போபால் விஷவாயு பேரழிவு-மரித்த உயிர்களுக்கு 25 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

போபால் விஷவாயு கசிவு சம்பவம் இந்த நூற்றாண்டு பாரதத்தின் பெருந்துயரம் என்றால் மிகை ஆகாது, சுதந்திர இந்தியாவில் மக்கள் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் எத்தகைய தொழிற்சாலையையும் நிறுவிவிட்டு கொள்ளை லாபம் உடனடியாகப் பார்க்க முடியும், அப்படிப்பட்ட பொதுச்சந்தை இது. ஒருவேளை அந்த நிறுவனத்தால் பேரழிவு ஏற்பட்டாலும் மந்தமான அரசியல் மற்றும் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் , லஞ்ச லாவன்யம் இவைகள் மூலம்  நிறுவனத்தின் முதலாளிகள் எளிதாய் தப்பிக்க முடியும் என்பதை விரிவாய் உலகுக்கு உரைத்த துயரசம்பவம்.

1984ஆம் ஆண்டில் டிசெம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவில் வெடித்த யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பாய்லரில் இருந்து வெளிப்பட்ட  மெத்தில் ஐசோசயனைடு (எம் ஐ சி ) methyl isocyanate (MIC)  வாயு காற்றில் கலந்து இந்த கொடிய பேரழிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட  அரசின் அதிகாரபூர்வமான இறப்பு 2,259 பேர்களாம்.

முதல் கட்டமான இறப்பு விகிதம்  புயல் வேகத்தில் உயர்ந்து 72மணி நேரத்தில் 10000 ஆக உயர்ந்ததாம் இது ஊடகங்களில் வந்த செய்தி. மத்திய பிரதேச அரசு வழக்கம் போல சுணக்கத்துடன் செயல் பட்டு இறுதியாய் கணக்கு காட்டியது வெறும் 3,787 இறப்புகளாம் . இதில் என்ன ஒரு துயரம் என்றால்?மருத்துவமனைகளில்  இறப்பு சான்றிதழ் தராததாலும் அரசு அவசர அவசரமாக அனாதை பிணங்களை ஒன்றாக கொட்டி சவ அடக்கம் செய்ததாலும் 10000 பேர்களுக்கும் மேலான இறந்தோர் பெயர்கள் கணக்கிலேயே வரவில்லை என்பது வருத்தமான உண்மை.

ரண்டாம் கட்டமாக இறப்பு விகிதம் இதுவரை 25000 மேல் என்கின்றன ஊடகங்கள். இவர்கள் அனைவரும் விஷவாயு தாக்கி அதன் பக்கவிளைவுகளால் பீடிக்கப்பட்டு இதுவரை அற்ப ஆயுளில் உயிர்விட்டவர்கள். 40000 பேர்களுக்கும் மேலாக உடல் ஊனம். மனச்சிதைவால்  பாதிக்கப்பட்டவர்களாம்.

ன்னும் இந்த போபால் விஷவாயு கசிவு பேரழிவுக்கு காரணமான  வாரன் ஆண்டர்சனும் மற்றும் எந்த ஒரு கார்பொரேட் நயவஞ்சகனும் தண்டிக்கப்படாததை விட ஒரு அவலம் உண்டா? இவர்களா இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண்பர்?  அந்த யூனியன் கார்பைட் நிறுவன சண்டாளன் தன் மொத்த நிர்வாகத்தையும் வசதியாக Dow Chemical ற்க்கு 2001 ஆம் ஆண்டில் விற்று விட்டானாம்.இது எப்படி இருக்கு?



லகின் எந்த மூலையிலாவது இது போல பேரழிவை நிகழ்த்திவிட்டு தப்பிக்க முடியுமா? பாதிக்கப்பட்ட  521,000  பேர்களுக்கு கால் நூற்றாண்டுகளுக்கு பின்னர் கிடைத்த இழப்பீடு எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்? தலைக்கு வெறும் 500 டாலர்கள் பிச்சைக்காசு (சுமார் 23000ரூபாய்) இதை வைத்து போன உயிரை திரும்பப் பெறமுடியுமா? இழந்த பார்வை கிடைக்குமா? செயழிழந்த உடல் அங்கங்கள் செயல் பெறுமா ? புற்று நோயால் பீடிக்கப்பட்டவர் ,குணமடைவரா? 20 வயதிலும் பூப்பெய்தாமல்  போன இளம் பெண்கள் பூப்பெய்துவரா? கருப்பை கோளாறுகளை பிறப்பிலேயே கொண்ட 20 களிலுள்ள பெண்கள் தாய்மை அடைவரா? இழந்த சுகாதாரம், நல்ல சுற்றுச்சுழல் திரும்பவருமா? நிச்சயம் வரவே வராது.

முன்பே இதைப்பற்றி மேலோட்டமாக படித்திருந்தாலும் , விரிவாய் தெரிந்துகொள்ள உதவியது குரல் வலை என்னும் வலைதளம் தான், இதில்  வெளிவந்த யார் முழித்திருக்கப் போகிறார்கள்? என்னும் தொடரின் 9 பாகங்களும் அந்த 1984 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கே உங்களை கைபிடித்து கூட்டிச்சென்று நடந்ததை நீயும் பார் என காட்டி உருக வைக்கும்.

தை நீங்களும் படித்து பல உண்மைகளை உணருங்கள். விஷவாயுவின் கோரப்பிடியால் பலியான அப்பாவி உயிர்களுக்கு இந்த தருணத்தில்அஞ்சலி செலுத்துவோம், நம் குடியிருப்புப் பகுதியில் எதேனும் இடர் விளைவிக்கும் நிறுவனம் இருந்து,சமூக நிறுவனங்கள் அதை எதிர்த்து போராடுமே ஆனால் அதில்  நாமும் முடிந்தவரை பங்கெடுத்துக்கொள்வோம். இனியொரு விஷவாயு தாக்குதல் தவிர்ப்போம்.

தை இப்போது  ஹெரால்ட் & குமார் புகழ் கல்பென் மோடி நடிப்பில் Bhopal: Prayer for Rain என்னும் பெயரில் ஆங்கிலப்படமாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம், அதை ஸ்லம் டாக் மில்லியனர் போல கேவலமாக எடுக்காமல் நடந்ததை நடந்தது போல எடுத்தால் நலம். எனக்கு எப்போதுமே அன்னிய தயாரிப்பில் நம் தேசத்தைப்பற்றி எடுக்கும் திரைப்படங்கள் என்றாலே ஒரு வித ஒவ்வாமை உண்டு, விதிவிலக்கு  காந்தி. கல் பென் இந்தியாவின் குஜராத் பூர்வாங்கம் கொண்டவர். ஒபாமாவின் அரசவையில் வெள்ளை மாளிகையின் மக்கள் தொடர்பு இலாகாவில் துணை இயக்குனராக அங்கம் வகிக்கிறார். ஒபாமாவுடன்  தேர்தல் பிரசாரத்தில் இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. எதோ தாய் தேசத்துக்கு  உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாவிட்டால் சரி.

போபால் விஷவாயு பேரழிவு-மரித்த உயிர்களுக்கு 25 ஆம் ஆண்டு  நினைவு அஞ்சலி செலுத்துவோம், இது பற்றிய மேலதிக தகவலகள் தெரிந்தால் மூத்த பதிவர்கள் நினைவு கூர்ந்து பின்னூட்ட்மிடுங்கள். அப்போது எனக்கு ஐந்து வயது. நாங்களும் அதை நன்கு உணர ஏதுவாய் இருக்கும்.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


//////////////////////////////////////////////////

இது தொடர்பான பதிவர் ஜோதியின் சிறப்பான பதிவு -

இது தொடர்பான பதிவர் zero to infinity ன் சிறப்பான ஆங்கில பதிவு:-

இது தொடர்பான பதிவர் மணற்கேணியின் சிறப்பான பதிவு:-

இது தொடர்பான பதிவர் அதியமானின் சிறப்பான பதிவு:-



மேற்கண்ட அனைத்து பதிவுகளையும் தவறாமல் படித்து வாக்களித்து பின்னூட்டமிட்டு இந்த நினைவஞ்சலியில் பங்கெடுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.
===============
நம் நாட்டின் நீதியரசர்கள் மீது எனக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை,ஒவ்வொருவனுக்கும் ஆழ்மனதில் பழிவாங்கும் உணர்வு இருந்துகொண்டே இருக்கும்,சிலர் அதை தட்டி எழுப்பி இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி வாங்கிவிடுவர்,பலர் இந்த உலக மகா நீதியரசர்களை நம்பி 26 வருடம் காத்திருப்பர்,இந்த கொலை பாதகத்தை ஒருவன் இஸ்ரேலில்
நிகழ்த்தியிருந்தால் கொலைகாரர்கள் எங்கே போய் பதுங்கினாலும் முனிக் படத்தில் வருவது போல அவனை தேடிப்போய் கருவருத்திருக்கும்.இது பாரத தேசமாயிற்றே!ஃப்ரீ கண்ட்ரி ஃபார் ஆல் சார்ட் ஆஃப் க்ரைம்.பெஸ் ஆஃப் லக்,கரப்டட் கார்பொரேட்ஸ்.
=========
இதையும் வலியுடன் படித்து விடுங்கள்,என் மனதுக்குள் அசிங்க அசிங்கமாய் திட்டுவதற்கு எந்த கொம்பனும் புடுங்கமுடியாது.


அமீரகம் திரும்பினேன்

ருமை நண்பர்களே ,சான்றோர்களே,

ன்றுடன் 23 நாட்கள் விடுமுறை முடிந்து அரைமனதுடன் அமீரகம் திரும்பியேவிட்டேன்,ஊருக்கு போகும் போது இருந்த வேகமும் ஆர்வமும் திரும்ப வருகையில் சுத்தமாக வடிந்தேதான் போனது, இந்த முறையும் நிறைய நண்பர்களை சந்திக்க முடியவில்லை, எவ்வளவு தான் விடுப்பு எடுத்தாலும் போதவில்லை,என் பழைய அலுவலக நண்பர்கள்,உடன் படித்த நண்பர்கள்,பதிவுலக நண்பர்கள்,உறவினர்கள்,என நான் விஜயம் செய்ததும் அவர்கள் என்னை பார்க்க விஜயம் செய்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள்.

ரில் இறங்கிய மறு நாளே என் சென்னை வருகிறேன் பதிவை பார்த்து டோண்டு ஐயா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார், நான் அவரை தெரியும் என்றும் நேரம் கிடைக்கும் போது படிப்பேன் என்றும் சொன்னேன்.அவர் குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிடுமாறு உரிமையுடன் அறிவுரை வழங்கினார்.

1
ரண்டு பதிவுலக சந்திப்பை கலந்துகொள்ள முடியாமல் இழந்துவிட்டேன், ஒன்று உலக சினிமா திரையீட்டு நிகழ்ச்சி எல்டாம்ஸ் சாலையில் கிழக்கு பதிப்பகத்தில் நடந்தது,மற்றொன்று கே.கே நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழா.ஊருக்கு வந்ததும் முன்னமே சொல்லியிருந்தபடி ஷண்முகப்ப்ரியன் ஐயாவை அவரது இல்லத்தில் சந்தித்தேன்,மிக அருமையான சந்திப்பாக அமைந்தது அது, ஐயா அவர்கள் மிகுந்த பணிச்சுமைக்கு இடையிலும் என்னை சந்தித்தது அவர் மீது மிகுந்த மதிப்பைத் தந்தது. நானும் என் மனைவியும் சென்றிருந்தோம், ஐயாவின் துணைவியார் அவர்கள் எங்களை உபசரித்த விதம் மிக அருமை, நல்ல சுவையான உணவுகளும் அருமையான தேனீரும் தயாரித்து தந்தார்,அன்று சாய்பாபாவின் பிறந்த நாள் என்பது கூடுதல் விஷேஷம்.மீண்டும் அடுத்தவாரத்தில் சந்திப்பதாக முடிவு செய்து பின்னர் இருவருமே பிற வேலைகளில் மூழ்கிவிட்டதால் சந்திக்க முடியவில்லை, பின்னொரு சமயம் அவசியம் சந்தித்து அளவளாவ வேண்டும். நன்றி ஐயா.
3டுத்ததாக ரோமியோபாய் என்னும் ராஜராஜனை என் வீட்டில் அழைத்து சந்தித்தேன்.அருமையான மனிதர்,ஆள் ப்ளாக்கில் உள்ள போட்டோவிற்கும் நேரில் பார்ப்பதற்கும் படு வித்தியாசம், நேரில் செம ஸ்மார்டாக இருந்தார்.என் நண்பரின் சாண்ட்விச் ஷாப்பான புத்தா ஹட்டிற்கு அழைத்துப் போனது தான் தாமதம் இருவரும் நன்கு நண்பர்களாகிவிட்டனர்.பின்னர் என் வீட்டுக்கு அவரை அழைத்து போய் நிறைய பேசினோம். அவர் அதைப்பற்றி இங்கு பதிவாக போட்டிருக்கிறார். தடாலென்று வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் எடுத்து எனக்கு கையொப்பமிட்டு பரிசளித்து வியப்பில் ஆழ்த்திவிட்டார்.அவர் கொட்டும் மழையிலும் எண்ணூரில் இருந்து என்னை பார்க்க வந்துவிட்டு சந்திப்பை முடித்து கிண்டிக்கு அவர் அலுவலகத்திற்கு இரவுப்பணிக்கு சென்றது மறக்க முடியாது,இந்த பதிவுலகம் நட்புக்கு ஒரு பாலம் என்பது இதன் மூலம் விளங்கியிருக்குமே? நன்றி ராஜராஜன்.

2டுத்ததாக ஜாக்கிசேகர் அண்ணனை என் வீட்டில் வைத்து சந்தித்தேன். நிறைய பேசினோம்,ஜாக்கி அண்ணன் ஹைதராபாத் படப்பிடிப்புக்கு போயிருந்தபோது நானும் ஹைதராபாதில் இருந்தேன்,ஆனால் சந்திக்க முடியவில்லை,அவர் வீட்டில் இல்லாததால் நான் அவர் வீட்டுக்கு செல்ல முடியவில்லை, மிகச்சிறந்த பண்பாளர் சொன்னதுமே , நீ அலைய வேண்டாம், வீட்டோட நேரம் செலவிடு, நான் இன்று அந்த பக்கம் தான்  வருகிறேன் உன்னை நானே வந்து பார்க்கிறேன் என்று சொல்லி சரியாக என் வீட்டை கண்டுபிடித்து, போன் செய்தார், செம ஆச்சரியம் அது, ஒரு முறை தான் விலாசம் கொடுத்தேன்.அண்ணனுடன் பல விஷயங்கள் பேசினோம், என் மகள் வர்ஷினி நன்றாக பழகிவிட்டாள், ஜாக்கி அண்ணன் பழக மிக இனியவர்,அடுத்த முறை நிச்சயம் உங்கள் வீட்டுக்கு குடும்பத்தோடு வருவோம் அண்ணே.

4டுத்ததாக தண்டோரா அவர்களை எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள நல்லதம்பி சாலையில் உள்ள விக்னேஷ் மஹால் திருமண மண்டபம் அருகே வைத்து சந்தித்தேன், அப்போதே நேரம் ஆகிவிட்டமையால் வீட்டுக்கு அவரால் வர முடியவில்லை,தல கேபிள் ஷங்கருக்கு போன் போட்டுத்தர பேசினேன்,மிக அன்போடு பேசினார், நேரில் தான் சந்திக்க முடியவில்லை, அடுத்த முறை கண்டிப்பாக நேரில் வந்து சந்திக்கிறேன் தல, தண்டோரா அவர்கள் எனக்கு கார்ன்ஃப்ளேக்ஸ் சூப் வாங்கித்தந்தார். அவர் அலுவலகம் தான் பல சென்னை பதிவர்கள் கூடும் இடம் என அறிந்தேன். அடுத்த முறை அவரின் அலுவலம் போகணும்,அங்கு வைத்து நிறைய பதிவர்களை சந்திக்க முடியும்.

டுத்ததாக அமீரக பதிவர் கோபிநாத்தை என் வீட்டில் வைத்து சந்தித்தேன்.அவசர பணிகளுக்கிடையிலும் வீட்டுக்கு வந்து சென்றது மனதில் நீங்கா இடம் பிடித்த ஒன்று. அவர் அப்போது சன் டீவியில் வந்த வேட்டைக்காரன் விளம்பரத்தை பார்த்துவிட்டு, தயவுசெய்து எலோரும் இந்த படம் பார்த்தவுடன் மாறனுக்கு ”படம் பாத்தாச்சு” என்று கடிதம் எழுதிப்போடுங்கள்,அப்போது தான் அந்த விளம்பரம் போடுவதை நிறுத்துவார்கள் என்றாரே பார்க்கணும்?

டுத்ததாக தேவியர் இல்லம்.ஜோதிஜி அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார்.அதுவும் மிகுந்த மகிழ்ச்சியளித்தது.இன்னும் நிறைய பதிவர்களின் தொலைபேசி எண்கள் தெரியாததால் பேச முடியவில்லை.சென்னை பதிவர்கள் ,தமிழக பதிவர்கள் மற்றும் உலக பதிவர்கள் அமீரகம் வரும் போது அவசியம் பின்னூட்டவும்,இங்கு சுமார் 30 பதிவர்கள் இருப்போம்,சந்தித்து விடலாம்.
 
ந்த முறை சென்னைக்குள் சைதாப்பேட்டை, ஆற்காடு சாலை, தி. நகர் போன்ற ஒரு சில இடங்களில் பைக் ஓட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது. என்னமாய் பதட்டம் ஏற்படுகிறது. எல்லோரும் அவசரத்துடன் வண்டி ஓட்டுகின்றனர். புதிதாய் திறந்த எல்லா மேம்பாலங்களிலும் பைக்கை ஓட்டி வலம் வந்தேன், மிக அருமையான அனுபவமாக இருந்தது அது. மேம்பாலத்தில் அதுவும் நம் ஊரில் வண்டி ஓட்டும் மகிழ்ச்சி இருக்கிறதே? உன்னதம்,

நான் மூன்று வருடங்களுக்கு முன்னர் தினமும் 40கி,மீ வண்டி ஓட்டியதற்கும் இப்போது உள்ள வாகன நெரிசலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளன, சென்னையில் ஒரு சில சாலைகள் நன்கு அகலப்படுத்தப்பட்டும், வாகனங்கள் வழிப்பாதை மாற்றம் செய்யப்பட்டும் உள்ளன. இந்த முறை சென்னையில் சீதோஷ்னமும் இதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஊருக்கு கிளம்பும் முதல் நாள் கலைஞர் காப்பீடு திட்டத்திற்கு குடும்பத்துடன் போய் க்ரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டது மறக்க முடியாதது.ஒரே போட்டோ ஐடியாக கொடுபார்களாம்,இ எஸ் ஐ கார்டு போல,  என் வீட்டாரின்  முழு குடும்ப ஐடெண்டிக்கு  மிகவும் முக்கியம் அது, அது என்னவோ கழக தொண்டர்கள் அனைவரிடமும் அப்படி மரியாதையுடன் பேசினார்கள், பெரிய ஷாமியானாவும் ,தண்ணீர் பாட்டில்களும் , 100 பேர் அமர பிளாஸ்டிக் சேர்கள் என ஒரு காலி மனையையே வளைத்திருந்தனர்.

ரேஷன் கார்டு மட்டும் குடுங்க சார், மீதி நாங்க பாத்துக்கறோம் என அவர்களே விண்ணப்பம் பூர்த்தி செய்தார்கள், அழகாக புகைப்படம் எடுத்தார்கள். இதை எல்லோர் வீட்டிலும் வந்து வெத்தல பாக்கு வைக்காத குறையாக அழைத்தது தான்  விளங்காத ஒண்ணு, [எங்கள் ஐந்தாம் வார்டில் அனைவரையும் கவர் செய்து விட்டனர் ] இதில் தனியாக ஊழியர்களையும், புகைப்படம் எடுக்க பெரிய வீட்டையும் வாடகைக்கு எடுத்திருந்தனர். எங்க ஏரியா கவுன்சிலர் ஓட்டு கேட்பது போல கூழைகும்பிடு போட்டு ,ரொம்ப நன்றிங்கம்மா , இது முக்கியமான டார்கெட் அம்மா என்றார்,வேலைக்கு சென்று வந்தவர்களுக்காக இரவு 9-00 மணி வரை கழக கண்மணிகள் இயங்கியது இன்னமும் புரியாத ஒன்று.  ஒண்ணுமே புரியலை உலகத்தில!!.இதை எடுக்காதவர்கள் உடனே எடுத்து விடுங்கள்.

ரேஷன் கடைக்கு போனால் எலக்ட்ரானிக் ஸ்கேல் இருந்தது.கம்ப்யூட்டர் பில் போடுகின்றனர், இது எல்லாமே புதிதாய் இருந்தது.விலைவாசி மிக மிக உயர்ந்துள்ளது கண்கூடாக காணமுடிகிறது.ஆனாலும் எல்லா இடங்களிலும் வியாபாரம் அமர்க்களமாக நடக்கிறது, மக்கள் எல்லா உணவகங்களிலும்,தள்ளு வண்டி கடைகளிலும்,பிரியாணி கடையிலும் அலை மோதுகின்றனர்.   எது போட்டாலும் வியாபாரமாகிறது வியப்பைத் தருகிறது, என்ன தான் வாங்கும் திறன் இருந்தாலும் சேமிக்காமல் இப்படி செலவு செய்தால் என்ன ஆவது?இந்த நிலை மட்டுமே என்னை கவலை கொள்ளச் செய்தது.இளநீர் 25 ரூபாய் தந்து குடித்தால் உப்பு கரிக்கிறது,அல்லது 50மில்லி மட்டுமே தண்ணீர் இருக்கிறது,வழுக்கை கூட இல்லை . தண்ணீர் கேன் வியாபாரம் கனஜோராக நடக்கிறது, பெயர் தெரியாத தண்ணீர் கேன்கள் பல்கிப்பெருகிவிட்டன. அரசே அதை முறைப்படுத்தி ரேஷன் கடையில் வழங்கினால் கூட தேவலை. மக்களுக்கு நல்ல பலனிருக்கும்.

கொசுக்கள் முன்பை விட பெரியதாகவும் திடகாத்திரமாகவும் பெருகிவிட்டன. கொசு மருந்தும் தினமும் அடிக்கின்றனர்.ஆனால் அதெற்கெல்லாம் பெப்பே காட்டுகின்றன கொசுக்கள். தண்ணீர் பாலில் போடப்பட்ட தேனீர் சிங்கிள் =6-00 ரூபாயாம்,எல்லோரும் வரிசையில் நின்று ரீசார்ஜ் செய்கிறார்கள், இப்போதைக்கு  ஒரு ரீசார்ஜ் கடை போட்டால் செம பிக்கப் ஆகும் போல.


ங்கள் ஏரியா பிரியாணி கடையில் ஒரு கோம்போ ஆஃபரை பார்த்தேன்.1/2 பிளேட் சிக்கன் / மட்டன் பிரியாணி, + 1/4 பிளேட் சிக்கன் 65, + 200 மில்லி கோக் = 99 ரூபாய் என்று, சக்கை போடு போடுகிறது பாஸ். நான் என் நண்பர்களுக்கு கூட்டிப்போய் வாங்கித்தந்தேன்.செம டீல்,செம வியாபாரம். இருப்பவர்கள் செலவு செய்வர் இல்லாதவருக்கு ஒரு ரூபாய் ரேஷன் அரிசி சோறு தான் நிதர்சனமா?

-உள்ளக்குமுறல்கள் தொடரும்-
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)