பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை [1982] மற்றும் சத்மா [1983]




மூன்றாம் பிறையின் இந்தி வடிவமான சத்மாவுக்கும் [காயம்] அதே ஊட்டி தான் லொக்கேஷன், அதே நடிகர்கள் [அந்த தாடிக்கார வில்லன் கதா பாத்திரத்தில் Gulshan Grover இந்திக்காக, இன்னும் சில உப கதாபாத்திரங்களுக்காக இந்தி நடிகர்கள் சிலர் மாற்றப்பட்டனர்], அதே தொழில்நுட்பக் கலைஞர்கள் தான், அதே மூன்றாம் பிறை  மெட்டிலேயே அமைந்த பாடல்கள் தான், பாடகர்களில் கூடுதலாக  Suresh Wadkar, Asha Bhosle  உண்டு, கதாபாத்திரங்களின் பெயர்களை இந்திக்காக மாற்றியுமிருந்தார், இங்கே கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் இந்தியில் கவிஞர் குல்சார் எழுதினார்.
சத்மாவின் இந்தி டைட்டில் ஸ்க்ரோல்
மூன்றாம் பிறையின் இறுதிக் காட்சியை கேத்தி ரயில் நிலையத்தில் படமாக்கியிருந்தார் இயக்குனர் பாலு மகேந்திரா.சத்மா படத்தில் கேத்தி ரயில் நிலையத்தின் பெயர் பலகையை ராம்நகர் என்று பெயர் மாற்றி படம் பிடித்திருப்பார். [ராம் நகர் என்பதை முழுதாக காட்ட மாட்டார்]
கேத்தி ரயிலடி




ராம் நகர் என பெயர் மாற்றப்பட்ட கேத்தி ரயிலடி
இக்காட்சியைப் பற்றி தன் சன்டே இந்தியன் பேட்டியில் இப்படி சொல்லியிருந்தார்.

தேவலோக வாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா.

       ஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம்.

       அந்தத் தேவதையின் வரவையும் மறைவையும், அவருக்கும் எனக்குமான   உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்கு சொல்லியிருந்தேன். “மூன்றாம் பிறை” படம் மூலமாக.

        மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.!

        நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன்.

        ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன. இது உங்களுக்கு........

எனக்கு......

       எல்லா இன்னல்களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்...!
மறைந்த நடிகை ஷோபா

இப்படத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் , இது கவிஞர் .கண்ணதாசன் எழுதிய கடைசி பாடலான கண்ணே கலைமானே என்னும் அழியாப்புகழ் பெற்ற பாடலைக் கொண்டிருக்கும் படம்.

அப்பாடல் 1981 ஆம் ஆண்டு கவிஞர் அவர்கள் சிகிச்சைக்காக  அமெரிக்காவுக்கு செல்லும் போது  தி.நகரிலிருந்து அவர் மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் வழியில் இயக்குனர் பாலு மகேந்திரா காரில் உடன் செல்கையில் கவிஞர் சொல்லச் சொல்ல அவர் குறிப்பெடுத்துப் பிறந்த பாடல், அதன் பின்னர் அமெரிக்காவில் சிகிச்சை பலனின்றி  இறந்த கவிஞரின் பூத உடல் தான் சென்னைக்கு திரும்பி வந்தது, அப்போது கவிஞரின் மகளான விசாலிக்கு ஆறே வயதாம், கவிஞரின் சிகிச்சைக்கு இவரும் அவர் அன்னையுடன் உடன் சென்றிருந்ததை ஒரு பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்தார்.

 இன்றும் அவர் கண்ணே கலைமானே பாடலை தந்தை தனக்கு பாடி வைத்து விட்டுச் சென்ற தாலாட்டாகவே நினைப்பதாகப் பகிர்ந்தார். கவிஞரின் 13 ஆவது குழந்தையான கலைவாணன் இளம் வயதிலேயே மறைந்து விட்டார்,அவர் விசாலிக்கு உடன் பிறந்த அண்ணனும் கூட,அவரும் விசாலியுடன் இது அப்பா எனக்காகத் தான் கலைமானே என்று பாடி விட்டுச் சென்ற தாலாட்டு என்று இவருடன் தர்க்கம் செய்வாராம். மிகவும் நெகிழ்ச்சியூட்டும்,கல்லையும் கரைக்கும் நீண்ட பேட்டி அது.

இங்கே சென்று அதைப் படியுங்கள்.