இயக்குனர் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள்




இயக்குனர் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா மொத்தம் 6 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் 1985ஆம் ஆண்டில் இருந்து தான் அவர் இணைந்து பணியாற்றினாலும் கே.பாலச்சந்தரின் தயாரிப்பில் 1981ஆம் ஆண்டே இணைந்து பணியாற்ற ஆரம்பித்து விட்டார், கவிதாலயா பட நிறுவனம் துவங்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் படமான நெற்றிக்கண்[1981]திரைப்படம் தான் இசைஞானியும் , கே.பாலச்சந்தரும் இணைந்த முதல் படம்.

இப்படி, கவிதாலயா தயாரித்த 8 படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஆக மொத்தம் கவிதாலயாவின் 14 படங்களுக்கு  இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

அவை பின்வருமாறு
கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில்
இசைஞானி இளையராஜா இசையமைத்தது
நெற்றிக்கண் [1981]
புதுக்கவிதை [1982]
நான் மகான் அல்ல [1984]
பூவிலங்கு[1984]
எனக்குள் ஒருவன் [1984]
ஸ்ரீ ராகவேந்திரா [1985]
வேலைக்காரன்[1987]
சிவா[1989]
உன்னைச் சொல்லி குற்றமில்லை[1990]

கே.பாலச்சந்தர் இயக்கத்தில்
இசைஞானி இளையராஜா இசையமைத்தது

சிந்துபைரவி [1985]
புன்னகை மன்னன் [1986]
மனதில் உறுதி வேண்டும் [1987]
ருத்ரவீணா[தெலுங்கு][1988][உன்னால் முடியும் தம்பி]
உன்னால் முடியும் தம்பி [1988]
புதுப்புது அர்த்தங்கள் [1989]

கே.பாலச்சந்தர் மற்றும் இசைஞானியின் பிரிவு குறித்த இசைஞானியின் முக்கியமான பதில் 10.10.2012 குமுதம் இதழில் இருந்து.

 கேள்வி: புது புது அர்த்தங்கள் படத்திற்கு பிறகு நீங்கள் பாலசந்தர் படங்களுக்கு இசையமைக்கவில்லையே, ஏன்? (ஷாலினி ராஜன், மும்பை.)

இசைஞானி இளையராஜா :
‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்திற்கு ரீ-ரெக்கார்டிங் நடக்க வேண்டிய நேரத்தில் இங்கே ஸ்ட்ரைக் இருந்தது. அதனால் ‘சிவா’ என்கிற படத்துக்காக நான் பாம்பே போயிருந்தேன். அப்போ கவிதாலயாவிலிருந்து அனந்தும் பிரமிட் நடராஜனும் வந்து என்னைச் சந்திச்சாங்க. ‘சார், ‘புதுப்புது அர்த்தங்கள்’ ரிலீஸ் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. ஆனால் ஸ்டிரைக் நடந்துகிட்டிருக்கு. நீங்களும் பாம்பேயிலிருந்து வர முடியாது. நாங்க உங்களுக்காக காத்திருந்து ரெக்கார்ட் பண்ணுறதுக்கும் டைம் இல்லாமல் இருக்கு. அதனால் நாங்க பிண்ணனி இசைக்கு   ட்ராக் எடுத்து போட்டுக்குறோம்,’ என்றார்கள்.

‘அப்போ உங்களுக்கு டைட்டிலில் ‘இளையராஜா’ என்று பெயர் மட்டும்தான் போட வேண்டும். என் மியூசிக் உங்களுக்கு தேவையில்லைன்னு இதுல இருந்து தெரியுது. என்னோட பெயரை வியாபாரத்திற்காக பயன்படுத்திக்கப் போறீங்க. இதுக்கு டைரக்டரும் உடந்தையா இருக்காரு இல்ல. நீங்க பண்றதை பண்ணிக்கோங்க,’ன்னு சொல்லி விட்டுவிட்டேன். 


அப்புறம் ரொம்ப நாள் கழித்து கவிதாலயாவிலிருந்து வந்து மியூசிக் பண்ண சொன்னபோது ‘இவங்களுக்கு நம் பெயர் மட்டும்தான் முக்கியமா இருக்கு. நம்மோட இசை இல்ல, அதனால் நாம் ஏன் மியூசிக் பண்ணணும்னு நினைச்சேன்.

 அப்புறம் ரஜினியை வெச்சு அண்ணாமலை படம் எடுத்தபோது ரஜினியையே பாலசந்தர் என்கிட்ட அனுப்பினார். ஆனால் ‘ஏன் நீங்க அவர் படத்துக்கு இசையமைக்க மறுத்தீங்கன்னு’ ரஜினியும் என்கிட்ட கேட்கல. நானும் சொல்லல. அவர் என் அண்ணாமலை படத்துக்கு மியூசிக் பண்ணணும்னுதான் கேட்டார்.

 பாலசந்தரே ரஜினிகிட்ட நடந்த விஷயங்களை சொல்லி என்கிட்ட அனுப்பியிருக்கலாம். இல்ல ரஜினியாவது கே.பி சாரை நான் பேச சொல்றேன்னு சொல்லியிருக்கலாம். எதுவும் நடக்கல. அதனால ரஜினி கேட்டும் நான் அண்ணாமலை படத்துக்கு மியூசிக் பண்ணல. இதுதான் காரணம்.