Which Annie Gives It Those Ones [1988] ஆர்கிடெக்சர் தீஸிஸ் பின்னனியில் அருந்ததிராய் நடித்த படம்



53 வயதாகும் எழுத்தாளரும் சமூக நல ஆர்வலருமான அருந்ததி ராய் டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பிரிவின் 80களின் மாணவியுமாவார்,

இவர் பி.ஆர்க் பட்டப் படிப்பை முடிக்கும் முன்னரே கல்லூரியிலிருந்து தன் காதலர் Gerard da Cunha வுடன் வெளியேறி விட்டார்.[http://www.tehelka.com/the-visionary-reformer-gerard-da-cunha/?singlepage=1]

 பின்னர் அந்தக் காதலும் உறவும் பொய்த்தது, [இதை மையமாக வைத்தோ வைக்காமலோ 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஃபஹாத் ஃபாஸிலும் ,ஆன் அகஸ்டினும் நடித்த ஆர்டிஸ்ட் என்னும் திரைப்படம் ஷ்யாம் ப்ரசாத் இயக்கத்தில் வெளிவந்தது]

அதன் பின்னர் பேரலல் சினிமா இயக்குனரான  Pradip Krishen உடன் இவர் இன்னுமோர் வாழ்க்கை அமைத்துக் கொள்ள அதுவும் பொய்த்தது. இல்வாழ்க்கையில்  சாதிக்க முடியாததை இவர் பொதுவாழ்வில் சாதித்து விட்டார் என்றால் சற்றும் மிகையில்லை.

1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான The God of Small Things என்னும் நாவலுக்கு புக்கர் பரிசு பெற்றார். இவர் புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியரும் ஆவார்,2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட இருந்த சாகித்ய அகாடமி விருதை அதில் நிலவும் சிபாரிசு அரசியலால்   இவர் வாங்க மறுத்தும் விட்டார்.  2004 ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசை இவர் பெற்றிருக்கிறார்.


இவர் திரைக்கதை எழுதி நடித்து 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இண்டிபெண்டண்ட் வகைப் படமான In Which Annie Gives It Those Ones , பி ஆர்க் படிக்கும் மாணவர்களின் இறுதி வருட தீஸீஸை மிகவும் தத்ரூபமாகவும், திறம்படவும் பேசுகிறது, design crit செஷனுக்கு வருகை தரும் Visiting Professional களின் யதார்த்த மனோ நிலையை மிக அருமையாக இப்படத்தில் கேலி செய்திருப்பார்கள்.

Visiting Professional கள்  அழகான பெண் மாணவிகள் வடிவமைத்த ப்ராஜெக்டில் இல்லாத ஒரு symbolism மற்றும் concept ஐ தாங்களே உருவகப்படுத்திக்கொண்டு இருப்பதிலேயே அதிக மதிப்பெண்களை வாரி வழங்குவதையும்,

ஒர் ஆண் மாணவன் வடிவமைத்த ப்ராஜெக்டில் இருக்கும்  ஒரு symbolism மற்றும் concept ஐ மறுத்தும்  மட்டம் தட்டி அந்த ப்ராஜக்டையே திரும்பச் செய்ய வலியுறுத்துவதையும் அருந்ததி ராய்  திரைக்கதையில் வெளிப்படையாக எழுதி தன்னை சுயவிமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.

கட்டிடக்கலைஞர்கள், கட்டிடக்கலை மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது. இதில் இளம் வயது ஷாரூக்கானும் சீனியர் மாணவராக சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். அருந்ததி ராய் ராதா என்னும் பி.ஆர்க் மாணவியாக பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நித்யா மேனன் ஆர்கிடெக்டாக நடிக்க மணிரத்னம் இப்போது இயக்கி வரும் ஓக்கே கண்மணி அருந்ததிராயின் ஆரம்ப கால கல்லூரி வாழ்க்கையைத் தழுவியதாக இருக்கலாம் என்ற வதந்தியும் நிலவுகிறது.

இந்தப் படம்  முழுதாக யூட்யூபில் கிடைக்கிறது , https://www.youtube.com/watch?v=P_r4mzD1_Bc

1988 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆங்கில மொழிப்படத்துக்கான தேசிய விருதையும் ,சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் பெற்ற இப்படத்தை ஒரு வெள்ளிக்கிழமை இரவு டெல்லி தூர்தர்ஷனில் பார்த்த அமரர் சுஜாதா  ஜூலை 1989 ன் கணையாழி கடைசி பக்கங்களில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக செய்த அறிமுகம் இங்கே.

கணையாழி கடைசி பக்கங்களில் அவர் 70களின் துவக்கத்திலிருந்து 90கள் வரை இடையில் பல நீண்ட தடைகளுடன் எழுதினாலும் அர்த்தமுள்ளதாக எழுதினார். அப்பகுதிக்காகவே கணையாழிக்கு சந்தாகட்டி அதை பொக்கிஷமாக சேர்த்து வைத்தவர்களை நான் அறிவேன், அதில் அவர் சிலாகிக்கும் பெண் எழுத்தாளர்களை அல்லது  நடிகைகளை அவள் என்றே எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார். பெண்களை குறிக்க  மரியாதைக்கு ஆணுக்கு சேர்க்கும் “ர்” அவர் சேர்த்து எழுதியதே இல்லை.
 
மேலும் நம் பாரதி மணி பாட்டையா அருந்ததி ராய் திரைக்கதையில் , அவரின் கணவர் ப்ரதிப் கிருஷ்ணனின் இயக்கத்தில்  எலக்ட்ரிக் மூன் என்னும் இந்திய ஆங்கில மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார்.அப்படம் 1992ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான  தேசிய விருதும் பெற்றுள்ளது. அந்த சுவையான தருணத்தை உயிர்மையில் கட்டுரையாக எழுதியிருக்கிறார் பாட்டையா,அதை இங்கே படிக்கலாம்.

அருந்ததி ராயும் என் முதல் ஆங்கிலப்படமும் — பாரதி மணி (Bharati Mani)
https://balhanuman.wordpress.com/2011/02/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/