பாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்

மகாகவி பாரதியின் படைப்புகளை தன் படைப்புகளில் எங்கெல்லாம் உபயோகப்படுத்த வழியிருக்கிறதோ அங்கெல்லாம்,மிக அழகாக பயன்படுத்தியவர் இயக்குனர் சிகரம்.ஒரு க்ளாஸிக்கை எப்படி உருவமும் பெருமையும் சிதையாமல் பயன்படுத்த வேண்டும் என்பது அவருக்கு கை வந்த கலை. தமிழ் சினிமாவில் பாரதி மற்றும் திருவள்ளுவரின் படைப்புகளை மிக அதிகமாக மரியாதை செய்தவர் அவரே.

இதோ பாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடல்.இது நாட்டை என்னும் ராகத்தில் அமைந்தது.

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.

இயக்குனர் கே.பாலச்சந்தரின்  சிந்து பைரவி படத்தில் வந்த பாடல் இங்கே இது முழுக்க பாரதியார் இயற்றியது,தாஸேட்டா இசைஞானியின் இசையில் பாடியது
http://www.youtube.com/watch?v=oqhZ4b9M9CM

இயக்குனர் கே.பாலச்சந்தரின்  மனதில் உறுதி வேண்டும்  படத்தில் வந்த பாடல் இங்கே,இதுவும் பாரதியார் இயற்றிய பாடலே,அங்கங்கே அனுபல்லவி,சரணத்தில் வாலியின் பேனா பாரதியாரின் வரிகளை சரளமாக உள்வாங்கி படைத்தது.இதுவும்  தாஸேட்டா இசைஞானியின் இசையில் பாடியது
http://www.youtube.com/watch?v=Qw40A1XijVE
கள்வனின் காதலி படத்தில் பயன்படுத்தப்பட்ட பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் பாடல் வடிவம் கே.பாலசந்தருக்கு மிகுந்த இஸ்பிரேஷனாக இருந்தது.இப்பாடலை டி.எம்.எஸ்ஸும் பானுமதியும் பாடியிருப்பார்கள்.