சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுழி | மலையாளம் | 1973 | சாவித்திரி | mahanadi |

1973ஆம் ஆண்டு  வெளியான மலையாள கருப்பு வெள்ளை திரைப்படம் சுழி,  மகா நடிகை , நடிகையர் திலகம் சாவித்திரி நடித்த ஒரே மலையாளத் திரைப்படம் இது . 

1950கள் 1960களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை ஆண்ட நடிகையர் திலகம் இழப்பதற்கு எதுவுமில்லை எதனிடத்தும் பயமில்லை என்ற கட்டத்தை மது அடிமையினால் எட்டுகையில் நடித்த திரைப்படம் இது,

சோதனைச்சாலை எலி போல இறந்த பின் மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் செய்வது போல நினைத்து உயிர் இருக்கையிலேயே தன்னை நடிகை சாவித்திரி ஒப்பு தந்து நடித்த திரைப்படம் இது என்றால் மிகையில்லை, காரணம் அவர் அதுவரை அப்படி நடித்ததில்லை என்னும்படியாக இந்த எல்ஸி என்ற தேயிலை எஸ்டேட் விதவை முதலாளி  கதாபாத்திரம் அமைந்திருந்தது, இதில் sleeve less lingerie அணிந்து நடித்துள்ளார், அவர் குடியின் கோரப்பிடியில் இருந்த நாட்களில் கதையை சரியாக கேட்காமல் ஒப்புக் கொண்டாரோ என்ற கலக்கமும் நமக்கு எழாமல் இல்லை, ஆனால் படத்தின் டைட்டில் கார்ட் இது குடியால் அழிந்தவர்களைப் பற்றிய கதை என முதலில் கட்டியம் கூறியதால் சமாதானம் அடைகிறோம் . 

‘நவதாரா’ என்ற புதிய பேனரில் ஹுசைன் மற்றும் சலாம் இணைந்து தயாரித்த இப்படத்தை த்ரிப்பிரயார் சுகுமாரன் இயக்கியுள்ளார். 
இதில் பேபி என்ற குடிகேடி இளைஞன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான சலாமே நடித்தும் இருந்தார்.

சென்னையில் நியூட்டன் மற்றும் சியாமளா ஸ்டுடியோவில் உட்புற காட்சிகளும் , வெளிப்புற காட்சிகள் வயநாட்டில் உள்ள கல்பற்றா தேயிலை தோட்டங்களிலும் படமாக்கப்பட்டது.  

எஸ்.ஜி.பாஸ்கர் எழுதிய கதையின் அடிப்படையில் என்.பி.முகமது உருவாக்கிய திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டு சலாம் காரச்சேரி இதற்கு வசனம் எழுதினார், மூர்த்தியின் ஒளிப்பதிவு மற்றும் ரவியின் படத்தொகுப்புடன், இது தென்னிந்திய மொழிகளில் திரைப்பட தணிக்கை வாரியத்தால் 'A' சான்றிதழ் (பெரியவர்களுக்கு மட்டுமே அனுமதி) வழங்கப்பட்ட ஆரம்ப கால திரைபடங்களில் முன்னோடி என்ற பெயரையும் தக்க வைத்துள்ளது.

நடிகை சாவித்திரி தவிர, சுஜாதா, கொட்டாரக்கார ஸ்ரீதரன் நாயர், கோவிந்தன்குட்டி, பஹத், நிலம்பூர் பாலன் மற்றும் பலர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
இசை எம்.எஸ்.பாபுராஜ்.

‘குடிப்பழக்கத்தால் சிதைந்த குடும்பத்தின் கதை’ என்ற வரிகளுடன் படம் துவங்குகிறது. ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்ற பைபிள் வரிகளுடன் படம் நிறைகிறது, இந்த இரண்டு புள்ளிகளை  இணைத்து கதை நகர்கிறது.

படத்தின் கதை :

பிரம்மாண்டமான தேயிலை தோட்ட முதலாளி வர்கீஸ், அவருக்கு சொந்தமான பங்களாவில்  தனது மனைவி எலிசபெத் (சாவித்திரி) மற்றும் மகள் பீனாவுடன் (சுஜாதா) வசித்து வருகிறார்.  அவரது மகனின் அகால மரணத்தைத் தொடர்ந்து, வர்கீஸ் தனது மன அழுத்தத்தில் குடிக்கத் தொடங்குகிறார், தேயிலை தோட்ட நிர்வாகம் நசியத்துவங்குகிறது,
கேட்பாரில்லாததால்  இவர்களின் தேயிலை தோட்டத்தை சமூக விரோதிகள் அத்துமீறி பிரவேசித்து ஆக்கிரமிக்கின்றனர்.

முதலாளி வர்கீஸ் குடித்து நசிந்தது  போதாமல் அவரது மனைவி எலிஸியையும்  குடிக்கு பழக்கி உள்ளிழுக்கிறார்,நாளடைவில் எலிஸி கணவரை விடவும்  மதுவுக்கு அதீத அடிமையாகிறார், கணவர் போதும் என்றாலும் அவர் விடுவதில்லை, ஊற்றித் தந்த படியும் ஊற்றி பருகியபடியும் இருக்கிறார், எலிஸிக்கு மதுமோகத்தால் உடற்பசி எடுக்க ஆங்கில softporn இதழ்கள் வாங்கி வாசிக்கிறார், கணவரிடம் இவருக்கு வடிகால் கிடைக்காமல் போக அதற்கும் சேர்த்து நிறைய குடிக்கிறார், பெரிய ஜம்போ ப்ரிட்ஜ் நிறைய மதுபுட்டிகள் நிரப்பி அதற்கு அருகே இருக்கையை இட்டு அமர்ந்து கொள்கிறார், யார் நல்ல புத்திமதி சொன்னாலும் காதில் ஏறுவதில்லை.

முதலாளி வர்கீஸ் நெஞ்சு வலியிலும் கல்லீரல் பழுதாகியும் இறந்துவிடுகிறார், எலிசபெத் தனது விசுவாசமான வேலைக்காரன் ஆண்டனியின் மகனான முன்கோபி, முரடன் , சந்தர்ப்பவாதின பேபியை தேயிலை தோட்டத்தின்  மேலாளராக மிகவும் நம்பி நியமிக்கிறார். 

பேபியும் பீனாவும் (சுஜாதா) வகுப்புத் தோழர்கள்.  பேபி இயல்பிலேயே தறிகெட்டுப்போனவன், ஆனால் அவனைப் போய் காதலிக்கிறாள்  பீனா,  அவனை நல்லவனாக மாற்றி நல்வழிப்படுத்துவதில் பெரிதும் நம்பிக்கையுடன் இருக்கிறாள் அவள், குள்ளநரிக்கு திராட்சை தோட்டம் கிட்டியது போல தன்னையே அவனுக்கு தந்து அவன் தகுதிக்கு மீறி காதல் மழை பொழிகிறாள்.

புதிய மேலாளர் பேபி தினம் தினம் புதிய உயர்தர ஸ்காட்ச் வகைகளை முதலாளி எலிஸிக்கு  வாங்கி வந்து அறிமுகப்படுத்துகிறான்.
 எலிசபெத் குடியால் மேலும் மோசமடைகிறார்,உடன் பேபியும் அமர்ந்து குடிக்கிறான், பிணம் போலவே படுக்கையில் விழுந்து கிடக்கும் எலிஸி படிக்கும் tit bits புத்தகங்களில் மதுமயக்கத்தில்  நிர்வாணப் படங்களைப் பார்த்த பேபி உடலுறவு கொண்டு விடுகிறான், இதனால் முதலாளி அம்மா எலிஸி கருத்தரிக்கிறார்.

பீனா தாய் கருத்தரித்ததை பணிப்பெண் மூலம் அறிகிறாள்,அவமானம் அடைகிறாள், எலிஸிக்கு மகளை கண்கொண்டு பார்க்க முடியவில்லை, பேபி எலிஸியை ஒரு வாரம் தன்னுடன் வெளியூர் வந்து கருக்கலைப்பு செய்து கொள்ள அழைக்கிறான்,ஆனால் எலிஸி நம்பிக்கை துரோகம் செய்த அவனை வெறுக்கிறார், தன் இழி நிலைக்காக வேதனைபடுகிறார், பேபியின்  வீட்டாரும் கூட அவனை வெறுத்து ஒதுக்குகின்றனர்.

தன்னையும் சுகித்து ஏமாற்றி தாயையும் சுகித்து கர்ப்பமாக்கிய பேபியை பீனாவும் வெறுக்கிறாள் , அவமானம் மற்றும் மன அழுத்தத்தால் எலிஸி ஐம்பதுக்கும் மேற்பட்ட தூக்கமாத்திரைகளை தின்று தற்கொலை செய்து இறந்து போகிறார்.  

பீனா பேபியை தன் அப்பாவின் ரிவால்வரை எடுத்துப் போய் சுட எத்தனிக்கிறாள், ஆனால் அவள் சுடுவதற்கு  முன்பே பேபி தற்கொலை செய்து இறந்து போகிறான். 

பீனா ஏற்கனவே பணம் சொத்து எஸ்டேட் தொழிற்சாலை இவற்றை வெறுத்தவள்,  இப்போது கன்னியாஸ்திரியாவதுடன் படம் நிறைகிறது.

இப்படத்தில் நடித்த சில மாதங்களில் நடிகை சாவித்ரி அவர்களுக்கு மஞ்சள் காமாலை வந்து உடல் துரும்பாக இளைத்துப் போயுள்ளார்,
அடி மேல் அடியாக அவருக்கு flu ஜுரமும் வர, அவரின் கம்பீரமான பூசிய தேகம் திரும்பவேயில்லை, அப்படியும் குடியை அவரால் விட்டொழிக்க முடியவேயில்லை, 1975 ஆம் ஆண்டு அந்தரங்கம் திரைப்படத்தில் நடிக்கையில் அடையாளம் தெரியாத அளவு உருமாறியிருந்தார்,கணவன் மேஜர் சுந்தர்ராஜனால் புரிந்து கொள்ளப்படாமல் அனுதினம் அமில வார்த்தைகளை செவியுற்று வார்த்தை சாட்டைகளை தாங்கும் மனைவி கதாபாத்திரத்தில் அப்படி அற்புதமாக நடித்தார்,உண்ணி மேரி (தீபா) அதில் அவரின் மகள் கதாபாத்திரம் செய்தார் அறிமுகம் கூட.
அந்தரங்கம் திரைப்படம் வெற்றி பெற்றாலும்  அவசரநிலை பிரகடன காலத்தில் வெளியானதால் அதன் பின்னர் சரியான வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை, 

மனைவி அமைவதெல்லாம் என்ற மேடை நாடகத்தில் நடிக்க போகும் அளவுக்கு வறுமை, கடன் பிரச்சனைகள் அவரை துரத்தி வாட்டியபடி இருந்து மரணப்படுக்கையில் தள்ளியுள்ளன.

இப்படத்தில் வெகுளி பணக்கார வீட்டுப் பெண் பீனாவாக நடித்த நடிகை சுஜாதா 1974 ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் மூலம் புகழின் உச்சிக்குப் போய் விட்டார்,இலங்கையில் பிறந்த மலையாள வம்சாவழிப் பெண் இவர் , அவள் ஒரு தொடர்கதை வெளியாகும் முன்னர் மளையாளத்தில் 36 திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1974 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நாயகி முக்கியத்துவ கதாபாத்திரங்கள்  கொண்ட திரைப்படங்களில் கோலோச்சுவோம்  என்று சுழி நடிக்கையில் நினைத்து பார்த்திருக்க மாட்டார் நடிகை சுஜாதா.

சுழி | 1973 | நடிகை சாவித்ரி | மலையாளம் | மதுவிலக்கு பிரசார திரைப்படம்

1973ஆம் ஆண்டு  வெளியான மலையாள கருப்பு வெள்ளை திரைப்படம் சுழி,  மகா நடிகை , நடிகையர் திலகம் சாவித்திரி நடித்த ஒரே மலையாளத் திரைப்படம் இது . 

1950கள் 1960களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை ஆண்ட நடிகையர் திலகம் இழப்பதற்கு எதுவுமில்லை எதனிடத்தும் பயமில்லை என்ற கட்டத்தை மது அடிமையினால் எட்டுகையில் நடித்த திரைப்படம் இது,

சோதனைச்சாலை எலி போல இறந்த பின் மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் செய்வது போல நினைத்து உயிர் இருக்கையிலேயே தன்னை நடிகை சாவித்திரி ஒப்பு தந்து நடித்த திரைப்படம் இது என்றால் மிகையில்லை, காரணம் அவர் அதுவரை அப்படி நடித்ததில்லை என்னும்படியாக இந்த எல்ஸி என்ற தேயிலை எஸ்டேட் விதவை முதலாளி  கதாபாத்திரம் அமைந்திருந்தது, இதில் sleeve less lingerie அணிந்து நடித்துள்ளார், அவர் குடியின் கோரப்பிடியில் இருந்த நாட்களில் கதையை சரியாக கேட்காமல் ஒப்புக் கொண்டாரோ என்ற கலக்கமும் நமக்கு எழாமல் இல்லை, ஆனால் படத்தின் டைட்டில் கார்ட் இது குடியால் அழிந்தவர்களைப் பற்றிய கதை என முதலில் கட்டியம் கூறியதால் சமாதானம் அடைகிறோம் . 

‘நவதாரா’ என்ற புதிய பேனரில் ஹுசைன் மற்றும் சலாம் இணைந்து தயாரித்த இப்படத்தை திரிப்பிரயார் சுகுமாரன் இயக்கியுள்ளார். 
இதில் பேபி என்ற குடிகேடி இளைஞன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான சலாமே நடித்தும் இருந்தார்.

சென்னையில் நியூட்டன் மற்றும் சியாமளா ஸ்டுடியோவில் உட்புற காட்சிகளும் , வெளிப்புற காட்சிகள் வயநாட்டில் உள்ள கல்பற்றா தேயிலை தோட்டங்களிலும் படமாக்கப்பட்டது.  

எஸ்.ஜி.பாஸ்கர் எழுதிய கதையின் அடிப்படையில் என்.பி.முகமது உருவாக்கிய திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டு சலாம் காரச்சேரி இதற்கு வசனம் எழுதினார், மூர்த்தியின் ஒளிப்பதிவு மற்றும் ரவியின் படத்தொகுப்புடன், இது தென்னிந்திய மொழிகளில் திரைப்பட தணிக்கை வாரியத்தால் 'A' சான்றிதழ் (பெரியவர்களுக்கு மட்டுமே அனுமதி) வழங்கப்பட்ட ஆரம்ப கால திரைபடங்களில் முன்னோடி என்ற பெயரையும் தக்க வைத்துள்ளது.

நடிகை சாவித்திரி தவிர, சுஜாதா, கொட்டாரக்கார ஸ்ரீதரன் நாயர், கோவிந்தன்குட்டி, பஹத், நிலம்பூர் பாலன் மற்றும் பலர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
இசை எம்.எஸ்.பாபுராஜ்.

‘குடிப்பழக்கத்தால் சிதைந்த குடும்பத்தின் கதை’ என்ற வரிகளுடன் படம் துவங்குகிறது. ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்ற பைபிள் வரிகளுடன் படம் நிறைகிறது, இந்த இரண்டு புள்ளிகளை  இணைத்து கதை நகர்கிறது.

படத்தின் கதை :

பிரம்மாண்டமான தேயிலை தோட்ட முதலாளி வர்கீஸ், அவருக்கு சொந்தமான பங்களாவில்  தனது மனைவி எலிசபெத் (சாவித்திரி) மற்றும் மகள் பீனாவுடன் (சுஜாதா) வசித்து வருகிறார்.  அவரது மகனின் அகால மரணத்தைத் தொடர்ந்து, வர்கீஸ் தனது மன அழுத்தத்தில் குடிக்கத் தொடங்குகிறார், தேயிலை தோட்ட நிர்வாகம் நசியத்துவங்குகிறது,
கேட்பாரில்லாததால்  இவர்களின் தேயிலை தோட்டத்தை சமூக விரோதிகள் அத்துமீறி பிரவேசித்து ஆக்கிரமிக்கின்றனர்.

முதலாளி வர்கீஸ் குடித்து நசிந்தது  போதாமல் அவரது மனைவி எலிஸியையும்  குடிக்கு பழக்கி உள்ளிழுக்கிறார்,நாளடைவில் எலிஸி கணவரை விடவும்  மதுவுக்கு அதீத அடிமையாகிறார், கணவர் போதும் என்றாலும் அவர் விடுவதில்லை, ஊற்றித் தந்த படியும் ஊற்றி பருகியபடியும் இருக்கிறார், எலிஸிக்கு மதுமோகத்தால் உடற்பசி எடுக்க ஆங்கில softporn இதழ்கள் வாங்கி வாசிக்கிறார், கணவரிடம் இவருக்கு வடிகால் கிடைக்காமல் போக அதற்கும் சேர்த்து நிறைய குடிக்கிறார், பெரிய ஜம்போ ப்ரிட்ஜ் நிறைய மதுபுட்டிகள் நிரப்பி அதற்கு அருகே இருக்கையை இட்டு அமர்ந்து கொள்கிறார், யார் நல்ல புத்திமதி சொன்னாலும் காதில் ஏறுவதில்லை.

முதலாளி வர்கீஸ் நெஞ்சு வலியிலும் கல்லீரல் பழுதாகியும் இறந்துவிடுகிறார், எலிசபெத் தனது விசுவாசமான வேலைக்காரன் ஆண்டனியின் மகனான முன்கோபி, முரடன் , சந்தர்ப்பவாதின பேபியை தேயிலை தோட்டத்தின்  மேலாளராக மிகவும் நம்பி நியமிக்கிறார். 

பேபியும் பீனாவும் (சுஜாதா) வகுப்புத் தோழர்கள்.  பேபி இயல்பிலேயே தறிகெட்டுப்போனவன், ஆனால் அவனைப் போய் காதலிக்கிறாள்  பீனா,  அவனை நல்லவனாக மாற்றி நல்வழிப்படுத்துவதில் பெரிதும் நம்பிக்கையுடன் இருக்கிறாள் அவள், குள்ளநரிக்கு திராட்சை தோட்டம் கிட்டியது போல தன்னையே அவனுக்கு தந்து அவன் தகிதிக்கு மீறி காதல் மழை பொழிகிறாள்.

புதிய மேலாளர் பேபி தினம் தினம் புதிய உயர்தர்ஸ்காட்ச் வகைகளை முதலாளி எலிஸிக்கு  வாங்கி வந்து அறிமுகப்படுத்துகிறான்.
 எலிசபெத் குடியால் மேலும் மோசமடைகிறார்,உடன் பேபியும் அமர்ந்து குடிக்கிறான், பிணம் போலவே படுக்கையில் விழுந்து கிடக்கும் எலிஸி படிக்கும் tit bits புத்தகங்களில் மதுமயக்கத்தில்  நிர்வாணப் படங்களைப் பார்த்த பேபி உடலுறவு கொண்டு விடுகிறான், இதனால் முதலாளி அம்மா எலிஸி கருத்தரிக்கிறார்.

பீனா தாய் கருத்தரித்ததை பணிப்பெண் மூலம் அறிகிறாள்,அவமானம் அடைகிறாள், எலிஸிக்கு மகளை கண்கொண்டு பார்க்க முடியவில்லை, பேபி எலிஸியை ஒரு வாரம் தன்னுடன் வெளியூர் வந்து கருக்கலைப்பு செய்து கொள்ள அழைக்கிறான்,ஆனால் எலிஸி நம்பிக்கை துரோகம் செய்த அவனை வெறுக்கிறார், தன் இழி நிலைக்காக வேதனைபடுகிறார், பேபியின்  வீட்டாரும் கூட அவனை வெறுத்து ஒதுக்குகின்றனர்.

தன்னையும் சுகித்து ஏமாற்றி தாயையும் சுகித்து கர்ப்பமாக்கிய பேபியை பீனாவும் வெறுக்கிறாள் , அவமானம் மற்றும் மன அழுத்தத்தால் எலிஸி ஐம்பதுக்கும் மேற்பட்ட தூக்கமாத்திரைகளை தின்று தற்கொலை செய்து இறந்து போகிறார்.  

பீனா பேபியை தன் அப்பாவின் ரிவால்வரை எடுத்துப் போய் சுட எத்தனிக்கிறாள், ஆனால் அவள் சுடுவதற்கு  முன்பே பேபி தற்கொலை செய்து இறந்து போகிறான். 

பீனா ஏற்கனவே பணம் சொத்து எஸ்டேட் தொழிற்சாலை இவற்றை வெறுத்தவள்,  இப்போது கன்னியாஸ்திரியாவதுடன் படம் நிறைகிறது.

இப்படத்தில் நடித்த அடுத்த மாதமே நடிகை சாவித்ரி அவர்களுக்கு மஞ்சள் காமாலை வந்து உடல் துரும்பாக இளைத்துப் போயுள்ளார்,
அடி மேல் அடியாக அவருக்கு flu ஜுரமும் வர, அவரின் கம்பீரமான பூசிய தேகம் திரும்பவேயில்லை, அப்படியும் குடியை விட்டொழிக்க முடியவேயில்லை,  அந்தரங்கம் திரைப்படத்தில் நடிக்கையில் அடையாளம் தெரியாத அளவு உருமாறியிருந்தார்,அந்தரங்கம் திரைப்படம் வெற்றி பெற்றாலும்  அவசரநிலை காலத்தில் வெளியானதால் அதன் பின்னர் சரியான வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை, மனைவி அமைவதெல்லாம் என்ற மேடை நாடகத்தில் நடிக்க போகும் அளவுக்கு வறுமை, கடன் பிரச்சனைகள் அவரை துரத்தி வாட்டியபடி இருந்து மரணப்படுக்கையில் தள்ளியுள்ளன.

இப்படத்தில் வெகுளி பணக்கார வீட்டுப் பெண் பீனாவாக நடித்த நடிகை சுஜாதா 1974 ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் மூலம் புகழின் உச்சிக்குப் போய் விட்டார்,இலங்கையில் பிறந்த மலையாளப் பெண் இவர் , அவள் ஒரு தொடர்கதை வெளியாகும் முன்னர் மளையாளத்தில் 36 திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1974 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நாயகி முக்கியத்துவ கதாபாத்திரங்கள்  கொண்ட திரைப்படங்களில் கோலோச்சுவோம்  என்று சுழி நடிக்கையில் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

Which Annie Gives It Those Ones [1988] ஆர்கிடெக்சர் தீஸிஸ் பின்னனியில்அருந்ததிராய் நடித்த படம்


61 வயதாகும் எழுத்தாளரும் சமூக நல ஆர்வலருமான அருந்ததி ராய் டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பிரிவின் 70 களின்  மாணவியுமாவார்,

இவர் பி.ஆர்க் பட்டப் படிப்பை முடிக்கும் முன்னரே கல்லூரியிலிருந்து தன் காதலர் Gerard da Cunha வுடன் வெளியேறி விட்டார்,அந்த பின்னணி இப்படத்தில் நன்கு சுவையாக விளக்கப்பட்டிருக்கிறது.

 பின்னர் அந்தக் காதலும் உறவும் பொய்த்தது, [இதை மையமாக வைத்தோ வைக்காமலோ 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஃபஹாத் ஃபாஸிலும் ,ஆன் அகஸ்டினும் நடித்த ஆர்டிஸ்ட் என்னும் திரைப்படம் ஷ்யாம் ப்ரசாத் இயக்கத்தில் வெளிவந்தது]

அதன் பின்னர் பேரலல் சினிமா இயக்குனரான  Pradip Krishen உடன் இவர் இன்னுமோர் வாழ்க்கை அமைத்துக் கொள்ள அதுவும் பொய்த்தது. இல்வாழ்க்கையில்  சாதிக்க முடியாததை இவர் பொதுவாழ்வில் சாதித்து விட்டார் என்றால் சற்றும் மிகையில்லை.

1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான The God of Small Things என்னும் நாவலுக்கு புக்கர் பரிசு பெற்றார். இவர் புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியரும் ஆவார்,2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட இருந்த சாகித்ய அகாடமி விருதை அதில் நிலவும் சிபாரிசு அரசியலால்   இவர் வாங்க மறுத்தும் விட்டார்.  2004 ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசை இவர் பெற்றிருக்கிறார்.இவர் என்.டீ.டி.வி.ப்ரணாய் ராய்க்கு ஒன்றுவிட்ட சகோதரியுமாவார்.

இவர் திரைக்கதை எழுதி நடித்து 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இண்டிபெண்டண்ட் வகைப் படமான In Which Annie Gives It Those Ones , பி ஆர்க் படிக்கும் மாணவர்களின் இறுதி வருட தீஸீஸை மிகவும் தத்ரூபமாகவும், திறம்படவும் பேசுகிறது, design crit செஷனுக்கு வருகை தரும் Visiting Professional களின் யதார்த்த மனோ நிலையை மிக அருமையாக இப்படத்தில் கேலி செய்திருப்பார்கள்.

Visiting Professional கள்  அழகான பெண் மாணவிகள் வடிவமைத்த ப்ராஜெக்டில் இல்லாத ஒரு symbolism மற்றும் concept ஐ தாங்களே உருவகப்படுத்திக்கொண்டு இருப்பதிலேயே அதிக மதிப்பெண்களை வாரி வழங்குவதையும்,

ஒர் ஆண் மாணவன் வடிவமைத்த ப்ராஜெக்டில் இருக்கும்  ஒரு symbolism மற்றும் concept ஐ மறுத்தும்  மட்டம் தட்டி அந்த ப்ராஜக்டையே திரும்பச் செய்ய வலியுறுத்துவதையும் அருந்ததி ராய்  திரைக்கதையில் வெளிப்படையாக எழுதி தன்னை சுயவிமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.

கட்டிடக்கலைஞர்கள், கட்டிடக்கலை மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது. இதில் இளம் வயது ஷாரூக்கானும் சீனியர் மாணவராக சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். அருந்ததி ராய் ராதா என்னும் பி.ஆர்க் மாணவியாக பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நித்யா மேனன் ஆர்கிடெக்டாக நடிக்க மணிரத்னம் இப்போது இயக்கி வரும் ஓக்கே கண்மணி அருந்ததிராயின் ஆரம்ப கால கல்லூரி வாழ்க்கையைத் தழுவியதாக இருக்கலாம் என்ற வதந்தியும் நிலவுகிறது.

இந்தப் படம்  முழுதாக யூட்யூபில் கிடைக்கிறது , https://www.youtube.com/watch?v=P_r4mzD1_Bc
1988 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆங்கில மொழிப்படத்துக்கான தேசிய விருதையும் ,சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் பெற்ற இப்படத்தை ஒரு வெள்ளிக்கிழமை இரவு டெல்லி தூர்தர்ஷனில் பார்த்த அமரர் சுஜாதா  ஜூலை 1989 ன் கணையாழி கடைசி பக்கங்களில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக செய்த அறிமுகம் இங்கே.

கணையாழி கடைசி பக்கங்களில் அவர் 70களின் துவக்கத்திலிருந்து 90கள் வரை இடையில் பல நீண்ட தடைகளுடன் எழுதினாலும் அர்த்தமுள்ளதாக எழுதினார். அப்பகுதிக்காகவே கணையாழிக்கு சந்தாகட்டி அதை பொக்கிஷமாக சேர்த்து வைத்தவர்களை நான் அறிவேன், அதில் அவர் சிலாகிக்கும் பெண் எழுத்தாளர்களை அல்லது  நடிகைகளை அவள் என்றே எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார். பெண்களை குறிக்க  மரியாதைக்கு ஆணுக்கு சேர்க்கும் “ர்” அவர் சேர்த்து எழுதியதே இல்லை.

கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை நாயகி கவிதா கதாபாத்திரத்தின் பரினாமங்கள்



கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை நாயகி கவிதா கதாபாத்திரத்தின் வெவேறு காலகட்டம் மற்றும் வெவேறு மொழியில் மறு ஆக்கம் செய்கையில் அடைந்த பரினாமங்கள் இங்கே

1.தமிழில் அவள் ஒரு தொடர்கதை(1974) நடிகை சுஜாதா

2.தெலுங்கில் அந்துலேனிகதா(1976) நடிகை ஜெயப்ப்ரதா

3.வங்காளத்தில் கொபிதா [Kabita ](1977) நடிகை மாலா சின்ஹா

4.ஹிந்தியில் ஜீவன் தாரா[1982] நடிகை ரேகா

5.கன்னடத்தில் பெங்கியாலி ஹரலிட ஹூவு[1983] நடிகை சுஹாசினி

இதில் சுஜாதா தவிர நான்கு நடிகைகளுமே உயிரோடு உள்ளனர்,மாலா சின்ஹா 90களுடன் திரைவாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டார்,மாலா சின்ஹா இந்தி மற்றும் வங்காள சினிமாவின் தேர்ந்த நிரூபனமான நடிகை,இந்த எல்லா ஹீரோயின்களை விடவும் அவர் தான் வயதிலும் மூத்தவர் இப்போது 78 வயதாகிறது.

1971 ஆம் ஆண்டில்  ஹிந்தியில் வெளியான சஞ்சோக் கே.பாலசந்தரின் இருகோடுகள் படத்தின் மறு ஆக்கம்,அப்படத்தில்  மாலா சின்ஹா தான் சவுகார் ஜானகி செய்த முக்கிய பாத்திரம் செய்தவர், அதை பாலசந்தர் இயக்க வில்லை, மறைந்த விகடன் குழும சேர்மன் எஸ்.எஸ்.பாலன் அவர்கள்  இயக்கியுள்ளார்,

கே.விஸ்வநாத் இயக்கத்தில் ஜீவனஜோதி 1975 தெலுங்கு வெற்றிப் படம்,அதை அவரே சஞ்சோக் என்று ஹிந்தியில் நடிகர் அமிதாப் பச்சனையும் ஆஸ்தான நடிகை ஜெயப்ரதாவுடன் வைத்து 1985 ஆம் ஆண்டு  ரீமேக் செய்தார்.அதனால் மிகவும் பெயர்க்குழப்பம் விளைந்தது

இதனால் தான் நான் களாஸிக்குகளின் பெயரை மறு உபயோகம் செய்யக்கூடாது என்கிறேன், அது ஆவணக்காப்பு செய்கையில் முதலில் வந்த படத்தை மறக்கடித்துவிடும். அது எத்தனையோ திரைப்படங்களுக்கு நிகழ்ந்திருக்கிறது.


நடிகை சுஜாதா
நடிகை ஜெயப்ரதா

நடிகை மாலா சின்ஹா

நடிகை ரேகா

நடிகை சுஹாசினி

Which Annie Gives It Those Ones [1988] ஆர்கிடெக்சர் தீஸிஸ் பின்னனியில் அருந்ததிராய் நடித்த படம்



53 வயதாகும் எழுத்தாளரும் சமூக நல ஆர்வலருமான அருந்ததி ராய் டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பிரிவின் 80களின் மாணவியுமாவார்,

இவர் பி.ஆர்க் பட்டப் படிப்பை முடிக்கும் முன்னரே கல்லூரியிலிருந்து தன் காதலர் Gerard da Cunha வுடன் வெளியேறி விட்டார்.[http://www.tehelka.com/the-visionary-reformer-gerard-da-cunha/?singlepage=1]

 பின்னர் அந்தக் காதலும் உறவும் பொய்த்தது, [இதை மையமாக வைத்தோ வைக்காமலோ 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஃபஹாத் ஃபாஸிலும் ,ஆன் அகஸ்டினும் நடித்த ஆர்டிஸ்ட் என்னும் திரைப்படம் ஷ்யாம் ப்ரசாத் இயக்கத்தில் வெளிவந்தது]

அதன் பின்னர் பேரலல் சினிமா இயக்குனரான  Pradip Krishen உடன் இவர் இன்னுமோர் வாழ்க்கை அமைத்துக் கொள்ள அதுவும் பொய்த்தது. இல்வாழ்க்கையில்  சாதிக்க முடியாததை இவர் பொதுவாழ்வில் சாதித்து விட்டார் என்றால் சற்றும் மிகையில்லை.

1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான The God of Small Things என்னும் நாவலுக்கு புக்கர் பரிசு பெற்றார். இவர் புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியரும் ஆவார்,2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட இருந்த சாகித்ய அகாடமி விருதை அதில் நிலவும் சிபாரிசு அரசியலால்   இவர் வாங்க மறுத்தும் விட்டார்.  2004 ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசை இவர் பெற்றிருக்கிறார்.


இவர் திரைக்கதை எழுதி நடித்து 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இண்டிபெண்டண்ட் வகைப் படமான In Which Annie Gives It Those Ones , பி ஆர்க் படிக்கும் மாணவர்களின் இறுதி வருட தீஸீஸை மிகவும் தத்ரூபமாகவும், திறம்படவும் பேசுகிறது, design crit செஷனுக்கு வருகை தரும் Visiting Professional களின் யதார்த்த மனோ நிலையை மிக அருமையாக இப்படத்தில் கேலி செய்திருப்பார்கள்.

Visiting Professional கள்  அழகான பெண் மாணவிகள் வடிவமைத்த ப்ராஜெக்டில் இல்லாத ஒரு symbolism மற்றும் concept ஐ தாங்களே உருவகப்படுத்திக்கொண்டு இருப்பதிலேயே அதிக மதிப்பெண்களை வாரி வழங்குவதையும்,

ஒர் ஆண் மாணவன் வடிவமைத்த ப்ராஜெக்டில் இருக்கும்  ஒரு symbolism மற்றும் concept ஐ மறுத்தும்  மட்டம் தட்டி அந்த ப்ராஜக்டையே திரும்பச் செய்ய வலியுறுத்துவதையும் அருந்ததி ராய்  திரைக்கதையில் வெளிப்படையாக எழுதி தன்னை சுயவிமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.

கட்டிடக்கலைஞர்கள், கட்டிடக்கலை மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது. இதில் இளம் வயது ஷாரூக்கானும் சீனியர் மாணவராக சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். அருந்ததி ராய் ராதா என்னும் பி.ஆர்க் மாணவியாக பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நித்யா மேனன் ஆர்கிடெக்டாக நடிக்க மணிரத்னம் இப்போது இயக்கி வரும் ஓக்கே கண்மணி அருந்ததிராயின் ஆரம்ப கால கல்லூரி வாழ்க்கையைத் தழுவியதாக இருக்கலாம் என்ற வதந்தியும் நிலவுகிறது.

இந்தப் படம்  முழுதாக யூட்யூபில் கிடைக்கிறது , https://www.youtube.com/watch?v=P_r4mzD1_Bc

1988 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆங்கில மொழிப்படத்துக்கான தேசிய விருதையும் ,சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் பெற்ற இப்படத்தை ஒரு வெள்ளிக்கிழமை இரவு டெல்லி தூர்தர்ஷனில் பார்த்த அமரர் சுஜாதா  ஜூலை 1989 ன் கணையாழி கடைசி பக்கங்களில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக செய்த அறிமுகம் இங்கே.

கணையாழி கடைசி பக்கங்களில் அவர் 70களின் துவக்கத்திலிருந்து 90கள் வரை இடையில் பல நீண்ட தடைகளுடன் எழுதினாலும் அர்த்தமுள்ளதாக எழுதினார். அப்பகுதிக்காகவே கணையாழிக்கு சந்தாகட்டி அதை பொக்கிஷமாக சேர்த்து வைத்தவர்களை நான் அறிவேன், அதில் அவர் சிலாகிக்கும் பெண் எழுத்தாளர்களை அல்லது  நடிகைகளை அவள் என்றே எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார். பெண்களை குறிக்க  மரியாதைக்கு ஆணுக்கு சேர்க்கும் “ர்” அவர் சேர்த்து எழுதியதே இல்லை.
 
மேலும் நம் பாரதி மணி பாட்டையா அருந்ததி ராய் திரைக்கதையில் , அவரின் கணவர் ப்ரதிப் கிருஷ்ணனின் இயக்கத்தில்  எலக்ட்ரிக் மூன் என்னும் இந்திய ஆங்கில மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார்.அப்படம் 1992ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான  தேசிய விருதும் பெற்றுள்ளது. அந்த சுவையான தருணத்தை உயிர்மையில் கட்டுரையாக எழுதியிருக்கிறார் பாட்டையா,அதை இங்கே படிக்கலாம்.

அருந்ததி ராயும் என் முதல் ஆங்கிலப்படமும் — பாரதி மணி (Bharati Mani)
https://balhanuman.wordpress.com/2011/02/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/ 

எழுத்தாளர் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே குறித்து வாத்தியார்.சுஜாதா எழுதிய அறிமுகம்



எழுத்தாளர் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே குறித்து வாத்தியார்.சுஜாதா அவர்கள் நவம்பர் 1974 கணையாழி கடைசி பக்கங்களில் எழுதிய அறிமுகம்.வாத்தியார் எழுத்துக்களை எப்போது படித்தாலுமே ஃப்ரெஸ்ஸு தான்[சிவாஜியில் கொச்சின் ஹனீஃபா சொல்லும் ஃப்ரெஸ்ஸு] அவர் அறிமுகங்களும் அப்படியே

கட்டக் கடைசியாக டான்லீவியைப் [பி]படித்த கனவான்களுக்கு ஜி.நாகராஜனையும் மிகவும் பிடிக்கும் என்றிருக்கிறார்.

டான் லீவி பற்றிய விக்கி லின்க்
http://en.wikipedia.org/wiki/J._P._Donleavy
டாவி லீவியின் மிகச்சிறந்த படைப்பான த ஜிஞ்சர் மேன் பற்றிப் படிக்க
http://en.wikipedia.org/wiki/The_Ginger_Man



சுஜாதாவின் சிறுகதைகள் மற்றும் என்றாவது ஒரு நாள்


அமரர் சுஜாதாவின் சிறுகதைகளைப் பற்றி பேச வேண்டும் என்றால் மணிக்கணக்கில் பேச முடியும், எக்காலத்துக்கும் பொருந்தும் ப்ரில்லியன்ஸியும் ஃப்ரெஷ்னெஸ்ஸும் அவரின் எல்லாக் கதைகளிலுமே நிரம்பி வழியும்,ஒரு கதை படித்து முடித்தது அதை மனம் அசை போட வைக்கும்.   என்ன கதைகள் அவை?!!! 

எனக்கு அவரின் ரெண்டனா,வாஷிங் மெஷின்,அரிசி [யாராவது ஆம்புலன்சை கூப்பிடுங்களேன்,யாராவது சோடா வாங்கிட்டு வாங்களேன் என்னும் அந்நியன் சீன் இக்கதையிலிருந்து தான் பிறந்தது],

ஸய்ன்ஸ் ஃபிக்‌ஷனான திமலா[திருமலா], வாசகர் கடிதம் பாணியில் கணவன் மனைவி இருவருமே இவருக்கு எழுதும் ஒரு கதை, பெங்களூரில் வந்த இடத்தில் உறவினர் வீட்டில் மனைவியை இழந்தவன் வீடு வீடாகப் போய் சவ அடக்கத்துக்கு வசூல் செய்யச் செல்லும் ஒரு கதை,

ஜஸ்வந்த் என்னும் ஓவியர் வரைந்த ஒரு க்ரைம் ஸ்பாட் ஓவியத்தை வைத்து புனையப்பட்ட ஒரு கதை [அவரின் முதல் சிறுகதை] என எல்லாமே பிடித்தமானவை.சிறுகதைக்கு சுஜாதா போல மரியாதை செய்தவர் யாரும் இலர்,

வாத்தியாரின் தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றாக பலித்துக்கொண்டே வருகையில்,அவரின் ஜில்லு கதை மட்டும் நம் வாழ்நாளில் பலிக்கவேகூடாது என வேண்டிக்கொள்ள வைக்கும் ஒரு அற்புதமான ஸய்ன்ஸ் ஃபிக்‌ஷன்.

அவரின் யாகம் என்னும் கதை அமெரிக்க வேத விற்பன்னர்கள் கோஷ்டியின் யாகத்தில் நரபலிக்கு மாட்டிய சாஃப்ட்வேர் பிராமனனின் கற்பனைக் கதை,அதை லாஸ் ஏஞ்ஜெல்ஸ் ராம் நாடகமாகப் போட்டிருக்கிறார் என்று வாத்தியாரே பின்னுரை எழுதியிருக்கிறார்.

இவரின் குதிரைக் கடி வாங்கியவனின் கதையை பல் தெரிய சிரிக்காமல் ஒருவராலுமே படிக்க முடியாது,அதை பின்னாளில் கமல் தன் மும்பை எக்ஸ்ப்ரெஸ் படத்தில் ட்ரிப்யூட் செய்திருப்பார். மஹானுபாவர் சொர்க்கத்தில் கூட எழுதிக்கொண்டுதான் இருப்பார் போலும்.

 சமீபத்தில் அவரது என்றாவது ஒரு நாள்  நாவலை மீள்வாசிப்பு செய்தேன்,அதைப் படித்து சுமார் 10 வருடங்கள் இருக்கும்.அதை அவர் எழுதி சுமார் 30 வருடங்களேனும் இருக்கும், 2015ல் மீண்டும் படிக்கையிலும் படபடப்பு கூட்டும் சுவாரஸ்யமான எழுத்து நடை.

என்றாவது ஒருநாள் நாவலை மத்திய 80களில் எழுதியிருப்பார் சுஜாதா .இன்ஸ்பெக்டர் தர்மலிங்கத்தின் குணாதிசயமான போலீஸ் ஸ்டேஷனில் செடி வளர்த்து நீர் பாய்ச்சுதல், கோப்புகளை மிக அழகாக அடுக்கி தூசுதட்டி பராமரித்தல் என நிறைய டீட்டெயிலிங் இருக்கும்.  அவர் மாறிவரும் காலத்துக்கேற்ப தன்னை அப்டேட் செய்வதையும்  அழகாக விளக்கியிருப்பார்.அதே போலவே சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாகவே கத்தியை உபயோகிக்காத நாராயணன் திலகத்தைக் காப்பாற்ற அங்கே தென்பட்ட காய்கறி நறுக்கும் கத்தியை அரைவிநாடிக்குள் கைப்பற்றி அந்த குடிகாரனின் தோளில் அழுந்த அறுப்பு போடும் அழகை வாத்தியார் விவரிக்கும் இடம் இருக்கிறதே அடடா!!!

அதே போன்றே அந்த ஒற்றை அறுப்பின் செயின் ரியாக்ஷன் நாராயணன் என்னும் கேடி தலைமறைவாக இருப்பது  சென்னை தான் என்று தர்மலிங்கத்தின் சந்தேகத்தை தீர்த்து வைக்கும் இடங்கள் எல்லாம்,நம் இருதயம் அடித்துக்கொள்ளும்.

போலீஸ் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்நாவல். சுஜாதா இதில் சென்னை மாநகரின் வளர்ந்து வரும் இடங்கள் என்று திலகத்தின் குடிசை இருக்கும் அரும்பாக்கத்தை சொல்லியிருப்பார்,கட்டிடவேலையில் போலீஸாரால் மோப்பம் பிடிக்கப்பட்ட நாராயணன் ராயப்பேட்டை ஃபர்னீச்சர் கடை ஒன்றில் தச்சுவேலைக்கு சேர்ந்து விடுவான் ,திலகம் உடன் இருந்து அவனின் கூலியை ஏற்றிக் கேட்டு வேலைக்கு சேர்த்து விடும் இடம் எல்லாம் அருமையாக இருக்கும். அருண்ஹோட்டல்,கூவம் பாலம், மைலாப்பூர் கச்சேரி ரோடு.என்று நிஜ இடங்களின் பெயரை உபயோகித்து நாவலுக்கு உயிரோட்டம் கொடுத்திருப்பார்.

சுஜாதாவின் அனிதா இளம் மனைவியிலும் இதே போல 1970களின் டில்லி,கூர்காவூன்,முனிர்கா,மயூர் விஹார் பகுதிகளை நாவலில் சமபவ இடங்களாக உபயோகித்திருப்பார்.இந்நாவல் சுஜாதாவின் முக்கியமான படைப்பு.
கதைக்குள் கதை வைத்தாற் போல திலகத்துக்கு ஒரு கிளைக்கதை ஃப்ளாஷ்பேக் வைத்து,கடைசி பக்கத்தில் அவள் கதைக்கு ஒரு மீள்துவக்கத்தை வைத்திருப்பார்.

கைத்திறன் உள்ளவனுக்கு எங்கே சென்றாலும் வேலை கிடைப்பதை நாம் பார்ப்போம்,நாராயணன் என்னும் புண்ணியகோடி சிறையில் கற்ற தச்சு வேலையும்,பிளம்பிங் வேலையும் அவன் எளிதாக வேலையை விட்டு வேறு வேலை மாறுகையில் உதவினாலும்,அதுவே அவனை போலீஸிடம் சிக்கவும் வைக்கிறது.
வாத்தியார் பற்றி எத்தனை பேசினாலும் தகும்,எனவே தொடரும்

காயத்ரி நாவல் [1976] மற்றும் சினிமா [1977]

காயத்ரி நாவல் [1976] மற்றும் சினிமா [1977]


ழுத்தாளர் சுஜாதாவின் காயத்ரி நாவல் படித்தேன், படம் முன்பே அதன் காண்ட்ராவர்ஸியான கன்டன்டுக்காக 2 முறைக்கும் மேல் பார்த்திருக்கிறேன், 77 பக்கங்கள் கொண்ட குறுநாவல்,நல்ல விறுவிறுப்பான பாணி எழுத்து நடை, இன்று எழுதியது போல இருந்தது என்றால் அது க்ளிஷே 

1976 ஆம் வருடம் தினமணிக்கதிரில் இதை சுமார் 15வாரங்கள் எழுதியிருக்கிறார் வாத்தியார்.அதை இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் உரிமை வாங்கி சுடச்சுட கொத்துக்கறி போட்டிருக்கிறார்.இயக்கம் ஆர்.பட்டாபிராமன்,இசை இசைஞானி இளையராஜா,பாடல்களை பஞ்சு அருணாச்சலமே எழுதியிருக்கிறார்.

நாவலில் காயத்ரி மிகவும் நளினமான நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் கதாபாத்திரம் ,ஆனால் படத்தில் ஒரு பயந்த வெகுளியான பத்தாம்பசலியான ஸ்ரீதேவியாக உருகுலைக்கப்பட்டது.

நாவலில் இவர் ஊர் கோயமுத்தூர் என்றால் சினிமாவில் திருச்சி.நாவலில் காய்த்ரியின் கணவரான ராஜரத்னம் கதாபாத்திரம் செக்கச்செவேல் என்று ,கருகரு தலைமுடியுடன் பொலிகாளையைப் போல இருப்பதால்,அதை மேட்ச் செய்ய வேண்டி ரஜினிக்கு பஃப்ஃபென்று டிஃபன் பாக்ஸ் க்ராப்  வைத்து 1 இஞ்ச் கனத்துக்கு அரிதாரம் பூசி மெழுகியிருந்தனர். இதை மட்டும் அவருக்கு மாற்ற மனமில்லை ,ஏன் எனத் தெரியவில்லை?.

காயத்ரி நாவல் , மூர் மார்கெட்டுக்கு தன் சிறுகதைத் தொகுப்பில் விடுபட்ட ஆனந்த விகடனில் வெளியான ஒரு பழைய பிரதியைத் தேடி வந்து,அங்கே ஒரு பாய் கடையை சல்லடை போட்டு துழாவும் எழுத்தாளர் சுஜாதாவின் கண்ணோட்டத்தில் விரிகிறது.

ஆனால் படத்தில் சுஜாதாவின் கதாபாத்திரம் இருக்காது.கணேஷின் கதாபாத்திரத்தில் ஜெய்ஷங்கர்,வஸந்தின் கதாபாத்திரத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி [இதெல்லாம் அடுக்குமா?] என சுஜாதாவை கதற விட்டிருந்தார் பஞ்சு அருணாச்சலம், இது வாத்தியாரின் முதல் சினிமா பிரவேசம் என்பதால் வேறு வழியின்றி ஙப் போல் வளைந்திருப்பார்.

படத்தில் ராஜரத்தினத்தின் அக்கா சரசுவாக ராஜசுலோசனா நடித்திருப்பார்,சமையல் கார ஐயர் கதாபாத்திரத்தில் அசோகன்,சுஜாதாவின் எல்லா நாவல்களுமே   subtle ஆன செக்ஸைக் கொண்டிருக்கும்,இதுவும் விதிவிலக்கல்ல,நாவலில் கையாளப்பட்ட ஆங்கில சொற்றொடர்களுக்கு எத்தனை பேருக்கு? அப்போது அர்த்தம் தெரிந்தது எனத் தெரியவில்லை.
உதாரணத்துக்கு: முதல் அத்தியாயமே இப்படித்தான் ஆரம்பிக்கிறது, intensely personnel ,Bought in Bangalore on the day i lost my virginity .

படத்தில் தன் காயத்ரி கதாபாத்திரத்தின் உயிரைக் காப்பாற்ற சுஜாதா பஞ்சு அருணாச்சலம் அண்ட் கோவுடன் ஒரு நாள் முழுக்க போராடிக் களைத்ததாக அவரது பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.ஆனால் சுஜாதாவின் கதையில் இந்த கற்பு நெறி களங்கம் இத்யாதிகளை வாத்தியார் லாவகமாக தாண்டிவிடுகிறார்.

எத்தகைய தீர்க்க தரிசனம்?அல்லது கட்டுடைத்தல்? நாவலை வஸந்த் இப்படித்தான் முடித்து வைப்பார்.

 “நாங்கள் அந்த படத்தை பார்த்துவிட்டோம், அதில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்!!!

 பின்னர் காயத்ரியை பத்திரமாக அவர் அப்பாவிடம் கொண்டு சேர்த்து ராஜரத்தினம் அண்ட் கோ மீது பெரிய வழக்கு போட தயாராகும் முஸ்தீபில் காயத்ரி நாவல்  முடியும்.

ஒரு வகையில் இந்த கசப்பான அனுபவமும் அசாத்திய பொருமையும் பின்னாளில் வாத்தியாரது இன்னொரு நாவலான ப்ரியா ,இயக்குனர் பஞ்சு அருணாச்சலத்தால் கொத்துக் கறி போடப்படுகையில் மிகவும் கைகொடுத்ததையும் அவர் சொல்லியிருந்தார்,

மூன்றாம் முறையாக சுஜாதாவின் அனிதா இளம் மனைவி குமுதத்தில் தொடராக வந்ததை ,பஞ்சு அருணாச்சலம் “இது எப்படி இருக்கு” [16 வயதினிலே ரஜினி வசனம்] என்று படமாக எடுத்து அது ஊற்றிக்கொண்ட பின்னர் தான் பஞ்சு அருணாச்சலம்,சுஜாதாவை விட்டே விலகினாராம்.

சுஜாதா தன் காயத்ரி நாவலில் ஒரு Bell & Howell 8mm power zoom அமெச்சூர் கேமரா பற்றி குறிப்பிட்டிருந்தார்,அதன் மேனுவல் இங்கே தேடி இணைத்திருக்கிறேன்,

நாவல் வெளியாகி, 2 வருடம் கழித்து அதே  Bell & Howell  கேமரா, அதே போன்ற மர்மங்கள் நிரம்பிய பங்களா,அதே போன்ற கூர்க்கா,அதே போன்ற கோட் சூட் ,வளர்ப்பு அக்காவுக்குப் பதிலாக வளர்ப்பு அப்பா என கொஞ்சம் கதை திரைக்கதையை மாற்றி சிகப்பு ரோஜாக்கள் என்ற பெயரில் 1978 ஆம் ஆண்டு வெளியானது,அதற்கு ஏன் வாத்தியாருக்கு க்ரெடிட் தரவில்லை எனத் தெரியவில்லை!!![கொடுத்துட்டாலும்]
Bell & Howell 8mm power zoom

சதுரங்க வேட்டை படத்தில் காட்டப்படாத ஃப்ராடு, மணமகள் தேவை / அமெரிக்க மாப்பிள்ளை / பெரிய பிஸ்னஸ் மேன் கான்ஸெப்டில் ஃப்ராடுத்தனம் செய்து மணமகளைத் தேடி சடுதியில் திருமணம் செய்து முடிந்தவரை பெண்ணையும் பெண் வீட்டாரையும் ஏமாற்றுவது,
அதை நாவலில் முதலில் செதுக்கியது  வாத்தியார் தான். இதே ஃப்ராடை பின்பற்றி எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய 47நாட்களும் முக்கியமான அதிர்ச்சியடைய வைத்த படைப்பு.

அணுசக்தி வேண்டாம் - சுஜாதா!

(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது)

அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.
எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.

விபத்துகள்:-
 

 முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:-

 
அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.

சாம்பலை என்ன செய்வது:-

 
அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-

 
உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:-

 
இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.

காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-

 
நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-

 
அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:-

 
நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் வாயு:-

 
ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

"சைவ" பெட்ரோல்:-

 
அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி

சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.

இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.


(Taken From :- சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?)
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)