இந்திய அவசர நிலை பிரகடன சட்டம் குறித்து மௌனம் கலைத்த திரைப்படங்கள்


இந்தியாவின் அவமானங்கள் என்று இந்தியப் பிரிவினை உயிர்பலிகள், இந்து முஸ்லீம் வகுப்புக் கலவரங்கள், சீக்கிய இன அழிப்பு என்று பட்டியலிட்டுக் கொண்டே போனாலும், இந்திய அரசே முன்னின்று செய்த 21 மாத [ 25 June 1975 to 21 March 1977] அரக்க ராஜ்ஜிய அராஜகங்களான இந்திய அவசரநிலை சட்டம் நம் சரித்திரத்தில் தீராத அவமானமாகும்.

பெங்காலியில் 1970களின் சத்யஜித்ரேவின் படங்கள் எமர்ஜென்சியை முழுமையாக சித்தரிக்காவிட்டாலும் சர்காஸிசமாக கிண்டல் செய்தவை, அந்த வகையில் அரசியல் விமர்சன சினிமாவுக்கு வங்காளம் முன்னோடி.

மலையாளத்தில் 1988 ஆம் வருடம் வெளியான ஷாஜி கருனின் பிறவி எமர்ஜென்சியில் லாக்கப் டெத் ஆன பிள்ளையை ஊரெங்கும் பல்லாண்டு காலம் தேடி அலையும் தகப்பனின் கதை , இப்படத்தில் அர்ச்சனா காணாமல் போன தம்பியின் சகோதரியா நடித்திருப்பார்.மிக அருமையான மாற்று சினிமா,முழுப்படமும் இங்கே யூட்யூபில் கிடைக்கிறது.
https://www.youtube.com/watch?v=6sZ-iyQ733A



எமர்ஜென்சி பற்றி இந்தியிலேயே விரல் விட்டு எண்ணும் படியாகத் தான் படங்கள் வந்துள்ளது, அதில் சுதிர் மிஸ்ராவின் Hazaaron Khwaishein Aisi 2003 ல் தான் வந்தது என்றாலும் மிக முக்கியமான படைப்பு, எமர்ஜென்சி காலத்தை கண் முன்னே நிறுத்தும் முக்கோண காதல் கதை , இதில் லாக்கப் சாவுகள், வாசக்டமி அராஜகங்கள் காட்சியாக வருகின்றன,

மிட்நைட்ஸ் சில்ட்ரன் படத்தில்  சித்தார்த் எமர்ஜென்சியை அமல்படுத்தும் காவல் துறை அதிகாரி, இதில் காவியத் தொலைவன் சித்தார்த்தை அப்படி வேலை வாங்கியிருப்பார் தீபா மேத்தா.

சரிதா சவுத்ரி [காமசூத்ரா படத்தின்  இளவரசி தாரா] இந்திரா காந்தியாகவே உருமாறியிருந்தார் ,இது மேஜிக் ரியாலிச படம் என்பதால்.எமர்ஜென்சியை கருமேகம் ஊரை சூழ்ந்தது போல காட்சிப்படுத்தியிருப்பார்கள்.கற்பனைக்கு ஏது கட்டுப்பாடு என்று எழுத்தாளரும் இயக்குனரும் குழுவும் நிரூபித்த திரைப்படம்.

இது தில்லியின் பெரிய சேரி  ஒரே இரவில் காலி செய்யப்பட்ட சரித்திர நிகழ்வைச் சொன்ன காட்சி. இங்கே
http://www.youtube.com/watch?v=0aBGiTj1tJ8 




ஹீரோயின் ஸ்ரேயாவின் அழகு என் கதைக்கு தேவைப்படவில்லை என்றார் பெண் இயக்குனர் தீபா மேத்தா. சர்ச்சைக்குரிய ஃபயர், எர்த், வாட்டர் படங்களை இயக்கிய பெண் இயக்குனர் தீபா மேத்தா. அடுத்ததாக, அவர் இயக்கியுள்ள படம் மிட்நைட்ஸ் சில்ட்ரன். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன் படத்தை அவர் இயக்கி இருக்கிறார். இப்படம் சர்ச்சையை கிளப்பி உள்ளதுடன் படத்தை திரையிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் கேரளாவில் போராட்டம் நடத்தினர். இப்படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடித்திருக்கிறார். ஸ்ரேயாவின் நடிப்பு பற்றி தீபா மேத்தா கூறும்போது, ‘ஸ்ரேயா நல்ல நடிகை. அவரது அழகுபற்றி எனக்கு தெரியும். ஆனால் இப்படத்தில் அவரது அழகு தேவைப்படவில்லை. அழுத்தமான நடிப்பு தேவைப்பட்டது. இதை அவரிடம் சொன்னபோது உடனே புரிந்துகொண்டார். பார்வதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று ஆழமான நடிப்பை வெளியிட்டிருக்கிறார். இப்பாத்திரத்தை சவாலாக ஏற்றுக்கொண்டு நடித்தார். அதை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் மிகவும் இனிமையானவர் என்றார். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=38076#sthash.sKi7sEqn.dpuf
இயக்குனர் தீபா மேத்தா நடிகை ஸ்ரேயாவின் அழகு என் கதைக்கு தேவைப்படவில்லை என்றார்  சர்ச்சைக்குரிய ஃபயர், எர்த், வாட்டர் படங்களை தீபா மேத்தா. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை அவர் இயக்கியுள்ளார்.

இப்படம் இந்தியாவில் வெளியாகாமல் மிகுந்த சர்ச்சையை கிளப்பியதுடன் இப்படத்தை திரையிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் கேரளாவில் போராட்டம் நடத்தினர்.

இப்படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். நடிகை ஸ்ரேயா பற்றி தீபா மேத்தா கூறுகையில், ‘ஸ்ரேயா நல்ல நடிகை. அவரது அழகுபற்றி எனக்கு தெரியும். ஆனால் இப்படத்தில் அவரது அழகு தேவைப்படவில்லை. அழுத்தமான நடிப்பு தேவைப்பட்டது. இதை அவரிடம் சொன்னபோது உடனே புரிந்துகொண்டார் என்றார்,ஸ்ரேயா இதில் பார்வதி எனும் கதாபாத்திரமாகவே மாறி ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

சர்ச்சைக்குரிய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி லண்டனில் நடந்த இப்படத்தின் விழாவுக்கு நடிகை ஸ்ரேயாவுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியாவில் பிறந்த சல்மான் ருஷ்டி. தான் எழுதிய சாத்தானிக் வெர்சஸ் என்றப் நூல் மூலம் ஈரான் மதத் தலைவர் கொம்னியின் கடும் கோபத்துக்கு உள்ளானவர், மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் நிரந்தரமாக வசித்து வரும் விட்ட சல்மான் ருஷ்டி தொடர்ந்து இங்கிலாந்து அரசின் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வாழ்ந்து வருகிறார்.இவர் 1981ம் ஆண்டு எழுதிய இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ நாவல் நவீன இலக்கியத்தில் மிகவும் முக்கியமான முயற்சி.

உலகசினிமா ஏன் பார்க்க வேண்டும் என்று கேட்பவர்கள் இதைப் பாருங்கள், இது போல உலகத்தரமான காட்சிகள் வெகுஜன சினிமாவில் வரவே வராது.

2012ல் வெளியான இந்த மிட்நைட்ஸ் சில்ட்ரன் சல்மான் ருஷ்டியின் கதையைத் தழுவி தீபா மேத்தா மிகுந்த சிரத்தையுடன் இயக்கிய படைப்பு, ஒரு புத்தகத்தை எப்படி காட்சிப்படுத்தவேண்டும் என்பதற்கான ரெஃபரன்ஸ் மெட்டீரியல் இப்படம்.

இது 1947 துவங்கி எமர்ஜென்சி வரை நீளும் கதை. இது தில்லியின் மிகப்பெரிய சேரி அழிப்பு, முஸ்லிம் இன சுத்திகரிப்பு ,மாற்று கருத்து கொண்டோர் மீதான வன்முறை, இவை பற்றி சர்காஸிசமாக பேசிய படைப்பு. இந்திராவை வெகுவாக கிண்டல் செய்த படம் சினிமா வரலாற்றிலேயே இது ஒன்றாகத்தான் இருக்கக் கூடும்.