மக்கள் முதல்வரின் ஒளிமயமான எதிர்காலம்!!!


சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டை மறு விசாரனை செய்யும் நீதிபதி குமாரசாமி புண்ணியத்தில் மக்கள் முதல்வர் எல்லா சொத்து வழக்கிலிருந்தும் விடுதலை ஆகி வெளியே வரும் காலம் தொலைவில் இல்லை,

அந்த அளவுக்கு நீதிபதியின் பாண்டித்யம் இருக்கிறது, உதாரணத்துக்கு அவர் கேட்கும் ஆர்வம் மிகுந்த சில கேள்விகளைப் பாருங்கள்.

//கருணாநிதிக்கு 92 வயதாகிறதா? (கன்னத்தில் கை வைத்து ஆச்சர்யமடைந்தார்.)

முதலில் தி.மு.கதான் தொடங்கப்பட்டதா?

டி.கேவுக்கு விளக்கம் சொல்லுங்கள்.[அதாவது திராவிடர் கழகத்துக்கு]
''அரசு ஊழியர்கள் கிஃப்ட் வாங்கலாமா?'

(தி.மு.க வக்கீல் குமரேசனைப் பார்த்து) உங்கள் தலைவருக்கும் கிஃப்ட் தருவார்களா?

நமது எம்.ஜி.ஆர். நியூஸ் பேப்பர் ஆரம்பிக்க யார் மூளையாக இருந்தது?//

இந்தியரின் தலை விதி , ஊழல் செய்து பிடிபட்ட அரசியல்வாதிகள் குன்ஹா போன்ற நல்ல நீதிமான்களால் தண்டிக்கப்பட்டாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து  எளிதாக வெளியே வந்து மீண்டும் தங்கள் ஊழலைத் தொடர்வார்கள்.

கடந்த 26 ஆம் தேதி தமிழக அரசு குடியரசு தின  ஊர்வலத்தில் ஊர்திகளில்  மக்கள் முதல்வர் படங்கள் பூதாகாரமாக இடம் பெற்ற போதே  பெங்களூர் வழக்கு விசாரனையின் டீசர் வெளிவந்தது போலிருந்தது.

வாழ்க ஜனநாயகம்,பெங்களூர் சொத்து வழக்கின் ட்ரெய்லரை ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலின் வெற்றி விழாவில் பார்க்கலாம்.


மேலும் விபரங்களுக்கு இந்த விகடன் கட்டுரையைப் படியுங்கள்
கருணாநிதிக்கு 92 வயது ஆகிறதா?
சூப்பராகப் போய்க்கொண்டு இருக்கும் பெங்களூரு வழக்கு!