முற்பகல் செய்யின்..

இந்த சிறுகதை 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதைபோட்டிக்காக எழுதப்பட்டது.



























முற்பகல் செய்யின்..
நடக்கும் கதை...
(அசல் சென்னை வார்த்தை வழக்குகளுக்காக கெட்ட வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.மன்னிக்கவும்.)
சாமுவேல் என்னும் வீடு ப்ரோகரை (மன்னிக்கவும் மீடியெடேர்)
நாகவல்லியம்மன் கோவில் அருகில் எப்போதும் சிகரெட் பிடித்துக்கொண்டோ சாந்தி குட்கா மென்று கொண்டோ கூட படித்த நண்பர்கள் வேலைக்கு போய் வருகையில் வலுக்கட்டாயமாக பாதை மறிக்கப்பட்டு பிளேடு போட்டு தாங்காமல் நான் கூல் டிரிங்க் வாங்கி தருகிறேன் என்று இவனுக்கு அழுதுகொண்டே வாங்கி தரும் போதோ பார்க்கலாம், இவனைப் போன்ற சக மீடியடர்களும் பல்லாவரம் போக அநியாய வாடகை (40 ருபாய் )கேட்கும் ஆடோக்காரர்களும் அருகே இருப்பர். இவன் வாயை கிளறி புளங்காகிதம் அடைவர்,அவ்வளவு கவிச்சை.இவன் கண்கள் கடந்து போகும் சிறுமிகளை கூட அளவெடுக்காமல் விடுவதில்லை.எப்போதும் ஒரு தவ்ளத்தனமான பேச்சு ,பார்வை. இப்போது கத்திரி ஆகையால் வெண்ணிலா ஐஸ் கிரீம் கேட்டு வாங்கி சாப்பிடுவதாக கேள்வி..வாயில் மென்று கொண்டிருக்கும் பபிள் கம்மை பார்த்தாலும் கேட்ப்பான்,ஆசை படுவது எல்லாம் பெரிசு தான்,அறுக்கத்தெரியாதவன் இடுப்பில் ஆயிரத்திஎட்டு கதிர் அரிவாள் போல இவனுக்கு வியாபார யுக்திகள் பல ,ஒன்றும் உருப்படியாயிருக்காது.மனைவி எக்ஸ்போர்ட் கம்பனியில் வேலை பார்க்க பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் மாமியார் தயவில் படிக்க,துரை மூன்று வேலையும் நன்கு வயிறு முட்ட தின்பது ,ஒசிக்குடி,ஓசி பிரியாணி ,ஓசி டீ,ஓசி அவுட் கோயிங் கால்,என ஓசி உபயத்தில் வண்டி ஓட இப்போது பரபரப்பாய் உள்ள உடனடி மீடியெடேர்தொழிலில் தானும் குதித்தான், இவனுக்கு
தேர்தல் போது கவர் போட போவது,கவுன்சிலருக்கு கடைசி எடுபிடி காரியங்கள் செய்வது. பஞ்சாயத்தில் கடைகோடியாய் இருந்து கட்டிங் வாங்குவது ,போன்றவை உபதொழில்,வெள்ளை அடிக்க ஆள் பிடித்துக்கொடுத்தாலும் கமிஷன் வாங்கிக்கொள்வான்.திருமணம் பதிவு செய்ய மூன்று பேரில் ஒருவனாய் கையெழுத்து போட அழைத்துப்போன நண்பனிடம் 500 பணம் கேட்டு வாங்கியவன்.
அவனுக்கு தனியாக சென்று வீடு காலியாக உள்ளது பற்றி தகவல் அறிவது பிடிக்காது,அவனுக்கு 15 இஸ்த்திரி வண்டிக்காரர்களும்,3 கேபிள் டிவி காரர்களும் ,பூக்காரர்களும்,பலசரக்கு கடை ஜெராக்ஸ் கடை,என தகவலளிப்பர் .அந்த பல்லாவரம்,பம்மல் ,பொழிச்சலூர் ,அனகாபுத்தூர் ,சங்கர் நகர் எங்கு வீடு காலியாக ஆனாலும் தெரிந்துவிடும்,கிடைக்கும் ஒரு மாத வாடகை பண கமிஷனை வீட்டுக்காரனை காட்டிய பார்ட்டி ,வீடு தேடியவனை கூட்டி வந்த பார்ட்டி,பக்கத்து தெரு வரை வந்த பார்ட்டி,வீடு வாசல் வரை வந்து நீ போ நான் இங்கயே நிக்கறேன் என்று கழண்ட பார்ட்டி என பங்கு போட்டு பிரிக்க ஒரு நாளுக்கு ஐந்நூறு தேறும்,இவனுக்கும் இவன் கொடுக்கும் துப்பு மூலம் வாரத்திற்கு ஒரு ஆயிரம் கிடைக்கும்,இவன் வாடிக்கையாளர் எல்லாம் ஐடி ,பேங்க்,மற்றும் நல்லா பணம் சம்பாதிக்கும் கூட்டம்,இவன் டுலெட் போர்டை கண்ட உடன்,(அ) கேட்டவுடன் வீடுகாரரை பார்த்துவிடுவான், முகத்தில் வெந்நீரை ஊற்றினாலும் போகமாட்டான்.சார் 3500 க்கா சிங்கிள் பெட்ரூம் விடப்போறீங்க?என்ன சார் பொழைக்க தெரியாம?என்கிட்டே விடுங்க என்கிட்டே ஆளு 5000 குடுக்க ரெடியா இருக்காங்க ,கரண்ட் பில் யூனிட் 6 ருபாய் சரியா?அது தவிர ஹஸ்பன்ட் & வைப் ,சின்ன பாப்பா மூணு பேரு தான் , அப்பா அம்மாவெல்லாம் வரவே மாட்டாங்கோ,அவன் பஸ்சுலயும் ஷேர் ஆட்டோவிலும் போற ஆளு.வண்டி கிடையாது,ரெண்டு பெரும் ஆபிஸ் போறதால தண்ணி செலவே இருக்காது,அது சரியில்லை இது சரியில்லைன்னு சொல்லவே மாட்டான்,என வாடகையை 2000 ஏற்றிவிடுவான்.அப்படி ஏற்றி விட்டு வாடகைக்கு வந்த ஆளை பார்த்து கமிஷன் வாங்கி தெருக்கோடியில் எல்லோரும் பகிர்ந்து டாஸ்மாக் சென்று இரண்டு மணி நேரம் குடித்துவிட்டு வீடு போவார்கள்,இது அவனுக்கு வாடிக்கையாக போய்விட்டது,இதனால் உடம்பு வேறு விஜயகாந்த் மாதிரி பெருத்துவிட்டது,ஒரு பக்கம் பார்த்தால் அப்படியே மேக்கப் போடாத விஜயகாந்த் மாதிரி இருப்பான்.டூப் கூட போடலாம்.அன்று மாலை ஒரு ஹவுஸ் ஓனர் மனதை கலைத்து இருக்கும் ஆளை காலி செய்து கொடு.நான் உனக்கு 5000 க்கு ஆள் உடனே இட்டாரேன் என்னா?என்று சொல்ல. இவனே டோக்கன் அட்வான்ஸ் 500கொடுக்க வீட்டுக்காரன் 2000 அதிகம் கிடைக்குதே என்று உடனே குடியிருப்பவரிடம் வாடகை ஏற்றம் பற்றி சொல்ல ,அவர்கள் பதற ,அதற்க்கு இவரும் ஒரு மீடிஎட்டேர் தான் இவர்கிட்ட கேளு என் வீடு எவ்ளோ வாடகை போவும்னு?என்று சொல்ல ,இவன் அந்த ஆளை தனியே கூட்டிப்போய்,இதோ பாருய்யா 3000 வாடகைக்கு பம்மல்ல வூடு கிடைக்காது ,வோணும்னா அனகாபுத்தூர்ல கணேஷ் தேட்டராண்ட வேண்ணா ஒன்னு காலியாவுது ....ஓகேன்னா பாக்கலாம்.என்று சொல்ல வீட்டுக்காரர் தலை சுற்ற சுவற்றை பிடித்துக்கொண்டார்.
அதன் பின்னே மறுபடியும் நாகவல்லியம்மன் கோவில் அருகே வந்து கரண்ட் கட்டாகிஇருந்தாலும் இவனிடம் மாட்டிய நண்பர்களிடம்ஒரு மணி நேரம் மொக்கை போட்டு வீடு வந்தால் பசங்க படுத்து விட்டனர்,மனைவி மட்டும் டிவி சீரியல் பார்த்துக்கொண்டிருக்க ,இவன் வந்ததும்... இன்னா ஒத்து துண்ணுட்டியா?இவன், ம்ம்ம் அசிங்கமாக சிரித்தான்(வழிந்தான்).இன்னா போவுது?
ம்ம்ம் நாடகம்.
இன்னா கோவம் டா?
வீட்டுக்காரன் வந்துட்டு போனான் ,
இன்னாவாம் அவனுக்கு ?
வாடகை வர்ற மாசத்துலேந்து 4000 ரூபாவாம் ,குடுக்க இஷ்டமில்லாட்டி வூட்ட காலி பண்ண சொல்லிட்டான்,அடுத்த பார்ட்டி நாளைக்கே வர ரெடியாம் ,
தெவ்டியாப்பய்யன்,.இன்னாடி இது தம்மாத்தூண்டு புறாக்கூண்டுக்கு குடுக்கற 2000 மே அதிகம்டி,நீ இன்னாடி சொன்ன?
மௌனம்.பின்னர் ஆக்ரோஷமாகி
ம்ம்ம் ,நீ தினம் பண்ணுற அநியாயம் இன்னிக்கு வீட்டுல காம்சிருக்குது.நீ குடி கெடுக்கறதால இங்க இப்படியெல்லாம் நடக்குதுயா. வாங்குற காசெல்லாம் எங்களுக்காவது குடுத்தியா?அல்லாம் அந்த டாஸ்மாக் தேவ்டியாளுக்கே வுட்டு நொலுந்துற ..இங்க பொண்டாட்டி புள்ள துன்னா இன்னா,துன்னாட்டி இன்னா?உன் வயிறு நிரம்பிடனும்,துன்றதும் அவ்ளோ.. பேல்றதும் அவ்ளோ.., வாடகை உழைச்சு குடுத்தா என்னை மாதிரி உரைக்கும்டா மாமாப்பயலே ...புள்ளீங்க இன்னா படிக்கிதுன்னு தெரியுமாடா? ,ஒனக்கு ஒரு மசுரும் கவலையில்ல,இதுக்கும் நான் தாண்டா அவுக்கணும்.. ,பாடு,இதெல்லாம் டீசென்ட்டான வசவுகள் ,நாடகம் முடிந்ததும் ,இவன் சேனல் மாற்றிய போது கேட்டாளே ஒன்று?அவன் எதற்கும் தொட்டு பார்த்துக்கொண்டான்.
தமிழக அரசு படம் போட்ட இலவச வண்ண தொலை காட்சியில் தேனருவி சானலில்
நீரில் நனைந்த நமீதா சரத்குமாரை பிணைந்து அர்ஜுனா ,அர்ஜுனா என்று பாட ,இவன் உற்சாகமாக ,படுத்திருந்த அவள் வேகமாக எழுந்து இவன் முகத்தில் எச்சில் துப்பி விட்டு போனாள். இவன் ஒண்ணுமே நடக்காத மாதிரி முகத்தை துடைத்து
ஒரே புழுக்கம் ஏசி போடனும் என்று சாந்தி பாக்கை வாயில் பிரித்துக்கொட்டிகொண்டு பாடலை பார்க்க ஆரம்பித்தான்.




தாயகம் சென்று வந்தேன்

சமீபத்திய தாயக விஜயம் பற்றி எழுத நினைத்தபோதெல்லாம் எழுத நேரம் கிடைக்காமல் போய் ஒரு வழியாக எழுத அமர்ந்தேன் ,இந்தியாவில் இருந்தது பதினைந்து தினங்கள் தான்.ஆனால்,இன்னும் ஆறு மாதத்திற்கு தேவையான தெம்பை ஏற்றிக்கொண்டு தான் வந்தேன்.

 முக்கிய நண்பர்களை இந்த முறையும் சந்திக்க முடியாமல் ஒரு பாட்டம் அழுது மன்னிப்பு கேட்டேன்.(ஊருக்கு கிளம்பும் தருவாயில்)புதிய மடிக்கணினி வாங்க எண்ணினேன்.அதிசயமாக பழைய மடிக்கனினியையே வெறும் இரண்டாயிரம் ரூபாயில் சரி செய்து கொண்டேன். 
 
மடிக்கணினி விலைகள் துபாயை விடவும் சென்னையில் பத்து முதல் இருபத்து சதம் விலை குறைவாக இருந்தது,நான் விலை பட்டியல் எல்லாம் வாங்கி மண்டையை பிய்துக்கொண்டும் கடைசியில் வாங்காமலே திரும்பினேன்.(ஆச்சர்யம் நம் ஊரில் உணவு பண்டங்கள் தவிர மற்ற அனைத்தும் விலை குறைவே.)நண்பர்கள் கேட்டால் மேலதிக விபரங்கள் தருகிறேன்.என்ன ஆச்சர்யம் என்றால் நம் ஊரில் சேவை வரி.மற்றும் வாட் வரியும் உண்டு.இருந்தும் விலை மலிவாகவே தெரிகிறது.(தற்போது ஒரு திர்காம் =13.50 ருபாய் ஆக உள்ளது இது முன்பை விட 1.50 ருபாய் அதிகம்,எனவே 
 
தாயகத்தில் பொருட்கள் மலிவாக இருப்பது போல தோன்றுகிறது.எப்போதுமே எலெக்ட்ரானிக் பொருட்கள் அமெரிக்காவில் நாற்பது சதம் குறைவு.சிங்கப்பூர்,மலேசியாவில் முப்பது முதல் இருபது சதம் குறைவு.அதற்கடுத்தபடியாக துபாயில்.(ஆனால் நண்பர்கள் இதை புரிந்து கொள்ளாமல் எனக்கு அது வாங்கி வாடா,இங்கு காசு தருகிறேன்.என்று சொல்லிவிட்டு வாங்கி வந்தவுடன் விலை அதிகம் என்பது வாடிக்கை.இந்த முறை அப்படி நிகழவில்லை.
 
தாயகம் வந்து இறங்கியவுடனே ஒரு உற்சாகம் வந்துவிடும்.பம்மல் செல்ல (மூன்றே கிமீ)ஆட்டோவிற்கு ரூ நானூறு கேட்டார்கள்.பேரம் பேசி இருநூறம்பதிற்கு வந்தான்.(ஆட்டோ ஓடுவது தான் உலகில் நாய் பிழைப்பு என்றும் அவர்களை பயணிகள் வஞ்சிப்பது போன்றும் பேசிக்கொண்டே போனான்,நான் எங்கே அதை எல்லாம் கவனித்தேன்.வழக்கம் போல நான் சொன்ன இடம் வேறு ஆட்டோ போகும் இடம் வேறு.நீங்கள் பார்த்து போட்டு கொடுங்கள் என்று கேட்டான்.நான் அவனிடம் எதுவும் பேசாமல் போய் வீட்டில் இறங்கி ரூபாய் நோட்டில் எச்சில் துப்பாத குறை தான்.வயிற்று எரிச்சலுடன் பணம் தந்தேன்.அவன் எதற்கும் அசரவில்லை.(இது எல்லாம் டாஸ்மாக்கில் தான் போய் செலவாகும்)
 
உண்மையிலேயே துபாய் டாக்ஸி பரவாயில்லை ,கொள்ளை அடித்தாலும் நான்கு பேர் ஏசியில் சொகுசாக பயணிக்கலாம்.பாதி போலீஸ் காரர்கள் ஆட்டோவை வாடகைக்கு (தினம் 250) விடுகின்றனர்.எல்லா கவுன்சிலரும் 20 முதல் 30 ஆட்டோ வைத்துள்ளனர்.ஆகவே யாரும் ஆட்டோ கொள்ளையை கண்டு கொள்வதே இல்லை.நேர்மையான ஆட்டோக்கரர்களும் இருக்கிறார்கள் என்று சொல்பவர்கள் அவர்களின் அலைபேசி என்னை என் போன்ற நண்பர்களுக்கு பரிந்துரையுங்கள்.கோடி புண்ணியம் உண்டு.(யாரும் தயவு செய்து மீட்டர் போட்டு மட்டும் சென்னையில் பயணிக்காதீர்கள்.அவன் கேட்பதை விட இரு மடங்கு வரக்கூடும்.(ஹீ,ஹீ)
 
அப்புறம் டாஸ்மாக் பாரில் நடக்கும் கொள்ளை மிக மோசம்.வழக்கமாக வந்து போகும் (தினம் ஐந்நூறு ரூபாய்க்கு ஏனும் குடிக்கும் வாடிக்கையாளருக்கு தான் சில பார்களில் உள்ளே செல்லவே அனுமதி(மீனம்பாக்கம் பார் ) கேட்கும் பீர் கிடைக்காது,கேட்ட எந்த சரக்கும் கிடைக்காது.குடிமக்கள் கவலைப்படாமல் கிடைத்ததை குடிக்கிறார்கள்.குளிர்ந்த மது புதியவர்களுக்கு கொடுப்பதே இல்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு வியாபாரம் செய்கிறார்கள்.

எல்லா சரக்கும் ஐந்து முதல் பத்து ருபாய் அதிகம் வைத்தே விற்கிறார்கள்,அனாலும் எல்லோரும் வாய் பொத்தி வாங்கி செல்கிறார்கள்.ஒரு மணி நேரம் மதிய நேரத்தில் பாரில் தினம் சென்று குடிக்கும் என் வேண்டிய மற்றும்,வேண்டாத நண்பருடன் சென்று அமர்ந்து பார்த்ததில் கொஞ்சமும் சுத்தம் இல்லாத இடம் டாஸ்மாக் பார் என கண்டேன்.
கொத்தனார்கள் மதிய நேர இடைவெளியில் வந்து 90 முதல் குவாட்டேர் வரை சாப்பிட,விற்பனை பிரதிநிதிகள் பீர் சாப்பிட்டு சென்றனர்.மாணவர் நால்வர் (விடுமுறை அல்லவா?)ஒரு ஆப் பிராந்தி வாங்கி (சுத்த விரும்பிகள்)நான்கு பிளாஸ்டிக் தம்ப்ளர்களையும் தண்ணீர் பாக்கெட் கொண்டு பீய்ச்சி கழுவினர்(கொடிய வியாதிகளில் இருந்து தப்பிக்க வாயிருக்கும்)பின்னர் கண்ணை மூடிக்கொண்டு ஒரே மூச்சில் குடித்து விட்டு,மிகவும் பெருமிதத்துடன் ஓத்தா என்றனர்.
 
அடுத்து வந்தது மீனம்பாக்கம் கார்கோ ஊழியர்கள் ,மூன்று வேலையும் குடிப்பார்களாம்,கணக்கு கூட உண்டாம்,தற்காலிக ஊழியர் ,நிரந்தர ஊழியர் என அனைவரும் ஆஜர்,(தற்காளிகர்கள் நிரந்தர ஊழியரை ஐயா என்றோ அண்ணன் என்றோ அழைக்கிறார்கள்.அவர்கள் முன் அமர்ந்து மது அருந்தினாலும் புகை மட்டும் பிடிப்பதில்லை,(மரியாதை)ஒருவர் தலா 1 பீர் ,1 க்வாட்டேர் ,அதில் மிக்ஸ் செய்ய செவென் அப்,சிக்கன் 65 என குறைந்தது 300 க்கு குடிக்கின்றனர்,2 மணி நேரம் மதியம் உணவு இடை வேலையின் போது ரசித்து குடிக்கின்றனர்.(நான் கூட ஏன்டா ?இங்கு வந்து சேரவில்லை என்று ஆதங்கப்பட்டேன்,

ஆனால் என்னால் எல்லாம் சேரமுடியாது.(ஒரு நாளைக்கு 900 ரூபாய்க்கு குடிக்கும் இவர்களுக்கு எவ்வளவு வருமானம் இருக்கும் என்று நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்.(ஆனால் மனிதர்கள் ரொம்ப நல்லவர்கள் ,ஓசிக்குடி குடிப்பதில்லை,தனி பில் தான்,ரியல் எஸ்டேட் போன்ற தன்நிகரற்ற தொழில்களும் உண்டு,நான் எல்லார் வாயையும் பார்த்தேன்,ரொம்ப பொறாமையாக இருந்தது.அனாலும் நினைத்துப்ப் பார்க்க வெட்கமாக இருந்தது,நேர்மையான வழியில் சம்பாதிக்காத காசு ஒரு காச என்று?
தாயக அனுபவங்கள் தொடரும் -
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)