அஜய் தேவ்கன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஜய் தேவ்கன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குட்கா பயனாளிகளுக்கு பத்மஸ்ரீ விருது மேயுற மாட்டை நக்கற மாடு கெடுத்த கதை

"மேயுற மாட்டை நக்கற மாடு கெடுத்ததாம்"

பத்மஸ்ரீ விருது இந்தியாவின் நான்காவது உயரிய விருது, இந்த விருதை வாங்கிய நடிகர்கள் குடிமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் அந்த விருதுகளை திரும்ப ஒப்படைக்கவாவது வேண்டும்.

நான் வீட்டில் எந்த டிவியும் பார்ப்பதில்லை, எந்த TV pack ம் கூட என்னிடம் இல்லை,  யூட்யூபில் உள்ள க்ளாஸிக் படங்களை பார்க்கவே நேரம் இல்லை, இதில் 8 tv streaming service pack வாங்கி எங்கே அத்தனையும் பார்ப்பது, என்னிடம் amazon prime கணக்கு உண்டு, அதை கொரியர் கட்டண சலுகைக்கு (delivery charge waiver ) மட்டும் பயன்படுத்துகிறேன். ஏர்டெல்லும் அப்படி இரண்டு  streaming pack தந்துள்ளது, அதையும் உபயோகிப்பதில்லை.

அன்று உறவினர் வீட்டுக்குச் செல்கையில் இந்த விமல் தம்பாக்கு விளம்பரம் படம் ஓடும்போது இடையிடையே வந்தது, அதில் இந்த இரு பத்மஸ்ரீ நடிகர்கள் இந்த விமல் பாக்கை வாயில் கொட்டிக்கொள்வது போல நடித்துள்ளனர்,இது போல போதை பாக்கு விளம்பரங்கள் பார்த்து சரத்குமார் போன்ற பெயரெடுத்த நடிகர்கள் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் லஜ்ஜையின்றி தோன்றி  குடும்பத்துடன் கூட்டு தற்கொலை செய்ய காரணமாகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் படங்களுக்கோ பணத்துக்கோ பஞ்சமில்லை, அப்புறம் ஏன் இந்த அற்பத்தனம்,உபி போல கல்வி அறிவு குறைந்த வறுமை மிகுந்த மாநிலங்களின் மக்களை கவிழ்க்க இந்த இரு நடிகர்களுக்கு பல கோடிகள் சம்பளம் தந்து போதைபாக்கு விளம்பரத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

 எத்தனை பள்ளி மாணவர்கள் குட்காவுக்கும் ,கைனி ,தம்பாக்கிற்கும் ,மாவா,ஜர்தா பீடாவுக்கும் அடிமையாகி படித்து முன்னேறும் வயதில்  வாழ்க்கையைத் தொலைக்கின்றனர், காலம் முழுக்க தன்னம்பிக்கை இன்றி உழல்கின்றனர்.

இப்படி உடலுக்கு தீங்கான லாகிரி வஸ்துவுக்கு brand ambassador ஆக நிற்பதும் மலத்தில் அரிசி பொறுக்குவதும் ஒன்று.

மேலும் குட்கா பதிவு
https://www.facebook.com/750161339/posts/10159787173756340/ #போதை,#குட்கா,#தம்பாக்கு,#கைனி,#ஜர்தா,#பீடா

ஸக்ம் [Zakhm][ज़ख़्म] [ஹிந்தி][1998][இந்தியா]


மஹேஷ் பட் இயக்கிய Zakhm |ஸக்ம் [காயம்] ஹிந்திப்படம் 1998 ஆம் ஆண்டு வெளியானது, இது அவரின் சொந்த  வாழ்க்கையை தழுவி புனையப்பட்ட கதையும் கூட, படம்  மஹேஷ் பட்டின் சிக்கல் மிகுந்த பால்ய பருவத்தை நமக்கு அறிமுகம் செய்கிறது, 

பாலிவுட்டில் புகழின் உச்சியில் இருக்கும் இசையமைப்பாளர் அஜய் [அஜய் தேவ்கன்]யின் கண்ணோட்டத்தில் கதை சொல்லபடுகிறது,1992 ஆம் ஆண்டு பம்பாயில் இந்து முஸ்லிம் வன்முறை வெடித்து ,ஊரடங்கு உத்தரவு 23 மணி நேரம் அமலில் இருக்கிறது,எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு கண்,ரத்தத்துக்கு ரத்தம் என்று சுயநலம் கொண்ட அரசியல் வாதிகள் தூண்டிவிட்டு படுகொலைகள் அரங்கேறுகின்றன.அரசு மௌனசாட்சியாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. இவரின் மனைவி  கருத்தரித்திருக்கிறார்,இந்த மதக்கலவர சூழலில் இங்கே இந்தியாவில் குழந்தை பெற்றுக்கொள்வதை வெறுக்கிறார்,

தன் தாய் வீடான லண்டனுக்கு போக ஆயத்தமாகிறார்.அஜயையும் தன்னுடன் அழைக்கிறார்,ஆனால் அஜய்க்கு தன் அம்மா மீதும்,பிறந்த ஊரின் மீதும் அப்படி ஒரு வினோதமான பக்தி உள்ளது.அஜய்க்கு ஆனந்த் என்னும் தம்பி இருக்கிறான்,அவன் எந்நேரமும் சிவசேனா போன்ற ஒரு மதவெறிக்கட்சியில் கட்ட பஞ்சாயத்து செய்வதையே பெருமையாக நினைக்கிறான்,அங்கே அவனது தலைவனாக ராஜ்தாக்கரே போன்றே தோற்றம் கொண்ட சுபாத்தை நாம் பார்க்கிறோம்,இவன் பேசும் போது,ஏன் மூச்சு விட்டாலே விஷவிதைகளாக முஸ்லீம் துவேஷம் வந்து விழுகிறது,அவனது மகுடிக்கு தம்பி ஆனந்த் நடனமாடுகிறான்.அஜய் எத்தனை திட்டினாலும் கேட்பதில்லை.

படத்தில் இவரின் அம்மா ஒரு முஸ்லிம்,ராமன் என்னும் ஆச்சாரமான இந்து குடும்பத்தைச் சேர்ந்த  படஇயக்குனரோடு இல்லற பந்தம் கொண்டிருக்கிறார், ராமனின் அம்மா ஒரு சாதி மதத்தை போற்றிப் பாதுகாக்கும் பேய்,இவரின் அம்மா நான் இறந்த பிறகு நீ உன் விருப்பம் போல் அந்த முஸ்லிம் பெண்ணை மனைவியாக்கி இந்த வீட்டுக்குள் கூட்டிவா என வரட்டுப் பிடிவாதமாயிருக்க, ராமன் மற்றும் பூஜாபட் தம்பதிகள் ஊரரியாமல் சேர்ந்து வாழ்கின்றனர், அஜய் என்னும் 10 வயது மகனும் உண்டு,அஜயின் அப்பா எப்போது நம்மை அவர் வீட்டுக்கு கூட்டிப்போவார் எனும் ரீதியான  கேள்விகளுக்கு அவனின் அம்மாவால் விடை சொல்லமுடியவில்லை,அதே நேரம் இவர்களது காதல் மிக உயர்வானது என நம்புகிறார்,

ராமனை எப்போதுமே நிர்பந்திப்பதில்லை, இந்நிலையில் ராமன் தன் தாயின் தற்கொலை மிரட்டலில் பெயரில் ஒரு ஆச்சாரமான இந்துப் பெண்ணை மணக்கிறார்,குற்ற உணர்வுடன் அஜயின் அம்மாவிடம் மண்டியிட்டு நான் தோற்றுவிட்டேன்,என குமுறுகிறார்,அவள் இப்போதும் எந்த கோபமும் சாபமும் இன்றி அவரை ஏற்று அணைக்கிறாள், இப்போது ராமனின் இன்னொரு வாரிசும் இவரது வயிற்றில் வளர்கிறது,அதை இவள் ஒன்றுமே செய்வதில்லை, ராமனின் மேல் அவள் உயிரையே வைத்திருக்கிறாள். ராமன் தன் அம்மாவின் கட்டாயத்துக்கிணங்க வேறொரு பெண்ணை மணந்தாலும், அவரின் எண்ணங்கள் எல்லாம் இவர்களைப்பற்றியே இருக்கிறது, 

அஜயின் அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவர் இப்போது இங்கே வருவதில்லை,அதே சமயம் வேறொரு பெண்ணிடமும் அவருக்கு உடலால் தொடர்பில்லை என்பதை அறிகிறோம்,அவளிடம் முதல் முஸ்லிம் மனைவியைப் பற்றியும், மகன் அஜயைப் பற்றியும் முழுதும் சொல்லிவிடுகிறார்,இந்நிலையில் அஜயின் அம்மாவிற்கு பிரசவ வலி வர,அவர் இப்போது ஒரு ஆண் மகவை பெற்றெடுக்கிறார்,இந்த செய்தியை அஜய் ராமன் வீட்டிற்கு தொலை பேசி வழியே சொல்ல,அவர் மனைவி அதை நெக்குருக கேட்கிறார், அவரும் தன் கணவரை மிக நன்றாக புரிந்து வைத்திருப்பதை நாம் அறிகிறோம்,இப்போதும் அவரது சாதி மதப்பேயான தாய குதிக்கிறாள்,அக்குழந்தைகளும்,அவளும் புழு பூத்து சாவார்கள்,என்று சபிக்கிறாள்,இவர் கோபத்திலும் விரக்தியிலும் காரை இயக்கி ஆஸ்பத்திரிக்கு விரைகையிலேயே லாரி மோதி கார் விபத்துக்குள்ளாகி இறக்கிறார்,

ராமனது இரண்டாம் மகவு வந்த அன்றே அவர் மரணமடைந்தது ராமனின் அம்மாவை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்ல, ராமனின் ஈமைச்சடங்கின் போது அங்கே பச்சைக்குழந்தையை தூக்கிக்கொண்டு அஜயின் துணையுடன் ராமனின் ஈமைச்சடங்கில் குழந்தையை காட்டி ஆசி பெற கனத்த இதயத்துடன் வருகிறார்.அங்கே ராமனின் அம்மா ,அவரை மிக இழிவாக பேசுகிறார், ஒரு முஸ்லிம் காலடி என் மகனின் ஈமைச்சடங்கின் போது பட்டு,தீட்டானதே,இனி அவன் எப்படி மோட்சத்துக்கு போவான் என ஏசுகிறாள்,

அஜய் தடுக்க அவனை அறைகிறாள்,ஆனால் ராமனின் இளைய மனைவி அம்மாவிடமிருந்து குழந்தையை வாங்கியவள் அணைத்து ஆதூரமாக ஆசியளித்து அனுப்புகிறாள், வாசலிலேயே அமர்ந்த அம்மா அவரது ஆத்மா சொர்க்கத்துக்கு போக வேண்டி அல்லாவிடம் இறைஞ்சி தொழுகிறாள். சிறுவன் அஜய்க்கு அன்று தான் தன் அம்மா ஒரு முஸ்லிம் என்பதே தெரியும், இத்தனை நாள் அவரை இந்து என்றே நினைத்திருக்கிறான்,அம்மாவை நெற்றி நிறைய பொட்டோடும்,தலை நிறைய பூவோடுமே பார்த்திருக்கிறான் அஜய்,அம்மா இப்போது மிகவும் தைரியம் கொள்கிறாள்,சிறுவன் அஜயிடம் தான் இறக்கும் வரை அம்மா ஒரு முஸ்லிம் என்பதை தம்பியிடமோ,யாரிடமோ சொல்லக்கூடாது,தான் இறந்த பின்னர் இவரை  முஸ்லிம் முறைப்படி அடக்கம் செய்யவேண்டும்,அப்போது தான் இவர் ராமனுடன் சொர்க்கத்தில் இணைய முடியும் என வேண்டி சத்தியம் பெறுகிறார். இனி இந்த இந்து முஸ்லிம் மத துவேஷம் புரையோடிப்போன சமூகத்தில் குழந்தைகளை சிக்கலின்றி வளர்க்க வேண்டி தன்னை கிருஸ்துவர் என்றும் சொல்லிக்கொள்கிறார். ராமனின் நினைவாகவே மீத வாழ்நாளைக் கழிக்கிறார்,இப்போது வருடங்கள் ஓட,பிள்ளைகள் வளர்ந்து மிக நல்ல நிலைக்கு வந்து,அஜய்க்கு திருமணமும் ஆகிவிட்ட நிலை.அஜய் இப்போதும் தாயை மனைவியையும் விட மேலாக  நேசிக்கிறார்.மனைவியும் அதை நன்கு புரிந்து கொண்டு நடக்கிறாள்.

இப்போது பம்பாய் கலவரபூமியாயிருக்கிறது. அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்று பாபர் மசூதி இடிப்பையும்,அதைத் தொடர்ந்து கலவரம் வெடித்ததையும்,இந்து முஸ்லிம் இரு தரப்பிலும் மக்கள் பலியானதையும்  திரும்பத் திரும்ப ஒளிபரப்ப  ,அங்கே உணர்ச்சி வெடிக்கிறது, ராமனின் அம்மா சர்ச் சென்று திரும்புகையில்  மதவெறியர்கள் சிலரால் இந்துப்பெண் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தப்படுகிறார் [இது மட்டும் சினிமாவிற்கு செய்த புனைவு] ,சிகிச்சை பலனளிக்காமல் 80 சதவித தீக்காயங்களுடன் இரு தினங்களில் இறந்தும் போகிறார். இப்போது ராஜ்தாக்கரே போன்ற தோற்றம் கொண்ட மதவெறி அரசியல் வாதி,இந்த சூழ்நிலையில் இவர் அம்மாவின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறான்,போலீசாரும் அவனுக்கு உடந்தையாக இருக்கின்றனர்,சரத் பவாரின் மாநில அரசு,பொம்மை போல வேடிக்கை மட்டும் பார்க்கிறது.ஊரெங்கும் கலவரம்,தம்பியிடம் அஜய்,அம்மாவை முஸ்லீமாக அடக்கம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்க,அவன் கேட்பதாயில்லை,இந்நிலையில் இவர் அம்மாவை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற முஸ்லிம் இளைஞனை இந்து மதவெறி ஆட்கள் அடித்து மண்டையை உடைக்க,அவனும் ஆஸ்பத்திரியிலேயே கட்டிலுடன் விலங்கிடப்பட்டு சேர்க்கப்படுகிறான்,தான் கொன்றது ஒரு முஸ்லிம் பெண்மணியை என அறிந்ததும்,ஐயோ பாவம் செய்துவிட்டேனே,என் மதத்தை காப்பாற்ற என் அம்மாவையே கொன்று விட்டேனே ,என்னை மன்னித்துவிடுங்கள்,என கதறும் இடம்,மிகவும் உணர்ச்சிகரமானது,

மத வெறி தலைவிரித்தாடும் காலம்,உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு பிணத்தின் மீது அரசியல் செய்யும் அரசியல் பன்றிகள்.அந்த காட்சியமைப்பை எந்த ஒரு சாதி மத கொலைகளுடனும் ஒருவர் பொருத்திப்பார்க்கலாம்,தனி நபர் சுக துக்கங்களில் அரசியல்வாதிகளின் அருவருப்பான தலையீடு எத்தனை ஆபத்தானது என நம் நெஞ்சம் பதறும் காட்சியது. 

அஜயின் அம்மாவின் சவ அடக்கத்தை  மகன்களும் மருமகளும் எப்படி சாத்தியமாக்கினர்? என்பதை படத்தில் பாருங்கள், எத்தனை சிக்கலான உறவுப் பின்னல்களின் கோர்வை என வியக்கிறேன் . தன் அம்மாவின் பாத்திரத்தில் தன் மகள் பூஜா பட்டையே நடிக்க வைத்துள்ளார் மஹேஷ் பட். இப்படத்தில் இவரது பாத்திரத்தில் நடித்த அஜய் தேவ்கனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது, படம் 1992 இந்து முஸ்லிம் மதக்கலவரம் நடந்த 6 வருடம் கழித்து வெளியானது, மிகத் துணிச்சலான படம், படைப்பாளி எப்படி இருந்தால் என்ன? அவனின் படைப்பு தானே முக்கியம்?!!! படத்தில் இவர் முஸ்லிம் அம்மாவின் இந்துக்கணவனாக நாகார்ஜுனா மிக அருமையான நடிகர்,மிகப்பாந்தமாக ராமன் என்னும் பாத்திரத்தில் பொருந்தியிருந்தார், அஜயின் மனைவியாக சோனாலி பிந்த்ரே, இவரின் தம்பியாக அக்‌ஷய் ஆனந்த் என்று மிகச் சிறப்பான காஸ்டிங்கை தன்னுள் கொண்ட படம்.

நடிகர் அஜய் தேவ்கன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்,அவர் ஒருபுறம் சிங்கம்,ஹிம்மத்வாலா போன்ற வணிக ரீதியான படங்களில் நடித்தாலும் இன்னொரு பக்கம் ரெய்ன்கோட், ஓம்காரா, ஹல்லாபோல், ஆக்ரோஷ், கங்காஜல், கம்பெனி என பரீட்சார்த்தம் கலந்த சினிமாக்களிலும் தன்னை முன்னிறுத்துபவர், அப்படிப்பட்ட முயற்சிகளில் ஒன்று தான் இப்படம், இதில் இசையமைப்பாளர் அஜயாக மிக அற்புதமாக பங்களித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் மஹேஷ் பட்டின் மிகவும் வெளிப்படையான பேட்டிக்கான சுட்டி இது ,அடுத்தவர்களின் அந்தரங்கம் தான் எத்தனை சுவாரசியமானது?!!! இவரது  மகள் பூஜாபட் மீது இவர் இன்செஸ்ட் உறவு வைத்துள்ளாரா?!!! என்னும் இந்த விவகாரமான போட்டோவால் எழுந்த கேள்விக்கு இவர் சொன்ன பதில் படியுங்கள் , ஹாலிவுட்டில் இருந்து இவர் திருடியதை எல்லாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளுதல் , தன் வாழ்வில் சந்தித்த அடுக்கடுக்கான காதல் மற்றும் இல்லறத் தோல்விகள்,தன் நான்கு படங்கள் அடுத்தடுத்து தோற்றது,தன் வழிகாட்டியான U.G. கிருஷ்ணமூர்த்தி [ஜிட்டு அல்ல] தன் கடைசி நாட்களில் மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் பிடிவாதமாக மடிய இவரால் ஒன்றுமே செய்யமுடியாமல் இவர் சிதை மூட்டியது, என ஒளிவு மறைவில்லா பேட்டி இது. வழ வழா கொழ கொழா என பிரபலங்களிடம் கேள்வி கேட்கும் நிருபர்கள் அவசியம் படித்து தம்மை திருத்திக்கொள்ளவும்  உதவும்.

படத்தில் வரும் கலி மே ஆஜ் சாந்த் நிக்லா என்னும் மரகதமணி இசையமைத்த பாடலின் காணொளியை அவசியம் பாருங்கள்,எளிமையான இனிய பாடல்,அதே போல எளிமையான அழகிய காட்சியாக்கம், அனைவருக்கும் பிடிக்கும்.

ஹல்லாபோல் [Hallabol][ஹிந்தி][2008] உரக்க கத்து

ந்த படம் பாலிவுட், கோலிவுட், டோலிவுட்,மோலிவுட் என எல்லா வுட்டுக்குமே பொருந்தும் என்னுமளவுக்கு அம்சமான ஒரு டெம்ப்ளேட் கொண்டது. ஏனென்றால் நாமும் இந்தியர்தானே!!!,அடுத்தவனுக்கு நடந்தால் செய்தி !நமக்கு நடந்தால் விபத்து, என நினைப்போர் தானே!! இதில் செமையாக அந்த மனநிலை மனிதர்களை  சுளுக்கெடுத்துள்ளனர்.

நான்,ரேஸ்,டஷன்,சிங் இஸ் கிங்,மிஷன் இஸ்தான்புல், ஹை ஜாக், பூத் நாத், தோஸ்தானா  போன்ற பல மரண மொக்கைகளை நண்பர்களுக்காக வெண்திரையில் பார்த்து தொலைத்ததால் இனி ஹிந்திப்படமே தியேட்டரில் பார்ப்பதில்லை, என்றிருந்தேன்,  சரி ப்ரிண்ட் நன்றாய் இருக்கே!!! என்று, இந்த  படத்தை நம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பித்தேன்,  சும்மா சொல்லக்கூடாது, செம வேகம்,உண்மை ஒளி காட்சிக்கு காட்சி ,வசனத்துக்கு வசனம் வீசுகிறது. அஜய் தேவ்கனுக்கு பிவோட்டலான ரோல், கரணம் தப்பினால் அவர் தான் வில்லன் என்னும்படியான பாத்திரம், இந்த மனிதரின், ஓம்காரா, பகத்சிங், யூ மீ அவ்ர் ஹம்  பார்த்திருக்கிறேன். இதிலும் நன்றாக தன் நடிப்பு முத்திரையை  அழுத்தமாய் பதித்துள்ளார். காமெடிக்கென தனி ட்ராக் வைக்காமல் அதையும் தானே அடித்து ஆடியுள்ளார், இவரின் எடுப்பாக வரும் சஞ்சய் மிஸ்ராவுடன் இணைந்து கலக்குகிறார்.

பிற்பாதியில் சிறிது நாடகத்தனமிருந்தாலும், நம்ப முடிகிறது. வசனங்கள் செம கூர்மை, நட்ராஜ் சுபரமணியனின் கதையோடு ஒன்றிய  ஒளிப்பதிவு அட்டகாசம்,சுக்விந்தர் சிங்கின்  இசையும் அருமை, அதிகம் பாடல்களில்லை,, அப்படியே  வந்தாலும் லாஜிக்கலாய் வருகிறது, இந்த படத்திலும்  இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி சாதித்திருக்கிறார்.ய ஒர்த்திவாட்ச். 

ஜய் தேவ்கனின் குருவாய் வந்த பங்கஜ் கபூருக்கு தன் கலைவாழ்வில் சொல்லிக்கொள்ளக்கூடிய வேடம் இதில், முன்னாள் சம்பல் கொள்ளைக்காரன், ராஜா அரிச்சந்திரா நாடகம் பார்த்து ஆயுதம் கீழே போட்டு, சரணடைந்து, தண்டனை அனுபவித்தவர் இந்நாள் வரை சமூகவிழிப்புணர்வு தூண்டும்  ஹல்லாபோல் என்னும் வீதிநாடகங்கள் போட்டு வருகிறார்,  வயிற்றுக்காக  மெக்கானிக் ஷாப்பும் வைத்துள்ளார். [இந்த சித்து கதாபாத்திரம் 1989 ஆம் ஆண்டு அரசியல்வியாதிகளின் அடியாட்களால் சுட்டுகொல்லப்பட்ட சஃப்தார் ஆஷ்மியின் பிரதியேயாகும்.]

படத்தின் கதை:-
மசரெட்டி கார் வைத்திருக்கும் பாலிவுட்டின் உச்ச நடிகர் சமீர்கான் ஒரு கதாநாயகன் எப்படியெல்லாம் இருக்க கூடாதோ அப்படியெல்லாம் இருக்கிறார்.
1.காசு வாங்கிக்கொண்டு கண்ட ,கண்ட விளம்பரங்களிளும் நடிக்கிறார்.தன் அஷ்ஃபக் என்னும் இயற்பெயரை சமீர்கான் என மாற்றிக்கொள்கிறார்.
2.ஷூட்டிங் நேரத்திலேயே கேரவனில்,ஆடிஷன் என்று சொல்லி வாய்ப்பு கேட்டு வலிய வந்து விருந்தாகும் இளம் பெண்களை அனுபவிக்கிறார். அவர்களையே  புதிய படத்துக்கு நாயகியாய் பரிந்துரைக்கிறார்.
3.தன் கௌரவத்துக்கு பாதகம் வருமென்று எந்த உதவியும் யாருக்கும் செயவதில்லை. முடிந்தவரை கால்ஷீட் தொதப்புகிறார்.
4.தன்னை யாரும் முந்திவிடக்கூடாது என்று .சக நடிகர் நன்கு நடித்த காட்சிகளை கூசாமல் நீக்கச் சொல்லுகிறார்.
5.பழத்த பழமான இயக்குனர் ஒருவருக்கு நடிக்க கால்ஷீட் தருவதாய் நீண்டகாலம் அலையவிட்டு ஏமாற்றுகிறார்.
6.தன் கூத்துப்பட்டறை குரு  சித்து இவரிடம் ஓர் ஏழைப்பெண் கற்பழிக்கப்பட்ட சமூகபிரச்சனைக்கு தெருக்கூத்து நடத்த இரண்டு நாள் கால்ஷீட் கேட்கிறார். இவர் பழசை மறந்து !!!நன்றிகெட்டு வர முடியாது என்று விடுகிறார்.
7.காதல் மனைவி ஸ்னேகாவுக்கு [வித்யாபாலன்] துரோகம் செய்கிறார். மகனுக்கு தந்தையாய் எந்த கடமையையும் செய்வதில்லை.என அடுக்கலாம்.
8.எல்லாவற்றுக்கும் மேலாக அழகிய பெண் எழுத்தாளர் ஒருவரை அமர்த்தி, அண்டப்புழுகுகளுடன் சூப்பர் ஸ்டார் சமீர் கான் என்னும் சுயசரிதையும் வெளியிடுகிறார்.
=========0000==========
இவர் போடுவது சூப்பர் ஹீரோ வேடம்,ஆனால் பக்கா பயந்தாங்கொள்ளி என்பதாய் ஒரு சம்பவம் நடக்கிறது, [ஜெசிக்கா லால் சம்பவத்தை இதில் அழகாய் கோர்த்துள்ளனர்]
பாலிவுட்டின்  புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஒருவர் பெரிய மதுபான விருந்து கொடுக்க, அங்கே மிகப்பெரிய திரைப்பிரபலங்கள், சாமியார்கள்,அரசியல்வியாதிகள்  குழுமுகின்றனர், கிளப்பில் பார் மெய்டாக  நடனமாடும்    பெண்ணிடம் பெரிய அரசியல்வியாதியின்  மகனும்,  சாராய ஆலை அதிபர் மகனும் வம்பு செய்து படுக்கைக்கு அழைக்க, அவள் மறுத்து ஒதுங்கியவள், அங்கே விருந்தில் இருந்த சமீர்கானிடம் தங்கையுடன் சென்று ஆட்டொக்ராப் வாங்குகிறாள்,

மீர்கான் அவளுக்கு ஷிம்லா காட்டன் காலேஜ் நாடகத்தில் தான் முதல் பரிசு வழங்கியதை நினைவுகூர்ந்து கனிவாய் பேச, சகோதரிகள் மகிழ்கின்றனர், தங்கை  மறுநாள் பரிட்சை என்பதால் முதலில் வீட்டுக்கு போக, சமீர் அவளை சினிமாவில் முயற்சிக்க சொல்கிறார். பின்னர் கழிவறை சென்றவர், அங்கே இருவர் கோகெய்ன் உட்கொள்வதை பார்க்கிறார், 

லை கோதி ,வெளியேறியவர், அங்கே உதவி என்று சற்றுமுன் தன்னிடம் ஆட்டோக்ராஃப் வாங்கிய பெண்,கண்ணாடி சுவரை அடித்து இவரிடம் கெஞ்ச, வியர்க்கிறார். இவருக்கு கையறுநிலை, உதவிசெய்து பிரச்சனையில் சிக்க மனமில்லை, எனக்கென்ன?!!! என இவர் இருக்க, அவள் தலையில் குண்டடி பட்டு  ஹீரோ தன்னை காப்பாற்றுவான்,  என்ற நம்பிக்கை பொய்க்க துடிதுடித்து சாகிறாள். அந்த கோகெய்ன் போதை ஆசாமிகள் கொன்ற திமிருடன் கிளப்பிலிருந்து நெஞ்சை நிமிர்த்தி வெளியேற, சாமியார் உட்பட அத்தனை பிரமுகர்களும் அதை வேடிக்கை பார்க்கின்றனர்.
=========0000==========
மறுநாள் இந்த கொலை குறித்து ஸ்டுடியோவில்,முகேஷ் திவாரி [போக்கிரி இன்ஸ்பெக்டர்] மற்றும் ஜாக்கி ஷெராப் பேசும் நீண்ட வசனம் படு யதார்த்தம்,
சுருக்கமாக சொன்னால் ஜாக்கிஷெராஃப், கொலையை ஒருவன் பார்த்திருந்தாலும் இன்றைய சாக்கடை அரசியல் சமூகத்தில் வெளியில் சொல்லாமலிருப்பதே உத்தமம்,இல்லையென்றால் சாட்சி சொன்னவன் பெயர்  கெடும், குடும்பத்துக்கும் பாதுகாப்பில்லை,  என்கிறார். பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளை பற்றிய செய்தி என்றால் ஒப்புக்கு 2 நாள் பேசுவார்கள், அடுத்த நாளே அது கார்பெட்டுக்கு அடியில் போய்விடும், 

ல்மான்கானுக்கு சம்மன், அமீர்கானுக்கு பிடி வாரண்ட் என பிரபல நடிகர்களை தான் தொடர்ந்து உருவுவார்கள், அவர்கள் தான் ஈஸி டார்கெட் ,என்கிறார்.இதைக் கேட்டு இன்னும் குழம்பும் சமீர்கான்,

போலீஸ் விசாரணையிலும் நடிக்கிறார்,தனக்கு அந்த கொலையான பெண்ணை முன்னமே தெரியாது என்கிறார், அவளின் தங்கை வந்து அருகில் நிற்க பொய் சொல்லமுடியாமல் கண்ணாடியை அணிந்துகொள்கிறார். எத்தனையோ பேருக்கு ஆட்டோக்ராஃப் போடுவதால் தான் யாரின் முகத்தையும் பார்ப்பதில்லை, பேனா,பேப்பர், கைகளை மட்டுமே பார்ப்பேன் என்கிறார்,

செத்தவள் நொடியில் செத்தாள்,இவருக்கோ மனநிம்மதி போயிற்று,ஆறுதல் சொல்ல வீட்டில் கூட ஆளில்லை,மனைவி இவரின் பிறபெண்களுடனான உடல்தவறுகளால் நொறுங்கியவள், ஒப்புக்கு இவர் மகனுக்கு மட்டுமே அவள் தாயாய் இருக்க, இவரின் குருவை அவமதித்து துரோகமும் செய்தமையால் இவரின் அப்பா அம்மாவும் கோபித்துகொண்டு சொந்த ஊருக்கே சென்றவர்கள் இவரிடம் மட்டும் பேசுவதில்லை. அனாதையாய் விடப்படுகிறார். தான் தன் குடும்பத்தினரிடமிருந்தும் உண்மையான நண்பர்களிடமிருந்தும் எவ்வளவு அந்நியப்பட்டுவிட்டோம் என கதறுகிறார்.
காப்பாற்றாத குற்ற உணர்வு குறுகுறுக்க, இறந்த பெண்ணின் தங்கையை அழைத்து பணம் 10லட்சம் தந்து நடந்ததை மற, இதை கொண்டு நன்றாய் படி , மன அமைதி கொள், என்று அறிவுரை சொல்கிறார், அவள் பணத்தை ஏற்காமல் திருப்பிகொடுத்து உங்களால் முடிந்தால் இதைவைத்து மன அமைதி பெற பாருங்கள்.  என்கிறாள்.போனவள் தன் ஒரு கிட்னியை விற்று பணம் பெற்று பெரிய வக்கில் வைத்து,வழக்காடுகிறாள்,இருந்தும் சாட்சிகள் யாருமே இல்லை. அவர்கள் இருவர் தான் குற்றவாளி என தெரிந்தும் அவர்களை தண்டிக்கமுடியா நிலை!!!.

வரால் இப்போது நாடகத்தனமான, யதார்த்தமில்லாத, வாழ்வியலுக்கு ஒவ்வாத வசனங்களை  படப்பிடிப்பிலும், டப்பிங்கிலும் பேசமுடியவில்லை, நிறைய டேக்குகள் வாங்குகிறார். எல்லோரிடமும் எரிந்து விழுகிறார். இவருக்கு இந்த வருடமும் சிறந்த இளம் நடிகருக்கான விருது ஸ்ரீதேவி,போனிகபூரால் தரப்படுகிறது,அந்த விழாவில் இவர், தாம் பெற்ற விருது தனதல்ல, அந்த நடிகனுடையது என இவரின் பெரிய படத்தை சுட்டிக் காட்டுகிறார் . உண்மையில் தான் ஒரு போலி,சாதாரணன் என்கிறார்,கூட்டம் இதற்கும் கைதட்டுகிறது, விருதை வீட்டில் கொண்டு வைக்க வந்தவர், தான் அணிந்திருக்கும் முகமூடி மீது வெறுப்படைந்து எல்லா விருதுகளையும் கீழே தள்ளிவிட்டு கதறுகிறார்.

றுநாள் காலையில் போலீஸ் ஸ்டேஷன் சென்றவர், அந்த அரசியல்வியாதியின் மகன் மீதும், சாராய ஆலை மகனுக்கு எதிராயும்  சாட்சியம் சொல்கிறார். இவர் மீது வெளியே வருகையில் முட்டை அடிக்கப்படுகிறது, போலீசாரே இவரை சாட்சியத்தை திரும்ப பெறுமாறு வற்புறுத்துகின்றனர், அன்று இரவே இவரின் மகனின்  அறை தீவைக்கப்பட்டு மகனின் கையிலும் தீக்காயம்படுகிறது. 

ப்போது குடும்பத்தினருக்கு ஆபத்து,என்னும் பயம் ஆட்டிப்படைக்க நாளை காலை அடையாளம் காட்டபோகவேண்டும் என்ற நிலை, சாலையில் இவர் காரில்  போகையிலேயே மிரட்டல் அழைப்புவர, காரை,சிக்னல் விழுந்ததும் வீட்டுக்கு திருப்ப சொன்னவர், அங்கே சன்னல் வெளியே டூவிலரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தங்கையின் வாடியமுகத்தை பார்க்கிறார். சிக்னல் விழ, அவள் இவர் கார் முன்பே வண்டியை போட்டுக்கொண்டு சாலையிலேயே மயங்கி விழுகிறாள், அவளை மருத்துவமனையில் சேர்த்து அவள் கிட்னி தானம் செய்ததையும் அதனால் நோய்தொற்று ஆனதையும் தெரிந்து கொள்கிறார். நொறுங்கிப்போகிறார். இனி என்ன நேர்ந்தாலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தர வேண்டும் என முடிவு செய்தவர், போலீஸ் ஸ்டேஷன் சென்று அந்த இரண்டு கயவர்களையும் சரியாக அடையாளம் காட்டுகிறார்.

இனி என்ன ஆகும்?!!!.
இன்னும் 1.5 மணி நேரம் படம் இருக்கிறது, இனி மேல் வரும் சுவாரஸ்யங்களுக்காக படத்தின் முழுக்கதையை சொல்லவில்லை.
1,சமீர்கான் அந்த கயவர்களுக்கு தண்டனை வாங்கித்தந்தாரா?
2,தன் குரு சித்துவிடம் மன்னிப்பு கேட்டாரா?
3.தன் மனைவி,மகன் பெற்றோருடன் சேர்ந்தாரா?
போன்றவற்றை நெகிழ்ச்சியான காட்சிகளுடன் டிவிடியில் பாருங்கள்.ஒரு சோற்றுப்பதமாக சமீர்கான் , ஒரு கொலையாளியின்  அரசியல்வாதி அப்பன் வீட்டிற்குள் சென்று, அவன் கண்முன்பே,விலைஉயர்ந்த பெர்சிய கார்பெட்டில் மூத்திரம் போகும் காட்சி, யாரும் தவறவிடக்கூடாத காட்சி அது!!!! அதை ப்ரில்லியண்டாய் எடுத்திருப்பார்கள்.[“கார்பெட் பிஸ்ஸர்” என்னும் இதே போல ஒரு யுக்தியை கோயன் பிரதர்ஸின் |த பிக் லபோவ்ஸ்கி| என்னும் படத்திலும்  உபயோகித்திருப்பர்]


நிஜவாழ்வில் அந்த கிளப்பில் வைத்து கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட ஜெசிக்கா லாலின்,கோகெய்ன் கொலையாளிகளுக்கு ஒன்பது ஆண்டுகள் வழக்கு நடந்த பின்னர் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது ,உங்களுக்கு நினைவிருக்கலாம்!!!

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
=========0000==========

=========0000==========
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Rajkumar Santoshi
Produced by Samee Siddiqui
Written by Rajkumar Santoshi
Starring Ajay Devgan
Vidya Balan
Pankaj Kapoor
Music by Sukhwinder Singh
Cinematography Nataraja Subramanian
Editing by Steven Bernard
Release date(s) 11 January 2008
Running time 150 mins
Language Hindi
Budget 210,000,000 INR
=========0000==========
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (136) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)