சாகாதவருக்கு ஒரு அஞ்சலி

 பிரபலங்கள் இறந்து போனாலே சக பிரபலங்களுக்கு அஞ்சலிக் கட்டுரை எழுத கை பரபரக்கும் தான்,அதில் தவறில்லை,ஆனால் ஒரு அஞ்சலிக் கட்டுரையில் இறந்தவர் பற்றிய சரியான விபரம்,அவர் வாழ்ந்த வாழ்க்கைக் குறிப்பு,செய்த சாதனைகள் இடம் பெறுகையில் ,ஒன்றுக்கு இரண்டு முறை எழுதியவற்றை சரிபார்க்க வேண்டாமா?

இன்று காலையில் முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட தோழர்கள் தினசரியான ஜனசக்தி யின் முதல் பக்க செய்தியைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டேன். தோழர்கள் காந்தியாக நடித்தவருக்கு மரியாதை செய்ததை எண்ணி சந்தோஷப்படுவதா? அல்லது தோழர்களின் அறியாமையையும் அவசரக்குடுக்கைத் தனத்தையும் எண்ணி திட்டுவதா என்று தெரியவில்லை..


 என்ன இது சத்திய சோதனை? காந்தியாக நடித்தவர் பென் கிங்ஸ்லி http://en.wikipedia.org/wiki/Ben_Kingsley காந்தி படத்தை இயக்கியவர் தான் ரிச்சர்ட் அட்டன்பரோ, பென் கிங்ஸ்லி இன்னும் திடகாத்திரமாக உலகில் ஜீவித்திருக்கிறார். அஞ்சலி கட்டுரையில் கூட தவறான புகைப்படமும் தகவலும் எத்தனை மெத்தனமாக இடம் பெறுகிறது பாருங்கள்,இது தான் இன்றைய செய்திப் பத்திரிக்கையின் லட்சணம், கணினி யுகத்தில் எத்தனை எளிதாக தகவல்களை சரிபார்க்க முடியும்?,அதைக்கூட செய்யாத தடித்தனத்தை என்ன சொல்வது?

எடிட்டர் என்ன புடுங்கறார்?என்று கேட்கிறேன், இப்படித்தான் நெல்சன் மண்டேலா இறந்த போது மார்கன் ஃப்ரீமேன் படத்தை போட்டு அஞ்சலி செய்தனர் ஆர்வக்கோளாறுகள். http://en.wikipedia.org/wiki/Richard_Attenborough அதற்கு மார்கன் ஃப்ரீமேன் தன் ட்வீட்டரில் வசை பாடியிருந்ததைப் பாருங்கள்.