பாரதிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பக்கிங்காம் கால்வாய் படகு பயணம் பற்றி கவிஞர் பாரதிதாசன்

அன்று பக்கிங்காம் தெற்கு கால்வாயில் மயிலை தண்ணீர்துறை சந்தை முதல் கடலூர் வரை சரக்கு தோணி போக்குவரத்து நடந்துள்ளது , மகாகவி பாரதியார் ரயிலில் ஃப்ரெஞ்சு காலனி பாண்டிச்சேரி தப்பிச் செல்ல அவர் பதிப்பித்த இந்தியா பத்திரிக்கையின் அச்சு எந்திரங்கள் தளவாடங்கள் இந்த நீர் வழியில் தான் சென்று அவரிடம் அடைந்துள்ளன,  

அறுபது வருடங்களுக்கு முன்பாக மயிலை தண்ணீர் துறையில் மாலை நான்கு மணிக்கு தோணி ஏறினால் அது விடிகாலை மகாபலிபுரம் சென்று சேர்ந்ததை இந்த பாரதிதாசன் கவிதை  மூலம் அறிய முடிகிறது.

புரட்சி கவிஞர் பாரதிதாசன் தான் நண்பர்களுடன் இரவில் மேற்கொண்ட இந்த பக்கிங்காம் கால்வாய்  படகு பயணம் பற்றி நீண்ட கவிதை எழுதியுள்ளதை வாசியுங்கள்.

மாவலிபுரச் செலவு (மகாபலிபுரச் செலவு )

1934 ஆம் ஆண்டு  பௌர்ணமி இரவில் தோழர் ப. சிவானந்தம், குருசாமி குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி. வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி.சிதம்பரனார்,எஸ்.வி.லிங்கம், துரைக்கண்ணன் இவர்களுடன் கவிஞர் பாரதிதாசன்  சென்னை மயிலையிலிருந்து மாலை 4 மணிக்குச் சென்னை பக்கிங்காம் கால்வாயில் தோணி ஏறி  மறுநாள் மாமல்லபுரம் சென்றார். 

ஆழமில்லாத கால்வாய் பகுதிகளில் அப்பெருந் தோணியை  கரையோரத்தில் கயிறு பற்றி ஒருவன் இழுத்துச் சென்றமையும், மற்றோர் ஆள் பின்புறமாக ஒரு நீளக் கழியால் தள்ளிச் சென்றமையும் கழிவிரக்கம் கொள்ளத்தக்க காட்சி, அதையும், ஆங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும் சில காட்சிகளையும் விளக்கி அப்போது எழுதப்பெற்றது இக்கவிதை.

சென்னையிலே ஒருவாய்க்கால் - புதுச்
   சேரிநகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் - எழில்
   அன்னம் மிதப்பது போலே.
என்னருந் தோழரும் நானும் - ஒன்றில்
   ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி - பின்பு
   தீவிரப் பட்டது வேகம்.

தெற்குத் திசையினை நோக்கி - நாங்கள்
   சென்றிடும் போது விசாலச்
சுற்றுப் புறத்தினில் எங்கும் - வெய்யில்
   தூவிடும் பொன்னொளி கண்டோம்
நெற்றி வளைத்து முகத்தை - நட்டு
   நீரினை நோக்கியே தாங்கள்
அற்புதங் கண்டு மகிழ்ந்தோம் - புனல்
   அத்தனையும்ஒளி வானம்.

சஞ்சீவி பர்வதச் சாரல் - என்று
   சாற்றும் சுவடி திறந்து
சஞ்சார வானிலும் எங்கள் - செவி
   தன்னிலும் நற்றமிழ் ஏற்றி
அஞ்சாறு பக்கம் முடித்தார் - மிக்க
   ஆசையினால் ஒரு தோழர்,
செஞ்சுடர் அச்சம யத்தில் - எம்மைச்
   செய்தது தான்மிக்க மோசம்

மிக்க முரண்கொண்ட மாடு - தன்
   மூக்குக் கயிற்றையும் மீறிப்
பக்க மிருந்திடும் சேற்றில் - ஓடிப்
   பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச்
சக்கரம் போலிருள் வானில் - முற்றும்
   சாய்ந்தது சூரிய வட்டம்!
புக்க பெருவெளி யெல்லாம் - இருள்
   போர்த்தது! போனது தோணி.

வெட்ட வெளியினில் நாங்கள் - எதிர்
   வேறொரு காட்சியும் கண்டோம்.
குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில்
   கூந்தல் சரிந்ததோர் ஈந்தும்
மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப
   வார்த்தைகள் பேசிடும் போது
கட்டுக் கடங்கா நகைப்கைப் - பனை
   கலகல வென்றுகொட் டிற்றே.

எட்டிய மட்டும் கிழக்குத் - திசை
   ஏற்றிய எங்கள் விழிக்குப்
பட்டது கொஞ்சம் வெளிச்சம் - அன்று
   பௌர்ணமி என்பதும் கண்டோம்.
வட்டக்குளிர்மதி எங்கே என்று
   வரவு நோக்கி யிருந்தோம்.
ஒட்டக மேல்அர சன்போல் - மதி
   ஓர்மரத் தண்டையில் தோன்றும்.

முத்துச் சுடர்முகம் ஏனோ - இன்று
   முற்றும் சிவந்தது சொல்வாய்.
இத்தனை கோபம் நிலாவே - உனக்கு
   ஏற்றியதார் என்று கேட்டோம்.
உத்தர மாக எம் நெஞ்சில் - மதி
   ஒன்று புகன்றது கண்டீர்.
சித்தம் துடித்தது நாங்கள் - பின்னால்
   திருப்பிப் பார்த்திட்ட போது,

தோணிக் கயிற்றினை ஓர் ஆள் - இரு
   தோள்கொண் டிழுப்பது கண்டோம்.
காணச் சகித்திட வில்லை - அவன்
   கரையொடு நடந்திடு கின்றான்.
கோணி முதுகினைக் கையால் - ஒரு
   கோல்நுனி யால்மலை போன்ற
தோணியை வேறொரு வன்தான் - தள்ளித்
   தொல்லை யுற்றான்பின்புறத்தில்.

இந்த உலகினில் யாரும் - நல்
   இன்ப மெனும்கரை யேறல்
சந்தத மும்தொழி லாளர் - புயம்
   தரும்து ணையன்றி வேறே
எந்த விதத்திலும் இல்லை - இதை
   இருப துதரம் சொன்னோம்.
சிந்தை களித்த நிலாவும் - முத்துண்ச்
   சிந்தொளி சிந்தி உயர்ந்தான்.

நீல உடையினைப் போர்த்தே - அங்கு
   நின்றிருந் தாள்உயர் விண்ணாள்
வாலிப வெண்மதி கண்டான் - முத்து
   மாலையைக் கையி லிழுத்து
நாலு புறத்திலும் சிந்தி - ஒளி
   நட்சத்திரக்குப்பை யாக்கிப்
பாலுடல் மறையக் காலை - நாங்கள்
   மாபலிபுரக்கரை சேர்ந்தோம்.

பக்கிங்காம் கால்வாய் பற்றி மேலும்

https://m.facebook.com/story.php?story_fbid=10160880279371340&id=750161339&mibextid=Nif5oz

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு அழகன் திரைப்படத்தில் கே.பாலசந்தர் செய்த மரியாதை

அழகன் [1991] திரைப் படத்தில் நடிகர்  மம்மூட்டி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு கவிதைத் தொகுப்பில் இருந்து குடும்ப விளக்கு என்னும் அத்தியாயத்தில் வரும் இந்த கவிதை வரிகளை அவர் படிக்கும் டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியர் கீதா முன்பாக சரளமாக பேசுவார்.

அது மிகவும் அருமையான காட்சி, இயக்குனர் கே.பாலசந்தர் கலை,மற்றும் இலக்கியத்தில் தான் சிலாகித்தவற்றை அழகாக  தன் படைப்புகளுக்குள்ளாக வைத்து மரியாதை செய்யும் கலை கைநிரம்பப் பெற்றவர். பாரதிதாசன் அவர்களின் நூற்றாண்டுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த ட்ரிப்யூட்டை வைத்தார். அவரின் கவிதைகளை ஆங்கிலக் கவிஞர் கீட்ஸின் [John Keats] கவிதைகளுக்கு நிகரானது என்னும் வசனமும் வைத்தார். http://en.wikipedia.org/wiki/John_Keats

இக்காட்சியில் மலையாள நடிகரான மம்மூட்டிக்கு அப்படி அழகாக லிப் சிங்க் ஒத்து வந்திருக்கும்.அவருக்கு படத்தில் பல காட்சிகளில் டைட் க்ளோஸப்பும் ”அனாயசமான” போன்ற கடினமான வசன உச்சரிப்புகளும் வசனமாகத் தரப்பட்டிருக்கும்,அதை மிக அழகாக பேசி ஸ்கோர் செய்திருப்பார் மம்மூக்கா.

படத்தில் அவர் பேசும் அந்த கவிதை வரிகள்  இங்கே

உவப்பின் நடுவிலே,"ஓர்
கசப்பான சேதியுண்டு கேட்பீர்"

"மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த

மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்;
அதுபோலத் தானேடி! அதனாலென்ன?
அறிவிப்பாய் இளமானே" என்றான் அன்பன்;
அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.

"இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?
ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.

"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;
எப்போது தமிழினுக்குக் கையா லான
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;
அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?"
 
கே.பாலசந்தரின் அழகன் [1991] திரைப்படத்துக்கு இசைஞானி தான் இசை அமைக்க வேண்டும் என்று பாலசந்தர் விரும்பினார், அவரை எப்படியாவது சமாதானம் செய்து விட அனந்து, வி.நடராஜன் [நடிகர்][பாலசந்தரின் ஆஸ்தான தயாரிப்பு நிர்வாகி] மூலமாக முயற்சிகள் நடந்தன, பின்னர் அண்ணாமலைப் படத்துக்கு ரஜினி, சுரேஷ் கிருஷ்ணா,மூலமாக திரும்பவும் முயற்சிகள் நடந்தன ,

இசையமைப்பாளர் கீரவாணி AKA மரகதமணி
ஆயினும் அது கைகூடவில்லை, அழகன் படத்தில் தெலுங்கு சினிமாவின் நிரூபனமான இசையமைப்பாளர் கீரவாணி மரகதமணி என்ற பெயரில் இசைவானில் ஒரு புதிய நம்பிக்கை நட்சத்திரம் என்று டைட்டில் கார்ட் போட்டு அறிமுகப்படுத்தப்பட்டார்,


 பின்னாளில் பாலசந்தரின் வானமே எல்லை ,ஜாதிமல்லி உள்ளிட்ட படங்களுக்கும் மரகதமணி இசையமைத்தார்.
அதே சமயத்தில் பாலசந்தரின் தயாரிப்பான அண்ணாமலைக்கு இசையமைப்பாளர் தேவா ஒப்பந்தம் செய்யப்பட்டு,பின்னர் கல்கி படத்துக்கும் தேவாவே இசையமைத்தார்.

புலவர்.புலமைப்பித்தன்
ஒருவேளை அழகன் படத்தில் இசைஞானி கடைசி நேரத்தில் சம்மதிக்கூடும் என இயக்குனர் நினைத்ததால் இதில் கவிஞர் வைரமுத்து ஒப்பந்தம் செய்யப்படவில்லை,

அப்போது இசைஞானியுடன் அதிக படங்கள் பணியாற்றிய புலவர்.புலமைப்பித்தன் தான் அழகன் படத்தின் எல்லாப் பாடல்களையும் சிறப்புற இயற்றினார்.

 இதில் அகரமுதல எழுத்தெல்லாம் என்று கவிதாலயாவின் பெயர் போடுகையில் வரும் திருக்குறள் வடிவத்தை , சிந்து பைரவி[1985] படத்துக்கு என்று இசைஞானி பாடியதை மாற்றாமல் அப்படியே வைத்திருப்பார்,

பார்த்தாலே பரவசம்,டூயட் படங்களிலும் அதே இசைஞானியின் குரல் தான் முதன்மையாக ஒலித்தது, அது பாலசந்தரின் கடைசி படமான பொய் வரை தொடர்ந்தது.

பாலசந்தரின் 70களின் படங்கள் துவங்கி கல்யாண அகதிகள்  வரை எம் எஸ்வி அவர்களின் குரலில் வரும் குறள் தான் முதன்மையாக ஒலித்தது.

இசைஞானி நெற்றிக்கண் [1981] படத்தின் போதே கவிதாலயத்துடன் இணைந்துவிட்டாலும் அதில் பயன் படுத்தப்பட்ட அகரமுதல் எழுத்தெல்லாம் குறள் வடிவம் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழுவினரின் குரலில் ஒலிக்கிறது,அதை அடுத்த புதுக்கவிதை [1982] படத்திலும்  சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழுவினரின் குரலில் தான் ஒலிக்கிறது,


பாரதி தாசன் வரிகளுக்கு தன் படைப்பில் மரியாதை செய்ய, பாரதிதாசனின் மானசீக சீடரான புலமைப்பித்தனை வைத்தே சாதி மல்லை பூச்சரமே பாடலை இயற்ற வைத்தார். அப்பாடல் வரிகளை கவனியுங்கள்.

சாதிமல்லி பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையின்னா ஆசையடி
அவ்வளவு ஆசையடி
என்னன்னு முன்னேவந்து
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம்
இப்போது மறப்போம்
கன்னித்தமிழ் தொண்டாற்று
அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு
சாதிமல்லிப் பூச்சரமே ...

எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல
ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும்
ஒன்றுதான்
கடுகுபோல் உன்மனம் இருக்கக்கூடாது
கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப் போல் எல்லோரும் என எண்ணோணும்
அதில் இன்பத்தைத் தேடோணும்
சாதிமல்லி பூச்சரமே

உலகமெல்லாம் உண்ணும்போது
நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது
நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு
சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப் பாட்டன்
சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ்நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

என்று முடித்திருப்பார்.

இக்காட்சியில் உதவி இயக்குனர் சரவணன் என்ற சரண் [அமர்க்களம்],மம்மூக்காவின் அருகே நீல அட்டை அணிந்து அமர்ந்திருப்பார் பாதி கையை மட்டும் தூக்குவார், ஏனென்றால் அவர் பாரதி தாசனின் பாதி கவிதைத் தொகுப்பை தான் படித்திருப்பார்.

இப்படத்தில் அஷோக் லோகநாத் என்பவரும் உதவி இயக்குனர்,அவர் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் அவர்களின் மகனுமாவார்.அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என தெரியவில்லை.

கலை அழியாமல் பாதுக்காக்க வேண்டுமென்றால் முன்னோரின் படைப்புகள் அழியாவண்ணம் அவற்றை இது போல நவீன படைப்புகளுக்குள்ளே வைத்து  மரியாதை செய்ய வேண்டும் என்று சொல்லியும் இயங்கியும் வந்தவர் இயக்குனர் கே.பாலசந்தர்.

அந்த அழகின் சிரிப்பு கவிதை வரிகளின் வீடியோ இங்கே
https://www.youtube.com/watch?v=9G8e0uaWzLw
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) ஆஸ்கர் (136) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)