கில்லர் ஜோ [Killer Joe ] [2011] [18+][ ஹாலிவுட்]


கில்லர் ஜோ படம் பார்த்தேன், இது வரை வந்த கல்ட் நுவார்-க்ரைம் டார்க் ஹ்யூமர் வகைப் படங்களிலேயே அதிக டீடெய்ல்களும், வக்கிரமும், வன்முறையும் தன்னுள் ஒருங்கே கொண்ட படமாகத் தோன்றியது,இதற்கு முன்பு நான் பார்த்திருந்த இதே ஜானர் படங்களில் இந்த அளவுக்கு ஓவர்டோஸ் குரூரம் இருந்ததாக நினைவில்லை, இதற்கு கொஞ்சம் அருகே நிற்கும் ஓவர்டோஸ் படமாக லாஸ்ட் ஹவுஸ் ஆன் த லெஃப்ட், யு-டர்ன் மற்றும் கில்லர் இன்சட் மீ படத்தைச் சொல்லலாம்,
கில்லர் ஜோ படத்தில் எல்லாம் இருந்தும் எல்லாமே ஓவர் டோஸாக இருப்பதால் தான் இது நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட்மென், ஃபார்கோ, ஃப்ரோஸன் ரிவர், ஸ்ட்ரா டாக்ஸ், ப்ளட் சிம்புள், போஸ்ட் மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ், த மேன் ஹூ வாஸ் நாட் தேர், 13ட்ஸமெட்டி போன்ற படங்களின் க்ளாசிக் தர வரிசையில் சேராமல் போய்விட்டது என எனக்குத் தோன்றுகிறது.

இயக்குனர் வில்லியம் ஃப்ரைட்கின் ஏற்கனவே எடுத்த படங்களில் ஃப்ரென்ச் கனெக்‌ஷன் ,எக்ஸார்ஸிஸ்ட் தவிர அத்தனையுமே எரொட்டிக்,மற்றும் அதீத வன்முறையை பறைசாற்றும் படங்களே,இப்படத்தை அவர் 40 வருடங்கள் கழித்து இயக்கியுள்ளார்,இவருக்கு வயது77ஆம்,யாரால் நம்ப முடியும்?

கில்லர் ஜோ படத்தில் நாம் அமெரிக்காவின் ஊரக டெக்ஸாஸில் வசிக்கும் ஒரு நாரப்பயல் குடும்பத்தை பார்க்கிறோம்,எல்லோருமே குடிகேடிகள் தான், ஏன்சல் ஒரு கையாலாகாத தகப்பன்,இவனுக்கு விவாகரத்தாகி இப்போது ஷார்லா என்பவளுடன் ஒரு கண்டெயினர் வீட்டில் வசிக்கிறான்,கூடவே ஏன்சலுக்கும் அவன் முதல் மனைவிக்கும் பிறந்த டாட்டியும் வசிக்கிறாள்,அவளுக்கு 12 வயது,ஆனாலும் டேட்டிங்,பாய்ஃப்ரெண்ட் ஏதுமில்லை.அழுக்காக பரக்காவட்டி போல திறந்து போட்டு திரிகிறாள்,

சித்தி ஷார்லா எந்நேரமும் மேலேயோ,கீழேயோ ஆடையே இல்லாமல் வீட்டுக்குளேயே நடமாடும்.புதர் போன்ற யோனியை காற்றாட விட்டு விடும் ரகம்.

இப்போது க்ரிஸ் பற்றி பார்ப்போம்,ஏன்சலுக்கும் அவன் முதல் மனைவி ஏடிலுக்கும் பிறந்தவன் டாட்டியின் சகோதரன்,இவனுக்கு 22 வயது ,ஊதாரி,கஞ்சா,மற்றும் கோகெய்ன் வியாபாரி,இவன் தன் அம்மாவுடனே வேண்டா வெறுப்பாக வசிக்கிறான்,பெயருக்கு தான் அம்மா,அவளை யாருக்குமே பிடிப்பதில்லை,அதே போல க்ரிஸ்ஸையும் யாருக்குமே பிடிப்பதில்லை.

இந்த நிலையில் கிரிஸ் விற்பதற்காக வாங்கி வைத்திருந்த 6ஆயிரம் டாலர் மதிப்புள்ள கோகெயினை அவன் அம்மா ஏடெல் திருடிவிடுகிறாள்,அவளுக்கு இப்போது ரெக்ஸ் என்று ஒரு பாய்ஃப்ரெண்டும் உண்டு,அவன் க்ரிஸ்ஸிடம் உன் அம்மாவுக்கு 50ஆயிரம் டாலருக்கான இன்ஸூரென்ஸ் பாலிசி உள்ளது,அதற்கு நாமினியாக டாட்டியை நியமித்திருக்கிறாள் ,என ஒரு தருணத்தில் அடித்து விடுகிறான்.

இப்போது தன் கோகெய்னை திருடிவிட்டு திருடியதை மறுக்கும் தாயை மிகவும் வெறுக்கிறான் க்ரிஸ்,அதற்காக அவளை மிகவும் வெறுக்கும் தன் அப்பாவை அந்த கண்டெய்னர் வீட்டில் போய் சந்திக்கிறான்,.சித்தியின் காற்றாடவிட்ட புதரை கேலி செய்ததால் அங்கே வைத்து சித்தி ஷார்லாவுக்கும் இவனுக்கும் கைகலப்பாகிறது.

அப்பாவை தனியே ஸ்ட்ரிப்பர்ஸ் க்ளப்புக்கு கூட்டிப்போனவன் அம்மாவை கொலை செய்ய ஜோ என்னும் கெட்ட போலீஸை நியமிக்கப்போகிறேன் என்கிறான்,இவனுடன் ஒத்துழைத்தால் 50000டாலரில் அவனின் கமிஷன் 20000போக மீதமுள்ள 30000 டாலரை இருவரும் சரிசமமாக பகிரலாம் என்கிறான்,மறு நாள் ஜோவை ஒரு அழுக்கு கிளப்பில் வைத்து சந்திக்கின்றனர் அப்பாவும் மகனும்,அங்கே வரும் முன்னரே ஜோ இவர்களுடைய கண்டெயினர் வீட்டுக்கு போய் டாட்டியை கண்டு மையலுறுகிறான்,பெடோஃபைல் போல அந்த 12 வயது சிறுமியை அடைய நினைக்கிறான்.

அங்கே கிளப்பில் தன்னுடைய கமிஷனை 25000டாலராக உயர்த்தி விடுகிறான்,அதில் பாதி 12500த்தை முன் பணமாக கேட்கிறான்,அப்பாவும் மகனும் அதைக்கேட்டு அட்வான்சா?,என வழிய,அவன் கோபமாகி சாவுகிராக்கிகளா!!!! என வசைபாடுகிறான்,க்ரிஸ் மிகவும் கெஞ்ச,சரி அதற்கு எனக்கு பிணையாக உன் தங்கை டாட்டியை நீ எனக்கு கூட்டிக்கொடுக்கவேண்டும்,நீ இன்சூரன்ஸ் பணம் எனக்கு தரும் வரை அவளை தினமும் நான் உன் வீட்டிலேயே தங்கி அனுபவிப்பேன் சம்மதமா?என்கிறான்,இவர்களுக்கு வேறு வழி இல்லாததால் டாட்டியை இந்த 40வயது ஜோவுக்கு குடும்பமே கூட்டித்தர தயாராகின்றனர்.

அங்கே அவளுக்கு சித்தி புது ஆடை வாங்க பணம் தர,அப்பாவும் அண்ணனும் ஜோ அன்று டேட்டிங்கிற்கு வீடு வரும் நேரம் இங்கிதமாக வெளியேறிவிட்டிருக்கின்றனர்,சித்தி ஷார்லாவோ இன்னொரு காதலனை ஒரு மோட்டலில் வரவழைத்து புணருகிறாள்.இங்கே எருமை போன்ற ஜோ பூபோல,ஒரு அப்பாவி பூனை போல  உள்ள டாட்டியை ஆசைவார்த்தைகள் பேசி கிறங்கடித்து புணர ஆரம்பிக்கிறான்.சுமார் ஒரு மாதம் இப்படியே போகிறது.

இப்போது தன் தங்கையை ஜோவிடமிருந்து மீட்க ஞானோதயம் கொண்ட க்ரிஸ் ஏதாவது குறுக்கு வழியில் பணம் ஈட்டி அந்த கோகெயின் வியாபாரிக்கு 6000 டாலரை வட்டியுடன் தர முடியுமா என முயல்கிறான்,அவன் பணம் கட்டிய குதிரை தோற்க,அவனை துரத்திய இரண்டு பைக் ஆசாமிகளிடம் இருந்து தப்பிக்க ஓடி ஒளிந்த கிரிஸ்ஸை அந்த ஆசாமிகள் விரட்டிப்பிடித்து அடித்து நொறுக்கி விடுகின்றனர்.

ரத்த களரி,மூக்கு முழி எல்லாம் பிதுக்கி வைத்துள்ளனர்,இவன் அபாய கட்டத்தில் அப்பாவீட்டு கதவை தட்ட,அங்கே முழு நிர்வாணமாக விருந்தாளி ஜோ கதவை திறக்கிறான்,இவன் அவனை எப்போது என் அம்மாவை கொலைசெய்வாய்,பார் என் கோராமையை எனக் கேட்கிறான்,வீட்டில் அனைவருக்கும் ஒரே ஆவல்,எப்போ வரும்,இன்சூரன்ஸ் பணம்? என்று.டாட்டி மட்டுமே அவளின் அம்மாவுக்காக வருந்துகிறாள்,சிறு வயதில் அம்மா அவளை தலையணை முகத்தில் வைத்து அமுக்கி கொல்லப்பார்த்த வருத்தம் மனதில் இருந்தாலும் அண்ணன் க்ரிஸ்ஸிடம் வேண்டாம்,எதிலும் மாட்டிக்கொள்ளாதே என்கிறாள்,அண்ணனுக்கு உதவ தன்னையே அந்த ஜோவிடம் இஷ்டப்பட்டு அடிமையாக அற்பணிக்கிறாள்.

மறுநாள் இவனது போலீஸ் ஸ்டேஷனில் சென்று க்ரிஸ் ஜோவை சந்திக்கிறான்,அவனை நடு நிசியில் ஒரு மோட்டலுக்கு ஜோ காரில் நீண்ட தூரம் பயணித்து அழைத்துப்போகிறான்,போகிற வழியில் நான் உன்னிடம் அம்மாவை கொலைசெய்ய சொன்னேன் அல்லவா?அது வேண்டாம்,என் அம்மாவை விட்டுவிடு,என் தங்கையை விட்டுவிடுஎன கெஞ்சுகிறான் ஜோ,இவன் எதுவும் பேசாமல் அந்த மோட்டலில் காரை நிறுத்தி,டிக்கியை திறந்தால் க்ரிஸ்ஸின் அம்மா டிக்கியில் பிணமாக இருக்கிறாள்,இவனுக்கு அழுகையும் ஆத்திரமும் பீரிடுகிறது,அவன் இவனை அதட்டி,அம்மாவின் பிணத்தை அங்கே நின்ற ஒரு காரின் இருக்கையில் திணித்து,மது புகட்டி,பின்னர் காரின் பெட்ரோல் குழாயை வெட்டி காரை கொளுத்தியும் விடுகிறான்,விபத்து போல ஜோடிக்கிறான்.இவன் போலீஸ் ஆதலால் போலீசாரின் பார்வையில் சந்தேகம் வரா வண்ணம் அக்கொலையை நிகழ்த்தியிருக்கிறான் ஜோ.

இப்போது இன்ஸூரன்ஸ் ஆபீஸுக்கு செக் வாங்கவந்த ஷார்லாவும்,ஏன்சலும் அதிகாரியை ஆவலுடன் பார்க்கின்றனர்,இவரின் அழுக்கு கோட்டில் ஒரு நூல் துருத்தியிருக்க அதை மிக ஒழுக்கமான மனைவி என அதிகாரிக்கு காட்ட அந்த நூலை பிடித்து இழுக்கிறாள், அப்போது அந்த கைப்பகுதி அப்படியே விண்டு போய் விடுகிறது,இவரின் பேஸ்பால் தொப்பிக்கும் அந்த கிழிந்த கோட்டுக்கும் அசல் பிச்சைக்காரன் போலவே அதிகாரிக்கு தென்படுகிறார் ஏன்சல்,ஆனால் உண்மையும் அதுதானே?

ஏன்செல் அடிப்படையிலேயே ஒரு சோம்பேறி,எச்சைத்தனம் அவரின் ரத்தத்திலேயே உண்டு.அதனாலேயே அவரின் மனைவியோ மக்களோ அவரை மதிப்பதேயில்லை.ஒரு காட்சியில் ஷார்லாவை பார்க்க அவள் வெய்ட்ரஸாக இருக்கும் நாலாந்தர பீட்ஸா கடைக்கு போகும் இவர் அங்கே டேபிளில் யாரோ குடித்து வைத்த மிச்சம் பீர் பாட்டிலை லபக்கி,கலக்கு கலக்கி குடித்தபடியே ஷார்லாவிடம் பீர் மணி கொடு என லஜ்ஜையில்லாமல் கேட்பார்.

அங்கே அப்போது தான் ஷார்லா தன் காதலன் ஜானி என்பவனுடன் அவர்கள் புணருகையில் எடுத்துக்கொண்ட அவனின் ஆண்குறி தோன்றும் படத்தை ரசித்தபடியே வேலை நேரத்தில் டெலிபோனில் கடலை போடுகிறாள்,அங்கே வந்த டாட்டி அதை கேட்டுவிட்டு அப்பாவுக்கு தெரியாமல் பாய்ஃப்ரெண்டா? எனக்கேட்க ஷார்லா மறுதலித்து,இது தன் முன்னாள் தோழி என்கிறாள், அங்கே ஒரு வாடிக்கையாளர் வேண்டாம் என கேன்சல் செய்த கறுப்புஆலீவ் டாப்பிங் பீட்ஸாவை இவளுக்கு கொடுத்து நைஸ் செய்கிறாள்.தான் பெரிய அழகி என்னும் கர்வம் ஷார்லாவுக்கு அதிகம் இருக்கிறது,க்ரிஸ் இவளின் ஃப்ரீக் போன்ற நடவடிக்கையை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருவதால் அவனை மிகவும் வெறுக்கிறாள் ஷார்லா, ஆனால் க்ரிஸ்ஸின் முட்டாள்தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த சமயம் பார்த்திருக்கிறாள், அதற்கு தோதாக இந்த இன்ஸூரன்ஸ் மேட்டர் வாய்த்தது ஷார்லாவுக்கு.

இப்போது இன்ஸூரன்ஸ் ஆபீஸில் இவர்களுக்கு திருநெல்வேலி அல்வா தரப்படுகிறது,வெல்லம் தின்பவன் ஒருத்தன் விரல் சப்புபவன் ஒருவன் என்பது போல , இவர்கள் அரும்பாடுபட்டு கூலியாள் அமர்த்தி ஏடில்லை கொலை செய்திருக்க, அவளின் இன்ஸூரன்ஸுக்கு நாமினியாக பாய்ஃப்ரெண்ட் ரெக்ஸை நியமித்திருக்கிறாள் அவள். அவளின் இன்ஸூரன்ஸ் பணம் 5000 டாலர்கள்,அது விபத்தாகவும் அமைந்தபடியால் ,இரட்டிப்பாக 100000டாலர்கலாக ஏடில்லின் பாய்ஃப்ரெண்ட் ரெக்ஸுக்கு வருகின்றது,நோகாமல் நோம்பு கும்பிட்டிருக்கிறான் ரெக்ஸ்.

இனி என்ன ஆகும்?க்ரிஸ் கோக் வியாபாரிகளுக்கு வட்டியும் முதலுமாக பணத்தை கொடுத்தானா?கில்லர் ஜோ தன் பிணையான டாட்டியை விட்டு விலகினானா?ரெக்ஸ் அந்த பணத்தை ஆண்டு அனுபவித்தானா?என்பதை சஸ்பென்ஸ் விலகாமல் படத்தில் பாருங்கள்.

இதில் ஒரு விசாரணை காட்சியில் அப்படி ஒரு அடியை சித்திகாரி ஷார்லா ஜோவிடமிருந்து வாங்குகிறாள்,அவளின் கள்ளக்காதலனின் ஆண்குறி தோன்றும் அந்த புகைப்படத்தை ஷார்லா, அது ஏன்செல்லுடையது தான் என சாதிக்கிறாள்,அவனை நோக்கி நீ கூட அன்று குடித்திருந்தாயே?!!! என்று மேலும் சாதிப்பாள் பாருங்கள்,ஊமைக்குசும்பி !!!ஏன்செல் அந்த புகைப்படத்தை வாங்கிப்பார்த்து என் குறி எனக்குத்தெரியாதா?என் குறி இத்தனை பெரிசெல்லாம் கிடையாது என மறுக்கும் காட்சி டார்க் ஹ்யூமரின் உச்சம்.

படத்தில் ஜீவனான ஒரு காட்சி உண்டு,அது கேஎஃப்ஸிக்கு விளம்பர யுக்தியா?அல்லது கேஎஃப்ஸி சிக்கன் லெக் பீஸும் ஆண்குறியும் ஒன்று எனக்கேலி செய்யும் யுக்தியா? தெரியவில்லை,வெறி கொண்ட ஜோ ஷார்லாவை புரட்டிப்போட்டு விசாரிக்கையில்,அவள் மேலும் வெறியாகி சீற,இவன் மூக்கு நெற்றி தாடை எல்லாவற்றையும் உடைத்து விடுகிறான்.பின்னர் ஷார்லா இவனுக்கு சாப்பிடக்கொடுத்த அந்த கேஎஃப்ஸி சிக்கன் லெக்கை எடுத்து தன் ஆண்குறிபோல இடுப்புக்கு கீழே வைத்துக்கொண்டு பொய்யாக முழங்குகிறான்,அவளை எச்சரித்த்து கவனமாக அந்த லெக் பீஸுக்கு வாய்ப்புணர்ச்சி செய்யச்சொல்லி கேட்டுப் பெறுகிறான்,அது மார்வலஸ்ஸான காட்சி,இயக்குனருடைய சிக் டார்க் ஹ்யூமரின் உச்சக்கட்டம் அந்த காட்சி.

இங்கே கில்லர் ஜோவாக தோன்றும் மேத்யூ மெக்கானகி சிறந்த அண்டர்ரேட்டட் நடிகர்,இவரின் டூ ஃபார் த மனி படத்தில் அல்பாசினோவுக்கு ஈடுகொடுத்து நடிக்க வேண்டிய ஒரு பெட்டிங் டிப்ஸ் தரும் ஒரு இளைஞன் பாத்திரம்,அசத்தியிருப்பார்,அதன் பின் சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்பு ஏதும் அமையாதிருக்க,40 வருட இடைவெளி விட்ட இயக்குனருடன் கூட்டணி போட்டிருக்கிறார்,குறையா அல்லது நிறையா எனத்தெரியவில்லை,ஆண்டர் சிகர் ஜேவியர் பர்டமின் வசன உச்சரிப்பு,மேனரிசம்,ஆட்டிட்யூட் நிறைய இவரின் பாத்திரம் மீது தென்பட்டது,அப்பா ஆன்செல்லாக வந்த தாமஸ் ஹேடன் சர்ச்சும் சிறந்த அண்டர்ரேட்டட் நடிகர்,இவரும் இந்த ஊதாரி தந்தை பாத்திரத்தில் நம்பி நடித்துள்ளார்..மகள் டாட்டியாக 12 வயது சிறுமியாய் வந்த ஜூனோ டெம்பிள் ப்ரில்லியண்டாக நடித்துள்ளார்,இவரின் பாத்திரம் முதிர்ச்சிகொண்டதா அல்லது முதிராததா?என்றே ஊகிக்க முடியாது,படத்தில் ஒரு சிறப்பு அம்மாவாக வந்த பாத்திரத்தையும்,அவளின் பாய்ஃப்ரெண்டாக வந்த ரெக்ஸ் பாத்திரத்தையும் நாம் பார்ப்பதே இல்லை,ஆனாலும் அவர்களை வைத்து தான் படத்தின் கதையே,

படத்தில் வரும் வசனங்கள் முழுக்க டார்க் ஹ்யூமர் விரவிக் கிடக்கின்றன.அனுபவித்து கேட்க வேண்டும் ஒருவர்.நோ கன்ரி ஃபார் ஓல்ட் மென்னின் பாதிப்பாகவோ அல்லது ட்ரிப்யூட்டுக்காகவோ இயக்குனர் இதிலும்
அந்த பிட் புல் வகை நாயை 4 ஃப்ரேமிலாவது காட்டுகிறார்,சிகர் மோஸ்ஸை தேடி வந்து பால்குடிக்கும் கண்டெயினர் வீடுகள் ,மோட்டல்கள்,இதிலும் உண்டு.கில்லர் ஜோ பாத்திரத்திடம் ஒருவர் ஆண்டன் சிகாரின் நகலை எளிதில் கண்ணுற முடியும்.

அந்த ஸ்டேச்சல் நிறைய பணத்துக்கு பதிலாக இதில் இன்ஸூரன்ஸு காசோலை,ஆனால் அது நாய் கையில் கிடைத்த தேங்காய் போன்ற நிலை போன்றவை உலகத்தரம்.இயக்குனர் யார் சொல்லியும் கேட்காமல் எந்த காம்ரமைஸும் செய்து கொள்ளாமல் படத்தை எடுத்து,NC-17 ,R-ரேட்டிங் வாங்கி வெளியிட்டிருக்கிறார்,படம் எதிர்பார்த்த வசூல் சாதனை செய்யாவிட்டாலும், மெச்சூர் ஆடியன்ஸ்களால் மிகவும் சிலாகிக்கப்பட்டுள்ளது.

உலகசினிமாவில் டார்க்ஹ்யூமர், கல்ட்,க்ளாஸிக், சோஸியோபாத் ,க்ரைம் ஜானர் வகை ரசிகர்களாக இருந்தால் அவசியம் காணவேண்டிய படம்.
படத்தின் யூட்யூப் காணொளி:-