ஒரு மகிழ்ச்சியான செய்தி!!!

அருமை நண்பர்களே !!!!
நலம் தானே?!!! நீண்ட நாட்களாய் எதுவும் இங்கே எழுத முடியவில்லை,வீட்டுக்கு வருவதற்கே இரவு 9-00மணி ஆகிவிடுகிறது,அதற்கு மேல் பதிவுகளை படிப்பதற்கும் பின்னூட்டுவதற்குமே நேரம் கிடைப்பதில்லை,இருந்தும் சில நல்ல படங்கள் பார்த்தும் எழுத நினைத்தும்,அது இயலவில்லை.கிடக்கட்டும்.வார இறுதிகளில் படிப்புமிப்போது சேர்ந்து கொண்டது.

கடந்த ஏப்ரல்22 ஆம் தேதி மனைவிக்கு பிரசவவலி போலஎடுக்க இசபல் மருத்துவமனையில்அனுமதித்து 2 நாள்வைத்திருந்தும் அவர்கள் எதிர்பார்த்திருந்த அளவுக்கு வலியும் குழந்தையின் பொசிஷனும் அமையவில்லை என மனைவியை திருப்பி அனுப்பிவிட்டனர். பின்னர் ஸ்கேன் ரிப்போர்டில் மே1ஆம் தேதி என் மனைவிக்கு பிரசவ தேதி என குறித்து கொடுத்தனர்,அன்று மயிலை இசபல் மருத்துவமனையில் மனைவியை சேர்த்தும் பிரசவ வலி வரவில்லை,என் மனைவியை கவனித்த டாக்டர் ஜே.எஸ் லட்சுமி சுகப்பிரசவத்துக்கு ஆனவரை முயற்சி செய்வோம் என்றார், இருந்தும் கிலி அடங்கவில்லை,சிசேரியன் செய்தால் மனைவி பிற்காலத்தில் மிகவும் கஷ்டப்படவேண்டியிருக்குமே என கவலையிலேயே இருந்தேன்,கூடவே வேலை பளுவும் சேர்ந்து ஆட்டியது.

மே 2ஆம் தேதி புதன் கிழமை காலை டிபன் எடுத்துக்கொண்டு மருத்துவமனை சென்றவன்.உடன் இருந்த என் பெரியம்மாவிடம் மனைவி எங்கே எனக்கேட்க இனிமா கொடுத்துள்ளனர்,இன்னும் 1 மணி நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்றனர்.ராம ராம என்னும் நாமத்தை  இதுவரையில் 10000 முறை எழுதியிருப்பேன், அதில் கவனத்தை குவித்து மேலும் எழுத ஆரம்பித்தேன், சுகப்பிரசவம் ஆகி என் மகனை செவிலியர் கொண்டு வந்து என்னிடம் காட்டினர்,என்ன குழந்தை என்று பாருங்கள்,அது சரியாக குறிப்பிட்டுள்ளதா? என என்னிடம் சரிப்பார்த்து கையொப்பமிடச்சொன்னார்கள்.எனக்கு மகன் பிறந்ததை பார்த்து உணர்ந்து கொண்ட அக்கணத்தை வாழ்வில் எப்போதுமே மறக்க இயலாது,அன்று ஏகாதசி வேறு,ராம ராம இடவிடாது எழுதியதை அங்கீகரித்து மகனை ஏகாதசியன்று பிறக்க வைக்கத்தான் போனமுறை மனைவிக்கு பொய்வலி வந்து பிறப்ப்பு தள்ளிப்போனது என புரிந்தது. மகனைப்பார்த்த பின்னர். உடம்பில் அப்படி ஒரு தைரியமும்,தெம்பும் குடிகொண்டது,உடனே செவிலியர், மகனை உள்ளே கொண்டு போய்விட்டன்ர்.ரூமுக்கு அட்மிஷன் அட்டை போட்டுவிட்டு வரச்சொல்லி செவிலியர்கள் வேலைகொடுக்க,போகும் வழியிலேயே போனில் தென்பட்ட அத்தனை நம்பர்களுக்கு பேசி விஷயம் சொன்னேன்.

இன்று மாலை மகனை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தோம்.இப்போது தாயும் சேயும் நலமாய் உள்ளனர்,வரும் 12ஆம் தேதி சனிக்கிழமை காலை புண்ணியாஜலம் நண்பர்கள் வந்து கலந்து கொண்டு மகனை வாழ்த்த வேண்டும் என வேண்டுகிறேன்.

மகனுக்கு மறைந்த என் அம்மா கீதா அவர்களின் நினைவாக கீதப்ப்ரியன் என வைக்கத்தான் திட்டமிட்டேன்,ஏற்கனவே என் பெயர் கார்த்திக்கேயன் பெரியதாக உள்ளது,அதை கீதப்ப்ரியனுடன் இணைத்தால் இன்னும் பெரிதாகிவிடும்,தவிர ஆண்குழந்தைக்கு ஜெயக்குமார் என பெயரிட்டாலே ஜெயா என கூப்பிடுகின்றனர்,இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை தவிர்க்க கீதேஷ் என பெயரிடலாம் என நினைக்கிறேன்.சிறியதாய் அழகாய் உள்ளது இப்பெயர்,ஆனால் அர்த்தம் பெரிதாய் உள்ளது.கீதையின் கடவுள்.மகாவிஷ்ணுவின் பெயருமாக உள்ளது,ஆகவே இதையே மகனுக்கு வைக்க எண்ணியிருக்கிறேன்.
என் மகன் உலகில் முதல்நாள்  தங்கிய அறை ஒரு ரெகார்டுக்காக:)

என் கைபேசி எண்:-9840419602
இதில் எனக்கு பேசுங்கள் விலாசம் அனுப்பி வைக்கிறேன்,புண்ணியாஜலம் முடிந்த பிறகு போட்டோவை எடுத்து போடுகிறேன் நண்பர்களே,ஒரு சில வேலைகளை முடித்து நிம்மதி கொண்டபின்னர் நிச்சயம் வலையில் எழுதுவேன்.என் மகள் வர்ஷினிக்கு  7 வயதாகிறது,அவள் மகனை மிக நன்றாக பார்த்துக்கொள்கிறாள்,என நினைக்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
மீண்டும் சந்திப்போம்.
=====0000=====