அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நடிகர் மனோபாலா | அஞ்சலி

இயக்குனர் தயாரிப்பாளர் ,  நடிகர் மனோபாலா இன்று மறைந்து விட்டார், அவருக்கு இதய அஞ்சலி ,வீட்டாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமகால தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த குணசித்திர நடிகர், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நீதிபதியாக வந்து கருவேல மரங்களை வெட்டி அகற்று என ஒரு சாதி தலைவனுக்கு  பெயில் தந்து தீர்ப்பு சொல்வார், அந்நியன் திரைப்படம் டிடிஆர் கதாபாத்திரத்தை எல்லாம் இவரை அன்றி யார் சுவாரஸ்யமாக செய்ய முடியும்? பிதாமகனில்  லங்கர் கட்டை உருட்டும் குழுவில் ஈர நெஞ்சம் கொண்ட கதாபாத்திரம், பொல்லாதவன் திரைப்படத்தில் பஜாஜ் ஷோரூம் மேனேஜராக தினம் தினம் என் நினைவில் வந்து போவார்,எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் காமெடி , சதுரங்கவேட்டை படத்தை தயாரித்தது என மக்கள் விரும்பியவற்றிற்கு அப்படி உழைத்தவர்,சுவாரஸ்யம் கூட்டியவர், குரலில் ஒரு தனித்துவம் கொண்டவர், இவர் நடிக்கும் கதாபாத்திரங்களின் வசனங்களுக்கு டப்பிங்கில் ஏற்ற இறக்கம் குழைவு அழுத்தம் தந்து மேலும் சிறப்பு சேர்த்திருப்பார்.

வேஸ்ட் பேப்பர் சேனலில் சினிமா ஆளுமைகளை அத்தனை அழகாக பேட்டி காண்பார், விளம்பர வருவாய் ஈட்ட வேண்டும் என்று துண்டு துண்டாக காணொளிகளை  வெளியிடாமல் அந்த சினிமா ஆளுமை பற்றி அரிய தகவல்களை மக்கள் அறிய வேண்டும் என தலைப்படுவார் ஒரு மணிநேரம் எல்லாம் கூட காணொளி வெளியிடுவார்.

போய் வாருங்கள் மனோபாலா சார்.

நடிகர் மயில்சாமி துயரஞ்சலி

நடிகர் மயில்சாமி அவர்களுக்கு இதய அஞ்சலி, சார்ந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விளம்பரமில்லாத  ஈகை குணம் கொண்டவர், அன்னதானம்,  ஆலயத்தொண்டு, உழவாரப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டு உழைத்தவர், இவர் பற்றி நடிகர் விவேக் மேடையில் பகிர்ந்த ஒரு சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியானது, 2004 சுனாமி பேரிடர் காலத்தில் கடலூரில் நிவாரணப் பணிகளை இவர் முன்னெடுக்கையில் பக்கத்து ஊரில் பாலிவுட் நடிகர் விவேக் ஒபிராய் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதை அறிகிறார், விடியலில் அவர் தங்கியிருந்த வீட்டு கதவை தட்டியவர், அவர் அசதியில் கதவைத் திறந்ததும் ,உடைந்த ஆங்கிலத்தில் யு விவேக் ஓபிராய், யு ஹெல்ப், ஐநோ, ஐ ஆல்சோ வாண்டு ஹெல்ப் என்று சொல்லி தன் கழுத்தில் அணிந்திருந்த பத்து பவுன் எம்ஜியார் பதக்கம் வைத்த சங்கிலியை அணிவித்துவிட்டு திரும்பிப்பாராமல் வந்துவிட்டாராம், நிச்சயம் கடைசி கைப்பொருளையும் தானம் செய்யும் குணம்  அபூர்வமானது.

முகநூல் நண்பர் அசோக் ஐயர் துயரஞ்சலி

இன்று பெசன்ட் நகர் மின் மயானம் சென்று வந்தேன், 

நெடுங்கால Facebook நண்பர் 
திரு. Ashok Iyer  இன்று மாரடைப்பால் காலமானார், கவின்கலை ஓவியர், சினிமாகாரர், விளம்பர நிறுவனக்காரர், கட்டுமானர் என பன்முகம் கொண்ட ஆளுமை, உயிருடன் இருக்கையில் பார்த்திராத நபர்.

கடந்த இரு மாதங்களாக தான் போனில் பேசுவார், ஒரு மணி நேரம் தொடர்ந்து பேச அவரிடம் சினிமா பற்றி  பல  விஷயங்கள் உண்டு, 

போனவாரம் தொடர்ந்து போனில் அழைத்திருக்கிறார்,நான் தொடர்ந்து அழைப்பை ஏற்கமுடியாதபடி அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கியிருந்தேன்,என்னிடம் பேச வேண்டும் என செய்தி அனுப்பியிருந்தார், விரைவில் பேசுகிறேன் என செய்தி அனுப்பினேன் ஆனால் இன்று வரை பேசவே முடியவில்லை.

இன்று அவரின் இரண்டாம் மகன் பிற்பகல் அவரின் மரண செய்தியை fb ல் பகிர, அடுத்தடுத்து வேலைகளை முடித்து நேராக பெசன்ட் நகர் மின் மயானம் 5 மணிக்கு போய்விட்டேன், இறக்கி வைக்க ஒரு கை குறைய அப்போதாவது உதவ முடிந்தது, மின் மயான கதவுகள் அவரை உள் வாங்கி நெருப்பு கீற்றுகள் தீண்டும் வரை அங்கேயே நின்றிருந்தேன்.

என்னை தேர்ந்தெடுத்து என்ன பேச நினைத்தாரோ? இன்று ஒரு பாடம் எத்தனை வேலை மிகுதி என்றாலும் யார் அழைப்பையும் தவிர்க்கக்கூடாது  என்பது.

சமீபத்தில் மணிரத்னம் திரைப்படங்களின் காட்சி அமைப்புகளுக்கு உந்துதலாக இருந்த பழைய இந்தி படங்கள்,தமிழ் படங்களை படங்களுடன் தொகுத்து எழுதி வந்தார்.

நடிகை ஹீரா பற்றி அவர் எழுதிய முக்கியமான குறிப்பை இங்கே படிக்கலாம்.
https://m.facebook.com/story.php?story_fbid=10219343319773466&id=1825069878&mibextid=Nif5oz

அன்னாருக்கு இதய அஞ்சலி, வீட்டாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குனர் ஷண்முகப்ரியன் ஐயா துயரஞ்சலி


தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான ஷண்முகப்பிரியன் (71) அவர்கள் , சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் இன்று காலமானார்.
'ஒருவர் வாழும் ஆலயம்', 'பாட்டுக்கு நான் அடிமை', 'மதுரை வீரன் எங்க சாமி', 'உதவும் கரங்கள்' ஆகிய படங்களை அவர் இயக்கி உள்ளார்.

இதய அஞ்சலி Shanmughapriyan Ponnusamy ஐயா, போய் வாருங்கள் , வீட்டாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,  

மிகவும்  இனிய குணம் கொண்ட மனிதர் நீங்கள்.
உங்களின் ஷண்முகப்பரியனின் படித்துறை ப்ளாக் மறக்கவே முடியாது, 

இன்று என் ப்ளாக் மற்றும் முகநூல் நெருங்கிய நண்பர்கள் இருவர் காலமாகி உள்ளனர்.

தமிழ் சினிமாவின் மூத்த கதாசிரியர் வசனகர்த்தா திரு.பாலமுருகன் மறைவு

தமிழ் சினிமாவின் மூத்த கதாசிரியர் , வசனகர்த்தா திரு.பாலமுகன் ஐயா அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார், தமிழ் சினிமாவின் தரமிகு ஜனரஞ்சகமான திரைப்படங்களின் முக்கியமான ஆளுமை.

இதய அஞ்சலி, வீட்டாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரின் மகள்வழி பேரன்  பாடலாசிரியர்  Kumaran Kumanan அவர்களின் பதிவு இங்கே.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமிக்கு அஞ்சலி

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி (32)இன்று நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரை விட்டுள்ளது, யானைக்கு நீரழிவு ரத்த கொதிப்பு ஏதுமின்றி ஆரோக்கியமாக இருந்தது என சொல்வது ஆச்சர்யமாக உள்ளது.,வனத்தில் வாழும் யானை,காலில் கண்ணாடி துண்டு ஏறாமல் இருக்குமானால் 65 வயது வரை வாழும்,நகரசூழலில் 45 வயது வரை வாழும். 

கோயில் யானைகளுக்கு பழங்கள், பானகம், ஃபில்டர் காபி,ரஸ்னா , அதிரசம் சர்க்கரைப் பதார்த்தங்கள்  இவற்றை பக்தர்கள் ஆசையுடன் வாங்கித் தந்து அதன் உயிருக்கே உலை வைத்து விடுகின்றனர்.

யானைகளுக்கு உரிய நடைபயிற்சியும் அவசியம், கோயில் யானை லட்சுமி குளிர் காலத்தில் நடைபயிற்சியில் உயிரை விட்டது மர்மமாக உள்ளது.

இறுதி மரியாதை செய்திகள் படங்களைப் பார்க்க மனதைப் பிசைகிறது, கோயில் யானை லட்சுமிக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழின் மகத்தான எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா அவர்களுக்கு அஞ்சலி


”எனக்கு நானே கடவுள்
எனக்கு நானே பக்தன்
என் வாழ்நாள் எல்லாம் திருநாள்
மரணம் எனக்கு கரிநாள் ”

தமிழின் மகத்தான எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா மறைந்துவிட்டார், எத்தனை கொண்டாட்டமான மனிதர்,எத்தனை மகத்தான படைப்பாளி, தன் பலம் பலவீனங்களை எக்காலத்திலும் மறைக்காத ஒரு அபூர்வமான மனிதர், மாறும் காலத்துக்கேற்ப தான் தன் கொள்கைகளில் மாற்றம் கொண்டதைக் கூட தயக்கமின்றி ஒப்புக்கொண்ட முன்னுதாரண மனிதர்.

மானுடத்தையும்,பெண்ணியத்தையும், தன் படைப்பிலும் வாழ்விலும் போற்றிப் பேணிய கலைஞன், வையத் தலைமை கொள் வட்டாரத் தலைமையுடன் நின்று விடாதே!!! என்று அறிவுறை சொன்னவர். எளியாரின் தாழ்வு மனப்பான்மையை அறவே விரட்டிய நிபுணர்.பூர்ஷுவாக்களின் மேட்டிமைத் திமிரைக் கூட அவர் நாணச்செய்து கரைத்து திருத்தலாம் என்று தன் படைப்பில் உரைத்தவர்,உணர்த்தியவர்.

ஒவ்வொரு கனமும் வாழ்வை ரசித்து வாழ்ந்தவர்,வாழ்வை ரசித்து வாழ முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அவரின் மறைவு மிகவும் பெரிய இழப்பு, அவர் தம் தனித்துவம் நிறைந்த படைப்புகளில் என்றும் வாழ்வார்.அவர் படைப்புகளுக்கு என்றும் அழிவே கிடையாது.அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்தனைகள்.

அவரின் படைப்புகளை நினைவு கூருகையில் அதிகம் பேர் பாராமல் போன ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்னும் திரைப்படம் பற்றிய என் பழைய பதிவை இங்கே பகிர்கிறேன்.
http://geethappriyan.blogspot.ae/2014/12/1978.html

எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்துலகப் படைப்புகளை நம் வீட்டில் தாத்தா,பாட்டி,அம்மா,அப்பா,என பேதமின்றி வாசித்திருப்போம், அவரின் திரைப்படைப்புகளும் அவரின் இலக்கியம் போன்றே மிகவும் தரமானவை, ஒரு நூலை எப்படி படமாக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணங்கள் அவை, ஜெயகாந்தனின் உன்னதமான திரைப்படைப்புகள் இங்கே,

1 உன்னைப்போல் ஒருவன், 1965 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் டிவிடி பிரதி எங்குமே கிடைப்பதில்லை.

2 யாருக்காக அழுதான் திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

3 சில நேரங்களில் சில மனிதர்கள் யூட்யூபில் பார்க்கக் கிடைக்கின்றது டிவிடி பிரதியும் கிடைக்கின்றது

4 எத்தனை கோணம் எத்தனை பார்வை திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

5 புதுசெருப்பு கடிக்கும் திரைப்படத்தின் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

6 ஊருக்கு நூறு பேர் கதையைஇயக்குனர் லெனின் படமாக்கி அது தேசிய திரைப்படவிழாவில் கலந்து கொண்டது அதன் டிவிடி பிரதி எங்குமே கிடைப்பதில்லை.

7சினிமாவுக்கு போன சித்தாளு கௌதமன் இயக்கத்தில் வெளியானது,அதன் டிவிடி பிரதியும் எங்குமே கிடைப்பதில்லை.

8 ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் யூட்யூபில் பார்கக் கிடைக்கிறது
ஜெயகாந்தன் ஞானபீடம் பரிசு பெற்ற நாம் வாழும் காலத்தின் மாபெரும் படைப்பாளி. பொதுவுடமை புரட்சி சிந்தனையாளர். இலக்கியம் மற்றும் சினிமாவில் தன் முத்திரையைப் பதித்தவர். இப்படி பலச் சிறப்புகள் இருந்தும் அவர் இயக்கிய திரைப்படங்களை நாம் தேடிப்பார்க்க வழியின்றி இருப்பது எத்தனை அவமானம் பாருங்கள்.இனியேனும் அவரது திரைப்படைப்புகளை ஆவணப்படுத்தி ரசிகர்கள் காண வழி செய்ய வேண்டும்.

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அஞ்சலி


டிசம்பர் 23 2014, இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்கள் இன்று மறைந்து விட்டார்,தமிழ் சினிமாவில் யாராலும் நிரப்பவோ எட்டவோ முடியா உயர்ந்த இடம் அது, ஈடு செய்ய முடியா பேரிழப்பிது,

கே.பாலச்சந்தர் அவர்கள் அளவுக்கு சக படைப்பாளிகளை, கலைஞர்களை பாராட்டி ஊக்குவித்த ஒருவர் தமிழ் சினிமாவில் யாரும் இலர். அவர் எத்தனையோ முறை தன்னைவிட சினிமாத்துறை அனுபவத்தில் ஜூனியர்களான பாரதிராஜா, பாலுமகேந்திரா,மகேந்திரன்,மணிரத்னம், பாக்யராஜ் போன்ற சக படைப்பாளிகளை மனதாரப் பாராட்டிஅவர்கள் படைப்புகளை பொதுவெளியில் வியந்து பேசியிருக்கிறார்,

காலம் கனிகையில் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுமிருக்கிறார். தன் தள்ளாமையிலும் புதிய கலைஞர்களின் படைப்புகளைத் தேடிப் பார்த்து,கேட்டு,படித்து ஊக்கம் அளித்து வந்தது கண்கூடு, தான் சாதித்து விட்டோம் என்ற இருமாப்போ வித்யாகர்வமோ இன்றி அடுத்தவர் படைப்பை பாராட்டி சிலாகிப்பது ஒரு உயர்ந்த குணம், அதை ஒவ்வொருவரும் இவரிடமிருந்து கற்க வேண்டும்.

அவர் அன்று இட்ட விதைகள் இன்று கை தேர்ந்த நடிகர், நடிகைகளாக, இயக்குனர்களாக, பாடலாசிரியர்களாக, கதாசிரியர்களாக, இசையமைப்பாளராக , ஒளிப்பதிவாளர்களாக ,நடன இயக்குனர்களாக, பாடகர்களாக கற்பக விருட்சமாக வளர்ந்துள்ளது,

அவர் மறைந்தாலும் அவரது சாதனைப் படைப்புகள் எல்லோர் மனதிலும் என்றும் நீங்காமல் வாழும், பெண்ணினத்துக்கு அவர் கொடுத்த உரிமைக்குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும். அவருக்கு அஞ்சலிகள், அவர் வீட்டாருக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

1971ல் மறு ஜென்மம் கண்டது போல இப்போதும் மீண்டு வருவார் என்று நம்பியிருந்தேன்.அது நிகழவில்லை.

இத்தருணத்தில் பாப்லோ நெருதாவின் கவிதை வரிகளை நினைவுகூருவது இங்கே பொருத்தமாயிருக்கும்.

சுஜாதா தன் நிறமற்ற வானவில் நாவலில் எத்தனை ரத்தினச் சுருக்கமாக ,நாம் வாழ்வில் எச் சூழ்நிலைக்கும் பொருத்திப் பார்க்கக் கூடிய பாப்லோ நெருதாவின் கவிதையை மேற்கோள் காட்டுவதைப் பாருங்கள்.

கடவுள் ஒருவனுடைய சுகதுக்கங்களை பிரத்யேகமாக அமைக்கிறாரா என்ன ...

பிரபஞ்சத்து விதிகள் மனிதனை மதிக்காதவை.....
அவனுக்கு அப்பாற்பட்டவை...
அவன் அழிந்த பின்னும் நீடித்திருப்பவை...

=====
அவர் குறித்து நான் முன்பு எழுதியவை இந்த லேபிளில் படிக்கலாம்
http://geethappriyan.blogspot.ae/…/%E0%AE%95%E0%AF%87.%E0%A…
ஏக் துஜே கேலியே திரைப்படப் பாடல்களின் ஜூக் பாக்ஸ்,அப்படியே டைம் மெஷினில் ஏறி 80 களுக்குச் சென்று வாருங்கள்.


ரஷ்ய சினிமாவின் ஒப்பற்ற இயக்குனர் அலெக்ஸி பாலபனவ் நினைவு கூறல்


நான் கொஞ்சம் நாளாக அலெக்ஸி பாலபனவ்[Aleksei Balabanov] என்னும் ரஷ்ய சினிமா இயக்குனர் பற்றி தேடிப்படித்து அப்டேட் செய்யாமல் இருந்து விட்டேன்,அவரின் கடைசிப் படமான Me Too பார்த்தது, அது அத்தனை திருப்தியளிக்கவில்லை,தத்துவம் சித்தாந்தம்,பிறப்பு இறப்பு,சொர்க்கம் நரகம் என  அதீத மேதாவித்தனமாக அமைந்துவிட்டது, சரி அதற்குப் பின்னர் என்ன படம் செய்கிறார்? என்று இன்று தேடி, அவர் 2013 மே மாதம் மாரடைப்பால் காலமானார் என்று படித்தால் ஒரு தீவிர ரசிகனுக்கு எப்படி இருக்கும்?!!!

ரஷ்யாவில் சினிமாக்கள் வருடத்துக்கு 10 படங்கள் வருவது அதிகம்.அதில் மிக முக்கியமான இயக்குனர்,என்ன ஒரு அபூர்வமான நெஞ்சுரம் கொண்டவர் இவர்?. இவர் ரஷ்ய மொழியில் மட்டுமே இயங்கியதால்,இவரது படைப்புகள் அதிகம் உலக கவனம் பெற முடியவில்லை,இவர் படைப்புகள் உலக சினிமா ஆர்வலர்கள் கண்டிப்பாக தேடிப்பார்க்க வேண்டியவை. டார்க் ஹ்யூமர்,அரசியல் ,சட்டம் ஒழுங்கைப் பற்றிய நக்கல் நையாண்டிகள் திறம்பட வெளிபட்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரர்,பொதுமக்களை கும்பிபாகம் செய்த அரசியல் வல்லூறுகளை தன் படைப்புகள் மூலம் நார் நாராகக் கிழித்துத் தொங்கப்போட்டவர். இனி இது போல படம் எடுக்க யாராவது பிறந்து வந்தால் தான் உண்டு.

இவரது இரு படங்களுக்கு நான் எழுதிய பதிவுகள் இங்கே
கார்கோ 200 [Cargo 200 ][Груз 200] [2007][ரஷ்யா]
http://geethappriyan.blogspot.ae/2011/02/200-cargo-200-200-200718.html
மார்பின் Morphine (Морфий) (2008)[ரஷ்யா]
http://geethappriyan.blogspot.ae/2011/02/morphine-200818.html
அவரைப் பற்றிய விக்கி பக்கம்
http://en.wikipedia.org/wiki/Aleksei_Balabanov
அவரின் ஐஎம்டிபி பக்கம்

யாருக்கு இந்த அஞ்சலி? ஸ்ரீதருக்கா?அல்லது ருத்ரையாவுக்கா?


இது இயக்குனர் ருத்ரையாவுக்கு நேற்றைய நியூ இண்டியன் எக்ஸ்ப்ரெஸ் ஆங்கில தினசரியில் வந்த அஞ்சலி,இதை எழுதியது டெபுடி சப் எடிட்டராம்,அவர் பெயர் பாபு ஜெயக்குமார்,எத்தனை கொடுமை பாருங்கள்?
அவள் அப்படித்தான் படத்துக்கு பதில் இளமை ஊஞ்சலாடுகிறது படம், இயக்குனர் ருத்ரையா படத்துக்கு பதிலாக இயக்குனர் ஸ்ரீதரின் படம்.

ஒருவருக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்தால் என்னக் கொள்ளை?கவிதை எழுத முடியாதவன்,கவிதை எழுதுகிறேன் எனக் கிளம்புவதும்,கட்டுரை எழுத முடியாதவன் கட்டுரை எழுதுகிறேன் எனக் கிளம்புவதும்,கதை எழுதத் தெரியாதவன் கதை எழுதுகிறேன் எனக் கிளம்புவதும் என  இப்படி குரங்கைப் பிடித்து வைக்கின்றான்கள்.பூனைக்கு யார் மணி கட்டுவது.

இது போல சிண்டிகேட் அமைத்து திராபைகளை அழைத்து எழுத விடும் பத்திரிக்கைகளை என்ன செய்வது? ராண்டார் கை என்று ஒருவர் தரும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும்,அவர் எழுத்துலக வாரிசுகள் எழுதும் கட்டுரையில் என்ன எதிர்பார்க்க முடியும்?

வெட்டிக்கு எழுதும் என் போன்ற சிலர் கூட தகவல்களை சரிபார்த்து வீடியோவை பலமுறை பார்த்துவிட்டு எழுதுகிறோம், பத்திரிக்கையில் எழுதுபவருக்கு அந்த பொருப்புணர்வு வேண்டாமா?
 
இளமை ஊஞ்சலாடுகிறது பற்றி படிக்க
அவள் அப்படித்தான் பற்றி படிக்க
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)