஒரு கட்டத்தில் கமல் பாவங்கள் செய்து கொண்டு போகப் போக இவர் மிகுந்த மன உளைச்சல் கொள்வார், இவர் கொடுத்த பாவமன்னிப்புக்கு ஏற்ப இவரது தாடியும் வளர்ந்து பெரிதாகி விடும்,கடைசியாக வேலைக்கு முழுக்கு போட்டு விட்டு,  இல்லறத்தையும் வெறுத்தவர் சந்நியாசியாக மாறி ஹரி கதாகாலட்சேபம் நிகழ்த்தப் போய்விடுவார்.

இவரை பாலசந்தர் தன் பெரும்பாலான படங்களில் ஒரு காட்சியிலேனும் தோன்ற வைத்து விடுவார்.அப்படி பொய்க்கால் குதிரை படத்திலும் நாயகன் ராமகிருஷ்ணா காணுகிற தேர்வு ஹால் கனவில் இவரை எக்ஸாமினராக தோன்ற வைத்திருப்பார்.அதுவும் ஒரு சுவையான காட்சி.

சிந்துபைரவி படத்தில் ஜேகேபி குடிக்கு அடிமையான தருணத்தில் சபாக்கள் காற்றாடும்,அல்லது கச்சேரிகள் ரத்து  செய்யப்படும்.அது போன்ற ஒரு தருணத்தில் ஒரு சபாவில் உப்புமா பாகவதர் ஒருவரை அமர்த்தி பாட வைக்க.அவர் தர்பார் ராகத்தில் அழுது வடிந்தபடியே யோச்சனா கமல லோச்சனா என பாடுவார்,

அவரின் போதாத நேரம் ஜேகேபி அங்கே போதையில் தள்ளாடியபடி வர,முன்வரிசையில் ஒருவர் கும்பிட்டு விட்டு எழுந்து அமர இடமும் தருவார்,சபையே அவரையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் , உப்புமா பாகவதர் முகத்தில் ஈயாடாது,பாட குரல் எழும்பாமல் எப்படியோ யோச்சனாவை முடித்து விட்டு ஜேகேபியைப் பார்த்து கூழைக்கும்பிடு போடுவார்,

அவர் அருகே எழுந்து வந்த  ஜேகேபி ,என்னய்யா பாடறே நீ, ஜலதோஷம் பிடிச்சா மாதிரி!!!ஜீவனே இல்லாமே,என்ன பாட்டிது?, புலிநகச் சங்கிலி போட்டுகிட்டா  ஜேகேபி ஆயிடமுடியுமா நீ?அல்பனுக்கு பவுசு வந்தா மாதிரி அலங்காரம்,ஆடம்பரம்,பட்டு ஜிப்பா,நெத்தில விதவிதமா பொட்டு, பத்து விரலுக்கு மோதரம், வெளியே ஆளுயரத்துக்கு கட்டவுட்,இந்த தர்பார்ல எல்லாம் குறைச்சல் இல்ல,

தர்பார் ராகமா பாடற நீ,நான் தர்பார் ராகம் பாடட்டுமா? என ஆவேசமாக முழங்கி விட்டு,அவர் ரீரீரீ என்று லோச்சனாவை ஆலாபனை செய்து முடித்தவர், தர்பார்னா அப்படி பாடனும் , பாடு!!! என்று சொல்லிவிட்டுப் புறப்படுவார்.அங்கு பல்பு வாங்கும் உப்புமா பாகவதர் வேறு யாருமல்ல ஹரிஹரசுப்ரமணியம் தான்.

படத்தில் ஜேகேபி பாடிய எல்லா பாடல்களுக்கும் தாஸேட்டா குரல்கொடுத்தது நமக்கு தெரியும், இந்த உப்புமா பாகவதருக்கு பின்னனி பாடியது கோவிந்தராஜ் என்னும் பாடகர், அவருடைய பெயரையும் மறக்காமல் இயக்குனர் பாலசந்தர் டைட்டில் ஸ்க்ரோலில் இடம்பெறச் செய்ததைப் பாருங்கள்,அது தான் அவரது நேர்மை,மனிதாபிமானம்.ஒரு கலைஞன் தன் படத்தில் சிறு வேடம் செய்தாலும் மறக்காமல் குறிப்பிட்டுவிடுவார்.

இந்த சிந்துபைரவி படத்தின் காட்சியை இங்கே பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=823eiypugfs&x-yt-cl=85114404&x-yt-ts=1422579428#t=71



சிந்துபைரவி படத்தின் இக்காட்சிக்கான இன்ஸ்பிரேஷனை இயக்குனர் கே.பாலசந்தர். அவர்கள் அவரின் ஆப்த நண்பரான இயக்குனர் கே. விஸ்வநாத்திடமிருந்து தான் பெற்றார் என்றால் மிகையில்லை, 1984ஆம் ஆண்டு வெளியான சலங்கை ஒலி படத்தை மிகவும் ரசித்துக் கொண்டாடியவர் , அதே போல ஒரு கலைஞனின் கதையை தமிழ் சினிமாவில் பதிவு செய்ய வேண்டும் என தீராத ஆசை கொண்டார்.

சலங்கை ஒலி படத்தில் குறிப்பாக போலி நடனக் கலைஞரை இனம் கண்டு தினசரியில் விமர்சனம் எழுதி நாட்டிய-மயூரி!!! என்று கிண்டலாக பாடம் புகட்டிய தன் சீடன் கமல்ஹாசன் செய்த அக்காட்சி அவருக்கு நெஞ்சில் நின்று விட்டது,அதற்கு தக்க மரியாதை செய்வது போல இந்த தர்பார் ராகக் காட்சியை சிந்து பைரவி படத்தில் வைத்தார், இரண்டுமே அழிவின் விளிம்பில் இருக்கும் இரு ஒப்பற்ற கலைஞர்கள் ,தெய்வீகமான  கலை சபையில் யார் யாரிடமோ சிக்கி சின்னாபின்னமாவதைப் பார்க்க சகிக்காமல் உள்ளம் குமுறுவதைச் சொன்ன படைப்புகள்.

அந்த சலங்கை ஒலி திரைப்படத்தின் காட்சியை இங்கே பாருங்கள்
https://www.youtube.com/watch?v=M5KpxQysdmo



அப்போதைய படங்களில் காபரே நடனங்கள் மட்டும் ஆடிக்கொண்டிருந்த ஆலத்தை துணிந்து  மன்மதலீலை படத்தின் கதாநாயகி ஆக்கினார்.ஆலத்தை இதில் குடும்பத்தலைவி ரேகாவாகவே மாற்றியிருந்தார் இயக்குனர்.ஒரு கலைஞனிடம் மறைந்திருக்கும் கலைத் திறமையைக் கண்டு பிடித்து, வெளி உலகுக்கு கொண்டு வருபவர் கே.பாலசந்தர்.

மன்மதலீலை  நடிகை ஜெயப்பிரதாவுக்கு  தமிழில் முதல் படம்,அதே ஆண்டில் பாலசந்தர் அவள் ஒரு தொடர்கதை படத்தின் தெலுங்கு வடிவமான அந்துலேனிகதா படத்திலும் இவரை மீள் அறிமுகம் செய்தார்,ஜெயப்ரதா 1974ஆம் ஆண்டே பூமிகோசம் என்னும் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிவிட்டாலும் பரவலாக அவருக்கு அங்கீகாரம் அளித்த அறிமுகம் இயக்குனர் பாலசந்தருடையது தான்,

 1976 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தெலுங்கில் இவருக்கு ஏறுமுகம் தான். கே.விஸ்வநாத்தின் படைப்புகளில் தொடர்ச்சியாக இடம் பெற்றார், இந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குனரான சத்யஜித் ரே அவர்கள் இவரின் ரசிகராவார், இவரை வைத்து அவர் படம் இயக்க இருந்தது முடியாமலே போனது, உலகின் பேரழகிகளில் ஜெயப்ரதாவு ஒர்வர் என்று அவர் சொல்லியிருக்கிறார். இப்படத்தில் அவர் கண்ணகி என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார். பின்னாளில் கே.பாலசந்தர் எங்க ஊரு கண்ணகி என்று மாதவியை வைத்து ஒரு படம் எடுத்தார். ராதாரவிக்கும் இதுதான் அதிகாரபூர்வமான முதல் படம் ,