1984 ஆம் ஆண்டு வழக்கொழிந்த ரேடியோ லைசன்ஸ் பாஸ்புக்

இன்று தன் அறுபது எழுபதுகளில் இருப்பவர்களுக்கு போஸ்ட் ஆபீஸில் சென்று ரேடியோ லைசன்ஸ் வரி கட்டிய அனுபவம் இருக்கும்.

வானொலி (துவக்கம் 1928)அல்லது தொலைக்காட்சி (துவக்கம்1975 ) என வைத்திருப்பவர்கள் இந்த கேளிக்கை வரி ரூபாய் 15 ஒவ்வொரு ஆண்டும் கட்டினர்,வீட்டின் வெளியே இதற்கென ஆன்டனா கூட நிறுவினர்,இந்த சாதனங்கள் பழுதான போதும் நெடுங்காலம் உபயோகிக்காத போதும் போஸ்ட் ஆபீஸில் இருந்து நேரில் வந்து சோதனை செய்து சென்றுள்ளனர், ஒன்றுக்கு மேற்பட்ட ரேடியோ வைத்திருந்த பணக்காரர்கள் ஒவ்வொரு கூடுதல் இணைப்பிற்கும் 3 ரூபாய் கேளிக்கை வரி தந்து அஞ்சல் தலை வாங்கி இந்த பாஸ்புக்கில் ஒட்டி முத்திரையும் போஸ்ட் மாஸ்டர் கையொப்பமும்  வாங்கியுள்ளனர்.

இந்த ரேடியோ பாஸ்புக்கின் உள் அட்டையில் போபாலில் பேரிடர் விளைவித்த யூனியன் கார்பைட் நிறுவனம் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் UCIL (Eveready)பேட்டரிக்கு பெருமையுடன் விளம்பரம் செய்ததைப் பாருங்கள், இந்த 1984 போபால் விஷவாயு பேரிடருக்குப் பின் UCIL  (Union Carbide India Ltd)நிறுவனத்தை EICL  (Eveready Industries India Ltd.) என்று பெயர் மாற்றம் செய்து இன்றும் Eveready என்ற பெயரில் சந்தைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

1984 ஆம் ஆண்டில் மத்திய அமைச்சர் வசந்த் சாத்தே என்பவரால் இந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைக்கான கேளிக்கை வரி சட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டது.

இன்று வானொலி தொலைக்காட்சி என எதுவும் சீப்படுகிறது.