என் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்வர்-ராகுல்


அடேங்கப்பா!!! அத்தன ஒர்த்தாங்க நீங்க ராகுல்?!!!
===============================================
உங்க முகத்த கண்ணாடிலயோ,ஏன்? உங்களையே  எப்பவும் ஏற  இறங்கப்  பாத்துக்கிடவோ மாட்டீங்களா?!!! இப்புடி குழந்தை பலூனை உடைச்சுட்டா அழற மாதிரியா அழறது?!!!இப்படி அபிஷ்டு மாதிரியாங்க பேசறது? ஒருவேளை நீங்க பிஎம் ஆகிட்டா , எங்களுக்கு வாழ்க்கை மேலேயே விரக்தி வந்துடும்,அது தான் எங்களுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையே பொய்க்கும் இடம், பாத்துக்கங்க.

உங்க பாட்டி எமர்ஜென்சியில் விதைத்ததை சீக்கியரிடம் அறுத்தார் என்றால் மிகையில்லை,19 மாத கால கொடிய எமர்ஜென்சியில் நீங்கள் , உங்கள் புனித பசு பிம்பம் கொண்ட குடும்பம் எல்லாம் எத்தனை சொகுசாக இருந்திருப்பீர்கள் என யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.

அதே எமர்ஜென்சி சமயத்தில் உங்கள் கைப்பாவை போலீஸார் & மிலிட்டரியால் நாடெங்கிலும் சந்தேகத்துக்கு இடமாக கைது செய்யப்பட்டு ,கோர்ட் விசாரணையே இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான நபர்கள், லாக்கப் டெத் செய்யப்பட்ட எதிர்கட்சியினர், நியாயம் கேட்ட படித்த,பாமர மக்களில் காலையில் வேலைக்கு போய் வீடு திரும்பாதோர்,  கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், அதில் மணமே ஆகியிராத ஆண்கள், பெண்கள்,அது உங்களுக்கு மறந்துவிட்டதா?!!!

காங்கிரஸ் ஆண்ட போபாலில் விஷவாயு கசிவினால் ஒரே இரவில் தூக்கத்திலேயே மாண்டோர்கும்,சிதைக்கப்பட்ட டிஎன்ஏ உடற்கூறுகளுடன் இன்றும் மாண்டு கொண்டிருப்போர்க்கும் நீங்கள்,உங்கள் காங்கிரஸ்,என்ன நீதி செய்தீர்கள்?

இப்படி  நீங்கள் செய்த அக்கிரமம் ஒன்றா இரண்டா?!!!தெய்வம் நின்று கொல்லும் என்பது சத்தியம், அப்படித் தான் எமர்ஜென்சியில் குரூர ஆட்டம் ஆடிய உங்கள் சித்தப்பா ,தன் மகன்  பிறந்த 100வது நாளில் பயிற்சி விமான விபத்தில் இறந்ததும்!!! . போகும் போது கூட உடன் ஒருவரை அழைத்து போனார் புண்ணியவான். அது மறந்துவிட்டதா?!!!

இந்திரா அம்மையாரை இரண்டு சீக்கியர்கள் கொன்றனர்,அதற்கு பரிகாரமாக 8000  [டெல்லியில் மட்டும் 3000 பேர்][அரசு சொன்ன கணக்கு] சீக்கியரை ஆண் பெண்,குழந்தைகள்,பிறந்த சிசு என பேதமின்றி கொன்றார்களே உங்கள் திருத்தொண்டர்கள், அது மறந்துவிட்டதா?!!!

அந்த சீக்கியப் படுகொலைகளுக்கு சப்பை கட்டு கட்ட ஒரு பெரிய ஆல மரம் விழும் போது நிலம் அதிரவே செய்யும் என சொல்லிய பின்னர் அதற்கு பல திசைகளிலும் எதிர்ப்பு திரண்டு வரவே மன்னிப்பு கேட்டாரே உங்கள் தந்தை ராஜிவ். அது மறந்துவிட்டதா?!!!


நேரு குடும்பத்தின் இளைய மருமகளும் மூத்த விதவையுமான மேனகா  உங்களுக்கு சித்தி முறை,அவர் செய்தியாளராக செய்த வெட்கம்  கெட்ட காரியம் அறிவீர்கள் தானே?மேனகா காந்தி காங்கிரஸின் துதிபாடி பத்திரிக்கையான ''சூர்யா'' இதழில் வெளியிட்ட அதிர வைக்கும் செய்திக்காக பெரிதும் அசிங்கப்பட்டவர்,பாபு ஜகஜீவன் ராம் ஒரு தலித் - மூத்த அரசியல்வாதி,தான் இருந்த இந்திரா காந்தி அரசிலிருந்து விலகி ஜனதா கட்சி 1977-ல் பதவிக்கு வர பெரிதும் உதவியவர் என்ற காரணத்துக்காகவே மேனகா காந்தியால் பொதுவில் அவமானப்படுத்தப்பட்டவர் .பாபு ஜகஜீவன் ராம் அப்போது இந்திய பிரதமர் பதவிக்கு தேர்வாகாக கூடியவர்களில் ஒருவராகக்கூட கருதப்பட்டார்.

1978 ஆம் வருடம் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாபு ஜகஜீவன் ராமின் மகன் சுரேஷ் ராமுக்கும், டெல்லி பல்கலைக்கழக மாணவி சுஷ்மா சௌதிரிக்கும் இடையேயான வாய்ப்புணர்ச்சி, மற்றும் அப்பட்டமான உடலுறவு போலராய்ட் புகைப்படக் காட்சிகளை, சுமார் 9 புகைப்படங்களாக காங்கிரஸ் கட்சி பத்திரிக்கையான சூர்யா இதழில் கொஞ்சமும் வெட்கமோ, அப்பெண்ணின் மீது கருணையோ இன்றி வெளியிட்டார் மேனகா.

அது நாட்டு மக்களிடையே மிகுந்த அருவருப்பை பெற்றது,ஆனால் அந்த சூர்யா பத்திரிக்கை ஒரு பிரதி கூட மிச்சமில்லாமல் விற்று தீர்ந்தது, 50 ரூபாய்க்கு கூட அதை வாங்கி கள்ளச்சந்தையில் விற்றனர். இப்புகைப்படங்கள் சுரேஷ் ராமும் சுஷ்மா சௌத்திரியும் நெருக்கமான உடலுறவில் ஈடுபட்டு இருந்ததை வெளிப்படுத்தின,சுரேஷ் ராம் தன் காரில் வைத்திருந்த அந்த 9 போலராய்ட் புகைப்படங்களை காங்கிரசார் திருடி வந்து, அதை சூர்யா பத்திரிக்கையிலும் நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையிலும் பிரசுரித்தனர். 

அதன் பின்னர் அந்தப் பெண் சுஷ்மா சௌத்தியின்  வாழ்க்கையே சூன்யமானது, இப்புகைப்படங்கள் பாபு ஜகஜீவன் ராமின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டது, இந்த கீழ்தரமான செயல்மூலம் தன் அரசியல் எதிரியை அழிக்க என்ன வேண்டுமானாலும் செய்யும் காங்கிரஸ் என்பது நிருபணமாயிற்று, அந்தப்புகைப்படங்கள் நெகடிவ் ஃபார்மட்டில் இங்கே இருக்கின்றன. வயது வந்தோருக்கு மட்டும்.

இதற்கு எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கும் எடிட்டிங் செய்ய உடந்தையாக இருந்தார் என்பதும் வெட்கக்கேடு, மிருகங்களை நேசிக்கும் மேனகா  இப்படி மிருகங்களை விட கீழ்தரமாக இறங்குவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். உங்களுக்கு பத்திரிக்கை தர்மத்தையே கழுத்தை நெறித்து கொன்ற அந்த கீழ்தரமான செயல் மறந்து விட்டதா?!!! 
எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை ராணுவத்துக்கும் புலிகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய உங்கள் தந்தை ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படையை யாராலுமே  மறக்க முடியாது, 3 வருட அட்டூழியத்துக்கு பின்னர் அமைதிப் படையை வெளியேற்ற புலிகளும்,அவர்கள் எதிரிகளான சிங்கள ராணுவமும் ஒன்றாய் இணைந்து பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல,அது ஆப்பரேஷன் பூமாலை அல்ல ஆப்பரேஷன் சவமாலை,

உலக அரங்கில் அமைதியை திரும்ப வைத்தவர் என ராஜீவின் புகழை பரைசாற்றும் அற்ப சுயநலத்துக்காக,புற்றுநோய் கிருமி போல நாட்டையே சூறையாடிய கோரப்படை அது,ஆப்பரேஷன் பூமாலையின் அட்டூழியங்களால் மடிந்த உயிர்களுக்கும் ,வல்லுறவு செய்யப்பட்ட சகோதரிகளுக்கும்,அங்கே இன்றும் நடைபிணங்கள் போல வாழ்பவர்க்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் ராகுல்?,அந்த ரத்த வாடை காயும் முன்பு முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு துணை நின்று சுமார் மூன்று லட்சம் பேர் மடிய காரணமாக இருந்தீர்களே?!!!அது மறந்துவிட்டதா?!!! இன்னும் எழுதவே அயற்சியாக இருக்கிறது,ஊழல் செய்வதில் கின்னஸ் சாதனை  புரிந்த கட்சி என்பது தான் உங்கள் சாதனையாக இருக்கிறது.

உங்களை விட மக்களாகிய எங்களுக்கு நிறைய வரலாறு  தெரியும் ,அவை நீங்கா வடுக்களாக எங்கள் மனதில் இன்னும் உள்ளன. அதை நாங்கள் மறக்கப்போவதில்லை. உங்கள் குடும்பத்தைப் பற்றி தேடினாலே இணையம் நல்லதாக எதுவும்  தருவதில்லை,  அதற்கு முதலில் ஏதாவது வழி பாருங்கள்.அப்புறம் மரண பயம் கொள்ளலாம்.

அண்ணாத்தையின் மரணபயத்தை இங்கே படிக்கலாம்.

 சீக்கிய இன அழிப்பு பற்றி பேசும்  சாரு எழுதிய சிறுகதையான 

பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி

இந்திய எமர்ஜென்சி காலகட்டம் அதன் அக்கிரமங்களை ரத்தினசுருக்கமாக தெரிந்து கொள்ள பார்க்க வேண்டிய படம்:- 


 இந்திரா அம்மையார் சாவுக்கு உச்சு கொட்டுபவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய ஆவணப்படம்:-