சண்டே இண்டியனில் வெளிவந்த இயக்குனர் அனுராக் காஷ்யபின் பேட்டி

அருமை நண்பர்களே!!!,சண்டே இண்டியனில் வெளிவந்த இயக்குனர் அனுராக் காஷ்யபின் முக்கியமான பேட்டி, அவரின் படங்கள் உருவாகும் சூழலை, இவின் மாற்று சினிமாக்கள் உருவாக்கும் போக்கை புரிந்து  கொள்ள உதவும். 

‘‘மக்கள் ரசிக்கும்வரை முயற்சிப்பேன்" ஸ்பிரிஹா ஸ்ரீவஸ்தவா | Issue Dated: ஜூன் 10, 2012 |நன்றி சண்டே இண்டியன்

இந்திப் பட இளம் இயக்குநர் அனுராக் காஷ்யப், தன் படங்களின் நவீன அணுகுமுறைகள், கதைகள் மூலம் தூசு படிந்த இந்திய மனச்சாட்சிகளை உலுக்குபவர். அவரது புதிய படம் ‘கேங்க்ஸ் ஆப் வாசிபூர்’ வெளிவர இருக்கிறது. இந்தப் பேட்டியில் அனுராக் தன் இயக்கம், குடியிலிருந்து மீண்டது உள்ளிட்ட பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

உங்களது ப்ளாக் ஃப்ரைடே, குலால், தேவ் டி அல்லது நோ ஸ்மோக்கிங் என அனைத்துப் படங்களுமே பிரச்னைகளை சமாளிப்பது குறித்த படங்கள்.விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக நீங்கள் படம் எடுக்கிறீர்களா?
இல்லை. அவை எனக்கு ஆர்வமூட்டுகின்றன. பேசத் தகுதியான பிரச்னைகளைப் பற்றி நான் படங்கள் எடுக்கிறேன். பிரம்மாண்டமான முறையில் உண்மையான வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத  ஜாலங்கள் காட்டும் சினிமாக்களை என்னால் ரசிக்க முடியும். ஆனால் என்னால் அந்த சினிமாவை எடுக்கமுடியாது. ஏனெனில் அதுபோன்ற திரைப்படங்களை எடுக்கும் திறன் என்னிடம் இல்லை.

டிஎன்ஏ பத்திரிகை வெளியிட்ட 50 முக்கியமான இந்தியர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளீர்கள். இந்த இடத்தை அடைவதற்கு உதவிய, தாக்கம் செலுத்திய நபர்களைப் பற்றி கூறுங்கள்?
ராம்கோபால் வர்மாவைக் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அவர் என்னை நிறைய பாதித்திருக்கிறார். இன்னொருவர் அதிகம் வெளியில் தெரியவராத ராபர்ட் ரோட்ரிக்ஸ். அவர் தனது முதல் படத்தில் எடுத்த கதை  மிகவும் வித்தியாசமானது. அதற்கு அவர் ஆய்வக எலியாக தன்னை மாற்றி பல சோதனைகளுக்கு உள்ளாக்கிக்கொண்டார். ஒரு படத்தை தனது வழியிலேயே சுயமாக நின்றுதான் உருவாக்க வேண்டும் என்பதை அவர்தான் உணரவைத்தார். இன்னொரு பெரிய தாக்கம் திருபாய் அம்பானி. நான் அவர் கதையைப் படித்திருக்கிறேன். குரு படத்திலும் பணியாற்றினேன். அவர் எந்த உதவியும் இல்லாமல் போராடியவர். பின்வாங்காமல் இருந்தவர்.

திரைத்துறைக்கு வரும்போது உங்களுக்கும் காட்பாதர் என்று யாரும் இங்கே இல்லை. நீங்களும் கடுமையாகப் போராடியே வந்துள்ளீர்கள். உங்கள் போராட்டம் நிறைந்த வாழ்க்கையில் கடுமையான காலகட்டம் எது?
பிறர் நினைப்பதுபோல அத்தனை கடினமானதல்ல எனது போராட்டம். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று உள்மனம் சொல்லிவிட்டால், நீங்கள் அதை நோக்கிச் சென்று அதைச் செய்வீர்கள். எனது போராட்டம் என்று பிறர் கூறுவதை நான் உண்மையில் போராட்டம் என்றே அழைக்கமாட்டேன். இவற்றை எல்லாம் செய்தபோது நான் குஷியையே அடைகிறேன். பாஞ்ச் படம் வெளியீட்டின்போதுதான் கடுமையான சூழ்நிலை. நான் முதலில் இயக்கிய திரைப்படமான அது வெளிவருவதற்குத் திணறியது. அதைவிட கடுமையான காலகட்டம் எதுவெனில் எனது திருமணப் பிரிவு தான்.

எல்லாமே குழப்பமாக இருந்த அந்த காலகட்டத்தில் திரைப்படக் கனவே வேண்டாம் என்று தோன்றியதா?
அந்த காலகட்டம் சற்று நீளமானது. ஆனால் எனக்கு வேறு எந்த வேலையும் தெரியாது. சினிமா செய்வதை விட்டுவிட்டு எனக்கு என்ன செய்யத் தெரியும்? இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்.
பாஞ்ச், தணிக்கைக்குழுவினரிடம் மாட்டிக்கொண்டது. ஒரு சினிமா இயக்குநராக, இதுபோன்ற ஒரு கலாசார கண்காணிப்பு அமைப்பு நமக்கு அவசியமா? ஒரு படத்தை பார்ப்பது தொடர்பாக மக்கள் தானே முடிவெடுக்கவேண்டும்?
நமது சமூக அமைப்பு மற்றும் பார்வையாளர்களிடம்தான் பிரச்னையுள்ளது என்று எண்ணுகிறேன். அது தணிக்கைத் துறையின் பிரச்னை அல்ல. தணிக்கைக் குழுவினரை நெருங்கிப் பார்த்தபோது அவர்களிடம் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை உணர்ந்தேன். தணிக்கைத் துறைக்கு தன்னாட்சி கொடுக்காத அமைப்பால் அவர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனர். பிராணிகள் நல வாரியம், தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் அமைப்புகள், சுகாதார அமைச்சகம் என எல்லா இடத்திலிருந்தும் அவர்களுக்கு அழுத்தங்கள் உள்ளன. தணிக்கைத் துறையை யாரும் சுதந்தரமாகப் பணியாற்ற விடுவதில்லை. மக்களிடமிருந்தும் அவர்களுக்கு அழுத்தங்கள் உள்ளன. உங்களுக்கு ஒரு படம் பிடிக்கவில்லையெனில் நீதிமன்றம் போகலாம். ஆனால் இங்கோ, போராடத் தொடங்கிவிடுகின்றனர். ஒருகட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக அது மாறிவிடுகிறது. கடைசியில் பழி, தணிக்கைத் துறையினர்மீது போடப்படுகிறது. ஓர் அமைப்பாக மக்களிடம்தான் பிரச்னை இருக்கிறது.
 
காட்சிகளை வெட்டாமலோ, தடை விதிக்காமலோ ஏ சான்றிதழ் கொடுத்துவிடுவது சரியான செயலாக உள்ளதா?
அடல்ட் திரைப்படம் என்பதற்கான அர்த்தத்தை இன்னும் பலர் முழுமையாகப் புரிந்துகொள்ள வில்லை. முதலில் நிறைய பேர் சினிமாத்துறையில் ஈடுபடுவது மோசம் என்ற பழைய மனநிலையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை. சினிமாவுக்குள் நுழைபவர்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்வார்கள் என்றே இன்னும் பலர் எண்ணுகின்றனர். அதேபோலத் தான் ஏ படம் என்பதைப் பற்றியும் அசிங்கமானது, மோசமானது, செக்ஸ் காட்சிகள் அதிகம் இருக்கும் என்றெல்லாம் நினைக்கின்றனர். ஏ படத்தைப் பார்ப்பது குறிப்பாக குழந்தைகளைப் பாழாக்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஒரு தீவிரமான அரசியல் படத்திற்குக் கூட ஏ சான்றிதழ் தரலாம். ஆனால் ஏ படங்களை நம் மக்கள் ஒழுக்கத்தோடு மட்டுமே தொடர்புகொண்டு பார்க்கின்றனர்.

தேவ் டி படம் மிகத் தைரியமாக எடுக்கப்பட்ட படம். தணிக்கைக் குழுவினர் அந்தப் படத்தை வெளியிடமாட்டார்கள் என்று பயந்தீர்களா? அதன் காட்சிகளை வெட்டிவிடுவார்கள் என்று எப்போதாவது நினைத்தீர்களா?
இல்லை. அப்படி நினைத்திருந்தால் என்னால் படம் செய்யமுடிந்திருக்காது. பார்வையாளர்கள் விரும்புவார்களா, விரும்பமாட்டார்களா என்று யோசித்துக்கொண்டு இருந்தால் சினிமாவில் ஈடுபடுவது சாத்தியம் அல்ல. நான் என்ன நினைக்கி றேனோ, அதை உருவாக்கும் சுதந்தரத்துடன் எனது படத்தை உருவாக்குகிறேன். அதைப் பார்க்கும் ரசனையை பார்வையாளர்கள் உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் அதை ரசிக்கும்வரை நான் பொறுமையாக முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.

அபய் மற்றும் கல்கியை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?
அபய் அந்தப் படத்தின் பகுதியாக ஏற்கெனவே முடிவு செய்யப் பட்டிருந்தார். நாங்கள் சேர்ந்து குடித்துக்கொண்டிருந்தபோதே அது முடிவாகிவிட்டது. நவீனகாலச் சூழலில் தேவதாஸ் கதையைச் செய்வது பற்றிய யோசனையோடு அவர் வந்தார். அபய்யை எனக்கு படம் எடுப்பதற்கு முன்பே தெரியும். கல்கி நடிகர்கள் தேர்வின்போது வந்தார். அவரை எங்கள் தயாரிப்பாளர்கள் அழைத்து வந்தனர். அவரை நான் படத்துக்குத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார்கள். நான் அத்தனை நிச்சயமாக இல்லை. ஆனால் பிறகு, எல்லாமே மாறியது...எல்லாம்(சிரிக்கிறார்)

உங்கள் படங்களுக்கான கருவை எப்படிப் பிடிப்பீர்கள்?
எங்கிருந்தெல்லாமோ வரும். புத்தகங்கள், பிறரின் வாழ்க்கை, நிகழ்வுகளை வாசிப்பது, மக்களின் நெருக்கடிகள், போராட்டங்கள் என்று படிக்கும்போதெல்லாம் என்னுடைய போராட்டம் என்பது ஒன்றுமே இல்லை என்று உணர்வேன். என்னைவிட எத்தனையெத்தனை நெருக்கடிகளை இவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை உணரும்போது பெரிய புரிதல் எனக்கு வரும். அதுதான் என்னைத் தூண்டி என்னை மாறிய நபராக உணரவைக்கும்.

படத்தை இயக்கும்போது படைப்புரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதா?
எனது முதல் படமான பாஞ்சில் பல முரண்பாடுகள் ஏற்பட்டன. பிறகு அப்படியான எதுவும் இல்லை. நான் என்ன செய்கிறேன் என்று அப்போது பலருக்கும் விளங்கவில்லை. இவன் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறான் என்றுதான் எல்லாரும் நினைத்தனர்.

திரைப்பட விமர்சனம் உங்களைப் பொறுத்தவரை முக்கியமா?
என் படத்தில் நட்சத்திரங்கள் இல்லை. என் படம் மட்டுமே நட்சத்திரமாக இருக்கமுடியும். விமர்சகர்கள் பாராட்டினால்தான் பார்வையாளர்கள் அரங்குக்கு வந்து படம் பார்ப்பார்கள். இல்லையெனில் பார்க்கமாட்டார்கள். யாராவது ஒருவரின் அபிப்ராயத்தைப் படிக்காமல் படம் பார்க்கப் போவதில்லை. அதனால் விமர்சகர்கள் முக்கியமானவர்கள்தான்.

உங்கள் படங்களில் பெரிய நட்சத்திரங்கள் இல்லை. ஏன்?
உண்மைத் தன்மை இல்லாத படங்களை எனக்கு எடுக்கத் தெரியாது. நான் எதார்த்த படங்களையே எடுக்க விரும்புகிறேன். உதாரணத்திற்கு, அசலான இடங்களிலேயே படங்கள்  எடுப்பதை விரும்புகிறேன். பெரிய நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு என்னால் தெருக்களில் படமெடுக்க முடியாது. அது ஒரு பிரச்னையாக இருக்கும். அவர்களால் கூட்டம் ஏற்படும். அதனால் படப்பிடிப்பு சிக்கலாகும்.

போதைப்பொருட்கள் மற்றும் குடியின் பிடியில் சிக்கி மீண்டவர் நீங்கள். நிறைய இளைஞர்கள் வாழ்க்கையின் விரக்தியைப் போக்க இதற்கு அடிமையாகின்றனர். அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நிறைய பேர் என்னதான் இருக்கிறது. பார்க்கலாம் என்ற குறுகுறுப்புக்காக இவற்றை நாடுகின்றனர். நீங்கள் மன அழுத்தத்தோடு இருந்தால் அதிலிருந்து விலகுவதற்கு இந்த போதை நிச்சயத் தீர்வு அல்ல. தற்போது நான் அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். என்னை அது எந்த அளவுக்குச் சீரழித் துள்ளது என்று தெரியும். அதனால் இந்தப் போதைகளை நான் யாருக்கும் பரிந்துரைக்கமாட்டேன்.  

தலப்பாவு [Thalappavu] [மலையாளம்] [2008]

ருமை நண்பர்களே,நலம் தானே?!!! இந்த பதிவின் வாயிலாக என் இனிய 2013 வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் ஒரு நல்ல உலக சினிமாவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,தலப்பாவு என்னும் படம் நீண்ட நாட்களாக பார்க்க எண்ணியிருந்தும் தரமான டிவிடி கிடைக்காதமையால் பார்க்க முடியாமல் இருந்தது, சமீபத்தில் வந்த ஒழிமுறி என்னும் படம் மிகவும் பிடித்துப்போய்விட, அதனை இயக்கிய மதுபால் தான் தலப்பாவுவின் இயக்குனர் என்பது நினைவுக்கு வர உடனே தருவித்து பார்த்துவிட்டேன்,மிக நல்ல நேர்த்தியான படைப்பை இத்தனை நாள் பார்க்காமல் விட்டிருக்கிறேன்.

இங்கே இரு விஷயம் பொதுவானவை ஓவர்ரேட்டட், அண்டர்ரேட்டட், தகுதியானவனுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்காமல் போவதும், தகுதில்லாதவனுக்கு அது விரைந்து கிடைப்பதும் தான். தமிழ்நாட்டில் இதே போன்ற வரலாற்று நிகழ்வுகள் நூற்றுக்கணக்கானவை உண்டு, ஆனால் அவற்றை சுயவரலாறாகவோ ஆவண ஆக்கமாகவோ எழுத்தில் கொண்டுவரும் துணிவு எந்த ஒரு புகழ்பெற்ற இலக்கியவாதிக்கும் இருந்ததில்லை என்பது கண்கூடு.

 1968-டிசம்பர் 25 ஆம் நாள் தஞ்சைமாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டுப் போராடிய அப்பாவி கூலித்தொழிலாளர்கள் அயோக்கிய பண்ணையார்  கோபால கிருஷ்ண நாயுடுவால் ஒரு குடிசைக்குள்ளே தஞ்சம் புகுந்திருக்க,  நயவஞ்சகமாக குடிசைக்கு வெளியே தீவைக்கப்பட்டு அவ்விரவில் 44 உயிர்கள் தீக்கிரையாக்கப்பட்டனர். அது சமீபத்தில் தான் ராமையாவின் குடிசை என்னும் புத்தகமாக வெளிவந்து இப்போது எளிமையான ஆவணப்படமாக ஆகியிருக்கிறது,ஆனால் இது போதாது,வெகுஜனத்துக்கு கடத்த சினிமா தான் நல்ல மீடியம்.

கீழ்வெண்மணியில் எரித்து கொல்லப்பட்ட 44 பேரில் பதிநான்கு குழந்தைகளும் 22 பெண்களும் அடக்கம். அந்த அப்பாவி கூலித்தொழிலாளர்களை எரித்துக் கொன்ற அதிபயங்கரத்தை எழுத்திலோ சினிமாவிலோ  இலக்கியவாதிகளோ சினிமா படைப்பாளிகளோ முன்னின்று ஆவணப்படுத்தவில்லை என்னும் குறை இப்படம் பார்க்கையில் நேர்ந்தது, அவ்வளவு நேர்த்தியான படைப்பு இது, நடந்த சம்பவத்தின் வீர்யத்தை நம்முள்ளே உணரவைக்கும் படைப்பு,  அங்கே தோழர் வர்கீஸ் என்றால் இங்கே தோழர் பக்கிரிசாமி.

தோழர் வர்கீஸ்
ஆனால் தோழர் வர்கீஸுக்கு கிடைத்த அங்கீகாரம் தோழர் பக்கிரிசாமிக்கு கிடைகாதது சோகம்,  இன்னும் கீழ்வெண்மணிக்கு நியாயம் கிடைக்காதது வெட்கக்கேடு,  ஒரே ஆறுதல் அன்று தீயில் இறந்த தாயின் புதல்வன் ஒருவனால் 12 வருடம் கழித்து கயவன் கோபால கிருஷ்ண நாயுடு கத்திக்குத்து வாங்கி கிழித்து போடப்பட்டு இறந்தது தான்,எப்போதும் அப்பாவி மக்களுக்கான நேமம்,  நியாயம் எல்லாம் சட்டத்தின் வெளியே தான் கிடைத்திருக்கின்றன என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் கீழ்வெண்மணி.

கேரளாவில் செண்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸில் 35 வருடங்களுக்கும் மேல் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு யதார்த்தமான போலீஸ்காரரின் சத்தியசோதனை தன்வரலாற்று புத்தகமான நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் அது தமிழில் குளச்சல் மு.யூசுப் அவர்களால் நல்ல ஜீவனான நடையில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது,அதன் மூலமான “ஞான் ஜீவிச்சு அந்திண்டே தெளிவு” என்னும் புத்தகத்தில் இருந்து சில பக்கங்களை எடுத்துக்கொண்டு தலப்பாவு என்னும் மிகச்சிறந்த நான்லீனியர் ஆக்கமாக படைத்திருக்கும் மதுபாலையும், தயாரிப்பாளர் நடிகர் மோகனையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.

=====

கேரளாவின் வயநாடு மாவட்டம் கன்னட நிலச்சுவான்தார்களிடம் பட்ட கொடுமைகளை உரைக்கும் களத்தில் ,1970களின் நக்ஸலைட் யுக பிண்ணனியில் துவங்குகிறது.

உள்ளூர் பழங்குடி விவசாயிகளும் வெளியூரில் இருந்து வந்து சுயதொழில் செய்து பிழைக்க குடும்பத்துடன் வரும் ஏழைகளும் தம் பாடுபட்டு சேர்த்த பணத்தை கிருஷ்ணணேண சைவர் (அதுல் குல்கர்னி) என்னும் நிலச்சுவாந்தாருக்கு கொடுத்துவிட்டு, அங்கே இருக்கும் செம்மண்ணை வெட்டி எடுத்து விற்று பிழைப்பை நடத்துகின்றனர், சைவர் பழங்குடிகளின் நிலத்தையும் அதிகாரமாக பிடுங்கிக்கொண்டு அவர் வீட்டுப்பெண்களையும் வலுக்கட்டாயமாக கைப்பற்றி  தேவைப்பட்ட பொழுது புணர்கிறார்,தடையாக இருக்கும் அப்பெண்களின் கணவன்மாரை தூக்கில் தொங்கவிடுகிறார். போலீசாரும் சைவர் தரும் கையூட்டுக்காக இறந்தோரை சைவருக்கு வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க வக்கில்லாமல் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக வழக்கை பொய்யாக முடிக்கின்றனர்.

ஆட்சியாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் சைவருக்கு உறு துணையாக நிற்கின்றனர்,அவர்களுக்கு சைவரின் பண்ணை வீட்டில் மது,மாமிசமும் பழங்குடிப்பெண்களும் விருந்தாக்கப்படுகின்றனர், அங்கே இதை தட்டிக்கேட்பதற்கு செம்படை உருவாகிறது. அவர்கள் தங்களை நக்ஸலைட்டுகள் என கூறிக்கொள்கின்றனர்,பழங்குடிகள் அவர்களை மிகவும் மதித்து சகாவு என அழைக்கின்றனர். அதில் அந்தப்பகுதி நக்ஸலைட் தலைவனாக தோழர் ஜோசப்பை (ப்ரித்விராஜ்) நாம் பார்க்கிறோம். சைவரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாக, ஒரு நாள் கொட்டும் மழையில் நக்ஸலைட்டுகள் சைவர் வீட்டில் நுழைகின்றனர், அங்கே  ஏழை மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டு  சைவரிடம் இருக்கும் சொத்து ஆவணங்களை பறித்துச் செல்ல ஆயத்தமாகின்றனர், அங்கே சைவருக்கும் ஜோசப்புக்கும் கைகலப்பு முற்றி,  ஜோசப் சைவரை தாக்கி அரிவாளால் வெட்டிக்கொல்கிறார். அங்கே இருந்த சிறைபிடிக்கப்பட்ட பெண்களுக்கு புது விடியல் பிறக்கிறது,சைவர் இறந்ததற்கு அவர் மனைவிக்கு கூட கண்ணீர் வரவில்லை,ஆனால் போலீசாருக்கு பெருத்த நஷ்டம் விளைகிறது,பொன்முட்டை இடும் வாத்தை அறுத்து விட்டார் போல கொதிக்கின்றனர் சி ஆர் பி போலீசார்.

படமே தோழர் ஜோசப், தன் கூட்டத்தில் இருக்கும் துரோகி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி வரப்பட்டு, லட்சுமணன் பிள்ளை என்னும் மேல் அதிகாரியால் மிரட்டப்பட்டு ஜோசப்பின் நண்பர் காவலர் ரவீந்திரன்பிள்ளை (லால்) ஜோசப்பை என்கவுண்டர்  செய்வதில் இருந்தே துவங்குகிறது. அற்புதமான ஒளிப்பதிவும், பிண்ணணி இசை சேர்ப்பும் இப்படத்துக்கு மாபெரும் பலம் என்பேன்.


நிகழ்காலத்தில், மனசாட்சியின் உந்துதலாலும் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்னும் விரக்தியினாலும்  ஓய்வுபெற்ற காவலர், முழுநேரக் குடிகாரர் ரவீந்திரன் பிள்ளை, நக்சலைட் தோழர் ஜோசப்பை தான்தான் மேலதிகாரியால் மிரட்டப்பட்டு கொன்றேன் என்று வழக்கு தொடுத்து தாமே பிரதிவாதியாக நின்று வாக்குமூலமும் கொடுக்கிறார், என்னை இந்த கொலைபாதகத்துக்கு உட்படுத்திய மேலதிகாரிகளுடன் நான் சிறையில் ஒரு நாளை கழித்தாலே அது எனக்கு கிடைத்த வெற்றி என்று பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் முழங்குகிறார்.

35 வருடங்களாக இவருடனே பயணிக்கும் இறந்த தோழர் ஜோசப்பின் ஆவியாக ப்ரித்விராஜ்,இது வரையிலும் செய்த எல்லா பாத்திரங்களையும் விஞ்சி நிற்கும் ஒரு அற்புதமான பாத்திரம்,இடது கண் போலீசாரின் ஷூ காலால் நசுக்கப்பட்டு வீங்கிய முகத்துடனும்,நெஞ்சில் துளைத்த துப்பாக்கி ரவையினூடே படியும் குருதியுடனும் அவர் எந்நேரமும் காவலர் ரவீந்திரன் பிள்ளையின் மனசாட்சியாய் இறந்த பின்னரும் வாழ்ந்திருக்கிறார்.மிகக் கவித்துவமான படைப்பு இவரின் பாத்திரம்.

35ஆண்டுகளுக்குப் பின்னர் இவர் மனம்மாற என்ன காரணம்? இத்தனை நாள் இவரை ஆட்டிப்படைத்த உயிர்ப்பயம் விலக என்ன காரணம்?அந்த என்கவுண்டர் படுகொலைக்குப் பின்னர் மேலதிகாரிகளின் மேல் விளைந்த பயத்தாலும், மனசாட்சியாலும்  ஒருங்கே தாக்கப்பட்டு முழுநேர குடிகார நடைபிணமாகிறார் ரவீந்திரன் பிள்ளை. ஆசை மனைவி அண்ணன் பாதுகாப்பில் இவரை பிரிகிறார்,மகன் தறிகெட்டு திருடனாகிறான், காவலரை தாக்கியதால் சிறை செல்கிறான், மகனின் குடும்பத்தையும் வயதான தாயின் மருத்துவச்செலவையும் முன்னிருந்து நடத்த வேறு வழி தெரியாத மகள் விபச்சாரத்தில் இறங்குகிறாள்,முதலில் வீட்டு வாடகைக்காக வீட்டு சொந்தக்காரருக்கு இரையானவள் அடுத்தடுத்து ஒவ்வொருவருக்காக இரையாகிறாள், இதனிடையே மிகவும் பிரியத்துக்குறிய மனைவியும் பாம்பு கடித்து இறக்கிறாள், இவர் எதனால் இப்படி முழுநேரக்குடிகாரரானார் என்னும் உண்மையை இதுநாள் வரை மனைவியிடம் கூட மறைத்து நடைபிண வாழ்வை வாழ்ந்திருக்கிறார் ரவீந்திரன் பிள்ளை.

இப்போது தன் தள்ளாமையில் தன் கூடவே பெற்ற மகளும் வந்து சேர்ந்துவிட மிகவும் மகிழ்ச்சியில் இருந்த ரவீந்திரன் பிள்ளை தன் மகளை ஊரார் வாயால் பெரிய தொழில்காரி என கேட்கையிலேயே  சுக்கு நூறாக உடைகிறார், இழப்பதற்கு இனி ஒன்றுமில்லையே இனியும் என்ன மௌனம் என்று தோழர் ஜோசப் இவரிடம் தோன்றி உரைக்கயில் பொறுத்தது போதும் என்னும்  முடிவுக்கு வந்தவர் தன்னையே குற்றவாளியாக்கி மேலதிகாரிகளையும் அதில் இணைத்து வழக்கு தொடுக்கிறார்.

முழுப்படமுமே ஆலப்புழையில் ரவீந்திரன் பிள்ளை வீட்டிலும், வயநாட்டில் ரவீந்திரன் பிள்ளையின் செண்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஸ்டேஷனிலும் என்று கழிகிறது. ரவீந்திரன் பிள்ளையின் அன்பான அழகான மனைவியாக ரோஹிணி, 1947ல் இந்தியாவுக்கு ஸ்வாதிந்திரியம் கிட்டியது என உரக்கப் படித்துக்கொண்டே இருக்கும் மகன்,இவர் குடிகாரனானதும் அப்பாவை திட்டாதே அம்மா என அழுது உருகும் மகள்என அபாரமான பாத்திரப்படைப்பு. ரவீந்திரன் பிள்ளையின் பள்ளியில் உடன் பயிலும் கிருத்துவப்பெண்ணாக சாரா,மிக அற்புதமான காதல்கதை இழை அது. அவர்களின் குடும்பம் தொழில் நிமித்தம் வேற்றூர் செல்ல இவர் சிறு பருவத்து காதல் இழை அறுகிறது.சாராவாக வரும் தன்யா மேரி மிக ந

வயநாட்டுக்கு வேலை நிமித்தமாக வரும் ரவீந்திரன் பிள்ளை போலீசாருக்கு சைவர் வைக்கும் கறி விருந்தில் விதவை வேலைக்காரியாக  சாராவைச் சந்திக்கிறார். அவளது கணவன் அநியாயமாக சைவரால் தூக்கில் ஏற்றி கொல்லப்பட்டிருக்க,இவளை முழுநேர கொத்தடிமையாக ஆசை நாயகியாக மாற்றி விடுகிறான் சைவர்,சைவராக அதுல் குல்கர்னி,அந்த சிறிய நயவஞ்சகம் காட்டும் கண்கள் நன்றாக நடித்துள்ளது.


ரவீந்திரன் பிள்ளையும்    தோழர் ஜோசப்பும் சந்தித்துக்கொள்ளும் தருணங்கள் மிகவும் சுவையானவை. ரவீந்திரன் பிள்ளை எந்த அளவுக்கு கோழையோ தோழர் அந்த அளவுக்கு வீரம் பொருந்தியவராக வருகிறார்.இருவருக்குமான கூரிய வசனங்கள் அருமையானவை. அதில் ஒரு காட்சியாக அரசுப்பேருந்தில் மீன் கூடையுடன் ஏற முற்படும் சாந்தம்மாவை நடத்துனர் திட்டி இறக்கிவிட அங்கே தோன்றும் தோழர் ஜோசப் நடத்துனருடன் வாதம் செய்து இந்த வயதான அம்மாவை நான் என் அம்மாவாக பார்க்கிறேன்,தன் அம்மா ஒவ்வொரு பேருந்தாக கைகாட்டி யாரும் ஏற்றிக்கொள்ளாமல் ஏமாந்து நிற்பதை பார்க்க நினைக்கும் மகன் உங்களில் யாரேனும் இருந்தால் இந்த பாட்டியம்மா பேருந்தில் வருவதற்கு ஆட்சேபம் செய்யலாம் என்கிறார்,அருகே அமர்ந்திருக்கும் ரவீந்திரன் பிள்ளை இவரை ஸ்நேகமாக பார்த்து புன்னகைக்க ,இவர் யார் என்ன என விசாரித்துவிட்டு,அவர் போலீஸ் என்றதும்,ஒரு ஏழை வஞ்சிக்கப்படும் போது அதை கண்டும் ரசிப்பதில் ஒரு போலீஸும் அடக்கம் என்பதை நினைத்து வெட்க்கப்படுகிறேன்,பின்னே உங்கள் நேமம் நேமத்துடன் தானே செல்லும் என்று சொல்லும் இடம் எல்லாம் அருமை.

மது பாலுக்கு பேருந்து நடத்துனருக்கும் ஏதாவது கசப்பான சம்பவம் இருக்குமா?அல்லது உண்மையாகவே கேரள பேருந்து நடத்துனர் இப்படித்தானா?என தெரியவில்லை, இவரின் சமீபத்திய படமான  ஒழிமுறியிலும்  தொடர்ந்து பேதியாகிக்கொண்டிருக்கும் தன் மகனை மருத்துவமனை கொண்டு செல்ல மல்லிகா கேரளா அரசு பேருந்தில் ஏற முற்படுவார், ஆனால் நடத்துனர் ச்சீ என்ன நாற்றம்? ,இதனுடனா இந்த பேருந்தில் வருகிறாய்? பின்னால் நேசமணி (பேருந்து)வருவான் ,அதில் வா என விரட்டுவான், இதற்கும் அதற்கும் ஏதோ தொடர்பிருப்பது போல் பட்டது.

படத்தில் இன்னொரு காட்சியாக தோழர் ஜோசப்பும் சக நக்ஸல் தோழர்களும் ஓர் இரவில் சிஆர்பி காவல் நிலையத்தைச் சூறையாடி, அங்குள்ள காவலர்களை தாக்கிவிட்டு,ஒருகாவலரின் தோள்பட்டையையும் வெட்டிவிட்டு, துப்பாக்கிகளை திருடிச் செல்வர். அங்கே ரவீந்திரன் பிள்ளை பயந்து நடுங்கி பதுங்கியிருக்க,தோழர் ஜோசப் அவரை மட்டும் பார்த்து சிரித்து விட்டு தாக்காமல் செல்வார்.இக்காட்சியும் மிக அருமையான ஒன்று.

பின்னர் ஒரு நீரோடையின் வழியே தம் மறைவிடத்துக்கு ஜோசப் ரவீந்திரன் பிள்ளையை பழங்குடிகளுடனும் சாராவுடனும் கூட்டிச்செல்வார்,அங்கே ரவீந்திரன் பிள்ளையின் காலில் அட்டை ஏறி கடிக்கத்துவங்கும்,பிள்ளை அதை நசுக்க விழைவார்,தோழர் ஜோசப் அதை தடுத்து தீக்குச்சி பொருத்தி அதை சுட்டு நீக்குவார், இதை கை கொண்டு நசுக்கினால் அட்டையின் பல் சதையில் இறங்கி பழுத்து வீங்கிவிடும்,இந்த கொடுமை  வயநாட்டின் ஒவ்வொரு  ஏழைக்கும், பழங்குடிக்கும் அன்றாடம் பழக்கப்பட்ட ஒன்று என்று சொல்வார்,அந்த அளவில் தான் அன்றைய கிராமங்கள் வசதிகளை கொண்டிருந்தன. அந்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை.

நிலச்சுவாந்தார் சைவர் கொடூரமாக கொல்லப்பட்ட மறுநாள் காவல்துறை மேலதிகாரிகள் முதலில் சாராவை சந்தேகித்து விசாரித்து  துன்புறுத்தி, அவளிடமிருந்து ஒன்று விஷயம் பெறமுடியாமல் போக பழங்குடி ஒருவனை விலைக்கு வாங்குகின்றனர், அவன் இவரை காட்ட்சிக்கொடுக்கும் முன்னர் சர்ச்சில் வந்து தன் உயிருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என வேண்டிக்கொண்டு தன் சிலுவை கோர்த்த மாலையை சர்ச்சின் வெளியே கழற்றி  விட்டு செல்கிறான், அவனுக்கு காட்டிக்கொடுக்கையில் இறையுருவத்துடன் காட்டிகொடுப்பது தவறு என தோன்றியிருக்கும் போலும், அதனூடே அங்கே சர்ச்சில் இயேசுவின் உரையாக என்னுடன் கை நனைக்கும் ஒருவன் என்னை இன்று காட்டிக்கொடுப்பான் என்னும் வசனம் பாதிரியார் சொல்ல அது நல்ல குறியீடாக அமைந்தது.

தோழர் ஜோசப்பை என்கவுண்டர் செய்து கொன்றுவிட்ட பின்னர்,ரவீந்திரன் பிள்ளை தன் ஊரான ஆலப்புழைக்கே  வந்து தொடர் விடுமுறை எடுக்கிறார், நிறைய தற்காலிக வேலை நீக்கம் போன்றவற்றையும் சந்திக்கிறார்.முதலில் இவருக்கு மிகவும் அரவணைப்பாக இருக்கும் மனைவி கார்த்யாயினி,ஒரு நாள் இவர் உடன் வேலை பார்க்கும் இரு போலீசார் வந்து இவரைப் பற்றியும் இவரின் முன்னாள் காதலி சாரா பற்றியும் அபாண்டமாக பொய்களை அவிழ்த்துவிட்டு அங்கே இவர் குடிப்பதில்லை என கொளுத்திப்போட,இவர் குடும்பமே சின்னாபின்னாமாகிறது.என்ன தான் தன் காதலி சாரா பற்றி ரவீந்திரன் பிள்ளை முன்பே மனைவிடம் சொல்லியிருந்தாலும் போலீசார் இவர் தோழர் ஜோசப்பை சுட்ட விஷயத்தை வெளியே உளறாமல் இருக்க இவர் மனைவியிடம் சொன்ன  வதந்தியை  நம்பி இவர் மனைவி இவரை பிரியும் இடம் சோகம்.

விவாகரத்து வாங்கித்தரும் தரகராக,கிடைத்த வேலைகளைச் செய்யும் ஆல் இன் ஆலாக வரும் ஜெகதியை மறக்கமுடியாது, அதே ஜெகதி இவர் மனைவி இறந்த பின்னர் இவரின் குடும்பத்தை பிரித்த குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் சவ வீட்டில் ஓதுகின்ற ராமாயணம், சாத்தான் வேதம் ஓதுவது போலிருந்தது.மைத்துனனாக வருபவரும்,ரவீந்திரன் பிள்ளையின் பக்கத்துவீட்டில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நண்பரும் அவர் மனைவியும் ஒவ்வொரு சூழலிலும் பிள்ளையின் மீது காட்டும் நட்பும்,நேசமும்நெகிழ்ச்சியுடன் குறிப்பிடத்தக்கது.

படத்தின் முடிவுக்காட்சி மிகவும் அருமையானது, பல உலக சினிமாக்களில் இவ்வகை வித்தையை நான் கண்டிருக்கிறேன். இது இன்னும் புதுமையானது, ஒருவழியாக வழக்கு தொடங்கியது, பிள்ளைக்கு மிகுந்த மன நிம்மதியை தருகிறது,நெஞ்சில் உள்ள பாரத்தை இறக்கியாகிவிட்டது, மகள் தொழிலுக்கு போயிருக்கிறாள்,மகன் சிறையில் அது மட்டுமே வருத்தம்.யாரோ சில போலீசார் நலம் வாழ அவர்கள் விடுத்த கொலை மிரட்டலுக்கு இவர் தந்த கூலி கொஞ்ச நஞ்சமா?போதும் என்று முடிவெடுக்கிறார்.

தான் தோழர் ஜோசப்பை கொலைசெய்த முன்பு வரை போலீஸ் சீருடை அணிந்தாரே? அதே ஆவல் பொங்க இவர் நீண்டநாட்களுக்கு பின் தன் காவலர் சீருடையை எடுத்து அணிகிறார். தன் கைப்பையையும் எடுத்துக் கொள்கிறார். அங்கே இவர் மனசாட்சியாக உடன் வசிக்கும் தோழர் ஜோசப் ”இவர் இன்னும் குழம்பிப்போய் தான் இருக்கிறார்” என்னும் நினைவிலோ? என்னமோ கொட்டாங்குச்சியில் பொருத்தப்பட்ட மெழுவர்த்தி கைவிளக்குடன் இவரின் வீட்டுக்கு வருகிறார்.விளக்கை ஊதி அணைக்கிறார்.

போகலாமா? என்று கேட்டு பிள்ளையையும் உடன் கூட்டிக்கொள்கிறார், மீண்டும் மெழுகு வர்த்தியை ஏற்ற முற்படும் தோழரை , பிள்ளை வேண்டாம்!!! அது தான் நிலாவெளிச்சம் இருக்கிறதே ? என்று தடுத்து உடன் செல்வார். மறு நாள் பிள்ளையின் சவமரியாதை நடக்கிறது, அங்கே ஜெகதியின் குரலில் ஓதப்படும் ராமாயணத்தை நாம் கேட்கிறோம்.

சவம் புறப்பட்ட பின்னர் வீட்டை பெருக்கும் பக்கத்து வீட்டு பெண்மணி அங்கே தோழரால் விட்டுசெல்லப்பட்ட கொட்டாங்குச்சி கைவிளக்கை எடுத்துப்பார்ப்பது போல படம் முடிகிறது, இது எனக்கு மிகவும் புதிராகவும், கனவுலகையும் நனவுலகையும் முடிச்சுப்போட்டாற்போல போன்ற ஒரு சிந்தனையின் ஊடே “இவ்விளக்கு இன்னும் யாருக்கேனும் தேவைப்படக்கூடும் “ ஒரு செய்தியாக முடிந்தால் போல இருந்தது. மிக நல்ல வாசிப்பு அனுபவம் தந்த ஒரு புதினம் போல ஒரு படம்,உலக சினிமா ரசிகர்கள் தவறவிடக்கூடாத மற்றொரு படைப்பு.
=====
திரைப்படத்தின் யூட்யூப் முன்னோட்ட காணொளி


Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)