நெஞ்சுக்கு நீதி!!!சபாஷ் சரியான தீர்ப்பு!!!

தர்மபுரி பஸ் எரிப்பில் 3 பேருக்கு  தூக்கு : கொடூரக் கொலை என்று கூறி மரண தண்டனை
ன்னும்  தினமலர் செய்தி படித்து ஆனந்தக் கூத்தாடினேன், எவ்வளவு தாமதமான தீர்ப்பு?!!! ஆனாலும் ஆவலுடன் எதிர்பார்த்த தீர்ப்பு. நம்பினார் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு!!! என்று உடனே புரிந்தது, அரசு நின்று கொன்றாலும்: கொல்லும் என்றும் புரிந்தது, விரைவில் அவர்களை தூக்கிலும் போட ஆவண செய்யவேண்டும், இல்லையென்றால் ஜனாதிபதிக்கு கடிதம், தந்தி, தொலைபேசி, கருணைமனு, என்று ஒரு வருடத்தை ஓட்டிவிடுவார்கள். நான் முதலில் மரண தண்டனை தவறு! என்று மூடத்தனமாக நினைத்து வந்திருந்தேன், ஆனால் என் எண்ணத்தை எச்சில் தொட்டு என்றோ அழித்துவிட்டேன். மாற்றம் ஒன்று தானே மாற்றமில்லாதது. அடடா!!! ,மரண தண்டனை என ஒன்று மட்டும் இல்லையெனில், நம்மால் நிம்மதியாக வீட்டுக்குள் தூங்க முடியாது, ஊரெங்கும் மர்டரர்கள். பெடோபைகள், இன்செஸ்டுகள், டகாய்டிஸ்டுகள். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் தான்.  யாரும் நிம்மதியாக வெளியே நடமாடமுடியாது.

ல்லாவற்றிற்கும் மேலாக வஞ்சிக்கப்பட்ட மக்களின் ஆழ்மனதுக்குள் பழிவாங்கும் குணம் கணன்று கொண்டே இருக்குமாம், ஆனால் நாட்டில் நிலவும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளிலிருந்து நயவஞ்சகர்கள் மிக எளிதாக தப்பிவிடுவதால் ,அந்த பழிவாங்கும் குணம் மக்கி மண்ணாகி நாம் கையாலாகாதவர்களாகிவிட்டோமே!!!,

ன் மகளை,மகனை வன்புணர்ந்து கொன்று தின்ற பாந்தர் சிங் கோலி நன்றாக நடமாடுகிறானே?!!என் அம்மாவை கொன்றவன் நன்றாக நடமாடுகிறானே!! என் வீட்டை கொள்ளையடித்தவன் நன்றாக நடமாடுகிறானே!!என் நிலத்தை அபகரித்து அப்பா அம்மாவையும் கொன்ற @@@@#######மகன் அமைச்சன் நன்றாக நடமாடுகிறானே!! போபாலில் நாற்பதாயிரம் பேர் நச்சுவாயுவால்  சாகக் காரணமான வாரன் ஆண்டர்சன் சொகுசாக வாழ்கிறானே?!!!,அவன் கைக்கூலிகள் விஐபி சிறையில் விருந்தோம்புகிறார்களே?!!!என்று கேவி கேவி, அழும்.

றந்த மாணவியாவது ஒரு முறை தான் இறந்திருப்பார், ஆனால் அவரை நினைத்து 10வருடம் திவசம் கொடுத்த குடும்பத்தார் , எத்தனை முறை மனதால் இறந்திருப்பார்கள்?

ப்படி கேவி அழும் நெஞ்சுக்கு, எப்படி மனசாந்தி கிடைக்கும்?!!!இதோ மேலே வந்துள்ளதே?!!! அப்படி தீர்ப்பு வந்தால் மட்டுமே சாத்தியம்!!!, 2006 டிசெம்பர் மாதமே மேற்கண்ட பஸ் எரிப்பு கொலைகாரர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது, அப்போதே இவர்களை தூக்கில் போட்டிருந்தால் இறந்த மாணவியரின் ஆத்மா என ஒன்றிருக்குமேயானால்,அது விரைவாக சாந்தியடைந்து சொர்க்கத்துப் போயிருக்கும், அந்த பழிவாங்கும் வெறி கணன்ற பெற்றோருக்கு, சகோதரருக்கு, உடன் பிறவா சகோதரனான் என் போன்றவருக்கு மனசாந்தியும் என்றோ கிடைத்திருக்கும்என்பதை.நண்பர்கள் கண்மூடி நினைத்துப்பார்க்க வேண்டும்.

னிமேலும் தாமதிக்காமல் இவர்களை கண்ணாடி அறையில்,மாணவிகளின் பெற்றோர் குழுமியிருக்க , தூக்கில் போட வேண்டும், அதை எல்லா அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பவும் வேண்டும். அது தான் நெஞ்சுக்கு நீதி. அப்போது தான் சட்டம் ஒரு இருட்டறை அல்ல என நம்புவோம். மக்கள் மானாட மயிலாட மட்டுமல்ல, இதையும் பார்ப்பார்கள். சன் டிவியின்  டிஆர்பி யும் எகிரும்.

ப்போது ஒரு குற்றவாளி பெற்ற தண்டனைக்கு மேல்முறையீடு செய்கிறானோ!!!அவன் அப்போதே தவறுக்கு வருந்தவில்லை , என்று தான் என் அகராதியில் பொருள். மேலும் இணைய தயிர்வடையான என்னைக் கேட்டால் தூக்கு தண்டனை மிக சுலபமானது, ஆங்கிலேயன் கண்டுபிடிப்பு. சீக்கிரம் வலியில்லாம சாகமுடிவது, அது கூடவே கூடாது. எனவே நான் தீர்க்கமாக பரிந்துரைப்பது லீதல் இஞ்சக்‌ஷனையும், ஓல்ட் ஸ்பார்கி எனும் மின்சார நாற்காலியையும் தான்.

டுத்தவருக்கு நடந்தால்   செய்தி , நமக்கு நடந்தால் அது கொடூர சம்பவம், என்னும் மனநிலை அறுப்போம். நல்ல அண்டை மனிதர்கள் எல்லோரையும் சமமாக பாவிப்போம்.தீயில் வெந்து மடிந்த எந்த சுகத்தையும் அனுபவித்திராத இன்னுயிர்களுக்கு இத்தருணத்தில் அஞ்சலி செய்வோம். ஏழை உயிர் கிள்ளுக்கீரை இல்லை,என உரைப்போம்.
=====0000=====
கொடூர கொலையாளிகள் விபரம்:-
ர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு விதிக்கப் பட்ட கைதிகள் நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. எனவே, 'அக்டோபர் 8-ம் தேதி காலை 6 மணிக்குள் மூவரையும் சாகும் வரை தூக்கிலிட்டுத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடுகிறேன்.' என்ற ஒரு கடிதத்தை சேலம் முதலாவது அமர்வு நீதிமன்ற நீதிபதி ராகவன், வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பிவிட்டார். சிறைக் கொட்டடியில் மூவரும் கண்ணீரில் இருக்கிறார்கள்!

இந்தக் கைதிகள் மூவரின் வீடுகளுமே தர்மபுரியில்தான். மூன்று குடும்பங்களில் இருப்பவர் களுமே, கதறலையும் கண்ணீரையும் மட்டுமே தங்களது பதிலாக நமக்குத் தந்தனர். இந்தக் குடும்பங்களின் இன்றைய நிலைமை என்ன?

நெடுஞ்செழியனின் மனைவி கஸ்தூரி. சொந்த அத்தை மகள். இவர்களுக்கு நான்கு வாரிசுகள். மூத்த மகன் மதி, பள்ளிப் படிப்போடு நின்று விட்டார். இரண்டாவது மகன் அருண்குமார், பி.இ. மாணவர். மகள்கள் பாரதி ப்ளஸ்-டூ-வும், நந்தினி ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர். ''அப்பாவ தூக்கில் போட்ருவாங்களா அம்மா? அப்பா இனிமே வீட்டுக்கு வரவேமாட்டாங்களா?'' என்று பாரதியும் நந்தினியும் திரும்பத் திரும்பக் கேட்கி றார்கள். பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து, அழுகிறார் கஸ்தூரி.

ரவீந்திரனை வீட்டிலும் நண்பர்களும் செல்லமாக மாது என்றுதான் கூப்பிடுவார்கள். இவரது மனைவி உமா. இவர்களுக்கும் நான்கு குழந்தைகள். மாது கைதான சமயம், நால்வருமே பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு இருந்தனர். இப்போது வழக்கு முடிந்து தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், கல்லூரி படிப்புக்கு வந்துவிட்டார்கள்.

மூத்த மகன் தென்னரசு, எம்.பி.ஏ. மாணவர். இரண்டாவது மகன் புவியரசன், எம்.பி.பி.எஸ். படிக்கிறார். மகள் ஆர்த்தி அரசியும் எம்.பி.பி.எஸ். மாணவிதான். கடைசி மகள் சசிலட்சுமி, கடந்த வருடம் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து உள்ளார். கணவர் துணை இல்லாமலேயே, கடந்த 10 வருடங்களாக நான்கு குழந்தைகளையும் நன்றாகப் படிக்கவைத்துக் கரையேற்றிய பெருமை உமாவைச் சேர்ந்தது. இருந்தாலும், கணவனை நினைத்து நினைத்துத் தினமும் அவர் கண்ணீர் சிந்தாத நாளே இல்லை!

முனியப்பனுக்கு மூன்றுமே ஆண் வாரிசுகள். மூத்த மகன் ரஞ்சித்குமார், போலீஸ்காரர். இரண்டாவது மகன் அஸ்வினும் கடைசி மகன் ராமனும் எம்.இ- முடித்து, கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக இருக்கிறார்கள். மூன்று வாரிசுகளும் எவ்வளவோ முயன்றும்கூட, முனியப்பனின் மனைவி கமலாவை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.

இந்த மூன்று குடும்பங்களின் வாரிசுகளுமே நன்றாகப் படித்துக் கௌரவமான நிலையில் இருக்கி றார்கள். பஸ்ஸில் எரிந்து கரிக்கட்டை கள் ஆகிப்போன கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி மூன்று பேரும்கூட இன்று உயிரோடு இருந்தால்... அவர் களும் இவர்களைப்போல நல்ல நிலையில் இருந்திருப்பார்கள். அவர்கள் பெற்றோரும் அதைப் பார்த்துப் பார்த்து சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.
 =====0000=====
நன்றி ஜூ.விகடன்