நல்லவனுக்கு நல்லவன் [1984] உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே பாடல்

நல்லவனுக்கு நல்லவன் படத்தின் டைட்டில் ஸ்க்ரோலில் இந்த ப்ளேஸ்மெண்டைப் பார்த்ததும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவிட்டேன்,1984 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், கவிப் பேரரசு வைரமுத்துவின் பெயர் சீனியாரிட்டி பிரகாரம் எத்தனை கவிஞர்களுக்கு கீழே வருகிறது என்று பாருங்கள். 

வைரமுத்து இசைஞானியுடன் 1986ஆம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படம் வரை தான் இணைந்து பணியாற்றியுள்ளார், அந்த 2 வருடங்களில் அவரது கேரியர் க்ராஃப் எத்தனை உச்சத்தை தொட்டிருக்கிறது? என எண்ணி வியக்கிறேன்.

வைரமுத்து உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே பாடலை இயற்ற தாசேட்டாவும், அறிமுகப் பாடகியான பெங்களூர் மஞ்சுளாவும் பாடியிருப்பார்கள் , அவர் கன்னடத்தில் மஞ்சுளா குருராஜ் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற பாடகியுமாவார், http://en.wikipedia.org/wiki/Manjula_Gururaj  

பாடலில் திருவிடந்தை கிராமத்தின் அரசு லைசென்ஸ் பெற்ற ஒரு கள்ளுக்கடையும் வரும் [உரிமையாளர் ராஜரத்தினம் என்று இருக்கும்] , முட்டுக்காடு படகுத்துறையின் நீர்நிலையில் பெரும்பான்மையான காட்சிகளையும், பக்கிங்காம் கால்வாயின் மதகின் மீது சில காட்சிகளையும் படமாக்கியிருப்பார்கள். முட்டுக்காடு படகுத்துறையில் தமிழ்நாடு டூரிசம் மோட்டார் போட்டின் விளிம்பில் அட்டகாசமாக ரஜினி,ராதிகா ஜோடி அமர்ந்து செல்லும் காட்சி ரம்மியமாக இருக்கும்,பாபுவின் ஒளிப்பதிவும் அட்டகாசமாக இருக்கும்,இயக்கம் எஸ்,பி.முத்துராமன்.ரவுடியை பணக்காரவீட்டுப் பெண் காதலித்து மணக்கும் கைங்கர்யத்தை தமிழ்சினிமாவில் இப்படம் தான் துவக்கி வைத்தது என்று நினைக்கிறேன்.

பாடலை இங்கே கேளுங்கள்  http://www.youtube.com/watch?v=YIdAyBJUgT4



இப்பாடலுக்கு தாசேட்டாவின் பேத்தோஸ் வெர்ஷனும் உண்டு.அது இங்கே
http://www.youtube.com/watch?v=791ASQ954ns