நடிகர் குள்ளமணி | பொண்ணு ஊருக்கு புதுசு | கரகாட்டக்காரன்

கரகாட்டக்காரன் (1989) திரைப்படத்தில் பழைய இரும்பு ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம் காமெடியில் தோன்றிய நடிகர் குள்ளமணி,  பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் (1979) ருக்குமணி வண்டி வருது பாடலில் சுதாகர் சைக்கிள் கற்றுக்கொள்கையில் உடன் சைக்கிள் தள்ளியபடி தான் வருகிறார்.

இயக்குனர் கங்கை அமரன் இவரை சரியாக கரகாட்டக்காரனில் நினைவு வைத்திருந்து மீண்டும் கையில் சைக்கிள் தந்து தள்ள வைத்துள்ளார், நடிகர்  குள்ளமணி அபாரமான கொண்டாட்டமான முகபாவங்களை அந்த ஓடாத செவ்வி இம்பாலா 1960 ஸ்போர்ட்ஸ் செடான் படகு காரை சிலுக்குப்பட்டி கிராமத்திற்குள் பார்க்கையில் தருவார், கவுண்டமணிக்கு கெட்ட கோபம் தலைக்கேற வைப்பார்,செந்திலுக்கு பேரிச்சம்பழம் சாப்பிட வாய் ஊற செய்வார்.

கல்ட் காமெடி அந்தஸ்து பெற்றது இந்த பேரீச்சம்பழம் காமெடி, வாழைப்பழக் காமெடியை விட பேரீச்சம்பழ காமெடியே அவலநகைச்சுவையை திறம்பட பேசுகிறது.

நடிகர் குள்ளமணி வாழ்நாள் சாதனையாக இந்த காயலாங்கடைக்காரர் கதாபாத்திரத்தை செய்து விட்டார்.