பாபி[1973]செம்பருத்தி[1992] திரைப்படங்களின் ஒற்றுமைகள்


பாபி[1973] என்னும் ட்ரெண்ட் செட்டர் படத்துக்கு கோவைத்தம்பியோ, ஆர்.கே.செல்வமணியோ  ட்ரிப்யூட் செய்தார்களா? அல்லது அப்பட்டமாக காப்பியடித்தார்களா? அல்லது முறையாக உரிமை வாங்கி ரீமேக் செய்தனரா? எனத் தெரியாது,

அப்படம் வந்து 19 வருடம் கழித்து வெளியான செம்பருத்தி படத்திலும் அதே கதை,அதே மீனவர் குப்பம் செட், அதே மலைக்கும் மடுவுக்குமான  அந்தஸ்தையும் ,சாதி,மத ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட இளஞ்சோடிகளின் காதல் கதை, பாபியைப் போன்றே செம கல்லாக் கட்டிய படம் இது.

பாபி படத்துக்கு திரைக்கதை எழுதிய கே.ஏ.அப்பாஸும் திறம்பட மிக மிக ரிச் அண்ட் ஸ்டைலாக இயக்கிய ராஜ்கபூரும் நினைத்திருப்பாரா? இப்படம் அடுத்தடுத்து எத்தனையோ ஏழைப்பணக்கார காதல் கதைகளை தோற்றுவிக்கப்போகிறது என்று?!!!

பாபி படம் மும்பை மற்றும் கோவா கடற்கரைப் பகுதியில் படமாக்கப்பட்டிருக்கும்,செம்பருத்தி விசாகப்பட்டினத்தில், அதிலும் ரிஷிகபூருக்கு ஒரு முறைப்பெண்ணை கட்டாயப்படுத்தி மணம் முடிக்கப் பார்ப்பார்கள், இதிலும் பிரஷாந்துக்கு வாசவி முறைப் பெண்ணாக இருப்பார், அவருடன் பட்டுப்பூவே பாடல் உண்டு. பிரஷாந்தின் மாமாவாக நாசர் இதில் வில்லன் கூடவே மன்சூரும்,http://www.youtube.com/watch?v=1DIfAjseARw

பாபியில் ஜூட்டு போலே கவ்வா காத்தே[பொய் சொன்னால் காக்காய் கொத்தும்] என்னும் மீனவர் குப்பத்தின் பிண்ணனியில் திருமண நிச்சயப்பாடலை இங்கே பாருங்கள்
 http://www.youtube.com/watch?v=KfTC5cJpmwA,

அதில் நடிகை டிம்பிள் கபாடியாவின் அலங்காரத்தையும் ரோஜாவின் செம்பருத்தி பூவு பாடலின்  அலங்காரத்தையும் பாருங்கள்,எத்தனை ஒற்றுமை?ஒரே வித்தியாசம் பாபியில் அவர் கருப்பு டூபீஸ்,ரோஜாவுக்கு செம்பருத்தியில் வெள்ளை டூபீஸ் அவ்வளவு தான். http://www.youtube.com/watch?v=JBZm4oMhjO8

 பாபி படத்தின் ரிஷி கபூரின் பெயரும்,ராஜா,செம்பருத்தியில் பிரஷாந்தின் பெயரும் ராஜா தான்,செம்பருத்தி படத்தில் வேலைக்காரி ரோஜாவின் உடைகள்,1973ல் டிம்பிள் கபாடியாவின் உடைகளை பின்பற்றியே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இரு படங்களிலும் பாட்டிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும்,பாபி படத்தில் மூத்த நடிகை Durga Khote ப்ரிஹான்ஸாவாக நடித்திருப்பார்,இங்கே பானுமதி ராமக்ரிஷ்ணா.

படத்தில் ப்ரேம்நாத் செய்த டிம்பிளின் குடிகார அப்பா கதாபாத்திரத்தை,இங்கே குடிகார அண்ணன் கதாபாத்திரமாக மாற்றி ராதாரவி செய்தார்,இங்கே மன்சூரலிகான் போல அங்கே யாரும் வில்லன் இல்லை,ஆனால் அதற்குப் பதிலாக பணவெறியும் சாதி வெறியும் கொண்ட ரிஷிகபூரின் அப்பா கதாபாத்திரம் உண்டு,அதை பழம்பெரும் நடிகர் ப்ரான் செய்திருப்பார்,

போர்சுகீசிய கிருத்துவ மதத்தைச் சேர்ந்த மீனவத் தந்தையான ஜாக் பிரிகேன்சா பாத்திரத்தில் ப்ரேம்நாத் ப்ரானுக்கு ஈடு கொடுத்து மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தாருக்கும் அந்தஸ்து மோதல் முற்றி மகள் டிம்பிளை கோவாவுக்கு தன் அம்மா வீட்டுக்கு பேக்கப் செய்து விடுவார் ப்ரேம்நாத்,

இதே செக்மெண்டை ஒரு சாயலில் தழுவி இயக்குனர் ஷங்கரும் தன் காதலன் படத்தின் ஆந்திரா செக்மெண்டை எடுத்திருப்பார்.பாபி படத்திலும் நாயகிக்கு பாட்டி உண்டு, காதலனில் மனோரமா பாட்டியாக வருவார்,பாபியிலும் நாயகியை கோவாவில் கொண்டு அப்பா ப்ரேம்நாத் சிறை வைத்துவிடுவார்,காதலனிலும் அது உண்டு,இந்த மூன்று படங்களிலுமே சின்னஞ்சிறுசுகளின் காதலுக்கு பாட்டிகள் உதவுவார்கள்.

பாபி படத்தில் நாயகியின் பாட்டி ரிஷிகபூரின் வீட்டில் ஆயாவாக இருந்தால்,செம்பருத்தி படத்தில் பாட்டி பானுமதிக்கு ரோஜா வேலைக்காரியாக வருவார்.[எப்படியெல்லாம் கதையை மிரர் செய்கின்றனர் பாருங்கள்?]

இரண்டு படங்களிலுமே பாஸிடிவ் எண்டிங் தான்,அதுவும் க்ளைமேக்ஸ் கூட நீருக்குள் தான்,பாபியில் நீர்வீழ்ச்சியில் என்றால்,செம்பருத்தியில் நடுக்கடலுக்குள் ஸ்டீமருக்குள்.

இப்படித்தான் நன்றாக ரீல் அறுகும் வரை ஓடிய ட்ரெண்ட் செட்டர் படங்களில் இருந்து புதிது புதிதாக நம் உதவி இயக்குனர்கள் சீன் சொல்லுகிறார்கள்,இயக்குனர்கள் அவற்றை தம் பெயரில் படைக்கிறார்கள், இவர்கள் ஒரிஜினலுக்கு மரியாதை செய்யும் வரை மோசமில்லை, ஒரிஜினலை அசிங்கப்படுத்துவது போல படைப்புகள் வரும் போது தான் உண்மையான கலாரசிகர்களுக்கு பற்றிக்கொண்டு வருகிறது.

பாபி படத்தில் இருந்து செம்பருத்தி படத்தில் செய்த முக்கியமான மாற்றத்தில் முதன்மையானது இசைதான்,பாபி படத்தின்  சாயல் கொஞ்சமும் இல்லாது இசைஞானி வழக்கம் போல  வள்ளலாக எட்டுப்பாடல்களை வாரித் தந்திருப்பார்.எல்லாமே புத்தம் புதிய முயற்சிகள்,இன்று கேட்டாலும் ஃப்ரெஷ்ஷான துள்ளலான பாடல்கள் அவை.

அதில் மிகச்சிறப்பாக கடலுல எழும்புற பாடலை இசைஞானி துவக்க, ஹனீஃபா அதை மேட்ச் செய்வது போல கடலிலே தனிமையில் போனாலும் என்று பிரமாதப்படுத்தியிருப்பார்,இது தவிர சாக்லேட் நம்பர்களான நிலாக்காயும் நேரம்,சலக்கு சலக்குச் சேல,பட்டுப்பூவே,ஹைக்கூ நம்பரான வஞ்சிரம் வவ்வாலு,பானுமதி பாடி முடிக்கும் செம்பருத்திப் பூவு என அத்தனை பாடலுமே ஆல்டைம் ஃபேவரிட் வகை. மங்காப்புகழைக் கொண்டிருப்பவை,பாபி படத்தின் லஷ்மிகாந்த்  ப்யாரிலால் இசையமைத்த பாடல்களும் அப்படியே.

இப்போது ஆள் ஆளுக்கு இட்லி,வடை,போண்டா என்று தமிழ் சினிமாவில் உவமை சொல்லுவது தானே ஃபேஷன்?, எனவே நானும் ட்ரெண்ட் செட்டர் படங்கள் கூட புரை மோர் போலத்தான்,அதைக்கொண்டு தான் புதிதாக காய்ச்சி ஆறிய பாலை உறை குத்துகின்றனர்.என்னும் உவமையைச் சொல்லி முத்தாய்ப்பாக முடிக்கிறேன்.

குல மகளிர் வழுக்கி விழுந்ததைச் சொன்ன மூன்று சிறந்த படைப்புகள்

”எங்கள் ஊர்” சிறுகதை படித்து முடித்த உடன் எனக்கு இதே போன்ற சமகால படைப்புகளான அரங்கேற்றம்[1973] படமும், ஜன ஆரண்யா என்கிற தி மிடில் மேன் [1976] பெங்காலி திரைப்படமும் மனதில் வந்து போனது, அப்படைப்புகளை மீண்டும் அசைபோட வைத்தது, ஜி,நாகராஜன், கே.பாலச்சந்தர், சத்யஜித் ரே என்னும் மேதைகள் ஒருபோல சிந்தித்து சிருஷ்டித்த கருப்பொருள் தான் குலமகளிர் தடுமாற்றம்.

ஜி.நாகராஜனின் ”எங்கள் ஊர்” சிறுகதை 1968ஆம் வருடம் கண்ணதாசன் இதழில் வெளியானது,இது மீள்பதிப்பாக ஜி.நாகராஜனின் ஆக்கங்கள் என்னும் தொகுப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது,பக்கம் எண் 292-298வரை , இச்சிறுகதை குலப் பெண் ஒருத்தி வறுமையினால் பாலியல் தொழிலில் விருப்பமின்றி விழுவதை மிகுந்த யதார்த்த தொனியில் பேசுகிறது.

வேதாரண்யம் அருகே அடர்ந்த மூங்கில் காடும் சில சிமெண்ட் சாலையும் பேருந்தும் வந்து செல்லுகிற  ஒரு சிற்றூர். அங்கே பலான தொழில் செய்கிற சொக்கியிடம் மிகுந்த வறுமைச் சூழலாலும்,வைதீகம் பிழைப்பாகக் கொண்ட கணவனின் தீராப்பிணியாலும், இங்கே இருந்தால் மகளுக்கு மூன்று வேளை சாப்பாட்டுக்கு வழி இருக்குமே என்று, தன் மகள் அரவிந்தாவை தொழிலில் கொண்டு வந்து விட்டு, அவ்வபோது வந்து பார்த்து ,சொக்கியிடம் பணம் வாங்கிச் செல்லும் பிராமணப் பெண் லட்சுமி,

வீட்டில் போஷாக்கு குறைபாடால் தேவாங்கைப் போலிருக்கும் அரவிந்தாவின் தம்பிக்கு வெள்ளெழுத்தும் வந்து,பார்வையும் பறிபோன நிலை, அடுத்து தங்கை வேறு வயதுக்கு வந்து விடுவேன் என பயமுறுத்துகிறாள். இத்தனைக்கிடையிலும் அரவிந்தாவுக்கு அப்பாவுக்கு குணமாகி தான் மீண்டும் குலமகளிராகிவிடுவோம் என்னும் நப்பாசையும் இருக்கிறது,

அது புரிந்த லட்சுமி அம்மாளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது, என மிக வீர்யமான சிறுகதை ”எங்கள் ஊர்” இதே போன்ற சிறப்பான 35 சிறுகதைகளையும்,2 குறு நாவல்களையும்,சில தமிழ் ஆங்கில கட்டுரைகள்,கடிதங்களைக் கொண்டிருக்கும் இத்தொகுப்பின் விலை ரூ=450. அகநாழிகை புத்தகநிலையத்தில் கிடைக்கும்.
அரங்கேற்றம்:-
==============
பாலச்சந்தரின் இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வந்த படமான அரங்கேற்றம் [1973] அவரின் புதுமையான படங்களுக்கு அச்சாரமாக விளங்கிற்று, ஒரு சிறு கிராமத்தின் ஆச்சாரமான வைதிக பிராமணக் குடும்பத்தின் மூத்த மகள் லலிதாவாக பிரமிளா நடித்திருந்தார், அவரின் வறட்டுப் பிடிவாதமான சொற்ப வருமானம் ஈட்டும் தந்தையாக எஸ்.வி.சுப்பையா,  9 குழந்தைகளை வரிசையாகப் பெற்ற தாய் எம்.என் .ராஜம். வீட்டில் நன்றாகப் படிக்கும்  சுயநலமி ஆண் பிள்ளையான கமல்ஹாசன்,என மிக அருமையான படம்,

தம்பி கமல்ஹாசன் ப்ளஸ் 2 பரீட்சையில் மிகச் சிறப்பான மதிப்பெண்களுடன் தேறிவிடுகிறார்,அதற்கு சிபாரிசு செய்ய வேண்டி வற்புறுத்திக் கெஞ்சிய தம்பிக்காக சென்னை வருகிறார் லலிதா,அங்கே கல்வித்துறை மேலதிகாரி போல வேடமிட்டு, தன்னுடைய இச்சைக்கு இணங்கினால்,மருத்துவ சீட் உடனே கிடைக்கும் என ஆசைகாட்டி,அவனால் வன்புணர்வு செய்யப்பட்டு வறுமைச் சூழலில் அதை ஏற்றும் கொண்டு சென்னைக்கே நிரந்தரமாக வந்தவள் அங்கேயே பணியில் தொடர்கிறாள்,

இவள் இழுக்க இழுக்க சுமையும் அதிகமாக ஏற்றப்பட, அதை சமாளிக்க பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள், தன் ஜாகையை ஹைதராபாதுக்கும் மாற்றுகிறாள், தம்பி கமல்ஹாசனை ஒரு டாக்டர் ஆக்குகிறாள். எல்லாத் தங்கைகளுக்கும் நல்ல மணவாழ்வை அமைத்துத் தருகிறாள்.ஆனால் அவளின் முடிவு என்ன ஆகிறது? ,வாங்கித் தின்ற கையும் வாயும்,அவள் பாலியல் தொழிலாளி எனத் தெரிய வருகையில் அந்தக் காசிலா உடல் வளர்த்தோம்? என்று யாருமே உயிரை மாய்த்துக்கொள்வதில்லை, மாறாக அம்பாள் எனப் போற்றிய அவளைத்தான்  ஒதுக்கி வைக்கின்றனர்.

அதே ஊரின் குடியானவரான செந்தாமரையும்,அவரின் ராணுவ வீரனான மகன் சிவகுமாரும் மிகுந்த புரட்சி எண்ணம் கொண்ட நிஜ பெரிய மனிதர்கள், செந்தாமரை  லலிதாவை அப்படியே லலிதாவை மருமகளாக ஏற்றுக்கொள்ள முன்வருவார். மிக அருமையான படம்,கே.பாலச்சந்தரின் புனர் ஜென்மம் இப்படம் மூலம் துவங்கிற்று,அவர் அதன் பின் எடுத்த பெண்ணியம் பேசும் சோதனை முயற்சிகளுக்கு பாலமாகவும் அமைந்தது இப்படம்.

கற்பு, தாலி, பதி பக்தி,பதி விரதை,பெண் கன்னி கழிந்தால் அது கணவனோடு மட்டும்   , ஆனால் ஆண் ஊர் மேய்ந்து விட்டு வந்தால் தவறில்லை,அவன் 15 ஆவது ரீலில் திருந்தி மனைவியிடம் சேர்ந்து விடுவான்.

இது போன்ற பொது புத்தி கொண்ட  ஆணாதிக்க மனப்பாங்கு கொண்ட இயக்குனர்களால்,உருவாக்கப்பட்டது தான் தமிழ் சினிமாவின் கற்பு நெறி, யதார்த்தத்தில் அப்படியா இருக்கிறது? இதை 1960கள் துவங்கி இன்று வரை வடிவம் கெடாமல் தமிழ் சினிமாவில் பல படைப்புகள் மூலம் செவ்வன நிறைவேற்றி வருகிறார்கள்.

ஆனால் நவீன இலக்கியம் நேர்மையாக பல படைப்புகளை தந்துள்ளது, குறிப்பாக ஜி.நாகராஜனின் படைப்புகள், சமுதாயத்தின் இரட்டைவேடத்தை, முரண்பாடுகளை அவர் படைப்புகள் மூலம் துகிலுரித்திருக்கிறார். 

அரங்கேற்றம் படத்தில் கே.பாலச்சந்தர் லலிதா கதா பாத்திரத்தை மிக அருமையாக செதுக்கியிருந்தார். அவர் கடைசியில் சிவக்குமார், அவளை மணமுடிப்பதாக மாற்றியிருந்திருக்கலாம்.ஆனால் அவர் லலிதாவை பைத்தியமாக்கினார்.ஒருக்கால் அவருக்கு அப்போதைய க்ளிஷேவாக இருந்த சுப முடிவு மீது ஒவ்வாமை இருந்திருக்கலாம். [இதை அவரது இன்ன பிற படைப்புகளில் கவனித்தால் விளங்கிக்கொள்ள முடியும்] 

அவரது சொந்தப் தயாரிப்பில் அவர் யாருக்கும் பயந்திருக்கத் தேவையில்லை, ஆனால் அவர் அதைச் செய்யவில்லை, ஆனால் அவர் படைத்த செந்தாமரை கதாபாத்திரமும், அவரது மகன் சிவகுமார் கதாபாத்திரமும் மிகச் சிறந்தவை,மிகவும் புரட்சிகரமானவை [மேலும் சிவகுமார் தன் ராணுவ பணி விடுமுறையில் ஹைதராபாதில் தன் இச்சை தணிக்க பிரமீளா வீட்டுக்குப் போவார்,] அதிலேயே தமிழ் சினிமாவின் பிரதான நாயக பிம்பத்தை [யோக்கிய சிகாமனி] தகர்த்திருப்பார். ப்ரி மேரிடல் செக்ஸை தைரியமாக திரையில் காண்பித்தவர் கே.பி தான்.
  
ஜன ஆரண்யா:-
==============
அடுத்த படமான ஜன ஆரண்யா என்னும் தி மிடில் மேன் சத்யஜித் ரே வின் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளியான நியோ ரியலிச பாணி வங்காள மொழிப்படம்,

கல்லூரிப் படிப்பை முடித்து பிஆர் ஓ வாக அவதாரம் எடுத்திருக்கும் சோம்நாத்துக்கு அவன் காலூன்ற மாதா மாதம் நல்ல வருமானம் தருகிற வியாபார ஒப்பந்தம் தேவை,அதற்கு போட்டிக்கா பஞ்சம்?. அத்தனையையும் சமாளித்து அந்த பர்சேஸ்அதிகாரியை நெருங்கி விடுகிறான்,ஆனால் அவர் ஒப்புதல் கடிதம் தருவதாயில்லை,அவர் சமீபமாக குடிப்பதில்லை,ஆதலால் மது விருந்து தர முடியாது,அவர் உடல் நலன் கருதி சமீபமாக புலால் உண்பதில்லை, ஆகையால் எந்த உயர்தர விருந்து தந்தாலும் அவர் வருவதாயில்லை.

இவருக்கு என்ன தந்தால் மசிவார் ? எனக் கண்டறிய பழம் தின்று கொட்டை போட்ட மிட்டர் என்னும் பிஆர் ஓ வை அமர்த்திக் கண்டறிகிறான் சோம்நாத், அந்த அதிகாரியின் பலவீனம் அழகிய இளம்பெண்கள்.

அவருக்கு விலைமங்கையை கூட்டித்தர மனமின்றி பின்வாங்க நினைக்கிறான் சோம்நாத், ஆனால் அவன் மிட்டருக்கு பெருந்தொகையை கமிஷனாக தரவேண்டியிருக்கிறது, முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என தனக்குள் கேட்டவன்.மிட்டருடன் இணைந்து பாலியல் தொழிலாளியை பிக்கப் செய்து வர பாலியல் தொழிலாளி-1ன் வீட்டிற்குச் செல்கிறான்,அங்கே அவளுக்கு அன்று பார்த்து மேலுக்கு சுகமில்லை,மேலும் அவளுக்கு மூடும் இல்லை,மிகவும் கெஞ்சி சமாதானம் செய்து,மேலே டிப்ஸ் எல்லாம் தருவதாகச் சொல்லி அவளைக் கிளப்பும் நேரம் அவள் கணவன் குடித்து விட்டு வந்து அவளிடம் சண்டை போட்டு,இவர்களையும் ஏசி விரட்டுகிறான்.

இப்போது வேறொரு பாலியல் தொழிலாளியை பிக்கப் செய்து வர பாலியல் தொழிலாளி-2 ன் வீட்டிற்குச் செல்கிறான்,அங்கே அவளுக்கு ஏற்கனவே அறைக்குள் சம்போகம் நடந்து கொண்டிருக்கிறது,அவளின் அம்மா வெளியே இவர்களிடம் மிகுந்த கிராக்கி செய்கிறாள், மிகுந்த செலவு செய்து அறை அலங்காரங்களை மாற்றி அமைத்ததால் பழைய ரேட் கட்டுப்படியாகாது என்கிறாள், மேலும் பாப்பாவை இவர்களுடன் அனுப்ப இயலாது,என கறாராகச் சொல்கிறாள்.இங்கேயே ஏசி கூட உண்டு,ஆகவே உங்கள் கஸ்டமரை இங்கே வரவழையுங்கள் என்கிறாள்,விலையுயர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வேறு இவர்களை முறைக்க இடத்தை காலி செய்கின்றனர்.மணி 8க்குள் அங்கே அறை வாசலில் பெண்ணை நிறுத்தி அழைப்பு மணியை அடிப்பதாக அந்த அதிகாரிக்கு வாக்கு கொடுத்து அவர் அங்கே காத்திருக்கிறார்.

இப்போது மிட்டர் சோம்நாத்தை தெருமுக்கு தரகனிடம் கூட்டிச் செல்கிறான், அவன் சோம்நாத்திடம் சிகரட் கேட்டு வாங்கி பத்தவும் வைத்துக்கொள்கிறான், சோம்நாத் கூசிப்போகிறான். காந்தியவாதியான அப்பாவுக்குப் பிறந்த தான் வாழ்வில் ஒரு முன்னேற்ற பாதையை தேர்ந்தெடுக்க எத்தனை குறுக்கு வழிகளை நாடவேண்டியிருக்கிறது என குமுறுகிறான்.

அப்போது அங்கே அந்த தரகன் சொன்ன தொழிலுக்குப் புதிதான நங்கை வந்து விட அவளின் முகத்தைக் கூட பார்க்காமல்,டாக்ஸி பிடித்து அவளை பின்னால் ஏற்றி,டிரைவர் சீட்டின் அருகே அமர்ந்தவன்,கண்ணாடியில் அவளைப் பார்த்து அதிர்கிறான்.அவளும் தான்,ஆனால் ,சுதாரிக்கிறாள்,அவள் சோம்நாத்தின் உயிர்நண்பன் சுகுமாரின் தங்கை காவ்னா,ஆனால் அவள் தன்னை ஜூதிகா என்கிறாள்.பணத்துக்காக இப்படியா கேவலமாக இறங்க வேண்டும் என்கிறான்,அவள்,பிச்சையெடுப்பதை விட இது கௌரவம் தான் என்கிறாள்.

அறை வாசலில் நின்று கத்தையாக பணம் அவளிடம் தந்து,நீ வீட்டுக்கு போய்விடு என்கிறான் ,அவள் இன்று நீ தருவாய்,நாளை யார் தருவார் என்பது போல முறைத்தவள் அழைப்பு மணியை அழுத்த,அதிகாரி அவளை உள்ளே இழுத்தவர்,இவனை ரிசப்ஷனில் காத்திருந்து சிபாரிசு கடிதம் வாங்கிச் செல்லுமாறு சொல்கிறார்,அன்று அவனின் நிலையான வருமானத்துக்கான கெமிக்கல் சப்ளை காண்ட்ராக்ட் கிடைத்தது, ஆனால் அதை அனுபவிக்க விடாமல் அவனின் மிடில் க்ளாஸ் மனசாட்சி உறுத்தத் துவங்கி விட்டது என்று முடித்திருப்பார் ரே. ஜன ஆரண்யா பற்றி மேலும் படிக்க http://geethappriyan.blogspot.ae/2013/11/blog-post.html

குலமகளிர் வாழ்வில் தடுமாறும் தருணத்தை நிதர்சனமாகச் சொல்லும் படைப்புகளை என்னில் தோன்றியவாறு இப்படி வரிசைப் படுத்தியுள்ளேன். நேரம் வாய்க்கையில் மூன்று படைப்புகளையும் அவசியம் படிக்கவும் பார்க்கவும் இலக்கிய,உலக சினிமா ரசிகர்களை வேண்டுகிறேன்.

மைக்கேல் மதன காமராஜன் [1990][michael madhana kamarajan]பெருமைமிகு தமிழ் சினிமா !!!


பெருமைமிகு தமிழ் சினிமா வரலாற்றில் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்துக்கு மிக முக்கியமான பங்குண்டு.இப்படம் கொண்டிருக்கும் சிறப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல,அவற்றை பட்டியல் இட்டு முடிப்பது எளிதும் அல்ல.நான் எத்தனையோ முறை இப்படத்தை 24 வருடங்களில் பல வயதுகளில் அதன் கண்ணோட்டத்தில் பார்த்திருந்தாலும் ஒவ்வொரு முறை பார்க்கையிலும் எனக்கு அது ஃப்ரெஷ்ஷாக இருக்கும், ஏதாவது புதிதாக புலப்படும்,அவ்வப்போது அவற்றை இங்கே அப்டேட் செய்ய முயற்சிக்கிறேன்.

இந்திய சினிமாவில் மைக்கேல் மதனகாமராஜன்[1990] படத்தில் தான் முதன் முதலாக ஆப்பிள் லேப்டாப் காட்டப்பட்டது என்னும் பெருமையையும் கமல்ஹாசன் தான் தக்க வைத்திருக்கிறார் இம்மாடல் 1989 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ரிலீசாகியுள்ளது,


பென்ஸ் காரில் நாகேஷுடன் தன் மதன் மெஹல் [அப்படித்தான் ஸ்டைலாக சொல்லுவார்]செல்லும் போது அவினாஷி தன் அப்பாவிடம் கையாடிய 25 லட்சத்தை இதில் தான் கணக்குப் பார்த்து அவருக்கு கிடுக்கிப் பிடி போடுவார். 

கஜினி படத்தில் சூர்யா செய்த பிஸ்னஸ் மேன் வேடம் எல்லாம் மதனகோபால் கதாபாத்திரத்துக்கு முன் ஜுஜூபி என்றால் மிகையில்லை,சிறு குறிப்பு:- ஜுஜூபி என்பது ஒரு பழமாம்,அது இலந்தைப் பழம் போல இருக்கிறது, http://en.wikipedia.org/wiki/Jujube


இன்று வரை காமெடி ஜானரில் தமிழில் இப்படி ஒரு தரமான படம் வரவில்லை என்று அடித்துச் சொல்லலாம்,செம படம் இது, எத்தனை வெரைட்டியான  கதாபாத்திரங்கள் செய்திருப்பார் கமல்ஹாசன், ஒவ்வொருவருக்கும் டூயட் உண்டு [மைக்கேல் தவிர்த்து],குறிப்பாக ஊர்வசியுடன் கமல் பாடும் சுந்தரி நீயும் சுந்தரி ஞானும் பாடல் இந்திய சினிமாவில் முதன் முதலாக படமாக்கப்பட்ட முழுநீள ஸ்லோமோஷன்  பாடலாகும், இதற்கு நேர்மாறாக மிக வேகமான பாணியில் கதைகேளு,கதைகேளு என்னும் ஐந்தே நிமிட ஆரம்பப் பாடலில் நால்வர் பிறப்பும் சகோதரர்களின் பிரிவும் விவரிக்கப் பட்டிருக்கும்,

அப்பாடலில் ஃப்ளாஷ்பேக் காட்சியை கதைகேளு பாடலுக்குள் நறுக்கென்ற பஞ்சு அருணாச்சலத்தின் வரிகளுக்குள் அடக்க வேண்டி,ஃபாஸ்ட் ஃபார்வர்ட் யுத்தியிலும் [16 frame per second] ,கருப்பு வெள்ளையிலும் படம் பிடித்திருப்பார்கள்.

இளையராஜாவின் அளவில்லா எக்ஸ்பெரிமென்ட்களில் முக்கியமான படம் இது,அவரே பாடிய கதைகேளு கதைகேளு ,மலேசியா வாசுதேவன் பாடிய பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம், எஸ்பிபி பாடிய சிவராத்திரி தூக்கமேது போன்ற சிச்சுவேஷன் பாடல்களையும் எஸ்பிபி பாடிய ரம்பம் ஆரம்பம் , போன்ற டான்ஸ் நம்பரையும், கமல்ஹாசனை பாலக்காட்டு தமிழில் திறம்பட பாடவைத்த சுந்தரி நீயும் பாடல்களையும் மிகுந்த லாவகமாக உருவாக்கியதைக் கவனியுங்கள்,எந்த பாடலும் வீணில்லை,கதையுடன் பயணிப்பவை.

இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் [இப்பொது 82 வயது], பல திறமைகளை தன்னுள் கொண்ட அஷ்டாவதானி,தேர்ந்த ஒளிப்பதிவாளரும் கூட,அவர் தெலுங்கில் இயக்காத ஜானர் படங்களே இல்லை,அவர் இயக்கிய புஷ்பக் [பேசும் படம்] இன்றளவில் இந்திய சினிமாவின் முக்கிய சாதனை,அதன் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு அளிக்கப்பட்ட இயக்குனர் வாய்ப்பு இப்படம்,இதிலும் கமல்ஹாசனின் தலையீடு இல்லாமல் இருக்குமா என்ன?படம் டைட்டில் போட்டு முடித்தவுடன்,மதன் கமலின் போட்டோ சுவற்றில் மாட்டப்படும்,அங்கே இயக்கம் என்று சிங்கீதம் சீனிவாசராவின் பெயர் போடுவார்கள்,அது கமல்ஹாசன் இயக்கத்தில் அளித்த பங்கை சூசகமாக நமக்கு விளக்கிவிடும். 

படத்தில் சிங்கீதம் சீனிவாசராவ் ஃப்லிம் சுருளுக்குள் இருந்து முதலில் தோன்றி கதைகேளு பாடலில் கதை சொல்வார்,அவர் அங்கே கொண்டுவரும் கருவியின் பெயர் கைனடாஸ்கோப் http://en.wikipedia.org/wiki/Kinetoscope ,அதில் நாம் சிறுவயதில் நிச்சயம் நம் பள்ளிவாசலிலோ,வீட்டின் தெருக்களிலோ 25 காசு கொடுத்து படம் பார்த்திருப்போம்,நான் அதில் சார்லி சாப்ளின் படம் ஏதோ ஒன்று ஐந்து நிமிடம் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது,

படத்தில் ஒவ்வொரு கமல்ஹாசனுக்கும் தனித்தன்மையுடன் கூடிய தீம் இசை உண்டு, பாடல்கள் எதுவுமே இடைச்செருகல் போலத் தோன்றாது,என பல சிறப்புகள் உண்டு. படத்தின் அதிரடிப் பட்டாசு போன்ற காமெடி வசனங்களை திரைக்கதையை கிரகித்து உள்வாங்கி எழுதியது கிரேசி மோகன் , இவர் மளிகைக் கடைக்காரராக கேமியோ ரோலும் செய்திருப்பார்.இவர்  பாலக்காட்டு காமேஸ்வரனுக்கு எழுதிய வசனங்கள் தத்ரூபமாக இருக்கும்,எல்லா க்ளாஸ் ஆடியன்ஸுக்கும்  புரிய வேண்டும் என்னும் சமரசம் எதுவும் செய்யப்பட்டிருக்காது,உதாரணமாக இறுதிக்காட்சியில் குஷ்பு சுடும் இரட்டைக்குழல் துப்பாக்கியை காமேஸ்வரன் தோக்கு[மலையாளத்தில் துப்பாக்கி] என்றே சொல்வார்.அதே போன்றே ஷமிக்கனும்,[மன்னிக்கனும்] என நிறைய சொல்லலாம்.


படத்தில் வரும் நடிகர் நாகேஷின் அவினாசி என்னும் ஃப்ராடு மேனேஜர் கதாபாத்திரம் மிகவும் தத்ரூபமானது,படம் முழுக்கவே வரும் கதாபாத்திரம்.  எட்டு பெண்களின் தந்தை, எட்டு பேர்களுக்கும் எட்டு லட்சுமிகளின் பெயர் இட்டிருப்பார், அதில் இருவருக்கு மட்டுமே மணம் முடித்திருப்பார்,

மீதம் ஆறு பேருக்கு மணமுடிக்க வேண்டிய பொருப்பு, இளம் முதலாளி மதன் இவரது 25 லட்ச ரூபாய் மோசடியைக் கண்டறிந்த குற்ற உணர்வு, தேவைப்படுகையில் சுய எள்ளல் , பச்சாதாபம்,தன் மூன்றாம் பெண்ணின் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுவிடக்கூடாதே என்கிற பயம், ஒரு மோசடியை மறைக்க அவர் மேலும் மேலும் செய்து கொண்டே போகும் மோசடிகள் என அறபுதமாய் செதுக்கப்பட்ட ஸீன் ஸ்டீலிங் கதாபாத்திரம், ஆனாலும் வழக்கம் போலவே  எந்த விருதுகளும் கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டார் நாகேஷ்.

அன்றைய திருமணங்களில் புழங்கிய வரதட்சனை மாப்பிள்ளை முறுக்கு இத்யாதிகள் சிறிது நேரமே வந்தாலும் டீடெய்லாக வரும், மதன் அவரைப் பார்க்க சகியாமல் பீமை விட்டு  வெளியே தூக்கி எறிந்தால் கூட திரும்பத் திரும்ப வந்து இழையும் குழையும் ஓவர் கானஃபிடனஸ் , மேனேஜர் கதாபாத்திரத்தை அவரைத் தவிர இத்தனை இலகுவாய் யாராலும் செய்திருக்க முடியாது

நடிகை மனோரமா இப்படத்தில் ஜமுனாபாய் என்னும் ஆணால் வஞ்சிக்கப்பட்டு மகளுடன் தனித்து வாழும் ஒரு நாடக நடிகையாக வாழ்ந்திருப்பார்,அவரின் மகள் ஜக்குபாயாக ரூபினி, வயிற்றுப்பிழைப்புக்காக அவர்கள் நிஜ வாழ்வில் மதனிடம் நடிக்கப் போக அவரால் பாதுகாப்பு வேண்டி தன் கெஸ்ட் ஹவுஸில் தங்க வைக்கப்படுவர்.அங்கே மனோரமா தான் பட்ட வாழ்க்கை அனுபவங்களால் பாடம் கற்றவர்,தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தரப் போராடும் ஒரு சந்தர்ப்பவாதியாக உருவெடுப்பார்.

ஒரு கட்டத்தில் பெற்ற மகளையே பக்குவமாகத் தயார்படுத்தி மதனுக்கு கூட்டித்தருவார்,எத்தனை வக்கிரமான விஷயம் அது ,அதை அழகாக  டைல்யூட் செய்து சிவராத்திரி தூக்கமேது என்னும் பாடலாக வைத்து வெற்றி பெற்றிருப்பார் கமல் ஹாசன்,இப்பாடலால் படத்துக்கு அட்டகாசமான ரொமான்ஸ் நம்பரும் கிடைத்தது,பாடலில் மனோரமாவின் வித்தியாசமான அவல நகைச்சுவை நடிப்பும் டான்ஸ் மூவ்மென்டும் மிகவும் சிலாகிக்கப்பட்டது, பாடலின் இறுதியில் ரூபினியை துகிலுரிந்தே விடுவார் கமல்ஹாசன், அதைப் படமாக்கி முடித்தவுடன் முழுதாகப் பார்த்து அதிர்ந்த மனோரமா,மிகவும் நெக்குருகி நல்லா இல்லையேப்பா,என் பெயரை டேமேஜ் செய்துவிடுமே என மிகவும் கவலைப்பட, கமல் புரிந்து கொண்டவர் மெனக்கெட்டு மீண்டும் எடுத்த பாடல் தான் இப்போது இருக்கும் பாடலாம். அப்படியென்றால் ஒரிஜினல் எப்படி இருந்திருக்கும்?

படத்தில் நாசர் கதாபாத்திரம் காமெடியானது என்றாலும் ஆபத்தான வில்லன் கதாபாத்திரம் அது,பங்காளிச் சண்டையில் அப்பாவை கொலை செய்து விட்டு சகோதரனையும் போட்டுத்தள்ள தகிடு தத்தங்களை சத்தமின்றி பின் நின்று செய்யும் கதாபாத்திரம்.நாகேஷ் வந்து துப்பு தருகையில் அதில் சுவாரஸ்யம் காட்டாமல் திருப்ப அனுப்பும் காட்சி ஒன்றே அதற்குச் சான்று.

இதில் சாம்பாரில் மீன் விழும் [கருவாடு] காமெடி எத்தனை பிரசித்தி பெற்றதோ?,அதே போன்றே பின்னாளில் சிங்காரவேலன் படத்தின் கருவாடு காமெடியும் மிகவும் பேசப்பட்டது.

இதில் மதனகோபால் கதாபாத்திரம் வளர்ப்பால் ஹைலி எஜுக்கேட்டட், சோஃபிஸ்டிக் என்பதால் அவர் லாஜிக்காக அடியாட்களுடன் சண்டை போட மாட்டார், அந்த சர்ச் காட்சிக்கு பின்னர் வரும் டாய்லெட் சண்டைக்காட்சியை கவனித்தால் புரியும்.அதிலும் ஒரு டாய்லெட் காட்சியில் மதன் தன் கால்களை சுவற்றில் அழுத்தி, மனோரமாவையும்,ரூபினியையும் தன் கால்களின் மீது அமர்த்தியபடி தாங்குவார்.அது மட்டும் சிறு விதிவிலக்கு.

மதன் சிறுவயது முதலே மூளையால் பலசாலி,அதனால் தான் அவரின் சிறு வயது முதலே அவருக்கு உற்ற துணையாக உடல்ரீதியான பலசாலியாகிய பீம் [Praveen kumar Sobti] http://en.wikipedia.org/wiki/Praveen_Kumar_%28actor%29
உடன் இருப்பார்,

இதை கடைசிக் காட்சியில் மதனின் அப்பா [ ஆர்.என்.கிருஷ்ணபிரசாத்] பீமைப் பார்த்து என்னடா பீம்கண்ணா இப்படி இளைச்சுப் போயிட்டே? என்று சொல்லுகையில் உணரலாம்.[அப்போது தூர்தர்ஷனில் 1988ல் வெளியான மஹாபாரதம் பீமன் கதாபாத்திரத்தில் இவரைப் பார்த்துவிட்டு மிகவும் பிடித்ததால் கமல் இதில் அவரை நடிக்க வைத்தார்.]இதில் தூர்தர்ஷனையும் கமல் சந்தடிசாக்கில் கலாய்திருப்பார்.பீம் தூர்தர்ஷன் பார்க்கிறேன் என மதனிடம் சொல்கையில் முகத்தை கோணுவாரே பார்க்க வேண்டும்.
படத்தில் அப்பாவாக வந்த ஆர்.என்.கிருஷ்ணபிரசாத் கன்னட சினிமாவின் முக்கியமான கேமராமேன்,அவரின் பேராசைக்கார தம்பியாக நடித்த ஆர்.என்.ஜெயகோபால் அவரின் தம்பியும் ஆவார்.

அதே போன்றே படத்தில் மைக்கேலின் வளர்ப்பு அப்பாவான சந்தான பாரதியும்  படத்தில்  கூலிப்படை புரோக்கராக வரும் ஆர்.எஸ்.சிவாஜியும் அண்ணன் தம்பி கூட்டணி,என்பதும் மற்றொரு ஒற்றுமை.

மேலும் கமலுடன் ஐந்து  வருடங்களுக்கு  முன்னர் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் கிளுகிளுப்பாக நெருங்கி நடித்த ஜெயபாரதி,பின்னாளில் 4 கமல்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டிவரும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இதிலும் எத்தனை டல் மேக்கப் போட்டாலும்,அவரின் சொச்ச இளமையை மறைக்க முயன்று தோற்றது தெரியும்.

படத்தில்  ஆபத்தான சாகசங்களை செய்யவே ராஜு கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கும், அத்தனை ரியாலிட்டியாக அமைந்திருக்கும் அந்த 7 நிமிட டாய்லெட் சண்டைக் காட்சி.அதில் நெத்தியடி,மூக்கில் வெத்திலை பாக்கு போடுதல்,கிடுக்கிப்பிடி சண்டை,என தூள் செய்திருப்பார்,கத்தி சண்டையும் இருக்கும்,சீரியஸாக துவங்கும் சண்டை மதன் ராஜுவுக்கு சண்டை போட வாளை எறிகையில் காமெடி சண்டையாக உருமாருவதைப் பார்ப்போம். அதே போன்றே பெங்களூர் ஹைவேயில் காண்டெஸாவின் ப்ரேக் லைனிங்கை ராஜு கமல் கார் ஓடுகையிலேயே எக்கி சரி செய்யும் காட்சியையும் குறிப்பிட வேண்டும்.

படத்தில் வரும் பட்டாணி ஃபைனான்ஸியர் போன்ற ஆட்கள் 90 வரை அதே போன்றே உடை அணிந்து கையில் கோலுடன் திரிந்தனர்.இப்போது அவர்களை சென்னையில் காண்பது மிக அரிது,கமலின் வாட்சைப் பார்த்து ஐ ரோலக்ஸ் வாட்சு என்பார், மதன் அவரிடம் its may Dad Gift என்பார், [ரோலக்ஸ் போன்ற உட்ச விலை வாட்ச்களை பரம்பரை பரம்பரையாக சீதனமாக வழங்குவதைக்கூட மிக அழகாக கமல் உள்வாங்கி சின்ன வசனத்தில் சேர்த்திருப்பார்] படத்தில் கமலின் மானசீக சினிமா குருவான அனந்துவும் ஒரு கதாபாத்திரம் செய்திருக்கிறார் என க்ரெடிட் ஸ்க்ரோல் சொல்கிறது,அவர் இந்த பட்டாணி வேடம் செய்தாரா?என யாரேனும் தெரிந்தவர்கள் சொல்லவும்,அப்படி அந்த வேடம் செய்யவில்லை என்றால்,எந்த வேடம் அவர் செய்தார் என சொல்லவும்.

அதே போல படத்தில் கமல்ஹாசனின் frequent colabarator  ஆன எஸ்.என்.லட்சுமி பாட்டியை அவசியம் குறிப்பிட வேண்டும்,மனோரமாவைப் போலவே ஆதரவற்ற நிலையால் சந்தர்ப்பவாதியாக மாறி அப்பாவி காமேஸ்வரனை மருமகனாக வரிக்கும் கதாபாத்திரம்,  ஊர்வசியின் திருட்டுப்பாட்டியாக அதகளம் செய்திருப்பார்,அருமையாக பாலக்காடு பிராமண பொல்லாத்தனம் கொண்ட அத்தைப் பாட்டியாகவே அவர் உருமாறியிருப்பார்.குஷ்பூவைப் பார்த்து அவர் சொல்லும் கருநாக்குத் துக்கிரி என்னும் வசவு மிகவும் புகழ்பெற்றது , http://en.wikipedia.org/wiki/S._N._Lakshmi என்ன அற்புதமான காலம் சென்ற மூத்த நடிகை அவர்? அவர் கமலின் அடுத்தடுத்த படைப்புகளான தேவர் மகன் [பாட்டி] ,  மகாநதி [மாமியார்], விருமாண்டி[பாட்டி] என மிகச் சிறப்பாக பங்காற்றியதை ஒருவர் மறக்க முடியுமா?!!!

காமேஸ்வரனின் வளர்ப்பு அப்பா பாலக்காடு மணிஐயராகவே வாழ்ந்த டெல்லி கணேஷின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, கமல்ஹாசனை விட 10 வயது மூத்தவர்,அவரின் அநேகமான எல்லா படங்களிலுமே இவர்  frequent colabarator என்றே சொல்லலாம்,புன்னகை மன்னன் படத்திலும் கமல்ஹாசனின் குடிகார தந்தையாக நடித்திருப்பார்.இதில் தன் வளர்ப்பு மகன் காமேஸ்வரனுக்காக திருமணமே செய்து கொள்ளாமல்,கண்ணியமாக சமையல் தொழில் செய்யும் ஒரு ஆச்சாரமான பிராமண சமையல்காரர்.

இவரின் கையப் பிடுச்சு இழுத்தியா? டயலாக் நாம் இன்றும் வாழ்வில் ஏதாவது தருணத்தில் கிண்டலாக பயன்படுத்துவோம்,அத்தனை அருமையான கதாபாத்திரம் அவருடையது. இவர் ஹேராம் படத்தில் பைரவ் என்னும் ஒரு தீவிர இந்துத்வா கதாபாத்திரம் ஏற்றிருப்பார்,ஷாரூக்கானை பெரிய சம்மட்டி கொண்டு அடித்து மண்டையை உடைக்கும் பாத்திரம்,அதுவும் நன்கு பேசப்பட்ட கதாபாத்திரம்.

ஃப்ரேமுக்குள் முதலில் ராஜுவும் மதனும் சந்திப்பர்,பின்னர் காமேஸ்வரன் ,அதன் பின்னர் மைக்கேல் என படிப்படியாக ஒரே ஃப்ரேமுக்குள் நான்கு கமலை ப்ரில்லியண்ட்டாக எந்த சந்தேகமும் வராத படிக்கு திரையில் தோன்ற வைத்து எங்கும் ஒட்டுப் போட்டது தெரியாமல் அசத்தியிருப்பார்கள். ஒளிப்பதிவாளர் பி.சி.கெளரிஷங்கரும் எடிட்டர் வாசுவும்.

கடைசி மலை உச்சி வீட்டையும் மினியேச்சர் என சொல்ல முடியாதபடி படமாக்கியிருப்பார் கபீர்லால் என்னும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கேமராமேன், அங்கே டீமின் ஒட்டுமொத்த ப்ரில்லியன்ஸியும் வெளிப்பட்டிருக்கும்.

படத்தில் மிகவும் கண்ணியமாக போர்த்தி நடித்த ஊர்வசியின் உடை கூட அங்கே அந்த மரவீட்டில் இருந்து கயிற்றில் இறங்குகையில் வார்ட்ரோப் மால்ஃபங்ஷன் ஆகியிருக்கும்,அதே போலவே ரூபினிக்கும் மிக அதிகமாக வார்ட்ரோப் மால்ஃபங்ஷன் ஆகியிருக்கும்.ஆனால் குஷ்பூ ஜீன்ஸில் இருந்ததால் ரசிகர் ஆர்வக் கண்களில் இருந்து தப்பியிருப்பார்.

இதில் அசைவப் பிரியரான கமல்ஹாசன் சைவ சாப்பாட்டுக்கு எதிரான ஒரு கருத்தை காமேஸ்வரன் கமல் கடைசியில் சொல்வதாக வைத்திருப்பார்.அந்த மரவீட்டில் இருந்து காமேஸ்வரன் பள்ளத்தாக்கை நோக்கி தொங்கும் வேளையில்,மைக்கேல்,மற்றும் மதன் கமலைப் பார்த்து நான் வெஜிட்டேரியன்,எனக்கு ஏறிவரத் தெம்பில்லை,பாடி வீக்காக்கும், என் மனைவி திரிபு,பாட்டி,வளர்ப்பு அப்பா மணிஐயர் எல்லோரையும் பார்த்துக்கோங்கோ,என சொல்லிவிட்டு விழப்போவார்.ஆனால் கமல் தன்னையும் அறியாமல் பீம் கதாபாத்திரத்தின் மூலம் அவன் சைவம் சாப்பிட்டாலும் பலசாலி என்றிருப்பார். [படத்தில் பீமை ஒரு சைவப் பிரியனாகத் தான் சித்தரிப்பார்]

ஒவ்வொரு கமலுக்கும் அவர் துறை சார்ந்த ஸ்பெஷாலிட்டி வசனங்கள்,சிறு குறிப்புகள் subtle ஆன காமெடி இழையோடக் கொடுத்திருப்பார்,அதில் ராஜு தன்னை ஆள்மாறாட்டத்தின் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தான் ஒரு ஃபைர் என்பதும்,நாகேஷ் திரும்ப கொண்டு வந்து ஒப்படைக்கும் 6 லட்சத்தை வாங்கி பூட்டச் சொல்லுகையில் ஃபைர் ட்ரில்லின் போது பயன்படுத்தும் லெவலா ஃபார்மேஷனா நிக்கனும் என மிரட்டுவார்,நாகேஷ் ஃபார்மேஷனாவா?என முழிக்கும் இடம் எல்லாம் பட்டாசாக இருக்கும்.

காமேஸ்வரன் தான் ஒரு வெஜிட்டேரியன் குக் என்பதை ஆள்மாறாட்டத்தின் போது மதன் மெஹல் சமையல்காரனிடம் வெகுளியாக வெளிப்படுத்துவதும்,என மிக அற்புதமாக சிருஷ்டிக்கப்பட்ட படம்.

படத்தின் திரைக்கதை மட்டுமே கமல்ஹாசன்,படத்தின் மூலக்கதை பாலிவுட்டின் பிரபல கதாசிரியரான காதர் கஷ்மீரி ,இவருக்கு 24 வருடங்கள் கழிந்தும் சம்பள பாக்கியான 11 லட்சத்தை கமல்ஹாசன் தரவில்லை என்னும் வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடந்து ,நீதிமன்றத்துக்கு வெளியே பேசி முடித்துக் கொள்ளும் படி தீர்ப்பானதாம்,ஆனால் பணம் தந்தாரா எனத் தெரியாது.கஷ்மீரி என்னும் குடும்பப் பெயரை தன் விஸ்வரூபம் படத்திலும் உபயோகித்திருப்பார் கமல்.
http://freepressjournal.in/kader-kashmiris-case-against-kamal-haasan/

மேக் போர்டபிள் லேப்டாப் பற்றி படிக்க

http://en.wikipedia.org/wiki/Macintosh_Portable

காணாமல்போன 30 மீன் இனங்கள் - இயற்கைவள அழிப்பின் அவலம்!


இயற்கையைத் தன் தேவைக்காகப் பயன்படுத்தும்போது அதை அழிக்காமல், சேதாரமில்லாமல் அதனோடு இயைந்த வாழ்க்கையை வாழ்பவர்களே, உண்மையில் தொன்மையான நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள். வாழ்க்கைக்-கும், தேவைக்கும் உதவுகின்ற இயற்கையை கொண்டாடுகின்ற, இயற்கையைப் போற்றிவணங்கும் நெடுங்கால நாகரீகத்திற்குச் சொந்தக்காரர்கள், தமிழர்கள். தேசியத் திருநாளான பொங்கல் விழா, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பண்பாட்டு நிகழ்வாகவே கொண்டாடப்படுகிறது. இப்படி பெருமைவாய்ந்த தமிழ்ச் சமூகத்தின் இன்றைய நிலை, நினைத்தால் நெஞ்சம் வெடித்துவிடும்படியாக இருக்கிறது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்துவகை திணை நிலங்களையும், பல்வேறு இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டது, நம் தமிழ்நாடு. குடிக்கும் தண்ணீர் முதல் சுவாசிக்கும் காற்று வரை எதுவும் காசு கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற அவலநிலைக்கு, தமிழகம் படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தின் ஆறு, மலை, கடல், சமவெளி என எங்கெங்கு கனிமவளங்கள் உள்ளனவோ, அவை அனைத்தும் சிலரின் லாபவெறிக்காக சூறையாடப்பட்டு, இயற்கைச் சமநிலையும் அழிக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், காட் போன்ற ஒப்பந்தங்களின் மூலமே ஏகாதிபத்தியங்கள், வறிய நாடுகளை அடிமைப் படுத்தி வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக, இயற்கையில் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் விற்பனைப் பண்டமாக மாற்றியுள்ளனர்.

கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என தமிழகத்தைச் சுற்றியுள்ள அரசுகள் தம் இயற்கை வளங்களை எவ்விதத்திலும் வீணாகவிடாமல் தடுத்து பாதுகாத்து வருகின்றன. அதிலும் 44 ஆற்றுப்படுகைகளைக் கொண்ட கேரளம், தன் ஆறுகளில் இருந்து ஒருபிடி மணலை எடுக்கக்கூட அனுமதிக்காமல் பாதுகாத்து வருகிறது. ஆனால், தமிழக அரசோ ஆற்று மணல், தாது மணல், கிரானைட் உள்பட அனைத்து இயற்கை வளங்களையும் சில தனி நபர்களின் சுரண்டல் வேட்டைக்காக தமிழகத்தையே சூறையாட அனுமதித்துவிட்டு, கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது.

பல லட்சம் கோடி மதிப்புள்ள கனிமங்கள் எவ்வித வரைமுறையும் இன்றி கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இதில், பன்னாட்டு நிறுவனங்களே நேரடியாகவும் தமக்கு சேவை செய்யக்கூடிய எடுபிடிகள் மூல்மாகவும் வளங்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எந்த கணக்கு வழக்கும் இல்லை. அரசும், அதிகாரவர்க்கமும் கைகோர்த்து நின்று இதற்கு பாதுகாப்பு கொடுக்கின்றன.
தாதுக்கனிமக் கொள்ளையை அனுமதித்தது மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய், தனியார் கொள்ளையடித்ததில் ஐந்து விழுக்காடுகூட இருக்காது.
குமரி மாவட்டத்தின் மிடாலம் கிராமம் தொடங்கி நெல்லை மாவட்டம் வழியாக, தூத்துக்குடி மாவட்டம் வேம்பாறு வரை சுமார் 150 கி.மீட்டர் தொலைவு கடற்கரையோரத்திலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் அரியவகை தாதுமணல் நிறைந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், நாகை மாவட்ட கடலோரப் பகுதிகள் சிலவற்றிலும், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் சில இடங்களிலும், திருச்சி மாவட்டம், முசிறி, துறையூர் தொட்டியம் வட்டத்தில் சில இடங்களிலும் தாதுமணல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இங்குள்ள மணலில் இல்மனைட், கார்னெட், ரூடைல், சிர்கான், மோனோசைட், சில்லுமேனைட் போன்ற தாதுக் கனிமங்கள் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் அரியவகை தாதுக் கனிமங்களாகும். உலகின் சில இடங்களில் மட்டுமே இவை கிடைக்கிறது. இந்த் தாது மணலில் இயற்கையிலேயே கதீர்வீச்சு அதிகம் இருக்கும்.

உலகின் மொத்த தாதுமணல் இருப்பு 480 மில்லியன் டன் என்றும் இதில் இந்தியாவில் 278 மில்லியன் டன் உள்ளது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தாதுமணலில் 60 விழுக்காடு தமிழகக் கடலோரங்களில், குறிப்பாக தெற்கு மாவட்டங்களில் கிடைக்கிறது.

மேற்குத் தொடர்ச்சிமலையில் குறிப்பாக பொதிகை மலைப்பகுதியில் இக்கனிமங்கள் உருவானாலும், மலையில் இருந்த கனிமங்களை ஆறுகள்தான் கடலில் கொண்டுபோய்ச் சேர்த்தன. பொதுவாக வங்கக்கடலில் தென்கிழக்கிலிருந்துதான் அலைகள் தாக்கும். இதனால் கடல் நீரோட்டம் வடக்கு நோக்கி இருக்கும். தரையில் கிடக்கும் மணலை வாரிச்சுருட்டிக்கொண்டு வடக்கு நோக்கி கிளம்பும் அலைகளை தூத்துக்குடி துறைமுகம், ராமேஸ்வரம் மேட்டுபகுதியில் தடுக்கப்படுகிறது. இதனாலேயே தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் இத்தாது மணல் தங்கிவிடுகின்றது.

இல்மனைட் அதிகமிருக்கும் கடற்கரைப் பகுதி கருப்பு நிறமாகவும், கார்னெட் அதிகமிருக்கும் கடற்கரை பகுதி சிகப்பு நிறமாகவும் காட்சி அளிக்கிறது.


அலங்கோலமாக்கப்பட்ட பெரியதாழை கடற்கரை 
காந்தத்தால் ஓரளவு ஈர்க்கப்பட்ட அந்த கருப்பு மணலில் இரும்பு ஆக்ஸைடு மட்டுமல்லாமல் வேறொரு உலோக ஆக்ஸைடும் சேர்ந்திருந்தது. ஏற்கனவே அறியப்பட்ட உலோகத்திலிருந்து அந்த உலோகம் வேறுபட்டு இருந்தது. அந்த உலோகம் டைட்டானியம். பத்து டன் தாது மணலை எடுத்து தூய்மைப்படுத்தினால் அதிலிருந்து ஒரு டன் இல்மனைட் கிடைக்கும்.

5 டன் இல்மனைட் மூலம், ஒரு டன் டைட்டானியம் தயாரிக்கலாம். இத்தகைய தாதுவளம் கொண்ட மணல் இங்கு இருப்பது யாருக்கும் தெரியாமல் இருந்த வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.


ஆய்வுக்குழுவினர் முன்பு விளக்கமளித்துவிட்டு வெளியேறும் வைகுண்டராஜன்
1900களில் பிரிட்டன் ஏகாதிபத்தியம் தமிழகத்தை ஆண்டபோது தென்தமிழகத்தில் இருந்து ஜெர்மனிக்கு பனைநாரால் கட்டப்பட்ட பொருட்கள் பலவும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்தக் கயிறுகளில் ஒட்டிக்கொண்டு இருந்த கடற்கரை மணலை ஆராய்ந்த ஜெர்மானியர்கள், அம்மணல் தாதுமணல் எனக் கண்டறிந்தனர். இம்மணலில் கதிரியக்கத்தன்மை கொண்ட இல்மனைட், ரூடைல்,கார்னெட், மோனோசைட் போன்ற தாதுஉப்புக்கள் ஒளிர்வதைக் கண்டறிந்தனர். உலகச்சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ளள இம்மணல் கடற்கரையோரங்களில் கேட்பாரற்றுக் கிடப்பதை அறிந்தபின்பு தான் இப்பகுதிக்கு அவலம் நேரத் தொடங்கியது.

மத்திய அரசின் அணுசக்தித்துறையின் கீழ் இயங்கும் அணுக்கனிம ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தமிழகத்தின் கடற்பகுதி மற்றும் தேரிமணல் பகுதிகளில், 34.80 கோடி டன் இல்மனைட், 13.00 கோடி சிலிமனைட், 10.70 கோடி டன் சிர்கான், 1.80 கோடி டன் மோனோசைட் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுமார் 175 மில்லியன் டன் தாதுகனிம வளங்கள் தமிழகத்தில் இருப்பதாக வேறு ஒரு ஆய்வு தெரியப்படுத்தியுள்ளது.

உலகில் தாதுமணல் இருப்பு 460 மில்லியன் டன். இதில் 278 மில்லியன் டன் இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் உள்ள தாதுமணலில் 60 விழுக்காடு தமிழகத்தின் கடலோரங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கிடக்கிறது.

உலக சந்தையில் ஒரு டன் தாது மணல் கார்னெட் ரூ20,000, இல்மனைட் ரூ79,000, சிர்கான் ரூ1,32,000, ரூடைல் 1,80,000 வரையும், மோனோசைட் ரூ5, லட்சம் என விலைபோகிறது. இதில் இல்மனைட் அμசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களிலும், ரூடைல் போர்விமானம் மற்றும் விண்வெளி உபகரணங்களிலும், சிர்கான் அணுமின் நிலையங்களிலும், மோனோசைட் அணுகுண்டு தயாரிக்கவும் என அணுஆற்றலை உள்ளடக்கிய அதிமுக்கிய தாது மணல் வகைகளாகும்.






அரியவகை தாதுமணலை சர்வதேச சந்தையில் விற்று, கொள்ளைலாபம் பார்க்க முதன்முதலில் இறங்கியது ஜெர்மன் நாட்டு நிறுவனம் ஒன்று. 1910-களில் முதன்முதலாக குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் ஜெர்மன் நிறுவனம், மணல் ஆலையை அமைத்தது. முதல் உலகப் போரின்போது 1914-ஆம் ஆண்டில் இது இங்கிலாந்து அரசின் வசம் மாறியது. பிரிட்டன் ஏகாதிபத்தியம் வெளியேறியபின், 1950-களில் இந்திய அரசு தனியார் ஒருவருடன் சேர்ந்து இந்த மணல் ஆலையை இந்திய அருமணல் நிறுவனம் என நடத்தியது. பின்னர் இந்த தாது மணலில் இருந்து அணுஉலைக்குத் தேவையான கனிமங்களை பிரித்தெடுக்க முடியும் என்பது கண்டறியப்பட்டவுடன், தனியார் பங்களிப்பை முழுதும் நீக்கி 1963-ல் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் முழுமையாக இந்த ஆலை வந்தது.
1980-களில் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற நாசகாரக் கொள்கை என்பதை நடைமுறைப்படுத்த தொடங்கியவுடன், தனியார்களும் இந்த தாது கனிம வளங்களை நடத்துவதற்கு அனுமதி பெற்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது நாட்டை கொள்ளையடிப்பதற்குத் திறந்துவிட்டதில் முதன்மைப் பங்கு வகிக்கும் காங்கிரசு கட்சியின் ஆதரவு பெற்றவர்களே, முதலில் இத்தாது மணல் அள்ளுவதற்கான (கொள்ளைக்கான)அனுமதியைப் பெற்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த தனுஷ்கோடி ஆதித்தனின் மனைவியை இயக்குனராகக் கொண்ட இந்தியன் கார்னெட்ஸ் கம்பெனிக்கு, முதன்முதலில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் அள்ள அனுமதி தரப்பட்டது. அதேபோல் குமரிமாவட்டத்தில் குமரி மினரல்ஸ் என்ற பெயரில் உள்ள நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இந்தியன் கார்னெட் நிறுவனம் தாது மணல் அள்ளத் தொடங்கியது. ஊரை அடித்து உலையில் போடும் வெளிநாட்டுக்கு நாட்டை விற்றுக்கொண்டு இருக்கும் காங்கிரசு கட்சியினரே, இந்த கார்னெட் மணல் கொள்கையை தீவிரமாக தொடங்கி வைத்தனர்.
1989-களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை, கீரைக்காரன்தட்டு கிராமத்தில் தொடங்கப்பட்ட வி.வி. மினரல்ஸ் நிறுவனம், இன்று தாது மணல் அள்ளுவதில் (கொள்ளையடிப்பதில்) முதன்மையானதாக உள்ளது. முன்பு இதில் இந்தியன் கார்னெட் கம்பெனி, மணல் மாணிக்கம் ஆகியோரே முதன்மையாக இருந்தனர். மணல் மாணிக்கத்தோடு முதலில் மிகவும் நெருக்கமாக இருந்த கனிம வளத்துறை முன்னாள் அதிகாரி செல்வராஜின் துணையோடு, வைகுண்டராசனால் தொடங்கப்பட்டதுதான் வி.வி. மினரல்ஸ் நிறுவனம்.

காலூன்றிய சாம்ராஜ்யம்

தமிழகத்தில் தாது மணல் கனிம வியாபாரத்தில், வைகுண்டராசன் குடும்பத்தாரின் வி.வி. மினரல்ஸ், பீச் மினரல்ஸ் (பி.எம்.சி) இண்டஸ்டிரியல் மினரல் நிறுவனங்களும் (மிவிசி) எஸ்.டி.எஸ். மாணிக்கம், தயா தேவதாஸ், நாகராசன் ஆகியோரின் நிறுவனங்களும் உள்ளன. தமிழகத்தில் உள்ள 78 தாது மணல் குவாரிகளில் 60-க்கும் மேற்பட்டவை வைகுண்டராசன் குடும்பத்தாரின் நிறுவனங்களாகவே உள்ளன.


தற்போது 15 கிலோமீட்டர் நீளமான கடற்கரையை அரசே 30 ஆண்டுகளுக்கு குத்தகையும், விரிந்து பரந்துள்ள 2300 ஏக்கர் பரப்புள்ள மணல் பரப்பும் கொண்ட பட்டா நிலங்கள் தங்கள வசம் உள்ளது என தங்களது இணையதளத்தில் பெருமையுடன் அறிவிக்கின்றன வைகுண்டராசனின் தாது மணல் நிறுவனங்கள்.


உலகம் முழுவதும் உள்ள இல்மனைட் மொத்த விற்பனையாளராகச் செயல்படுவது ஆஸ்திரேலியாவின் மொனரல்ஸ் அன்ட் டிரேடிங் லிமிடெட் நிறுவனமாகும். இந்த ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு வி.வி. மினரல்ஸ் நிறுவனமே முதன்மையான இல்மனைட் சப்ளையர் ஆக உள்ளது. இந்தியாவில் மிகப் பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளதோடு, உலக அளவில் இரண்டாவது இடத்தில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் உள்ளது. ஒவ்வொரு டன் தாதுமணலும் சராசரியாக ஒரு லட்சத்திற்கும் குறையாமல் சர்வதேச சந்தையில் விற்கப்படும்நிலையில், இந்நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடும் தாது மணல் குவாரிகளுக்கான தொகை அற்பமானது. தாது மணல் நிறுவனங்களுக்கு 100 ஏக்கர் நிலம் முழுவதும் சேர்ந்து ஒரு ஆண்டுக்கு ரூ.16.00க்கும், 50 ஏக்கர் நிலம் முழுவதும் சேர்ந்து ஒரு ஆண்டுக்கு ரூ.9-க்கும் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது தமிழக அரசு.

நெல்லை மாவட்டத்தில் 2011 வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ள 52 குவாரிகளில், கரை சுற்று உவரி ஊராட்சியில் உள்ள இரண்டு குவாரிகள் மட்டுமே 10.10.5 ஹெக்டேர், 36.34.0 ஹெக்டேர் பரப்பளவு கொண்டவை. மற்றவை அனைத்தும் ஒற்றை இலக்க ஹெக்டேர் பரப்பளவு கொண்டவை. ஆனால் ஜெயலலிதா அரசு பதவி ஏற்றவுடன் 12.8.2011 அன்று 750 ஏக்கர் (300 ஹெக்டேர்) பரப்பளவு உள்ள மிகப்பெரிய பரப்பளவை தாது மணல் குவாரிக்காக 30 ஆண்டுகள் குத்தகைக்கு 2011 ஆகஸ்ட் மாதம் அனுமதி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் குவாரி எதற்கும் இந்த அளவு பரப்பை 
இதுவரை குத்தகைக்கு கொடுத்தது இல்லை. மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய அருமணல் நிறுவனத்துக்காக 114 ஹெக்டேர் அனுமதி கொடுத்தது என்பது மட்டுமே, மிக அதிகமாக பரப்பாக இருந்தது. இவ்வளவு பரந்த பரப்பை இதனால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மக்களின் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமல், மக்களுக்கே தெரிவிக்காமல் ஒரே அரசு உத்தரவு மூலம் 750 ஏக்கர் நிலமும் வைகுண்டராசனின் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தினருக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளது.

இந்திய சுரங்கக் கழகம் அனுமதி அளித்துள் 111 கார்னெட் மணல் குவாரிகளில் 96 குவாரி வைகுண்டராசன் குடும்பத்தாருக்குச் சொந்தமானது. இந்திய அரசால் அனுமதி தரப்பட்ட 44 இல்மனைட் குவாரிகள் அனைத்தும் வைகுண்டராசனுக்கே சொந்தமானவை. சாம, பேத, தான, தண்ட முறைகளைப் பயன்படுத்தி அனைத்து போட்டி நிறுவனங்களையும் விரட்டியடித்து, இவர்களே தாது மணல் கொள்ளையில் முன்னுரிமை பெற்றவர்களாக விளங்குகின்றனர். ஆனால் விதிகளை மீறுவதில் வி.வி. மினரல்ஸ், அரசு நிறுவனம், மற்றவர்கள் என எல்லாருமே ஒரேமாதிரிதான் செயல்படுகின்றனர்.

அபாயங்கள்

* குமரி முதல் தூத்துக்குடி வரை நடந்தே செல்லக்கூடி யதாக இருந்த கடற்கரை முழுவதும் மணல் அள்ளப் பட்டுவிட்டதால் கடற்கரை என்பதே கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. கடலும் ஊரும் ஒன்றாகி விட்டது.
உவரியில் ஊரோடு கலந்த கடல்
அமைதியாக..
ஆர்ப்பரித்து..
தேவாலயத்தை விழுங்கும் வேகத்தில்..
* கடலோரமாக இருந்த தேரி எனப்படும் மணற்குன்றுகள் முழுக்க வெட்டி அழிக்கப் பட்டது. மேலும் தேரியில் இருந்த புதர்காடுகள், தாவரங்கள், மரங்கள் அனைத்தும் வெட்டி எறியப்பட்டு விட்டது. கடற்கரையும், கடற்கரை ஒட்டி நிலத் தாவரங்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் கடலில் உள்ள ஒட்டலிகளான
நண்டு , ஆமை , கடலோரம் வந்து முட்டையிடுவதும் , குஞ்சுபொரிப்பதும் நின்று விட்டது. உயிர்ச்சுழல் முழுக்க பாதிக்கப்பட்டு விட்டது.


* கடலோரமும், கடலுக்குள்ளும் தாதுமனல் தோண்டி எடுக்கப்பட்டதால், அந்த இடங்களில் நீரில் உள்ள தாதுச் சத்துக்கள் குறைந்துவிட்டது. இதனால் கடலுக்குள் சில கோர வடிவிலான புற்கள், சில கடல்பாசிகள் வளர்வதில்லை. இதனால் இவற்றின் மூலம் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் மீன் இனங்கள் குறைந்து உயிர்ச் சூழலின் மேன்மை அழிக்கப்பட்டு விட்டது.
* கடற்கரையில் இருந்து தாதுமணல் முழுக்க அள்ளப்பட்டு விட்டதாலும், மணல் ஆலை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அமிலத் தன்மையுடன் கடலில் கலக்கப்படுகிறது.இதனால் கடல் நீர் பல கிலோமீட்டர் தூரம் செந்நிறமாக மாறி உள்ளது. மேலும் கடற்கரையோரம் நீரில் ஆர்சானிக், சயனைட், போன்றவை கலந்து விசமாகி வருகிறது. அமிலத் தன்மை வாய்ந்த கடல் நீரால் பவளப் பாறை, சில வகைப் பாசிகள் செழித்து வளர முடியவில்லை. இப்பகுதிக்கு வரும் மீன்களுக்கு உணவு ஆதாரங்கள் பறிப்போய் விட்டது. கடலோரம் வாழும் மீனில் விசத்தன்மை கொண்டவையாக மாறி வருகிறது.


* கடலோரம் முழுக்க தாதுமணல் அள்ளப்பட்டு நீரோட்டம் மாறி வருகிறது. கடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மீன்வளம் மிகவும் குறைந்து விட்டது.
* தாது மணல் கொள்ளையால் சுனாமி போன்றவற்றைத் தாங்கி நிற்கும் வகையில் கடற்கரையோரம் நட்டு வளர்க்கப்பட்டு வந்த சவுக்கு மரக் காடுகளும், எண்ணற்ற பனைமரங்களும், தென்னை மரங்களும் அழிக்கப்பட்டு விட்டது. கடலோரப் பகுதிகளிலும், கடலிலும் ஏற்பட்ட பாதிப்புகள் கடலோரத்தில் படகு நிறுத்தவும், மீன் வலை உலர வைக்கவும், மீன்வலை உலர வைக்கவும் இடமில்லாமல் போய்விட்டது. அருகாமை கிராமங்களுக்கு கடற்கரை கடற்கரை வழியே நடந்து செல்வது தடுக்கப்பட்டு விட்டது.

வேரோடு சாய்க்கப்பட்ட தென்னைகள்
நெல்லை மாவட்டம் பெருமணல்
கன்னியாகுமரி மாவட்டம் இரயுமன்துறை கிராமம்
* கடலோரம் முழுக்க கடற்கரை அழிக்கபப்ட்டு விட்டதால், கடல்நீர் ஊருக்குள் புகுந்து மக்கள் வீடுகள் மூழ்கியும், இடிந்தும் வருகிறது. மக்கள் தனது வாழ்விடங்களை இழந்து வருகின்றனர். தொடர்ந்து கடலோரமாக கடற்கரையில் தாதுமணல் அள்ள்ப்பட்டு விட்டதால் கடல்நீரின் அழுத்தத்தை தாங்கி நின்ற கடற்கரை மண் அள்ளப்பட்டதால் கடல்நீர் உட்புகுந்து, (கிணறு, ஆழ்துளைக் குழாய்க்கிணறு உள்பட) அனைத்து குடிநீர் ஆதாரங்களிலும் உப்புநீர், கடல்நீர் புகுந்து அவை அழிந்துவிட்டன.

*கடலோர கிராமங்களில் இன்று ஒரு குடம் குடிநீர் ரூ.4 ரூபாய் என விலை கொடுத்து வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

* தாது மணல் அள்ளப்பட்ட தால் பல தாது சத்துக்க்ளை கடல் இழந்து விட்டது. இதனால் கடலில் பவளப்பாறைகள், பல்வேறுவகை பாசிகள், கோரை வடிவிலான புற்கள் வளருவதில்லை. இதனால் இவற்றின் மூலம் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் மீன் இனங்கள் குறைந்து விட்டது. இதனால் மீன்கள், ஆழ்கடல் பகுதிக்குச் சென்று விட்டன.

* யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடாவின் உயிர்க் கோளக் காப்பகம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலுக்குள் உள்ள பாறைகளில் கார்னைட் இருக்கிறது எனவும், தண்ணீர் எடுத்து செல்ல பைப் லைன் போட வெடிவைத்து எடுக்கப்பட்டதால், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்நிலை அழிந்து, உயிர்ம பன்மைய சூழல் அழிக்கப்பட்டு விட்டது.

* தேரிகளை அழித்து அந்த இடங்களில் ஆழமாய்த் தோண்டி தாதுமணல் எடுக்கப்பட்டதால் காற்று, மழை போன்றவற்றால் தொடர் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது,


* ஆழம் குறைந்த கடலோரங்களில் ஆலைகள் உருவாகும் பகுதிக்கு சுவாசத் திற்காகவும், உணவிற்காகவும் மீன்கள் அதிகம் வரும். ஆனால் தாது சத்து குறைந்த நீரினாலும், மணலை சுத்திகரிப்பு செய்த அமிலம் கலந்த நீரை கடலில் விடுவதால் தாதுச்சத்து இல்லாமல் அங்கு வரும் மீன்களுக்கு சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவை ஆழமான கடல் பகுதிக்கு ஓடிவிட்டன.

* கடலோரங்களில் குறைந்த ஆழ பகுதிகளில் கிடைக்கும் சிங்கி இறால், அயிலை மீன், குதிப்பு மீன் உட்பட 30 வகையான மீன் இனங்களை தாதுமணல் கொள்ளைக்கு பின் காண முடியவில்லை. அவை அழ்கடல் பகுதிக்கு சென்று விட்டன. பலநேரம் கடலில் மீன் செத்தே மிதக்கின்றன. கடலில் மீன்வளம் குறைந்து விடுவதால், மக்களின் வருமானம் குறைந்து வேலையின்றி வாடுகின்றனர். பலரும் தங்கள் வாழும் ஊரை விட்டு வேலை தேடி வெளியூர் செல்கின்றனர். வெளிநாடு செல்கின்றனர். மனநிம்மதி இழக்கின்றனர். மீன்வளம் குறைந்து தொழில் இன்றி இருப்பதால், மக்களுக்குள் சமூக அமைதி குறைந்து சண்டை, சச்சரவு ஏற்படுகிறது. இதை ஒழுங்குபடுத்தவேண்டிய அரசு என்ன செய்கிறது?
சட்டமும் விதிகளும்..கைகட்டி..!

2005, மே மாதம் 11-ந் தேதி தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண்: 114-ன் படி, அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்(டி.ஆர்.ஓ), கோட்டாட்சியர்(ஆர்.டி.ஓ), வட்டாட்சியர், துணை உதவி இயக்குனர்கள் (புவியியல்+ கனிம வளங்கள்) இயக்குனர்கள், கூடுதல் இணை, துணை, உதவி இயக்குனர்கள் (புவியியல்+ கனிம வளங்கள்) ஆகியோருக்கு கனிமச் சுரங்களில் சென்று, ஆய்வு, சர்வே, விசாரணை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2006 செப்டம்பர் 18- ம் தேதி தமிழக அரசு கெஜட்டில் வெளியான அரசாணை எண் 114-ன் படி, காவல்துறை ஆய்வாளர் மட்டத்திற்கு மேலான காவல்துறை அதிகாரிகளுக்கு சட்டவிரோத கனிமவளத் திருட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்படுத்தும் வாகனங்களை, இயந்திரங்களைக் கைப்பற்ற காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும்2009- ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி “சட்ட விரோத குவாரி தொழிலை தடுக்க மாவட்ட அளவில், வட்ட அளவில் சிறப்புக்குழுக்கள், அரசாணை எண்:135, 2009 நவம்பர் 13 தேதியின் படி தமிழக அரசால் உருவாக்கப்பட்டது.

1. மாவட்ட ஆட்சியர், 2. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், 3. மாவட்ட வனத்துறை அதிகாரி 4. மாவட்ட வருவாளிணி துறை அதிகாரி, 5. மண்டல போக்குவரத்துத் துறை அதிகாரி, 6.வருவாளிணி கோட்டாட்சியர்(ஸிளி) 7.காவல்துறை துணை கண்காணிப்பாளர் 8. உதவி இயக்குநர் (பஞ்சாயத்து), 9.உதவி இயக்குநர்( டவுன் பஞ்சாயத்து), 10. நகராட்சி ஆணையர்கள், 11. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அளவிலான அதிகாரி, 12. துணை அல்லது உதவி இயக்குநர்கள்(கனிம வளத்துறை) -செயலர்/ ஒருங்கிணைப்பாளர், நிர்வாக பொறியாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு கனிமவள சுரண்டல் தொடர்பான தங்கள் மாவட்டத்தின் விவரங்களை சேகரித்து கண்டறிய வேண்டும். தாலுகா அளவிலான குழுவைக் கண்காணிக்க வேண்டும். மாதம் ஒரு முறை இக்குழு தவறாது கூடி சட்டவிரோத குவாரிகள்/ கனிமங்கள் கடத்தல்/ சுற்றுச்சூழல் பாதிப்புகளை கண்டறிந்து மாநில சிறப்புக்குழுவிற்கு அறிக்கை அனுப்பவேண்டும்.
பெரியதாழையில் நிறம் மாறிய கடல்நீர்
மாவட்ட ஆட்சியர்கள், கீழ்க்காணும் நபர்களைக் கொண்ட தாலுகா அளவிலான குழுவை அமைக்கவேண்டும்.
1. வட்டாட்சியர் - ஒருங்கிணைப்பாளர்
2. காவல்துறை ஆய்வாளர்
3. வனத்துறை அதிகாரி
4. மாவட்ட புவியியல் & கனிமவளத்துறை பிரதிநிதி
5. மண்டல போக்குவரத்து அலுவலர் பிரதிநிதி
6. கிராம நிர்வாக அலுவலர்
7. சார்பு ஆளிணிவாளர்
8. உதவி பொறியாளர்

இக்குழு அடிக்கடி குவாரிப்பகுதிகள், வாகனங்களை சோதித்து கனிமத் திருட்டைத் தடுத்து, மாவட்டக்குழுவிற்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவர்கள் அறிக்கை அனுப்பாவிட்டால், அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டவிரோதமாக கனிமங்கள் திருடப்பட்டு இருந்தால்

1.கிராம நிர்வாக அலுவலர்
2.வட்டாட்சியர்
3.மாவட்ட புவியியல் & கனிமவளத்துறை பொறுப்பு அதிகாரி
4.அந்த பகுதியின் பொறுப்பு காவல்துறை அதிகாரி

ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்காததற்கு பொறுப்பு அதிகாரிகள் ஆவார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
இவை அனைத்தும் தெளிவாக, அரசின் உத்தரவாக, நீதிமன்ற ஆணையாக வெளியிடப்பட்டு உள்ளவைதான். ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தன்குழி மக்களின் சார்பில் கடந்த ஓராண்டாக பல்வேறு அதிகாரிகளுக்கும் ஆதாரப்பூர்வமாக புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டும், கூத்தன்குழி ஊராட்சியின் சார்பில் 13.6.2013 அன்று தாதுமணல் திருட்டு பற்றி தீர்மானம் போட்டும்கூட தாதுமணல் நிறுவனங்கள் மீது ஒரு சிறு நடவடிக்கை கூட இல்லை.
குழியும் பறித்த குதிரை!


நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும், கடலோர மக்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து மீனவர் குறைதீர் கூட்டத்திலும், ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நடைபெறும் மனுவாங்கும் நாளிலும், அஞ்சல்வழியிலும், நேரிலும் பலமுறை புகார் கொடுத்துள்ளனர்.ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய சுந்தரம் இ.ஆ.ப.(ஓய்வு) நவலடி சரவணகுமார் ஆகியோரின் புகார்கள், தூத்துக்குடி காந்திமதிநாதன் புகார்கள், கூத்தன்குழி ஆண்டன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு மற்றும் பலரும் தாதுமணல் நிறுவனங்கள் மீது தொடுத்துள்ள பல்வேறு வழக்குகள், இருபது ஆண்டுகளாக கடலோர கிராமங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் மீனவமக்களின் போராட்டங்கள், சமூக அக்கறையுள்ள அமைப்புகள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் போராட்டங்கள், பல அரசின் பொது சொத்துக்கள் அழிப்பு மற்றும் சூறையாடல், நில அபகரிப்பு, மணல் குவாரியில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் மர்ம மரணங்கள், பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த தாது மணல் கொள்ளை பற்றிய செய்திகள் என ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அரசால் அமைக்கப்பட்ட குழுவோ, தாதுமணல் கொள்ளையர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே அப்பட்டமான உண்மை.

மேலும், இந்தக் குழு தனக்கு விதிக்கப்பட்ட கடமையிலிருந்து தவறினால் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று அரசாங்கத்தின் ஆணை இருந்தும்கூட, எவ்வித செயல்பாடும் இன்றி பிணம்போலக் கிடக்கும் இந்தக் குழு மீது எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசால் இதுவரை எடுக்கப்படவே இல்லை.

மாறாக, குதிரை கீழே குப்புறத் தள்ளியது மட்டுமில்லாமல் குழியையும் பறித்தது என்பது போல, தாது மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடி வரும் கூத்தன்குழி பொதுமக்கள் மீது திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பாளர் தூண்டுதலில் 10-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் காவல்துறையால் போடப்பட்டுள்ளன.

தாதுமணல் கொள்ளையை எதிர்த்த போராட்டத்தில், முன்னணியில் இருந்த கூத்தன்குழி ஒன்றிய உறுப்பினர் போஸ்கோ மீது பொய்யான குற்றச்சாட்டை சேரன்மாதேவி கோட்டாட்சியர் ரோகினி ( திருநெல்வேலி எஸ்.பி. விஜயேந்திர பிதாரி மனைவி) சுமத்தி, போஸ்கோவுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், அவரின் ஹாலோபிளாக் கம்பெனியில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரையும் தூக்கிச்சென்றனர் அதிகாரிகள்.
மணல் ஆலைகளின் சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுக்கவேண்டிய அதிகாரிகள், தாதுமணல் நிறுவன ஊழியர்களைப்போல செயல்படுகின்றனர். தாதுமணல் நிறுவனத்தினர் எவ்வளவு அதிக தவறுகள் செய்கின்றனரோ, அந்த அளவு அதிகாரிகளுக்கு வருமானம் போய்ச்சேர்கிறது.
கடைநிலை ஊழியர் முதல் மாவட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் வரை தாதுமணல் நிறுவனங்களின் விரலசைவுக்கு ஏற்பவே கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றனர். தாதுமணல் தொடர்பான விபரங்களை அரசின் பல துறைகளிலும் பெறவே முடியவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கொடுக்கப்படாததால் மாநில தகவல் ஆணையம்வரை எடுத்துச் செல்லப்பட்டு, பலமுறை 25,000வரை அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டும்கூட, அதிகாரிகள் தகவல் தருவது அரிது. சட்டமும் அதிகாரிகளின் செயல்பாடுகளும் கொள்ளையர்களுக்கு சாதகமாகவேதான் செயல்படுகிறது.

தாதுமணல் கொள்ளையர்களின் இரும்புக்கோட்டையாக இந்த மூன்று மாவட்ட கடலோரப் பகுதிகளும் மாறிவிட்டன. மக்களுக்கு சேவை செய்பவர்களாகவோ இயற்கைவளங்களைக் காப்பாற்றுபவர்களாகவோ பெரும்பாலான அதிகாரிகள் இல்லை. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள், இயற்கையைக் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் ஏவலாளர்களாக மட்டுமே உள்ளனர் என்பது மீண்டும், மீண்டும் நிரூபணம் ஆகிவருகிறது.
இந்த அதிகாரவர்க்க அமைப்பு முறை, மக்களால் கேள்வி கேட்க முடியாததாக இருக்கும்வரை, வெளிப்படையான, நேர்மையான செயல்பாடு இல்லாதவரை, தவறுசெய்யும் அதிகாரிகளை மக்களால் தண்டிக்க முடியாதவரை, மக்களுக்கு பதில்கூற வேண்டியது தன் கடமை என அதிகாரிகளுக்கு உணர்த்தப்படாத வரை, இயற்கை வளங்கள் கொள்ளை போவது, நாடு சுரண்டப்படுவது தொடரவே செய்யும்.

பொதுவாக, தாதுக்கனிமக் கொள்ளை, விதிமீறல்கள், ஊழல்கள் பற்றியே எல்லோராலும் விவாதிக்கப்படுகிறது. இவற்றுக்குக் காரணமான அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் சுரண்டல் கூட்டத்தின் பின்புலம் பற்றியும் விவாதங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களுக்காக, தமிழகத்தின் இயற்கைவளங்களை எந்த வரைமுறையும் இல்லாமல் சூறையாட, இந்திய அரசு தாராளமாக அனுமதிக்கிறது. இந்தக் கொள்(கை)ளை முடிவைத் தட்டிக்கேட்கக்கூட வழியில்லாமல், தலையாட்டிபொம்மை போலவே தமிழக அரசு இருக்கிறது. இந்த தேசத்தின் இயற்கை வளங்களை, வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பது என்பது ஒரு தற்சார்பு கொண்ட தேசியஅரசால் மட்டுமே முடியும் என்பதையே இது உணர்த்துகிறது.

- முகிலன்,
(கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு உறுப்பினர்)
 
http://pudhumoli.blogspot.in/2014/01/30.html?spref=fb

படங்கள் நன்றி: விகடன், தி ஹிண்டு, ஃப்ரன்ட்லைன்

மெட்ராஸ்[Madras] [2014]


தமிழில் குப்பம் ,குடிசை மாற்று வாரிய LIG ஹவுசிங் போர்ட் செட்டில்மெண்ட் ,கதைக்களனில் எத்தனை சினிமாக்கள் வந்திருக்கும்?!!! ஆனால் எங்கேனும் ஜெய்பீம் என்னும் வாசகமோ? அவர்களின் நீல நிறமோ?அவர்களின் கட்சிக்கொடியையோ,அவர்களின் இயக்க புத்தகங்களையோ திரையில் சில்ஹவுட்டிலேனும் காட்டியிருப்பார்களா?!!!

ஒரு ஜெய் பீம் காம்ரேடையேனும் மெட்ராஸ் படத்தின் அன்பு போல முழுதாகக் காட்டியிருப்பார்களா?!!! தலித் மக்களுக்கு சமூக விடுதலை பெற்றுத்தந்த அண்ணல் அம்பேத்கரின் படத்தையேனும் காட்டி காட்சிகள் ஏதேனும்  அமைத்துள்ளனரா?!!!

அவ்வளவு ஏன்? அம்பேத்காரை சினிமாவில் வரும் அரசாங்க அலுவலக காட்சிகளிலேனும் காட்டியிருப்பார்களா?!!!எனக்குத் தெரிந்து இல்லை, முதல் முறையாக இயக்குனர் ரஞ்சித் அசல் தலித் மக்களை அட்டக்கத்தி படத்தில் உலவ விட்டிருந்தார், இதிலும் அச்சு அசலாய் தலித் மக்களைத்தான் நாம் பார்க்கிறோம், அதற்கு அவர் தலைப்போ சப்டைட்டிலோ போட்டு அவர் விளக்கவில்லை அவ்வளவு தான்.

தென் சென்னை,பம்மலில் ஒரு செட்டில்மெண்ட் இருக்கிறது, அங்கே எந்த பெட்டி கேஸ் பிடிக்கவும் போலீஸ் உள்ளே சென்று ஜீப்பில் ரெய்ட் செய்து ஆள்பிடித்து வருவார்கள், இன்று அந்த நிலை நன்கு மாறியிருக்கிறது.எனக்கு அங்கே நிறைய நண்பர்கள் இருந்தனர்,அதே போலவே பல்லாவரத்தில் மலங்ஷாப் AKA மலங்கானந்தபுரம் என்னும் செட்டில்மெண்ட் இருந்தது,

 அங்கே கால்பந்து விளையாட்டை தான் சிறுவர்களும் இளைஞர்களும் தீவிரமாக ஆடுவார்கள்.பாப் மார்லி படம் கூட நிறைய வீடுகளில் இருக்கும்,எனக்கு யார் என்று அப்போது தெரியாது,மைக்கேல் ஜாக்சனின் ஆல்பத்தை சிலர் அங்கே ஆடியும் பாடியும் அதகளம் செய்வார்கள், அதைத் கூடி ரசிப்பார்கள், அநேகம் சிறுவர்கள் இளைஞர்கள் அம்பேத்கார் டாலரை அவரை தெய்வமாக எண்ணி அணிந்திருப்பார்கள். அங்கே பெரிசு என அழைக்கப்படும் மாட்டுக்கறி ஸ்டால்கள் சாதாரணமாக பார்க்க முடியும். பெரிசு என்று மாட்டுக்கறியை அட்டக்கத்தி படத்தில் சொல்லுவர். [LIG=low income group] [MIG=MIDDLE INCOME GROUP] [HIG=HIGH INCOME GROUP]ஹவுசிங்குகள் கேள்விப்பட்டிருப்பீர்கள், 

இதில் LIG என்றாலே அதில் தலித் மக்கள்  அநேகம் பேர் இருப்பார்கள்.இது கண்கூடு.அங்கே இயல்பாகவே மின் தட்டுப்பாடு அதிகமிருக்கும்,ரேஷனில் சரக்குகள் முன்னரே தீர்ந்துவிடும்.குடிநீருக்கு எப்போதும் அக்கப்போர் தான்,தண்ணீர் லாரி வரும் ஆனால் வராது கதைதான், கழிவு நீர் வெளியேற்றம், கட்டிட மராமத்து,என சுத்தமாக எதுவுமே இருக்காது,நிறைய கட்டிடங்கள் கட்டி 30 வருடங்களுக்கு மேல் இருக்கும்,பலசமயம் பால்கனிகள் ஸ்லாப் கம்பிகள் துருத்தித் தெரியும்.

அங்கே ஒரு கொட்டடியில் இலவச ட்யூஷன் பெரிய மாணவர்கள் சிறிய மாணவர்களுக்கு எடுத்துக்கொண்டிருப்பார்கள்,இலவச கம்ப்யூட்டர் மையமும் இருக்கும். ஒரு சாரார் கால்பந்து,உடம்பை பேணுதல், ஓட்டப்பயிற்சி, என்றிருப்பர், ஒருசாரார் கஞ்சா,போதை,சிகரட் பீடியுடன் ஜமாவில் இருப்பர், சாலையி நடைபாதையிலேயே மிகக் குறைந்த விலையில் இட்லி விற்கும் பாட்டியை அல்லது விதவைப் பெண்மணியை நாம் பார்க்கக் கூடும்.இவை கொண்ட ஒரு யதார்த்தமான சூழலைத் தானே மெட்ராஸ் படம் தன்னுள் கொண்டிருந்தது.இதை நுட்பமாக சித்தரித்ததில் தான் இயக்குனர் ரஞ்சித் வெற்றி பெற்றிருக்கிறார். தலித்தியத்தை வணிகரீதியான தமிழ்சினிமாவில் பதிவு செய்து வெற்றி பெற்ற ரஞ்சித்தை எத்தனை பாராட்டினாலும் தகும்.

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா போன்றவர்கள் வழமையாக தயாரிப்பது திராபைகளும் குப்பைகளுமே,அது போன்ற முதலை தயாரிப்பாளர்களை கதை விவாதத்தில் சமாளித்து தன் கதையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் படம் செய்வது எளிதல்ல.அட்டைக்கத்தி படத்துக்கும் இதே தயாரிப்பாளர் என்பதால் அதில் இவர் கற்ற பாடங்களும்,இவரின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையுமே இவருக்கு தனித்து இயங்க சுதந்திரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது,ஸ்டுடியோ க்ரீன் இவருக்கு தக்க சம்பளம் கொடுத்தார்களா? என்பதே என் கவலையாக இருக்கிறது,இப்படத்தையும் , போட்டோ ஷூட் மட்டுமே முடிந்திருக்கும் கருப்பர் நகரம் படத்தையும் இணைத்து ,இது திருட்டுக் கதை என்று கதை கட்டுகின்றனர், அப்படி சீன் பை சீன் காப்பியடிக்கும் சல்லித்தனமான இயக்குனர்களால் ரத்தமும் சதையுமான எந்தப் படைப்பையுமே நேர்மையாக தரமுடியாது என்பது தான் உண்மை, ரஞ்சித் என் பார்வையில் நேர்மையான படைப்பாளியாகத் தான் தெரிகிறார்.

நான் 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படித்தது பஞ்சாயத் யூனியன் துவக்கப்பள்ளி, 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தான்,எனக்கு மெட்ராஸ் படத்தில் வருவது போன்ற  மாந்தர்களை நன்கு பரிச்சயமானது அங்கே தான்.என்ன ஒன்று? மெட்ராஸ் படத்தில் வருவது வடசென்னை,

நான் வளர்ந்தது தென்சென்னை,ஆனால் இவர்களும் மெட்ராஸின் மாந்தர்கள் தாம். அப்போதே காளியைப் போல படிப்பிலும் கால்பந்தாட்டத்திலும் மிகத் துடிப்பாக இருந்து எஸ் ஐ செலக்‌ஷனுக்கும், ஹார்பரில் அதிகாரி பணிகளுக்கும், bhel போன்ற நிறுவனங்களிலும் நுழைவுத் தேர்வெழுதி பணியில் சேர்ந்து இன்று உயர்ந்த நிலையில் இருக்கும் மாந்தர்களை எனக்கு  நன்கு தெரியும்.அப்போதே தீவிரமாக ஜெய்பீம் இயக்கத்தின் காம்ரேடுகள் இயங்கி வந்ததைப் பார்த்திருக்கிறேன்.


என் உயிர் தோழன் திரைப்படம் பற்றி இங்கே சொல்லவேண்டும்,அப்படம் அரசியல் பேசும் சினிமாக்களின் அகராதியாக இருந்தாலும் நுட்பமான  டீடெய்லிங்கில் அது காலத்தை வெல்லவில்லை, ஏனென்றால் ஒரு ஆதிக்க சாதியில் இருந்து வந்த பாரதிராஜா என்னும் படைப்பாளியால் ஒடுக்கப்பட்ட மாந்தர்களின் அசல் வாழ்வை சித்தரிப்பதில் பல சமரசங்கள் செய்யப்பட்டிருக்கும். அதில் வரும் கிழவர் கதாபாத்திரத்தில் உண்மையில்லை,

அதிக ஒப்பனை தான் தென்பட்டது,வசனமும் அவர் பட்டினத்தார் பேசுவது போல பொடி வைத்துப் பேசினார், மெட்ராஸ் திரைப்படத்தின் ஜானி பலகாலம் ரவுடியாக இருந்து கஞ்சா,குடியாலும் தொடர்ந்த லாக்கப் விசாரணைகளாலும் உடல் பலம் , பேச்சுத் திறன் குன்றி  ஆனாலும் பழைய தவ்லத்தனத்தை கஷ்டப்பட்டு முன்னிருத்தும் ஒரு பாத்திரம். படம் இன்னொரு முறை பார்த்தால் மட்டுமே இதில் வரும் நுட்பமான வசனங்களில் பொதிந்துள்ள பொருளை ஒருவர் விளங்கிக் கொள்ள முடியும்.

படத்தில் இன்னுமொரு ஆச்சர்யம், டாஸ்மாக் சூழலை காட்சிப்படுத்தாமல் தவிர்த்தது, கட்டப் பஞ்சாயத்துகளை ஆனவரை மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியது. பின்னர் ஓத்தா,ஒம்மாள போன்ற சென்னையின் மிகச் சாதாரணமான கலைச் சொற்களின் புழங்கல்களை தவிர்த்தது.என சொல்லிக்கொண்டே போகலாம்.

கலையரசியாக வந்த காதரின் தெரசாவின் நடிப்பு உடல்மொழி சமகால மாநகரின் நவீன நங்கையர்களை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது,தலித்களில் நல்ல நிறமுள்ளவர்களை நான் பார்த்திருக்கிறேன்.அதை நிரூபிப்பதற்காக ரஞ்சித் கலையரசியின் அம்மாவையும் நல்ல சிவப்பான பெண்மணியாக காட்டியிருந்தார்.மாரியைப் போன்றே நம் ஏரியாவுக்குள் உலாவரும் வட்டம் மாவட்டங்களை நாம் பார்த்திருப்போம்,

ஒவ்வொரு கதாபாத்திரமும் ,நம்முள் அக்கம்பக்கத்தவர் போல பதிந்தது தான் படத்தின் பலம்.தவிர எல்லா ஃப்ரேம்களிலுமே நாம் காண்பது இயல்பான சூழல் தான்,உதாரணத்துக்கு காளியின் வீடு ஒரு LIG ஒரு படுக்கை அறை வீடு,காளியின் அப்பா ஹாலின் சோஃபாவிலேயே தூங்கி எழுவதை நாம் பார்ப்போம்,ஆர்ட் டைரக்‌ஷன் கூட கதையின் போக்கில் சரியான படிக்கு இயங்கியிருப்பதற்கு அக்காட்சி ஒரு சான்று.  

இதே போன்றே மேரியாக வந்த ரித்விகா,மேக்கப்பே இன்றி நிஜமான அடித்தட்டு சமூகத்தின்  இளம் மனைவி கதாபாத்திரத்தில் அப்படிப் பொருந்திப் போயிருந்தார்,படத்தில் அவர் வேலைக்குப் போவதில்லை என்றாலும், அடித்தட்டு மாந்தர்கள் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போனால் தான் அந்த மாதத்தை கடன் வாங்காமல் ஓட்ட முடியும். பல்லாவரம்,குரோம்பேட்டை,நாகல்கேனி,மெப்ஸ் போன்ற பகுதிகளில் இயங்கும் ஏற்றுமதி நிறுவங்களில் வேலை விட்டதும் ஆயிரக்கணக்கில் மேரிக்கள் கூடு திரும்ப விரைவதைப் பார்க்கலாம்.ரஞ்சித் அன்பு மேரி மாரி காளி போன்ற நுட்பமான கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்ததில் இருந்தே தனக்கு காஸ்டிங் சென்ஸில் இருக்கும் அதீத தன்னம்பிக்கையை நிரூபித்திருக்கிறார்.

படத்தில் வரும் சாவுப் புறப்பாடு பாடலில் மேளம் அடிப்பவர்கள், உடனாடுபவர்கள் அவர்கள் மது அருந்துவதை இயக்குனர் திணித்திருக்கலாம், அவர் அதைச் செய்யவில்லை. அதே போல நாயகனுக்கு முதல் காட்சியிலேயே அறிமுகம் குத்துப் பாடல் வைத்திருக்கலாம், செய்யவில்லை,முதலில் நாயகனின் தோழன் அன்புவைத் தான் நாம் அறிய வருகிறோம்,இது கனவா? நனவா? என கிள்ளிப் பார்த்த இடம் அது,

ஆல் இன் ஆல் அழகுராஜா என்னும் ஒரு திராபையில் இதே கார்த்திக் சிவகுமாரை அவர் நண்பர் சந்தானம் வாங்க போங்க என்று மிகவும் செயற்கையாக அழைக்கும் படி காட்சி வைத்திருந்தார் இயக்குனர் ராஜேஷ், இதில் அதே கார்த்திக், அன்புவைப் பார்த்து கட்சி செயலாளர் என்றால் சும்மாவா? என்று நட்பும் பாமரத்தனமுமாக கலாய்ப்பார்,

என்ன ஒரு மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் அது ?கார்த்திக் எப்படி ஒரு டைரக்டர் டார்லிங்காக மாறிப்போனார்,அல்லக்கை இயக்குனர்களை இனம் கண்டு கத்தரித்து விட்டு ஒரு அசல் இயக்குனர் சொல்படி கேட்டு இப்படி காளி பாத்திரம் செய்தார் ,என வியக்கிறேன்.

குறிப்பு:- நேற்று ஒரு இணைய மொன்னை,மெட்ராஸ் படம் தலித்தியம் பேசவில்லை என்று தி இந்துவில் கட்டுரை எழுதி தன் பாமரத்தனத்தை பிரஸ்தாபித்திருந்தது. இயக்குனரின் பேட்டியைப் படித்த பின்னாவது தெளிவடையட்டும்,அது போன்ற பிற்போக்கு ஆட்கள்.

இனி வருவது இயக்குனர் ரஞ்சித் தி இந்து தினசரிக்கு அளித்த பேட்டியின் தமிழாக்கம்:- 

தலித் அரசியலை வெளிப்படையாகவே பேசுகிறது 'மெட்ராஸ்'- இயக்குநர் ரஞ்சித் சிறப்புப் பேட்டி


  • இயக்குநர் ரஞ்சித்
    இயக்குநர் ரஞ்சித்
தமிழ் சினிமாவில் சாதிப் பிரச்சினைகள் மீதான அணுகுமுறை, தலித் மக்களின் வாழ்வியல் பதிவு உள்ளிட்ட விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது, 'மெட்ராஸ்'. இப்படம் குறித்து இயக்குநர் ரஞ்சித்திடம் விரிவாகப் பேசியதில் இருந்து...
தமிழ் சினிமா வரலாற்றில் திரை விமர்சகர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் கவனிக்கப்பட்ட வேண்டிய திரைப்படமாக 'மெட்ராஸ்' வேறொரு தளத்துக்கு கொண்டுசெல்லப்படிருக்கிறதே... இதற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
'மெட்ராஸ்' தலித்துகளைப் பற்றிய, அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றிய திரைப்படம். தலித்துகளின் கலாச்சாரம், வாழ்க்கையைப் பற்றி தமிழ் சினிமாவில் இதுவரை சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. வட சென்னை மக்கள் உயர்ந்த சிந்தனைகள் இல்லாதவர்களாகவும், வன்முறையாளர்களாகவும்தான் இதுவரை சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அங்குள்ள இளைஞர்களுக்கு ஹிப் ஹாப் இசை பிடிக்கும், மைக்கல் ஜாக்சன், கால்பந்து, பாப் மார்லி எல்லாமே தெரியும்.
அமெரிக்காவில் கருப்பர்களின் கலாச்சாரம் மாதிரி வட சென்னையிலும் பரவியிருக்கிறது. பெரும்பான்மையான இளைஞர்கள் நன்றாகப் படித்து, கடுமையாக உழைத்து, வாழ்க்கையில் நல்ல உயரங்களை தொடுகிறார்கள். வட சென்னையின் பரபரப்பான, துடிப்பான வாழ்க்கையை கொண்டாடுவதால்தான் ரசிகர்கள் இந்தப் படத்தை விரும்புகிறார்கள் என்று நினைக்கறேன்.
வட சென்னை மக்களைப் பற்றிய பதிவு, தமிழ் சினிமாவில் எவ்வளவு தூரம் சிதைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா?
உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்துகொண்டபோது, 'மெட்ராஸ் படத்தில் பேசப்பட்ட தமிழ், வட சென்னை தமிழ் இல்லை' என்று சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்துது. வேற என்ன மாதிரியான தமிழை வடசென்னையில் பேசுவதாக மற்றவர்கள் நினைக்கிறார்கள்? சென்னைத் தமிழ் என்று பலர் கருதிக்கொண்டு இருப்பது காலப் போக்கில் எல்லா அம்சங்கள் மாதிரியே மாறியிருக்கிறது. ஆனால், தமிழ் சினிமாவை பார்க்கிறவர்களுக்கு இருக்கிற புரிதல் வேறு.
வட சென்னை மக்களின் மொழி, அவர்களின் கல்வி அறிவு, விளையாட்டுத் துறையில் அவர்களிடம் உள்ள ஆர்வம்... இப்படி பல வருடங்களாக பொதுவில் ஏற்பட்டிருக்கும் கலாச்சார மாற்றங்கள் எதையுமே தமிழ்ப் படங்கள் பிரதிபலிக்கவில்லை. தமிழ் சினிமாவில் பிரபலமான கானா பாடல்கள்கூட குத்தாட்டப் பாடல்களாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மக்கள் எல்லா விதமான சூழலுக்கும் கானா பாடுவார்கள். அதனால்தான் என் படங்களில் கானாவை காதல் பாடலாகப் பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்.
இந்தப் படம் பற்றி தெரியாதவர்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?
என் பார்வையில், வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்ட இரண்டு பேரை பற்றிய படம்தான் 'மெட்ராஸ்'. அன்பு என்ற கதாபாத்திரம் அரசியல் அதிகாரத்தால் சமுதாய அமைப்பில் இருக்கும் பிரச்சினைகளை சரிசெய்யலாம் என நினைக்கிறான். ஆனால், காளி என்ற கதாபாத்திரம் அரசியலை ஒதுக்கி, கல்விதான் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நினைக்கறான். பிரச்சினைகளின் வேருக்கு போகணும் என்று நம்புகிறான். காளி பகுத்தறிவான, முற்போக்கான ஆள். அதனால், அன்பு சொல்கிற அரசியலுக்குப் பின்னால் அவனால் போக முடியவில்லை. பெரியார் - அம்பேத்கர் சித்தாந்தங்களைச் சார்ந்தது இது.
முக்கியமான பத்திரிகையாளர்கள் 'மெட்ராஸ்' படத்தின் அரசியல் குறியீடுகளை ஏன் தவறவிட்டார்கள் என்று நினைக்கிறீர்கள்?
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு அதுபற்றி தெரியவில்லை. இந்தப் படம் மிகவும் வெளிப்படையாகவே தலித் அரசியலைப் பேசுகிறது. உதராணத்துக்கு பார்த்தீர்கள் என்றால், காளி 'தீண்டாத வசந்தம்' நூலை படிக்கறான். அது தலித் இலக்கியத்தில் முக்கியமான படைப்பு. டாக்டர் அம்பேத்கரின் புத்தகங்களை நாயகனின் வீட்டிலும், மற்ற கதாபாத்திரங்களின் வீடுகளிலும் பார்க்கலாம். நாயகியின் தந்தை குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். தலித் அரசியலுடன் தொடர்புப்படுத்தக்கூடிய நீல நிறம், படம் முழுக்க நிறைந்திருக்கிறது.
எப்படி ஒரு விமர்சகர், 'எனக்கு தலித் அரசியல் தெரியாது என்றும், வட சென்னை மக்களின் வாழ்க்கை தெரியாது என்றும் சொல்லலாம் என எனக்குப் புரியவில்லை. மறைமுகமாக எதுவுமே படத்தில் இல்லை. எல்லாரும் பார்த்து புரிந்துகொள்கிற மாதிரிதான் இருக்கின்றன.
இது ஒரு சாதாரண பழிவாங்கல் கதை என்று முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி?
பிரச்சினைகளின் ஓர் அடையாளம்தான் அந்தச் சுவர். அந்தச் சுவரைச் சுற்றி நடக்கும் அதிகார மோதல் முடிவுக்கு வந்தால் மட்டுமே சமுதாயப் பிரச்சினைகள் முடிந்ததாகச் சொல்லவில்லை. அடக்குமுறை எப்போதும் காணப்படுகிறது. அதை காளி மாதிரியான ஆட்கள் சரியாகப் பகுத்தறிந்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் இந்தப் படம் கொண்டாடுகிறது எனச் சொல்லப்படும் விமர்சனங்கள் பற்றி?
இது அப்படிப்பட்ட படம் இல்லை. குறிப்பிட்ட சாதிகளை மட்டுமே உயர்த்திக் காட்டுகின்ற படங்கள் அனைத்துமே என் பார்வைக்குத் தவறானவைதான். சாதிகளும் பாகுபாடுகளும் ஒழிய வேண்டும் என்றுதான் இந்தப் படம் சொல்கிறது.
சாதி ரீதியான பிரச்சினைகளைப் படத்திக் காட்டும்போது, ஓர் இயக்குநரின் கடமை என்ன?
சாதி என்பது இந்திய சமுதாயத்தில் நிறைந்திருக்கும் யதார்த்தமான விஷயம். என்னைப் பொருத்தவரை, சாதிகளைப் பேசும் படங்கள், அந்தஸ்து, பாகுபாடு, சாதிய ஏற்றத்தாழ்வை திரும்பவும் திணிக்க முற்படும் சாதிய அமைப்புகளைப் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இந்த விஷயத்தில் இரானிய இயக்குநர்களை நான் ரசிக்கறேன். தங்கள் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் பழமைவாத சித்தாந்தங்களை, அங்கு இருக்கும் கடுமையான சென்சார் விதிகளையும் மீறி விமர்சிக்கிறார்கள். இந்தியாவில் அப்படிப்பட்ட சென்சார் இல்லை. இங்கு இருக்கும் இயக்குநர்கள் அந்தச் சுதந்திரத்தைக் காப்பாற்றி, அதேசமயத்தில் பொறுப்பான படங்களையும் எடுக்க வேண்டும். தமிழில் 'வழக்கு எண்' படம் யதார்த்தத்தை வலிமையாகச் சொன்ன படமாக எனக்குத் தெரிகிறது. அமைப்பில் இருக்கற பிரச்சினைகளை மக்கள் முன்பு சொல்லும்போது, அதை எப்படி தீர்க்கலாம் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.
சாதிய வேறுபாடுகளைப் பற்றி பேசுகின்ற படங்கள் ஏன் தமிழ் சினிமாவில் அரிதாகவே இருக்கின்றன?
ஒரு குறிப்பிட்ட சாதியை, சமூகத்தைச் சேர்ந்த மக்களை தூக்கிப் பிடிக்கற படங்களுக்கு இங்கே தனி வியாபாரம் இருக்கிறது. ஆனால், தலித்துகளின் வாழ்க்கை, கலாச்சாரத்தை சொல்லும் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. ஏனென்றால், அதற்குச் சந்தை இல்லை, வியாபாரம் இல்லை. அப்படிப்பட்ட தனி வியாபரம் இல்லை அல்லது உருவாக்கப்படவில்லை என்ற காரணத்தினாலயே, அந்த சமூகத்தில் இருந்து வந்து, வெற்றி அடைந்த நடிகர்களும் இயக்குநர்களும் இருந்தும்கூட, தலித் கதாபாத்திரங்களும், கலாச்சாரமும் உள்ளடக்கியப் படங்கள் எடுக்கப்படுவதில்லை.
நாமதான் அந்தச் சந்தையை உருவாக்க வேண்டும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 'மெட்ராஸ்' சரியா ஓடாது என்று பலர் கணித்தார்கள். ஆனால், அவர்களின் கணிப்பு இப்போது பொய்யாகிவிட்டது.
© 'தி இந்து' ஆங்கிலம்
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)