ரோட்.மூவி[Road.Movie][रोड, मूवी][இந்தியா][2010][15+]


ருமை நண்பர்களே!!!

நீண்ட நாட்களாக எழுத நினைத்தும் எழுத முடியாமல் போன படம் தான் இந்த ரோட்.மூவி. மிக அருமையும் வித்தியாசமுமான கதை, திரைக்கதையை கொண்டுள்ள படம், இதை நகரும் சினிமா பாரடைஸோ என்று கூட சொல்லலாம்.  பாரதம் தான் எத்தனை விதமான நிலப்பரப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது?!!!  என நான் எண்ணி வியக்காத நாளே இல்லை, ஒரு இந்தியர் ஒரே மாதத்தில் உலக சுற்றுலா கூட சென்று வந்துவிடலாம், ஆனால்!!!!  முழு இந்தியாவை ஒரு மாதத்தில் நீள, அகலமாக சுற்றிவந்துவிடமுடியாது . அது அத்தனை எளிதல்ல என்பேன்.

கவல் தொடர்பு புரட்சியில் தன்நிறைவு பெற்றுள்ளோம் என்கிறோம் , வாரா வாரம் எங்கள் தேசத்தின் எந்த ஒரு மாநிலத்திலுமுள்ள, குக்கிராம மக்களுடனும் கூட வீடியோ கான்ஃபரென்ஸிங் நடத்துவோம் என ஒபாமாவிடம் புழுகு மூட்டையை அவிழ்த்துவிடும் கேடு கெட்ட அரசியல்வாதிகளை ,  குடிக்க நீரேயில்லாமல், உண்ண உணவில்லாமல்,  50டிகிரி செல்சியஸ் வெப்பமும் உப்புக்காற்றும் வாட்டும்  கட்ச்[kutch] மற்றும் ஜெய்சால்மீரீன் [jaisalmir] பரந்துவிரிந்து வறண்ட பிரம்மாண்டமான பாலைவனத்தில், அலையவிட்டும், மலம் கழித்தால் கழுவ நீரில்லாமல் கற்களை கொண்டும் துடைத்துக்கொள்ளச் செய்ய வேண்டும் என்று நினைக்க வைக்கிறது.

ஹான்ஸ்ப்ரேர் தீவை , மலேசியாவின் ரப்பர் , பாமாயில் தோட்டங்களை, ஊழல் செய்து விலைக்கு வாங்கும் வசதிகொண்ட அந்த பிணம் திண்ணிகளால் ஒரு நாள்!!!, ஒரு நாள் கூட  இங்கே தாக்குபிடிக்க முடியாது என்பேன். தேசிய கீதம் படத்தில் வருவது போலவே அவர்களை கடத்தி கூட்டிச்சென்று இங்கே தான் வயிறு காயவிட்டு அடைத்து வைக்க வேண்டும்.இங்கே  உள்ள கிணற்றில் குறைந்தது 250 அடி ஆழத்தில் தான் குடிநீரே கிடைக்கிறது, எல்லா கிணற்றுக்குமே மூன்று கனத்த பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றன. கிணற்றுக்கு துப்பாக்கி ஏந்திய கொடிய கொலைகாரர்கள் பாதுகாப்புக்கு உண்டு. தண்ணீர் என்பது இங்கே பணம் கொழிக்கும் வியாபாரம். 


ங்கே மக்கள் மரணமடைந்தால் அது தாகத்தால் மட்டுமே இருக்கும்.  மக்கள்  இங்கே திருடுவது நீரை மட்டுமே. இந்த நடப்புகாலத்தில் கற்கால மனிதர்களை பார்க்கும்போது நாமெல்லாம் எத்தனை வசதிகளுடன் வாழ்கிறோம் என்று குற்ற உணர்வே ஏற்பட்டுவிட்டது, ஒரே தேசத்தில் ஏன் இந்த பாரபட்சம்? பின்னே ஏன்? நக்சலைட் உருவாகமாட்டான்? கட்டிடத்தின் விரிசலுக்கான ஊறுக்கண்ணை ஆராயாமல் அதன் மேல் சுண்ணாம்புபூச்சு மட்டும் அடிக்கும் போக்கைதான் மத்திய மாநில அரசுகள் தொன்றுதொட்டு கடைபிடிக்கிறது. 

இயக்குனர் தேவ் பெனகல்
ரொம்ப பொங்கிவிட்டேன், இப்போது கதைக்கு வருவோம். இவ்வளவு நேர்த்தியான பொழுதுபோக்கான திரைப்படத்தை எழுதி இயக்கிய தேவ் பெனகலை எவ்வளவு பாராட்டினாலும் நன்றி கூறினாலும் தகும். தேவ்-டி படத்தில் ஊதாரித்தனமான இளைஞன் வேடத்தில் வந்த அபய் தியால் இதிலும் அப்பாவின் தொழிலை வெறுக்கும், துடிப்பான  இளைஞனாக வருகிறார்.  படத்தின் 4 பிரதான பாத்திரங்களான இளைஞன் அபய் தியால், அழகிய நாடோடிப்பெண் தனிஷா சேட்டர்ஜி, நாடோடியான லாரி மெக்கானிக் சதிஷ் கௌஷிக், டீக்கடை சிறுவன் மொஹமத் ஃபைசலை வாழ்நாளில் மறக்கமுடியாது.
====0000=====
படத்தின் கதை:-
படத்தின் கதையை நான் மூன்று பகுதிகளாக பிரிப்பேன்.

1.எண்ணெய்:-
ட்டதாரி இளைஞன் விஷ்ணு, தந்தையின் ஆத்மா ஹேர் ஆயில்[ஹிமாமி நவரத்னா போன்றது] கம்பெனியில் மார்கெட்டிங் வேலை செய்ய மிகவும் பயந்தவன்,தப்பிக்க தருணமும் பார்க்க,  வீட்டின் அருகே உள்ள பழைய தியேட்டரை அதன் உரிமையாளர் ஒரு ஷாப்பிங் மால் கட்டும் அம்பானியின் வாரிசுக்கு விற்றுவிட, அங்கே தியேட்டர் வளாகத்தில்  இருக்கும் 1947ஆம் ஆண்டின் செவ்வி ரக ட்ரக் அனாதையாகிறது. அதை ஒரு வெளியூரில் உள்ள மியூசியத்துக்கு தியேட்டர் முதலாளியே ஓட்டிச்செல்ல முடிவு செய்கிறார், விஷ்ணு இடையில் புகுந்து, தான் அதை ஓட்டிச்சென்று பத்திரமாக மியூசியத்தில் சேர்க்கிறேன். என்கிறான்.அவரது நம்பிக்கையையும் பெறுகிறான். வீட்டில் அனுமதியும் பாடுபட்டு வாங்கிவிடுகிறான்.

விஷ்ணுவின் அப்பாவோ, அப்போதும் விடாமல் 2 அட்டை பெட்டிகள் நிறைய ஆத்மா ஹேர்ஆயில் பாட்டில்களை அவனிடம் கொடுத்து போகுமிடத்தில் உள்ள கடைகளில் மார்க்கெட்டிங் செய்யச் சொல்கிறார். அந்த ட்ரக் மிகப் புராதானமான, 2 விக்டோரியா வகை நடமாடும் ப்ரொஜகடர்களையும் கொண்டுள்ளது, அதை பற்றிய அருமை பெருமைகளை தெரியாமலே அந்த ஹைதர்கால பழசான ட்ரக்கை விஷ்ணு சபித்துக்கொண்டே ஓட்டிச் செல்கிறான்.


ழியில் டீக்கடை சிறுவன் ஒருவனையும் உதவிக்கு இருக்கட்டுமே!!! என்று ஏற்றிக்கொள்கிறான், ட்ரக் வழியில் ஒரு வறண்ட பாலைவனத்தில் பழுதாகிவிட, சிறுவன் பாலைவனத்தில் அலைந்து திரிந்தவன்,  ஒரு வயதான அழுக்கான நாடோடி மெக்கானிக்கை அழைத்துவர, அவரை விஷ்ணுவுக்கு பிடிக்கவில்லை, மெக்கானிக்கோ வண்டியை தான் பழுது நீக்கினால், தன்னை பாலைவனத்தின் நடுவே உள்ள அடுத்த ஊரில் திருவிழாவில் இறக்கி விட வேண்டும், என்ற நிபந்தனையில் அவர் விஷ்ணுவின் வண்டியை சரி செய்கிறார். 

ப்போது கேபினில் மூவர் அமர, வழி தவறி அலைந்தும் திரிந்தும் பயணிக்கின்றனர். ஒரு கட்டத்தில் மெக்கானிக்கின் வியர்வை நாற்றம் பிடிக்காத , ஏழைகளுடன் அறவே பழகியிறாத விஷ்ணு, மெக்கானிக்கும் ,சிறுவனும் வெட்டவெளியில் மலம் கழிக்கும் நேரத்தில், வண்டியை எடுத்துக்கொண்டு ஓடிவிட, அவனின் விதி வலியதாயிருக்கிறது, வண்டி பாலைவனத்தில் மீண்டும் பழுதாகிறது.

2. தண்ணீர்:-

ப்போது வீராப்பாக இவனின் வண்டியை கண்டும் அருகே வராத மெக்கானிக்கும்,சிறுவனையும் பகீரதபிரயத்தனப்பட்டு விஷ்ணு கெஞ்சி அழைத்து வந்தவன் , இனி இது போல சுயநலமாக நடக்க மாட்டேன், வண்டியை பழுது நீக்கிக்கொடு!!! என்கிறான். போகப்போக பாலைவனத்தில் எங்குமே ஒரு சொட்டு நீரி கூட கிடைக்கவில்லை, உணவும் சுத்தமாக கிடைக்கவில்லை. சாலைகளே இல்லை,வெப்பம் தகிக்கும். வரண்ட வெடிப்பு விட்ட பூமி தான்.  நிறைய கானல் நீர் தென்பட, நிறைய ஏமாந்தும்போகின்றனர். ஒரு கட்டத்தில் விஷ்ணு மிகுந்த சுயநலத்தோடு பாலைவனத்தில், கொண்டுவந்து பதுக்கியிருந்த நீரை தான் மட்டும் மடக்கென்று குடிக்கிறான். சிறுவனுக்கு கூட சொட்டு நீர்  கொடுக்கவில்லை. கொதிக்கும் ரேடியேட்டருக்குள் இருக்கும் நீரை மெக்கானிக் உரிஞ்சிக்குடிக்கையில் தான் நமக்கு அந்த தாகத்தின் விபரீதம் புரிகிறது.

த்தனை பரிதாபம்!!!.திக்குதெரியாத பாலைக்காட்டில் மாட்டிக்கொண்ட மூவர், மரண தாகத்தில்,அரை மயக்கத்தில் ட்ரக்கில் எங்கெங்கோ திசை மாறி போய்விட, அவர்கள் இப்போது ஒரு ஹைவே பேட்ரோல் லஞ்சப்பேய் போலீசாரிடம் மாட்டிக்கொள்கின்றனர். அவர்கள் விஷ்ணுவிடம் லைசென்சு, ட்ரக்குக்கான ஆர்சி புக், இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டு கீழே இறங்குமாறு கேட்க, எதுவுமே இல்லாத இவர்கள் வசமாக மாட்டிக்கொள்கின்றனர்.

போலீசார் இவர்களை ட்ரக்கை ,எங்கிருந்தோ திருடிக்கொண்டு போகிறீர்கள், உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள். என்று குற்றம் சாட்ட, இவர்களுக்கு அந்த பாலைவனத்தினுள் அமைந்த பாழடைந்த போலீஸ் ஸ்டேஷன் வேறு பார்க்கையிலேயே குலைநடுங்கச்செய்கிறது. அப்போது புத்திசாலி மெக்கானிக் வண்டியில் சினிமா தியேட்டர் உள்ளது என்றும், அதில் உங்களுக்கு சினிமா திரையிட்டு நாங்கள் திருடர்கள் அல்ல என நிரூபிக்கிறோம், என்றும் சொல்கின்றனர்,

போலீசார் நல்ல படங்கள் போட்டால்  உங்களை விட்டுவிடுவோம், படம் மொக்கையாயிருந்தால் பிடித்து லாடம் கட்டிவிடுவோம், என்று மிரட்ட இரவில் போலீஸ் ஸ்டேஷனின் பாழடைந்த வெளிப்புறச்சுவற்றிலெயே ப்ரொஜெக்டர் வைத்து பாய்ச்சி படம் காட்டப்படுகிறது. அங்கே நிறைய ஊர்மக்கள் உற்சாகமாக குழுமிவிடுகின்றனர். போலீசாரோ? எந்த வித லஜ்ஜையுமேயில்லாமல் குடிவெறியில் கிராமத்து குடும்பப்பெண்களை படுக்கைக்கு கூட மிரட்டி அழைக்கின்றனர். ஒரு வழியாக அந்த போலீசார் நிறைய மது குடித்து விட்டு சாயவும், இவர்கள் விடியலில் ட்ரக்கை எடுத்துக்கொண்டு பறக்கின்றனர்.

3. கிணறு:-
வறண்ட பாலைவனத்தில் செல்லுமிடமெல்லாம், நீரைத் தேடிக்கொண்டே ட்ரக்கில் பயணிக்க, அங்கே குனிந்த தலையுடன் நீரைத்தேடும் பெண்கள் கூட்டத்தை பார்க்கின்றனர். அதில் ஒரு அழகிய நாடோடிப்பெண்ணை நிறுத்தி நீர் கேட்க, அவள் நீண்ட தயக்கத்துக்கு பின்னர் இடுப்பில் சொருகியிருந்த தோலால் செய்யப்பட்ட சுருக்குப்பையில் இருக்கும் நீரைத் தர, விஷ்ணு,மெக்கானிக்,சிறுவர் மூவரும்,நீர் அருந்தி உயிர்பிச்சை பெறுகின்றனர்,


பின்னர் அந்த இளம் நாடோடிப்பெண் கிராமம் கிராமமாக சென்று தண்ணீர் தேடுவதையும், அவள் கணவன் ஒரு ஊர் பணக்காரனின் கிணற்றின் பூட்டை உடைத்து தண்ணீர் திருடியதால் , கடப்பாரையால அடித்துக் கொல்லப்பட்டதையும் சொல்கிறாள், அவர்களுக்கும் நமக்கும் அந்த இளம் கைபெண்ணை பார்க்கையிலேயே கழிவிரக்கம் தொற்றிக்கொள்கிறது. விஷ்ணு அவளையும் ட்ரக்கில் ஏற்றிக்கொள்கிறான்.


வள் அவனுக்கு வழிகாட்டிக்கொண்டே பயணிக்கையில், கண்களாலும்,சிறு ஸ்பரிசங்களாலும் நிறைய பேசிக்கொள்கின்றனர். அவளின் மீது, மிகவும் சுயநலம் பிடித்த விஷ்ணுவுக்கு கூட கருணை பிறக்கிறது. வெய்யில் மேலும் வாட்டியெடுக்க,இருந்த நீரெல்லாம் செலவாகிவிடுகிறது, இனி நீரின்றி ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாத நிலை, சாலைகளைக்கூட கண்டே பிடிக்கமுடியவில்லை.  அந்த பாதையில் விஷ்ணு ஒரு கிணற்றை பார்த்தவன் , நாடோடிப்பெண் தடுக்க,தடுக்க கேளாமல்,கிணற்றின் பூட்டை உடைத்து,நீரை இறைத்து குடித்தும், நீரை பாட்டிலில் அடைத்தும் எடுத்து வருகிறான். 

வள் பயத்தில், பதறி அலறுகிறாள், ஆயினும் இப்போது உயிரைக்காத்துக் கொள்ள ,மூவருக்கும் வேறு வழி தெரியவில்லை,ஒரு பக்கம் போலிசாரின் பார்வையிலிருந்து தப்பவேண்டும், இன்னொரு பக்கம் மகா பயங்கர நீர் வியாபாரம் செய்யும் ரவுடிகளிடமிருந்து தப்பவேண்டும், ட்ரக்கையும் 2 நாளுக்குள் மியூசியத்துக்கு கொண்டுபோய் சேர்த்தும் விடவேண்டும். இனி என்ன ஆகும்.?!!! மிகவும் சுவையான திருப்பங்களுடன், விறுவிறுப்பாக செல்லும் இந்த படத்தை டிவிடியில் பார்த்துவிடுங்கள்,படம் தரவிறக்குவோருக்கான சுட்டி:-

நீண்ட நாளுக்கு பின்னர் நல்ல படத்தை பார்த்த அபார திருப்தியை வழங்கக்கூடிய அற்பணிப்பை கொண்டிருக்கும் படம் இது!!!. படத்தின் ப்ரொமோஷனுக்கான இந்த இணைய தளத்தில் படம் எடுத்த விதம், இடம், இயக்குனரின் நேர்காணல்கள் போன்றவை மிகவும் சுவையாக சொல்லப்பட்டிருக்கின்றன. அதையும் பார்த்துவிடுங்கள்.நல்ல படங்கள் ஓடாமல் போவதில் தவறில்லை, பாராமல் போவது தான் தவறு என்பேன்.ஆகவே இதை எப்படியாவது பார்த்துவிடுங்கள்.

தை ஆறு மாதம் முன்பே பார்த்துவிட்டாலும் ,உடனே எழுதமுடியாமல் போய்விட்டது, ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தேன். நிறைய நண்பர்களை பார்க்க சொல்லியிருந்தேன்,மீண்டும் இதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதோ பதிவிட்டுவிட்டேன். இதன் லொக்கேஷன் பார்க்க இயக்குனர் தேவ் பெனகல் அலைந்தது 1 வருடம். இதன் தயாரிப்பாளர் கிடைக்க தேவ் பெனகல் அலையாய் அலைந்தது 2 வருடங்கள்.

து வரை இந்த பாலைவனப்பகுதியில் எந்த திரைப்படமும் எடுத்ததில்லை. படத்தில் காட்டியது நிஜ போலீஸ் ஸ்டேஷனாம்.போலீசாரே  படப்பிடிப்புக்கு தோதாக ஆர்வகோளாறில் வெள்ளையடித்தும் விட்டார்களாம். வடைபோச்சே!!! என்று அதை மறுபடியும் படக்குழுவினர் பழசாக்கி படம் பிடித்ததாகப் படித்தேன்.  படத்தை ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டெநீரோ பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினாராம்.
====0000=====

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-




=====0000=====
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து
Directed by Dev Benegal
Produced by
Written by Dev Benegal
Starring
Music by Michael Brook
Cinematography Michel Amathieu
Editing by Yaniv Dabach
Release date(s) 5 March 2010 (2010-03-05)
Running time 95 minutes
Country India
Language Hindi
Budget Rs. 80 million ($2.5 million)
=====0000=====