மெகா சீரியல்கள் தரும் பொது அறிவு!!!


ப்போதெல்லாம் டிவி சீரியல்களில் அவுட் டோர் காட்சிகள் மிகவும் லைவ்வாக எடுக்கின்றனர்,கேமராவும் அத்தனை சிறியதாகவும் எடை குறைவாகவும் வந்து விட்டது,இன்னும் கொஞ்ச நாள் போனால் அதை டார்ச் போல தலையில் கட்டிக்கொண்டு எடுக்கும் அளவுக்கு சிறியதாகிவிடும் போல.

இன்று ஒரு தமிழ் சீரியலில் திருச்சூர் நகரத்தில் ஒரு ஆதர்ச அப்பாவும் மகனும் ஒற்றை ஒயின் ஷாப், கள்ளுக்கடை பாக்கியில்லாமல் சல்லடை போட்டு தம் குடிகார மாப்பிள்ளையைத் தேடினர்,

முன்பே படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கியிருப்பார்கள் போலும், நம்மூர் போல யாரும் கேமராவை வெறிக்கவில்லை,யாரும் அட்மோஸ்பியர் ஆர்டிஸ்ட் கிடையாது, பகல் நேரக்குடிகாரர்கள், முழுநேர குடிகாரர்கள், பகுதிநேர குடிகாரர்கள்,ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வாங்கிப் போகும்,ஒரு லார்ஜ் ஏற்றிக்கொண்டு போகும் குடிகாரர்கள் என எத்தனை விதம்? உபரித் தகவலாக ஒரு முழு பாட்டில் கள்ளின் விலை 40 ரூபாய், ஹாஃப் பாட்டில் கள்ளின் விலை 20 ரூபாய் என அறியத் தந்தார் இயக்குனர். தன் பங்குக்கு ரசனையாக ஷாட் கம்போஸ் செய்திருந்தார் ஒளிப்பதிவாளர்.

இதன் மூலம் கேரள ஒயின் ஷாப்புகள் நன்றாக பராமரிப்பதை உணர முடிந்தது, அவர்கள் கள்ளுக்கடை கொட்டகையில் இயங்கினாலும் கூட மிகச் சுத்தமாக இருப்பதையும் மிகக்குறைந்த விலைக்கு தரமான கள்ளை அரசே விற்பனை செய்வதையும் உணர முடிந்தது, இதைப் பார்த்தாவது டாஸ்மாக் நிர்வாகம் சுத்தத்தை பேணுமா?இந்த அயல்நாட்டு பிராந்தி விஸ்கி ஜின் ஒயின் வோட்கா வகையறாக்களுக்கு கள்ளு எத்தனையோ தேவலாம்.தமிழ்நாட்டு குடிமகன்கள்,குடிமகள்கள் அவர்கள் உரிமையை போராடிப் பெற வேண்டிய நேரம் வந்து விட்டது.

மேலும் ஒரு விஷயமும் புரிந்தது,டிவி சீரியல்களில் இருக்கும் நல்லதையும் உணர்த்தியது,அவற்றில் பெரும்பாலானவை வெளிப்புற படப்பிடிப்பு செய்வதால்,ஒரு நகரம் 2013 ஆம் வருடம் எப்படி இருந்தது,2009 ஆம் வருடம் எப்படி இருந்தது என ஒரு தெளிவு பிறக்கிறது.1970,80 களில் இந்த நிலை இல்லை,பெரு வாரியான நாடகங்கள் ஸ்டுடியோக்களில்,டிவி ஸ்டேஷன்களில் எடுத்திருப்பார்கள். தவிர அவை இணையத்தில் அவை ஆவணக்காப்பு செய்யப்பட்டதில்லை, பாலு மகேந்திராவின் தரமான கதை நேரம் போன்றவை ஒரு விதிவிலக்கு.இன்றைய டிவி சீரியல்கள் அவை ஆரம்பித்து 750 நாட்கள் ஆனாலும் அதன் 1 ஆம் நாள் எபிசோடைக் கூட இணையத்தில் பார்க்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு,உதாரணத்துக்கு 2019 ஆம் ஆண்டு ஒரு படம் எடுக்க ஆர்ட் டைரக்டர்கள் மிகவும் மெனக்கெட வேண்டாம் ,இந்த ஹெச்டி ஒளிபரப்பின் மூலத்தை வாங்கி அப்படியே வீடியோ மாண்டேஜ் செய்து விடலாம்,மெகா சிரியல்களில் எத்தனையோ கெட்டவை இருந்தாலும் தன்னகத்தே  நல்லவற்றையும் கொண்டுள்ளதை எண்ணி வியக்கிறேன்.

சம்மந்தப்பட்ட என் இன்னொரு  பதிவு:-

என்னது?இனி சன் டிவியில் சனிக்கிழமையும் சீரியலா?

கடலுக்கு அப்பால் நாவல் - ப.சிங்காரம்


ப.சிங்காரம் எழுதிய கடலுக்கு அப்பால்  தமிழ் புனைவிலக்கியத்தில் மிகவும் முக்கியமானது, இலக்கிய ஆர்வலர்கள் யாரும் தவறவிடக்கூடாத படைப்பு, ஏன் எனில் இது பேசும் வெளி மிகப்பெரியது, இதன் மொழி வீச்சு மிகவும் அரியது, எழுத்தாளர் ப.சிங்காரம் எந்த சமரசமுமின்றி நன் நாவலில் ஒரு பர்மியன் பேசினால் பர்மீஸிலேயே எழுதுகிறார், மலேயென், பேசினால், மலேயாவிலேயே, ஜப்பானியன் என்றால் ஜப்பானிஸிலேயே எழுதுகிறார், இது நாவல் எழுதப்பட்ட காலகட்டத்துக்கு மிகவும் புதுமையான முயற்சியாகும், மேலும் இது ஒருங்கே நம்பிக்கை, பண்பாடு, காதல்,போர், வீரம், தீரம், பக்தி, அறம்,அந்நிய கலாச்சாரம்,சாகசம்,தாய்மை,இழப்பு, வஞ்சம், ஏமாற்றம், நட்பு, தேற்றுதல் என விரிவாக அலசுகிறது,

எழுத்தாளர் ப.சிங்காரம் 1920ல் பிறந்தார். 1938 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் இருக்கும் மேடான் நகரில் ஒரு மார்க்கா என்றழைக்கப்படும் வட்டிக்கடையில் வேலை செய்யச் சென்றிருக்கிறார். உலகப்போர் நடந்த 1939 முதல் 1945 ஆண்டுகளை, ஜப்பானியர்களும், இந்திய தேசிய ராணுவமும் தாக்கம் செலுத்திய வரலாற்றுத் தருணங்களை, நேரடியாக ரத்தமும் சதையுமாக கண்ணுற்றார். இவர் யுத்த சூழலில் தன் மனைவியையும் அவரது பிரசவத்தில் குழந்தையுடன் பறிகொடுத்தவர்,அந்த வடுவிலிருந்து மீண்டு இத்தகைய படைப்பை தந்துள்ளார் என்பது இன்னொரு சிறப்பு. 

இவர்  1946ம் வருடம்  ப்ரிட்டிஷ்-இந்தியாவுக்கு திரும்பினார். மதுரை தினத்தந்தியில் செய்திப்பிரிவில் பணிக்கு சேர்ந்தார். 1950ஆம் ஆண்டு   ‘கடலுக்கு அப்பால்’ நாவலை தன் இந்தோனேஷிய,மலேய,பர்மா நாட்டின் பணிக்கால நினைவடுக்குகளில் இருந்து எழுதினார். மறுமணமே செய்து கொள்ளாமல் தன்   வாழ்நாட்களை  [சுமார் 51 ஆண்டுகள்] YMCA விடுதியில் தனியே கழித்தார்.தன் வாழ்நாள் சேமிப்பையும் தனக்கு வந்த ஷேமநல நிதி சுமார் 7 லட்சம் ரூபாயையும் பொதுவுக்கு எழுதி வைத்து விட்டு தன் 77ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்,சமகால இலக்கியவாதிகள் எவருடனுமே தொடர்பின்றியே வாழ்ந்திருக்கிறார்,

 இவர் தன் வாழ்நாளில் மற்றொரு படைப்பாக புயலிலே என்னும் தோணி என்னும் நாவலும் எழுதியுள்ளார்,அது 1962 ஆம் ஆண்டு பெரும் தடைகளுக்கு இடையே வெளிவந்தது.இந்த இரண்டு நாவல்களுமே இதன் புதுமைக்காக அன்றைய இன்றைய இலக்கியவாதிகளால் வெகுவாக சிலாகிக்கப்படுபவை.  இவரது வாழ்க்கையே ஒரு சுவையான பல திருப்பங்கள் நிறைந்த ஒரு நாவல் போன்றது என்றால் மிகையில்லை, இவரது கடைசிக் காலத்தில் சி.மோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களுடன் இவருக்கு பரிச்சயம் ஏற்பட்டதை படித்தேன். இவரும் பாரதியை போன்றே வாழும் காலத்தில் புகழ் கிடைக்காத கலைஞனே.

நாவலில் மற்றொரு சிறப்பம்சமாக பகடிக்காகவோ திணிப்பாகவோ எந்த சாதியையும் இவர் கிண்டல் செய்யவில்லை, எந்த இடத்திலும் வர்ணணைக்கு  வேண்டிக்கூட ஆபாசம் விரசமொழி எங்கும் இல்லை  ,தவிர இது வரை தமிழில் யாரும் கையாளாத ஒரு கதைக்களம் நம்முள் ஒரு மனச்சித்திரமாக     விரிகிறது. பாசாங்கில்லாத சமரசமற்ற எழுத்து நடை நம்மை விறுவிறுப்பைக்கூட்டி படிக்க வைக்கிறது.

செட்டி நாடு என்றழைக்கப்படும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், கோனாப்பட்டு,ஆத்தங்குடி,கானாடுகாத்தான்,சிறுவயல் என ஒன்றிறண்டு ஊருக்காவது போய் வந்து கொண்டிருக்கிறேன். அனைத்துமே டெம்ப்ளேட் போன்ற அமைப்பைக் கொண்ட 200 வருடங்களுக்குள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட மிக அழகிய கிராமங்கள். ஊருக்குள் அம்மன் கோவில், தேர் முட்டி, ஒரு சிவன் கோவில்,குடிக்க ஒரு ஊருணி, குளிக்க ஒரு ஊருணி, ஒரு நகரத்தார் கைங்கர்ய தர்ம ஸ்தாபன பள்ளிக்கூடம், கடைவீதி, மழை பெய்தால் நேராக ஊருணிக்குள் போய் விழும்படியான சேகரிப்பு முறை, அத்தனையும் நகரத்தார் என்றழைக்கப்படும் செட்டியார் சமூகம் ஊருக்கு அளித்த கொடை அவை,

 முக்கியமாக ஓங்கு தாங்காக அமைந்த அரண்மனை போன்ற நகரத்தார் வீடுகளை குறிப்பிட்டே ஆகவேண்டும்.ஒரே நாளில் சேர்த்த பொருளல்ல அவை,1818 ம் ஆண்டு ஆரம்பத்தில் வட்டிக்கடைத் தொழில் துவங்கிய நகரத்தார்கள்,தலைமுறை தலைமுறையாக இலங்கை, மலேசியா, பர்மா, இந்தோநேசியா, ஜாவா, சுமத்ரா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்ற செட்டியார் சமூகம் மார்க்கா என்னும் லேவா தேவித் தொழிலை விஸ்தரித்து.அங்கே கார்பொரேட்டு வங்கிகளுக்கு சமமாக வட்டிக்கடைத் தொழிலை வாழையடி வாழையாக நீதி நேர்மையுடன் நடத்தி வந்தனர். அதை நாவலில் நாம் கதையோட்டத்தில் விரிவாக அறிகிறோம்,

இப்போது எப்படி வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறோமோ அதே போல ராமநாதபுர மாவட்டத்தின் இளைஞர்கள் 5 முதல் 7 வருட ஒப்பந்தத்தில் வட்டிக்கணக்கு பற்று வரவு எழுதவும் வசூலிக்கவுமென்றே அந்த மார்க்காக்களுக்கு சென்றுள்ளனர் என அறிகையில் வியப்பு மேலிடுகிறது, அங்கே  பர்மியர்களுக்கும், இந்தோநேசியர்களுக்கும், சீனர்களுக்கும், மலேயர்களுக்கும் அவர்கள் வியாபாரம் செய்ய வட்டிக்கு பணம் தந்து வாங்கி அதை லட்சமாக பெருக்கி, தங்கள் வீட்டை,ஊரை இப்படி மாற்றினர் என்றால் மிகையில்லை,

மேலே சொன்னது போலவே நாவலில் மிக முக்கிய பாத்திரமான வானாயினா என்னும் வயிரமுத்துப்பிள்ளை, தன் செவப்பட்டி கிராமத்தில் இருந்து பெட்டியடிப்பையனாக பர்மாவிற்கு ஒப்பந்தத்தில் சென்று அடுத்தாளாகி, மேலாளாக[ஏஜென்ட்] உயர்ந்தவர், இப்போது சொந்தமாக மார்க்கா வைத்திருப்பவர்.,இந்த நிலைக்கு வர அவர் பட்ட பாடும்,தன் மார்க்கா தொழிலை கட்டிக்காக்க அவர் கடைபிடிக்கும் விதிகளும் அபாரமானவை.இன்று நாம் காணும் கேட்கும் தண்டல்,கந்து வட்டி,மீட்டர் வட்டி போன்றதல்ல செட்டிமாரின் மார்க்கா என்னும் வட்டிக்கடை வியாபாரம்,அதற்கு முக்கியத் தேவையே பணிவு,தெளிவு,எந்த சூழ்நிலையிலும் கோபப்படாமல்,கடன் வாங்கியவன் அடித்தாலும் வாங்கிக்கொண்டு,விடாப்பிடியாக வட்டியையும் அசலையும் வசூல் செய்யும் திறமை கொண்டவர்,தன் வேலையாட்களையும் அவ்வண்ணமே இருக்க எதிர்பார்ப்பவர்.

தன் நண்பனின் மகனான செல்லையா,ஆங்கிலம் படித்திருக்க இவரை மிகவும் கவர்கிறான்,நண்பனிடம் வலியப்போய் செல்லையாவை தன்னுடன் வேலை செய்ய அழைத்துப்போகிறார், பின்னர் தன் மனைவியையும் மகள் மரகத்தையும் தன்னுடன் அழைத்தவர்,தன் மகள் மரகதத்தை செல்லையாவுக்கு திருமணம் செய்ய நினைக்கிறார்,அதன் மூலம் தன் மார்க்காவை பினாங்கிலேயே பெரிய மார்க்காவாக விஸ்தரிக்க நினைக்கிறார். இவரது வாழ்வில் பேரிடியாக  இரண்டாம் உலகப்போர்  மூள, தன் ஒரே மகனை ஜப்பானியரின் விமான குண்டு வீச்சுக்கு பலி கொடுக்கிறார்,

செல்லையாவை அடுத்தாளாக கூட்டி வந்து குறுகிய காலத்தில் மேலாளாக்கி அழகு பார்த்தவர் வனாயினா, தன் அழகு மகள்  மரகததை  அவனுக்கு திருமணம் செய்து தந்து, மார்க்காவையும் அவனிடம் ஒப்படைக்க எண்ணியிருந்தவர் எண்ணத்தில் மண் விழுந்தது போல செல்லையா நேதாஜியின் சேனைக்கு போய் சேர்ந்து விடுகிறான். அவன் சேனைக்கு சென்றது அவருக்கு அறவே பிடிக்கவில்லை.போர் தர்மம் தன் தொழிலுக்கு உகந்ததல்ல என்பதை உறுதியாக நம்புகிறார். தன் 20 வயது மகனை ஜப்பானின் குண்டு வீச்சுக்கு பினாங்கு வீதியில் பலி கொடுத்ததையும் அவர் மறக்க வில்லை,மகனின் சடலத்தை தேடி எடுத்து தன் தோளில் தூக்கி வந்த செல்லையாவின் மேல் அதீத அக்கரையும்,நன்றியுணர்வும் இருந்தாலும் என் பேச்சை மீறி சேனைக்கு சென்றுவிட்டானே? என்னும் தன் அகங்காரம் செல்லையா மரகதத்தின் காதலை பிரிக்க நினைக்கிறது,போரினால் சுமார் 4 வருடங்களாக நின்று போன நாகப்பட்டினம்-பினாங்கு கப்பல் போக்குவரத்தை ப்ரிட்டிஷார் மீண்டும் எப்போது துவக்குவார்,அப்போது மனைவியையும்,மகள் மரகதத்தையும் ஊருக்கு அனுப்பி ,தன்னிடம் மேலாளாக இருக்கு நாகலிங்கத்துக்கு மகளை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்,

வனாயினா மனைவிக்கும் பினாங்கில் இருக்க இருப்பு கொள்ளவில்லை, ஆனால் கப்பல் விடுவதற்கு முன் கடலில் மிதக்கும் நீர்கண்ணி வெடி குண்டுகளை ப்ரிட்டிஷார் தேடி அகற்றுவதை கேட்டதும் நிம்மதியுறுகிறாள், செல்லையாவை தன் மகன் போலவே நினைக்கிறாள்,அவனை மருமகனாக வரித்துக்கொள்ள இவர்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என எண்ணுகிறாள்,தண்ணீர்மலையான் அருளால் செல்லையாவின் மேலே கணவர் கொண்டிருக்கும் கோபம் விரைவில் தீரும் என நம்புகிறாள்,

செல்லையா இரண்டாம் உலகப் போரில் நேதாஜியின் சேனையில் ஒரு ஆகச்சிறந்த வீரனாக இருந்தவன்,  போரில் அணுகுண்டு வீசப்பட்டு,ஜப்பான் தோல்வியை ஒப்புக்கொண்ட நிலையில் ,நேதாஜியும் விமான விபத்தில் உயிரிழக்க,அவரின் சேனையில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள், அதில் ஏனையோர் மார்க்காவில் வேலைபார்த்தோர், மீண்டும் தங்கள் பழைய தொழிலுக்கே திரும்ப முடிவு செய்கின்றனர், அதில் செல்லையாவும் அடக்கம், 24 வயதிலேயே வீரமும்,புத்தி சாதுர்யமும்,பன்மொழி பேசும் திறமையும்,நல்ல அழகும், உடற்கட்டும் பொருந்திய செல்லைய்யாவிற்கு  போர் முடிவுற்ற சூழலில்  வேலை இல்லை. எனவே மீண்டும் பழைய மேலாள் வேலைக்கு திரும்ப முடிவு செய்து தன் முதலாளி வனாயினாவிடமே வருகிறான்.ஆனால் முதலாளியின் மனதை செல்லையாவால் மாற்ற முடியவில்லை.கரைக்க முடியாத கற்பாறையாக இருக்கிறார் வனாயினா.

சில இடங்களில் நாம் நாயகன் செல்லையாவுக்காகவும் மரகதத்துக்காகவும் அப்படி வருந்துகிறோம்,ஆனால் அந்த வருத்தத்தையும் வானாயினா மீதான கோபத்தையும் கடைசி அத்தியாயத்தில் மரகதத்தின் அப்பா வானாயினாவுக்கு சாதகமாக திருப்பிவிடுகிறார் ப.சிங்காரம்.

அந்த இடம் அபாரமானது,நண்பன் மாணிக்கம் போல நகமும் சதையும் போன்ற நண்பன் கிடைக்க ஒருவர் கொடுத்து வைக்க வேண்டும்,காதல் தோல்வியால் மனம் துவளும் செல்லையாவுக்கு மட்டுமல்ல நமக்கும் மருந்து போன்றன அவனது வார்த்தைகள்.அவன் சங்க கால தமிழ் இலக்கியத்தை மாந்தர்களை பகடி செய்யும் இடம் அனைத்துமே ரசமானவை.

எழுத்தாளர் ப.சிங்காரம் 12 வருடம் கழித்து தான் எழுதப்போகும் புயலிலே ஒரு தோணி நாவலுக்கு கடலுக்கு அப்பால் நாவலிலேயே அச்சாரம் வைத்து உள்ளார் ,என்பதை எண்ணி வியந்தேன்,அப்போதே ப்ரிக்வெய்ல்,சீக்வெய்ல் பற்றி எல்லாம் சிந்தித்திருக்கிறார் பாருங்கள். செல்லையாவிற்கு பாண்டியன் என்னும் வீரனும் மலேயாவுக்கு வரப்போவதாக   ஒருவர் வழி மறித்துச் சொல்ல, செல்லையா மனதுக்குள் இப்படி சிலாகிப்பதாக வருகிறது. பாண்டியன்,!!! மாவீரன். தமிழறிஞன். அவனும் மாணிக்கமும் கிண்டலும் தர்க்கமுமாய் தமிழ் ஆராய்ச்சி நடத்துவதை நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே. இந்தோனேசியாவுக்குத் திரும்பியிருக்கிறானே. மீண்டும் அவனைப் பார்க்க முடியுமா? அங்கு வாளா இருப்பானா? மாட்டான். புரட்சிப் படையில் சேர்வது திண்ணம். அவன் ரத்தத்திலேயே புரட்சி கலந்து போயிருக்கிறது. 

எல்லாம் கைமீறிப்போய்விட்ட  பொழுது   ஒரே ஒருக்க ,.. உன் முகத்தை இரண்டு கைகளால் தொடணும் மரகதம்!!! செல்லையாவின் குரல் , தாயிடம் ஒரே ஒரு மிட்டாய் கேட்கும் சிறுவனின் கெஞ்சல் போல குழைந்தது  என்று எழுதுகிறார் ப.சிங்காரம்,எத்தனை எளிய ஆனால் சக்திவாய்ந்த எழுத்து நடை பாருங்கள்.
அதே மரகதம் நான் ஒண்ணு சொல்றேன். கேப்பிகளா ?!!!   சொல்லு   ... நீங்க கல்யாணம் செஞ்சு பொட்டச்சி பிறந்தா?!!! மரகதம்னு பேரு வைங்க!!! என யதார்த்தமாக முடிக்கிறாள், யாரும் யாரையும் காயப்படுத்தாமல் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

காதலில் தோல்வியுற்றதால் உலகமே இருண்டுவிட்டது, வாழ்க்கையே தன்னை கைவிட்டுவிட்டது என தளர்ந்து இருந்த செல்லையா ,  நண்பன் மாணிக்கம் மூலம்  தன்னையே அறிந்து கொள்வதை  ப.சிங்காரம் மிகச்சிறப்பாக நாவலில் காட்சிப்படுத்தியுள்ளார்.

நாவலில் ப.சிங்காரம் குறிப்பிடும் பல இடங்கள் இன்று இல்லை,அவ்வளவு ஏன்?1960லேயே வழக்கொழிந்துவிட்டதாக ப.சிங்காரம் குறிப்பிடுகிறார். காலஓட்டத்தில் இன்னும் காணாமல் போகாமல் இருப்பது நாவலில் ஒரு கதாபாத்திரமாகவே ஒட்டி உறவாடும் தண்ணீர்மலையான் சுவாமி திருக்கோவில் மட்டும் தான்.அதைப் பற்றி படிக்க சுட்டி. அவசியம் படிக்கவும்.
புயலிலே ஒரு தோணியும் கடலுக்கு அப்பால் நாவலுக்கு ஈடான ஒரு ஆக்கம்,அதை இரண்டாம் முறையாக வாசிக்கிறேன்,அத்தனை சுவாரஸ்யம் நிறைந்தது,நேதாஜி சுபாஷ் சந்திர போஸை வரலாற்று பாடங்களில் மட்டுமே படித்திருக்கிறோம்,அவரை இதில் ரத்தமும் சதையுமாக கண்ணுறுகிறோம், மிக அருமையான நாவல்,விரைவில் அதற்கும் எழுதுவேன். 

கடலுக்கு அப்பால்+புயலிலே ஒரு தோணி ஹார்ட் பவுன்ட் புத்தகம் நற்றினை பதிப்பகத்தாரின் மிக் தரமான வெளியீடாக அகநாழிகை புத்தகக் கடையில் கிடைக்கிறது .விலை ரூ:-350

நாவல் பற்றி சி.மோகன் எழுதிய குறிப்பு:-
கடவுளின் சிரிப்பில் உருவான நாவல்கள்
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் புன்சிரிப்பும், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன. கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு, புயலிலே ஒரு தோணி. நம் மொழியின் நவீன பொக்கிஷம்.
  

இவர்கள் வருங்காலத் தூண்கள் !!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்லூரி மாணவர்கள் குடி போதையில் தெருவில் கிடக்கும் வேதனை காட்சி! போட்டோ நன்றி:-இளையராஜா டென்டிஸ்ட்

இதோ இது!!! இன்று திடீரென நடக்கவில்லை,இன்று நிறைய நடக்கிறது, மாணவர்களுக்கு போதையும் [டாஸ்மாக்] காமமும் [மொபைல் போன்-மெமெரி கார்டு]கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது. குடியும் ஒரு மோசமான நோய் தான்.குடிகாரனிடம் தைரியமும் கட்டற்ற காமமும் அதீதம் இருக்கும்,அது கொண்டு சமூகத்தில் வெட்கப்படாமல் எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
படம் நன்றி[எம்.சசிகுமார்]
பணம் வருகிறது என்பதற்காக மாணவர்கள் எனத் தெரிந்தும் டாஸ்மாக்கில் மதுபானம் விற்கின்றனர்,மாணவர்கள் அங்கேயே குடிக்கின்றனர், இப்படி தெருவில் விழுந்து புரள்கின்றனர்.தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை விடாது.[ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்] மாணவர்களுக்கு சிகரெட்,பான்பராக்,மானிக்சந்த்,ஹான்ஸ்,சாந்தி பாக்கு, ஃபவிகுவிக்,டைப்பிங் ஒயிட்னர் விற்கும் கடைக்காரர்கள் கூட மனசாட்சி இல்லாதவரே,இந்த பிழைப்பு பிழைப்பதற்கு பரத்தையரை கூட்டிக்கொடுத்து பிழைக்கலாம்.அவர்கள் வருங்கால தூண்களின் அஸ்திவாரத்தையே சிதைப்பவர்கள்.

நேற்று ஒரு 10ஆம் வகுப்பு மாணவன்,ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்கவில்லை என ஒரு 7ஆம் வகுப்பு மாணவனை செப்டிக் டான்கில் தள்ளி மூழ்கடித்து கொன்றுள்ளான்,அதை படிக்க இங்கே சுட்டி, தன் அப்பா,நெருங்கிய உறவுகள் சிகரட் குடித்தாலோ, மது குடித்தாலோ அவன் அதை தவறென கருதுவது இல்லை,வீட்டில் ஒழுக்கம் இருந்தால் வெளியிலும் ஒழுக்கமாக இருப்பான்,இன்றைய பெற்றோர் ஒருவர் மாற்றி ஒருவர் நேரம் செலவிட்டு கண்காணிக்க வேண்டியது அவசியம்.

போதை போதாமல் போகையில் நிறைய குடிக்க தோன்றும்,நிறைய குடிக்க நிறைய செலவு ஆகையில் மாணவர்கள் அப்பா வாங்கித் தந்த பைக்கில் இருவராகவோ,மூவராகவோ சென்று தாலிச்சங்கிலி அறுக்கின்றனர்.குடி போதையில் அம்மாவின் தாலிச்சங்கிலியையே தெருவில் வைத்து அறுத்தான் ஒரு மாணவன் எனப் படிக்கும் காலம் தொலைவில் இல்லை.ஒரு நாள் போலீஸ் நம் வீட்டுக்கு தேடி வரும் முன்னர் சுதாரித்துக் கொள்வோம்.பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுவோம்.அவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்போம்.


குறிப்பு:-

  • நான் டாஸ்மாக்கை அடியோடி எதிர்க்கவில்லை,அது சிறார்களுக்கும் மது விற்பனை செய்வதையும்,கால நேரமே இன்றி விறபனை செய்வதையும்,இப்படி டார்கெட் வைத்து ஊழியரை சாட்டையடி அடித்து விற்பனையை அதிகரிப்பதையும் எதிர்க்கிறேன்.

  • கள்ளச்சாராய சாவுகளை களைய கொண்டு வந்தது தான் டாஸ்மாக், அரசுக்கு டாஸ்மாக் நடத்த தான் வேண்டுமென்றால் இதை வாங்கிக் குடிக்க கடுமையான வயது வரம்பு ,திறந்து மூடும் கால நேரம் வரையறுக்க வேண்டும்.கடுமையாக அதை கண்காணிக்க வேண்டும்.
 

என்னது?இனி சன் டிவியில் சனிக்கிழமையும் சீரியலா?

த்திப்பூக்கள்,அழகி,பைரவி,பொம்மலாட்டம்,தெய்வமகள்,தேவதை,இளவரசி,கார்த்திகைப் பெண்கள், மஹாபாரதம், மருதாணி, முந்தானை முடிச்சு,முத்தாரம், நாதஸ்வரம், பாசமலர்,பொண்டாட்டி தேவை, பொன்னூஞ்சல், பிள்ளை நிலா, ராமாயணம், சிவசங்கரி, சொந்த பந்தம், தென்றல், தேன்நிலவு, திருமதி செல்வம், திருவிளையாடல், தியாகம், உறவுகள், உதிரிப்பூக்கள், வள்ளி, வம்சம், வாணி ராணி,வெள்ளைத் தாமரை....ஸ்ஸப்ப்பா,

என்ன கண்ணைக் கட்டுகிறதா?!!!

இவை சன் டிவியில்[ஹெச்டி தரத்தில்] மட்டுமெ ஒளிபரப்பாகும் சீரியல்கள்,எத்தனை பேர் பார்ப்பார்கள்? எத்தனை விளம்பர வருவாய்?இயக்குனர்களுக்கு எத்தனை கற்பனை வறட்சி ஏற்படும்? மக்களுக்கு சீரியல் பிடிக்காமல் டிஆர்பி ரேட்டிங் குறைந்தால் என்ன ஆகும்.

அது தான் தினமும் கள்ளக்காதல், கொலை, கொள்ளை, சூனியம், பிகமி, பாலிகமி,வல்லுறவு, ஆம்புலன்ஸ் காட்சி,ஆஸ்பத்திரி காட்சி, இழவுக்காட்சி, போலீஸ் ஸ்டேஷன் காட்சி, மனமுறிவு, மனமுறிவுக்கு பின்னர் முன்னாள் கணவனை கருவருத்தல், முன்னாள் மனைவியை கருவருத்தல்,என எல்லா சீரியல்களிலுமே காட்சிகளை மாற்றி மாற்றி வைக்கின்றனர். மனமுறிவு என்பதை மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்ள  நம் ஆட்களை பழக்கி வருகின்றனர்,அதே சமயம் பெண்ணடிமைத்தனத்தையும் காட்சிகள் மூலம் ஆழமாக ஊன்றி வருகின்றனர்.இது போல பலதும்   காட்டி நம் வீட்டு வரவேற்பறையையே நாறடிக்கின்றனர்.

தினமும் யூட்யூபுக்குள் சென்று பாருங்கள்  நாதஸ்வரம் துவங்கி ஒவ்வொரு சீரியலின் எபிசோடும் குறைந்தது 50000 ஹிட் அடிக்கிறது, சில பெண்கள், ஆண்கள் சீரியலை தவறவிட்டுவிட்டால் கையும் ஓடாது காலும் ஓடாது, டாஸ்மாக் கதைதான், மெல்ல குடும்ப தலைவர்களும் பார்க்கத் துவங்குகின்றனர்,  ஆட்டோமேட்டிக்காக குழந்தைகளும்,சீரியலை தவறவிட்டுவிட்ட மாந்தர்க்கென்றே  அதை HD தரத்தில் ரெகார்ட் செய்து சீரியல் முடிந்த 1மணிநேரத்தில் அப்லோட் செய்துவிடுகின்றனர் சில ரசிக சிகாமணிகள்,

அவர்களுக்கு அதன் மூலம் யூட்யூபில் விளம்பர வருவாயும், லைக்குகளும்,கமெண்ட்களும் கிடைக்கின்றன,இதில் என்ன ஒரு கூத்து என்றால் சீரியல் ஆரம்பித்து 750 வாரம் ஆனாலும் அதன் 1 ஆம் நாள் எபிசோடைக் கூட பார்க்க முடியும் என்பது தான் இதன் சிறப்பு,இன்னும் சிலர் சீரியல் நேரத்தில் விளம்பரங்களுடன் அதைப் பார்க்க வேண்டுமா என்று ,தாங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட் டிவியில் யூட்யூப் கனெக்ட் செய்து விரும்பிய நிகழ்ச்சியை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு தெளிவாக உள்ளனர்.எல்லா விளம்பரங்களும் வடிகட்டப்பட்டு வருகின்றன அல்லவா,அது ஒரு கூடுதல் சிறப்பாம்,இதனாலேயே நிறைய பேர் தங்கள் நல்ல எல் ஈ டி யைக்கூட மாற்றிவிட்டு  ஸ்மார்ட் டிவி வாங்குகின்றனர்.

இது வரமா?சாபமா?!!! மாற்றம் என்பது ஒருவர் மனதுக்குள் இருந்து துவங்க வேண்டும்.இது குடி நோய் போல மெல்ல பீடித்து நம் ஆரோக்கியமான குடும்ப சூழ்நிலையையே நாளடைவில் தகர்த்து விடும் என்பது கண்கூடு, இன்று  நிறைய பெண்கள்,அவரைப் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள விதிக்கும் முதல் நிபந்தனை, திருமணத்துக்குப் பின்னர் தனிக்குடித்தனம்,கொழுந்தனார்,நாத்தனார் இருக்க கூடாது,பெண் வீட்டு வேலை செய்ய மாட்டாள்,வேலைக்காரி இருக்க வேண்டும்,வாரம் 2 சினிமா பார்க்கும் மாப்பிள்ளை வேண்டும்,கார் வைத்திருக்க வேண்டும்,பார்ட்டி அனிமலாக இருந்தால் கூடுதல் சிறப்பு,அவருக்குத் தான் சொசைட்டி பற்றி தெரிந்திருக்குமாம்.பழம் பெரிசுகள் கூடவே இருக்க கூடாது,என்பது போல நீளுகிறது,நல் ஒழுக்கமுள்ளவனுக்கு பெண் கிடைப்பதில்லை,அயோக்கிய சிகாமணிக்கு தாம்பால தட்டில் எல்லாம் படைக்கின்றனர்.மனமுறிவு என்பதை மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்ள பழகி விட்டனர்,இந்த டிவி சீரியல்களின் குளவி கொட்டுவது போன்ற விஷ ஊடுருவலால் எதிர்கால சந்ததிகள் எதிர்கொள்ளப்போகும் பின் விளைவுகளை நினைத்தாலே கசக்கிறது.ஆண்டவா!!

என் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்வர்-ராகுல்


அடேங்கப்பா!!! அத்தன ஒர்த்தாங்க நீங்க ராகுல்?!!!
===============================================
உங்க முகத்த கண்ணாடிலயோ,ஏன்? உங்களையே  எப்பவும் ஏற  இறங்கப்  பாத்துக்கிடவோ மாட்டீங்களா?!!! இப்புடி குழந்தை பலூனை உடைச்சுட்டா அழற மாதிரியா அழறது?!!!இப்படி அபிஷ்டு மாதிரியாங்க பேசறது? ஒருவேளை நீங்க பிஎம் ஆகிட்டா , எங்களுக்கு வாழ்க்கை மேலேயே விரக்தி வந்துடும்,அது தான் எங்களுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையே பொய்க்கும் இடம், பாத்துக்கங்க.

உங்க பாட்டி எமர்ஜென்சியில் விதைத்ததை சீக்கியரிடம் அறுத்தார் என்றால் மிகையில்லை,19 மாத கால கொடிய எமர்ஜென்சியில் நீங்கள் , உங்கள் புனித பசு பிம்பம் கொண்ட குடும்பம் எல்லாம் எத்தனை சொகுசாக இருந்திருப்பீர்கள் என யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.

அதே எமர்ஜென்சி சமயத்தில் உங்கள் கைப்பாவை போலீஸார் & மிலிட்டரியால் நாடெங்கிலும் சந்தேகத்துக்கு இடமாக கைது செய்யப்பட்டு ,கோர்ட் விசாரணையே இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான நபர்கள், லாக்கப் டெத் செய்யப்பட்ட எதிர்கட்சியினர், நியாயம் கேட்ட படித்த,பாமர மக்களில் காலையில் வேலைக்கு போய் வீடு திரும்பாதோர்,  கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், அதில் மணமே ஆகியிராத ஆண்கள், பெண்கள்,அது உங்களுக்கு மறந்துவிட்டதா?!!!

காங்கிரஸ் ஆண்ட போபாலில் விஷவாயு கசிவினால் ஒரே இரவில் தூக்கத்திலேயே மாண்டோர்கும்,சிதைக்கப்பட்ட டிஎன்ஏ உடற்கூறுகளுடன் இன்றும் மாண்டு கொண்டிருப்போர்க்கும் நீங்கள்,உங்கள் காங்கிரஸ்,என்ன நீதி செய்தீர்கள்?

இப்படி  நீங்கள் செய்த அக்கிரமம் ஒன்றா இரண்டா?!!!தெய்வம் நின்று கொல்லும் என்பது சத்தியம், அப்படித் தான் எமர்ஜென்சியில் குரூர ஆட்டம் ஆடிய உங்கள் சித்தப்பா ,தன் மகன்  பிறந்த 100வது நாளில் பயிற்சி விமான விபத்தில் இறந்ததும்!!! . போகும் போது கூட உடன் ஒருவரை அழைத்து போனார் புண்ணியவான். அது மறந்துவிட்டதா?!!!

இந்திரா அம்மையாரை இரண்டு சீக்கியர்கள் கொன்றனர்,அதற்கு பரிகாரமாக 8000  [டெல்லியில் மட்டும் 3000 பேர்][அரசு சொன்ன கணக்கு] சீக்கியரை ஆண் பெண்,குழந்தைகள்,பிறந்த சிசு என பேதமின்றி கொன்றார்களே உங்கள் திருத்தொண்டர்கள், அது மறந்துவிட்டதா?!!!

அந்த சீக்கியப் படுகொலைகளுக்கு சப்பை கட்டு கட்ட ஒரு பெரிய ஆல மரம் விழும் போது நிலம் அதிரவே செய்யும் என சொல்லிய பின்னர் அதற்கு பல திசைகளிலும் எதிர்ப்பு திரண்டு வரவே மன்னிப்பு கேட்டாரே உங்கள் தந்தை ராஜிவ். அது மறந்துவிட்டதா?!!!


நேரு குடும்பத்தின் இளைய மருமகளும் மூத்த விதவையுமான மேனகா  உங்களுக்கு சித்தி முறை,அவர் செய்தியாளராக செய்த வெட்கம்  கெட்ட காரியம் அறிவீர்கள் தானே?மேனகா காந்தி காங்கிரஸின் துதிபாடி பத்திரிக்கையான ''சூர்யா'' இதழில் வெளியிட்ட அதிர வைக்கும் செய்திக்காக பெரிதும் அசிங்கப்பட்டவர்,பாபு ஜகஜீவன் ராம் ஒரு தலித் - மூத்த அரசியல்வாதி,தான் இருந்த இந்திரா காந்தி அரசிலிருந்து விலகி ஜனதா கட்சி 1977-ல் பதவிக்கு வர பெரிதும் உதவியவர் என்ற காரணத்துக்காகவே மேனகா காந்தியால் பொதுவில் அவமானப்படுத்தப்பட்டவர் .பாபு ஜகஜீவன் ராம் அப்போது இந்திய பிரதமர் பதவிக்கு தேர்வாகாக கூடியவர்களில் ஒருவராகக்கூட கருதப்பட்டார்.

1978 ஆம் வருடம் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாபு ஜகஜீவன் ராமின் மகன் சுரேஷ் ராமுக்கும், டெல்லி பல்கலைக்கழக மாணவி சுஷ்மா சௌதிரிக்கும் இடையேயான வாய்ப்புணர்ச்சி, மற்றும் அப்பட்டமான உடலுறவு போலராய்ட் புகைப்படக் காட்சிகளை, சுமார் 9 புகைப்படங்களாக காங்கிரஸ் கட்சி பத்திரிக்கையான சூர்யா இதழில் கொஞ்சமும் வெட்கமோ, அப்பெண்ணின் மீது கருணையோ இன்றி வெளியிட்டார் மேனகா.

அது நாட்டு மக்களிடையே மிகுந்த அருவருப்பை பெற்றது,ஆனால் அந்த சூர்யா பத்திரிக்கை ஒரு பிரதி கூட மிச்சமில்லாமல் விற்று தீர்ந்தது, 50 ரூபாய்க்கு கூட அதை வாங்கி கள்ளச்சந்தையில் விற்றனர். இப்புகைப்படங்கள் சுரேஷ் ராமும் சுஷ்மா சௌத்திரியும் நெருக்கமான உடலுறவில் ஈடுபட்டு இருந்ததை வெளிப்படுத்தின,சுரேஷ் ராம் தன் காரில் வைத்திருந்த அந்த 9 போலராய்ட் புகைப்படங்களை காங்கிரசார் திருடி வந்து, அதை சூர்யா பத்திரிக்கையிலும் நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையிலும் பிரசுரித்தனர். 

அதன் பின்னர் அந்தப் பெண் சுஷ்மா சௌத்தியின்  வாழ்க்கையே சூன்யமானது, இப்புகைப்படங்கள் பாபு ஜகஜீவன் ராமின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டது, இந்த கீழ்தரமான செயல்மூலம் தன் அரசியல் எதிரியை அழிக்க என்ன வேண்டுமானாலும் செய்யும் காங்கிரஸ் என்பது நிருபணமாயிற்று, அந்தப்புகைப்படங்கள் நெகடிவ் ஃபார்மட்டில் இங்கே இருக்கின்றன. வயது வந்தோருக்கு மட்டும்.

இதற்கு எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கும் எடிட்டிங் செய்ய உடந்தையாக இருந்தார் என்பதும் வெட்கக்கேடு, மிருகங்களை நேசிக்கும் மேனகா  இப்படி மிருகங்களை விட கீழ்தரமாக இறங்குவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். உங்களுக்கு பத்திரிக்கை தர்மத்தையே கழுத்தை நெறித்து கொன்ற அந்த கீழ்தரமான செயல் மறந்து விட்டதா?!!! 
எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை ராணுவத்துக்கும் புலிகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய உங்கள் தந்தை ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படையை யாராலுமே  மறக்க முடியாது, 3 வருட அட்டூழியத்துக்கு பின்னர் அமைதிப் படையை வெளியேற்ற புலிகளும்,அவர்கள் எதிரிகளான சிங்கள ராணுவமும் ஒன்றாய் இணைந்து பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல,அது ஆப்பரேஷன் பூமாலை அல்ல ஆப்பரேஷன் சவமாலை,

உலக அரங்கில் அமைதியை திரும்ப வைத்தவர் என ராஜீவின் புகழை பரைசாற்றும் அற்ப சுயநலத்துக்காக,புற்றுநோய் கிருமி போல நாட்டையே சூறையாடிய கோரப்படை அது,ஆப்பரேஷன் பூமாலையின் அட்டூழியங்களால் மடிந்த உயிர்களுக்கும் ,வல்லுறவு செய்யப்பட்ட சகோதரிகளுக்கும்,அங்கே இன்றும் நடைபிணங்கள் போல வாழ்பவர்க்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் ராகுல்?,அந்த ரத்த வாடை காயும் முன்பு முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு துணை நின்று சுமார் மூன்று லட்சம் பேர் மடிய காரணமாக இருந்தீர்களே?!!!அது மறந்துவிட்டதா?!!! இன்னும் எழுதவே அயற்சியாக இருக்கிறது,ஊழல் செய்வதில் கின்னஸ் சாதனை  புரிந்த கட்சி என்பது தான் உங்கள் சாதனையாக இருக்கிறது.

உங்களை விட மக்களாகிய எங்களுக்கு நிறைய வரலாறு  தெரியும் ,அவை நீங்கா வடுக்களாக எங்கள் மனதில் இன்னும் உள்ளன. அதை நாங்கள் மறக்கப்போவதில்லை. உங்கள் குடும்பத்தைப் பற்றி தேடினாலே இணையம் நல்லதாக எதுவும்  தருவதில்லை,  அதற்கு முதலில் ஏதாவது வழி பாருங்கள்.அப்புறம் மரண பயம் கொள்ளலாம்.

அண்ணாத்தையின் மரணபயத்தை இங்கே படிக்கலாம்.

 சீக்கிய இன அழிப்பு பற்றி பேசும்  சாரு எழுதிய சிறுகதையான 

பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி

இந்திய எமர்ஜென்சி காலகட்டம் அதன் அக்கிரமங்களை ரத்தினசுருக்கமாக தெரிந்து கொள்ள பார்க்க வேண்டிய படம்:- 


 இந்திரா அம்மையார் சாவுக்கு உச்சு கொட்டுபவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய ஆவணப்படம்:-

மாற்றம் ஒன்று தானே மாற்றம் இல்லாதது!!!


படம் நன்றி: தி இந்து நாளிதழ்
அருமை நண்பர்களே !!!
நலம் தானே?சமூகப் பதிவுகள் எழுதுவதை சில மன அயற்சிகளால் நிறுத்தி விட்டாலும், அவ்வப்பொழுது ஃபேஸ்புக்கில் நிலைத்தகவல்களாக எழுதி வந்துள்ளேன், அவற்றை திரும்ப தேடுவது பெரும்பாடாக இருக்கிறது,ஆகவே இங்கும் பதிவு செய்தால் 360டிகிரி ஒருங்கிணைப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

அன்று இலவச சைக்கிள், மிக்ஸி,டேபிள் ஃபேன்,வெட் க்ரைன்டர், லேப்டாப்பில் ஜெயலலிதாவின் உருவத்தைபதிக்க துவங்கினர், இன்று மக்கள் காசு கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகளிலும், வாங்கிப் பருகும் தண்ணீர் பாட்டில்களிலும் இரட்டை இலையின் அப்ஸ்ட்ராக்ட் சின்னத்தை பொறிக்கும் அளவுக்கு கொண்டு விட்டுள்ளனர் கழக கண்மணிகள்.திமுகவும் இதற்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை,அதை நாம் இலவச டிவி துவங்கி மருத்துவ காப்பீட்டு அட்டை வரை பொறிக்கப்பட்ட உபயதாரர் கருணாநிதி என்னும் பெயரில் பார்த்திருப்போம்.

1940களில் துவங்கிய டிவிஎஸ் மற்றும் தனியார் நிறுவன  பேருந்துகள் 1970களில் சென்னையில் பல்லவன் போக்குவரத்து கழகமானது,அது முறையே மதுரையில் பாண்டியன்,கோவையில் சேரன் என வழங்கப்பட்டது, பின்னர் 1990களில் சென்னையில் அம்பேத்கர் போக்குவரத்து கழகம் என்றும் பிரிக்கப்பட்டதாக நினைவு. பிறகு எல்லா போக்குவரத்துக் கழகங்களும் மாநகர போக்குவரத்து கழகம் என ஒருங்கிணைக்கப்பட்டும் , அதற்கென எதுவும் இலச்சினை [லோகோ] இருந்ததில்லை,

இனி பெயரில் எதுவும் மாற்றம் இருக்காது என எண்ணும் வேளையில், புதிதாக லோகோ உருவாக்கப்பட்டு இருக்கிறது, பாரம்பரியம் மிக்க எத்தனையோ சின்னங்கள் தமிழ்நாட்டுக்கென உண்டு,அப்படி இருக்கையில் 40வருட பாரம்பரியம் மிக்க அதிமுக இலச்சினை குறியீடான வடிவில்[abstract form]  பொறிக்கப்பட்டுள்ளது, இது 4 இலைகளை கொண்டிருந்தாலும் அது இரட்டை இலை சின்னத்தையே குறிக்கிறது,ஆட்சியாளர்கள் மறைமுகமாக  பாமர மக்கள் மனதில் பதியுமாறு   நிறுவிதை நன்கு உணர முடிகிறது ,நாளை திமுக ஆட்சிக்கு வந்து சுமார் 3000 பஸ்களுக்கும் லோகோ அழித்து மீண்டும் பெயின்ட் அடிக்க ஆகும் பொருட்செலவும் கூலியும் நம் தலையில் தானே விலைவாசியாக இறங்கும்?

ஓவ்வொரு ஆட்சிக்காலத்திலும் ,இப்படி விரும்பிய இலச்சினையை மாற்றிக்கொள்வது, தமிழகத்துக்கு என சர்வதேச அரங்கில் தனித்த அடையாளத்தை பெற்றுத்தருமா? இந்த ஆட்சிக்காலம் முடிந்து வேறு கட்சி வந்தால் உதயசூரியனோ,முரசு சின்னமோ மீண்டும் அழித்து வரையப்படுமா? இது குடி ஆட்சியா?முடி ஆட்சியா என,சந்தேகமாக இருக்கிறது.

இதில் என்ன கொடுமை என்றால் ஆளும்கட்சி தமது சின்னத்தை மறைமுகமாக வைப்பதும் , எதிர்க்கட்சி கேஸ் போட்டு அதை அழிக்க வைப்பதும்   ஏற்கனவே தங்க நாற்கர சாலை எம்ஜியார் சமாதி என நிறைய உதாரணங்கள் உண்டு , அதீத செலவு பிடிக்கும் கட்சி விளம்பரங்கள் அதை மாற்ற ஆகும் கூடுதல் நிதிச்சுமை என பொதுமக்கள் தலையில் தான் விலைவாசியாக விழும் , வாஜ்பாய் வாகன ஓட்டிகளை பார்த்து கையசைக்கும் சிற்பம் 400 செய்ய அப்போது 50 கோடி ஆனது,

கோர்ட் தீர்ப்பின் படி  அதை அழித்து மறைக்க 2 கோடி ஆனது எனப் படித்திருக்கிறேன் ,காங்கிரஸ் செய்யும் வெட்டி விளம்பர செலவில் ஒரு மாநிலத்துக்கு பட்ஜெட்டே போடலாம் , இதற்கெல்லாம் செல்வழிப்பது யாருடைய பணம்?, எல்லா செம்மொழி பூங்காவிலும் கலைஞரின் படமும் பெயரும் பொறிக்கப்பட்டன, இப்போது  அந்த பெயர்கள் அவிழ்ந்து தொங்குகிறது, சில காணாமல் போய்விட்டன,அந்த கோலம் பார்க்கவே சகிக்க முடியாதபடி இருக்கிறது.

விசிட்டிங் கார்டு லோகோ டிசைனுக்கு  கூட வாஸ்து பார்க்கும் மூடர்களும், ஏமாற்றுக்காரர்களும் நாட்டில் நிரம்ப உண்டு என நினைக்கையில் பற்றி எரிகிறது , கருமம்

புலம்பல்கள் தொடரும்!!!

தூவானத்தும்பிகள் [തൂവാനത്തുമ്പികൾ] [Thoovanathumbikal] [1987] [மலையாளம்]

யக்குனர் பத்மராஜன் எழுதி இயக்கிய தூவானத்தும்பிகள் [மழைக்கால தும்பிகள்] மரபுகளை கட்டுடைத்த மலையாள கல்ட் சினிமாவில் மிக முக்கியமானது, படம் 1987 ஆம் ஆண்டு வெளியாகி இலக்கிய, கலை சினிமா,மற்றும் வெகுஜன ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது,இத்தனைக்கும் படம் A சான்றிதழ் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில்  கிராமத்துக்கும் நகரத்துக்குமான  மாறுபட்ட  இரட்டை வாழ்க்கை வாழும் ஜெய்கிருஷ்ணன் என்னும் இளைஞன் பாத்திரத்தில் தோன்றிய மோகன்லால் அப்படியே ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொண்டு விடுவார், பாசாங்கோ சமரசங்களோ இன்றி எடுக்கப்பட்ட ஒரு உன்னத படைப்பு என அனைவராலும் பாராட்டப்பட்ட படம் இது, மலையாளத்தில் மோகன்லாலின் ஃபில்மோக்ராஃபியில் மிக முக்கியமான படம்,கத்தி மேல் நடக்கும் பாத்திரத்தை அநாயசமாக தாண்டியிருப்பார் மனிதர்,

இதில் இவரின் காரக்டர் ஸ்கெட்சை நம் மனதுக்குள் எண்ணி எண்ணி வியக்க வைக்கும், கிராமத்தில் வடிகட்டிய கஞ்சன்,நகரத்துக்கு சென்றால் சரியான ஊதாரி என்னும்படியான  பாத்திரம், கிராமத்தில் நண்பர்களே அற்றவன், நகரத்தில் பெண் தரகன் முதல் ரவுடி,ஆட்டோ டாக்ஸி டிரைவர்,பார் சிப்பந்தி ,என ஒரு பெரிய நெட்வொர்கையே நண்பர்களாக கொண்டவன் ,டிகிரி படித்திருந்தும் விவசாயத்தையும் பரம்பரை வீட்டையும் கட்டிக்காக்கும் ஒரு விதவை சகோதரிக்கும் [சுலக்‌ஷனா] விதவை தாய்க்கும்[சுகுமாரி] அடங்கி ஒடுங்கிய ஆனால் கண்டிப்பானவனான ஒரு வேடம்,

தன் நண்பன் ரிஷி, [அஷோகன்]  திருமணத்துக்காக ஏங்குகிறான்,பாலியல் இச்சைக்காக மருகுகிறான் என அறிந்தவன் அவன் சுகிக்க அவன் வீட்டின் அருகாமையிலிருக்கும் புகழ்பெற்ற த்ரெஸ்யா ஜோஸ் என்னும் விலைமங்கையை  தன் பெண் தரகு நண்பன் தங்கல்[பாபு நம்பூதிரி] மூலம் ஏற்பாடு செய்கிறான் ஜெய்கிருஷ்ணன் , ரிஷி மறுக்காமல், சந்தேகப்படாமல் இருக்க ஒரு காய்கறிப்பையுடன் திருச்சூர் நகரில் இருக்கும்  அவனின் எலக்ட்ரிகல்ஸ் கடைக்குப் போனவன் ,அவனை வெளியெ கூட்டிச் சென்று தன் அம்மாவின் மூட்டு வலிக்கு சூப் வைக்க ஆட்டுத் தலை ஒன்றை இலையில் மடித்து வாங்கிவிட்டு அதிரடியாக பேரம் பேசும் இடம் எல்லாம் இயல்பான நகைச்சுவையின் உச்சம்.

பின்னர் பச்சை காய்கறிகளும் வாங்கிக் கொண்டு,வெயிலின் சூட்டுக்கு  ஒரு கடையில் உப்பிட்ட எலுமிச்சை பழச்சாறு வாங்கி அருந்தும் இடமும்,ஐஸ் போடவில்லை என்று கடைக்காரனிடம் மோகன்லால் சண்டை பிடிக்கும் இடமும் மிகவும் அதகளமாக இருக்கும்,தன் நண்பனிடம் வா நான் உனக்கு ஐஸ் போட்டு எலுமிச்சை சாறு வாங்கித்தருகிறேன் என ஒரு ஏசி பாருக்குள் அழைத்துப் போகும் அந்த இடத்தில் எல்லாம் பத்மராஜனின் தேர்ந்த நகைச்சுவையும் , திரைக்கதை நேர்த்தியும் நமக்கு ஒருங்கே புலப்படும்,

அங்கே பாரில் ஜெய்கிருஷ்ணன்  எலுமிச்சை சாறு கொண்டுவரச் சொல்லிவிட்டு, அவரிடமே சில்டு பியர் இருக்கிறதா? எனக்கேட்கும் காட்சியும், அதற்கு டேவிட் என்னும் பார் சிப்பந்தியின் அசுரச்சிரிப்பும்,பின்னர் 2 பியர் வர,அதை லாவகமாக பருகும் நண்பனிடம் அசடு வழிய உனக்கு இதெல்லாம் ஏற்கனவே பழக்கமா? என அப்பாவியாகக் கேட்கும் ரிஷியும் என மிகப்பிரமாதமாக காட்சிப்படுத்தப்பட்டவை, 

அங்கே பாரில் 10க்கும் மேற்பட்ட ஜெய்கிருஷ்ணனின் நண்பர்கள் சேர்ந்து விடுவர், ஜமாவும் ஆரம்பமாகிவிடும், ஆனால் தமிழ் சினிமாவின் க்ளிஷேத்தனமான கேபரே நடனப் பாடல் ஒன்று அங்கே இடைச்செருக்கப்பட்டிருக்காது, ஆனால் அத்தனை நிஜமாக நம்பும்படியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், தன் பள்ளித் தோழனுக்கும் நமக்கும் மோகன் லாலின் உண்மையான முகம் அன்று அங்கே தான் வெளிப்படும், இந்த ஜெய்கிருஷ்ணனின் அன்றைய  நாடகத்தை வழக்கமான வாடிக்கையாளர்கள் பாரில் ரசித்து களிப்பர்,நாமும்

மிக அற்புதமான காட்சி அது, இத்தோடு நின்று விடவில்லை, மிடில் கிளாஸ் தாழ்வு மனப்பான்மை மிகுந்த நண்பனை பாரில் நன்கு களிப்பூட்டி, பின்னர் காரில் ஏற்றி,அவன் எடுத்த வாந்தியையும் துடைத்து நகரின் ஒதுக்குப்புறமான லாட்ஜுக்கு அழைத்து செல்வான் ஜெய்கிருஷ்ணன்,நினைத்துப்பாருங்கள் வடிகட்டிய கஞ்சன் என தன்னை நினைக்கும் நண்பனுக்காக  அவன் உள்ளம் கவர்ந்த பெண்ணான த்ரெஸ்யா ஜோஸ் என்னும் விலைமாதுவை அறைக்குள்  முன்பே வரவழைத்து இருத்தி நண்பன் ரிஷியுடன் கதவைத் தட்டுவான், தான் வாங்கிய ஆட்டுத்தலையும் காய்கறிகளும் பின்னர் ஒரு பியர் பாட்டிலும் அடங்கிய பையையும் கூட அங்கேயே விட்டுவிட்டு அகல்வான் ஜெய்கிருஷ்ணன், 

பின்னர் பக்கத்து அறையில் காத்து இருக்கும்  ப்ரொஃபெஷனல் பெண் தரகரான தங்கலிடம் ரிஷிக்கு எந்த இடைஞ்சலும் இன்றி பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு தன் ஊரான மன்னார்துடிக்கு செல்வான்.மறு நாள் தான் ஜெய்கிருஷ்ணனின் நண்பன் ரிஷிக்கும் ஏன் நமக்கும் கூட ஒரு உண்மை புரியும், எத்தனையோ பெண்களை நண்பர்களுக்கு தரகர் தங்கல் மூலம் சுகிக்க ஏற்பாடு செய்து தந்திருக்கும் ஜெய்கிருஷ்ணன் இதுவரை ஒரு பெண்ணையுமே சுகித்ததில்லை என்பது தான் அது!!!,பத்மராஜனின் இயக்கம் அப்படி ஒரு மேஜிக்காக அதை அங்கே சாதித்திருக்கும்,

இந்தப்படம் ஒரு இந்திய சினிமா அதுவரையில் பாலியல் ரீதியாகக் கொண்டிருந்த மரபுகளை சம்பிரதாயங்களை இலக்கணங்கள் அனைத்தையும் தகர்த்து உடைத்தது என்று சொன்னால் மிகவும் சரியாக இருக்கும்,படத்தின் நாயகன் திருமணத்துக்கு முன்பே பாலுறவு கொள்வான், மேலும் படத்தில் வரும் க்ளாரா என்னும் விலை மங்கை விரும்பியே இந்த பாலியல் தொழிலுக்கு வருகிறாள், அவளின் முதல் வாடிக்கையாளனான ஜெய்கிருஷ்ணன், இதுவரை யாரையுமே புணராதவனாயிருக்கிறான், ஏன் இவள் இத்தொழிலுக்கு வந்தாள்?என்னும் கேள்வியை ஜெய்கிருஷ்ணனிடமிருந்து எதிர்கொள்ளும் அவள் சிறிதும் தயங்காமல்  எப்படியும் கெட்டுத்தானே போவேன்?,அதற்கு   கௌரவமாகவேணும் கெடுகிறேனே!!! என்கிறாள்.  தான் க்ளாரா என்னும் கன்னியை சுகித்த பின்னரே அவள் கன்னி என உணர்ந்து   குற்ற உணர்வை அடைந்தவன், அவளிடம் காதலும் கொள்கிறான், அவளை திருமணமும் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறான்,

ஜெய்கிருஷ்ணனும் களாராவும்
ஆனால் க்ளாராவுக்கு அடிமை வாழ்க்கை பிடிக்கவில்லை, சில காலம் வறுமையை விரட்ட இந்த தொழிலிலேயே இருப்பது என முடிவு செய்தவள், தன்னை சித்தியும் தரகர் தங்கலும் ஆளுமை செய்ய விழைவதை வெறுக்கிறாள், ஜெய்கிருஷ்ணன் அவளுக்கு அளித்த பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவானவள், போன ஊர்களிலும் விலைமாதுவாகவே பணி புரிகிறாள் , வழமையான சினிமாவுக்கு வேண்டி சேர்க்கப்பட்ட புனிதத்துக்காக நாயகனுக்காக அவள் தன் கற்போடும், கர்ப்ப பாத்திரத்தினோடும் காத்திருக்கவில்லை,

இங்கே  ஜெய்கிருஷ்ணனின் காதலை நிர்தாட்சண்யமாக நிராகரித்த ராதா என்னும் கதாபாத்திரமும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அவள் ஏன்ஜெய்கிருஷ்ணனை  முதலில் நிராகரித்தாள்?என குழம்பும் நாம், இப்படி குணாதிசயங்கள் கொண்ட ஒருவன் தன்னைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள சம்மதமா?என ஆர்வத்துடன் கேட்பது என்பதையே அவள் அருவருப்பக கருதுகிறாள். தான் ஒரு போகப்பொருள் என்ற எண்ணமும். அது போன்ற நாகரீகமில்லாத கிராமத்தான் ஒருவனால் காமத்துடன் அணுகப்பட்டதையும் எண்ணி வெறுக்கிறாள். ஆனால் இறுதியில். ஜெய்கிருஷ்ணனை அவளால் மனதில் இருந்து துடைக்க முடியவில்லை. ஜெய்கிருஷ்ணனையே நினைத்துக் கொண்டிருக்கிறாள் ராதா. அவனைப் பற்றியே அக்காள்,மற்றும் அண்ணனிடம் ,நண்பர்களிடமும் சுற்றத்தாரிடமும் விசாரிக்கிறாள். அது இறுதியில் உடும்புப்பிடியான காதலாக மாறுவதை நாமும் கண்கூடாக பார்ப்போம். ஒருகட்டத்தில் அது ஒரு மிதமிஞ்சிய காதலாக மாறி க்ளாராவின் மீது பொறாமையும் கொள்கிறாள், ஜெய்க்கிருஷ்ணனை அவளுடன் பங்கு போடுவதை வெறுக்கிறாள்.

இங்கே க்ளாரா பாத்திரமோ, ஜெய்கிருஷ்ணன் அவளிடம் எத்தனை விரும்பிக் கேட்டும் அவனை மணக்க சம்மதம் சொல்லவில்லை, அவள் விரும்பிய போது மட்டுமே அவனுக்கு தந்தி கொடுத்து வரவழைத்து தனிமையில் ஓரிடம் போய் ரசித்து சுகிக்கிறாள். க்ளாராவை இத் தொழிலுக்கு அறிமுகம் செய்த தரகர் தங்கலிடம் தன் கணவன்,மற்றும் க்ளாராவின் சகோதரன் அறியாத வண்ணம் கொண்டு வந்து விடும் சித்தி ப்யாட்ரைஸ் கதாபாத்திரமும் சிறிதும் பாசாங்கே இல்லாதது,முதல் முறையாக தன் மூத்தார் மகளை ஜெயகிருஷ்ணன் என்னும் தொழிலதிபருக்கு ஒரு பட்டப்பகலில் கூட்டித்தரும் அக்காட்சி,எப்படி விரசமேயில்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் ? என ஆச்சர்யமூட்டும்.

பணம் கொழித்திருக்கக் கூடிய  மீனவர் குடும்பம் என்றாலும் உழைக்காமல் சாப்பிடும் குடிகாரக் கணவன்,மூத்தாரின் மகள் க்ளாராவுக்கு திருமணமும் செய்ய பொருளில்லாத கையறு நிலை, உதவாக்கரை பிள்ளை,தரகர் தங்கலை தேடி வந்து தொழிலில் இணைத்து நல்ல வாழ்க்கையும் பாதுகாப்பையும் கேட்கிறாள் பியாட்ரைஸ் , தரகர் தங்கலும் அதிகம் ஆசையற்றவர், இவரது பாத்திரத்தை நடிகர் பாபு பிள்ளை மிக அற்புதமாக லஜ்ஜையே இன்றி செய்திருந்தார்,

நாம் ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே என்னும் நாவலில் வரும் கந்தனை மறந்திருக்க மாட்டோம், தங்கல் கந்தனுக்கு நேரெதிரானவர், கிட்டத்தட்ட 80களின் மேல்தட்டு வர்க்கத்துக்கு தரமான விலைமங்கையரை தருவித்துத் தரும் ஒரு சவாலான பாத்திரம் இவருடையது, மனிதர் அநாயசமாக அதை கையாண்டுள்ளார், நாவலில் கந்தன் விலைமங்கை மீனாவின் மீது மையல் கொண்டு அவளின் உடமைதாரரான சோலைப்பிள்ளையிடம்  போய் பெண் கேட்பான், அங்கே சோலைப்பிள்ளை நயவஞ்சகமாக பேசி கந்தனின் காமதேனு போல மாத வாடகை பெற்றுத் தரும் வீட்டை விற்க வைத்து ஒரு பெருந்தொகையை அவனிடமிருந்து கறந்து விடுவார்,பின்னர் மீனாளை கந்தனுக்கு கல்யாணம் செய்து வைப்பார்,

ஆனால் இங்கே எதிர்மாறாக தான் முதன் முதலாக சுகித்த க்ளாராவை ஜெய்கிருஷ்ணன் திருமணம் செய்ய ஆசைப்பட்டவன்,அவனை முதல் வாடிக்கையாளராக்கிய தங்கலிடமே வந்து க்ளாராவை பெண் கேட்கிறான், அவளை இனி யாருக்குமே தொழில் ரீதியாக அனுப்ப வேண்டாம்,அதற்கு உண்டான இழப்பீட்டை தானே தருகிறேன் என்கிறான், அதற்கு தங்கல் உடன் பட்டாலும் க்ளாராவின் முடிவு வேறாக இருக்கிறது, அவள் அங்கிருந்து தப்பிக்கிறாள், 

மேலும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விஷயம்,பத்மராஜனின் விரசமற்ற காட்சியாக்கம், படத்தில் இரு நாயகியர் க்ளாராவாக சுமலதா, ராதாவாக பார்வதி இருக்க , விலைமாதுவாக வந்த க்ளாராவாகட்டும், ஆச்சாரமான தரவாட்டு குடும்பத்து பிண்ணணியில் வந்த ராதாவாகட்டும் இருவருமே கண்ணியமாக நடித்துள்ளனர், ஜெய்கிருஷ்ணனுக்கும் க்ளாராவுக்கும் நடக்கும் சரசங்கள் கவிதை போல படமாக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகையில்லை, வக்கிரம் கொண்ட கேமராக்களை நாம் எளிதாக அடையாளம் காண முடியும். 

பத்மராஜனின் நெறியாள்கையும் , வின்செண்டின் கேமராவும் காதல் காட்சிகளில் அப்படி ஒரு கவித்துவமான மினிமலிசத்தை கை யாண்டிருக்கின்றன, அதனால் தான் இப்படம் 20 வருடங்கள் கடந்த பின்னரும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது,கல்ட் ஸ்ட்டேஸை பெற்றிருக்கிறது. படத்தில் சொல்லவேண்டிய இன்னொரு கதாபாத்திரம் மழை, ஆமாம் மழையேதான், ஜெய்கிருஷ்ணனும், க்ளாராவும் சந்திக்கும் அநேக காட்சிகளில் மூன்றாவது கதாபாத்திரமாகவே வருகிறது மழை .

படத்தில் மதம் துச்சமாக பகடி செய்யப்பட்டிருக்கிறது,க்ளாரா கிருத்துவ மதத்தை சேர்ந்தவள், அவளின் தந்தைக்கும் சகோதரனுக்கும் தெரியாமல் ,சந்தேகம் வராமல் சித்தி பியாட்ரைஸூடன் அவள் திருச்சூருக்கு விலைமங்கையாக வரவழைக்க , அதிகம் படிக்காத தரகர் தங்கலும் ,டிகிரி படித்த இரட்டை வாழ்க்கை வாழும் ஜெய்கிருஷ்ணனும் திட்டமிடுகின்றனர், தங்கல் இதை ஜெய்கிருஷ்ணனிடம் தான் போலியாக தயாரித்த கிருத்துவ மிஷனரி லெட்டர் பேடில் டைப் அடிக்க ஒரு கடிதம் எழுதித்தர கேட்டு அணுகும் இடம் மிக முக்கியமானது,

அதற்கு மிகவும் ஆச்சாரமான தரவாட்டு குடும்பத்தை சேர்ந்த காலம் சென்ற ஜட்ஜின் மகனான ஜெய்கிருஷ்ணன் உடன் படுவதும், அன்று இரவே தங்கலுக்கு உதவ,தலைமை கன்னியாஸ்திரி எழுதுவது போல் கடிதம் எழுத அமர்ந்தவுடன் வார்த்தைகள் குறும்புடன் கொப்பளிக்க கடிதம் உருவாகும் இடமும் அங்கே பெய்யும் மழையும் மிக முக்கியமான ரசமான இடங்கள், இதுவரை இந்திய சினிமா பார்க்காத ஒரு கருப்பொருள் அவை எனச் சொல்லுவேன்,

மேலும்  இயக்குனர் பத்மராஜன் எந்த இடத்திலுமே பாலியல் தொழிலையோ, பாலியல் தொழிலாளியையோ, அவளின் வாடிக்கையாளரையோ ,பெண் தரகரையோ கேவலமாகச் சித்தரிப்பதில்லை, பாலியல் தொழிலும் ஒரு கண்ணியமான தொழிலாகவே சித்தரித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர்.பெண் தரகர் தங்கல் வாழும் வீட்டைக் கூட ஒரு நளினமான ஒன்றடுக்கு வீடாகவே , மிகவும் சுத்தமாகவே காட்டியுள்ளார்.80களின் மலையாள சினிமாவின் இந்த கட்டுடைத்தல் நம் பார்வைக்கு மிகவும் புதியது.

பின்னரும் ஓரிரு இடங்களில் மதத்தின் மீதான பகடி தொடர்கிறது,இரண்டாம் முறையாக ஜெய்கிருஷ்ணனை ரயில் நிலையத்தில் நடுநிசியில் சந்திக்கும் க்ளாரா,தான் தன் வீட்டாரை சமாதானப்படுத்த  அனுப்ப எடுத்துக்கொண்ட கன்னியாஸ்திரி புகைப்படத்தை அவனிடம் காட்ட,அவளுக்கு கன்னியாஸ்திரி கோலம் மிகவும் பொருத்தமாயுள்ளது என சொல்லி சிரிக்கிறான் ஜெய்கிருஷ்ணன், இப்போது க்ளாரா  தனக்கு வழமையான ஹோட்டல் அறைகளின் நான்கு சுவர்களும் ஒரு கூரையும் அலுத்து விட்டன என்கிறாள், 

தனக்கு திறந்த வெளியில் ஜெய்கிருஷ்ணனுடன் தனிமையில் தான் விரும்பிய படி இரு தினங்களைக் கழிக்கவேண்டும் என்கிறாள், அதற்கும் ஜெய்கிருஷ்ணன் தரகர் தங்கலிடமே சென்று இவரிடமிருந்து ஓடிப்போன க்ளாரா வந்துள்ளாள், ஆனால் அவள் உங்களை பார்க்க விரும்பவில்லை, உள்ளூர குறுகுறுக்கிறாள் என்கிறார், அவரின் புரிதலான ஏற்பாட்டின் பேரில் அவரின் ஊருக்கு ஒதுக்குப்புறமான கவனிப்பார் அற்று கிடக்கும் ஒரு குடிசை வீட்டுக்கு க்ளாராவுடன் போகிறான் ஜெய்கிருஷணன்.அங்கே தூரத்தில் கேட்கும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு மனநிலை பிழறியவனின் ஓலம் க்ளாராவை குலைக்கிறது,

அவனின் சங்கிலி கால்களை அறுத்து சிரங்காகியிருக்க,தன்னை எதனாலோ அந்த சிரங்காக நினைக்கிறாள் க்ளாரா,அவள் அங்கே ஒரு திண்ணமான முடிவை எடுக்கிறாள்,ஆனால் வெளிக்காட்டிக் கொள்வதில்லை,அது அங்கே கதையின் முடிவில் ஒட்டப்பாலம் ரயிலடியில்  நமக்கு தெரிய வருகிறது, அது கதைக்கும் ,ஜெய்கிருஷ்ணனுக்கும்,அவனை விரும்பியும், நம்பியுமிருக்கும் முறைப்பெண்ணான ராதாவுக்கும் மிக ஆறுதலான முடிவாகவும் இருக்கிறது, இயக்குனர் க்ளாராவின் தொழிலில் அவளுக்கு ஒரு இடைவேளை தேவை என்று ஒரு விடுமுறையில் அவள் புறப்பட்டு வந்து ஜெய்கிருஷ்ணனுடன் சுகித்து விட்டுப் போகும் சுதந்திரத்தை அளித்த பாங்கும் வியக்க வைக்கிறது.

ராதாவும் ஜெய்கிருஷ்ணனும்
க்ளாரா பேச்சுவாக்கில் ஜெய்கிருஷ்ணனைப் போன்றே மாதவன் என்னும் ஒரு விதவை எஞ்சினியரும் இவளை மணக்க கேட்டு காத்திருப்பதாகச் சொல்கிறாள், ஜெய்கிருஷ்ணன் உடனே அவன் என்ன கிழவனா?என்று மடக்க, க்ளாரா,ஜெய்கிருஷ்ணனுக்கு பொறாமையைப் பார்?!!! என அவன் தலையை மடியில் கிடத்தி முகத்தை வருடியபடி பதிலுறைக்கிறாள். அதெல்லாம் மிக அழகாக படமாக்கப்பட்டவை, ரசனைக்காரர்களுக்காக ரசனைக்காரர்களால் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு என்றால் மிகையில்லை. எனக்கு ராதாவை விட க்ளாராவின் கதாபாத்திரம் தான் மிகவும் பிடித்தமையால்,அதைத்தான் இங்கே அதிகம் சிலாகித்திருக்கிறேன்.இருந்தும் க்ளாராவை விட மிகவும் துடுக்கான குறும்பான, கோபக்கார பெண்ணாக வந்த ராதா தான் மிக அழகு, ஆனால் பாத்திரப் படைப்பிலும் நடிப்பின் நேர்த்தியிலும் களாராவே விஞ்சுகிறார்.

மேலும் இயக்குனர் தன் மதத்தின் மீதான பகடியை கடைசி காட்சியிலும் தொடர்ந்துள்ளார்,ஜெய்கிருஷ்ணனின் தரவாட்டு வீட்டினை ஒட்டிய நிலத்திலேயே குடிசை போட்டு அனுபவித்து வந்த குடிகாரனான ராமணுண்ணியை [ஜகதிஸ்ரீகுமார்] நெடுங்காலமாய் காலி செய்யச் சொல்லி கேட்டும் காலி செய்ய மறுத்தும் துடுக்காக பேசி வந்த அவனை வேறு வழியில்லாமல் தன் நகரத்து நண்பர்களுடன் நன்றாக குடித்து விட்டு,  அலேக்காக அவன் கைகால்களை கட்டித் தூக்கிச்சென்று பீச்சி அணைக்கட்டின் மேலே இருந்து தூக்கிப்போடப் போகும் அந்த காட்சிகள், அங்கே அவன் உயிருக்கு பயந்து தொடர்ச்சியாக ராம ராம ராம என முனகும் காட்சியில்,நம் முதுகை சில்லிட வைக்கிறது,அத்தனை யதார்த்தம் பொதிந்த காட்சிகள் அவை. உயிர் பயத்தை விழியில் கொண்டுவந்திருப்பார் அருமையான நடிகர் ஜகதி ஸ்ரீ குமார்.  

அங்கே ஜெய்கிருஷ்ணணின் பணக்கார பஸ்சர்வீஸ் நண்பன் பாபு , ஜெய்கிருஷ்ணனுக்கு மனப்பூர்வமாக உதவ வேண்டி ,ஸ்ப்ரிங் கத்தியை வைத்து வருடி ராமணுண்ணியை மிரட்டும் இடம் எல்லாம் படத்தை ஒரு பக்கா த்ரில்லராக மாற்றிய நிமிடங்கள் என்பேன்,அதை நேரில் பாருங்கள், அனுமானிக்க முடியாத ஒரு புதிரான ட்விஸ்டைக்கூட என்ன அழகாக இந்த சிறிய கிளைக்கதையில் பொதித்து வைத்திருக்கிறார் பத்மராஜன் எனப் புரியும். ஜான்சன் மாஸ்டரின் இசையும் பிண்ணணி இசையும் மிக அருமை,தேனான 3 பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருக்க வைக்கும்.ஜெய் கிருஷ்ணனின் மீதான அந்த கதாபாத்திரத்தின் கட்டமைப்பும் ஈர்ப்பும் அப்படி சிலாகிக்க வைக்கும்,எத்தனை முறை பார்த்தாலும் புதுப்புது சங்கதிகளை சொல்லும் படம் இது,நான் முன்பு சப் டைட்டில் இல்லாமல் தரவிறக்கிப் பார்த்ததில் முக்கியமான சிலேடைகளை விட்டுவிட்டேன்,பின்னர் நேற்று யூட்யூபில் இருக்கும் 14 பாகப் படத்தை சப் டைட்டிலுடன் பார்க்க மீண்டும் உள்ளம் கொள்ளை போனேன்.80களுக்கு டைம்மெஷினில் ஏற ஆசை கொள்ள வைக்கும் ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.

முழுப் படத்தின் காணொளி யூட்யூபில் சப்டைட்டில் உடன் கிடைக்கிறது:-முதல் பாகத்தின் காணொளி இங்கே :-

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் [Onaayum Aattukkuttiyum][2013][இந்தியா]

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் நேற்று பார்த்தேன், இங்கே துபாய் தியேட்டர்களில்    இரைச்சலான தமிழ் திரைப்படங்களும் இதனுடன் முண்டி அடித்தமையால் ரிலீசாக வில்லை, அதனால் படத்தை வேறு எப்படிப் பார்க்க முடியுமோ அப்படித் தான் பார்த்தேன்,இயக்குனர் மிஷ்கின்  படத்துக்கு பிண்ணணி இசையே இன்றி நோ கண்ட்ரி ஃபார் ஒல்ட் மென் போலக்  கூட முயன்று இருக்கலாம்,அவரின் செய்நேர்த்தி தமிழ் சினிமா பார்க்காத ஒன்று.

ஆனால் அதற்கு தமிழ் ரசிகர்கள் பக்குவப்பட இன்னும் நிறைய காலம் போக வேண்டுமே,இன்றைய நண்டு சிண்டு இசை கெடுப்பாளன்கள் பிண்ணணி இசை என்று ரெடி மேட் லூப்பை வெட்டி ஒட்டி அலற விடுகின்றான்கள்[இதை எழுத நான் வருத்தப்படவில்லை]அந்த சிரங்கு பிடித்த கைகளுக்கு ஏழு ஜென்மம் எடுத்தாலும் கைவராத பிண்ணனி இசை இது என அடித்துச் சொல்லுவேன், இசைஞானியே கதி என சரணடைந்த மிஷ்கினுக்கு சிறந்த இசையை அளித்து நீதி செய்திருக்கிறார்,படம் பார்ப்பதற்கு முன்னும் பின்னும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தளத்தில் இருக்கும் பிண்ணணி இசைக்கான இலவச தரவுகளை  முழுக்க கேட்டுக்கொண்டே தான் இருந்தேன்,படம் பார்க்க வேண்டிய ஆவலை அது தூண்டி விட்ட காரணியாகும்.அப்படிப்பட்ட எவெர்க்ரீன் க்ளாசிக் த்ரில்லர் திரைக்கதையும் பிண்ணணி இசையும் இது,இதை இன்னும் 30 வருடம் கழித்துப் பார்த்தாலும் புதுமையான ஒரு ஆக்கமாக மிளிரும் என்பேன்.

இது மேஜிக் அன்றி வேறு இல்லை உதிரிப்பூக்கள்,முள்ளும் மலரும்,முதல் மரியாதை ,தளபதி, சிறைச்சாலை, ஹேராம், பிதாமகன், பாரதி, விருமாண்டி,பழசிராஜா படத்துக்கு எல்லாம் கொடுத்த பிண்ணனி இசையை விட விஞ்சி நிற்கிறது, படக் காட்சிகள் மனக்கண்ணில் விரிந்தன என்றால் அது மிகையில்லை , கண்ட ரெடிமேடு லூப்பையும் கேட்டு நொந்து போய் இருந்தவர்களுக்கு  நெடுநாள் கழித்து கிடைத்த அரிய பிண்ணணி இசை படத்துக்கு எந்த விதத்திலுமே இடையூராக இல்லை. எங்கே இசை கூடாது என்பது இவரை விட யாருக்கு கைவரும்? !!! இசைஞானியிடம் இதை விட ஒன்றுக்கு பத்தாக  அறுவடை செய்த  இயக்குனர்கள் எல்லாம் நன்றி மறந்த , முதுகில் குத்திய நிலையில் , மிஷ்கின் அவருக்கு செய்த முதல் மரியாதை  அபாரமானது,அவரை மனதாரப் பாராட்டுகிறேன்.

இசைஞானி பாராட்டுகளுக்கும் விருதுகளுக்கும் அப்பாற்பட்டவர்,அவரை ஒருவர் புகழ்ந்தாலும் அவரின் மேன்மை உயரப்போவதில்லை,இகழ்ந்தாலும் அவரின் மேன்மை தாழப்போவதில்லை.மிஷ்கின் அடுத்த 20 வருடங்களுக்கு இசைஞானி தான் தன் படங்களுக்கு இசை என்று சொல்லியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, எதோ ஒரு டீவி பேட்டியின் முடிவில் முத்தாய்ப்பாக மிஷ்கின் தாலாட்டு  கேட்க நானும் எத்தனைநாள் காத்திருந்தேன் என்று தழுதழுத்து பாடி முடித்தார், அதில் இசைஞானியின் மீதான அவரின் பாசாங்கில்லாத மரியாதையை உணரமுடிந்தது, 

படம் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ப்ரேவோ,மார்டின் ஸ்கார்ஸஸியின் டாக்ஸி ட்ரைவர் படம் போல தமிழில் வந்த ஒரு தனித்தன்மை வாய்ந்த முயற்சி இது ,சில இடங்களில் கோயன் சகோதர்களின் நேர்த்தியும், ரஷ்ய இயக்குனர் அலெக்ஸி பாலபனவ்வின் தரமும் ஒருங்கே வெளிப்பட்டது,குஞ்சு குளுவான்கள் எல்லாம் சினிமா என்றால் என்ன என்று தெரியாமல் வாயால் வடை சுட்டும்,புரளியை விதைத்து குறுக்குவழி விளம்பரம் செய்தும்,குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பியுமே படம் எடுக்கின்றனர் ,நம் திரை விமர்சக அறிவு ஜீவிகள் லாஜிக் பார்க்கலாம், ஆனால் தானம் வந்த மாட்டை பல்லை பிடித்தார் போல இது போன்ற சில நல்ல முயற்சிகளுக்கு முரட்டு லாஜிக் பார்க்கக் கூடாது என்பது தான் என் நிலைப்பாடு, இது மிகவும் ப்ரொஃபெஷனலான படம்,இதில் மேதமையை காட்டக்கூடாது.அதற்கென்றே சில அபத்தமான படங்கள் வருகின்றன,அதை வேப்பிலை அடிக்கலாம் தப்பில்லை.இதில் தருக்க பிழைகள் எங்கே இருக்கின்றன என மெய்யாலுமே தெரியவில்லை. நான் அப்படி ஒன்றிப்பார்த்தேன்.இதே போலத்தான் தங்கள் மேதமை எல்லாவற்றையும் மூடர்கூடம் படத்தின் மீதும் காட்டினர்,அதை காப்பி என்றனர்.அதைப் பற்றியும் எழுதுவேன்.

ஓநாயாக வந்த மிஷ்கின் தன் பாத்திரத்துக்கு உண்டான பொறுப்பை மிகவும் உணர்ந்து நடித்துள்ளார்,அவரின் உடல் மொழி எல்லாம் மிகவும் சிறப்பாக இருந்தது,எல்லோருமே பாராட்டிய அந்த கல்லறையில் சொல்லும் ஐந்து நிமிடக்கதை மிக நல்ல முயற்சி, தமிழ் சினிமாவில் ஃப்ளாஷ் பேக் செக்மெண்டில் டூயட் பாடலைக்கூட செருகியிருப்பார்கள்,அதெல்லாம் எத்தகைய அக்கிரமம் என்று இதைப் பார்க்கும் படைப்பாளிகளும்,நடிகர்களும் உணர்வார்கள்,ரசிகர்களும் இனிமேல் ஃப்ளாஷ் பேக் காட்சிகளுக்கு சிகரெட் பிடிக்க போவர் என்பது உறுதி,இந்த மாற்றம் வரவேண்டும்,அதற்கு ஒநாயும் ஆட்டுக்குட்டியும் வித்திட்டிருக்கிறது,

 ஆட்டுகுட்டியாக வந்த ஸ்ரீ கலக்கியிருந்தார்,போலீஸ் அதிகாரியாக வந்த ஷாஜி அறிமுகப் படத்துக்கு சிறப்பாக செய்திருந்தார்,போலீஸ் உயரதிகாரிகளில் நிறைய மலையாளிகள் இருப்பதால் இவர் பேசும் மலையாள வாடை அடிக்கும் தமிழ் மிக இயல்பாக இருந்தது,இதை ஒப்பிட வேண்டுமென்றால் செய்திகளில் வரும் மலையாள போலீஸ் அதிகாரிகளின் பேட்டியை ஒரு முறை பாருங்கள்,முதல் காட்சியில் ஸ்ரீயின் அறுவை சிகிச்சைக்கு சாவு வீட்டிலிருந்து உதவி செய்யும் மருத்துவக் கல்லூரி டீன் பாத்திரம் மிகவும் அருமையான ஒன்று,மிஷ்கினின் படைப்புகளில் மட்டுமே இதுபோன்ற நிதர்சனமான கதாபாத்திரங்களைக் காண முடியும்.அவர் லட்சுமி ராம கிருஷ்ணனின் கணவர் எனப் படித்தேன்,

நல்ல போலீசும் கெட்ட போலீசும் கலந்த கலவையான பாத்திரப் படைப்புகள் இதிலும் உண்டு,படத்தில் வரும் விளிம்பு நிலை கதாபாத்திரங்கள் யாருமே பணத்துக்கு மயங்குவதில்லை,அது மிஷ்கின் அவர்கட்கு செய்த ஒரு மரியாதை,திருநங்கை ஒருவருக்கும் அப்படி மரியாதை செய்தது அழகு,ஒரு மனநிலை பிழறியவர் ஸ்ரீ ஓநாயை வண்டியில் ஏற்றி தாங்கிப் பிடிக்க உதவியதற்கு 100 ருபாய் எடுத்துத் தர அதை வாங்கி பிட்டத்துக்கு பின்னால் எறிகிறான்,கண்ணீர் வர சிரிக்கிறான்

இதே போல அஞ்சாதேவில் நரேன் ஒரு கத்திக்குத்து வாங்கியவனை ஒரு பூக்கார கிழவியின் துணை கொண்டு பைக்கில் கொண்டு செல்ல,அவன் போகும் வழியிலேயே உயிர்விடுவான்,கிழவி அதை நின்னுடுச்சுப்பா!!! நின்னுபோய்டுச்சுப்பா!!! என அழுதபடி சொல்வார்,நரேன் இறந்தவனை பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துவிட்டு,அந்த இன்ஸ்பெகடரிடன் வசவு வாங்கிவிட்டு,கிழவியை ஏற்றிய இடத்துக்கே கொண்டு விடுவார்,பின்னர் நரேன் கிழவிக்கு வீடு திரும்ப உதவும் என 100 ரூபாய் எடுத்துக் கொடுப்பார், கிழவி வாங்க மறுத்து விட்டு என் கையில் ஒட்டிய அவன் ரத்தம் கூட காயலை,சாகக்கிடந்த உயிரை காப்பாற்ற உனக்கு உதவ வைச்சே!! அதுக்கு எதுக்கு காசு?,என புலம்பியபடி அவன் ரத்தம் சிந்தி இறந்த மண்ணில் கூடையில் இருந்த மிச்சப்பூவையும் கொட்டிவிட்டுச் செல்வார்,பின்னர் மனம் துவண்டிருக்கும் நரேனிடம் திரும்பி , தம்பி அந்த கிறுக்குப்பயல் திட்டுனதையெல்லாம் நீ காதில் போட்டுக்கொள்ளாதே!!! அவன் போலீஸ் இல்லை,நீதான் போலீஸ் என்பார் கிழவி ,அட்டகாசமான மனிதநேயம் சொல்லும் காட்சி அது,அது போல இதிலும் காட்சிக்கு காட்சி மனிதநேயம் பொதித்து வைத்துள்ளார்.இப்போது எங்கும் மனிதம் செத்து போய்விட்ட நிலையில் அதை மீண்டும் தன் படங்களில் காட்சிகளாக விதைக்திருக்கிறார் மிஷ்கின்.அந்த அருமையான காட்சியை இங்கே பார்க்கலாம்.

இது போல ஆச்சர்யங்கள் மிஷ்கின் படத்தில் மட்டுமே பார்க்க முடியும்.அதே போல பார்வை அற்ற கதாபாத்திரங்கள் பேசும் ’’பையில்  திங்க ஏதாவது இருக்கும்னு பார்த்தோம்,பணக்கட்டு இருந்தது,எங்களுக்கு அது எதுக்குன்னு திரும்ப கொண்டு வந்துட்டோம் ‘’ என்னும் எளிய வசனம் நம் முகத்தில் அறையும், முன்னாள் பதிவர் நர்சிம் ஒரு காட்சியில் நைட் ட்யூட்டி டாக்டராக தோன்றியிருந்தார் இவரும் அறிமுகத்துக்கு நல்ல முயற்சி,இவரின் மிஷ்கினுடன் பணியாற்றிய அனுபவக்கட்டுரை இன்று உயிர்மையில் படித்தேன்.அதன் சுட்டி

படத்தில் வரும் கெட்டபோலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரமான பிச்சையும் தொழில்முறை நடிகரல்லாதவர் எனப் படித்தேன்,அவரின் இயல்பான நடிப்பை அப்படியே வைத்திருக்கிறார் மிஷ்கின் எனப்படித்தேன், ஆச்சர்யமாக இருந்தது,பிச்சை பாத்திரம் ஏற்ற நடிகரின் பேட்டியை படிக்க இங்கே சுட்டி

நான் கொரியப்படங்கள் பார்ப்பதை அறவே நிறுத்தி விட்டேன்,எனக்கு அவை ஒருவித ஒவ்வாமையைத் தருகின்றன,அவர்களின் ராகமான வசனநடையும் , கண் இடுங்கிய சப்பை மூக்கு தோற்றமும் நம் நேட்டிவிட்டிக்கு எதிரானவை, இதனால் எனக்கு படத்தில் நிம்மதியாக ஒன்ற முடிந்தது.அறிவுஜீவித்தனம் தலை தூக்கவேயில்லை.நான் மாறாக கொரியப்படங்களை விட பண்பட்ட  ரஷ்யத் திரைப்படங்களும் , ருமேனிய சினிமாவும், விரும்பிப்பார்ப்பவன். மிஷ்கினை தமிழின் அலெக்ஸி பாலபனவ் என்றும் க்ரிஸ்டியன் முண்ட்ஸியூ [Cristian Mungiu] என்றும் தயங்காமல் சொல்லுவேன்,படம் பார்க்காதவர்கள் படத்தை தூக்கும் முன் ஒருமுறை தியேட்டரில் பாருங்கள்,

எனக்கு அந்த அனுபவம் இங்கே கிடைக்கவில்லை,அது ஒரு குறை தான். நல்ல முயற்சிகள் அடுத்தடுத்து பிறப்பதற்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும், பொருளாதார ரீதியான வெற்றியும் ,அங்கீகாரமும் அவசியமாகிறது,அதற்காக வேண்டியேனும் இதை தியேட்டரில் பாருங்கள். இதில் மற்றொரு சிறப்பம்சமாக ஹான்ஸ் கைனி புகழ் முகேஷ் கடைசிவரை தோன்றவே இல்லை, சிகரட் குடித்தல் மது குடித்தல் நாட்டுக்கு வீட்டுக்கு உடம்புக்கு கேடு என்னும் கார்டு எங்குமே வரவில்லை, பெண்ணின் மீதான வன்முறை கூட எங்கும் காட்சியாக இல்லை,வசனமாகத் தான் என் நெஞ்சில் மிதித்தான் ,நான் மயங்கிவிட்டேன் என்னும் ரீதியில் வருகிறது,அது போன்ற நவீன முயற்சியாக எடுத்திருக்கிறார் மிஷ்கின்.இதைப்பார்த்தாவது டாஸ்மாக் காட்சியை தங்கள் எல்லா படங்களிலும் பல்கிப் பெருக்கும் இயக்குனர்கள் திருந்தினால் தமிழகம் தப்பும்.

சென்னை பறக்கும் ரயில் காட்சிகள் மிக அருமையாக இருந்தது,அடுத்த முறை சென்னை போகையில் வேளச்சேரி கடற்கரை ரயில் மார்க்கத்தில் நிச்சயம் பயணம் போக வேண்டும் என நினைக்க வைத்தது, சென்னையின் இரவின் அழகை காட்சிப்படுத்தியதில் பாலாஜி ரங்கா உச்சம் தொட்டுள்ளார்,நண்பர் கிங் விஸ்வா மிஷ்கின் கதை சொல்லும் காட்சியில் நெடுநாள் கழித்து அழுதபடி தியேட்டரில் இருந்து வெளியேறினேன், என்று சொன்னார்.அது எத்தனை உண்மை? என்று புரிந்தது,திரைமொழியின் வீச்சு அப்படி.அடுத்து இதே போல சமரசம் செய்து கொள்ளாமல் முற்றிலும் புதிய ஒரு படைப்பை மிஷ்கின் தருவார் என்று நம்புகிறேன்.படத்தைப் பற்றி  மிகவும் தாமதமாக எழுதுகிறேன் எனத் தெரியும்.எழுதாமல் விடுவதற்கு தாமதமாக எழுதுவது நன்று அல்லவா?!!!

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு போஸ்டர் ஒட்டக்கூட காசில்லாமல், ஊர் ஊராக மிஷ்கினே சென்று போஸ்டர் ஒட்டுவதை  அறிந்த இளையராஜா, தன்னுடன் பணிபுரிந்த பக்க வாத்தியக் கலைஞர்களுக்கு மட்டும் சொற்பத் தொகையை மிஷ்கினிடம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்,தனக்கான சம்பளமாக ஒரு பைசாகூட வாங்காமல் இளையராஜா ‘நோ’ சொல்ல... கண்கலங்கி விட்டாராம், மிஷ்கின். எனப் படித்ததும் ராஜா பணம் தனக்கு எப்போதுமே முக்கியமானதில்லை என மீண்டும் நிரூபித்திருக்கிறார் என நினைக்கவைத்தது.மிஷ்கினின் அடுத்த படைப்பு அபாரமாக வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

ஒரு சில போலி சினிமா/இசை மேதைகள் தங்களை பெரிய பிடுங்கி போல நினைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கிலும் ட்வீட்டரிலும் இசைபற்றி வாந்தி எடுக்கின்றனர்,அது மல்லாக்கப்படுத்துக்கொண்டு தங்கள் மேலேயே காரி உமிழ்ந்து கொள்வதற்கு சமமானது என்று தெரிந்துமே அப்படி செய்கின்றனர்.4 உலகசினிமா பார்த்தால் சினிமா இலக்கணம் தெரிந்திடுமா?4 யூட்யூப் இசைக்கோர்ப்பை கேட்டால் இசையில் பண்டிதனாகிவிடமுடியுமா?தடி எடுத்தவன் தண்டல்காரன் ஆவது போலே இங்கே இசையை கண்மூடித்தனமாக விமர்சித்தால் ஒரே நாளில் அறிவுஜீவி-துடைப்பக்கட்டை.
இங்கே ஒருவர் இசைஞானியின் பிண்ணணி இசை ஏன் உயர்ந்தது என்று ஆராய்ந்து எழுதியுள்ளார்,ஆங்கிலம் புரிந்தால் போய் படிக்கவும்.


சமீபத்தில் ஒரு கேலிக்கூத்தாக சினிமாவால் புறக்கணிக்கப்பட்டு ஹைதராபாத் நிஜாமின் மியூசியம் போன்றதொரு ஃப்லிம் சிட்டியில் ஆசிரியர் என சொல்லிக்கொள்ளும் ஒருவர் இசைஞானியை சவுண்ட் டிசைன் கோர்ஸ் படிக்க ஆலோசனை சொல்லியிருந்தது, அதற்கு எத்தனை சீரிய மனநோய் இருந்தால் ஒரு இசைமேதையை அவ்வாறு சொல்லியிருக்கும் அந்த பைத்தியம் ?!!! என எண்ணி கண்ணீர் வர சிரித்தேன்,தமிழனுக்கு எதிரி தமிழன் தான் என்னும் கூற்றும் நினைவுக்கு வந்தது.

எப்போதுமே,எந்த துறையில் இருக்கும் வாத்தியாருக்குமே தியரிட்டிக்கலான அறிவு தான் மிகுந்து இருக்கும், ப்ராக்டிகலாக அவர்கள் கோட்டை விட்டு விடுவார்கள்,அவர்களுக்கு திறம்பட ஒரு திட்டத்தை எடுத்து வழிநடத்தும் சூட்டிகைத்தனம் கைவராது, [இது ரித்விக் கட்டக் போன்ற மாமேதைகளுக்கு பொருந்தா], அதனால் தான் வேறு வழியின்றி கடைசி புகலிடமாக ஆசிரியராக அமருகின்றனர்,தவிர அதே துறையில் கோலோச்சும் விற்பன்னரைப் பற்றிய கேவலமான அபிப்ராயம் அவர்களிடம் தவிர்க்க முடியாது.

உலகப் புகழும்,பணமும் தனக்கு வாய்க்க வில்லையே என்னும் வயிற்றெரிச்சல் தான் அதற்கு முக்கிய காரணம்,ஆனால் அவர்கள் ஒன்றை வசதியாக மறந்துவிடுவர்,ஊர் குருவிக்கும் கூட பறக்க தெரியும் ,ஆனால் அது ஒருக்காலுமே பருந்தாகாது,புலியின் டவுன்சைஸ்டு ப்ரொபோர்ஷன் தான் பூனை,ஆனால் புலியின் சீற்றமும் பாய்ச்சலும் அதற்கு வந்துவிடுமா? அதனால் வாத்தியார் என்பவர் ,ஏணி தோணி வாத்தியார்,நார்த்தங்காய் ஊறுகாய் என்னும் பிரபலமான கூற்றுக்கேற்ப வாத்தி போல இருந்தால் மாணாக்கரிடம் மரியாதையேனும் மிஞ்சும், மூலச்சூட்டுகாரன் போல வாழ்நாள் சாதனையாளரிடம் தங்கள் வயிற்று ,பொச்சு எரிச்சலை காட்டினால் வெந்நீர் தண்ணீரை சொறிநாய் மேலே ஊற்றுவது போல ரசிகர்கள் கழுவிக் கழுவித்தான் ஊற்றுவர், அதையும் தாங்கிக்கொள்ள வேண்டும்.

இசைஞானிக்கு பிண்ணணி இசை அமைக்கத் தெரியாது , சிவாஜிக்கு நடிக்க தெரியாது , காங்கிரசுக்கு ஊழல் பண்ணத் தெரியாது , ஜெயகாந்தனுக்கு எழுதத் தெரியாது , சத்யஜித் ரேவுக்கு இயக்கம் தெரியாது ,பிரபாகரனுக்கு வீரம் என்றால் என்ன என்றே தெரியாது, அப்துல் கலாமுக்கு ராக்கெட் சயின்ஸ் தெரியாது, இப்படி அறிவு ஜீவிகளின் தீர்ப்பில் நிறைய தெரியாதுகள் , வீட்டிலிருந்து வாயை மட்டும் கொண்டு வந்தால் போதும் , என்ன கலர் வாந்தி வேணும்னாலும் எடுக்கலாம்


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் முன்னணி இசைக்கோர்வையை தரவிறக்க சுட்டி இங்கே:-

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபில் இருந்து:-
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)