சென்னையில் ஓர் குளிர்காலம்!!!

ருமை நண்பர்களே!!!

லம் தானே? இங்குதான் சென்னையில் விடுமுறைக்கு வந்துள்ளேன்,வேலையில் கூட நான் இத்தனை பிஸியாக இருந்ததில்லை, விடுமுறைக்கு வந்ததில் இருந்தே ஓயாத அலைச்சல்தான்.மதுரை சென்று வந்தேன், திருப்பத்தூர் சென்று வந்தேன்,ஹைதராபாத் சென்றுவந்தேன், சேலம் இன்று போகிறேன், இந்தமுறை 34நாட்கள் மொத்தம் விடுப்பு கிடைத்தது,மிகவும் அதிசயம்,எப்போதும் 2வாரம் மட்டுமே அதிகபட்சம் விடுமுறை தந்து அனுப்பும் நிர்வாகம் அதிசயமாக ஜனவரிக்குள் 2010 ஆண்டிற்கான விடுமுறையை செலவழிக்க சொல்லியது.எப்போதும் கடும் வெயிலில் விடுமுறைக்கு வந்து மாட்டிக்கொள்பவன் இந்தமுறை கடும்குளிரில் மாட்டிக்கொண்டேன், ஹைதராபாத் குளிர் வேறு ஆளையே புரட்டிப்போட்டது,கடும் இருமல் ஜலதோசம் ஆட்கொண்டது, ஜனவரி நான்காம் தேதி வரை விடுமுறை இன்னும் இருக்கிறது,

சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு,சாருவின் 7புத்தகங்களையும் வாங்கினேன்,கனவுகளின் நடனம் என்னும் ஒரு புத்தகத்தில் அவர் கையெழுத்த்தும் போட்டு தந்தார்.அங்கே வைத்து நண்பர் கருந்தேள் கண்ணாயிரம் ராஜேஷையும் சந்தித்தேன்,மிகவும் மகிழ்ச்சியளித்தது,ஆயினும் சரியாக பேசமுடியாதபடிக்கு அவர் அவசர செல்போன் அழைப்பில் ஆழ்ந்துவிட்டார்,நண்பன் மயில்ராவணன்,அண்ணன் ஜாக்கி,அண்ணன் மணிஜி,தல கேபிள் சங்கர்,வண்ணத்துபூச்ச்சியார் என்று இன்னும் பல பதிவர்களை சந்திக்க முடிந்தது,காமராஜர் அரங்கில் சுமார் 900 இருக்கைகள் நிரம்பியிருந்தது,இதுபோல எந்த எழுத்தாளருக்கும் தமிழகத்தில் கூட்டம் திரண்டிருக்காது என்றே நினைக்கிறேன்.மயில் ராவணன் வீட்டிற்கே கொண்டு வந்து விட்டார்.வரும் வாரம் நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பிலும் கலந்துகொள்ளவேண்டும்.

ஹைதராபாத் ரயில் பயணத்தில் வைத்து சாருவின் சரசம் சல்லாபம் சாமியார் என்னும் ஆன்மீக பிராது நித்தியானந்தன் பற்றிய புத்தகம் படித்தேன்,சும்மா சொல்லக்கூடாது,மிக அருமையான புத்தகம்,தேகம் படித்து மகா ஏமாற்றம் அடைந்திருந்த எனக்கும் அருமருந்தாயமைந்தது.புத்தகம் படித்து முடித்தபின்னர் வாசித்தவருக்கு ஏற்படும் நித்தியின் மீதான் கொலைவெறி அடங்க நாளாகும்,அவன் பிரித்த குடும்பங்கள் எத்தனை?சாமியாரினியாக்கிய பெண்கள் எத்தனை?பிரம்மச்சரியம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு சுமார் 5000 குடும்பங்களை சின்னாபின்னமாக்கிய கொடியமிருகத்தை எத்தனை முறை தூக்கில் போட்டாலும் தகும்.இதை என் உறவினர்கள் அத்தனை பேருக்குமே சிபாரிசு செய்தேன்,அத்தனை பேருமே அதை கண்கள் விரிய கேட்டு நித்தியானந்தனை 1008 அஷ்டோத்திர கெட்டவார்த்தைகளால் திட்டி  மனதில் உள்ள பாரத்தை இறக்கினோம்,
 
இன்றைய தேதியில் இத்தனை தைரியமாக ஒருவரை விமரசித்து ஒரு தமிழ் இலக்கிய உலகில் எழுதுவது துர்லபமே,சாரு இந்த புத்தகம் எழுதியதற்கு அவருக்கு கோடானு கோடி நன்றிகள்,இதில் நித்தியானந்தன் தன் மோசடியை எப்படி துவங்கினான்?எப்படி நடிகைகளை வசமாக்கினான்?,ஏன் தமிழகத்தில் ஆசிரமம் துவங்காமல் பெங்களூருவின்,பிடதியில் ஆசிரமம் துவங்கினான்?,அவரின் மனைவி மற்றும் 300 பேர்,நித்தியானந்தனுடன் கும்பமேளாவுக்கு தலைக்கு 1லட்சம் கொடுத்து மாட்டிக்கொண்டது எப்படி?நித்தியானந்தனுக்கும் ,ஏனைய மகா அவதார் பாபாஜி, காசி மாநகரத்தின் அகோரிகள், சாய்பாபா,போன்ற மகான்கள் எப்படி வேறுபடுகின்றனர்?என்று அடி ஆணிவேரையே உருவி ஆராய்ந்திருக்கிறார். இது குமுதம் ரிப்போரில் வெளிவந்திருந்தாலும் தொகுப்பாக படிப்பதில் உள்ள சுகமே தனி,படிக்காத தொடர்களை அருமையாக தொடர்ச்சியாக படிக்க முடியும்.புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தில் இடையே நம் நண்பர் கருந்தேள் ராஜேஷைப்பற்றியும் அவரின் மனைவியை பிடதி ஆசிரமத்திலிருந்து மீட்க உதவியதாக மறக்காமல் குறிப்பிட்டிருந்தார்.

எல்லவற்றிற்கும் மேலாக கடைசி 29வது அத்தியாயத்தில் அவர் நித்தியானந்தனுக்கு முன்வைத்த 25 சாட்டையடி கேள்விகள், நித்தியானந்தனுக்கு நாக்கு என ஒன்றிருந்தால் அதைபிடுங்கிக்கொண்டு சாகட்டும், அவனை நடைபிணமாக்கும் இந்த சரசம் சல்லாபம் சாமியார் புத்தகம்,இதற்கு யாரும் முன்னுரை எழுதாது என்பது மாபெரும் துயரம், இதை ஆங்கிலத்தில் அதன் சாரம் கெட்டுப்போகாமல் மொழிபெயர்க்கவேண்டும் என்பதே என் அவா.நடக்குமா பார்ப்போம்?

இன்று இரவு சேலம் செல்கிறேன்,தேகம் மீள்வாசிப்பு செய்ய வேண்டும்,நான் இதுவரை சாருவின் எந்த புதினத்தையும் படித்ததில்லை,இது வேறு ஆட்டோஃபிக்‌ஷன் என்னும் வகை என்று சாரு சொல்கிறார்.முதன் முறை வாசித்ததில் இது சரோஜாதேவிக்கதை அல்ல என்று மட்டும் உணரமுடிந்தது,மிஷ்கின் இதை சரோஜாதேவி கதை என்று எப்படி ?உளரிக்கொட்டினார் என அறியேன்.

தேகம் புத்தகம் இலைமறைவு காய்மறைவாய் பேசும்,படிக்கும்,எழுதும் வெகுஜன வாசகர்களுக்கானது அல்ல,வீட்டில் வெளியில் கூட வைக்க முடியாதது,படித்தபின்னர் கூட யாராவது ஒத்த சிந்தனை உடைய நண்பருக்கு பரிசளித்துவிடவேண்டியது, இதில் எதுவுமே ஒளிவு மறைவில்லை,புட்டத்தை குண்டி என்றே சொல்கிறார்,விந்து,இந்திரியம்,ஸ்கலிதம் என்று தினத்தந்தியில் படித்ததை கொச்சையாக கஞ்சி என்றே சொல்கிறார்.தவிர ஆங்கில கலைச்சொற்களான கேட்டமைட்,சோடமைட்,குப்பியடித்தல்,குப்பி கொடுத்தல்,நாக்கில் இரும்பு குண்டுமணி மாட்டுவது எப்படி? ஆண்குறியில் வரிசையாக வளையங்கள் மாட்டுவது எப்படி?சென்னையில் உள்ள நவீன பார்கள் பற்றி என கலந்துகட்டி எழுதியிருக்கிறார், இதை ஆறு நாட்களில் எழுதியதாக படித்தேன், அதற்கான சத்து தான் தேகத்தில் இருந்தது. எனக்கு இந்த சிறு புதினம் தேகம் அவ்வளவாக தாக்கத்தை உண்டுபண்ணவில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது.விரிவாக மீள்வாசித்தபின்னர் சந்தர்ப்பம்  கிடைப்பின் எழுதுவேன்,
 
ருமை நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டியிருப்பின் 09840419602வில் 4 ஆம் தேதிவரை பேசலாம், புகைப்படங்களை விரைவில் பகிர்கிறேன்.நன்றி

======0000======