மிருகநேச ஆர்வலர் மனேகாவின் கோர முகம் மற்றும் இந்தியாவின் முதல் ரிவெஞ்ச் போர்ன்


மிருகநேச ஆர்வலர் மனேகாவின் மற்றொரு முகம் பற்றியும் இந்தியாவின் முதல் ரிவெஞ்ச் போர்ன் பற்றியும் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

 நேரு குடும்பத்தின் இளைய மருமகளும் மூத்த விதவையுமான மேனகா ராகுலுக்கு சித்தி முறை,அவர் செய்தியாளராக செய்த வெட்கம் கெட்ட காரியம் இன்றைய தலைமுறை அறிய வேண்டும், மனேகா என்னும் மேனகா காந்தி காங்கிரஸின் துதிபாடி பத்திரிக்கையான ''சூர்யா'' இதழில் வெளியிட்ட அதிர வைக்கும் செய்திக்காக பெரிதும் அசிங்கப்பட்டவர்,பாபு ஜகஜீவன் ராம் ஒரு தலித் - மூத்த அரசியல்வாதி,தான் இருந்த இந்திரா காந்தி அரசிலிருந்து விலகி ஜனதா கட்சி 1977-ல் பதவிக்கு வர பெரிதும் உதவியவர் என்ற காரணத்துக்காகவே மேனகா காந்தியால் பொதுவில் அப்படி அவமானப்படுத்தப்பட்டவர் .பாபு ஜகஜீவன் ராம் அப்போது இந்திய பிரதமர் பதவிக்கு தேர்வாகாக கூடியவர்களில் ஒருவராகக்கூட கருதப்பட்டார்.

1978 ஆம் வருடம் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாபு ஜகஜீவன் ராமின் மகன் சுரேஷ் ராமுக்கும், டெல்லி பல்கலைக்கழக மாணவி சுஷ்மா சௌதிரிக்கும் இடையேயான வாய்ப்புணர்ச்சி, மற்றும் அப்பட்டமான உடலுறவு போலராய்ட் புகைப்படக் காட்சிகளை, சுமார் 9 புகைப்படங்களாக காங்கிரஸ் கட்சி பத்திரிக்கையான சூர்யா இதழில் கொஞ்சமும் வெட்கமோ, அப்பெண்ணின் மீது கருணையோ இன்றி வெளியிட்டார் மேனகா.
அது நாட்டு மக்களிடையே மிகுந்த அருவருப்பை பெற்றது,ஆனால் அந்த சூர்யா பத்திரிக்கை ஒரு பிரதி கூட மிச்சமில்லாமல் விற்று தீர்ந்தது, 50 ரூபாய்க்கு கூட அதை வாங்கி கள்ளச்சந்தையில் விற்றனர். இப்புகைப்படங்கள் சுரேஷ் ராமும் சுஷ்மா சௌத்திரியும் நெருக்கமான உடலுறவில் ஈடுபட்டு இருந்ததை வெளிப்படுத்தின,சுரேஷ் ராம் தன் காரில் வைத்திருந்த அந்த 9 போலராய்ட் புகைப்படங்களை காங்கிரசார் திருடி வந்து, அதை சூர்யா பத்திரிக்கையிலும் நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையிலும் பிரசுரித்தனர்.

அதன் பின்னர் அந்தப் பெண் சுஷ்மா சௌத்திரியின் வாழ்க்கையே சூன்யமானது, இப்புகைப்படங்கள் பாபு ஜகஜீவன் ராமின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டது, இந்த கீழ்தரமான செயல்மூலம் தன் அரசியல் எதிரியை அழிக்க என்ன வேண்டுமானாலும் செய்யும் காங்கிரஸ் என்பது நிருபணமாயிற்று, ஆதாரங்கள் இங்கே இருக்கின்றன. வயது வந்தோருக்கு மட்டும்.http://www.echarcha.com/forum/showthread.php?t=25710

இதற்கு எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கும் எடிட்டிங் செய்ய உடந்தையாக இருந்தார் என்பதும் வெட்கக்கேடு, மிருகங்களை நேசிக்கும் மேனகா இப்படி மிருகங்களை விட கீழ்தரமாக இறங்குவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இப்போது மனேகா காந்தி இருக்கும் கட்சி வேண்டுமானால் மாறலாம்,ஆனால் அவர் குணம் மாறாது.