புரவ்ருதம் ( puravrutham ) மலையாளம் (1988)

இயக்குனர் லெனின் ராஜேந்திரனின் புரவ்ருதம்  puravrutham (1988)  இடதுசாரி சிந்தனைகள் பேசிய அருமையான படம்,

நக்ஸலைட் புரட்சி உருவாவதற்கு முந்தைய கேரளத்தின் குக்கிராமத்தில் , தம் கூலியாட்களைச் சுரண்டிப் பிழைக்கும்  முதலாளியை, கடைசி வரை எதிர்த்து நின்று போராடும் ஓர் உண்மை  வீரனின் கதை,

ராமன் என்ற மைய கதாபாத்திரத்தில் ஓம்புரி, அவரின் மனைவியாக ரேவதி, இவர் தன் மனைவியை முதலாளிக்கு புரிந்துணர்வுடன் கூட்டித் தராத காரணத்தால் இவர் ப்ரஷ்டு செய்யப்பட்டு ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப் படுகிறார்.இவருக்கு  தங்க இடம் தரக்கூடாது, அருந்த கள் தரக்கூடாது, மளிகை தரக்கூடாது, சவரம் செய்யக்கூடாது, வைத்தியம் பார்க்கக் கூடாது என ஆயிரம் கெடுபிடிகள்.

இவர் அதையும் மீறி மனைவியுடன் விவசாயம் செய்கிறார்.யார். வந்தாலும் வீழ்த்துகிறார்.

இவரை அடக்கி ஒடுக்க வெளியூரில் இருந்து கூட்டி வரப்படும் களரிவீரனாக முரளி,ஊருக்குள் வந்தவர் ராமனின் அசல் வீரம் பார்த்து பிரமித்து அவனின் நண்பனாகிறார்,

அங்கே முதலாளியால் வன்புணர்ந்து விதவையாக்கப்பட்ட மாப்ளமார் சமுதாயப் பெண்ணிடம் காதல் வயப்படுகிறார்,அப்பெண்ணை மணமுடிக்க விழைகிறார்.

இவர்கள் முன்னெடுத்தப் புரட்சி என்னவாகிறது? என்பது தான் மீதக் கதை, இது முதலாளி வர்க்கத்தின் வேடகைக்கு பலியான ஆயிரமாயிரம் ஏழைக் கூலிகளின் உண்மைக்கதை

ஓம்புரி, முரளி,  ரேவதி, பாபு நம்பூதிரி,கூலிகள் யார் திருமணம் செய்தாலும்  நைச்சியமாகப் பேசி முதல் ராத்திரியில் முதலாளிக்கே கூட்டித் தரும் கணக்காளனாக இன்னசன்ட்,

முதலாளியாக பாலன் கே நாயர் , மற்றும் கேபிஏஸி லலிதா என  அருமையான காஸ்டிங்கைக் கொண்ட படம்,

ராமசந்திரபாபு ஒளிப்பதிவு மிகுந்த ரசனையுடன் இருக்கும், வனக்காட்சிகள், வயல் பரப்புகள், மின்சாரமில்லாத ஓர் கிராமம், அதன் மனிதர்கள்  என அச்சு அசலாக காட்டியிருப்பார்,  கவளம் நாராயண பணிக்கர் நாட்டார் பாணியில் இசையமைத்துள்ளார்.

முதலாளிமார்கள் தங்களிடம் வேலை செய்த கூலிகளின் மனைவிமாரைப் பெண்டாள்வதை விதேயன், தலப்பாவு, பரதேசி போன்ற திரைப்படங்கள்  பேசியது, இது அதற்கெல்லாம் முன்னோடி

முழுப்படமும் இங்கே, சப்டைட்டில் இல்லை, ஆனாலும் புரியும், அவசியம் பாருங்கள்
https://youtu.be/vknslLCjjWs