யாருக்கு இந்த அஞ்சலி? ஸ்ரீதருக்கா?அல்லது ருத்ரையாவுக்கா?


இது இயக்குனர் ருத்ரையாவுக்கு நேற்றைய நியூ இண்டியன் எக்ஸ்ப்ரெஸ் ஆங்கில தினசரியில் வந்த அஞ்சலி,இதை எழுதியது டெபுடி சப் எடிட்டராம்,அவர் பெயர் பாபு ஜெயக்குமார்,எத்தனை கொடுமை பாருங்கள்?
அவள் அப்படித்தான் படத்துக்கு பதில் இளமை ஊஞ்சலாடுகிறது படம், இயக்குனர் ருத்ரையா படத்துக்கு பதிலாக இயக்குனர் ஸ்ரீதரின் படம்.

ஒருவருக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்தால் என்னக் கொள்ளை?கவிதை எழுத முடியாதவன்,கவிதை எழுதுகிறேன் எனக் கிளம்புவதும்,கட்டுரை எழுத முடியாதவன் கட்டுரை எழுதுகிறேன் எனக் கிளம்புவதும்,கதை எழுதத் தெரியாதவன் கதை எழுதுகிறேன் எனக் கிளம்புவதும் என  இப்படி குரங்கைப் பிடித்து வைக்கின்றான்கள்.பூனைக்கு யார் மணி கட்டுவது.

இது போல சிண்டிகேட் அமைத்து திராபைகளை அழைத்து எழுத விடும் பத்திரிக்கைகளை என்ன செய்வது? ராண்டார் கை என்று ஒருவர் தரும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும்,அவர் எழுத்துலக வாரிசுகள் எழுதும் கட்டுரையில் என்ன எதிர்பார்க்க முடியும்?

வெட்டிக்கு எழுதும் என் போன்ற சிலர் கூட தகவல்களை சரிபார்த்து வீடியோவை பலமுறை பார்த்துவிட்டு எழுதுகிறோம், பத்திரிக்கையில் எழுதுபவருக்கு அந்த பொருப்புணர்வு வேண்டாமா?
 
இளமை ஊஞ்சலாடுகிறது பற்றி படிக்க
அவள் அப்படித்தான் பற்றி படிக்க