அதிமுஹூர்த்ததினம்

இன்று அதி முஹூர்த்த தினம் , இரண்டு திருமணம், இரண்டு கிரகபிரவேசம், ஒரு சஷ்டி அப்த பூர்த்தி, ஓரு பிறந்த நாள் விழா என அழைப்புகள் நீண்டது.

ஆனால் எதற்கும் போக முடியாதபடிக்கு வேலை கழுத்தை நெறித்தது, நான் அன்றாடம் காய்ச்சி, எனக்கு சனி ஞாயிறு அரசு விடுமுறை எல்லாம் இல்லை,  வெளியில் அனல் தகிக்கும் வெயில், காலையில் இயங்க ஆரம்பித்த ஏஸி மாலை வரை இயங்கியது, வேறு வழியில்லை, இந்த கோடைக்கு பயந்து ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு இன்ன பிற மலைவாசல் தலங்கள் செல்வது எல்லாம் தற்காலிக நிவாரணம் தான், ஏஸியை இயக்கி ஆசுவாசமாக வீட்டில் இருந்து பணிகளை முடிப்பதே புத்திசாலித்தனம், சுற்றுலாவுக்கு செலவழிக்கும் தொகையை  மின்சார கட்டணத்துக்கு செலவிட்டால் இந்த கடும் வெயிலில் இருந்து தப்பலாம்.